ஹல்லோ மக்களே,
நானும் வைகை திருவிழாவில் இணைந்து இருக்கிறேன். "கனாக்காணும் பேனாக்கள்" என்ற இந்த முயற்சியில் நானும் இணைவதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.
நானும் ஜம்பமா பெயர் கொடுத்தாச்சு. ஆனால் என்ன பிரச்சனை என்றால் எனக்கும் இந்த "ஆன்ட்டி ஹீரோ"வுக்கும் ரொம்பவே தூரம் தான். அவனை முரடனா காட்டணும், மனசாட்சி இல்லாமல் எதையாவது செய்ய வைக்கணும். முக்கியமா ஹீரோயினை கதற விடணும். ஹையோடா... என்னவெல்லாம் அவனை செய்ய வைக்கறது?
என்னால் முடிந்த அளவுக்கான ஒரு ஆன்ட்டி ஹீரோவை கொடுக்க முயற்சி செய்கிறேன் மக்கா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நான் எழுதுறதை படிச்சுட்டு அவன் எப்படி என்ன? அவன் பண்றதில் உங்களுக்கு கோபம் வருதா? இவன் ஆன்ட்டி ஹீரோ" தானான்னு எனக்கு கொஞ்சம் சொல்லிட்டு போனால் உங்களுக்கு புண்ணியமா போகும்.
ஜூலை 1 முதல் பதிவுகள் டான்னு வந்துடும். இந்த முறை வாரத்துக்கு ஐந்து நாட்கள் பதிவு வரும். நீங்க என் எழுத்தை பாராட்டி, சீராட்டி செய்ய வேண்டியது ஒன்றுதான்.... கதை எப்படி போகுதுன்னு கண்டிப்பா சொல்லணும். இந்த கதைக்கு நான் ரொம்பவே புதுசு... அதனால்தான் சொல்றேன்.
உங்க கருத்துகள் வரலைன்னா நான் பாதியிலேயே ஓடிப் போய்டுவேன். எனக்குதான் இந்த "ஆன்ட்டி ஹீரோ" வரலையோன்னு ஒதுங்கிடுவேன். எல்லாம் உங்க கையில்தான் இருக்கு.
கதையின் தலைப்பு : தீராப்பகை தீர்வானது.
கதையின் நாயகன் : சர்வஜித் எ சர்வா.
கதையின் நாயகி : வைஷாலி.
இவங்க கூடவே ஹரீஷ், ரூபி இவங்களும் வருவாங்க. கதையோட தலைப்பே உங்களுக்கு கதை எதைப்பற்றியது என்று சொல்லி இருக்கும். பகை முடிக்க கிளம்பும் நாயகனோட கதைதான் இது. என்ன பகை? யாரோட பகை? எதற்காக பகை? இதற்கு நடுவில் நாயகி எப்படி வரா? அவன் கையில்சிக்கி சிதைஞ்சு போறாளா? இல்லன்னா அவனை சிதைக்கறாளா? நாயகன் அவனோட பகையை முடித்தானா? இதையெல்லாம் நீங்க கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
கதை எப்படிப் போகுது? நான் ஏதாவது மாற்றம் செய்யணுமா? உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் என எல்லாத்தையும் எதிர்பார்க்கறேன்.
ஜூலை 1ம் தேதி முதல் பதிவோடு உங்களை எல்லாம் வந்து சந்திக்கறேன்.
உங்கள் ஆதரவை நாடும் தோழி,
இன்பா அலோசியஸ்.
நானும் வைகை திருவிழாவில் இணைந்து இருக்கிறேன். "கனாக்காணும் பேனாக்கள்" என்ற இந்த முயற்சியில் நானும் இணைவதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.
நானும் ஜம்பமா பெயர் கொடுத்தாச்சு. ஆனால் என்ன பிரச்சனை என்றால் எனக்கும் இந்த "ஆன்ட்டி ஹீரோ"வுக்கும் ரொம்பவே தூரம் தான். அவனை முரடனா காட்டணும், மனசாட்சி இல்லாமல் எதையாவது செய்ய வைக்கணும். முக்கியமா ஹீரோயினை கதற விடணும். ஹையோடா... என்னவெல்லாம் அவனை செய்ய வைக்கறது?
என்னால் முடிந்த அளவுக்கான ஒரு ஆன்ட்டி ஹீரோவை கொடுக்க முயற்சி செய்கிறேன் மக்கா. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நான் எழுதுறதை படிச்சுட்டு அவன் எப்படி என்ன? அவன் பண்றதில் உங்களுக்கு கோபம் வருதா? இவன் ஆன்ட்டி ஹீரோ" தானான்னு எனக்கு கொஞ்சம் சொல்லிட்டு போனால் உங்களுக்கு புண்ணியமா போகும்.
ஜூலை 1 முதல் பதிவுகள் டான்னு வந்துடும். இந்த முறை வாரத்துக்கு ஐந்து நாட்கள் பதிவு வரும். நீங்க என் எழுத்தை பாராட்டி, சீராட்டி செய்ய வேண்டியது ஒன்றுதான்.... கதை எப்படி போகுதுன்னு கண்டிப்பா சொல்லணும். இந்த கதைக்கு நான் ரொம்பவே புதுசு... அதனால்தான் சொல்றேன்.
உங்க கருத்துகள் வரலைன்னா நான் பாதியிலேயே ஓடிப் போய்டுவேன். எனக்குதான் இந்த "ஆன்ட்டி ஹீரோ" வரலையோன்னு ஒதுங்கிடுவேன். எல்லாம் உங்க கையில்தான் இருக்கு.
கதையின் தலைப்பு : தீராப்பகை தீர்வானது.
கதையின் நாயகன் : சர்வஜித் எ சர்வா.
கதையின் நாயகி : வைஷாலி.
இவங்க கூடவே ஹரீஷ், ரூபி இவங்களும் வருவாங்க. கதையோட தலைப்பே உங்களுக்கு கதை எதைப்பற்றியது என்று சொல்லி இருக்கும். பகை முடிக்க கிளம்பும் நாயகனோட கதைதான் இது. என்ன பகை? யாரோட பகை? எதற்காக பகை? இதற்கு நடுவில் நாயகி எப்படி வரா? அவன் கையில்சிக்கி சிதைஞ்சு போறாளா? இல்லன்னா அவனை சிதைக்கறாளா? நாயகன் அவனோட பகையை முடித்தானா? இதையெல்லாம் நீங்க கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
கதை எப்படிப் போகுது? நான் ஏதாவது மாற்றம் செய்யணுமா? உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் என எல்லாத்தையும் எதிர்பார்க்கறேன்.
ஜூலை 1ம் தேதி முதல் பதிவோடு உங்களை எல்லாம் வந்து சந்திக்கறேன்.
உங்கள் ஆதரவை நாடும் தோழி,
இன்பா அலோசியஸ்.