"எனவே தல வரலாறின்படி உங்களின் கடன் பிரச்சனைகள் குடும்பம் மற்றும் புத்திர தோஷங்கள் அனைத்தும் இங்கு வந்து வழிபட்டால் விலகும்...."
தனியார் தொலைகாட்சியின் ஆன்மீகம் நிகழ்ச்சியில் ஒருவர் உருகி உருகி ஆருடம் சொல்லி கொண்டிருக்க.... கொஞ்சமும் சமூக இடைவெளியின்றி பக்கத்திலேயே அதே போல மற்றொரு 42 இன்ச் டீவியில் பரம மண்டலத்திலிருக்கும் அந்த ஆண்டவர் இறங்கி கொண்டிருந்தார் ஏஞ்சல் டீவி வழியாக.....
அந்த வீட்டின் சதியும் பதியும் இருவேறு மதம் என்பதால் எல்லாவற்றிலும் சரி சமநிலை என்பது டீவி முதல் அவர்கள் பிள்ளைகளின் பேர்வரை தொடர....எப்போதுமே அங்கு கலகலப்பு சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இன்று போலவே...
ஆனால் இத்தனை சத்தத்திற்கும் நடுவில் தனியே ஒரு குரல் வீட்டின் ஓரத்தில் கூரை அதிர அதிர தட்டி தூக்கி கொண்டிருந்தது...
வாடி என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
உன் உடம்ப பிச்சி
போட்டுடுவேன் பஜ்ஜி...
ஏய் இந்தா...ஏய் ஏய் இந்தா...இந்தா..இந்தா...இந்தாஆஆஆஆ..
ஏய் ந்தா ந்தா....தா...தா..தா.. தாஆஆஆஆ....
"இந்தாடி நாயே கேட்டியே நல்லா வாங்கிக்க"
பின்னிருந்து வந்த குரலுக்கு முன்னே நல்ல நீளமான வாஷிங் மெஷின் டியூப் காற்றில் வாகாய் பறந்து வந்து காலில் சுழன்று அடிக்க...துடித்து கதறிப்போனாள் கல்பனா...அலைஸ் கல்பனா மேரி...
"மோவ் ஏம்மா இப்ப அடிச்ச...அவ உள்ளே போய் எவ்ளோ நேரமாச்சு....அவள வுட்டுட்டு என்னை போட்டு டின்னு கட்டற...அவள வர சொல்லும்மா...நா இன்னைக்கு காலேஜ் பிராக்டிகலுக்கு நேரமாப் போவனும்...ஏய் வெளிய வாடி.."
"அட லூஜ்ஜூ பொண்ணே அப்ப நா எதுக்கு அடிச்சேன்னே தெரியாமயா இவ்ளோ நேரமா பேசுன...நீ பாத்ரூம் கதவ தட்டினதுக்காடி அம்மா உன்னை அடிச்சேன்".... தாவங்கட்டையில் கையை வைத்து அப்பாவியாய் முகத்தை வைத்தபடி கேட்டது அந்த வீட்டின் லேடி டெரர்....மொத்த குடும்பத்தின் டான் என அவரை அவரே சொல்லிக்கொள்ளும் காயத்திரி....இரு பெண்களின் அம்மா....
"பின்ன எதுக்காம்..."
"ஆங்...அம்மாவோட பேவரிட் டீ ஆர் சார் பாட்ட இப்படி கர்ணகொடூரமா பாடுனியேன்னுதான் அம்மா அடிச்சிச்சீ...இல்ல....இல்லம்மா..." சொன்னபடி வெளியே வந்தது தேஜூ.... அலைஸ் மரியம் தேஜஸ்வினி....
"என்ன நொல்ல நொல்லம்மா.... அதெல்லாம் ஒரு வெட் ஆனியனும் இல்ல...இப்படி இவ பஜ்ஜி சொஜ்ஜின்னு பாடி வச்சா உடனே உங்கொப்பனுக்கு முன்னாடி மூக்கு வேர்த்திடும்.... அப்புறம் பின்னாடியே காயூ காயூ பஜ்ஜி போடு பக்கோடா போடு...அப்படியே எந்தலைல கல்லப் போடுன்னு வந்து நிப்பாரு பாரு....அப்படி மட்டும் எதுனா சொல்லட்டும்....."
சற்றே பேச மூச்சு வாங்கிய கணப்பொழுதில் ஆஜரானார் காயத்ரியின் அருமை கணவர் ஜோசப்... போட்டிருந்த சட்டையை அப்படியும் இப்படியுமாய் கண்ணாடியில் சரிபார்த்தபடி வந்து அமர்ந்தவர்... சத்தமின்றி சாப்பிட்டு கிளம்ப.... ஆச்சரியத்தில் வாயை பிளந்தவர்கள் அதை மூடும் முன்பே வார்த்தை பறந்து வந்தது ஜோசப்பிடமிருந்து...
"காயூமா மேரி ஏதோ பஜ்ஜி கேட்டுட்டு இருந்தால்ல...அத போடும் போது எனக்கு மட்டும் எப்பவும் போல...வெங்காய பஜ்ஜி 4 அப்பறம் உருளைல ஒரு 5 தனியா எடுத்து வச்சிடு என்ன....ஏண்டி அப்படி முழிக்கற...மேரிமா அம்மாக்கு என்னமோ ஆயிடுச்சி... அப்பறமா மாதா கோயில் தீர்த்தம் வச்சு விடு சரியா... அப்ப நா ஆபிஸ்க்கு கிளம்பட்டா... வர்றேன்... மேரிமா...தேஜூ அப்பா போய்ட்டு வர்றேன்..."
அவர் அந்த பக்கம் கதவை சாற்றி கிளம்பியதும் கன்னில் கனலோடு திரும்பிய அம்மாவின் தலையில் துண்டை ஷால் போல் போர்த்தியவள்.... கையை வைத்து தலையில் அழுத்தி ஆடாமல் பிடித்து கொண்டாள்...
"இறங்குங்கள் ஆண்டவரே...இந்த பாவப்பட்ட ஜூவன் மேல் உடனே இறங்குங்கள் ஆண்டவரே.... பெற்ற பெண்களை வேலை வாங்காமல் சொந்தமாய் பஜ்ஜி செய்ய இவருக்கு உடனே அருள் புரியுமய்யா.. ஈவ்னிங் வெங்காய பஜ்ஜி செய்ய தேவையான அனைத்து சக்தியையும் இந்த கஷ்ட ஜூவனுக்கு பாவப்பட்டு தாருமய்யா.... வாருமய்யா... .உடனே வாருமய்யா..."
தேஜூ கண்ணை மூடி வேண்டி கொண்டிருக்க...பக்கத்தில் கல்பனாவோ வாயை மூடி சிரித்து கொண்டிருந்தாள்...
"அடிப்பாவி ஆண்டவர் உனக்கு இதுக்கெல்லாமாடி வருவாரு... இருந்தாலும் விடாத...கமான் நல்லா போட்டு அமுக்கு காயூவ..."
அதுவரை சாதாரணமாய் இருந்தவள் சகோதரியின் உசுப்பலில் பரவச நிலைக்கு போய் தலையை ஆட்டு ஆட்டு என ஆட்டினாள்...ஆட்டம் உச்சநிலையை அடையவும் கொதி நிலையிலிருந்த காயூவை கண்டு முதலில் சுதாரித்த கல்பனா பாவமாய் தேஜூவை பார்த்து "ரெஸ்ட் இன் பீஸ் தேஜூ...நீயே போய் பின்னாடி குழில விழுந்து செத்துரு" ...என உள்ளே ஓடவும்...
"எடுறீ அந்த சட்டாப்பைய..."
காயத்ரியின் கண்ணை மூடிய கத்தலில் தேஜூவுமே அங்கிருந்து நொடியில் மறைந்து விட...கண்விழித்து பார்த்த அன்னைக்கும் சிரிப்பு வர பார்த்தது மகளின் செயலில்...அடக்கி கொண்டார்..
அடுத்த அரை மணியில் இருவருமே ஒன்றாய் கிளம்பி வெளியில் வர....இருவரையும் கண்ட அன்னைக்கு என் மக்கள் என்ன அழகு என்று பெருமையில் நெஞ்சம் விம்மி வந்தது...
"ஏண்டி நானாவது காலேஜ்கு படிக்க போறேங்கற பேர்ல அப்பா காச அழிக்க கிளம்பிட்டேன்...நீ எதுக்குடி டெய்லி அங்க போற...உனக்கு போரடிக்கவே இல்லையா... அதுவும் பக்கத்து வீட்ல இருக்கற ஆன்ட்டி வீட்ல இல்ல அவங்க ஹோம்லதான் டெய்லி சாப்பாடே... வெக்கமாவே இல்லையாடி..."
கல்பனா எப்போதும் போல் தேஜூவை வம்பிளுக்க சிலிர்த்து விட்டாள் பெண் சிங்கம்..
"யாரப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட....ஆன்ட்டி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி..அவங்க பண்ற சோசியல் சேவைக்கு நா அடிமை தெரியுமா... அவங்கதான் தேஜூ தேஜூ நா மட்டும் ஒண்டியா இங்க உட்கார்ந்து சாப்பிடறேன் நீயும் ஒரு கம்பெனிக்கு டெய்லி இங்க வான்னு என்னை கம்பெல் பண்ணி...கார்னர் பண்ணி கேட்ட ஒரே ரீசன்காகதான் நா போறேன்... இல்லேன்னா தேஜூவாவது போய் வெளில சாப்பிடறதாவது....ஹ...ஹ..."
நக்கலாய் சொல்லி பேகை மாட்டியவளை கண்டு அம்மாவும் கல்பனாவும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள...அவர்களுக்கு நேற்று அவளின் அந்த பிரியமான ஆன்ட்டி சொன்ன வார்த்தை இப்போது காதில் ஒலித்தது..
"தப்பா நினைச்சுகாதீங்க காயூ...சக்கரை தீர்ந்திடுச்சு.... கொஞ்சம் தர்றீங்களா.. என்ன இப்படி பார்க்கறீங்க.... உங்க பொண்ணுக்கு நாலுக்கு அஞ்சு வேளையும் டீயும் காபியுமா போட்டு தந்துதான் இப்ப எங்க வீட்டுல சக்கரை தீந்து போச்சுன்னு நா ஓபனா சொல்ல முடியாது பார்த்தீங்களா... அதான் ரீசனே சொல்லாம கேக்கறேன்...தாங்க..நா நெக்ஸ்ட் மன்து ப்ரொவிஷன் வாங்கினதும் தந்தர்றேன் சரியா...."
ரீவைண்ட் முடிந்ததும் மறுபடி ஒன்றாய் தேஜூவை பார்த்தவர்கள்...
"த்தூ...."
"த்தூ...."
ஒன்றாய் ஒரே நேரத்தில் துப்பியவர்களை விநோதமாய் பார்த்தவள்....
"என்னச்சும்மா.. உங்கொழம்ப உன்னாலயே சாப்பிட முடியலயா...எப்படியோ நா எப்பவும் போல எஸ்கேப்... கல்ப்ஸ் மாட்டி....ஓகே கல்ப்ஸ் ஈவ்னிங் பார்க்கலாம் பை பை..."
படபட பட்டாசு ஒன்று சரவெடியை தேடி கிளம்பி விட...ஊப்....என மூச்சு விட்டனர் காயத்ரியும் கல்பனாவும்...
இதோ காதிலிருந்த இயர்போனில் கேட்ட தமிழ் பாப் சாங்ஸுக்கு தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி வந்தவளை பற்றி சில பல வார்த்தைகள்...
காதல் திருமணம் புரிந்த ஜோசப் காயத்ரியின் மக்கள்தான் கல்பனாவும் தேஜூவும்....பிறந்த மதத்தை இவர்களின் கண்ணிய காதல் வென்றிருக்க...மக்கள் பிறந்ததுமே இருவருக்குமே இருவரின் மதமும் கலந்து பேரை வைத்தாலும்..... அம்மாவிற்கு 22 வயது பெரியவள் தேஜூவாகவும்... அப்பாவிற்கு என 20 வயது சிறியவள் மேரியாகவும் மாறிப்போயினர்...எது எப்படி இருந்தாலும் பெண்கள் இருவரும் இரு மதத்தையும் மதித்து எம்மதமும் சம்மதம் நடந்தாலும்....பெற்றவர்களை சீண்டி பார்க்க...இன்று போல சில பல சமயங்களில் நடந்து போவதுண்டு... அதை விளையாட்டாய் எடுத்து விளையாட்டாகவே முடித்து விடுவர்... அதனால் இதுவரை அவ்வபோது வரும் சிலபல சண்டை நொடிகளை தவிர மொத்தத்தில் கலகலப்பான குடும்பம்...
இப்போது இந்த பெண் சிங்கம் கால் பதிக்க போகும் இடம்... மற்றுமொரு பெரிய பெண் சிங்கத்தின் கோட்டையில்...ஆம் அப்பார்ட்மெண்டில் இவர்களின் பக்கத்து வீட்டிலிருக்கும் மதுரா ஆன்ட்டியின் அல்லக்கையாய் படிப்பு முடிந்த்தில் இருந்து தீவிரமாய் வேலை பார்க்கும் தேஜூ...அவருடன் முழுநேர கைகடிகாரம் போல் ஒட்டியே அலைவாள்...மதுவின் குறும்பு பேச்சிற்கும்...கிண்டல் கேலிக்கும் இளம் வயது பரம விசிறி இவள்...அவரின் சோசியல் சர்வீஸ் ஆபிஸிற்குதான் இப்போதைய விசிட்...
உதயம் பவுண்டேஷன்...
பலதரபட்ட குழந்தைகளுக்கான அந்த பள்ளி கம் சோசியல் சர்வீஸ் கட்டிடத்தில் தேஜூ நுழைந்ததும்...அவளுக்கு பிடித்தமான அவள் ஆன்ட்டியின் குரல் சற்று தள்ளியிருந்த கார்டனில் கேட்க...அங்கு சென்றாள்...
அங்கு சுமார் 25 கல்லூரி மாணவர்களுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்ச்சியை கற்று கொடுத்து கொண்டிருந்தவர்.. மது...அலைஸ் மதுரா.... ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தார்...வயதை சொன்னால் தவிர சட்டென தெரியாத அளவில் இருந்தவர்...இன்று செய்த பயிற்ச்சியின் பலனாய் முழுதாய் வேர்த்திருந்தார்...
"மாஸ்டர் ஜீ ....இந்த மூச்சு பயிற்சி இந்த மூக்குல புடிச்சு...அந்த மூக்குல உடனே விடணுமா..இல்ல கொஞ்ச நேரம் வச்சு விடணுமா..."
தேஜூவை கண்டதும் வாலிபத்தின் ஆர்வக்கோளாறில் ஒருவன் கேள்வி கேட்க..அதைவிட நக்கலாய் வந்தது அங்கிருந்து பதில்..
"இந்த மன்த் பீஸ் பே பண்ணிட்டியா விமல்??...
"எஸ் மாஸ்டர் ஜீ ...2 டேஸ் பிபோர் பே பண்ணிட்டேனனே...ஒய் ஒய்??..."
"அப்படீன்னா ஓகே... நீ மெதுவா இல்ல நல்லா வச்சிருந்து ஒரு அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம்கூட கழிச்சு விடலாம் தப்பேயில்ல விமல்...கமான் டிரை பண்ணு..."
அவன் இவர் சொல்ல வருவது புரியாமல் பார்க்க...
"அடேய் பீஸ் கட்டிடல்ல..இனி நீ செத்து போனாகூட ஒன்னுமில்லன்னு...உன்னைய செத்து போக சொல்றாங்கடா மாஸ்டர்.."
ஒருவன் வேண்டுமென்றே சத்தமாய் கலாய்க்க..கூட்டம் கொல்லென சிரித்தது...அந்த நல்ல மனநிலையோடே அன்றைய வகுப்பு முடிந்து போக....தேஜூவை கண்டு ஒரு மலர்ந்த சிரிப்புடன் வந்தார்..அவளுக்கு பிடித்தமான மது ஆன்ட்டி...
"ஆன்ட்டி சூப்பர்..மார்னிங்கே பையனுக்கு செம்ம பல்ப்....குடுத்த கரண்ட்ல பையன் இன்னைக்கு பூரா பிரகாசமா எரிவான்னு நினைக்கறேன்..."
அவளின் கமெண்டிற்கும் அதே புன்னகையை பரிசாக கொடுத்தவர்...அவளை அழைத்து உள்ளே போனார்...
இந்த பவுண்டேஷன் மதுவின் மூத்தமகனால் ஆரம்பிக்கபட்டு இப்போது சற்று பிரபலமாகி வரும் புதிய சமூகசேவை அலுவலகம்....மதுவின் தனிபட்ட ஆசைக்காக அவருக்கு தெரிந்த யோகா மற்ற கலைகளை கல்லூரி மாணவர்களுக்கு என சொல்லிதர.... காலை மாலை என எப்போதுமே பெரியவர் பிஸி...
உள்ளே வந்தவள் அங்கிருந்த பிளாஸ்க்கில் இருவருக்குமாய் டீயை ஊற்றி கொண்டு வந்து அமர..மது அவளை விநோதமாய் பார்த்து வைத்தார்...
"என்னாச்சு ஆன்ட்டி...ஏன் இப்படி பார்க்கறீங்க..."
"இல்ல..நீ இங்க வந்து டீ குடிக்கறியே...உங்கம்மா வீட்ல ஒன்னும் சொல்லல???..."
சற்றே குறும்பு கொப்பளிக்கும் விழிகளோடு அவர் கேட்க.... சிறியவள் இடம்வலமாய் தலையாட்டினாள்..
"இல்லையே ஒன்னும் சொல்லலியே..."
"நிஜமா சொல்லலியா..."
"இல்ல ஆன்ட்டி... சொல்லல..ஆனா இன்னைக்கு சாப்பிடும் போது மட்டும் அடிக்கடி துப்பிட்டே இருந்தாங்க...மத்தபடி மை மாம் ஆல்வேஸ் மிஸஸ் கூல் யூ நோ..."
"ஆமா ஆமா"......மொட்டை ராஜேந்தர் போல நக்கலாய் தலையை எல்லா பக்கமும் உருட்டியவரை விநோதமாய் பார்த்து வைக்க..சரியாய் மதுவின் போன் அடித்தது..
"அடிச்சான் பாருயா அலாரம் போன....மணி கரெக்டா 10 ஆனா போதும்..உடனே உங்க மகனுக்கு நோஸ் வேர்த்திருமே...எப்படி பர்பெக்டா போன பண்ணாரு பார்த்தீங்கள்ள.."
"விடுடி...அவன் கிடக்கறான்...நீ பேசு.."
"அய்யய்யோ...எதுக்கு நீங்க எடுக்கலேன்னு எனக்கு கல்பனாக்கு...எங்கம்மா அப்பா அப்பறும் எங்கூட்ட கழுவி துடிக்கற ஆயா வரைக்கும் போன் போவும்...தெய்வமே எடுத்து பேசு என் தெய்வமே... உங்ககிட்ட இருந்து நா இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன் தெய்வமே..."
காமிரா ஆங்கிள் வைத்தபடி சிறியவள் வாயடிக்க...வந்த சிரிப்பை டீயை குடித்து முழுங்கியவள்...தொண்டையை செருமியபடி போனை எடுத்து காதில் வைத்தார்.
"மாம்..ஆர் யூ ஓகே..."
எடுத்ததும் படபடப்பாய் கேள்வி கேட்டது அவரது மூத்த மகன் அஷ்வத்....அம்மாவிற்கு செல்ல அச்சு...
"கால் அட்டெண்ட் பண்ணதும் ஹலோன்னு எல்லாம் சொல்வாங்க அஷ்வத் அதுல்லாம் மறந்து போச்சா உனக்கு..."
"ஆங்..மாம்..நா உங்க பையன்...எங்கிட்டயே மொக்கை போடாதீங்க..ஏன் இவ்ளோ நேரம் போன் எடுக்க..."
"வேலையா இருந்தேன்டா...வந்து எடுக்க நேரமாச்சு..அது ஒரு தப்பா..சரி சொல்லு சாப்டியா.."
"இல்ல இனிதான்..."
"சரி வைக்கட்டா..."
"மா என்ன அவ்ளோதானா..."
"என்ன அவ்ளோதானா??... அவ்ளோதான்...ஒய்?"
"நா உன் பையன்மா..."
"அதுக்கு.."
"பேசுமா இன்னும் கொஞ்சம்..."
"இன்னும் கொஞ்சம்....போதுமா பேசிட்டேன்....வைக்கட்டா..."
"ஓ மைகாட்....ம்ம்மா நீ முதல்ல எல்லாம் நல்லா இருந்த... ஒழுக்கா இருந்த...எப்ப அந்த வேம்பயர் பேமிலி கூட சேர்ந்தியோ அப்ப இருந்துதான் இப்படி ஆயிட்ட...எனக்கு மட்டும் ஒரு டைம் மெஷின் கைல கிடைச்சா அப்படியே 25 வருஷம் முன்னாடி அங்கிள் ஆன்ட்டி பர்ஸ்ட் நைட்ல போய்.."
"அடச்சீச்சீ...கருமம் கருமம்.."
"ம்ம்மா....நீ வேற ஏம்மா...அவங்க பர்ஸ்ட் நைட்ல போய் கால்ல விழுந்தாவது அந்த துக்க சம்பவத்த தடுத்திருப்பேன்னு சொல்ல வந்தேன்மா..."
அவன் இவளை வார ஆரம்பிக்கும் போதே மது போனை ஸ்பீக்கரில் போட்டிருக்க...தேஜூ சிலுவை குறி இட்டவள்...
"மை பேமிலி டோட்டல் டேமெஜ் ஆண்டவரே ".. என்றிட பெரியவளோ வாய் மூடி சிரித்தார்.
"இப்ப அவள ஏன் வம்பிளுக்கற... இவ்ளோ அக்கறை இருக்கறவன் இங்க இருந்து என்னை சாப்பிட வச்சிருக்கணும்...பெத்த அம்மாக்கு புடிச்சா மாதிரி நாலு இட்லி கெட்டி சட்டினி கூட வாங்கி தர வக்கில்லாத உனக்கு எதுக்குடா ஐடி கம்பெனி வேலை அதுவும் லண்டன்ல...ரிசைன் பண்ணு..உடனே அடுத்த ப்ளைட்ல கிளம்பி இங்க வா..."
"மா....இதுல்லாம் அநியாயம்..நா ஏன் இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் நீ இட்லி கெட்டி சட்டினில்லாம் எங்கிட்ட கேக்குறது நல்லால்ல பார்த்துக்க...ஆமா தம்பி எங்க.."
"அவன் ஏதோ புராஜெக்ட்ல இருக்கான்....அதான் அவன டிஸ்டர்ப் பண்ணல..."
இதுவரை கலந்துகட்டி வம்பிளுத்தவர்கள் இப்போது சற்றே அமைதியாய் பேச...அஷ்வத்திற்கு கஷ்டமாய் இருந்தது அந்த அமைதி...
"ம்ம்மா...அவன நல்லா பார்த்துக்கம்மா...அவன எதுவும் சொல்லாத..அவன் ப்ராஜெக்ட் பண்ணலேன்னுலாம் எதுவும் சொல்லிடாத ஓகேவா...அவன் பண்ற அளவு பண்ணட்டும்...சரியா..."
தம்பி என்று வந்துவிட்டாலே உருகி வழியும் அவன் குரலில் மயங்க தொடங்கிய மனதை இழுத்து பிடித்தவர் இப்போது சீறினார்...
"என்னடா பெரிய அக்கறை தம்பி மேல...அவ்வளவு அக்கறை இருந்திருந்தா போயிருப்பியா..அவன் உன்னை எவ்ளோ மிஸ் பண்றான்னு தெரியுமா... என்னை விட அவனுக்கு நீதான் வேணும்..உன்னை தேடறான்டா அவன்... எல்லாம் தெரிஞ்சும்... புரிஞ்சும் நீ போய்ட்டல்ல.. போடா போ...அங்கயே இருந்துக்க..."
இதுவரை சிரிப்பில் குலுங்கிய முகம் இப்போது கோவத்தில் அதிர..தேஜூ பயந்து போய் அவர் கரத்தை பிடித்து கொள்ள..அதுகூட அவருக்கு உறைக்கவில்லை...கொதித்து கொண்டிருந்தார்...ஆனால் மறுமுனையோ அநியாயத்திற்கு அமைதியாய் போனது...
"ம்மா...உனக்கு எல்லாம் தெரியும்...ஐ நீட் மணிமா.. அதுவும் நிறைய நிறைய மணி...உனக்கு தெரியும்தானே.. அப்புறம் என்னம்மா.."
"அப்ப அம்மாவ விட உனக்கு மணிதான் பெரிசா போச்சில்ல அஷ்வத்..."
சரியாய் இடம் பார்த்து அடிக்க ஒருநொடி மவுனித்தவன்...
"எஸ்மா...என் அம்மாவ விட இப்ப எனக்கு மணிதான் வேணும்..."
மதுவிற்கு கோவத்தில் முகமெல்லாம் ஜிவு ஜிவு என்றிருக்க...
"ம்ம்மா.. பட் ஐ லவ் யூ மா...." உள்ளிருந்து ஆத்மார்த்தமாய் வந்த வாய்மொழிக்கு பதில் மொழி உடனே வந்தது...
"பட் ஐ ஹேட் யூ அஷ்வத்.."
கீங்...கீங்...கீங்...
தென்றல் தாலாட்டும்.....
தனியார் தொலைகாட்சியின் ஆன்மீகம் நிகழ்ச்சியில் ஒருவர் உருகி உருகி ஆருடம் சொல்லி கொண்டிருக்க.... கொஞ்சமும் சமூக இடைவெளியின்றி பக்கத்திலேயே அதே போல மற்றொரு 42 இன்ச் டீவியில் பரம மண்டலத்திலிருக்கும் அந்த ஆண்டவர் இறங்கி கொண்டிருந்தார் ஏஞ்சல் டீவி வழியாக.....
அந்த வீட்டின் சதியும் பதியும் இருவேறு மதம் என்பதால் எல்லாவற்றிலும் சரி சமநிலை என்பது டீவி முதல் அவர்கள் பிள்ளைகளின் பேர்வரை தொடர....எப்போதுமே அங்கு கலகலப்பு சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இன்று போலவே...
ஆனால் இத்தனை சத்தத்திற்கும் நடுவில் தனியே ஒரு குரல் வீட்டின் ஓரத்தில் கூரை அதிர அதிர தட்டி தூக்கி கொண்டிருந்தது...
வாடி என் மச்சி
வாழக்கா பஜ்ஜி
உன் உடம்ப பிச்சி
போட்டுடுவேன் பஜ்ஜி...
ஏய் இந்தா...ஏய் ஏய் இந்தா...இந்தா..இந்தா...இந்தாஆஆஆஆ..
ஏய் ந்தா ந்தா....தா...தா..தா.. தாஆஆஆஆ....
"இந்தாடி நாயே கேட்டியே நல்லா வாங்கிக்க"
பின்னிருந்து வந்த குரலுக்கு முன்னே நல்ல நீளமான வாஷிங் மெஷின் டியூப் காற்றில் வாகாய் பறந்து வந்து காலில் சுழன்று அடிக்க...துடித்து கதறிப்போனாள் கல்பனா...அலைஸ் கல்பனா மேரி...
"மோவ் ஏம்மா இப்ப அடிச்ச...அவ உள்ளே போய் எவ்ளோ நேரமாச்சு....அவள வுட்டுட்டு என்னை போட்டு டின்னு கட்டற...அவள வர சொல்லும்மா...நா இன்னைக்கு காலேஜ் பிராக்டிகலுக்கு நேரமாப் போவனும்...ஏய் வெளிய வாடி.."
"அட லூஜ்ஜூ பொண்ணே அப்ப நா எதுக்கு அடிச்சேன்னே தெரியாமயா இவ்ளோ நேரமா பேசுன...நீ பாத்ரூம் கதவ தட்டினதுக்காடி அம்மா உன்னை அடிச்சேன்".... தாவங்கட்டையில் கையை வைத்து அப்பாவியாய் முகத்தை வைத்தபடி கேட்டது அந்த வீட்டின் லேடி டெரர்....மொத்த குடும்பத்தின் டான் என அவரை அவரே சொல்லிக்கொள்ளும் காயத்திரி....இரு பெண்களின் அம்மா....
"பின்ன எதுக்காம்..."
"ஆங்...அம்மாவோட பேவரிட் டீ ஆர் சார் பாட்ட இப்படி கர்ணகொடூரமா பாடுனியேன்னுதான் அம்மா அடிச்சிச்சீ...இல்ல....இல்லம்மா..." சொன்னபடி வெளியே வந்தது தேஜூ.... அலைஸ் மரியம் தேஜஸ்வினி....
"என்ன நொல்ல நொல்லம்மா.... அதெல்லாம் ஒரு வெட் ஆனியனும் இல்ல...இப்படி இவ பஜ்ஜி சொஜ்ஜின்னு பாடி வச்சா உடனே உங்கொப்பனுக்கு முன்னாடி மூக்கு வேர்த்திடும்.... அப்புறம் பின்னாடியே காயூ காயூ பஜ்ஜி போடு பக்கோடா போடு...அப்படியே எந்தலைல கல்லப் போடுன்னு வந்து நிப்பாரு பாரு....அப்படி மட்டும் எதுனா சொல்லட்டும்....."
சற்றே பேச மூச்சு வாங்கிய கணப்பொழுதில் ஆஜரானார் காயத்ரியின் அருமை கணவர் ஜோசப்... போட்டிருந்த சட்டையை அப்படியும் இப்படியுமாய் கண்ணாடியில் சரிபார்த்தபடி வந்து அமர்ந்தவர்... சத்தமின்றி சாப்பிட்டு கிளம்ப.... ஆச்சரியத்தில் வாயை பிளந்தவர்கள் அதை மூடும் முன்பே வார்த்தை பறந்து வந்தது ஜோசப்பிடமிருந்து...
"காயூமா மேரி ஏதோ பஜ்ஜி கேட்டுட்டு இருந்தால்ல...அத போடும் போது எனக்கு மட்டும் எப்பவும் போல...வெங்காய பஜ்ஜி 4 அப்பறம் உருளைல ஒரு 5 தனியா எடுத்து வச்சிடு என்ன....ஏண்டி அப்படி முழிக்கற...மேரிமா அம்மாக்கு என்னமோ ஆயிடுச்சி... அப்பறமா மாதா கோயில் தீர்த்தம் வச்சு விடு சரியா... அப்ப நா ஆபிஸ்க்கு கிளம்பட்டா... வர்றேன்... மேரிமா...தேஜூ அப்பா போய்ட்டு வர்றேன்..."
அவர் அந்த பக்கம் கதவை சாற்றி கிளம்பியதும் கன்னில் கனலோடு திரும்பிய அம்மாவின் தலையில் துண்டை ஷால் போல் போர்த்தியவள்.... கையை வைத்து தலையில் அழுத்தி ஆடாமல் பிடித்து கொண்டாள்...
"இறங்குங்கள் ஆண்டவரே...இந்த பாவப்பட்ட ஜூவன் மேல் உடனே இறங்குங்கள் ஆண்டவரே.... பெற்ற பெண்களை வேலை வாங்காமல் சொந்தமாய் பஜ்ஜி செய்ய இவருக்கு உடனே அருள் புரியுமய்யா.. ஈவ்னிங் வெங்காய பஜ்ஜி செய்ய தேவையான அனைத்து சக்தியையும் இந்த கஷ்ட ஜூவனுக்கு பாவப்பட்டு தாருமய்யா.... வாருமய்யா... .உடனே வாருமய்யா..."
தேஜூ கண்ணை மூடி வேண்டி கொண்டிருக்க...பக்கத்தில் கல்பனாவோ வாயை மூடி சிரித்து கொண்டிருந்தாள்...
"அடிப்பாவி ஆண்டவர் உனக்கு இதுக்கெல்லாமாடி வருவாரு... இருந்தாலும் விடாத...கமான் நல்லா போட்டு அமுக்கு காயூவ..."
அதுவரை சாதாரணமாய் இருந்தவள் சகோதரியின் உசுப்பலில் பரவச நிலைக்கு போய் தலையை ஆட்டு ஆட்டு என ஆட்டினாள்...ஆட்டம் உச்சநிலையை அடையவும் கொதி நிலையிலிருந்த காயூவை கண்டு முதலில் சுதாரித்த கல்பனா பாவமாய் தேஜூவை பார்த்து "ரெஸ்ட் இன் பீஸ் தேஜூ...நீயே போய் பின்னாடி குழில விழுந்து செத்துரு" ...என உள்ளே ஓடவும்...
"எடுறீ அந்த சட்டாப்பைய..."
காயத்ரியின் கண்ணை மூடிய கத்தலில் தேஜூவுமே அங்கிருந்து நொடியில் மறைந்து விட...கண்விழித்து பார்த்த அன்னைக்கும் சிரிப்பு வர பார்த்தது மகளின் செயலில்...அடக்கி கொண்டார்..
அடுத்த அரை மணியில் இருவருமே ஒன்றாய் கிளம்பி வெளியில் வர....இருவரையும் கண்ட அன்னைக்கு என் மக்கள் என்ன அழகு என்று பெருமையில் நெஞ்சம் விம்மி வந்தது...
"ஏண்டி நானாவது காலேஜ்கு படிக்க போறேங்கற பேர்ல அப்பா காச அழிக்க கிளம்பிட்டேன்...நீ எதுக்குடி டெய்லி அங்க போற...உனக்கு போரடிக்கவே இல்லையா... அதுவும் பக்கத்து வீட்ல இருக்கற ஆன்ட்டி வீட்ல இல்ல அவங்க ஹோம்லதான் டெய்லி சாப்பாடே... வெக்கமாவே இல்லையாடி..."
கல்பனா எப்போதும் போல் தேஜூவை வம்பிளுக்க சிலிர்த்து விட்டாள் பெண் சிங்கம்..
"யாரப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட....ஆன்ட்டி எனக்கு இன்னொரு அம்மா மாதிரி..அவங்க பண்ற சோசியல் சேவைக்கு நா அடிமை தெரியுமா... அவங்கதான் தேஜூ தேஜூ நா மட்டும் ஒண்டியா இங்க உட்கார்ந்து சாப்பிடறேன் நீயும் ஒரு கம்பெனிக்கு டெய்லி இங்க வான்னு என்னை கம்பெல் பண்ணி...கார்னர் பண்ணி கேட்ட ஒரே ரீசன்காகதான் நா போறேன்... இல்லேன்னா தேஜூவாவது போய் வெளில சாப்பிடறதாவது....ஹ...ஹ..."
நக்கலாய் சொல்லி பேகை மாட்டியவளை கண்டு அம்மாவும் கல்பனாவும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள...அவர்களுக்கு நேற்று அவளின் அந்த பிரியமான ஆன்ட்டி சொன்ன வார்த்தை இப்போது காதில் ஒலித்தது..
"தப்பா நினைச்சுகாதீங்க காயூ...சக்கரை தீர்ந்திடுச்சு.... கொஞ்சம் தர்றீங்களா.. என்ன இப்படி பார்க்கறீங்க.... உங்க பொண்ணுக்கு நாலுக்கு அஞ்சு வேளையும் டீயும் காபியுமா போட்டு தந்துதான் இப்ப எங்க வீட்டுல சக்கரை தீந்து போச்சுன்னு நா ஓபனா சொல்ல முடியாது பார்த்தீங்களா... அதான் ரீசனே சொல்லாம கேக்கறேன்...தாங்க..நா நெக்ஸ்ட் மன்து ப்ரொவிஷன் வாங்கினதும் தந்தர்றேன் சரியா...."
ரீவைண்ட் முடிந்ததும் மறுபடி ஒன்றாய் தேஜூவை பார்த்தவர்கள்...
"த்தூ...."
"த்தூ...."
ஒன்றாய் ஒரே நேரத்தில் துப்பியவர்களை விநோதமாய் பார்த்தவள்....
"என்னச்சும்மா.. உங்கொழம்ப உன்னாலயே சாப்பிட முடியலயா...எப்படியோ நா எப்பவும் போல எஸ்கேப்... கல்ப்ஸ் மாட்டி....ஓகே கல்ப்ஸ் ஈவ்னிங் பார்க்கலாம் பை பை..."
படபட பட்டாசு ஒன்று சரவெடியை தேடி கிளம்பி விட...ஊப்....என மூச்சு விட்டனர் காயத்ரியும் கல்பனாவும்...
இதோ காதிலிருந்த இயர்போனில் கேட்ட தமிழ் பாப் சாங்ஸுக்கு தலையை அங்குமிங்கும் ஆட்டியபடி வந்தவளை பற்றி சில பல வார்த்தைகள்...
காதல் திருமணம் புரிந்த ஜோசப் காயத்ரியின் மக்கள்தான் கல்பனாவும் தேஜூவும்....பிறந்த மதத்தை இவர்களின் கண்ணிய காதல் வென்றிருக்க...மக்கள் பிறந்ததுமே இருவருக்குமே இருவரின் மதமும் கலந்து பேரை வைத்தாலும்..... அம்மாவிற்கு 22 வயது பெரியவள் தேஜூவாகவும்... அப்பாவிற்கு என 20 வயது சிறியவள் மேரியாகவும் மாறிப்போயினர்...எது எப்படி இருந்தாலும் பெண்கள் இருவரும் இரு மதத்தையும் மதித்து எம்மதமும் சம்மதம் நடந்தாலும்....பெற்றவர்களை சீண்டி பார்க்க...இன்று போல சில பல சமயங்களில் நடந்து போவதுண்டு... அதை விளையாட்டாய் எடுத்து விளையாட்டாகவே முடித்து விடுவர்... அதனால் இதுவரை அவ்வபோது வரும் சிலபல சண்டை நொடிகளை தவிர மொத்தத்தில் கலகலப்பான குடும்பம்...
இப்போது இந்த பெண் சிங்கம் கால் பதிக்க போகும் இடம்... மற்றுமொரு பெரிய பெண் சிங்கத்தின் கோட்டையில்...ஆம் அப்பார்ட்மெண்டில் இவர்களின் பக்கத்து வீட்டிலிருக்கும் மதுரா ஆன்ட்டியின் அல்லக்கையாய் படிப்பு முடிந்த்தில் இருந்து தீவிரமாய் வேலை பார்க்கும் தேஜூ...அவருடன் முழுநேர கைகடிகாரம் போல் ஒட்டியே அலைவாள்...மதுவின் குறும்பு பேச்சிற்கும்...கிண்டல் கேலிக்கும் இளம் வயது பரம விசிறி இவள்...அவரின் சோசியல் சர்வீஸ் ஆபிஸிற்குதான் இப்போதைய விசிட்...
உதயம் பவுண்டேஷன்...
பலதரபட்ட குழந்தைகளுக்கான அந்த பள்ளி கம் சோசியல் சர்வீஸ் கட்டிடத்தில் தேஜூ நுழைந்ததும்...அவளுக்கு பிடித்தமான அவள் ஆன்ட்டியின் குரல் சற்று தள்ளியிருந்த கார்டனில் கேட்க...அங்கு சென்றாள்...
அங்கு சுமார் 25 கல்லூரி மாணவர்களுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்ச்சியை கற்று கொடுத்து கொண்டிருந்தவர்.. மது...அலைஸ் மதுரா.... ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தார்...வயதை சொன்னால் தவிர சட்டென தெரியாத அளவில் இருந்தவர்...இன்று செய்த பயிற்ச்சியின் பலனாய் முழுதாய் வேர்த்திருந்தார்...
"மாஸ்டர் ஜீ ....இந்த மூச்சு பயிற்சி இந்த மூக்குல புடிச்சு...அந்த மூக்குல உடனே விடணுமா..இல்ல கொஞ்ச நேரம் வச்சு விடணுமா..."
தேஜூவை கண்டதும் வாலிபத்தின் ஆர்வக்கோளாறில் ஒருவன் கேள்வி கேட்க..அதைவிட நக்கலாய் வந்தது அங்கிருந்து பதில்..
"இந்த மன்த் பீஸ் பே பண்ணிட்டியா விமல்??...
"எஸ் மாஸ்டர் ஜீ ...2 டேஸ் பிபோர் பே பண்ணிட்டேனனே...ஒய் ஒய்??..."
"அப்படீன்னா ஓகே... நீ மெதுவா இல்ல நல்லா வச்சிருந்து ஒரு அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம்கூட கழிச்சு விடலாம் தப்பேயில்ல விமல்...கமான் டிரை பண்ணு..."
அவன் இவர் சொல்ல வருவது புரியாமல் பார்க்க...
"அடேய் பீஸ் கட்டிடல்ல..இனி நீ செத்து போனாகூட ஒன்னுமில்லன்னு...உன்னைய செத்து போக சொல்றாங்கடா மாஸ்டர்.."
ஒருவன் வேண்டுமென்றே சத்தமாய் கலாய்க்க..கூட்டம் கொல்லென சிரித்தது...அந்த நல்ல மனநிலையோடே அன்றைய வகுப்பு முடிந்து போக....தேஜூவை கண்டு ஒரு மலர்ந்த சிரிப்புடன் வந்தார்..அவளுக்கு பிடித்தமான மது ஆன்ட்டி...
"ஆன்ட்டி சூப்பர்..மார்னிங்கே பையனுக்கு செம்ம பல்ப்....குடுத்த கரண்ட்ல பையன் இன்னைக்கு பூரா பிரகாசமா எரிவான்னு நினைக்கறேன்..."
அவளின் கமெண்டிற்கும் அதே புன்னகையை பரிசாக கொடுத்தவர்...அவளை அழைத்து உள்ளே போனார்...
இந்த பவுண்டேஷன் மதுவின் மூத்தமகனால் ஆரம்பிக்கபட்டு இப்போது சற்று பிரபலமாகி வரும் புதிய சமூகசேவை அலுவலகம்....மதுவின் தனிபட்ட ஆசைக்காக அவருக்கு தெரிந்த யோகா மற்ற கலைகளை கல்லூரி மாணவர்களுக்கு என சொல்லிதர.... காலை மாலை என எப்போதுமே பெரியவர் பிஸி...
உள்ளே வந்தவள் அங்கிருந்த பிளாஸ்க்கில் இருவருக்குமாய் டீயை ஊற்றி கொண்டு வந்து அமர..மது அவளை விநோதமாய் பார்த்து வைத்தார்...
"என்னாச்சு ஆன்ட்டி...ஏன் இப்படி பார்க்கறீங்க..."
"இல்ல..நீ இங்க வந்து டீ குடிக்கறியே...உங்கம்மா வீட்ல ஒன்னும் சொல்லல???..."
சற்றே குறும்பு கொப்பளிக்கும் விழிகளோடு அவர் கேட்க.... சிறியவள் இடம்வலமாய் தலையாட்டினாள்..
"இல்லையே ஒன்னும் சொல்லலியே..."
"நிஜமா சொல்லலியா..."
"இல்ல ஆன்ட்டி... சொல்லல..ஆனா இன்னைக்கு சாப்பிடும் போது மட்டும் அடிக்கடி துப்பிட்டே இருந்தாங்க...மத்தபடி மை மாம் ஆல்வேஸ் மிஸஸ் கூல் யூ நோ..."
"ஆமா ஆமா"......மொட்டை ராஜேந்தர் போல நக்கலாய் தலையை எல்லா பக்கமும் உருட்டியவரை விநோதமாய் பார்த்து வைக்க..சரியாய் மதுவின் போன் அடித்தது..
"அடிச்சான் பாருயா அலாரம் போன....மணி கரெக்டா 10 ஆனா போதும்..உடனே உங்க மகனுக்கு நோஸ் வேர்த்திருமே...எப்படி பர்பெக்டா போன பண்ணாரு பார்த்தீங்கள்ள.."
"விடுடி...அவன் கிடக்கறான்...நீ பேசு.."
"அய்யய்யோ...எதுக்கு நீங்க எடுக்கலேன்னு எனக்கு கல்பனாக்கு...எங்கம்மா அப்பா அப்பறும் எங்கூட்ட கழுவி துடிக்கற ஆயா வரைக்கும் போன் போவும்...தெய்வமே எடுத்து பேசு என் தெய்வமே... உங்ககிட்ட இருந்து நா இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன் தெய்வமே..."
காமிரா ஆங்கிள் வைத்தபடி சிறியவள் வாயடிக்க...வந்த சிரிப்பை டீயை குடித்து முழுங்கியவள்...தொண்டையை செருமியபடி போனை எடுத்து காதில் வைத்தார்.
"மாம்..ஆர் யூ ஓகே..."
எடுத்ததும் படபடப்பாய் கேள்வி கேட்டது அவரது மூத்த மகன் அஷ்வத்....அம்மாவிற்கு செல்ல அச்சு...
"கால் அட்டெண்ட் பண்ணதும் ஹலோன்னு எல்லாம் சொல்வாங்க அஷ்வத் அதுல்லாம் மறந்து போச்சா உனக்கு..."
"ஆங்..மாம்..நா உங்க பையன்...எங்கிட்டயே மொக்கை போடாதீங்க..ஏன் இவ்ளோ நேரம் போன் எடுக்க..."
"வேலையா இருந்தேன்டா...வந்து எடுக்க நேரமாச்சு..அது ஒரு தப்பா..சரி சொல்லு சாப்டியா.."
"இல்ல இனிதான்..."
"சரி வைக்கட்டா..."
"மா என்ன அவ்ளோதானா..."
"என்ன அவ்ளோதானா??... அவ்ளோதான்...ஒய்?"
"நா உன் பையன்மா..."
"அதுக்கு.."
"பேசுமா இன்னும் கொஞ்சம்..."
"இன்னும் கொஞ்சம்....போதுமா பேசிட்டேன்....வைக்கட்டா..."
"ஓ மைகாட்....ம்ம்மா நீ முதல்ல எல்லாம் நல்லா இருந்த... ஒழுக்கா இருந்த...எப்ப அந்த வேம்பயர் பேமிலி கூட சேர்ந்தியோ அப்ப இருந்துதான் இப்படி ஆயிட்ட...எனக்கு மட்டும் ஒரு டைம் மெஷின் கைல கிடைச்சா அப்படியே 25 வருஷம் முன்னாடி அங்கிள் ஆன்ட்டி பர்ஸ்ட் நைட்ல போய்.."
"அடச்சீச்சீ...கருமம் கருமம்.."
"ம்ம்மா....நீ வேற ஏம்மா...அவங்க பர்ஸ்ட் நைட்ல போய் கால்ல விழுந்தாவது அந்த துக்க சம்பவத்த தடுத்திருப்பேன்னு சொல்ல வந்தேன்மா..."
அவன் இவளை வார ஆரம்பிக்கும் போதே மது போனை ஸ்பீக்கரில் போட்டிருக்க...தேஜூ சிலுவை குறி இட்டவள்...
"மை பேமிலி டோட்டல் டேமெஜ் ஆண்டவரே ".. என்றிட பெரியவளோ வாய் மூடி சிரித்தார்.
"இப்ப அவள ஏன் வம்பிளுக்கற... இவ்ளோ அக்கறை இருக்கறவன் இங்க இருந்து என்னை சாப்பிட வச்சிருக்கணும்...பெத்த அம்மாக்கு புடிச்சா மாதிரி நாலு இட்லி கெட்டி சட்டினி கூட வாங்கி தர வக்கில்லாத உனக்கு எதுக்குடா ஐடி கம்பெனி வேலை அதுவும் லண்டன்ல...ரிசைன் பண்ணு..உடனே அடுத்த ப்ளைட்ல கிளம்பி இங்க வா..."
"மா....இதுல்லாம் அநியாயம்..நா ஏன் இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் நீ இட்லி கெட்டி சட்டினில்லாம் எங்கிட்ட கேக்குறது நல்லால்ல பார்த்துக்க...ஆமா தம்பி எங்க.."
"அவன் ஏதோ புராஜெக்ட்ல இருக்கான்....அதான் அவன டிஸ்டர்ப் பண்ணல..."
இதுவரை கலந்துகட்டி வம்பிளுத்தவர்கள் இப்போது சற்றே அமைதியாய் பேச...அஷ்வத்திற்கு கஷ்டமாய் இருந்தது அந்த அமைதி...
"ம்ம்மா...அவன நல்லா பார்த்துக்கம்மா...அவன எதுவும் சொல்லாத..அவன் ப்ராஜெக்ட் பண்ணலேன்னுலாம் எதுவும் சொல்லிடாத ஓகேவா...அவன் பண்ற அளவு பண்ணட்டும்...சரியா..."
தம்பி என்று வந்துவிட்டாலே உருகி வழியும் அவன் குரலில் மயங்க தொடங்கிய மனதை இழுத்து பிடித்தவர் இப்போது சீறினார்...
"என்னடா பெரிய அக்கறை தம்பி மேல...அவ்வளவு அக்கறை இருந்திருந்தா போயிருப்பியா..அவன் உன்னை எவ்ளோ மிஸ் பண்றான்னு தெரியுமா... என்னை விட அவனுக்கு நீதான் வேணும்..உன்னை தேடறான்டா அவன்... எல்லாம் தெரிஞ்சும்... புரிஞ்சும் நீ போய்ட்டல்ல.. போடா போ...அங்கயே இருந்துக்க..."
இதுவரை சிரிப்பில் குலுங்கிய முகம் இப்போது கோவத்தில் அதிர..தேஜூ பயந்து போய் அவர் கரத்தை பிடித்து கொள்ள..அதுகூட அவருக்கு உறைக்கவில்லை...கொதித்து கொண்டிருந்தார்...ஆனால் மறுமுனையோ அநியாயத்திற்கு அமைதியாய் போனது...
"ம்மா...உனக்கு எல்லாம் தெரியும்...ஐ நீட் மணிமா.. அதுவும் நிறைய நிறைய மணி...உனக்கு தெரியும்தானே.. அப்புறம் என்னம்மா.."
"அப்ப அம்மாவ விட உனக்கு மணிதான் பெரிசா போச்சில்ல அஷ்வத்..."
சரியாய் இடம் பார்த்து அடிக்க ஒருநொடி மவுனித்தவன்...
"எஸ்மா...என் அம்மாவ விட இப்ப எனக்கு மணிதான் வேணும்..."
மதுவிற்கு கோவத்தில் முகமெல்லாம் ஜிவு ஜிவு என்றிருக்க...
"ம்ம்மா.. பட் ஐ லவ் யூ மா...." உள்ளிருந்து ஆத்மார்த்தமாய் வந்த வாய்மொழிக்கு பதில் மொழி உடனே வந்தது...
"பட் ஐ ஹேட் யூ அஷ்வத்.."
கீங்...கீங்...கீங்...
தென்றல் தாலாட்டும்.....