• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 37

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
தாமரை - 37

அன்றைய நாளைக்குப் பிறகு யாராலும் செல்வத்தை நெருங்கவே முடியவில்லை. தனக்குள்ளே மிகவும் இறுகிப் போய்விட்டார்.

மகேஸ்வரியிடம் கூட அளவாகவே பேச்சை வைத்துக் கொண்டார்.

வசந்தியின் பிடிவாதத்திலும், கதிரவனின் கோபத்திலும் வேறு வழியில்லாமல் வசந்தியும், ஜெயந்தியும் சீனியுடன் கிளம்பிவிட்டனர்.

பதினாறாம் நாள் காரியத்தன்று இரண்டு வீட்டிலுமே கருப்பு என்பதால் தந்தைக்கும், தங்கைக்கும் யாரையும் அழைக்காமல் செல்வமே அனைத்தையும் செய்து கொண்டார்.

மகேஸ்வரி தன் வீட்டிற்கு போகலாமா கூடாதா? என பெரும் குழப்பத்தில்தான் ஒவ்வொரு சடங்கையும் செய்தார் . அதை கவனித்த செல்வம் “உனக்கு அங்கதான் நினைப்புன்னா.. போய்க்கிட்டே இரு.. இந்த சடங்கெல்லாம் ஒரு மனசா செய்யனும்.. அப்படி உனக்கு செய்ய முடியலனா கிளம்பு.. நானே எல்லாம் பார்த்துக்குறேன்..” என கடுமையாக கூற, மகேஸ்வரிக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.

அங்கோ தன் தந்தை.. இங்கோ தன் மாமனாரும், தங்கை போல் வளர்த்த நாத்தானாரும். இரண்டுமே அவளுக்கு உயிரான உறவுகள்.. என்ன செய்வாள்? வேகமாக கண்ணைத் துடைத்துக்கொண்டு செல்வத்தோடு அமர்ந்து அனைத்தையும் செய்தார்.

சிறிது நேரத்திலே மனைவியை அழைத்து வந்தவன், அவளின் பிறந்த வீட்டில் விட்டவன், “முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடு..” என அப்படியே கிளம்பிவிட்டான்.

இந்தளவிற்கு விட்டதே போதும் என்றுதான் அனைவருக்கும் தோன்றியது. ஏதோ மன கசப்பில் இருக்கிறான். விரைவில் சரியாகி விடுவான் என்று மனதை தேற்றிக் கொண்டனர் அனைவரும்.

அவன் இழப்பின் வலி கூடுதல்தானே.. அதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டுமே.. அதனால் யாரும் செல்வத்தை கட்டாயப்படுத்தவும் இல்லை.. கதிரவனைப் பற்றி பேசவும் இல்லை.

அன்றே இளங்கோவை அழைத்துக்கொண்டு கதிரவனும் கிளம்பிவிட்டார். அங்கிருந்து அனைவரையும் வருத்தப்படுத்த வேண்டாம் என்பது அவர் எண்ணம்.

ஆனால் தங்கமோ, இப்படியான சூழலில் கூட தன்னை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டானே என மகனின் மேல் மேலும் கோபத்தை வளர்த்துக் கொண்டார்.

“நானாக சொல்லாமல் இனி இங்கு வராதே..” என மகனின் முகத்துக்கு நேராக சொல்லியே அனுப்பினார்.

அடுத்து அதுதான் நடந்தது. அவர் வாக்கு பலித்தது.. அவர் உயிரோடு இருக்கும் வரை அழைக்கவே இல்லை. செல்வமும் மகேசும் கூட மனமிறங்கி அழைத்து பேசுங்கள் என சொல்லியும் தன் வைராக்கியத்தை விடாமல் மகனை அழைக்கவே இல்லை தங்கம்.

அன்று இளங்கோவோடு சென்னை வந்த கதிரவன் மிகவும் தளர்ந்து போயிருந்தார். ஒரு மனைவியாக ஜெயந்தி அவருக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நாயகியில் பேச்சைக் கேட்டு ‘என்னை அனுப்பி விட்டீங்க.. நான் கூப்பிட்டும் வரல தானே, அப்போ நான் ஏன் உங்ககூட பேசனும், செய்யனும்..’ என வீம்பாகவே, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தார்.

எப்போது கணவன் மனைவி சண்டையென்றால் முதலில் சமாதானப் படலத்தில் இறங்குவது கதிரவன்தான். அதை மனதில் வைத்து கணவன் தன்னை சமாதானம் செய்ய வருவார் என்று காத்திருக்க, அப்படி ஒன்று நடக்கவே இல்லை.

ஏன் வீட்டிலும் கூட யாரிடமும் பேசவில்லை. மிகவும் குற்றவுணர்வில் இருந்தவருக்கு மனைவியிடம் பேசக்கூட தோன்றவில்லை. அதோடு இத்தனை பிரச்சினையிலும் மனைவி தன்னிடம் ஒரு வார்த்தை கூட ஆறுதலாக பேசாதது அவரை மிகவும் வருத்தியது.

ஏதேதோ யோசித்து, எங்கெங்கோ எண்ணங்கள் பயணிக்க ஆரம்பித்தது. அதனால் தானாகவே மனைவியிடமிருந்து ஒரு விலகல் வந்துவிட்டது கதிரவனிடம்.

வசந்திக்கு அது புரிந்து மகளை அவர் திட்டினாலும், அது ஜெயந்திக்கு புரிய வேண்டுமே. தன் நிலையிலேயே நிற்க, கதிரவனுக்கோ இந்த சூழலில் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடிக்கும், இதிலிருந்து ஒரு தீர்வு வேண்டும் என யோசித்து, மீண்டும் சிங்கப்பூர் சென்று விடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார்.

அனைத்து வேலைகளும் முடிந்து கிளம்ப வேண்டிய நாளில்தான் மனைவியிடம் கூறினார். நிச்சயம் தன் கணவனிடமிருந்து இப்படியொரு செய்கையை எதிர்பார்க்கவில்லை ஜெயந்தி.

கேட்ட செய்தியில் அதிர்ந்து நிற்க, “என்னோட தவறுக்கு நான் யாரையும் காரணம் காட்ட முடியாது ஜெயந்தி. என்னை கொஞ்ச நாள் தனியா விடு. இங்கே இருந்தா ஒன்னு பைத்தியம் பிடிக்கும், இல்லையோ தற்கொலை செஞ்சி செத்துடுவேன். என் மனநிலை எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல.. இதுல நான் யாரை குறை சொல்ல.” என மிகவும் வருந்தி பேச,

ஜெயந்தியோ அப்போதும் அவரை புரிந்து கொள்ளாமல், பிடிவாதமாக சண்டையிட்டு, ஒரு ரகளையைக் கிளப்பி, என ஆர்ப்பாட்டம் செய்ய, கதிரவனின் பொறுமை மொத்தமாக பறந்தது.

“என்னடி பிரச்சினை உனக்கு? நான் முழுசா இருக்கேன்.. உன் பையன் இருக்கான். உன் குடும்பம் இருக்கு.. ஆனா நான் எப்படி இருக்கேன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா? சொல்லு யோசிச்சிருக்கியா? தினம் தினம் குற்றவுணர்வுல செத்துட்டு இருக்கேன். என்னால.. என்னோட சுயநலத்தால் மூனு உயிர் போயிடுச்சு, அந்த வலியும் வேதனையும் என்னை விட்டு போகவே போகாது போல. என்ன செஞ்சு வேதனையை தீர்ப்பேன்னு எனக்குத் தெரியல.. ஆனா நம்ம புருசனுக்கு ஒரு கஷ்டம், அவன் கூட நாம இருக்கனும்னு ஒரு பேசிக் ஃபீலிங்க் உனக்கு இல்லன்னும் போது, உனக்காக நான் யோசிக்கனும்.? சொல்லு? உனக்காக நான் ஏன் யோசிக்கனும்.? என் குடும்பத்தை தொலைச்சிட்டு அநாதை மாதிரி நான் நிற்கும் போது, நான் இருக்கேன்னு நீ ஒரு வார்த்தை சொல்லிருந்தா இந்த வலி குறைஞ்சிருக்குமோ என்னமோ? ஆனா உனக்கு அப்படி சொல்லக்கூட வரலதானே.. என்ன ஜென்மம் டீ.. இப்போதான் எனக்கு மனசுல என்ன என்னமோ தோனுது. ஒருவேளை நீ என்னை காதலிக்கவே இல்லையோ.. என் பணத்துக்காகத்தான் என் கூட இருந்தியோ..?” என வார்த்தைகளில் காட்டத்தைக் கூட்டி பேசிக்கொண்டே போக, வசந்தியால் அங்கு நிற்கவே முடியவில்லை.

மருமகன் பேசியதில் எந்த தவறும் இல்லையே.. இவளுக்காக அனைத்தையும் இழந்து வந்து நிற்க, அவளோ தன் திமிரால் அவரை அசிங்கப்படுத்தி விட்டாளே.. இந்த பேச்சுக்கள் அவளுக்குத் தேவைதான் என நினைத்தபடியே, மகளைத் தீப்பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

“கதிர் நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்த்தது இல்ல. நான் பயந்த மாதிரியே ஆகிடுச்சு பாருங்க.. அங்க இருந்து வந்ததும் என்னை வெறுத்துட்டீங்க.. எங்கிட்ட கோபப்படுறீங்க.. எங்கூட சண்டை போடுறீங்க.. ஏன் கதிர் இப்படி மாறிட்டீங்க..” என அவரிடம் அழுது கொண்டே சண்டையிட, மொத்தமாய் வெறுத்துவிட்டது கதிரவனுக்கு.

மனைவிக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. மாமியாரிடம் மட்டும் “அத்த நீங்களாவது என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு நியனிக்கிறேன். ப்ளீஸ் அத்த.. உங்களை நம்பித்தான் இவங்கலை விட்டுட்டு போறேன்..” எனவும், வசந்திக்கும் கதிரவன் இப்படி கிளம்புவது வருத்தம்தான்.

ஆனால் மகளின் செய்கையில் கோபமாக இருந்தவருக்கு, நிச்சயம் இருவருக்கும் இந்த பிரிவு அவசியம்தான் என்று புரிந்து கொண்டார்.

இந்த பிரிவு மகளை யோசிக்க வைக்கும். மருமகனுக்கும் மகளின் மேல் இருக்கும் கோபத்தை போக்க வைக்கும் என்று நம்பி, கதிரவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

அன்றிலிருந்தே இளங்கோவைப் பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பும் வசந்தியே எடுத்துக் கொண்டார்.

ஜெயந்தியோ நாயகியின் பேச்சைக் கேட்டு மொத்தாமாக மாறிப் போயிருந்தார். வசந்திக்கு மகளின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

நாயகி ஜெயந்தியை தன் பிடியில் வைத்திருந்தார். அப்போதுதான் சீனியின் மூலம் கதிரவனின் சொத்து பற்றி தெரிந்துகொண்டார்.

எப்படி இதை தன் வசமாக்குவது என யோசிக்கையில் எந்த திட்டமும் சரி வரும் போல தெரியவில்லை. அதனால் தன் கைப்பிடியில் இருக்கும் ஜெயந்தியை முதலில் இல்லாமல் ஆக்கிவிட்டு, பின் கதிரவனையும் முடித்துவிட்டால் அதன்பிறகு இளங்கோ மட்டும்தானே.. அவனை மிகவும் சுலபமாக தன் வசமாக்கி விடலாம் என முடிவு செய்தாள்.

இந்த திட்டத்தை தன் அண்ணனிடம் கூற, அவருக்கு முதலில் பயம்தான். ஆனால் தங்கைக்காக அனைத்திற்கும் சரியென்றார்.

“அண்ணா இது ஸ்லோவ் பாய்சன் போல இருக்கனும். கொஞ்சம் கொஞ்சமா சாகனும். உடல் உறுப்புகள் ஒவ்வொன்னா செயலிழந்து போற மாதிரி செய்யனும். அப்போதான் நம்ம மேல சந்தேகம் வராது..” என்ற தங்கையை, ஆச்சரியமாக பார்த்தார் பூபாலன்.

“என்ன அண்ணா அப்படி பார்க்குறீங்க.. இந்த சொத்துக்காகத்தான் நாம இவ்ளோ ரிஸ்க் எடுக்குறோம். அதை அனுபவிக்க வேண்டாமா? கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போனா இந்த சொத்தை எப்படி அனுபவிக்க, அதனால ரொம்ப நாள் யோசிச்சுதான் இந்த திட்டத்தை முடிவு செஞ்சேன்..” என நாயகி கூற, பூபாலனுக்கு சற்று பயம் வரத்தான் செய்தது. தங்கையின் பேச்சில்.

ஆனால் பெண்ணான அவளே துணிந்து செய்யும் போது, நமக்கு மட்டும் என்ன பயம்.. என நினைத்து தங்கைக்கு துணை நின்றார்.

அன்றிலிருந்து ஜெயந்தி இரவு குடிக்கும் பாலில் அந்த மருந்தைக் கலக்கி கொடுக்க ஆரம்பித்தார் நாயகி.

மருமகன் இல்லாமல் மகள் மிகவும் கஷ்டப்படுகிறாள். அவர் மேல் இருக்கும் கோபத்தை மகனிடம் காட்டுகிறாள் என நினைத்து பேரனைத் தன்னோடு வைத்துக்கொண்டார். அதோடு மகளை மருமகள் பார்த்துக் கொள்கிறாளே.. என அவர் சற்று மகளிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார். அது நாயகிக்கு மிகவும் வசதியாகிப் போனது.

தன் வேலையை கன கச்சிதமாக செய்தார்.

சரியாக ஒரு மாதத்தில் தீவிர வயிற்று வலியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயந்தி. மனைவியின் உடல்நிலை கேள்விப்பட்டு கதிரவனும் அடுத்த நாளே சென்னை வந்துவிட்டார்.

அடுத்து நடந்த அனைத்தும் ஜெயந்திக்கு மிகக் கொடுமையான நாட்கள். வயிற்று வலி என்று சேர்த்ததுதான் தெரியும். பின் கல்லீரலில் பாதிப்பு என்றார்கள். கண்பார்வையில் குறைவு என்றார்கள். ஒரு சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்றார்கள்.. கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்றார்கள், கடைசியில் மூளையே செயலிழந்து விட்டது என்றார்கள். கடைசியில் இவர் பிழைக்கவே வழியில்லை. வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றுவிட்டனர்.

நன்றாக இருந்தவருக்கு ஒரு வாரத்தில் எப்படி இத்தனை உடல் உபாதைகள் வரும் என்று யோசிக்கும் நேரம் ஜெயந்தி இந்த உலகை விட்டு சென்றிருந்தார்.

அங்கிருந்த யாராலும் கதிரவன் என்ற மனிதனைப் பார்க்கவே முடியவில்லை.

மீண்டும் ஒரு இழப்பு.. மீண்டும் ஒரு வலி.. மீண்டும் ஒரு தனிமை.. இது மீள முடியாத இழப்பு.. மீள முடியாத வலி.. மீண்டிடவே முடியாத தனிமை.

சிறு பெண்ணிற்கு தான் செய்த துரோகத்தால், பாவத்தால் கிடைத்த தண்டனை என ஜெயந்தி இறந்த நொடியில் இருந்து அவர் மனம் உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது.

அது தான் உண்மை என்பது போல வந்திருந்த சொந்தங்களும் சொல்லி செல்ல, முற்றிலுமாக உடைந்து போய் நின்றார் கதிரவன் என்ற மனிதர்.