நீண்ட ஒரு வாரத்திற்கு பின் அன்று உதயத்தில் பயங்கர மகிழ்ச்சி ஆரவாரமாக இருக்க...எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி சற்று அதிகமாகவே தாண்டவமாடியது...
தேஜூவுமே உளமார்ந்த சந்தோஷத்தோடு மதுராவை கட்டி அணைத்து தன் வாழ்த்தை சொன்னவள் இனிப்பையும் ஊட்டிவிட்டாள்...
அனைவரின் இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும் காரணமான விஷயம் இதுதான்....ஆண்டுதோறும் ஒரு பிரபலமான பத்திரிக்கை நடத்தும் பல்வேறு துறை சார்ந்த விருதுகளில் சவால்களை வென்ற சாதனையாளன் பிரிவில் மதுவின் இளைய மகன் சக்தியும்....அதே இதழின் பெண்கள் பிரிவில் வழங்கும் நம்பிக்கை பெண்மணி விருதுக்கு மதுவும் தேர்வாகியிருப்பதாய் சற்றுமுன்னே தகவல் வர ...அங்கு ஒரே கொண்டாட்டமாய் போனது...
"ஐயம் ரியலி ரியலி ஹேப்பி ஆன்ட்டி....
அவ்ளோ ஹேப்பியா இருக்கு..."
அவளின் வாழ்த்தை மது ஒரு சந்தேகத்தோடு பார்த்தவர்...
"பரவால்லயே எம்மேல உனக்கு இம்புட்டு பாசமா தேஜூ...அப்ப உன்ன நினைச்சு நானும் ஹேப்பி.."
கண்மூடி கன்னத்தோடு கன்னம் வைத்து முன்னும் பின்னுமாய் ஆட்டியபடி சொல்ல... தேஜூவோ இருந்தபடியே தொடர்ந்தாள்..
"இல்லையா பின்ன....உங்களோட இந்த ஒரு பிஸ்கோத்து அவார்ட வச்சே எங்க வீட்ல இன்னும் இரண்டு வருஷத்துக்கு கெத்து காட்டிட்டே லைப்ப ஓட்டிட மாட்டேன் .... எல்லோரையும் சும்மா தெறிக்க வுட்டுடுவேன்...எப்படி...தெறிக்க தெறிக்க.."
அவள் பதிலில் மது சட்டென நெற்றி கண்ணை திறந்த நேரத்தில் சரியாய் போனடித்தது..
"அஷ்வத்....சொல்லுடாமா..."
"மாம்....நிஜமாவா....வாட்ஸ் அப்ல போட்ட மெஸேஜ் நிஜமாவே உண்மையா மாம்.."
"
டேய் என்னடா இப்படி கேக்கற..நிசம் நிசம்தான்..ஏண்டா..."
"இல்லமா உன்னை நம்பலாம்... ஆனாஇப்ப உன் சேர்க்கை சரியில்லல... அதான் சட்டுனு எதயும் நம்ப முடியல...பட் அம்மா அம்மா....எனக்கு அப்படியே குதிக்கணும் போல இருக்கு.. ஆமா சக்தி எங்க...அவன்கிட்ட குடு..நா பேசணும் உடனே...."
"இல்லடா..அவன் வீட்ல இருக்கான் ப்ராஜெக்ட்ல பிஸியா...எனக்கு இப்ப இங்க வந்தப்புறம்தான் நியூஸ் தெரியும்...வீட்டுக்கு போய்ட்டு போன் தர்றேன் ஓகேவா..."
"ஹ்ம்ம்...ஓகேமா..ஓகே..எனிவே கங்கிராட்ஸ்மா...இந்த மொமெண்ட நல்லா என்ஜாய் பண்ணு...அப்பறம் ஹேப்பியா இரு....எல்லாத்த விட முக்கியமான விஷயம்... ஸ்டேஜ்ல போனமா குடுக்கறத கும்பிடு போட்டு வாங்கினோமான்னு வந்தரணும்....ஓகே...அத விட்டுட்டு அங்க போய் மைக் குடுத்தாங்கன்னு எதயாவது பேசி வச்சி அழுத....அப்பறம் உன்னை அப்படியே கொன்னுடுவேன்....தெரியும்ல என்னை பத்தி.."
"ஹே ஹே போடா போடா...எல்லாம் எங்களுக்கு தெரியும்..என்ன அழுதா உனக்கு பிடிக்காது.. அதான...போபோ...நா பார்த்துக்கறேன் போ..."
"மா உன்கிட்ட டயலாக் டெலிவரில்லாம் கரெக்டாதான் இருக்கும்...ஆனா பர்பாமன்ஸ்ல கோட்டை விட்டுடுவியேமா.. என்ன பண்ண???."
"டேய் போடா டேய் தம்பி.... போய் வேலைய பாரு...நா இனிதான் நம்ப ரிலெஷன்ஸ் எல்லாருக்கும் சொல்லணும்...."
சொல்லியவர் சட்டென நாக்கை கடிக்க...அதற்குள் அவன் அங்கு பலமுறை கத்தி தீர்த்து விட்டான்..
"மா...இப்ப என்ன சொன்ன...ஹலோ மா...மா...பேசுமா..யார்கிட்ட சொல்ல போற..மா..."
போனை தள்ளி வைத்து கையை உதறியபடி இருந்த மதுவை மேலும் கீழுமாய் ஒரு மார்க்கமாய் பார்த்திருந்த தேஜூவை பக்கம் இழுத்தவர்...
"வழக்கம்போல அவன்கிட்ட உளறிட்டேன்டி...என்ன பண்ண??.."
"அய்யோ என்ட கர்த்தாவே... ஐம்பது வயசுல ஏன் இந்த சின்ன பொண்ணை இவ்ளோ பாடுபடுத்தற...பாவமில்லயோ இந்த பீஸூ... " தேஜூ மதுவை பார்த்து புலம்ப...
"அடிங்க..." மது பல்லை கடித்தார்...
"சரி சரி போன இங்க குடுங்க..."
அவசரமாய் வாங்கி பிளைட் மோடில் போட்டவள்....
"ஓகே மேட்டர் க்ளோஸ் வாங்க நாம ஊரை விட்டு ஓடி போயிடலாம்...."
அவரின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓட...
"அடச்சீ கைய விடு...எம்பையன இழுத்துட்டு ஓடுனா கூட பரவால்ல...என்னை ஏண்டி கூட்டிட்டு இப்படி ஓடுற.."
"ஹலோ...ஓல்டு கோல்டு ...இப்ப நீங்க வரல...அப்புறம் உங்க பையன் போனு அடுத்து எனக்கு அப்புறம் நம்ம மணி அண்ணாக்கு..ஏன் கடைசில நம்ம ஆபிஸ் வாட்ச்மேன் வரைக்கும் வரிசையா வந்துட்டே இருக்கும்....அப்படி அவரு ஸ்டார்ட் பண்றதுக்குள்ள எஸ் ஆகிடலாம் வாங்க... இல்லேன்னா அவர் கேட்கற கேள்விக்கு பதில் நீங்களே சொல்லிக்கங்க...பாருங்க இப்ப என் லைன்கு வந்தாச்சு.."
அவள் போனை தூக்கி அப்படியும் இப்படியும் ஆட்டியவள்....கையை நீட்ட...ஏதோ சினிமாவில் ஹூரோவின் கைகோர்க்கும்.... ஹூரோயின் போல மதுவும் கைவைக்க...இப்போது நிஜமாகவே வண்டியை எடுத்து கிளம்பி விட்டனர்...
"ஹே தேஜூ தேஜூ... வாடி ஓடி போற வழில அப்படியே எதுனா கொஞ்சமா சாப்பிட்டு போலாம்...பயத்துல பசிக்குது வேற..."
"ஹலோ என்ன... கில்லி பட கிளைமாக்ஸா இங்க ஓடுது..."
"சரி போ...பாவம் பொண்ணேன்னு சிஸ்லிங் பிரெளனி வாங்கி குடுக்கலாம்னு நினைச்சேன்... வேண்டாம்னா போ..."
"அய்யய்யோ..அப்படில்லாம் உடனே ஜொல்லப்படாது... வாங்க போலாம் போலாம்... கூடவே ஹனி கேக்கும் வாங்கி தரணும் ஓகேவா..."
அங்கு ஒருவனின் பிபீயை எகிற வைத்துவிட்டு...இங்கு இருவரும் சற்று ஒதுக்குபுறமாய் இருந்த அந்த பார்லரில் நிதானமாய் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து உள்ளே தள்ளி கொண்டிருக்க.... தேஜூவோ மதுவையே பார்ப்பதும் குனிவதுமாய் இருந்தாள்...
"தேஜூ..."
"ஆன்ட்டி.."
"என்ட்ட ஏதாவது கேக்கணுமா...அப்படி ஏதாவது இருந்தா கேளு..நா பதில் சொல்றேன்..."
"இல்ல வந்து ஆன்ட்டி..நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்க கூடாது..."
"என்ன எதுனாலும் கேளு....அட இன்னொரு கப் ஐஸ்கிரீம் வேணுமா.. கூச்சப் படாம கேளு...வாங்கி தர்றேன்.."
"ப்ச்..அதெல்லாம் வேண்டாம் போதும்..."
"அப்புறம் என்ன..."
"இல்ல ஆன்ட்டி ...வந்து நீங்க எப்படி ஆன்ட்டி இப்பவும் எப்பவும் ஒரே மாதிரி கூலாவே இருக்கீங்க...ஆக்சுவலி உங்க இடத்துல நா இருந்திருந்தா" ....
அதற்கு மேல் என்ன எப்படி சொல்வதென தெரியமல் அவள் அப்படியே நிறுத்திவிட...
"ம்ம்...ஏன் நிறுத்திட்ட...கமான் சொல்லு..நீ இருந்திருந்தா... ஒருவேள நீ இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப தேஜூ..."
"ஆன்ட்டி....நா..நா செத்திருப்பேன் ஆன்ட்டி..."
"அஹஹ்ஹ்ஹ...ஹஹஹ்ஹ்ஹஹஹ....ஹய்யோ..."
தேஜூ சொன்னதை ஏதோ ஜோக் போல் நினைத்து கெக்கே பெக்கேவென சிரித்தவளை கண்டு கோபமாய் வந்தது சிறியவளுக்கு....எப்படி இந்த சூழ்நிலையிலும் இப்படி சிரிக்க முடிகிறது என்ற ஆற்றாமையில் வந்த கோபமது...அது அவளுக்கும் புரிய அமைதி காத்தாள்...
"ஹோஹோ...ஆஹ்...அய்யோ அம்மா முடியல....இரு தண்ணி குடிச்சிக்கறேன்...ஹ...ஹ...ஆமா இப்ப கொஞ்சம் முன்னாடி என்னவோ சொன்னியே என்ன சொன்ன தேஜூ..."
"ஹாங்...நா உங்க நிலமைல இருந்திருந்தா செத்திருப்பேன்னு சொன்னேன்..."
நிறுத்தி நிதானமாய் சொன்னவளை ஆழ்ந்து நோக்கியவர்...அவளை போலவே அழுத்தமாய் பதில் சொன்னார்...
"அப்ப நா மட்டும் அதுக்கெல்லாம் டிரை பண்ணாம இருந்திருப்பேன்னு நினைச்சியா தேஜூ..."
"ஆன்...ட்டி...."
சற்றல்ல...சற்று அதிகமாகவே அதிர்ந்து போனாள் தேஜூ...
"ஹேய்..ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற....தரையிறங்குமா தரையிறங்கு..."
"நிஜமாவா ஆன்ட்டி...உங்கள நான் ஒரு பெரிய ஐயர்ன் லேடி கணக்கா மனசுல வச்சிருக்கேன்..நீங்க எப்படி... ம்ஹூம்..."
"ம்ஹ்ம்...ஆமாடா...நிஜம்தான்..உன்னோட இந்த ஐயர்ன் லேடி ஆன்ட்டிதான்... அதுவும் நா மட்டுமில்ல...பயங்கர முன்னேற்றமா பசங்களையும் சேர்த்தே சாகடிச்சுடலாம்னு முடிவு பண்ணேன்... ஆனா எப்பவுமே அச்சுதான் பயங்கர விவரம்ல... கண்டுபிடிச்சுட்டான்....அப்புறம் மெதுவா வந்து கேட்டான்....."
"என்னன்னு..."
"நாம சாகப்போறோமா அம்மானு கேட்டான்" ...
ஏதோ நேற்று நடந்த சம்பவம் போல எல்லாம் கண்முன் ஓட மதுவின் முகம் கசங்கி போனது...
"நீங்க என்ன சொன்னீங்க..."
கேட்டிருந்த தேஜூவிற்கு
உள்ளமெல்லாம் பதறி வந்தது..
"நானும் ஆமா சாமி....இங்க வேண்டாம்...பேசாம நாம செத்து போய்டலாமான்னு அவன்ட்ட கேட்டேன்..."
"அதுக்கு அவரு என்ன சொன்னாரு..."
"அவனா...ம்ஹ்ம் அந்த கிறுக்கு பய நீ சொன்னா சரிமா....ஆனா தம்பிக்கு வலிக்குமேமான்னுதான் கேட்டான்....தனக்கு வர்ற வலிய விட தன் தம்பிக்கு வலிக்குமேன்னு அவன் மேல உயிரா இருக்கற பையனுக்கு நாம என்ன செய்ய நினைச்சோம்...அந்த சின்ன பயலுக்கு இருக்கற அறிவுகூட நமக்கு இல்லையேன்னு என்னைய நானே காறி துப்பிக்கிட்டேன்... அத்தோட சரி... என் அந்த குப்பை நினைப்பை எல்லாம் பத்துக்கு பத்து குழி தோண்டி அங்கயே புதைச்சுட்டேன்..."
தேஜூவிற்கு ஏதோ அவள்முன் ஒரு பத்து வயது பாலகன் அப்படி கேள்வி கேட்பது போல் கற்பனை வர...உடலெல்லாம் சிலிர்த்து கண்ணெல்லாம் கலங்கி வந்தது...
"பாவம் ஆன்ட்டி அவரு..."
இதுவரை சீரியஸாய் அந்த நாள் நினைவில் இருந்த பெரியவளுமே இப்போதுதான் தேஜூவை கவனிக்க..அவளின் கலங்கிய முகத்தை கண்டு தன்னையே உள்ளுக்குள் நொந்து கொண்டவர்...அவளை திசை மாற்ற வம்பிளுக்க தொடங்கினார்...
"என்னம்மா...மரியாதை எல்லாம் பலமா இருக்கு...இதுவரைக்கும் எம்மவன லண்டன்பெல்.... மிருதன்...காங் சன்னு ஏதேதோ பேரு வச்சு கிண்டல் பண்ணுவ...இப்ப என்ன.."
"ப்ச்ச்..இல்ல..ஒன்னுமில்ல....வாங்க போலாம்..."
சற்றுதூரம் மவுனமாய் வந்தவள்..
"என்ன இருந்தாலும் அந்த பத்து வயசு அஷ்வத் பாவம்...எனக்கு ஏனோ அழுகையா வருது ஆன்ட்டி"..."
எப்போதும் கலகலப்பாய் இருக்கும் தேஜூவை அப்படி பார்க்க மதுவிற்கு கஷ்டமாய் இருக்க...பெரியவள் என்ன வம்பிளுத்தும் இன்னும் அவள் அந்த நிகழ்விலிருந்து வெளியே வரவில்லை.... மதுவின் வீட்டிலிருந்த அஷ்வத்தின் சிறுவயது புகைப்படம் இவள் போனில் எப்போதும் இருக்கும்... ஒருமுறை அதை எடுத்து பார்த்தவள்...அந்த பால் முகம் இந்த கேள்வி கேட்கும்போது எவ்வளவு பயந்திருக்க கூடும் என்று நினைக்க...நினைப்பே வலித்தது...சற்று நேரம் சுற்றுப்புறம் என்ன... மதுவைகூட மறந்து போனவள்...முதலில் அதிலிருந்த காங் சன் (kong son) என்பதை அழித்தவள் க்யூட் பேபி என சேவ் செய்தாள்...
சற்றே கலங்கிய மனநிலையில் இருந்த இருவரையும் மேலும் அல்லு விட வைக்க கல்பனா ஆக்சிடெண்டில் மாட்டி ஹாஸ்பிடலில் அட்மிஷன் என அவள் அம்மாவிடமிருந்து போன் வர அடித்து பிடித்து ஹாஸ்பிடலுக்கு ஓடினர்...
இருவரும் பதட்டமாய் அங்கு போக...அவசர பிரிவின் வாசலில் இருந்த பெற்றோரை கண்டதும் இன்னும் அதிகமாய் பயந்து போனார்கள்...
"ம்ம்மா...என்னம்மா ஆச்சு... எப்படிமா அடிபட்டுச்சு...கல்ப்ஸ் எங்கம்மா...நீ ஏம்மா இப்படி நிக்கற..."
"அய்யோ தேஜூமா.. உந்தங்கச்சி நம்மள எல்லாம் ஏமாத்திட்டாடி....கடவுளே கருப்பராயப்பா...நா என்னப்பா தப்பு பண்ணேன்... எனக்கேன்பா இப்படி ஒரு தண்டனை...அச்சோ கடவுளே..டீ பெரியவளே இங்க கேளேன்... அவ யாரோ ஒரு பையன லவ் பண்ணிருக்கா போலடி... அவன்கூட பைக்ல எங்கயோ போறப்ப அவ ஷால் சிக்கி இரண்டு பேரும் கீழ விழுந்துட்டாங்கன்னு இங்க கொண்டு வந்து சேர்த்திருக்காங்களாம்... பார்த்தியாடி நம்ம சில்வண்டு பண்ண காரியத்த..."
காயத்ரியின் விடாத புலம்பலில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒருவிதமாய் பார்க்க...மது அவரை சமாதானபடுத்த தேஜூவோ பல்லை கடித்தாள்..
"ப்ச்...மா..நீ வேற ஏம்மா கத்தற..அமைதியா இரும்மா... அவளாவது லவ் பண்ணி ஊரு சுத்தறாவது...வீட்ல எந்திருச்சி போயி பேன் போடக்கூட அவளுக்கு அவ்வளவு சோம்பேறித்தனமா இருக்கும்..இதுல ப்ளான்லாம் போட்டு லவ் பண்ணுவாளா... அட போம்மா நீ ...நான்லாம் நம்ப மாட்டேன்.."
தேஜூ முடிக்கவும்...டாக்டர் வெளியில் வரவும் சரியாய் இருந்தது..
"சார் என் பொண்ணு..."
ஜோசப் பதட்டமாய் டாக்டரை கேட்க அவரோ குழப்பமாய் பார்த்தார்...
"எந்த பொண்ணு.."
"சார் எங்க பொண்ணு கல்பனா...பைக் ஆக்சிடெண்ட்னு வந்து சேர்த்துனாங்களே...அவளுக்கு எப்படி இருக்கு சார்..எதுனாலும் சொல்லுங்க சார்.."
"ஓஹ்...அந்த பொண்ணா...அச்சோ சார் ஏன் இவ்ளோ டென்ஷன்...உங்க பொண்ணுக்கு ஒண்ணுமில்ல.. ஆக்சுவலா இங்க வார்டுல பெட் எல்லாம் புல்லா இருக்குன்னுதான் இங்க எமர்ஜென்சில கொண்டு வந்து படுக்க வச்சிருக்காங்க... மத்தபடி அவங்களுக்கு ஒண்ணுமில்ல...என்ன கூட வந்த பையனுக்குதான் அடி ஜாஸ்தி...நீங்க போய் பாருங்க..."
அவர் நகர்ந்ததும் ஒருவரையொருவர்...
"ன்ன்னாடா இது" ...
என்பதுபோல் பார்த்துவிட்டு... வரிசையாய் உள்ளே போக.... அங்கு கண்ட காட்சியில் கொதித்து போயினர்..
காலாட்டிக்கொண்டே அங்கிருந்த குளுக்கோன் டீயை முழுதாய் கையில் கொட்டி நிதானமாய் நக்கியபடி... உள்ளே வந்த எல்லோரையும் அதிர்ச்சி மகிழ்ச்சி என கலந்து கட்டி பார்த்தவள் தேஜூவை கண்டு மட்டும் பயத்தில் வேர்த்து வழிந்தாள்...
பக்கத்திலிருந்த அந்த இன்னொருவனும் அப்போதுதான் நினைவு வந்து எழுந்து உட்கார புசுபுசுவென மூச்சு விட்ட காயத்திரியிடம் ...ஜோசப் வந்து காதை கடித்தார்...
"ஏய் காயூ பையன் நல்லாதான் இருக்கான்டி...பேசாம இவன அப்படியே அமுக்கிரலாமா... கல்ப்ஸ்க்கு அலைச்சல் மிச்சம்...."
தேஜூ தலையில் அடித்து கொண்டாள்...
"எங்க வந்து பொண்ணுக்கு மாப்ள தேடுறாங்க பாரு...குட் பேமிலி" ....
என்று மனதுக்குள் வாரியவள்...வெளியில் அவள் அப்பாவிற்கு கைகொடுத்து....
"பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்குபா...ஐ லைக் இட்...கேரி ஆன்" ....என்க...
காயூ இருவரையும் தீயாய் முறைத்தவள் அதே கோவத்தோடு அவனிடம் போனாள்...
"ஏய் ந்தாப்பா...யாரு நீ....எந்த ஊரு..எதுக்கு எம்பொண்ண பைக்ல எல்லாம் ஏத்திட்டு ஊரு சுத்திட்டு இருக்கற நீ...தம்மாத்தூண்டு வாட்டர் பில்டர் மாதிரி இருந்துட்டு உனக்கு எம்பொண்ணு வேணுமா....உனக்கே ஓவரா தெரியல...ஹாங்...அவ யாரு என்னன்னு தெரியுமா உனக்கு.... சொல்லுடா தெரியுமா..."
அம்மா பேசியதில் ஆரம்பத்தில் குழம்பிய கல்பனாவிற்கு .... காயூ பேச பேச இப்போது பின்னால் பிஜிம் ஒலித்தது...
"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே...
விண்மீண்களின் கூட்டம் என்மேலே"....
பெண்ணவள் ஆகாயத்தில் பறக்க....அம்மாவோ இன்னும் பேச்சை நிறுத்தியபாடில்லை...
"ஏய் சொல்லுடா...என்ன தெரியும் உனக்கு இவள பத்தி...குடிச்ச எச்ச கிளாஸ கூட கழுவி வைக்க மாட்டா தெரியுமா...ஏன் எச்ச தட்டுல இருக்கறத டஸ்ட்பின்ல கூட கொட்டாத சுடு சோம்பேறி இது தெரியுமா.... ஒரு ஜூன்ஸ் போட்டா குறைஞ்சது இரண்டு வாரம் ஆனாலும் கழட்டவே மாட்டா... அவ்ளோ சுத்தம்... அவளப்போய் நீ லவ் பண்றியா..ஏன் உனக்கு வேற நல்ல பொண்ணே கிடைக்கலியா...கண்டிப்பா இவளேதான் வேணுமா... அப்படின்னா ஒன்னு பண்ணு...பேசாம இவள கட்டி உங்க வீட்டுக்கு கூட்டி போறதுக்கு பதிலா...இவள தாலி கட்ட சொல்லி எங்கூட்டுக்கு வா...உன்னை நானே நல்லா பார்த்துக்கறேன்.. என்ன நா சொல்றது புரியுதா..."
மேலே பறந்தவளை படீர் படீர் என தலையில் தட்டி தரையிறக்கிய அம்மாவை முறைத்தவள் அருகிலிருந்த அப்பாவின் கையை பிடித்து கொண்டாள்..
"ப்ப்பா..உண்மையா சொல்லுங்க... என்னோட பிறப்புல ஏதாவது மர்மம் இருக்குதா...நிஜமாவே நா உங்க பொண்ணுதானா... சொல்லுங்கப்பா... இல்ல தேஜூ அடிக்கடி சொல்ற மாதிரி என்னை குப்பை தொட்டில இருந்துதான் எடுத்துட்டு வந்தீங்களா... சொல்லுப்பா... சொல்லுங்க...அட சொல்லுயா யோவ்"
அந்த புதியவனோ திருதிருவென முழிக்க...
"அய்யோ ஆன்ட்டி இந்த பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது....நா பைக்ல போறப்ப இவங்க ரோட் கிராஸ் பண்ண நின்னுட்டு இருந்தாங்க...அப்ப இவங்க ஷால் காத்துல பறந்தது... கரெக்டா என் பைக் வீல்ல மாட்டி நான்தான் ஸ்கிப் ஆய்ட்டு விழுந்தேன்..அதுவரைதான் எனக்கு ஞாபகம் இருக்கு.."
அவன் தெளிவாய் சொல்லி முடிக்கவும் எல்லோரும் இப்போது கேள்வியாய் கல்பனாவை பார்க்க..
"இல்ல..அவரு விழுந்ததும் பக்கத்துல போய் பார்த்தேனா... கை காலெல்லாம் பிளட்டா இருந்துச்சா..அதோட...அதோட.."
"ம்ம்..என்ன சொல்லு.."
"அதோட..அந்த ஷால் தேஜூவோட புது ஷாலா...அந்த பிசாசு தெரிஞ்சா மேல பாஞ்சிருமேன்னு பயத்துல அப்படியே மயங்கி அங்கயே விழுந்துட்டேன்..கூட இருந்த பக்கிங்க...இப்படி சொல்லி எங்கள அட்மிஷன் போட்டு வச்சிருச்சுங்க..."
அப்போதுதான் தேஜூ அவள் உடையையே கவனித்தாள்... அவளின் புத்தம் புது சுடிதார்... நொந்து நூலாகி அந்து அவலாகியிருந்தது...
"அடியேய்...அந்த ஷால் மட்டும் 3 தவுசண்ட்டி...அதயா போட்டு போன..பிசாசே...பிசாசே...ஏய் இங்க பாரு மேன்..உன் பைக்ல மாட்டிதான் என் ஷால் போச்சு... சோ ஹாஸ்பிடல் பில்லுகூட எனக்கு தனியா மூவாயிரம் செட்டில் பண்ற... இல்ல.... பிசாசே இனி என் டிரஸ்ஸ தொடுவ"...
அவள் பட்பட்டென அடிக்க ஆரம்பித்ததும் தலை சுற்றுவதை போல் நடித்த கல்ப்பனா அப்படியே அப்பாவின் தோளில் படுத்து கொள்ள...அந்த புதியவனோ இந்த வித்தியாச பேமிலியை முக்கியமாய் கல்பனாவை குறுகுறுவென பார்த்திருக்க.... சரியாய் வார்டுபாய் வந்து மதுவை அழைத்தார்..
"மது மேடம் யாருங்க போன் வந்திருக்கு....வந்து பேசுங்க..."
"அய்யோ தேஜூ யாரா
இருக்கும்..."
"வேற யாரு..உங்க புத்திரனாதான் இருக்கும்.. இப்படி அங்கங்கன்னு இன்ஸ்டால்மெண்ட்ல போன்ல வராம பேசாம போன் வழியாவே அங்கிருந்து பூந்து நேர்ல வர சொல்லிருங்க... அட்லீஸ்ட் பிளைட் செலவாவது மிஞ்சும்.."
தோளில் நொடித்தாலும் அவளும் கூடப்போனாள்...
"ஹலோ அச்சுமா..எப்படிடா கண்ணா கரெக்டா கண்டுபுடிச்ச நா இங்கதான் இருப்பேன்னு..."
"ம்ம்மா..நடிக்காத...என்ன நடந்திருக்கும்னு உனக்கும் தெரியும்... சோ பேச்ச மாத்தாத...மொதல்ல உன் ரிலெஷன்ஸ் யார் எல்லாம் வர்றாங்க பங்ஷன்கு...அத பர்ஸ்ட் சொல்லு..."
"டேய் ஏண்டா வேற யாருடா வருவாங்க...உன் தாத்தா பாட்டி..."
"ம்மா .."
"சரி சரி...என் அப்பா அம்மா..அப்புறம் அக்கா மச்சான்..இன்னும் உன் அப்பா வழில எல்லோரும்தான்...."
"யாரும் வேண்டாம்..."
"அஷ்வத்...."
"ம்ம்மா...நா இதான் சொல்லுவேன்னு உனக்கும் தெரியும்.."
"தெரியும்டா...பட்..."
"மா...இனஃப்....ஓகே நமக்குள்ள சண்டை வேணாம்...உனக்காக வேணா அவங்க வரட்டும்.. அக்செப்ட் பண்ணிக்கறேன்... பட் அவங்களாதான் வரணும்... அதுவும் அவங்களா இஷ்டபட்டா மட்டும்தான் வரணும்...இந்த பாட்ச் அப் வேலை எல்லாம் வேண்டாம்...காட் மை பாய்ண்ட் மா..."
"அஷ்வத் நீ என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ற..எனக்குன்னு ப்ரீடமே இல்லயாடா..."
"மா போதும் நா வைக்கறேன்... நீ.போய் வேலைய பாரு...பட் சொன்னத மறக்காத... நினைப்புல வச்சுக்க..."
"ஹேட் யூ டா..."
"லவ் யூமா...லவ் யூ லவ் யூ எ லாட்மா..."
தென்றல் தாலாட்டும்...
தேஜூவுமே உளமார்ந்த சந்தோஷத்தோடு மதுராவை கட்டி அணைத்து தன் வாழ்த்தை சொன்னவள் இனிப்பையும் ஊட்டிவிட்டாள்...
அனைவரின் இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும் காரணமான விஷயம் இதுதான்....ஆண்டுதோறும் ஒரு பிரபலமான பத்திரிக்கை நடத்தும் பல்வேறு துறை சார்ந்த விருதுகளில் சவால்களை வென்ற சாதனையாளன் பிரிவில் மதுவின் இளைய மகன் சக்தியும்....அதே இதழின் பெண்கள் பிரிவில் வழங்கும் நம்பிக்கை பெண்மணி விருதுக்கு மதுவும் தேர்வாகியிருப்பதாய் சற்றுமுன்னே தகவல் வர ...அங்கு ஒரே கொண்டாட்டமாய் போனது...
"ஐயம் ரியலி ரியலி ஹேப்பி ஆன்ட்டி....
அவ்ளோ ஹேப்பியா இருக்கு..."
அவளின் வாழ்த்தை மது ஒரு சந்தேகத்தோடு பார்த்தவர்...
"பரவால்லயே எம்மேல உனக்கு இம்புட்டு பாசமா தேஜூ...அப்ப உன்ன நினைச்சு நானும் ஹேப்பி.."
கண்மூடி கன்னத்தோடு கன்னம் வைத்து முன்னும் பின்னுமாய் ஆட்டியபடி சொல்ல... தேஜூவோ இருந்தபடியே தொடர்ந்தாள்..
"இல்லையா பின்ன....உங்களோட இந்த ஒரு பிஸ்கோத்து அவார்ட வச்சே எங்க வீட்ல இன்னும் இரண்டு வருஷத்துக்கு கெத்து காட்டிட்டே லைப்ப ஓட்டிட மாட்டேன் .... எல்லோரையும் சும்மா தெறிக்க வுட்டுடுவேன்...எப்படி...தெறிக்க தெறிக்க.."
அவள் பதிலில் மது சட்டென நெற்றி கண்ணை திறந்த நேரத்தில் சரியாய் போனடித்தது..
"அஷ்வத்....சொல்லுடாமா..."
"மாம்....நிஜமாவா....வாட்ஸ் அப்ல போட்ட மெஸேஜ் நிஜமாவே உண்மையா மாம்.."
"
டேய் என்னடா இப்படி கேக்கற..நிசம் நிசம்தான்..ஏண்டா..."
"இல்லமா உன்னை நம்பலாம்... ஆனாஇப்ப உன் சேர்க்கை சரியில்லல... அதான் சட்டுனு எதயும் நம்ப முடியல...பட் அம்மா அம்மா....எனக்கு அப்படியே குதிக்கணும் போல இருக்கு.. ஆமா சக்தி எங்க...அவன்கிட்ட குடு..நா பேசணும் உடனே...."
"இல்லடா..அவன் வீட்ல இருக்கான் ப்ராஜெக்ட்ல பிஸியா...எனக்கு இப்ப இங்க வந்தப்புறம்தான் நியூஸ் தெரியும்...வீட்டுக்கு போய்ட்டு போன் தர்றேன் ஓகேவா..."
"ஹ்ம்ம்...ஓகேமா..ஓகே..எனிவே கங்கிராட்ஸ்மா...இந்த மொமெண்ட நல்லா என்ஜாய் பண்ணு...அப்பறம் ஹேப்பியா இரு....எல்லாத்த விட முக்கியமான விஷயம்... ஸ்டேஜ்ல போனமா குடுக்கறத கும்பிடு போட்டு வாங்கினோமான்னு வந்தரணும்....ஓகே...அத விட்டுட்டு அங்க போய் மைக் குடுத்தாங்கன்னு எதயாவது பேசி வச்சி அழுத....அப்பறம் உன்னை அப்படியே கொன்னுடுவேன்....தெரியும்ல என்னை பத்தி.."
"ஹே ஹே போடா போடா...எல்லாம் எங்களுக்கு தெரியும்..என்ன அழுதா உனக்கு பிடிக்காது.. அதான...போபோ...நா பார்த்துக்கறேன் போ..."
"மா உன்கிட்ட டயலாக் டெலிவரில்லாம் கரெக்டாதான் இருக்கும்...ஆனா பர்பாமன்ஸ்ல கோட்டை விட்டுடுவியேமா.. என்ன பண்ண???."
"டேய் போடா டேய் தம்பி.... போய் வேலைய பாரு...நா இனிதான் நம்ப ரிலெஷன்ஸ் எல்லாருக்கும் சொல்லணும்...."
சொல்லியவர் சட்டென நாக்கை கடிக்க...அதற்குள் அவன் அங்கு பலமுறை கத்தி தீர்த்து விட்டான்..
"மா...இப்ப என்ன சொன்ன...ஹலோ மா...மா...பேசுமா..யார்கிட்ட சொல்ல போற..மா..."
போனை தள்ளி வைத்து கையை உதறியபடி இருந்த மதுவை மேலும் கீழுமாய் ஒரு மார்க்கமாய் பார்த்திருந்த தேஜூவை பக்கம் இழுத்தவர்...
"வழக்கம்போல அவன்கிட்ட உளறிட்டேன்டி...என்ன பண்ண??.."
"அய்யோ என்ட கர்த்தாவே... ஐம்பது வயசுல ஏன் இந்த சின்ன பொண்ணை இவ்ளோ பாடுபடுத்தற...பாவமில்லயோ இந்த பீஸூ... " தேஜூ மதுவை பார்த்து புலம்ப...
"அடிங்க..." மது பல்லை கடித்தார்...
"சரி சரி போன இங்க குடுங்க..."
அவசரமாய் வாங்கி பிளைட் மோடில் போட்டவள்....
"ஓகே மேட்டர் க்ளோஸ் வாங்க நாம ஊரை விட்டு ஓடி போயிடலாம்...."
அவரின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓட...
"அடச்சீ கைய விடு...எம்பையன இழுத்துட்டு ஓடுனா கூட பரவால்ல...என்னை ஏண்டி கூட்டிட்டு இப்படி ஓடுற.."
"ஹலோ...ஓல்டு கோல்டு ...இப்ப நீங்க வரல...அப்புறம் உங்க பையன் போனு அடுத்து எனக்கு அப்புறம் நம்ம மணி அண்ணாக்கு..ஏன் கடைசில நம்ம ஆபிஸ் வாட்ச்மேன் வரைக்கும் வரிசையா வந்துட்டே இருக்கும்....அப்படி அவரு ஸ்டார்ட் பண்றதுக்குள்ள எஸ் ஆகிடலாம் வாங்க... இல்லேன்னா அவர் கேட்கற கேள்விக்கு பதில் நீங்களே சொல்லிக்கங்க...பாருங்க இப்ப என் லைன்கு வந்தாச்சு.."
அவள் போனை தூக்கி அப்படியும் இப்படியும் ஆட்டியவள்....கையை நீட்ட...ஏதோ சினிமாவில் ஹூரோவின் கைகோர்க்கும்.... ஹூரோயின் போல மதுவும் கைவைக்க...இப்போது நிஜமாகவே வண்டியை எடுத்து கிளம்பி விட்டனர்...
"ஹே தேஜூ தேஜூ... வாடி ஓடி போற வழில அப்படியே எதுனா கொஞ்சமா சாப்பிட்டு போலாம்...பயத்துல பசிக்குது வேற..."
"ஹலோ என்ன... கில்லி பட கிளைமாக்ஸா இங்க ஓடுது..."
"சரி போ...பாவம் பொண்ணேன்னு சிஸ்லிங் பிரெளனி வாங்கி குடுக்கலாம்னு நினைச்சேன்... வேண்டாம்னா போ..."
"அய்யய்யோ..அப்படில்லாம் உடனே ஜொல்லப்படாது... வாங்க போலாம் போலாம்... கூடவே ஹனி கேக்கும் வாங்கி தரணும் ஓகேவா..."
அங்கு ஒருவனின் பிபீயை எகிற வைத்துவிட்டு...இங்கு இருவரும் சற்று ஒதுக்குபுறமாய் இருந்த அந்த பார்லரில் நிதானமாய் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து உள்ளே தள்ளி கொண்டிருக்க.... தேஜூவோ மதுவையே பார்ப்பதும் குனிவதுமாய் இருந்தாள்...
"தேஜூ..."
"ஆன்ட்டி.."
"என்ட்ட ஏதாவது கேக்கணுமா...அப்படி ஏதாவது இருந்தா கேளு..நா பதில் சொல்றேன்..."
"இல்ல வந்து ஆன்ட்டி..நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்க கூடாது..."
"என்ன எதுனாலும் கேளு....அட இன்னொரு கப் ஐஸ்கிரீம் வேணுமா.. கூச்சப் படாம கேளு...வாங்கி தர்றேன்.."
"ப்ச்..அதெல்லாம் வேண்டாம் போதும்..."
"அப்புறம் என்ன..."
"இல்ல ஆன்ட்டி ...வந்து நீங்க எப்படி ஆன்ட்டி இப்பவும் எப்பவும் ஒரே மாதிரி கூலாவே இருக்கீங்க...ஆக்சுவலி உங்க இடத்துல நா இருந்திருந்தா" ....
அதற்கு மேல் என்ன எப்படி சொல்வதென தெரியமல் அவள் அப்படியே நிறுத்திவிட...
"ம்ம்...ஏன் நிறுத்திட்ட...கமான் சொல்லு..நீ இருந்திருந்தா... ஒருவேள நீ இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப தேஜூ..."
"ஆன்ட்டி....நா..நா செத்திருப்பேன் ஆன்ட்டி..."
"அஹஹ்ஹ்ஹ...ஹஹஹ்ஹ்ஹஹஹ....ஹய்யோ..."
தேஜூ சொன்னதை ஏதோ ஜோக் போல் நினைத்து கெக்கே பெக்கேவென சிரித்தவளை கண்டு கோபமாய் வந்தது சிறியவளுக்கு....எப்படி இந்த சூழ்நிலையிலும் இப்படி சிரிக்க முடிகிறது என்ற ஆற்றாமையில் வந்த கோபமது...அது அவளுக்கும் புரிய அமைதி காத்தாள்...
"ஹோஹோ...ஆஹ்...அய்யோ அம்மா முடியல....இரு தண்ணி குடிச்சிக்கறேன்...ஹ...ஹ...ஆமா இப்ப கொஞ்சம் முன்னாடி என்னவோ சொன்னியே என்ன சொன்ன தேஜூ..."
"ஹாங்...நா உங்க நிலமைல இருந்திருந்தா செத்திருப்பேன்னு சொன்னேன்..."
நிறுத்தி நிதானமாய் சொன்னவளை ஆழ்ந்து நோக்கியவர்...அவளை போலவே அழுத்தமாய் பதில் சொன்னார்...
"அப்ப நா மட்டும் அதுக்கெல்லாம் டிரை பண்ணாம இருந்திருப்பேன்னு நினைச்சியா தேஜூ..."
"ஆன்...ட்டி...."
சற்றல்ல...சற்று அதிகமாகவே அதிர்ந்து போனாள் தேஜூ...
"ஹேய்..ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற....தரையிறங்குமா தரையிறங்கு..."
"நிஜமாவா ஆன்ட்டி...உங்கள நான் ஒரு பெரிய ஐயர்ன் லேடி கணக்கா மனசுல வச்சிருக்கேன்..நீங்க எப்படி... ம்ஹூம்..."
"ம்ஹ்ம்...ஆமாடா...நிஜம்தான்..உன்னோட இந்த ஐயர்ன் லேடி ஆன்ட்டிதான்... அதுவும் நா மட்டுமில்ல...பயங்கர முன்னேற்றமா பசங்களையும் சேர்த்தே சாகடிச்சுடலாம்னு முடிவு பண்ணேன்... ஆனா எப்பவுமே அச்சுதான் பயங்கர விவரம்ல... கண்டுபிடிச்சுட்டான்....அப்புறம் மெதுவா வந்து கேட்டான்....."
"என்னன்னு..."
"நாம சாகப்போறோமா அம்மானு கேட்டான்" ...
ஏதோ நேற்று நடந்த சம்பவம் போல எல்லாம் கண்முன் ஓட மதுவின் முகம் கசங்கி போனது...
"நீங்க என்ன சொன்னீங்க..."
கேட்டிருந்த தேஜூவிற்கு
உள்ளமெல்லாம் பதறி வந்தது..
"நானும் ஆமா சாமி....இங்க வேண்டாம்...பேசாம நாம செத்து போய்டலாமான்னு அவன்ட்ட கேட்டேன்..."
"அதுக்கு அவரு என்ன சொன்னாரு..."
"அவனா...ம்ஹ்ம் அந்த கிறுக்கு பய நீ சொன்னா சரிமா....ஆனா தம்பிக்கு வலிக்குமேமான்னுதான் கேட்டான்....தனக்கு வர்ற வலிய விட தன் தம்பிக்கு வலிக்குமேன்னு அவன் மேல உயிரா இருக்கற பையனுக்கு நாம என்ன செய்ய நினைச்சோம்...அந்த சின்ன பயலுக்கு இருக்கற அறிவுகூட நமக்கு இல்லையேன்னு என்னைய நானே காறி துப்பிக்கிட்டேன்... அத்தோட சரி... என் அந்த குப்பை நினைப்பை எல்லாம் பத்துக்கு பத்து குழி தோண்டி அங்கயே புதைச்சுட்டேன்..."
தேஜூவிற்கு ஏதோ அவள்முன் ஒரு பத்து வயது பாலகன் அப்படி கேள்வி கேட்பது போல் கற்பனை வர...உடலெல்லாம் சிலிர்த்து கண்ணெல்லாம் கலங்கி வந்தது...
"பாவம் ஆன்ட்டி அவரு..."
இதுவரை சீரியஸாய் அந்த நாள் நினைவில் இருந்த பெரியவளுமே இப்போதுதான் தேஜூவை கவனிக்க..அவளின் கலங்கிய முகத்தை கண்டு தன்னையே உள்ளுக்குள் நொந்து கொண்டவர்...அவளை திசை மாற்ற வம்பிளுக்க தொடங்கினார்...
"என்னம்மா...மரியாதை எல்லாம் பலமா இருக்கு...இதுவரைக்கும் எம்மவன லண்டன்பெல்.... மிருதன்...காங் சன்னு ஏதேதோ பேரு வச்சு கிண்டல் பண்ணுவ...இப்ப என்ன.."
"ப்ச்ச்..இல்ல..ஒன்னுமில்ல....வாங்க போலாம்..."
சற்றுதூரம் மவுனமாய் வந்தவள்..
"என்ன இருந்தாலும் அந்த பத்து வயசு அஷ்வத் பாவம்...எனக்கு ஏனோ அழுகையா வருது ஆன்ட்டி"..."
எப்போதும் கலகலப்பாய் இருக்கும் தேஜூவை அப்படி பார்க்க மதுவிற்கு கஷ்டமாய் இருக்க...பெரியவள் என்ன வம்பிளுத்தும் இன்னும் அவள் அந்த நிகழ்விலிருந்து வெளியே வரவில்லை.... மதுவின் வீட்டிலிருந்த அஷ்வத்தின் சிறுவயது புகைப்படம் இவள் போனில் எப்போதும் இருக்கும்... ஒருமுறை அதை எடுத்து பார்த்தவள்...அந்த பால் முகம் இந்த கேள்வி கேட்கும்போது எவ்வளவு பயந்திருக்க கூடும் என்று நினைக்க...நினைப்பே வலித்தது...சற்று நேரம் சுற்றுப்புறம் என்ன... மதுவைகூட மறந்து போனவள்...முதலில் அதிலிருந்த காங் சன் (kong son) என்பதை அழித்தவள் க்யூட் பேபி என சேவ் செய்தாள்...
சற்றே கலங்கிய மனநிலையில் இருந்த இருவரையும் மேலும் அல்லு விட வைக்க கல்பனா ஆக்சிடெண்டில் மாட்டி ஹாஸ்பிடலில் அட்மிஷன் என அவள் அம்மாவிடமிருந்து போன் வர அடித்து பிடித்து ஹாஸ்பிடலுக்கு ஓடினர்...
இருவரும் பதட்டமாய் அங்கு போக...அவசர பிரிவின் வாசலில் இருந்த பெற்றோரை கண்டதும் இன்னும் அதிகமாய் பயந்து போனார்கள்...
"ம்ம்மா...என்னம்மா ஆச்சு... எப்படிமா அடிபட்டுச்சு...கல்ப்ஸ் எங்கம்மா...நீ ஏம்மா இப்படி நிக்கற..."
"அய்யோ தேஜூமா.. உந்தங்கச்சி நம்மள எல்லாம் ஏமாத்திட்டாடி....கடவுளே கருப்பராயப்பா...நா என்னப்பா தப்பு பண்ணேன்... எனக்கேன்பா இப்படி ஒரு தண்டனை...அச்சோ கடவுளே..டீ பெரியவளே இங்க கேளேன்... அவ யாரோ ஒரு பையன லவ் பண்ணிருக்கா போலடி... அவன்கூட பைக்ல எங்கயோ போறப்ப அவ ஷால் சிக்கி இரண்டு பேரும் கீழ விழுந்துட்டாங்கன்னு இங்க கொண்டு வந்து சேர்த்திருக்காங்களாம்... பார்த்தியாடி நம்ம சில்வண்டு பண்ண காரியத்த..."
காயத்ரியின் விடாத புலம்பலில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒருவிதமாய் பார்க்க...மது அவரை சமாதானபடுத்த தேஜூவோ பல்லை கடித்தாள்..
"ப்ச்...மா..நீ வேற ஏம்மா கத்தற..அமைதியா இரும்மா... அவளாவது லவ் பண்ணி ஊரு சுத்தறாவது...வீட்ல எந்திருச்சி போயி பேன் போடக்கூட அவளுக்கு அவ்வளவு சோம்பேறித்தனமா இருக்கும்..இதுல ப்ளான்லாம் போட்டு லவ் பண்ணுவாளா... அட போம்மா நீ ...நான்லாம் நம்ப மாட்டேன்.."
தேஜூ முடிக்கவும்...டாக்டர் வெளியில் வரவும் சரியாய் இருந்தது..
"சார் என் பொண்ணு..."
ஜோசப் பதட்டமாய் டாக்டரை கேட்க அவரோ குழப்பமாய் பார்த்தார்...
"எந்த பொண்ணு.."
"சார் எங்க பொண்ணு கல்பனா...பைக் ஆக்சிடெண்ட்னு வந்து சேர்த்துனாங்களே...அவளுக்கு எப்படி இருக்கு சார்..எதுனாலும் சொல்லுங்க சார்.."
"ஓஹ்...அந்த பொண்ணா...அச்சோ சார் ஏன் இவ்ளோ டென்ஷன்...உங்க பொண்ணுக்கு ஒண்ணுமில்ல.. ஆக்சுவலா இங்க வார்டுல பெட் எல்லாம் புல்லா இருக்குன்னுதான் இங்க எமர்ஜென்சில கொண்டு வந்து படுக்க வச்சிருக்காங்க... மத்தபடி அவங்களுக்கு ஒண்ணுமில்ல...என்ன கூட வந்த பையனுக்குதான் அடி ஜாஸ்தி...நீங்க போய் பாருங்க..."
அவர் நகர்ந்ததும் ஒருவரையொருவர்...
"ன்ன்னாடா இது" ...
என்பதுபோல் பார்த்துவிட்டு... வரிசையாய் உள்ளே போக.... அங்கு கண்ட காட்சியில் கொதித்து போயினர்..
காலாட்டிக்கொண்டே அங்கிருந்த குளுக்கோன் டீயை முழுதாய் கையில் கொட்டி நிதானமாய் நக்கியபடி... உள்ளே வந்த எல்லோரையும் அதிர்ச்சி மகிழ்ச்சி என கலந்து கட்டி பார்த்தவள் தேஜூவை கண்டு மட்டும் பயத்தில் வேர்த்து வழிந்தாள்...
பக்கத்திலிருந்த அந்த இன்னொருவனும் அப்போதுதான் நினைவு வந்து எழுந்து உட்கார புசுபுசுவென மூச்சு விட்ட காயத்திரியிடம் ...ஜோசப் வந்து காதை கடித்தார்...
"ஏய் காயூ பையன் நல்லாதான் இருக்கான்டி...பேசாம இவன அப்படியே அமுக்கிரலாமா... கல்ப்ஸ்க்கு அலைச்சல் மிச்சம்...."
தேஜூ தலையில் அடித்து கொண்டாள்...
"எங்க வந்து பொண்ணுக்கு மாப்ள தேடுறாங்க பாரு...குட் பேமிலி" ....
என்று மனதுக்குள் வாரியவள்...வெளியில் அவள் அப்பாவிற்கு கைகொடுத்து....
"பட் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்குபா...ஐ லைக் இட்...கேரி ஆன்" ....என்க...
காயூ இருவரையும் தீயாய் முறைத்தவள் அதே கோவத்தோடு அவனிடம் போனாள்...
"ஏய் ந்தாப்பா...யாரு நீ....எந்த ஊரு..எதுக்கு எம்பொண்ண பைக்ல எல்லாம் ஏத்திட்டு ஊரு சுத்திட்டு இருக்கற நீ...தம்மாத்தூண்டு வாட்டர் பில்டர் மாதிரி இருந்துட்டு உனக்கு எம்பொண்ணு வேணுமா....உனக்கே ஓவரா தெரியல...ஹாங்...அவ யாரு என்னன்னு தெரியுமா உனக்கு.... சொல்லுடா தெரியுமா..."
அம்மா பேசியதில் ஆரம்பத்தில் குழம்பிய கல்பனாவிற்கு .... காயூ பேச பேச இப்போது பின்னால் பிஜிம் ஒலித்தது...
"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே...
விண்மீண்களின் கூட்டம் என்மேலே"....
பெண்ணவள் ஆகாயத்தில் பறக்க....அம்மாவோ இன்னும் பேச்சை நிறுத்தியபாடில்லை...
"ஏய் சொல்லுடா...என்ன தெரியும் உனக்கு இவள பத்தி...குடிச்ச எச்ச கிளாஸ கூட கழுவி வைக்க மாட்டா தெரியுமா...ஏன் எச்ச தட்டுல இருக்கறத டஸ்ட்பின்ல கூட கொட்டாத சுடு சோம்பேறி இது தெரியுமா.... ஒரு ஜூன்ஸ் போட்டா குறைஞ்சது இரண்டு வாரம் ஆனாலும் கழட்டவே மாட்டா... அவ்ளோ சுத்தம்... அவளப்போய் நீ லவ் பண்றியா..ஏன் உனக்கு வேற நல்ல பொண்ணே கிடைக்கலியா...கண்டிப்பா இவளேதான் வேணுமா... அப்படின்னா ஒன்னு பண்ணு...பேசாம இவள கட்டி உங்க வீட்டுக்கு கூட்டி போறதுக்கு பதிலா...இவள தாலி கட்ட சொல்லி எங்கூட்டுக்கு வா...உன்னை நானே நல்லா பார்த்துக்கறேன்.. என்ன நா சொல்றது புரியுதா..."
மேலே பறந்தவளை படீர் படீர் என தலையில் தட்டி தரையிறக்கிய அம்மாவை முறைத்தவள் அருகிலிருந்த அப்பாவின் கையை பிடித்து கொண்டாள்..
"ப்ப்பா..உண்மையா சொல்லுங்க... என்னோட பிறப்புல ஏதாவது மர்மம் இருக்குதா...நிஜமாவே நா உங்க பொண்ணுதானா... சொல்லுங்கப்பா... இல்ல தேஜூ அடிக்கடி சொல்ற மாதிரி என்னை குப்பை தொட்டில இருந்துதான் எடுத்துட்டு வந்தீங்களா... சொல்லுப்பா... சொல்லுங்க...அட சொல்லுயா யோவ்"
அந்த புதியவனோ திருதிருவென முழிக்க...
"அய்யோ ஆன்ட்டி இந்த பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது....நா பைக்ல போறப்ப இவங்க ரோட் கிராஸ் பண்ண நின்னுட்டு இருந்தாங்க...அப்ப இவங்க ஷால் காத்துல பறந்தது... கரெக்டா என் பைக் வீல்ல மாட்டி நான்தான் ஸ்கிப் ஆய்ட்டு விழுந்தேன்..அதுவரைதான் எனக்கு ஞாபகம் இருக்கு.."
அவன் தெளிவாய் சொல்லி முடிக்கவும் எல்லோரும் இப்போது கேள்வியாய் கல்பனாவை பார்க்க..
"இல்ல..அவரு விழுந்ததும் பக்கத்துல போய் பார்த்தேனா... கை காலெல்லாம் பிளட்டா இருந்துச்சா..அதோட...அதோட.."
"ம்ம்..என்ன சொல்லு.."
"அதோட..அந்த ஷால் தேஜூவோட புது ஷாலா...அந்த பிசாசு தெரிஞ்சா மேல பாஞ்சிருமேன்னு பயத்துல அப்படியே மயங்கி அங்கயே விழுந்துட்டேன்..கூட இருந்த பக்கிங்க...இப்படி சொல்லி எங்கள அட்மிஷன் போட்டு வச்சிருச்சுங்க..."
அப்போதுதான் தேஜூ அவள் உடையையே கவனித்தாள்... அவளின் புத்தம் புது சுடிதார்... நொந்து நூலாகி அந்து அவலாகியிருந்தது...
"அடியேய்...அந்த ஷால் மட்டும் 3 தவுசண்ட்டி...அதயா போட்டு போன..பிசாசே...பிசாசே...ஏய் இங்க பாரு மேன்..உன் பைக்ல மாட்டிதான் என் ஷால் போச்சு... சோ ஹாஸ்பிடல் பில்லுகூட எனக்கு தனியா மூவாயிரம் செட்டில் பண்ற... இல்ல.... பிசாசே இனி என் டிரஸ்ஸ தொடுவ"...
அவள் பட்பட்டென அடிக்க ஆரம்பித்ததும் தலை சுற்றுவதை போல் நடித்த கல்ப்பனா அப்படியே அப்பாவின் தோளில் படுத்து கொள்ள...அந்த புதியவனோ இந்த வித்தியாச பேமிலியை முக்கியமாய் கல்பனாவை குறுகுறுவென பார்த்திருக்க.... சரியாய் வார்டுபாய் வந்து மதுவை அழைத்தார்..
"மது மேடம் யாருங்க போன் வந்திருக்கு....வந்து பேசுங்க..."
"அய்யோ தேஜூ யாரா
இருக்கும்..."
"வேற யாரு..உங்க புத்திரனாதான் இருக்கும்.. இப்படி அங்கங்கன்னு இன்ஸ்டால்மெண்ட்ல போன்ல வராம பேசாம போன் வழியாவே அங்கிருந்து பூந்து நேர்ல வர சொல்லிருங்க... அட்லீஸ்ட் பிளைட் செலவாவது மிஞ்சும்.."
தோளில் நொடித்தாலும் அவளும் கூடப்போனாள்...
"ஹலோ அச்சுமா..எப்படிடா கண்ணா கரெக்டா கண்டுபுடிச்ச நா இங்கதான் இருப்பேன்னு..."
"ம்ம்மா..நடிக்காத...என்ன நடந்திருக்கும்னு உனக்கும் தெரியும்... சோ பேச்ச மாத்தாத...மொதல்ல உன் ரிலெஷன்ஸ் யார் எல்லாம் வர்றாங்க பங்ஷன்கு...அத பர்ஸ்ட் சொல்லு..."
"டேய் ஏண்டா வேற யாருடா வருவாங்க...உன் தாத்தா பாட்டி..."
"ம்மா .."
"சரி சரி...என் அப்பா அம்மா..அப்புறம் அக்கா மச்சான்..இன்னும் உன் அப்பா வழில எல்லோரும்தான்...."
"யாரும் வேண்டாம்..."
"அஷ்வத்...."
"ம்ம்மா...நா இதான் சொல்லுவேன்னு உனக்கும் தெரியும்.."
"தெரியும்டா...பட்..."
"மா...இனஃப்....ஓகே நமக்குள்ள சண்டை வேணாம்...உனக்காக வேணா அவங்க வரட்டும்.. அக்செப்ட் பண்ணிக்கறேன்... பட் அவங்களாதான் வரணும்... அதுவும் அவங்களா இஷ்டபட்டா மட்டும்தான் வரணும்...இந்த பாட்ச் அப் வேலை எல்லாம் வேண்டாம்...காட் மை பாய்ண்ட் மா..."
"அஷ்வத் நீ என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ற..எனக்குன்னு ப்ரீடமே இல்லயாடா..."
"மா போதும் நா வைக்கறேன்... நீ.போய் வேலைய பாரு...பட் சொன்னத மறக்காத... நினைப்புல வச்சுக்க..."
"ஹேட் யூ டா..."
"லவ் யூமா...லவ் யூ லவ் யூ எ லாட்மா..."
தென்றல் தாலாட்டும்...