தாமரை - 40
தங்கையிடம் பேசி வைத்த பிறகு கதிரவனுக்கு எதுவோ சரியில்லை என்று உறுத்த தொடங்கியது. மகனின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வேதனையடைந்தார்.
‘அவனுக்காகவேனும் இந்த உயிரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வை இறைவா’ என கடவுளிடம் அடிக்கடி மனு போட்டுக் கொண்டிருந்தார் கதிரவன்.
சில நாட்களாக சீனியின் முகமும் சரியில்லாததை உணர்ந்தார் கதிரவன். அப்படி ஒரு நாளில் “என்ன சீனி ? ஏன் டல்லா இருக்க? உனக்கும் தங்கச்சிக்கும் பிரச்சினையா?” என பொதுப்படையாகவே கேட்டார்.
“இல்லையே கதிரு.. என்ன திடீர்னு..?” என சீனி பதட்டமாக திருப்பி கேட்க
“என்ன பிரச்சினை கதிரு.. உன் முகமும், பதட்டமும் ஆமாம்னு சொல்லுது. எங்கிட்ட சொல்ல மாட்டியா?” என வருந்த,
“ம்ச் என்ன சொல்ல? பேய் பிடிச்சிருக்கு அவளுக்கு. நல்லாத்தான் இருந்தா.. திடீர்னு தனிக்குடித்தனம் போலாம்கிறா.. இங்கயே இருந்து ஓசி சோறு சாப்பிட முடியாது. நீ என்ன சம்பாதிச்சு வச்சிருக்க, உனக்குன்னு என்ன இருக்குனு பார்க்கும் போதெல்லாம் குத்தலா பேசுறா..” என்று சலிப்பாக சொன்னவரிடம்,
“என்னாச்சு நாயகி இப்படியெல்லாம் பேசுற ஆளே இல்லையே. வேற ஒன்னும் இல்லைதானே..” என யோசனையாக கதிரவன் கேட்க,
“ம்ச்.. பொம்பள புள்ளைய பெத்து வச்சிட்டு, அவளுக்கு என்ன சேர்த்து வச்சிருக்கன்னு புலம்பிக்கிட்டு இருக்கா.. ம்ச்.. இப்பவே என்ன சேர்த்து வைக்க போறா..” என மீண்டும் சலிப்பாகவே கூறினார் சீனி.
“பொம்பளைங்க அப்படித்தான் சீனி. நீ கொஞ்சம் பொறுத்து ப்போ.. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்..” என்றவர் அடுத்த நாளே அதற்கான முடிவை எடுத்தார்.
தன் வக்கீலை வர வைத்து சொத்தில் பாதியை ப்ரீத்தா பேரில் எழுதுவதற்கான பத்திரங்களை ரெடி செய்ய சொன்னார்.
வசந்தியும் இப்போது வீட்டில் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார். வக்கீல் வந்திருப்பதை பார்த்து “என்ன மாப்பிள்ளை.?” எனவும்,
“ஒன்னுமில்ல த்த.. சொத்தை பசங்க பேருல எழுத முடிவு பண்ணிருக்கேன்..” என்று அவரைப் பார்க்க,
“ஏற்கனவே வாங்குற சொத்தெல்லாம் ரெண்டு பேருக்குமாதானே எழுதுறீங்க.. புதுசா என்ன எழுத போறீங்க.. என யோசனையோடு கேட்டு மகனைப் பார்க்க, சீனிக்கும் விவரம் தெரியவில்லை.
நாயகிதான் “ரெண்டு பேருக்கும் ஒன்னு போல இருக்கனும்னு அண்ணா நினைக்கிறார் போல அத்த.. அதனால எழுதுறார் போல..” என வாயெல்லாம் பல்லாக கூற, வசந்திக்கு மூளையில் மணி அடித்தது.
“எந்த சொத்து? எதை எழுதுறீங்க மாப்பிள்ளை.?” என வீட்டின் பெரிய மனுசியாக அழுத்தமாக கேட்க,
“ம்ம்.. அது ஊர்ல இருக்குற சொத்துதான் அத்தை. இளாவுக்கு ஏன் அவ்ளோ..” என முடிக்கும் முன்னே,
“என்ன பேசுறீங்க நீங்க? இதெல்லாம் உங்க பரம்பரை சொத்து. அதை எப்படி நீங்க ப்ரீத்தாவுக்கு கொடுப்பீங்க. நாளைக்கு உங்க தங்கச்சி வந்து பிரச்சினை பண்ணா என்ன செய்வீங்க..” என கடுமையாக கேட்க,
“அவங்க வந்து ஏன் கேட்க போறாங்க அத்த.. அவங்களுக்கும் தனியா கொடுத்துட்டாங்களே.. இந்த சொத்தைப் பத்தி ஏன் நினைக்க போறாங்க..” என நாயகி அவசரமாக வசந்திக்கு பதில் கொடுக்க,
“உனக்கு ஒன்னும் தெரியாது. நீ சும்மா இரு..” என வசந்தி மருமகளை அதட்ட,
“எதுக்கு இப்போ அதட்டுறீங்க.. அவர் எழுதுறது அன்பால. அதை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..?” என மாமியாருடன் தர்க்கம் செய்வதைக் கவனித்த கதிரவனுக்கு அப்போதுதான் ஒன்று தோன்றியது.
நாயகி பெயருக்காக கூட சொத்து வேண்டாம் என கூறவில்லை என, அப்போ நாயகியின் எதிர்பார்ப்பு இந்த சொத்தா? என யோசிக்க ஆரம்பித்தார்.
மாமியாருக்கும், மருமகளுக்கும் வாக்குவாதம் பெரிதாக ஆரம்பித்தது. இதை கவனித்த வக்கீல் கதிரவனைப் பார்க்க, அ வர் பார்வையில் நீ கிளம்பு என்ற ஆணை இருக்க, “கதிர் சார்.. எனக்கு இன்னொரு க்ளைன்ட் மீட்டிங்க் இருக்கு.. கால் பண்ணிட்டே இருக்காங்க. நீங்க எல்லாரும் பேசி முடிவு பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க.. நான் பத்திரம் ரெடி செஞ்சிடுறேன்..” என்று கிளம்பிவிட, நாயகிக்கு கோபம் கண்ணை மறைத்துவிட்டது.
“இப்போ உங்களுக்கு நிம்மதியா இதைத்தான நீங்க எதிர்பார்த்தீங்க..” என மாமியாரிடம் ஆத்திரமாக பேச,
“ஏய் என்ன பேசுற.? யாருக்கிட்ட கத்துற..?” என சீனி மனைவியை அதட்ட,
“போதும் நிறுத்திக்கோ இதுக்கு மேல பேசின உனக்கு மரியாதை இல்ல..” என கணவரிடம் கத்திவிட்டு செல்ல, மற்ற மூவரும் ‘என்ன இது.?’ என்பது போல் தான் பார்த்தனர்.
“போ.. போய் உன் பொண்டாட்டிக்கு புத்தி சொல்லு..” என மகனை உள்ளே அனுப்பிய வசந்தி, “மாப்பிள்ளை என்னை கேட்காம சொத்தெல்லாம் யாருக்கும் எழுதாதீங்க. ஏற்கனவே பிரச்சினை போய்ட்டு இருக்கு. இப்போ இதுவும் சேர்ந்தா உங்க ஊர்ல எல்லாரும் தப்பா பேசுவாங்க..” என்றதும்,
அப்படி யாரும் பேச மாட்டார்கள் தான். அதிலும் மகேசோ செல்வமோ இதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள் தான். ஆனாலும் அவருக்கு இப்போது எழுதிக் கொடுக்க மனமில்லை. நாயகியின் மீதிருந்த அபிப்ராயங்கள் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது காரணமாக இருக்கலாம்.
“சரி விடுங்க அத்த.. இனி உங்களை கேட்காம பண்ணல..” என முடித்துவிட்டார் கதிரவனும்.
நாட்கள் கரையத் தொடங்க.. நாயகியின் குணம் மெல்ல வெளி வரத் தொடங்கியது. அதனால் இளங்கோவிடம் அதிகம் பேசினார் கதிரவன். எப்படி இருக்க வேண்டும்.. யாரிடம் பேச வேண்டும்..? எப்படி பேச வேண்டும்…? தங்கையைப் பற்றி, தன் ஊரைப்பாற்றி. மகேஸ்வரி தனக்கு எவ்வளவு முக்கியம்..’ என பேசிக்கொண்டே இருந்தார்.
அவனுக்கு அந்த வயதில் என்ன புரிந்திருக்கும். ஆனாலும் தந்தையோடான அந்த நேரத்தை மிகவும் ரசித்தான் இளங்கோ.
ஒரு நாள் வசந்தியும் கதிரவனும் மட்டும் இருக்கும் போது, வசந்திதான் “மாப்பிள்ளை நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது.” என பீடிகையுடன் ஆரம்பித்து “நீங்களும் இளாவும் ஊரோட போயிட்டா என்ன? ஏற்கனவே உங்க குடும்பம் சிதைஞ்சி போனதுக்கு நானும் ஒரு காரணம்னு மனச உறுத்திக்கிட்டே இருக்கு. இப்போ இங்க நடக்குறது எல்லாம் பார்க்கும் போது மனசே சரியில்ல..” எனவும்,
“நானும் அப்படித்தான் அத்த யோசிச்சிட்டு இருக்கேன். அங்கேயும் மகேசு மட்டும் தனியா இருக்கு. ரெண்டு வீட்டு காட்டையும் செல்வம் மட்டும் பார்க்கிறார். அவருக்கும் கஷ்டம். இங்க இருக்கிற எல்லாத்தையும் சீனிய பார்க்க சொல்லிட்டு நான் ஊருக்கு போகலாம்னு நினைக்கிறேன்…” என நிறுத்த,
“ரொம்ப நல்ல முடிவு மாப்பிள்ளை. இளாவுக்கு இந்த வருசம் ஸ்கூல் முடிஞ்சதும் அங்க சேர்த்துடுங்க.” என அங்கு சென்று என்ன செய்யலாம், இங்கு என்ன செய்ய வேண்டும்.. என இருவரும் பேசிக் கொண்டிருக்க, அது நாயகியின் காதிலும் தெளிவாக விழுந்தது.
மனைவியோடு வெளியில் சென்ற சீனிக்கு திடீரென வேலை வந்துவிட, மனைவி மகளை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவிட, வீட்டிற்கு வந்த நாயகியின் காதில் இவர்கள் பேசியதும் தெளிவாகவே விழுந்தது.
என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என யோசித்தபடியே வந்தவர் மகளை மாமியாரிடம் கொடுத்துவிட்டு, “அவருக்கு ஏதோ வேலையாம் த்த.. எங்களை ஆட்டோவில் அனுப்பி விட்டுட்டு போய்ட்டார்.. நான் காபி போட போறேன். உங்களுக்கு வேணுமா என இருவரையும் கேட்டு, இருவருக்கும் போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
அன்றிலிருந்து மீண்டும் நாயகியிடம் மாற்றம். மிகவும் தன்மையாகவே நடந்து கொண்டார். இளங்கோவை பெரும்பாலான நேரம் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
வசந்திக்கும் நாயகியின் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது.. சீனியும் மனைவி திருந்திவிட்டாள் என்று மனம் நிறைந்து போனார்.
மகேசும் அடிக்கடி அழைத்து கதிரவனிடம் பேசினார். தாமரையைப் பற்றி விசாரித்தார். இளங்கோவை பற்றியும் கூறினார்.
இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு போக வேண்டும் என முடிவெடுத்த கதிரவன், அதை வீட்டில் சொல்ல, “நாங்களும் வர்ரோம் ண்ணா..” என்ற நாயகியிடம்,
“வேண்டாம்மா.. ஜெயந்திக்கு செய்யும் போது எல்லாரும் போகலாம். இப்போ அவங்களுக்கு மட்டும் தான் செய்றோம்.. அதனால எதுக்கு உங்களுக்கு அலைச்சல்..” என முடித்துவிட்டார்.
அன்று இரவு வசந்தியிடம் “என்னோட தப்பால எவ்வளவு பெரிய இழப்பு நடந்துடுச்சு அத்தை. அதை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா செஞ்சிடுவேன்..” என மனம் வருந்தி பேச,
“எனக்குமே அந்த குற்றவுணர்ச்சி இருக்கு மாப்பிள்ளை. நானும் அன்னைக்கு உங்களை வீட்டுல சேர்க்காம இருந்திருந்தா இன்னைக்கு இவ்ளோ பெரிய தப்பு நடந்திருக்காதுல்ல..” என்றவர், “இதுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் மாப்பிள்ளை..பொறுமையா இருங்க..” என வசந்தியும் வருந்த,
“நான் செஞ்ச துரோகத்துக்கு என்னை வீட்டுக்குள்ள கூட சேர்க்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அம்மா என்னை மன்னிச்சதும் இல்ல, இளாவுக்கான உரிமையையும் கொடுத்துட்டு போயிருக்காங்க. அவங்களுக்காக நான் எதுவுமே செய்யலத்த.. இனி ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா செஞ்சிடுவேன்..” எனவும்,
“எதுக்கு மாப்பிள்ளை இவ்ளோ யோசிக்கிறீங்க.. உங்க தங்கச்சி பொண்ணை இளாவுக்கு கட்டி வச்சிடுங்க. உங்க தப்பெல்லாம் மன்னிக்கப்படும்..” என விளையாட்டாகத்தான் பேசினார் வசந்தி.
ஆனால் அதை உறுதியாக பிடித்துக்கொண்ட கதிரவன் “ஆமா த்த.. நான் அதை யோசிக்கவே இல்ல. மகேசுக்கிட்ட இதை பேசனும். இளாவுக்கும் தாமரைக்கும் கல்யாணம் நடந்தா சந்தோசப்படுவேன்…” என ஆனந்தமாக கூற,
“மாப்பிள்ளை நான் விளையாட்டாத்தான் சொன்னேன். அவங்க காலம் வர இன்னும் நாள் இருக்கு. நாம எதுவும் பேசி முடிவு பண்ண வேண்டாம். அந்த நேரம் அவங்க மனசுல என்ன இருக்கோ அதுபடி நடக்கட்டும்.. இப்போதைக்கு இந்த பேச்சே வேண்டாம்..” என திட்டவட்டமாக முடித்துவிட,
கதிரவனுக்கு அந்த எண்ணம் விதையாக விழுந்து சட்டென வளர்ந்து மரமாகியிருந்தது.
“அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம் அத்த.. நீங்களும் இதை மனசுல வச்சிக்கோங்க. தாமரை எனக்கு மருமகளா வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்..” என்ற நேரம், அங்கிருந்த இருவருக்குமே பால் எடுத்து வந்தார் நாயகி.
“என்னண்ணா ரெண்டு பேரும் முக்கியமான விசயம் பேசுறீங்க போல..” என சிரித்தபடியே கேட்க,
“சீனி எங்க நாயகி..?” என வசந்தி கேட்க, “பாப்பாவை உறங்க வச்சிட்டு இருக்கார் அத்த..” என்று பதில் கொடுத்தாலும் பார்வை கதிரவனிடம் இருந்தது.
அதை உணர்ந்த கதிரவன் இருவரும் பேசிக் கொண்டதை சொல்ல, நாயகியும் சிரித்தபடியே தான் கேட்டுக் கொண்டார்.
“அண்ணன் சொல்றதும் சரிதான் த்த.. அவங்க கோபம் போக இப்படித்தான் செய்யனும். நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட பேசுங்க ண்ணா..” என்று சொல்லிவிட்டு, இருவரும் குடித்த டம்ளரை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.
“சரி மாப்பிள்ளை.. நான் போய் படுக்கிறேன்.. நீங்களும் போங்க.. இளா தனியா இருப்பான்..” என்ற வசந்தி, அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது கதிரவனின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தது.
தங்கையிடம் பேசி வைத்த பிறகு கதிரவனுக்கு எதுவோ சரியில்லை என்று உறுத்த தொடங்கியது. மகனின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வேதனையடைந்தார்.
‘அவனுக்காகவேனும் இந்த உயிரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வை இறைவா’ என கடவுளிடம் அடிக்கடி மனு போட்டுக் கொண்டிருந்தார் கதிரவன்.
சில நாட்களாக சீனியின் முகமும் சரியில்லாததை உணர்ந்தார் கதிரவன். அப்படி ஒரு நாளில் “என்ன சீனி ? ஏன் டல்லா இருக்க? உனக்கும் தங்கச்சிக்கும் பிரச்சினையா?” என பொதுப்படையாகவே கேட்டார்.
“இல்லையே கதிரு.. என்ன திடீர்னு..?” என சீனி பதட்டமாக திருப்பி கேட்க
“என்ன பிரச்சினை கதிரு.. உன் முகமும், பதட்டமும் ஆமாம்னு சொல்லுது. எங்கிட்ட சொல்ல மாட்டியா?” என வருந்த,
“ம்ச் என்ன சொல்ல? பேய் பிடிச்சிருக்கு அவளுக்கு. நல்லாத்தான் இருந்தா.. திடீர்னு தனிக்குடித்தனம் போலாம்கிறா.. இங்கயே இருந்து ஓசி சோறு சாப்பிட முடியாது. நீ என்ன சம்பாதிச்சு வச்சிருக்க, உனக்குன்னு என்ன இருக்குனு பார்க்கும் போதெல்லாம் குத்தலா பேசுறா..” என்று சலிப்பாக சொன்னவரிடம்,
“என்னாச்சு நாயகி இப்படியெல்லாம் பேசுற ஆளே இல்லையே. வேற ஒன்னும் இல்லைதானே..” என யோசனையாக கதிரவன் கேட்க,
“ம்ச்.. பொம்பள புள்ளைய பெத்து வச்சிட்டு, அவளுக்கு என்ன சேர்த்து வச்சிருக்கன்னு புலம்பிக்கிட்டு இருக்கா.. ம்ச்.. இப்பவே என்ன சேர்த்து வைக்க போறா..” என மீண்டும் சலிப்பாகவே கூறினார் சீனி.
“பொம்பளைங்க அப்படித்தான் சீனி. நீ கொஞ்சம் பொறுத்து ப்போ.. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்..” என்றவர் அடுத்த நாளே அதற்கான முடிவை எடுத்தார்.
தன் வக்கீலை வர வைத்து சொத்தில் பாதியை ப்ரீத்தா பேரில் எழுதுவதற்கான பத்திரங்களை ரெடி செய்ய சொன்னார்.
வசந்தியும் இப்போது வீட்டில் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார். வக்கீல் வந்திருப்பதை பார்த்து “என்ன மாப்பிள்ளை.?” எனவும்,
“ஒன்னுமில்ல த்த.. சொத்தை பசங்க பேருல எழுத முடிவு பண்ணிருக்கேன்..” என்று அவரைப் பார்க்க,
“ஏற்கனவே வாங்குற சொத்தெல்லாம் ரெண்டு பேருக்குமாதானே எழுதுறீங்க.. புதுசா என்ன எழுத போறீங்க.. என யோசனையோடு கேட்டு மகனைப் பார்க்க, சீனிக்கும் விவரம் தெரியவில்லை.
நாயகிதான் “ரெண்டு பேருக்கும் ஒன்னு போல இருக்கனும்னு அண்ணா நினைக்கிறார் போல அத்த.. அதனால எழுதுறார் போல..” என வாயெல்லாம் பல்லாக கூற, வசந்திக்கு மூளையில் மணி அடித்தது.
“எந்த சொத்து? எதை எழுதுறீங்க மாப்பிள்ளை.?” என வீட்டின் பெரிய மனுசியாக அழுத்தமாக கேட்க,
“ம்ம்.. அது ஊர்ல இருக்குற சொத்துதான் அத்தை. இளாவுக்கு ஏன் அவ்ளோ..” என முடிக்கும் முன்னே,
“என்ன பேசுறீங்க நீங்க? இதெல்லாம் உங்க பரம்பரை சொத்து. அதை எப்படி நீங்க ப்ரீத்தாவுக்கு கொடுப்பீங்க. நாளைக்கு உங்க தங்கச்சி வந்து பிரச்சினை பண்ணா என்ன செய்வீங்க..” என கடுமையாக கேட்க,
“அவங்க வந்து ஏன் கேட்க போறாங்க அத்த.. அவங்களுக்கும் தனியா கொடுத்துட்டாங்களே.. இந்த சொத்தைப் பத்தி ஏன் நினைக்க போறாங்க..” என நாயகி அவசரமாக வசந்திக்கு பதில் கொடுக்க,
“உனக்கு ஒன்னும் தெரியாது. நீ சும்மா இரு..” என வசந்தி மருமகளை அதட்ட,
“எதுக்கு இப்போ அதட்டுறீங்க.. அவர் எழுதுறது அன்பால. அதை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..?” என மாமியாருடன் தர்க்கம் செய்வதைக் கவனித்த கதிரவனுக்கு அப்போதுதான் ஒன்று தோன்றியது.
நாயகி பெயருக்காக கூட சொத்து வேண்டாம் என கூறவில்லை என, அப்போ நாயகியின் எதிர்பார்ப்பு இந்த சொத்தா? என யோசிக்க ஆரம்பித்தார்.
மாமியாருக்கும், மருமகளுக்கும் வாக்குவாதம் பெரிதாக ஆரம்பித்தது. இதை கவனித்த வக்கீல் கதிரவனைப் பார்க்க, அ வர் பார்வையில் நீ கிளம்பு என்ற ஆணை இருக்க, “கதிர் சார்.. எனக்கு இன்னொரு க்ளைன்ட் மீட்டிங்க் இருக்கு.. கால் பண்ணிட்டே இருக்காங்க. நீங்க எல்லாரும் பேசி முடிவு பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க.. நான் பத்திரம் ரெடி செஞ்சிடுறேன்..” என்று கிளம்பிவிட, நாயகிக்கு கோபம் கண்ணை மறைத்துவிட்டது.
“இப்போ உங்களுக்கு நிம்மதியா இதைத்தான நீங்க எதிர்பார்த்தீங்க..” என மாமியாரிடம் ஆத்திரமாக பேச,
“ஏய் என்ன பேசுற.? யாருக்கிட்ட கத்துற..?” என சீனி மனைவியை அதட்ட,
“போதும் நிறுத்திக்கோ இதுக்கு மேல பேசின உனக்கு மரியாதை இல்ல..” என கணவரிடம் கத்திவிட்டு செல்ல, மற்ற மூவரும் ‘என்ன இது.?’ என்பது போல் தான் பார்த்தனர்.
“போ.. போய் உன் பொண்டாட்டிக்கு புத்தி சொல்லு..” என மகனை உள்ளே அனுப்பிய வசந்தி, “மாப்பிள்ளை என்னை கேட்காம சொத்தெல்லாம் யாருக்கும் எழுதாதீங்க. ஏற்கனவே பிரச்சினை போய்ட்டு இருக்கு. இப்போ இதுவும் சேர்ந்தா உங்க ஊர்ல எல்லாரும் தப்பா பேசுவாங்க..” என்றதும்,
அப்படி யாரும் பேச மாட்டார்கள் தான். அதிலும் மகேசோ செல்வமோ இதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள் தான். ஆனாலும் அவருக்கு இப்போது எழுதிக் கொடுக்க மனமில்லை. நாயகியின் மீதிருந்த அபிப்ராயங்கள் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது காரணமாக இருக்கலாம்.
“சரி விடுங்க அத்த.. இனி உங்களை கேட்காம பண்ணல..” என முடித்துவிட்டார் கதிரவனும்.
நாட்கள் கரையத் தொடங்க.. நாயகியின் குணம் மெல்ல வெளி வரத் தொடங்கியது. அதனால் இளங்கோவிடம் அதிகம் பேசினார் கதிரவன். எப்படி இருக்க வேண்டும்.. யாரிடம் பேச வேண்டும்..? எப்படி பேச வேண்டும்…? தங்கையைப் பற்றி, தன் ஊரைப்பாற்றி. மகேஸ்வரி தனக்கு எவ்வளவு முக்கியம்..’ என பேசிக்கொண்டே இருந்தார்.
அவனுக்கு அந்த வயதில் என்ன புரிந்திருக்கும். ஆனாலும் தந்தையோடான அந்த நேரத்தை மிகவும் ரசித்தான் இளங்கோ.
ஒரு நாள் வசந்தியும் கதிரவனும் மட்டும் இருக்கும் போது, வசந்திதான் “மாப்பிள்ளை நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது.” என பீடிகையுடன் ஆரம்பித்து “நீங்களும் இளாவும் ஊரோட போயிட்டா என்ன? ஏற்கனவே உங்க குடும்பம் சிதைஞ்சி போனதுக்கு நானும் ஒரு காரணம்னு மனச உறுத்திக்கிட்டே இருக்கு. இப்போ இங்க நடக்குறது எல்லாம் பார்க்கும் போது மனசே சரியில்ல..” எனவும்,
“நானும் அப்படித்தான் அத்த யோசிச்சிட்டு இருக்கேன். அங்கேயும் மகேசு மட்டும் தனியா இருக்கு. ரெண்டு வீட்டு காட்டையும் செல்வம் மட்டும் பார்க்கிறார். அவருக்கும் கஷ்டம். இங்க இருக்கிற எல்லாத்தையும் சீனிய பார்க்க சொல்லிட்டு நான் ஊருக்கு போகலாம்னு நினைக்கிறேன்…” என நிறுத்த,
“ரொம்ப நல்ல முடிவு மாப்பிள்ளை. இளாவுக்கு இந்த வருசம் ஸ்கூல் முடிஞ்சதும் அங்க சேர்த்துடுங்க.” என அங்கு சென்று என்ன செய்யலாம், இங்கு என்ன செய்ய வேண்டும்.. என இருவரும் பேசிக் கொண்டிருக்க, அது நாயகியின் காதிலும் தெளிவாக விழுந்தது.
மனைவியோடு வெளியில் சென்ற சீனிக்கு திடீரென வேலை வந்துவிட, மனைவி மகளை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவிட, வீட்டிற்கு வந்த நாயகியின் காதில் இவர்கள் பேசியதும் தெளிவாகவே விழுந்தது.
என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என யோசித்தபடியே வந்தவர் மகளை மாமியாரிடம் கொடுத்துவிட்டு, “அவருக்கு ஏதோ வேலையாம் த்த.. எங்களை ஆட்டோவில் அனுப்பி விட்டுட்டு போய்ட்டார்.. நான் காபி போட போறேன். உங்களுக்கு வேணுமா என இருவரையும் கேட்டு, இருவருக்கும் போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
அன்றிலிருந்து மீண்டும் நாயகியிடம் மாற்றம். மிகவும் தன்மையாகவே நடந்து கொண்டார். இளங்கோவை பெரும்பாலான நேரம் தன்னிடமே வைத்துக் கொண்டார்.
வசந்திக்கும் நாயகியின் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது.. சீனியும் மனைவி திருந்திவிட்டாள் என்று மனம் நிறைந்து போனார்.
மகேசும் அடிக்கடி அழைத்து கதிரவனிடம் பேசினார். தாமரையைப் பற்றி விசாரித்தார். இளங்கோவை பற்றியும் கூறினார்.
இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு போக வேண்டும் என முடிவெடுத்த கதிரவன், அதை வீட்டில் சொல்ல, “நாங்களும் வர்ரோம் ண்ணா..” என்ற நாயகியிடம்,
“வேண்டாம்மா.. ஜெயந்திக்கு செய்யும் போது எல்லாரும் போகலாம். இப்போ அவங்களுக்கு மட்டும் தான் செய்றோம்.. அதனால எதுக்கு உங்களுக்கு அலைச்சல்..” என முடித்துவிட்டார்.
அன்று இரவு வசந்தியிடம் “என்னோட தப்பால எவ்வளவு பெரிய இழப்பு நடந்துடுச்சு அத்தை. அதை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா செஞ்சிடுவேன்..” என மனம் வருந்தி பேச,
“எனக்குமே அந்த குற்றவுணர்ச்சி இருக்கு மாப்பிள்ளை. நானும் அன்னைக்கு உங்களை வீட்டுல சேர்க்காம இருந்திருந்தா இன்னைக்கு இவ்ளோ பெரிய தப்பு நடந்திருக்காதுல்ல..” என்றவர், “இதுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் மாப்பிள்ளை..பொறுமையா இருங்க..” என வசந்தியும் வருந்த,
“நான் செஞ்ச துரோகத்துக்கு என்னை வீட்டுக்குள்ள கூட சேர்க்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அம்மா என்னை மன்னிச்சதும் இல்ல, இளாவுக்கான உரிமையையும் கொடுத்துட்டு போயிருக்காங்க. அவங்களுக்காக நான் எதுவுமே செய்யலத்த.. இனி ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா செஞ்சிடுவேன்..” எனவும்,
“எதுக்கு மாப்பிள்ளை இவ்ளோ யோசிக்கிறீங்க.. உங்க தங்கச்சி பொண்ணை இளாவுக்கு கட்டி வச்சிடுங்க. உங்க தப்பெல்லாம் மன்னிக்கப்படும்..” என விளையாட்டாகத்தான் பேசினார் வசந்தி.
ஆனால் அதை உறுதியாக பிடித்துக்கொண்ட கதிரவன் “ஆமா த்த.. நான் அதை யோசிக்கவே இல்ல. மகேசுக்கிட்ட இதை பேசனும். இளாவுக்கும் தாமரைக்கும் கல்யாணம் நடந்தா சந்தோசப்படுவேன்…” என ஆனந்தமாக கூற,
“மாப்பிள்ளை நான் விளையாட்டாத்தான் சொன்னேன். அவங்க காலம் வர இன்னும் நாள் இருக்கு. நாம எதுவும் பேசி முடிவு பண்ண வேண்டாம். அந்த நேரம் அவங்க மனசுல என்ன இருக்கோ அதுபடி நடக்கட்டும்.. இப்போதைக்கு இந்த பேச்சே வேண்டாம்..” என திட்டவட்டமாக முடித்துவிட,
கதிரவனுக்கு அந்த எண்ணம் விதையாக விழுந்து சட்டென வளர்ந்து மரமாகியிருந்தது.
“அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம் அத்த.. நீங்களும் இதை மனசுல வச்சிக்கோங்க. தாமரை எனக்கு மருமகளா வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்..” என்ற நேரம், அங்கிருந்த இருவருக்குமே பால் எடுத்து வந்தார் நாயகி.
“என்னண்ணா ரெண்டு பேரும் முக்கியமான விசயம் பேசுறீங்க போல..” என சிரித்தபடியே கேட்க,
“சீனி எங்க நாயகி..?” என வசந்தி கேட்க, “பாப்பாவை உறங்க வச்சிட்டு இருக்கார் அத்த..” என்று பதில் கொடுத்தாலும் பார்வை கதிரவனிடம் இருந்தது.
அதை உணர்ந்த கதிரவன் இருவரும் பேசிக் கொண்டதை சொல்ல, நாயகியும் சிரித்தபடியே தான் கேட்டுக் கொண்டார்.
“அண்ணன் சொல்றதும் சரிதான் த்த.. அவங்க கோபம் போக இப்படித்தான் செய்யனும். நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட பேசுங்க ண்ணா..” என்று சொல்லிவிட்டு, இருவரும் குடித்த டம்ளரை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.
“சரி மாப்பிள்ளை.. நான் போய் படுக்கிறேன்.. நீங்களும் போங்க.. இளா தனியா இருப்பான்..” என்ற வசந்தி, அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது கதிரவனின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தது.