• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 22.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
பகுதி - 22.

சர்வஜித்தும், வைஷாலியும் சென்னையில் இருக்கும் அவனது வீட்டுக்குத் திரும்பினார்கள். அது வீடு எனச் சொல்வதை விட, பங்களா என்று சொல்வதுதான் மிகவும் சரியாக இருக்கும். விமான நிலையத்தில் இருந்து, வீட்டுக்கு காரில் வந்தார்கள், ஹரீஷ் அவர்களது காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.

“வாழ்த்துக்கள் சார், வாழ்த்துக்கள் மேடம்...” அவன் சொல்ல, சர்வஜித் அதை ஒரு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டான்.

“தேங்க்ஸ் ஹரீஷ்... பட் அந்த மேடம் வேண்டாமே. என்னை வைஷாலின்னே கூப்பிடுங்க” வேகமாகச் சொன்னாள்.

அவள் அவ்வாறு சொல்லவே, ஹரீஷ் ரிவர்வியூ கண்ணாடி வழியாக சர்வஜித்தைத்தான் பார்த்தான். அவனிடமிருந்து தனக்குத் தேவையான பதில்மொழி கிடைக்கவே, “ஓகேங்க... ஆனா பேர் சொல்லி கூப்பிட முடியாது... வாங்க போங்கன்னு வேணா சொல்லிக்கறேன்” அவன் சொல்ல, அவள் தன் கணவனைத்தான் திரும்பிப் பார்த்தாள்.

ஹரீஷ் பார்த்ததையும், சர்வஜித் அதற்கு எதுவும் சொல்லாததும் கூட அவளுக்குத் தெரிந்தது. ஆனால் ‘சர்வஜித்தின் கண்களை சந்திக்காமலேயே அவன் எதைப் புரிந்துகொண்டான்?’ எனப் புரியாமல் குழம்பினாள்.

‘இந்த கண்ணாடியை எதுக்குத்தான் போட்டிருக்காரோ?’ சற்று கடுப்பாக வந்தது. ‘இப்போ எங்கே போறோம்?’ என அவளுக்கும் கேட்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவனிடம் எதையும் கேட்டுக்கொள்ளும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.

மிகப்பெரிய சேசிங், ஃபயிட்... தன் மாமனின் அடியாட்களின் அடாவடி, இவனது அதிரடி... என அவள் என்னென்னவோ கற்பனை செய்து வைத்திருந்தாள். இவனை அடித்து துவம்சம் செய்துவிட்டு, முத்துப்பாண்டி வெற்றிகொள்வது போல் கூட கற்பனைகள் விரிந்தது.

ஆனால் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அத்தனை கெத்தாக, தன் மாமன், மாமன் மகன்களின் ஒரு சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாதபடி செய்த சர்வஜித்தின் அதிரடி கண்டு மலைத்தாள்.

‘எப்படிடா?’ எனத்தான் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவள் தன் யோசனையிலேயே இருக்க, பங்களாவுக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள். கார் நின்ற பிறகுதான் சுற்றுப்புறம் உறைக்க, வேகமாக பார்வையைச் சுழற்றினாள்.

சர்வஜித் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க, அவளும் மறு பக்கம் இருந்து இறங்கினாள். அவர்கள் இருவரும் இறங்கிய மறு நிமிடம், சீருடை அணிந்த பணியாளர்கள் வரிசையாக வந்து நின்றார்கள்.

அவர்களுக்கு நடுவில், விசாலாட்சியும், கையில் ஆரத்தி தட்டோடு ரூபியும் அங்கே வந்தார்கள்.

“அத்த...” அவள் ஆச்சரியமாக அழைக்க, அவரோ இமைகளை அழுத்தமாக மூடித் திறந்தார்.

“ரூபி... நீ எப்படிடி இங்கே...?” குதூகலமானாள். அவளது அந்த கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சமாக புருவம் நெரித்தவன், பெரிதாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ரூபி அவளுக்கு எத்தனை நெருக்கமானவள் என்பதை அவன் அந்த நொடி உணர்ந்து கொண்டான்.

“எல்லாம் வீட்டுக்குள் வந்து பேசிக்கலாம்... நீ ஆரத்தி எடும்மா” விசாலாட்சி சொல்ல, ரூபி அவர் சொன்னதைச் செய்தாள்.

“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா, வந்து பூஜை ரூமில் விளக்கேற்று” விசாலாட்சி சொல்ல, அவள் உள்ளே வந்தாள். சர்வஜித் அங்கிருந்து அகன்றுவிடலாம் என நினைக்க, விசாலாட்சி அவனைத் தடுத்தார்.

“நீ எங்கேப்பா போற? அவ கூடவே இரு” தாய் சொல்ல, அதை அவன் மறுக்கவே இல்லை. அவளுடனே சென்று விளக்கேற்றிவிட்டு, பூஜை ரூமில் அவள் விழுந்து வணங்க, அவனோ அப்படியே நின்று இருந்தான். பூஜை அறைக்கு வெளியே விசாலாட்சி நிற்க, அவன் கரத்தைப் பற்றி அவர் அருகே அழைத்துச் சென்றவள், அவர் காலில் விழ, அவனும் விழுந்தான்.

“நல்லா இருங்க... நல்லா இருங்க... ஒத்துமையா, சந்தோஷமா வாழணும்” அதீதமாக உணர்ச்சி வசப்பட்டார். அவள் கன்னம் தொட்டு முத்தமிட்டவர், மகன் நெற்றியில் முத்தம் வைத்தார்.

“அம்மாவுக்கு இது மட்டும் போதாதுப்பா. இவளை நீ நல்லா வச்சுக்கணும். இவளுக்காகவும் இனிமேல் நீ யோசிக்கணும். இவளோட உணர்வுகளுக்கும் நீ மதிப்பு கொடுக்கணும். இவளை இனிமேல் காயப்படுத்தவே கூடாது” தாய் சொல்ல, அவரையே பார்த்தான்.

“நீங்க சொன்னால் சரிதான்ம்மா” இப்படிச் சொன்னவனை அதிர்வும், ஆச்சரியமும் கலக்க திரும்பிப் பார்த்தாள் வைஷாலி.

‘இந்த அளவுக்கு அம்மா புள்ளையாடா நீயி?’ ஹரீஷின் மைண்ட் வாய்ஸ் இப்பொழுது வைஷாலிக்குள் இடம் மாறி இருந்தது.

வார்த்தைகளுக்குள் கத்தி வைப்பவனாகவே இவனைப் பார்த்துவிட்டு, இப்பொழுது இப்படி தாயின் முன்னால் அடங்கி நிற்பவனைப் பார்க்க வியப்பாக இருந்தது. அதுவும் அந்த உடல்மொழி, ‘நீங்க சொன்னால் செய்வேன்’ என்பதுபோல் குழைந்து கிடக்க, வைஷாலி அவர்களை வெறித்தாள்.

“யாரும்மா அங்க...?” விசாலாட்சி குரல் கொடுக்கவே, கையில் பால், பழம் ஏந்திய ட்ரேயோடு ஒரு பணிப்பெண் அங்கே வந்தாள்.

“இப்படி வந்து உட்காருங்கப்பா...” தாய் சொல்ல, அங்கே கிடந்த உயர்தர சோபாவில் சென்று அமர்ந்தார்கள். ஆளை விழுங்கிக் கொள்ளும் அதன் மென்மையை உணர்ந்தாலும், அதை ரசிக்கும் மனநிலையில் அவள் அப்பொழுது இருக்கவில்லை.

தாய் சொன்னவற்றை எல்லாம் மறுக்காமல் செய்தவன், “நீ இப்போ உன் ரூமுக்கு போப்பா...” தாய் சொல்லவே ஹரீஷை ஒரு பார்வை பார்த்தவன், மாடிப் படிகளில் விரைந்தான். அவன் பின்னாலேயே ஹரீஷும் செல்ல, வைஷாலியின் அருகே வந்தாள் ரூபி.

“ரூபி...” என்றவாறு தோழியின் கரத்தை அவள் பற்றிக் கொள்ள, “நீங்க அந்த ரூமில் இருந்து பேசுங்க... நான் மதியத்துக்கு வேண்டியதை எல்லாம் என்னன்னு கொஞ்சம் பார்க்கறேன்” என்றவாறு தோழிகளுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்.

“உன் மாமியார் சூப்பர்டி... நான் வந்ததில் இருந்து என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க” ரூபி தோழியிடம் சொன்னவாறு அவர் காட்டிய அறைக்கு நடந்தாள்.

அறைக்குள் வந்து கதவடைத்துக் கொண்டவள், “ரூபி... என்னைக் கொஞ்சம் கிள்ளேன்” என்றாள்.

“என்னடி சொல்ற? எதுக்கு?” என்றாள்.

“என்னைக் கிள்ளுன்னு சொன்னேன்... நடந்ததை எல்லாம் என்னால் நம்பவே முடியலை. எங்க கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா? என் மாமா எல்லாம் கையைக் கட்டிக்கிட்டு நின்னதை நீ பார்த்திருக்கணும்.

“ஹப்பா... ஊருக்குள்ளே என்ன ஆட்டம் போடுவாங்க தெரியுமா? ஆனா இன்னைக்கு எதுவுமே செய்ய முடியாமல் அவங்க நின்னதைப் பார்க்க கண் கோடி வேணும். இங்கே பார்... இங்கே பார்... சொல்லும் போதே எனக்கு எப்படி புல்லரிக்குதுன்னு பாரேன்” அவள் சொல்லிக் கொண்டே போக, ரூபி அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.

“என்னடி? நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பேசாமல் இருக்க?” அவளைப் பிடித்து உலுக்கினாள்.

“ஊருக்குப் போயிட்டு எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலை நீ” ரூபி குறை பட்டாள்.

“ஊருக்கு போன உடனேயே என் ஃபோனை பறிமுதல் பண்ணிட்டாங்க. இப்போ கூட என் ஃபோன் என்கிட்டே கிடையாது. அப்படி இருக்கும்போது நான் யாருக்கு ஃபோன் பண்றதாம்? சொல்லப் போனால் நேற்று நைட் வரைக்குமே இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு பெரிய டென்ஷன்.

“இப்போ இந்த நிமிஷம், நான் போட்டிருக்கும் இந்த ஒரு ட்ரஸ் தான் என்கிட்டே இருக்கும் ஒரே சொத்தே” என்றவளுக்கு இன்னுமே நடந்ததை எல்லாம் நம்ப முடியாத திகைப்பு.

சில பல நிமிடங்கள் அமைதியில் கழிய, அவர்கள் இருந்த அறைக்கதவைத் தட்டும் ஓசையில் கலைந்தார்கள். கூடவே “மேடம்...” என்ற அழைப்பு அவர்களை எட்ட, “உள்ளே வாங்க...” ரூபிதான் குரல் கொடுத்தாள்.

உள்ளே வந்த பெண்ணோ, “சார் இதை உங்ககிட்டே கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றவாறு அவளது அலைபேசியை அவளிடம் கொடுத்தாள்.

“ஷாலு... உன் ஃபோன்டி...” ரூபி சொல்ல, “ஆமா... இது என் அம்மாகிட்டல்ல இருந்தது” என்ற ஆச்சரியத்தோடு அவள் கரத்தில் இருந்து வாங்கிக் கொண்டாள்.

“அங்கே இருந்து உன்னையே தூக்கி இருக்கார். இந்த ஃபோன் என்ன பிரம்மாதம்?” ரூபி சொல்ல, அதை ஏற்றுத்தான் ஆக வேண்டி இருந்தது.

“உங்களுக்கு வேண்டிய ட்ரஸ் எல்லாம் கப்போர்ட்ல கொஞ்சம் இருக்குன்னு சொல்லச் சொன்னாங்க” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.

“மிஸ்டர் ஃபெர்ஃபெக்ட் தான்...” ரூபி சிலாகிக்க, அங்கே இருந்த கப்போர்ட்களைத் திறந்தாள். அதில் அனைத்துமே காலியாக இருக்க, ஒன்றில் மட்டும் சில இரவு உடைகளும், அவள் வழக்கமாக அணியும் அவளது உடைகளும் அங்கே இருந்தது.

“இதெல்லாம்... இங்கே சென்னை வீட்டில் இருந்தது ரூபி...” என்றாள்.

“உங்க அம்மாகிட்டே இருந்து ஃபோனையே தூக்கினவருக்கு, இது எம்மாத்திரம்? ஆனாலும் எல்லாத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கறார் தான். நல்லது...” என்றாள் ரூபி.

“சரி... நீ எப்படி இங்கே வந்த? யார் கூட்டி வந்தா?” தோழியிடம் கேட்டாள்.

“வேற யார்...? எல்லாம் ஹரீஷ் தான்... உங்க மேரேஜ் முடிஞ்சதுன்னும், உங்களை வரவேற்க நான் இருந்தால் நல்லா இருக்கும்னும் எங்க அப்பாகிட்டே வந்து பேசினார். அப்பா எதுவும் சொல்லலை... அவரோட அனுப்பி வச்சுட்டார்” என்றவாறு தோளைக் குலுக்கினாள்.

“என்னடி சிம்பிளா சொல்லிட்ட. அவரைப் பார்த்துட்டு உங்க அப்பா எதுவும் சொல்லலையா? பேசாமல் அனுப்பி வச்சுட்டாரா? இது நம்பற மாதிரி இல்லையே...” தோழியைச் சீண்டினாள்.

“உனக்கு எங்க கதையைப்பற்றி பிறகு சொல்றேன். இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் கிளம்பறேன். இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு லீவா? இல்லன்னா ODயா? எதுவும் தெரியலை போ...” என்றவாறு கண்ணடித்தாள்.

“உனக்கு ஓவர் குசும்புதான்... இன்னைக்கு மட்டும் என் கூடவே இரேன். எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்” கெஞ்சலாக கேட்டாள்.

“இன்னைக்கு மட்டும்... ம்ஹும்... அப்போ நாளைக்கு இருந்தால் விரட்டி விட்டுடுவ?” கேலி செய்தாள்.

“ரூபி... அவரைத் தனியா ஃபேஸ் பண்றதை நினைச்சாலே எனக்கு கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு. இதில் நீ வேற இம்சை பண்ணாதே” என்றவளின் உள்ளங்கை எல்லாம் வியர்த்துப் போயிருந்தது.

“அதெல்லாம் நீ சமாளிச்சிடுவ... சரி... உன் மாமா மகன், முத்துப்பாண்டி என்னதான் ஆனான்?” அவள் கேட்க, அப்பொழுதுதான் வைஷாலிக்கு அவன் நினைவே வந்தது.

“அதானே... என்ன ஆனான்?” அவளிடமே திருப்பிக் கேட்டாள்.

“என்கிட்டேயே திருப்பிக் கேட்கறியா? நல்லா வருவடி. சரி... ட்ரஸ் மாத்திட்டு கொஞ்சம் படு...” அவள் சொல்ல, தலை அலங்காரங்களை எல்லாம் கலைத்துவிட்டு, ஒரு இலகுவான புடவையை அணிந்துகொண்டு படுத்துவிட்டாள்.

சில நாட்களாகவே சரியான உறக்கம் இல்லை என்பதால், படுத்த உடனேயே உறங்கியும் போனாள். அதே நேரம், சர்வஜித் அதே கேள்வியைத்தான் ஹரீஷிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அந்த முத்துப்பாண்டி என்ன ஆனான்?”.

“நீங்க சொன்ன மாதிரியே கண்டெயினர்ல போட்டு கப்பல்ல அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் சார்” அவன் சொல்ல, தலையை அசைத்து கேட்டுக் கொண்டான். அந்த நேரம் அவர்கள் இருந்த அலுவலக அறைக்கதவு தட்டப்பட, ஹரீஷ் வேகமாக கதவை நோக்கிச் சென்றான்.

வந்திருப்பது சர்வஜித்தின் தாய்தான் என அவனுக்குப் புரிந்தது. ஏனென்றால் அவர்கள் அழைக்காமல், அவர்கள் எதையும் கேட்காமல் யாரும் அங்கே வர மாட்டார்கள் என அவர்களுக்குத் தெரியும்.

“வாங்கம்மா...” என்றவாறு அவன் விலகி வழிவிட,

“இன்னைக்கு கூட அப்படி என்னப்பா வேலை? இன்னைக்கு ஒரு நாள் அவனை ஃப்ரீயா விடக் கூடாதா?” விசாலாட்சி கேட்க அவனோ விழித்தான்.

‘நானா அவருக்கு வேலை வைக்கறேன்? எல்லாம் என் நேரம்?’ என நொந்தவாறு அவரையே பார்த்திருந்தான்.

“ஹரீஷ்...” சர்வஜித் அழைக்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிச் சென்றான். தாய் தன்னிடம் தனிமையில் பேச விரும்புவது அவனுக்குப் புரிந்தது.

“சொல்லுங்கம்மா...” என்றவாறு தன் குளிர் கண்ணாடியை கழட்டி மேஜைமேல் வைத்தான். அதென்னவோ... தாயின் முன்னால் எப்பொழுதுமே அவன் அவரது மகன் மட்டுமே. சர்வஜித் என்ற அடையாளமோ, ‘உஸ்தாத்’ என்ற நிழல் உலக மனிதனோ, எதுவாகவும் இல்லாமல் அவனாக இருந்தான்.

அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவர், சில பல நிமிடங்களை எடுத்து அவனிடம் பேசினார். அவர் பேசுவதை எல்லாம் மிகவும் நிதானமாக, கேட்டுக் கொண்டானே தவிர பதில் வார்த்தை எதுவும் பேசவில்லை.

“என் மகனுக்கு பதினாலு வயசுக்கு மேலே நான் எதையுமே சொல்லிக் கொடுத்தது இல்லை. நீயே உன் வாழ்க்கையை வடிவமைச்சுகிட்ட, ஆனா ஒரு பெண்ணுக்கு உரியவனா நீ மாற வேண்டிய கட்டாயம் உனக்கு இருக்குப்பா.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“குடும்ப வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்போ, ஆசையோ உனக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஆசையும் எதிர்பார்ப்பும் அவளுக்கும் இருக்கக் கூடாதுன்னு நீ நினைக்கக் கூடாது. அது அவளோட நியாயமான ஆசை.

“அவளுக்குன்னு ஒரு தனிக் குடும்பம், புருஷன், குழந்தைகள்... இப்படி ஆயிரம் கனவுகள் அவளுக்கு இருக்கும். அதை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பும், கடமையும் உனக்கு இருக்கு. அவ உணர்வுகளை நீ நசுக்க மாட்டன்னு நினைக்கறேன்” என்றவாறு எழுந்து சென்றுவிட்டார்.

“அம்மா... என்னோட இன்னொரு பக்கம் ரொம்ப கொடுமையானது. அது அந்த இருண்ட பக்கம் அவளுக்குத் தெரிய வராமலே போகட்டுமா? இல்லையென்றால் அவளுக்கு நான் சொல்லியாகணுமா?” என்றவாறு தாயின் முகம் பார்த்தான்.

“அவ கேள்வி கேட்டால் பதில் சொல்லும் கடமை உனக்கு இருக்குப்பா” என்றவாறு சென்றுவிட்டார். சர்வஜித் கொஞ்சம் கூட அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தான். நிறைய யோசித்தான். இப்பொழுது... தான் தனி மனிதன் இல்லை என்ற உண்மை புரிந்தது.

தான் மாற வேண்டிய அவசியமும் புரிந்தது. ‘தன்னால் முடியுமா?’ என்ற மிகப்பெரிய வினா எழுந்து அவனை அலைக்கழித்தது. வைஷாலியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவனுக்குள் இருக்கும் அழுத்தங்கள் அவளை நினைத்தாலே விலகிப் போவது புரிந்தது. நிறைய யோசித்தான், சில முடிவுகளையும் எடுத்துக் கொண்டான்.

மதிய உணவு வேளை முடிய, மாலை நெருங்க நெருங்க, உள்ளுக்குள் சில உருவமில்லா உணர்வுகள் எழுந்து வைஷாலியை அலைக்கழித்தது. அவள் அமைதியின்றி இருப்பதைப் பார்த்த ரூபி தோழியைத் தேற்றினாள்.

“நீ எவ்வளவோ சமாளிச்சுட்ட ஷாலு... இப்போ அவர் உன் கணவர், அவரை சமாளிக்கறது உனக்கு கஷ்டமா? சியர்அப்...” அவளை மாற்ற முயன்றாள்.

“நீ என்னதான் சொல்லு... நேரம் ஆக ஆக... திகீர்ன்னு தான் இருக்கு” புலம்பினாள்.

“சரி அதையெல்லாம் விடு... குளிச்சுட்டு வேற ட்ரஸ் மாத்திக்கோ. வீட்டில் விளக்கு ஏற்றும் நேரமாகப் போகுது” ரூபி சொல்ல, அதற்கு மேலே அவள் தயங்கவில்லை. எழுந்து உடை மாற்றப் போக, அவள் புடவையில் குத்தி இருந்த பின் எப்படியோ ஒரு மாதிரி சிக்கிக் கொண்டது.

“ரூபி... இந்த பின் கழட்ட வரலை பார்... கொஞ்சம் எடுத்து விடு...” அவள் கேட்க, ரூபி அவளது உதவிக்கு வந்தாள். அப்படியும் சிக்கிக் கொண்டதை விடுவிக்க அத்தனை சிரமமாகத்தான் இருந்தது. அந்த நேரம் அவர்களது அறை ஜன்னலைக் கடந்த சர்வஜித் எதேச்சையாக இந்தக் காட்சியைப் பார்த்தான்.

ஜன்னலில் போட்டிருந்த திரைச்சீலை கொஞ்சம் விலகி, காற்றுக்கு அசைந்து கொண்டிருக்க, அந்த இடைவெளி வழியாகப் பார்த்தான்.

“என்னடி இப்படி ஆகிப் போச்சு? நல்ல வேளை இப்போ ஆச்சு, இதுவே அங்கே போன பிறகு ஆகி இருந்தால் என்ன செய்திருப்பேன்?” ரூபியிடம் கேட்டாள். அதை அவனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

‘அதானே...?’ என அவனுக்குள் ஓடியது. அதற்கு மேலே அவனுக்கு சிந்திக்கத் தெரியவில்லை.

“நீ எதுவும் செய்ய வேண்டாம்... என்னை கூப்ட்ட மாதிரி உன் அவரைக் கூப்ட்டு எடுத்துவிடச் சொல்ல வேண்டியதுதான். முதல்ல நீ எதையுமே கழட்ட தேவை இருக்காது, எல்லாம் சாரே...” அவள் மேலே சொல்லும் முன்பு அவள் வாயை அடைத்து இருந்தாள்.

‘என்ன நானா? எப்படி?’ என எண்ணிய சர்வஜித், அங்கே இருந்து விலகி ஓடியே போனான். சில எதார்த்தம், உண்மைகள் பொட்டில் அறைந்தாற்போல் புரிய வரும் உணர்வு. தன் அறைக்குத் திரும்பியவன், தீவிரமாக சிந்தித்தான்.

அவன் சேப்ட்டி ‘பின்’ன்னை கண்களால் கண்டே பல வருடங்கள் ஆகி விட்டது. அப்படி இருக்க அதன் மெக்கானிக் விஷயங்கள் எல்லாம் அவனுக்கு எப்படித் தெரியும்? அதை எண்ணி தனக்குள் குழப்பிக் கொண்டான்.

சில விஷயங்களை முடிக்க வேண்டி கூட அவன் இவ்வளவு யோசித்ததாக நினைவில்லை. அப்படி இருக்கையில் இதற்கு தீர்வு கிடைக்காமல் சோர்ந்தான். எப்படியோ மாலை மங்கி, இரவும் வந்து சேர, வைஷாலியை மெல்லியதாக அலங்காரம் செய்தவள், தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.

விசாலாட்சி மகனது அறையைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ள, கையில் ஃப்ளாஸ்க், டம்ப்ளரோடு அவன் அறைக்குச் சென்றாள். அந்த மாடிப் படிகளில் ஏறி, அவன் அறைக்கு முன்னால் வந்து நிற்பதற்குள் வியர்த்துப் போனது.

சில பல நொடிகள் அவள் அப்படியே நிற்க, “கெட் இன்...” அவனது குரல் ஓங்கி ஒலிக்க, ஒரு நொடி அனைத்தையும் தவற விடப் போனவள் சுதாரித்து இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவள் அறைக்குள் நுழைய, அந்த கதவு தானாகவே மூடிக் கொண்டது.

அங்கே இருந்த சின்ன மேஜைமேல் கையில் இருந்தவற்றை வைத்தவள், அறையை சுற்றிப் பார்த்தாள். ஒரு அதி நவீனமான செவென் ஸ்டார் ஹோட்டலுக்குள் இருக்கும் பிரமிப்பு.

இருவருக்குமான முதல் தனிமை... உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத படபடப்பும், தவிப்புமாக படுக்கையில் அமர்ந்திருந்தாள். பெரிதான அலங்காரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஆடம்பரமாக அழகாக, நவீனமாக இருந்தது. அவளோ ஒரு மைசூர் சில்க் புடவையை அணிந்திருக்க, தலையில் மல்லிகைப்பூ என சிம்பிளாகவே இருந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள், அங்கே இருந்த ‘சர்வஜித்’த்தைப் பார்த்தவள் ஒரு நொடி திகைத்துப் போனாள். அந்த திகைப்பு ஒரு நொடிதான் அவளிடம் இருந்தது. மறு நிமிடமே சட்டென தன்னை மீட்டுக் கொண்டாள்.

சர்வஜித் அவளைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தான். அவளுக்கு தன்னை சர்வஜித்தாகவும் தெரியும், சர்வாவாகவும் தெரியும் என அவனுக்குத் தெரியுமே. அதை அவனிடமே சொல்லிவிட்டு அவள் பட்ட துன்பங்கள் ஒன்றா இரண்டா?

‘ஓ... அப்போ இதுதான் இவரோட உண்மையான முகம். என் கழுத்தில் தாலி கட்டிய ‘சர்வா’ என்ற முகம் வேஷம் தான்’ எண்ணியவளுக்கு உள்ளுக்குள் சிறு பதட்டம் எழுந்தாலும் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவள் தன்னிடம் எதையாவது கேட்பாள் என அவன் எதிர்பார்க்க, அவள் தானாகவே தெளிந்தது கண்டு அவளை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான். ‘என் மனைவி முட்டாள் இல்லை’ என எண்ணியவன், அந்த இடத்தில் தன் நினைப்பை நிறுத்தினான்.

‘மனைவி...’ தனக்குள் மீண்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவளை மனதுக்கு நெருக்கமாக, மிகவும் நெருக்கமாக மனம் உணர்ந்தது.

அவன் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருக்க, ஒரு மாதிரி உணர்ந்தாள். அதுவும் அவன் கையில் புகைந்த அந்த சிகரெட், அதன் நெடி... அவளை தாக்கியது. அவன் ஒரு மாதிரி ஆழ்ந்து புகைக்க, ‘இவருக்கு இப்போ என்ன டென்ஷன்?’ என்றுதான் நினைத்தாள்.

அப்படி நினைத்தவுடன் சிரிப்பு வரும்போல் இருந்தது. அதை அடக்கிக் கொண்டவள், ‘இவர் ஏதாவது பேசினால் பரவாயில்லை. இல்லன்னா நான் பேசாமல் படுத்துக்கவா? இந்த ரூமுக்குள்ளே எதுக்கு இவருக்கு அந்த கண்ணாடிங்கறேன்?’ மனதுக்குள் புலம்பியவாறு இருந்தாள்.

அந்த நேரம் அவன் சோபாவில் இருந்து எழுந்து கொள்ள, அவளும் பட்டென எழுந்து நின்றுவிட்டாள். அவன் அடிமேல் அடி எடுத்துவைத்து நடக்கத் துவங்க, அவளுக்கு மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

அவளை சற்று நெருங்கி வந்தவன், கரங்களை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டான். அவள் அவனையே பார்த்திருக்க, “என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?” நிதானமாகக் கேட்டான். முதல் முறையாக அவளிடம் அவன் சாதாரணமாகப் பேசியதாக அவளுக்குத் தோன்றியது.

“அது... அது... இதுதான் உங்க உண்மையான முகமா?” அவளால் புரிந்துகொள்ள முடிந்ததுதான் என்றாலும், அவன் வாயால் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

“ஆமா...” அவன் மறுப்பின்றி ஒத்துக் கொண்டான்.

“அப்போ நான் இப்போ யாரோட மனைவி?” தான் கேட்பது அபத்தம் என்று தெரிந்தே கேட்டாள்.

“சில வேஷங்களை, அதோட தேவை முடிந்ததும் நான் கலைத்தே ஆகணும். அந்த வேஷத்தோட முடிவில், உனக்கே அது தெரியவரும். என்னைப் பொறுத்த வரைக்கும், நான் எந்த வேஷம் போட்டாலும், நீ என் மனைவிதான்” அவன் அழுத்திச் சொல்ல, அவளுக்கு அத்தனை நிம்மதி.

“இந்த ரூமுக்குள்ளே, உன்கிட்டே நான் நானா இருந்துட்டுப் போகலாம்னு நினைக்கறேன். உனக்கு சர்வாதான் வேணும்ன்னா...” அவன் இழுத்து நிறுத்த,

“இல்ல... இல்ல... வேண்டாம்” அவனது உண்மையை மட்டுமே மனம் பற்றிக்கொள்ள நினைத்தது. அவனது வேஷங்களை அணைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.

“என்னைப் பார்த்தால் பயமா இல்ல?” அவளைப் பார்த்தவாறே கேட்டான்.

அவன் கேட்டு முடிக்கும் முன்பே, “எதுக்கு பயம்?” அவனிடம் திருப்பிக் கேட்டாள். அந்த அவளது வேகமும், பதிலும் அவனுக்குள் ஒருவித ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் அவளையே பார்த்திருக்க, சில பல நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.

“இந்த கல்யாணம் மட்டும் நடந்துட்டா, நீ நான் என்ன சொன்னாலும் செய்யறேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா?” அவளிடம் கேட்டான்.

‘இப்போ எதுக்கு இதைக் கேட்கறார்?’ என உள்ளுக்குள் ஓடினாலும் அவளது தலை மேலும் கீழுமாக ஆம் என அசைந்தது.

“எனக்கு கத்துக்கொடு...” அவன் சொல்ல, புருவம் நெரித்தாள்.

“எ...என்ன கத்துக் கொடுக்கணும்? நீங்க எதைக் கேட்கறீங்க?” அவளுக்குப் புரியவில்லை.

“ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் நடுவில் நடக்கும் விஷயம். குறிப்பா கணவன் மனைவிக்கு நடுவில் நடக்கறது. எனக்கு கத்துக்கணும்” அவன் குரலில் அவ்வளவு தீவிரம்.

“என்ன? நீங்க விளையாடறீங்களா?” அவன் குரல் அப்படி இல்லை என உணர்த்தினாலும், அவனிடம் கேட்டாள்.

“இல்ல... ஐ’ம் டேம் சீரியஸ்... சொல்லிக் கொடு...” அவளை நெருங்கி நின்றவன் கேட்டான்.

“எனக்கு மட்டும் என்ன தெரியும்?” அவள் வேகமாக கேட்டுவைக்க, அவன் பார்வை அவள் இதழ்களில் நிலைக்க, படபடத்துப் போனாள். அவளது அந்த பதட்டம், படபடப்பு என அனைத்தையும் இமை கொட்டாமல் ரசித்தான்.

என்னவோ அவளை இப்பொழுதுதான் பார்ப்பதுபோல் இருந்தது அவனது பார்வை. அவன் பார்வைக்கான பொருள் புரிய, “அது... ஏதாவது கேளுங்க, எனக்குத் தெரிந்ததை சொல்லித் தர்றேன்” அவன் கேட்டதில் உள்ளுக்குள் மனம் என்னென்னவோ செய்தது. அவனை இறுக கட்டிக்கொண்டு அவன் இதழை முரட்டுத்தனமாக சிறை செய்யத் தோன்றியது.

“ஓகே...” என்றவன், “முதல்ல கிஸ்... பிறகு... இந்த சேப்டி பின் ரிமூவ் பண்றது. பிறகு... இந்த ஜேக்கட் ஹூக்...” என அவன் சொல்லிக் கொண்டே போக, வேகமாக தன் கரத்தால் அவன் வாயை அடைத்தாள்.

“இதெல்லாம் தெரியாமல்தான் அன்னைக்கு என்னை ரேப் பண்ண வந்தீங்களா?” அவள் கேட்க, அவன் தீவிரமாக எதையோ யோசித்தான்.

“நான் அதை யோசிக்கவே இல்லை... அந்த டவ்வலை ரிமூவ் பண்றது ரொம்ப ஈசியான வேலை... இது...” என்றவன் அவள்மேல் பார்வையை இறக்கினான். அவன் பார்வை அவளை என்னென்னவோ செய்தது.

அவனோ... “அதோட அது வேற டிப்பார்ட்மென்ட்” அவன் தோளைக் குலுக்க, அவளுக்கு அத்தனை அதிர்ச்சி. கூடவே அவன் சொன்ன விதத்தில் சிரிப்பும் வரும்போல் இருந்தது.அவன் விளையாட்டாக எல்லாம் எதையும் சொல்லவில்லை என அவன் முகத்தைப் பார்த்தாலே அவளுக்குப் புரிந்தது.

“அப்போ...” அவள் எதையோ கேட்க முயல,

“நீ இந்த ரூமுக்குள்ளே வந்ததில் இருந்து இங்கே ஒரு புதுவிதமான வாசனையை நான் ஃபீல் பண்றேன். பொண்ணுங்களைப்பத்தி நான் யோசிச்சதே இல்லை. என் புலன்கள் எல்லாம் என் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கணும்னு மட்டும்தான் இதுவரை யோசிச்சு இருக்கேன்.

“அதைவிட ஒரு பெண்ணுக்காக என் மனமோ, உடலோ ஏங்கியது இல்லை. ஆனா இப்போ உன்னைப் பத்தியும் யோசிச்சாக வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குன்னு அம்மா சொன்னாங்க. ஃபர்ஸ்ட் டைம்...

“என் ஹார்மோன் சேஞ்சசை நான் கன்ட்ரோல் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கறேன். உனக்கு டைம் வேணும்ன்னா ஐ கேன் லீவ் யூ அலோன்” அவன் சொல்ல, அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாத தடுமாற்றம்.

அவளது பதிலுக்காக அவன் நிதானமாக காத்திருந்தான். அவளுக்குள் வேறு மாதிரியான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது இவனிடம் டைம் கேட்டு, தன்னை அவனிடமிருந்து காத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

சொல்லப்போனால் தான் எல்லா விதங்களிலும் அவனது மனைவியாக மாறிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அவளது முகத்தில் வந்து போகும் பாவங்களை வரி விடாமல் அவன் படிக்கிறான் என அவளுக்குத் தெரியாமல் போனது.

‘அதுவும் அந்த முத்துப்பாண்டி திரும்பிவந்து தன்னை ஏதாவது செய்துவிட்டால்?’ அந்த நினைவே தேகத்தையும் மனதையும் நடுங்கச் செய்தது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“இனிமேல் உன்னை ஒருத்தன் தொடணும்னு மனதால் கூட நினைக்க முடியாது. அப்படி உன்னைத் தொடணும்ன்னா, அவன் இந்த சர்வஜித்தை தாண்டித்தான் வந்தாகணும். இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரைக்கும் அப்படி ஒன்று நடக்கப் போறதே இல்லை” அவன் சொல்ல, மொத்தமாக அதிர்ந்தாள்.

தன் மூளைக்குள் ஓடும் விஷயத்தை அவன் அப்படியே படிப்பதுபோல் இருந்தது. அதுவும் அவன் குரலில் இருந்த தீவிரம், உடல்மொழியில் இருந்த இறுக்கம் அவளை அசைத்துதான் போட்டது. அவனது கை கடிகாரம் ‘பீப்...பீப்...’ என ஒலியெழுப்ப, அவன் கோபத்தில் கொதிப்பது அவளுக்குப் புரிந்தது.

“நான்... எனக்குத் தெரிஞ்சதை சொல்லித் தரேன். பட் அண்டர் ஒன் கண்டிஷன்” அவள் சொல்ல, அவனோ ‘கவனிக்கிறேன்’ என்ற பாவனையோடு நின்றிருந்தான். அவனது கை கடிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஒலியைக் குறைக்க, அவள் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

“இந்த ரூமுக்குள்ளே... நாம மட்டும் தனியா இருக்கும்போது நீங்க இந்த கூலர்சை யூஸ் பண்ணக் கூடாது” அவள் சொல்ல, புருவம் நெரித்தவன், உடனே அதைக் கழட்டி அவள் பக்கம் நீட்டி இருந்தான். இரண்டாம் முறையாக அவன் கண்களை நேருக்கு நேராக சந்திக்கிறாள்.

“தென்?” ‘வேறு என்ன?’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். அவளோ அவன் கண்களையே இமைக்காமல் பார்த்திருந்தாள். மிகவும் கூர்மையான விழிகள், அவள் கண்களுக்குள் நுழைந்து இதயத்தையே துளைப்பதுபோல் உணர்ந்தாள்.

நொடிகள் கரைந்துகொண்டிருக்க, அவனோ அசையும் வழியைக் காணோம். வேறு வழியின்றி அவள்தான் இறங்கி வந்தாக வேண்டி இருந்தது. “முதல்ல என்ன கத்துக்கணும்?” அவன்தான் கத்துக் கொண்டால்தான் ஆயிற்று என நிற்கிறானே, அவள் வேறு என்ன செய்ய?

“அன்னைக்கு நான் கிஸ் பண்ணப்போ... நீ செய்தியே... ஐ’ம் ஸ்டன்ட்...” அவன் சொல்ல, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. அன்று நிஜத்தில் உணர்வுகளின் மீட்டலில், அவனை வரவேற்க அவளது இதழ்கள் திறந்து கொண்டதுதான். அது அவளையும் மீறிய ஒரு செயல், அதை இவன் இப்பொழுது சொல்லிக் காட்ட, குன்றிப் போனாள்.

அதை அவளது முகமே எடுத்துக் காட்ட, “நீ எதுக்கு இப்போ இப்படி ஒரு மாதிரியா ஃபீல் பண்ற? அப்படிப் பார்த்தால் எனக்கு எதுவுமே தெரியலை. என்னால் என் உணர்வுகளை எப்படி எக்ஸ்ப்ரஸ் பண்றதுன்னு சுத்தமா தெரியலை. என்னால் என்னை கண்ட்ரோல் பண்ணிக்க மட்டும்தான் முடியும், என் மனதை அலைபாய வைக்க முடியலை.

“ஆனா நான் அதைப்பத்தி கொஞ்சம் கூட அலட்டிக்காம உன்கிட்டே தானே கேட்டுட்டு நிக்கறேன். அப்போ நானும் இப்போ அவமானமா ஃபீல் பண்ணணுமா?” அவன் கேட்க, திடுக்கிட்டாள். அவனது அந்த வெளிப்படையான பேச்சு, தன்னிடம் அவன் முழுதாக ஒப்புக்கொடுத்தது போன்ற நிலை... அவள் மனது அசைந்தாடியது.

“ஹையோ இல்ல...” அவள் பதற... அருகில் இருந்த சுவரில் அவளைச் சாய்த்தவன், அவள் இதழ்களை மொத்தமாக கவ்விக் கொண்டான். நிறுத்தி நிதானமாக அவன் முத்தமிட, அவள் கொஞ்சம் கொஞ்சமாக உருகினாள்.

சுவரில் ஊன்றி இருந்த அவனது வலக்கரத்தை எடுத்தவள் தன் வெற்றிடையில் தவழ விட, முத்தமிடுவதை நிறுத்தி அவளைப் பார்த்தான். அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அவனது இடக்கரத்தை தன் தலைக்குப் பின்னால் இடம் மாற்றினாள். அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து அவனை தன்னோடு மொத்தமாக இறுக்கிக் கொண்டாள்.

‘இப்போ ஆரம்பிங்க...’ என்பதுபோல் அவள் பார்த்து நிற்க, அவள் கண்களைப் படிக்க முயன்றான். அதில் தெரிந்த மயக்கம், கிறக்கம்... அவனை என்னவோ செய்தது.

ஒரு பெண்ணின் பூந்தேகம் தன் முரட்டு தேகத்தில் செய்யும் மாயத்தை முதல் முறையாக உணர்ந்து உள்வாங்கினான். இப்பொழுது அவன் இதழ்களை அவள் பூட்டிக் கொள்ள, அவன் இதழ்களுக்குள் நுழைந்து தன் தேடலைத் துவங்கினாள்.

அவள் கற்றுக் கொடுக்க, அவன் அங்கே மாணவனானான். சட்டென தான் புகைத்தது நினைவுக்கு வர, “சாரி அபவுட் தி சிகார் ஸ்மெல்” அவன் சொல்ல,

“எனக்கு இந்த ஸ்மெல் புடிக்கும்... இப்போவும் புடிச்சிருக்கு...” என்றவள் தன் முத்தத்தை தொடர, இப்பொழுது அவளை மொத்தமாக தன்னோடு சேர்த்து இறுக்கினான். அவளது அணைப்பு இறுக, அவனது அணைப்பும் இறுகிப் போனது.

இதழ்கள் இரண்டும் பிரிந்து கொள்ளாமலேயே யுத்தம் செய்யத் துவங்கியது. இப்பொழுது அவளது இதழ்கள் மென்மையாக திறந்துகொள்ள, அவள் கற்றுக் கொடுத்த பாடத்தை சிறப்பாக கற்றுக் கொண்டேன் என அவளுக்கு சொல்லாமல் சொன்னான். அவளது இதழ்த்தேன் மொத்தத்தையும் சுவைத்து கிறங்கிப் போனவன், விடாமல் முத்தமிட்டான்.

மூச்சுக்காற்றின் தேவை இருவரையும் விலகச் செய்ய, வேக வேகமாக மூச்சு வாங்கினார்கள். “பெண்கள் இவ்வளவு மென்மையானவர்களா? இல்லைன்னா நீ மட்டுமா?” என்றவன் அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்க, மொத்தமாக சிவந்து போனாள்.

“உங்களுக்கு என்ன தோணுது?” என்றவள் தன் கால் கட்டை விரலில் நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அவள் இடையில் கை கோர்த்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தூக்கி இருந்தான்.

“நோ ஐடியா... பட்... குட் ஃபீல்...” அவன் சிலாகிக்க, அவனை விட்டு விலகி நிற்க முயன்றாள். அவளது முயற்சி புரிய அவனும் அவளை விட்டுவிட்டான்.

அடுத்து என்ன சொல்வது? செய்வது? எனப் புரியாமல் அவள் நிற்க, “இந்த சேப்ட்டி பின் ரிமூவ் பண்றது...” அவன் கேட்க,

“இது ஏன் அவ்வளவு முக்கியம் இப்போ?” அவன் காரணம் இல்லாமல் எதையும் கேட்க மாட்டான் எனத் தோன்றியது. கூடவே மாலையில் தான் கொஞ்சம் சிரமப்பட்டு ரூபியின் உதவியோடு பின்னை கழட்டியதை கண்டிருப்பானோ என்றும் தோன்றியது.

“உனக்கு ஹெல்ப் பண்ணத்தான்... சாயங்காலம் ரூபி ஹெல்ப் பண்ணா, எல்லா நேரமும் அவ வர முடியாதே” அவன் சொல்ல,

“என்ன? அப்போ அந்த ரூமுக்குள்ளே கேமரா வச்சிருக்கீங்களா என்ன?” அதிர்வாக கேட்டு வைக்க, அவன் பார்த்த பார்வையில், “சாரி...” என அவள் வாய் முனகி இருந்தது.

அவன் தான் கண்டதைச் சொல்ல, அவளுக்கு என்னென்னவோ ஆனது. ஆனாலும் அவன் கேட்டதை அவள் சொல்லிக் கொடுக்க மறுக்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து ஆறு முறைக்கு மேல் முயன்ற பிறகு அது அவனுக்கு வசப்பட்டது. இறுதியாக அவன் பின்னைக் கழட்டி தன் கைகளில் வைத்துக் கொள்ள, ‘என்ன?’ என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.

அவனோ அவளது புடவை முந்தானையை சரிய விட்டவன், “இப்போ இந்த ஹூக்...” என அவள் ஜேக்கெட்டில் கை வைக்க, அவளுக்கு மூச்சடைத்தது. அவளது மூச்சுக்காற்று தாளம் தப்ப, அவளது நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.

அவன் முன்னால் தான் நிற்கும் கோலம் அவளை என்னவோ செய்தது. ஜேக்கெட்டின் அபாயமான இறக்கம் அவன் பார்வைக்கு விருந்தாக அவளால் அவன் முன்னால் அப்படி நிற்கவே முடியவில்லை. ஆனால் அவன் அவளை ரசிப்பதாக எல்லாம் தெரியவே இல்லை. அதை அவன் உணர்ந்ததுபோல் கூட இல்லை.

அவளது தவிப்பைப் பார்த்தவன், “ஏன்... என்ன ஆச்சு? எதுக்காக உனக்கு இப்படி மூச்சு வாங்குது?” புரியாமல் கேட்டான்.

“இது... இப்படி... இன்னொருநாள் கத்துத் தரவா?” அவளுக்கு என்னென்னவோ ஆக, இதற்கு மேலே எல்லாம் முடியாது எனத் தோன்றியது.

“உனக்கு என்ன பண்ணுது? ஏன் இப்படி வேர்க்குது?” அவனுக்குப் புரியவில்லை. பெண்ணவளின் சில நுண்ணிய உணர்வுகள் எல்லாம் அவனுக்கு கைவரப் பெறவில்லை. அவள் அவனை விட்டு விலகிச் செல்லப் போக, அவள் கை பிடித்து தடுத்தான்.

“சொல்லிட்டு போ...” எனக்கு பதில் வேண்டும் என அழுத்தமாக நின்றான். அவன் அப்படிக் கேட்கவே, அவளுக்கு சிறு கோபம் கூட வந்தது. ‘இவர் என்ன ரோபோவா?’ ஒரு மாதிரி ஏமாற்றமாக கூட உணர்ந்தாள்.

அவள் விழிகளை மட்டுமல்ல, மனதையும் படிப்பவன் அவன். அப்படி இருக்கையில், அவளைப் படிக்க மாட்டானா என்ன?

“உங்க முன்னாடி நிற்கறது ஊனும், உயிரும், உணர்வுகளும் உள்ள உங்க மனைவி. நான் இப்படியெல்லாம் யார் முன்னாடியும் நின்னது இல்லை. அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் எல்லாம்... கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை.

“ஆனா இப்போ உங்க முன்னாடி இப்படி நிற்கும்போது, எனக்கு என்னவோ ஆகுது” என்றவள், அத்தனை வேகமாக அவனைத் தள்ளிவிட்டு, முந்தானையால் தன்னைப் போர்த்திக் கொண்டவள் படுக்கையில் சென்று அமர்ந்துவிட்டாள்.

அவள் அருகே அமர்ந்தவன், அவளைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொள்ள, அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், அவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளது இந்த செய்கை கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருந்தது.

“எனக்கு பிராப்பரா கழட்டறதுதான் கஷ்டம் பட்...” என்றவன், நொடிகளுக்குள் அதைச் செய்திருக்க, அவளது மேலாடை மொத்தமும் கிழிந்து இருந்தது.

“ஹையோ போச்சு... இதென்ன சண்டை போடற மாதிரி பண்றீங்க?” அவனை விட்டு விலகாமல் ஒட்டிக் கொண்டவள் முனகினாள்.

“இதுவும் சண்டை தானே... கட்டில் யுத்தம்?” அவள் காதுக்குள் முனகினான். சில நேரம் இயற்கையே சில விஷயங்களை உந்தித் தள்ளும். பெண்ணவளின் நெருக்கமும், வாசனையும் அவனை கிறங்கச் செய்ய, அது ஹார்மோன் மாற்றங்களையும் கொடுத்தது.

“சண்டை இல்லை... சரசம்... என்னவோ ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு... இப்படியெல்லாம் பண்றீங்க?” அவள் இதயம் அதிர்வதை அவன் தன் தேகத்தில் உணர்ந்தான்.

“மென்மைகள் எனக்குத் தெரியாது. உனக்குப் பிடிக்கும் விதத்தில் எனக்கு எதுவும் செய்யத் தெரியாது. அதோட... நான் செய்யறது உனக்குப் பிடிக்குமான்னு எனக்குத் தெரியாது” அவன் சொல்லச் சொல்ல, அவன் இத்தனை நேரம் செய்ததற்கான காரணம் அவளுக்குப் புரிந்து போனது.

“நீங்க செய்யறது எனக்குப் பிடிக்கலைன்னா நான் சொல்லிடறேன். என்னை இப்படி டென்ஷன் பண்ணாதீங்க...” அவன் காதுக்குள் மெல்லியதாக அலறினாள்.

“இது நல்ல ஐடியாதான்...” என்றவன் அவளைப் படுக்கையில் சரித்தவன், அவள்மேல் சரிந்தான். கூடவே அவனது கரம் உயர்ந்து குழல் விளக்கை நிறுத்த, அத்தனை நிம்மதியாக உணர்ந்தாள். அவன் செய்வது எல்லாம் அத்தனை ஆறுதலைக் கொடுத்தது. கூடவே அவன்மேல் ஒரு மாதிரி பித்துக்கொள்ளச் செய்தது.

அவள்மீது தனக்குத் தோன்றும் அப்போதைய உணர்வுகளை அவள்மேல் செலுத்த துவங்கினான். தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவள் எதிர்பார்ப்பு ‘தான்’ எனப் புரிந்த பிறகு, தன்னை அவளுக்கு கொடுக்க முடிவெடுத்துவிட்டான்.

அவளை முத்தமிட்டு முக்குழித்தவன், அவள் உச்சந்தலைமுதல், உள்ளங்கால் வரைக்கும் அவனது ஈர இதழ்கள் பயணித்து அவளைச் சிலிர்க்கச் செய்தது. அவனிடம் மென்மை என்பதே இருக்காதோ என அவள் பயந்ததற்கு மாறாக, அவளை அத்தனை மென்மையாகக் கையாண்டான்.

அதுவும் ஒரு பெண்ணவளின் தேகத்தை முதல் முதலாக கண்டுணரும் அவன் தன் உணர்வுகள்தனை அவளிடம் வார்த்தைகளில் கொட்டினான். ‘இவர் இப்படியெல்லாம் சொல்லாமல் இருந்தால் பரவாயில்லை’ என அவள் எண்ணும் அளவுக்கு அவனது பேச்சு இருந்தது. அவள் கன்னத்தில் மூழ்கி, கழுத்தில் முத்தெடுத்து, தேகத்தில் நிலைக்க சிதறிப் போனாள்.

அவள்மீதான தடைகள் கடந்து, தான் மட்டுமே அவளுக்கு ஆடையாக, இரு வெற்று தேகங்களின் உரசல்களில் தீப்பற்றிக்கொண்ட உணர்வு. இருவரின் இதழ்களும் மீண்டும் ஒரு முத்த யுத்தத்தில் மூழ்கிப் போனது. இப்பொழுது யார் எடுத்தது, யார் கொடுத்தது என்ற வரைமுறைகள் எல்லாம் அற்றுப் போக, அவளோ அவன் கரங்களுக்கு கரைந்து கொண்டிருந்தாள்.

‘இது எனக்குப் பிடித்திருக்கிறது’ எனச் சொல்லி அவன் அவள் தேகத்தில் முட்ட, அவளால் அந்த உணர்வுகளில் கனத்தை தாழவே முடியவில்லை. அவனது கைவிரல்கள் ஒவ்வொன்றிற்கும் விழி முளைத்த உணர்வு.

அவனது கைவிரல்கள் உணர்வதை, இதழ்கள் தீண்டித் திளைக்க, முத்தமிடும் அவன் இதழ்களைத் தடுக்கவா? தீண்டும் அவன் கைகளைத் தடுக்கவா எனத் தெரியாமல் தடுமாறிப் போனாள்.

அதுவும் சற்று அதிரடியான அவனது நெருக்கம், “ம்மா... மெதுவா...” சன்னமாக அலறிப் போனாள்.

“ஓ... சாரி... சாரி...” என்றவன் விலக முயல, “ஷ்... ம்ஹும்...” விலகாதே என்பதுபோல் மறுத்தவள், அவன் கழுத்தை வளைத்து தன்னோடு இறுக்கினாள். அவனது நெருக்கம் தகிக்க, சற்று திணறித்தான் போனாள்.

“ஆர் யூ ஓகே...?” அவள் இதழைத் தீண்டி மெதுவாகக் கேட்டான். அவன் செயல்பட முயலாமல் அப்படியே அவள் கண்களை ஊடுருவ, அந்த மெல்லிய இருளில் அவனைப் பார்த்து வெட்க புன்னகை சிந்தினாள். “ம்...ம்..” என்றவள் அனல் மூச்சு வாங்க, அவனது நிதானம் எல்லாம் கைவிட்டுப் போன உணர்வு.

“நீ ரொம்ப அழகு... அதுவும்...” என்றவன் அத்தனை வெளிப்படையாக அவள் தேகத்தைப்பற்றி பேச, அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

“என்னவோ இப்போதான் முதல்முறையா பார்க்கற மாதிரி பண்றீங்க” மெதுவாக முனகினாள்.

“இட்ஸ் ட்ரூ...” அவன் சொல்ல, “என்ன? அப்போ அந்த வீடியோ...?” அவள் கேட்க, அவள் உதட்டைப் பிதுக்கினான்.

அத்தனை அதிர்வாக அவனைப் பார்த்தவள், “சர்வா...” என்றாள். மறு நிமிடம் அவனுக்குள் புதிதாக ஏதோ ஆவி புகுந்த நிலை. அத்தனை அதிரடியாக அவளுக்குள் ஊடுருவினான்.

“ஐ’ம் ஹெல்ப் லெஸ்...” தன் நெருக்கத்திலும், வேகத்திலும் அவள் சிரமப்படுவது புரிய சொன்னான்.

“இட்ஸ் ஓகே...” என்றவள் அவன் அதிரடியில் சிதறிப் போனாள். அவன் முதுகில் நகக் கண்களைப் பதித்தவள், அவன் கழுத்தில் பல்த்தடம் பதித்து சோர்ந்தாள். தன் தேகம் பொங்கிப் பிரவாகமெடுக்க, மொத்தமாக தன் சக்தியை எல்லாம் அவன் உருவிக் கொண்டதுபோல் உணர்ந்தாள்.

அவனோ இன்னும் இன்னும் தன் வேகம் கூட்ட, அவன் வேகத்தில் எங்கே சிதறிப் போவோமோ என பயந்தாள். அவன் அவளோடு ஒன்றாக கலக்கும் முன்னர் அவள் இருமுறை உச்சம் கண்டு சோர்ந்து போனாள். அவன் மொத்தமாக களைத்து போனான்.

அவள்மேல் அப்படியே கவிழ்ந்துவிட, அவனை தன் இரு கரங்களால் வளைத்து இறுக்கினாள். அந்த நொடி... அந்த இதம்... அந்த உணர்வு இருவரையும் ஒன்றாக கட்டி வைத்தது.

பகை முடிப்பான்....