தாமரை - 19
கதிரவனுக்கு சென்னை வந்ததுமே முதலில் பழக்கமானவர் சீனிவாசன்தான். வேலை செய்யும் இடத்தில்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேலையும் தாண்டி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இருவரின் பழக்கமும் அதிகமானது.
அப்படியான நாட்களில் ஒரு நாள் கதிரவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை பார்க்க வந்த சீனிவாசன், கதிரவன் தனியாக கஷ்டப்படுவதை பார்த்து, தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
வசந்திக்கு மகனின் செயலில் விருப்பம் இல்லைதான். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரிடம், அதை காட்டவும் மனமில்லாமல் அமைதியாகிவிட்டார்.
அந்த சமயத்தில்தான் சீனிவாசனின் தங்கை ஜெயந்தியை பார்க்க நேர்ந்தது கதிரவனுக்கு. பார்த்ததுமே ஜெயந்தியை பிடித்து விட, அன்றிலிருந்து அடிக்கடி நண்பனை பார்க்க, அவர் வீட்டிற்கு வர ஆரம்பித்தார் கதிரவன்.
ஜெயந்தியின் பார்வையும் தன் மேல் விழுவதை உணர்ந்து, தைரியமாக தன் முடிவை நண்பனிடம் கூறிவிட, சீனிவாசனுக்கு மகிழ்ச்சிதான். காரணம் கதிரவனின் பின்புலமும், செல்வாக்கும், சொத்தும் காரணம்.
ஆனால் வசந்திக்கு இதில் விருப்பமில்லை. பெரியவர்கள் வந்து பேச வேண்டும் என வசந்தி உறுதியாக நின்றுவிட்டார்.
கதிரவனும் இதோ அதோ என இழுத்தடிக்க, இதற்கிடையில் இருவரின் பழக்கத்தில் ஜெயந்தி கருவுற்றிட, அதிர்ச்சியில் வசந்திக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.
மருத்துவமனை கலவரங்கள் முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன் தன் மகனை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார் வசந்தி.
கதிரவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை. தன் தவறு உணர்ந்த கதிரவன்தான் “அத்தை எங்க வீட்டு சூழல் சரியா இருந்தா, நான் இப்படி தள்ளிப் போடுவேனா.? இங்க மாதிரியான சூழல் அங்க இல்ல அத்தை. அது ஒரு கிராமம்.”
“ஊருக்கே பெரிய வீடு நாங்க தான். எங்க வீட்டுல இப்படி ஒரு செய்திந்னு தெரிஞ்சா, ரொம்ப அசிங்கமா போயிடும். ஊர்ல எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க. வீட்டுல என் தங்கச்சியும் இருக்கா, அவளுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, நான் தைரியமா எங்கள பத்தி சொல்லிடுவேன். என்னோட இந்த முடிவுக்கு, என் வீட்டுல எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க அத்தை. என் தங்கச்சி கல்யாணம் முடியறவரை மட்டும் வெயிட் பண்ணுங்க.” என மிகவும் கெஞ்ச,
மகளை முறைத்தபடியே, “நான் வெயிட் பண்ணலாம், ஆனா வயித்துல இருக்குற குழந்தை வெயிட் பண்ணாது. அதுக்கு என்ன பண்ணுவீங்க. உங்க வீட்டுல சொல்றவரை என் பொண்ணு கழுத்துல தாலி கட்டாம குடும்பம் நடத்த போறீங்களா? அதுக்கு நான் விடமாட்டேன்..” என்றவர் தன் கோபத்தை எல்லாம் மகனிடம்தான் காட்டினார்.
வசந்தியின் கோபம் கதிரை அவசரமாக முடிவெடுக்க வைத்தது. அடுத்து வந்த ஒரு முகூர்த்த நாளில் ஜெயந்தியை திருமணமும் செய்து கொண்டவர், தன் மொத்த ஜாகையையும் இங்கு மாற்றிக் கொண்டார். அவருக்கு ஜெய்ந்தியை எதற்காகவும் விட முடியாது. நடக்கும் அனைத்தையும் ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தி.
அவர்க்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும், மகளின் வாழ்க்கைக்காக அமைதியாகிவிட்டார். அதோடு மகனுமே கதிரவனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் நல்லவிதமாகவே கூறியிருக்க, சரி என்று அமைதியாவதை தவிர வேறு பேச முடியவில்லை அவரால்.
இப்போது மகேஸ்வரிக்கு ஒரு வரன் வந்திருக்க, அது முடியும் என்பது போலவும் இருக்க, தங்கம் தான் மகனை வற்புறுத்தி வர வைத்திருந்தார்.
வந்த இடத்தில் தங்கையின் காதல் செல்வத்தோடு என்றதும், கதிரவனுக்கு சந்தோஷம்தான். தான் இல்லாத இடத்தை செல்வம் நிரப்புவார் என்று கதிரவனுக்கு தெரியும். அதோடு இந்த கிராமத்தில் வந்து குப்பை கொட்ட வேண்டாம் என்பதில் பெரு நிம்மதியும் கூட.
செல்வம் தன் வீட்டில் இருந்தால், தன்னை அதிகம் யாரும் தேட மாட்டார்கள் என்று யோசித்து தான் தங்கையின் காதலுக்கு கதிரவன் உதவி செய்தது. ஆனால் தங்கம் இப்படி ஒரு திட்டத்தோடு இருப்பார் என கதிரவன் எதிர்பார்க்கவே இல்லை.
கதிரவன் சென்னை வந்த ஒரே வாரத்தில் மீண்டும் தங்கம் அழைத்து, மகேஸ்வரி செல்வம் திருமணம் பற்றி பேச கதிரவனுக்கு சந்தோசம் தான்.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் “என்னம்மா இதெல்லாம்..?” எனக் கேட்க,
ஊரில் நடந்த அனைத்தையும் கூறிய தங்கம் “நாலு பேர் பேசுவாங்கன்னு பயந்து, வேற யாருக்கோ கொடுத்தா, நம்ம புள்ள வாழ்க்கை நரகமா போயிடும் தம்பி. பேசுறவங்க பேசிட்டு போகட்டும். எங்க முடிவு இதுதான்..” என்றவர் மகனுக்கும், லட்சுமிக்கும் பேசியதை அப்போதே கூறி இருக்கலாம். நேரில் வரட்டும் பேசிக் கொள்ளலாம் என அதை விடுத்து மற்றதை பேசி வைத்து விட்டார்.
இந்த செய்தியில் கதிரவனுக்கு மிகுந்த சந்தோசம். தன் காதல், திருமணம் தெரிந்தால் பெற்றோர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என திடமாக நம்பினார்.
“என்ன கதிர் உங்க முகத்துல சந்தோசம் தாண்டவம் ஆடுது..” என்ற ஜெயந்தியின் பேச்சுக்கு,
மனவியைக் கட்டிக் கொண்டவர் “ஆமாம் ஜெயா… நம்ம பிரச்சனை சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரப்போகுது. நான் எதிர்பார்த்த மாதிரியேதான், மகேஷுக்கும் செல்வத்துக்கும் கல்யாணம் நடக்கப்போகுது. மகேஷ் கல்யாணம் முடிஞ்சிட்டா நம்மள பத்தி வீட்ல பேசுறதுக்கு வசதியா இருக்கும். அம்மாகிட்ட சொல்லி உன்னை அங்க கூப்பிட்டு போயிடுவேன்..” என சந்தோஷமாகவே கூற, அதைக் கேட்ட மற்றவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.
“எப்படியோ சீக்கிரம் எல்லாம் சரியான எனக்கு நிம்மதி தான்..” என்றாற் வசந்தி.
“திருமண வேலைகள் எதற்கும் கதிரவன் செல்லவில்லை.. செல்வத்திற்கு அழைத்து, ‘விடுமுறை இல்லை. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக வந்து விடுவேன்..’ என்று கூறியிருக்க, வருத்தமாக இருந்தாலும் சரி என்று விட்டார் செல்வம்.
கருப்பையா தான் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார். ‘வீட்டில் நடக்கிற முதல் விசேஷம் அதுக்கு கூட உன் மகனாள வர முடியாதா.?’ என ஒரே சத்தம்.
தங்கத்திற்கும் வருத்தம் தான். ஆனால் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் ‘இங்க என்ன ஆளா இல்லாம கிடக்கு. பையன் வரும்போது வரட்டும்.. அதுதான் அங்க லீவு கிடைக்கலைன்னு சொல்றான்ல.. இது வேற என்ன பண்றது..’ என அவரும் பதில் பேச, செல்வம் தான் வழக்கம் போல இருவரையும் சமாதானம் செய்திருந்தார்.
இதற்கிடையில் கதிரவனிடம் பேசாமல் லட்சுமியிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டாம், என கருப்பையா கூறியதையும் கேட்காமல், லட்சுமியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார் தங்கம்.
“என் வீட்டுக்கு வரப்போற மகாலட்சுமி ஆத்தா நீ.! உன்ன வேற வீட்டுக்கு அனுப்பிடுவேனா?” என பேசி, அந்த சின்ன பெண்ணின் மனதில் ஆசை எனும் விதையை அள்ளி தெளித்து விட்டார்.
அது விருட்சமாக வளர்ந்து நிற்கும் என்று தெரியாமல்!
மகேஸ்வரிக்கு தன் காதல் கைகூடியதை ஈப்போது வரை நம்ப முடியவில்லை. அன்று கொல்லைக்கு செல்வத்தின் பின்னாடியே சென்றவள், ஒரு வழியாக தன் தைரியத்தை மொத்தமாக வரவைத்து, தன் காதலை அவனிடம் கூறி விட, செல்வம் ஒரு பார்வை பார்த்தானே தவிர, பதில் சொல்லவில்லை.
அன்று மட்டும் அல்ல இதோ இப்போது வரைக்குமே அவளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் இந்த திருமணத்தை வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. அதுவே மகேஸ்வரிக்கு போதுமாக இருந்தது.
ஒரு வாரத்திற்கு முன் வந்து விடுவேன் என்ற கதிரவன், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்தார்.
அவர் வந்ததுமே வேலைகள் வேகமாக நடக்க, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு அடுத்து முகூர்த்தம் என நேரம் செல்ல, தங்கத்துக்கு மகனிடம் பேசவே நேரமில்லை.
என்னதான் ஆட்கள் இருந்தாலும், இரண்டு வீட்டிற்கும் இவர்தான் வேலை செய்ய வேண்டும் என்பதால் ஓடிக்கொண்டே இருந்தார்.
கதிரவனும் திருமணம் முடிந்த கையோடு, ஜெயந்தி பற்றி பேசி விட வேண்டும் என்றுதான் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது.
திருமணம் முடிந்து பெரியவர்கள் மட்டும் இருக்கும் சபையில் “என்ன கருப்பையா பேத்திக்கு முடிச்சுட்ட. அடுத்து பேரனுக்குதானே.. பொண்ணு வேணும்னா சொல்லு, நம்ம பக்கத்துல நல்ல படிச்ச புள்ளைங்க இருக்காங்க..” என பங்காளி முறையில் இருப்பவர் ஒருவர் எதார்த்தமாக கேட்க,
“பொண்ணெல்லாம் வேண்டாம் மாமா.. எங்க வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே மருமகளா வரப்போறா.. வேற பொண்ணு எதுக்கு..” என தங்கம் பேச,
“என்னத்தா சொல்ற.. அப்போ பேராண்டிக்கும் எல்லாம் பேசி வச்சுட்ட போல.. பங்காளி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லல..” என அதே பெரியவர் கேட்க,
“உங்கள மதிக்காம இல்ல சின்னையா.. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம்னு, உங்க மருமக சொன்னா. அதுவும் சரியாத்தான் இருக்கும்னு பேசுனோம். இன்னும் உறுதியா பேசி முடிக்கல..” என கந்தசாமியின் கையைப் பிடித்தபடியே கருப்பையா கூற,
“என்ன மாமா நான் சொன்னது தப்பா சொல்லுங்க.. மூணு தலைமுறையா ஒன்னுக்குள்ள ஒன்னா வாழ்ந்துட்டு வரோம். லட்சுமியை எங்கேயோ கொடுத்து வருத்தப்படுறதுக்கு, நம்ம பையனுக்கு எடுப்போம்ன்னு, நான்தான் சொன்னேன். எல்லாருக்கும் இதுல விருப்பம் தான்..” என தங்கம் பேச
“நீ சொல்றது சரிதான் தங்கம்… ஆனா பேராண்டிக்கு இதுல விருப்பம் இல்ல போலயே.. கதிர் முகத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது..” என்றவரிடம்,
“அது தம்பிக்கு இப்பதான் தெரியும் மாமா.. இனிதான் பேசணும். நாங்க அவர் நல்லதுக்குதான் செய்வோம்னு தெரியும். அதனால தம்பி வேண்டாம்னு சொல்ல வாய்ப்பில்லை..” என தங்கம் பேச, பேசவே கதிர் அங்கிருந்து வெளியில் வந்து விட்டார்.
அது செல்வத்திற்கும், கருப்பையாவிற்கும் ஒரு யோசனையை கொடுத்தது. கதிர் தவறு செய்கிறானோ என யோசிக்க வைத்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பது போலதான் கதிரின் அடுத்த பேச்சு இருந்தது.
அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ,அனைவரிடமும் கதிரவன் சொன்னது “உங்க விருப்பத்தை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஆனால் தங்கம் ரொம்ப சின்ன பொண்ணு. அதுக்கு இன்னும் வயசு இருக்கு. எனக்கும் ஒரு லட்சியம் இருக்கு. இப்போ நான் தனியா தொழில் தொடங்க போறேன். அந்த வேலையா அலைஞ்சதனாலதான் வர லேட் ஆயிடுச்சு. எனக்கும் டைம் வேணும். என் தொழில் நல்லபடியாக அமைஞ்சதும், எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுக்குள்ள லட்சுமிக்கும் சரியான வயசு வந்துடும். அதுக்கு பிறகு எங்க கல்யாணம் நடக்கட்டும்..” என யாரும் மறுக்க முடியாத அளவிற்கு, நிதானமாகவும் தெளிவாகவும் கதிரவன் பேச, அனைவருக்கும் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்களையும் பல்லை கடித்து பொறுத்து, மூன்றாவது நாள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவர், தன்னை ஆசையாக பார்த்த லட்சுமியிடம் சிறு புன்னகையுடன் தலை அசைத்து விடை பெற்றார் கதிரவன்.
அதுதான் கதிரவன் லட்சுமியை கடைசியாக பார்த்தது.
கதிரவனுக்கு சென்னை வந்ததுமே முதலில் பழக்கமானவர் சீனிவாசன்தான். வேலை செய்யும் இடத்தில்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேலையும் தாண்டி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இருவரின் பழக்கமும் அதிகமானது.
அப்படியான நாட்களில் ஒரு நாள் கதிரவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை பார்க்க வந்த சீனிவாசன், கதிரவன் தனியாக கஷ்டப்படுவதை பார்த்து, தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
வசந்திக்கு மகனின் செயலில் விருப்பம் இல்லைதான். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரிடம், அதை காட்டவும் மனமில்லாமல் அமைதியாகிவிட்டார்.
அந்த சமயத்தில்தான் சீனிவாசனின் தங்கை ஜெயந்தியை பார்க்க நேர்ந்தது கதிரவனுக்கு. பார்த்ததுமே ஜெயந்தியை பிடித்து விட, அன்றிலிருந்து அடிக்கடி நண்பனை பார்க்க, அவர் வீட்டிற்கு வர ஆரம்பித்தார் கதிரவன்.
ஜெயந்தியின் பார்வையும் தன் மேல் விழுவதை உணர்ந்து, தைரியமாக தன் முடிவை நண்பனிடம் கூறிவிட, சீனிவாசனுக்கு மகிழ்ச்சிதான். காரணம் கதிரவனின் பின்புலமும், செல்வாக்கும், சொத்தும் காரணம்.
ஆனால் வசந்திக்கு இதில் விருப்பமில்லை. பெரியவர்கள் வந்து பேச வேண்டும் என வசந்தி உறுதியாக நின்றுவிட்டார்.
கதிரவனும் இதோ அதோ என இழுத்தடிக்க, இதற்கிடையில் இருவரின் பழக்கத்தில் ஜெயந்தி கருவுற்றிட, அதிர்ச்சியில் வசந்திக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.
மருத்துவமனை கலவரங்கள் முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன் தன் மகனை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார் வசந்தி.
கதிரவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை. தன் தவறு உணர்ந்த கதிரவன்தான் “அத்தை எங்க வீட்டு சூழல் சரியா இருந்தா, நான் இப்படி தள்ளிப் போடுவேனா.? இங்க மாதிரியான சூழல் அங்க இல்ல அத்தை. அது ஒரு கிராமம்.”
“ஊருக்கே பெரிய வீடு நாங்க தான். எங்க வீட்டுல இப்படி ஒரு செய்திந்னு தெரிஞ்சா, ரொம்ப அசிங்கமா போயிடும். ஊர்ல எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க. வீட்டுல என் தங்கச்சியும் இருக்கா, அவளுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, நான் தைரியமா எங்கள பத்தி சொல்லிடுவேன். என்னோட இந்த முடிவுக்கு, என் வீட்டுல எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க அத்தை. என் தங்கச்சி கல்யாணம் முடியறவரை மட்டும் வெயிட் பண்ணுங்க.” என மிகவும் கெஞ்ச,
மகளை முறைத்தபடியே, “நான் வெயிட் பண்ணலாம், ஆனா வயித்துல இருக்குற குழந்தை வெயிட் பண்ணாது. அதுக்கு என்ன பண்ணுவீங்க. உங்க வீட்டுல சொல்றவரை என் பொண்ணு கழுத்துல தாலி கட்டாம குடும்பம் நடத்த போறீங்களா? அதுக்கு நான் விடமாட்டேன்..” என்றவர் தன் கோபத்தை எல்லாம் மகனிடம்தான் காட்டினார்.
வசந்தியின் கோபம் கதிரை அவசரமாக முடிவெடுக்க வைத்தது. அடுத்து வந்த ஒரு முகூர்த்த நாளில் ஜெயந்தியை திருமணமும் செய்து கொண்டவர், தன் மொத்த ஜாகையையும் இங்கு மாற்றிக் கொண்டார். அவருக்கு ஜெய்ந்தியை எதற்காகவும் விட முடியாது. நடக்கும் அனைத்தையும் ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தி.
அவர்க்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும், மகளின் வாழ்க்கைக்காக அமைதியாகிவிட்டார். அதோடு மகனுமே கதிரவனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும் நல்லவிதமாகவே கூறியிருக்க, சரி என்று அமைதியாவதை தவிர வேறு பேச முடியவில்லை அவரால்.
இப்போது மகேஸ்வரிக்கு ஒரு வரன் வந்திருக்க, அது முடியும் என்பது போலவும் இருக்க, தங்கம் தான் மகனை வற்புறுத்தி வர வைத்திருந்தார்.
வந்த இடத்தில் தங்கையின் காதல் செல்வத்தோடு என்றதும், கதிரவனுக்கு சந்தோஷம்தான். தான் இல்லாத இடத்தை செல்வம் நிரப்புவார் என்று கதிரவனுக்கு தெரியும். அதோடு இந்த கிராமத்தில் வந்து குப்பை கொட்ட வேண்டாம் என்பதில் பெரு நிம்மதியும் கூட.
செல்வம் தன் வீட்டில் இருந்தால், தன்னை அதிகம் யாரும் தேட மாட்டார்கள் என்று யோசித்து தான் தங்கையின் காதலுக்கு கதிரவன் உதவி செய்தது. ஆனால் தங்கம் இப்படி ஒரு திட்டத்தோடு இருப்பார் என கதிரவன் எதிர்பார்க்கவே இல்லை.
கதிரவன் சென்னை வந்த ஒரே வாரத்தில் மீண்டும் தங்கம் அழைத்து, மகேஸ்வரி செல்வம் திருமணம் பற்றி பேச கதிரவனுக்கு சந்தோசம் தான்.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் “என்னம்மா இதெல்லாம்..?” எனக் கேட்க,
ஊரில் நடந்த அனைத்தையும் கூறிய தங்கம் “நாலு பேர் பேசுவாங்கன்னு பயந்து, வேற யாருக்கோ கொடுத்தா, நம்ம புள்ள வாழ்க்கை நரகமா போயிடும் தம்பி. பேசுறவங்க பேசிட்டு போகட்டும். எங்க முடிவு இதுதான்..” என்றவர் மகனுக்கும், லட்சுமிக்கும் பேசியதை அப்போதே கூறி இருக்கலாம். நேரில் வரட்டும் பேசிக் கொள்ளலாம் என அதை விடுத்து மற்றதை பேசி வைத்து விட்டார்.
இந்த செய்தியில் கதிரவனுக்கு மிகுந்த சந்தோசம். தன் காதல், திருமணம் தெரிந்தால் பெற்றோர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என திடமாக நம்பினார்.
“என்ன கதிர் உங்க முகத்துல சந்தோசம் தாண்டவம் ஆடுது..” என்ற ஜெயந்தியின் பேச்சுக்கு,
மனவியைக் கட்டிக் கொண்டவர் “ஆமாம் ஜெயா… நம்ம பிரச்சனை சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரப்போகுது. நான் எதிர்பார்த்த மாதிரியேதான், மகேஷுக்கும் செல்வத்துக்கும் கல்யாணம் நடக்கப்போகுது. மகேஷ் கல்யாணம் முடிஞ்சிட்டா நம்மள பத்தி வீட்ல பேசுறதுக்கு வசதியா இருக்கும். அம்மாகிட்ட சொல்லி உன்னை அங்க கூப்பிட்டு போயிடுவேன்..” என சந்தோஷமாகவே கூற, அதைக் கேட்ட மற்றவர்களுக்கும் மகிழ்ச்சிதான்.
“எப்படியோ சீக்கிரம் எல்லாம் சரியான எனக்கு நிம்மதி தான்..” என்றாற் வசந்தி.
“திருமண வேலைகள் எதற்கும் கதிரவன் செல்லவில்லை.. செல்வத்திற்கு அழைத்து, ‘விடுமுறை இல்லை. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாக வந்து விடுவேன்..’ என்று கூறியிருக்க, வருத்தமாக இருந்தாலும் சரி என்று விட்டார் செல்வம்.
கருப்பையா தான் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார். ‘வீட்டில் நடக்கிற முதல் விசேஷம் அதுக்கு கூட உன் மகனாள வர முடியாதா.?’ என ஒரே சத்தம்.
தங்கத்திற்கும் வருத்தம் தான். ஆனால் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் ‘இங்க என்ன ஆளா இல்லாம கிடக்கு. பையன் வரும்போது வரட்டும்.. அதுதான் அங்க லீவு கிடைக்கலைன்னு சொல்றான்ல.. இது வேற என்ன பண்றது..’ என அவரும் பதில் பேச, செல்வம் தான் வழக்கம் போல இருவரையும் சமாதானம் செய்திருந்தார்.
இதற்கிடையில் கதிரவனிடம் பேசாமல் லட்சுமியிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டாம், என கருப்பையா கூறியதையும் கேட்காமல், லட்சுமியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார் தங்கம்.
“என் வீட்டுக்கு வரப்போற மகாலட்சுமி ஆத்தா நீ.! உன்ன வேற வீட்டுக்கு அனுப்பிடுவேனா?” என பேசி, அந்த சின்ன பெண்ணின் மனதில் ஆசை எனும் விதையை அள்ளி தெளித்து விட்டார்.
அது விருட்சமாக வளர்ந்து நிற்கும் என்று தெரியாமல்!
மகேஸ்வரிக்கு தன் காதல் கைகூடியதை ஈப்போது வரை நம்ப முடியவில்லை. அன்று கொல்லைக்கு செல்வத்தின் பின்னாடியே சென்றவள், ஒரு வழியாக தன் தைரியத்தை மொத்தமாக வரவைத்து, தன் காதலை அவனிடம் கூறி விட, செல்வம் ஒரு பார்வை பார்த்தானே தவிர, பதில் சொல்லவில்லை.
அன்று மட்டும் அல்ல இதோ இப்போது வரைக்குமே அவளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் இந்த திருமணத்தை வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. அதுவே மகேஸ்வரிக்கு போதுமாக இருந்தது.
ஒரு வாரத்திற்கு முன் வந்து விடுவேன் என்ற கதிரவன், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்தார்.
அவர் வந்ததுமே வேலைகள் வேகமாக நடக்க, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு அடுத்து முகூர்த்தம் என நேரம் செல்ல, தங்கத்துக்கு மகனிடம் பேசவே நேரமில்லை.
என்னதான் ஆட்கள் இருந்தாலும், இரண்டு வீட்டிற்கும் இவர்தான் வேலை செய்ய வேண்டும் என்பதால் ஓடிக்கொண்டே இருந்தார்.
கதிரவனும் திருமணம் முடிந்த கையோடு, ஜெயந்தி பற்றி பேசி விட வேண்டும் என்றுதான் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்தது.
திருமணம் முடிந்து பெரியவர்கள் மட்டும் இருக்கும் சபையில் “என்ன கருப்பையா பேத்திக்கு முடிச்சுட்ட. அடுத்து பேரனுக்குதானே.. பொண்ணு வேணும்னா சொல்லு, நம்ம பக்கத்துல நல்ல படிச்ச புள்ளைங்க இருக்காங்க..” என பங்காளி முறையில் இருப்பவர் ஒருவர் எதார்த்தமாக கேட்க,
“பொண்ணெல்லாம் வேண்டாம் மாமா.. எங்க வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே மருமகளா வரப்போறா.. வேற பொண்ணு எதுக்கு..” என தங்கம் பேச,
“என்னத்தா சொல்ற.. அப்போ பேராண்டிக்கும் எல்லாம் பேசி வச்சுட்ட போல.. பங்காளி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லல..” என அதே பெரியவர் கேட்க,
“உங்கள மதிக்காம இல்ல சின்னையா.. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம்னு, உங்க மருமக சொன்னா. அதுவும் சரியாத்தான் இருக்கும்னு பேசுனோம். இன்னும் உறுதியா பேசி முடிக்கல..” என கந்தசாமியின் கையைப் பிடித்தபடியே கருப்பையா கூற,
“என்ன மாமா நான் சொன்னது தப்பா சொல்லுங்க.. மூணு தலைமுறையா ஒன்னுக்குள்ள ஒன்னா வாழ்ந்துட்டு வரோம். லட்சுமியை எங்கேயோ கொடுத்து வருத்தப்படுறதுக்கு, நம்ம பையனுக்கு எடுப்போம்ன்னு, நான்தான் சொன்னேன். எல்லாருக்கும் இதுல விருப்பம் தான்..” என தங்கம் பேச
“நீ சொல்றது சரிதான் தங்கம்… ஆனா பேராண்டிக்கு இதுல விருப்பம் இல்ல போலயே.. கதிர் முகத்தைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது..” என்றவரிடம்,
“அது தம்பிக்கு இப்பதான் தெரியும் மாமா.. இனிதான் பேசணும். நாங்க அவர் நல்லதுக்குதான் செய்வோம்னு தெரியும். அதனால தம்பி வேண்டாம்னு சொல்ல வாய்ப்பில்லை..” என தங்கம் பேச, பேசவே கதிர் அங்கிருந்து வெளியில் வந்து விட்டார்.
அது செல்வத்திற்கும், கருப்பையாவிற்கும் ஒரு யோசனையை கொடுத்தது. கதிர் தவறு செய்கிறானோ என யோசிக்க வைத்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பது போலதான் கதிரின் அடுத்த பேச்சு இருந்தது.
அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ,அனைவரிடமும் கதிரவன் சொன்னது “உங்க விருப்பத்தை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். ஆனால் தங்கம் ரொம்ப சின்ன பொண்ணு. அதுக்கு இன்னும் வயசு இருக்கு. எனக்கும் ஒரு லட்சியம் இருக்கு. இப்போ நான் தனியா தொழில் தொடங்க போறேன். அந்த வேலையா அலைஞ்சதனாலதான் வர லேட் ஆயிடுச்சு. எனக்கும் டைம் வேணும். என் தொழில் நல்லபடியாக அமைஞ்சதும், எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுக்குள்ள லட்சுமிக்கும் சரியான வயசு வந்துடும். அதுக்கு பிறகு எங்க கல்யாணம் நடக்கட்டும்..” என யாரும் மறுக்க முடியாத அளவிற்கு, நிதானமாகவும் தெளிவாகவும் கதிரவன் பேச, அனைவருக்கும் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்களையும் பல்லை கடித்து பொறுத்து, மூன்றாவது நாள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவர், தன்னை ஆசையாக பார்த்த லட்சுமியிடம் சிறு புன்னகையுடன் தலை அசைத்து விடை பெற்றார் கதிரவன்.
அதுதான் கதிரவன் லட்சுமியை கடைசியாக பார்த்தது.