அத்தியாயம்-3
மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள்.
எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி. பார்த்தாலே ஒரு அப்பாவித்தனம் இருப்பது போல் தெரிந்தது. பார்த்தவுடன் பிடித்து விடும் முகம் அவனுக்கு.
“ஹலோ சிஸ்டர் இப்ப எப்படி இருக்கு?”
மெதுவாக எழுந்து அமர்ந்தாள் ஹேமவள்ளி.
“நான்.. அந்த வண்டி..”
“அந்த வண்டி இடிச்சதும் மயங்கி விழுந்துட்டீங்க. கால்ல அடி பட்டிருக்கு. இரண்டு வாரம் ஸ்டிரைன் பண்ண வேண்டாம்னு டாக்டர் சொன்னாரு. உங்க மொபைலில் இருந்து மித்ரா மேமுக்கு கூப்பிட்டு சொல்லிட்டேன். அவங்க வந்துட்டே இருக்காங்க.”
“மித்ரா மேமுக்கா…” என அவள் தன் விழிகளை விரிக்கும் சமயம் வந்து சேர்ந்தாள் மித்ரா. அருகில் ராகவனும் ஹேமாவை ஏறிட்டப்படியே வந்து நின்றான்.
மித்ரா ஊதா நிற டீசர்ட் அணிந்து, அதே நிறத்தில் பேண்டுடன் போனி டெயிலுடன் வந்திருந்தாள். அதிலும் அவள் அழகு சுடரிட்டது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். கண்ணாடி அணிந்தவனின் விழிகளில் ஒரு சில நொடிகள் மித்ரவிந்தாவின் முகத்தில் நிலைத்தது.
“மேம்..” என ஹேமா இழுக்க, உடனே கண்ணாடி அணிந்தவன் பேச ஆரம்பித்தான்.
“ஹலோ மித்ரா மேம். நான் தான் உங்களுக்குக் கால் பண்ணேன். ஐம் லாயர் பாரதி யது நந்தனன். சென்னை ஹைகோர்ட்டில் பிராக்டிஸ் பண்றேன்.”
வெண்ணிறச் சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அவன் வழக்கறிஞர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அவன் கை நீட்டவும், மித்ராவும் கைகளைப் பற்றிக் குலுக்கினாள்.
“ஐம் மித்ரவிந்தா சாமூண்டீஸ்வரி தேவி.”
“ஓகே மிஸஸ் மித்ரா மேம், இவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க. காலில் அடி. டூ வீக்ஸ் கேர்புல்லா இருக்கனும். மெடிசன்ஸ் பெரிசாக இல்லை. இங்க இருக்கு.” என மருந்துகள் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
“எனக்கு இப்ப ஒரு மீட்டிங்க் இருக்கு. ஐ ஹேவ் டூ லிவ்.”
தெளிவாகவும், நிதானமாகவும் அவன் பேச மித்ராவும், ஹேமாவும் அவனைப் பார்க்க, ராகவன் லேசாக முறைத்தது போல் இருந்தது.
“ராகவன் சார்கிட்ட பில் எவ்ளோனு கேட்டு கொடுத்துருங்க.”
“இட்ஸ் ஓகே. நாட் மச். இவங்களைப் பார்க்கும் போது என்னோட சிஸ்டர் மாதிரி தோணுச்சு. சோ வேண்டாம். டேக் கேர் ஹேமா சிஸ்டர்.”
“புரோ தேங்க்ஸ்.”
ஹேமாவும் கூறினாள்.
“தேங்க்ஸ் மிஸ்டர் பாரதி.” மித்ராவும் நன்றி உரைக்க, “வெல்கம்” என உரைத்து விட்டு நகர்ந்தான் பாரதி.
மித்ரா விழிகளை அசைக்க ராகவன் அவர் பின்னே சென்று அவனுடைய விசிட்டிங்க் கார்டை வாங்கிக் கொண்டான்.
“ஹேமா பார்த்து ரோட் கிராஸ் பண்ணக் கூடாதா?”
“மேம் அது..”
“டூ வீக்ஸ் லீவ் எடுத்துக்கோ. வொர்க் பிரம் ஹோம்.”
அப்போது மருத்துவர் செவிலியருடன் வந்து அறிவுரைகள் கூறி ஹேமாவை வீட்டுக்குப் போகலாம் என்று கூறிவிட, சக்கர நாற்காலியில் அவளைப் பொட்டலம் போல் தூக்கி அமர வைத்தான் ராகவன்.
‘அடேய்.. ராகவா.. என்னை இப்படி பொட்டலம் மாதிரி தூக்கி வைக்கிறியே?'
அவளைக் காரில் ஏற்றும் போதும் ராகவன் அப்படியே தூக்கி வைத்தான். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை அவளிடம் நலமாய் இருக்கிறாயா? எனக் கேட்கவில்லை.
‘கல்லூளி மங்கன். வாயைத் திறந்து ஒரு வார்த்தை எப்படி இருக்கேனு கேட்கிறானா? இரண்டு வருஷமாகக் கூட இருக்கேன். மித்ரா மேடம்கிட்ட மட்டும் பேசறான். நானும் பக்கத்தில் தானே இருக்கேன். கல்நெஞ்சக்காரன் கரிஷூ.’ மனதில் அவனை வறுத்து தாளித்துக் கொட்டினாள் ஹேமவள்ளி.
அவளைக் காரில் பின் புறத்தில் அமர வைத்திருக்க, பின் சீட்டில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தாள். இவள் முகபாவனையை முன்னிருக்கும் கண்ணாடியில் கவனித்ததைப் போல் ராகவன் திரும்பிப் பார்க்க, சட்டென்று பார்வையை மாற்றினாள் ஹேமவள்ளி.
ராகவனும் பின் அமைதியாகக் காரைச் செலுத்த, வீட்டினை அடைந்தனர்.
அவர்களுக்கு முன்னே சென்றிருந்த மித்ரா, நீள் விரி இருக்கையில் தலையை மேல் நோக்கி சாய்த்தப்படி அமர்ந்து விழிகளை மூடி இருந்தாள்.
இப்போதும் ராகவன் அவளைப் பொட்டலம் போல் தூக்கி அந்த பிரம்மாண்ட மாளிகையின் ஹாலில் மித்ராவுக்கு எதிரே அமர வைக்க, ஹேம வள்ளிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
இவர்கள் வரும் அரவம் கேட்ட, சில விநாடிகளுக்குள் விழிகளைத் திறந்தாள் மித்ரா.
“எதுக்கு எர்லி மார்னிங்கே சூப்பர் மார்க்கெட் போன ஹேமா?”
“மேம்.. அது சிஸ்டர் நேத்து சில திங்க்ஸ் கேட்டிருந்தாங்க. அதான் வாங்கி கொரியர் செஞ்சிடலாம்னு போனேன். அப்புறம் எனக்கும் சில திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது. சாரி மேம்.”
“எனக்கு எதுக்கு சாரி சொல்ற ஹேமா. உனக்கு பெரிசா அடிபடலைனு கடவுளுக்குத் தேங்க்ஸ் சொல்லு.”
உணர்வுகள் எதுவும் இன்றி மெதுவாக ஒலித்த குரலில் ஹேமாவுக்கு இன்னும் பயத்தில் வியர்த்தது. மித்ரா எதிரில் இருப்பவளின் மன நிலையைக் கணித்தவள், “ஹேமா நீ எப்பவும் செய்யற வொர்க்கை வீட்டில் இருந்து பாரு, ராகவன் என் கூட இருப்பாரு. ஹெட் ஹவுஸ் கீப்பர் இங்க இல்லை, அம்மாவோட செகரட்டரியும் இங்க இல்லை. இப்ப இருக்கற அசிஸ்டண்ட்ட சொல்லிடறேன். அவங்க உனக்கு ஒருத்தரை எப்போதும் கூட இருக்கற மாதிரி பார்த்துக்குவாங்க. கெட் வெல் சூன். ராகவன் ஹேமவள்ளி திங்சில் எதை கொரியர் செய்யனும் கேட்டு கொரியர் பண்ணிடுங்க. இப்ப அவங்க ரூமில் விட்ருங்க.” கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல தானியங்கி மின் தூக்கியில் ஏறினாள்.
ராகவன் மீண்டும் ஹேமவள்ளியைத் தூக்க அவள் விழிகளில் உறைந்து நின்ற கண்ணீர் கருப்புச் சட்டையில் படிந்தது. வெண்ணிற மூக்கும், கன்னமும் கண நேரத்தில் ரோஜா வண்ணத்தைப் பூசி சோகத்தைத் தாங்கியது. அவன் விரல்கள் அவளை அறியாமல் அவனுடைய சட்டைக் காலரை இறுகப் பிடிக்க ராகவன் முகம் இறுகியது.
அறைக்குள் நுழையும் போது, “ஹேமவள்ளி இப்ப எதுக்கு அழறீங்க?” என அவன் சாதரணமாகக் கேட்டதே, மிரட்டல் போல் தோன்ற மீண்டும் கண்ணீர் இப்போது நன்றாக வந்து விட்டது.
“ப்ச்ச். என்ன வேணும்?”
அவளைப் படுக்கையின் நடுவில் அமரவைக்கும் முன் ஒரு பணிப்பெண் ஹேமவள்ளியின் பொருட்களை அறையில் கொண்டு வந்து வைத்துவிட, ராகவன் அவரிடம் பெட்டி ஒன்றைக் கொண்டுவரும் படி கூறிவிட்டு அவரை அனுப்பி விட்டு, “எந்த திங்க்ஸ்னு சொல்லுங்க.” என்றவன் அந்தப் பெரிய நெகிழிப் பையைத் திறக்க முயல ஹேமா தன்னுடைய கையை வைத்து அவனைத் தடுத்தாள். அவளுக்குத் தேவையான சுகாதரத்திற்குத் தேவையானப் பொருட்களும் இருந்தன.
அவளை நிமிர்ந்து தன் கூரிய விழிகளால் ஏறிட்டான்.
ஹேமா ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்தப்படியே, “பர்சனல். நானே எடுத்து வைக்கிறேன்.’ என்றாள். உடனே ராகவன் திரும்பி நின்று கொண்டான்.
அவனுக்குப் பின்னால் பொருள்கள் நெகிழிப்பையில் உரசும் போது எழும் சர சரவென்ற சத்தம். மெத்தையில் தன்னுடைய பொருட்களை போர்வையின் அடியில் பதுக்கினாள். தன் தங்கைக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை மட்டும் மீண்டும் பையில் போட்டுக் கொடுத்தாள்.
பணிப்பெண் பெட்டியைக் கொடுத்துவிட, அதில் அந்தப் பொருட்களைப் போட்டுக் கொண்டவன், “நான் ஏற்கனவே எல்லாத்தையும் பார்த்துட்டேன்.” என போர்வையால் உருவான குட்டி மேட்டை விழிகளால் நோக்கியபடி கூறியவன் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அந்த கண நேர இயலாமை, விபத்தில் மாட்டிக் கொண்ட கோபம், ராகவனிடம் உதவி வாங்க வேண்டிய நேரத்தை நொந்து கொண்டவள் சட்டென்று உருவான கோபத்தில் கையில் தட்டுப்பட்ட பொருளை எடுத்து ராகவனை நோக்கி வீச, அவன் சட்டென்று கை நீட்டி அதைப் பிடித்தவன் அவள் அருகில் வந்தான். அதற்குள் இன்னொன்றையும் அவன் மேல் வீசக் கையில் எடுத்திருந்தாள்.
ஹேமவள்ளிக்கு இப்போது பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கொண்டது.
‘அய்யோ டெரர் பார்ட்டியை வேற சீண்டிட்டோமே? இப்ப என்ன செய்வானு தெரியலை.’ என்ற பயம் மனதில் ஒட்டிக் கொண்டது.
ஹேமவள்ளி கோபத்தில் நடுத்தர அளவில் உள்ள குச்சி மிட்டாயைத் தூக்கி வீசி இருக்க, அவன் கையின் அளவில் அது சிறிதாகத்தான் தெரிந்தது.
அவள் அருகில் வந்ததும் மேலும் பயம் அதிகரித்தது. ஹேமா இந்த வீட்டில் பயப்படுவது மித்ரா மற்றும் ராகவனுக்குத்தான்.
அவன் கையை ஓங்க, ஹேமா பயத்தில் விழிகளை மூட, அவள் கன்னத்தில் லேசாகத் தட்டினான் ராகவன்.
“தேங்க்ஸ் ஹேமவள்ளி. பட் சுகர் கமி பண்ணிக்கோ. கொஞ்சம் வெயிட் போட்டுட்ட. எனக்கு இந்தப் பிளேவர் பிடிக்காது. இதை எடுத்துக்கிறேன்.”
அவள் கையில் இருந்த மற்றொரு குச்சி மிட்டாயைப் பிடிங்கி விட்டு, தன் கையில் இருந்ததை வைத்து விட்டுச் செல்ல, ஹேமவள்ளிக்கு சகலமும் உறைந்து விட்டது. எப்போதும் அதிகம் பேசாதவன், தன்னிடம் இவ்வளவு வாக்கியங்கள் பேசி உள்ளான்.
அவள் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே ராகவன் அவளிடம் அதிகம் பேசியதில்லை. இயல்பிலேயே அதிகம் பேசாதவள் அவள் அருகில் எப்போதும் பாராமுகம் தான். ஹேமவள்ளிதான் அவன் மன நிலையைக் கணிக்க முயன்று அவனிடம் பேச முயற்சிப்பாள். அதற்கும் ஓரிரு வார்த்தையில் பதில்கள்தான். அவள் வந்த சில நாட்களிலேயே ராகவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என உணர்ந்து கொண்டிருந்தாள். அதற்குக் காரணமும் இருந்தது.
***
ராமசந்திரனும், மஹா ஜஸ்ராவும் மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், தந்தை கூறிய செய்தியில் அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி இன்றி தந்தை கேட்டதற்காக சம்மதித்திருந்தாள்.
“மஹாக்குட்டி என்னை மன்னிச்சுடும்மா. நம்ம குடும்பத்துக்காக இதை நீ செஞ்சாகனும். உன்னோட அண்ணி உனக்கு எவ்வளவு செஞ்சுருக்காங்க. நாம இதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது.”
“அப்பா அண்ணாகிட்ட கூட சொல்லாமல் எப்படி?”
“உன் அண்ணன் செஞ்ச சில விஷயங்களால் தான் இந்தப் பிரச்சினையே. உன்னை மாப்பிள்ளை நல்லாப் பார்த்துக்குவாரு. நீ விஜய் மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டால் உன் அண்ணன் எதுவும் செய்ய முடியாது. நம்ம குடும்பம் உடையாமல் இருக்கும்.”
“அப்பா நீங்க சொல்றதுக்கு ஒத்துக்கிறேன். ஆனால் உண்மையான அன்பைத் தவிர எதுவும் கல்யாண பந்தத்தைத் தொடர வைக்க முடியாது. அதை நீங்க தெரிஞ்சுக்கனும்.”
அந்த இருபத்தி ஐந்தைத் தொடும் பெண்ணின் சொல்லைக் கார் ஓட்டுநரின் கைப்பேசி வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் தனுர் விஜயப் பாண்டியன்.
அவளிடம் உறவினர் என்பதைத் தாண்டி எந்த அன்பும் அவனுக்கு இல்லை. அதைத் தாண்டி மஹா எப்போதும் அவனிடம் ஒரு அமைதியைக் கடைபிடிப்பாள். அதிகம் பேச்சு வார்த்தை அவர்களுக்குள் இல்லை.
மஹா ஜஸ்ராவை அவனும் அந்த ரீதியில் நினைத்துப் பார்த்ததில்லை. பெரிதாக அவளிடம் பேசியதும் இல்லை. ஏனோ முதல் முறை அவளைப் பார்த்த தருணம் சட்டென்று மனதில் வந்து போனது.
பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோயிலில் வெளியாட்கள் யாருமில்லை. காவல் ஆட்கள் மட்டும் இருந்தனர்.
மஹா பயப்படவெல்லாம் இல்லை. தைரியமாக இறங்கினாள்.
இராமசந்திரனுக்குத்தான் பயமாக இருந்தது. இருவரும் இறங்கிக் கோயிலுக்குள் செல்ல, ஒரு குட்டி வாண்டு ஒன்று அவள் காலைக் கட்டிக் கொண்டது.
“அத்தை.. அத்தை.. இன்னிக்கு நீங்க மாமாவை கல்யாணம் பண்ணிட்டு பர்மெணண்ட்டா மாமா வீட்டில் இருக்கப் போறீங்களாம். தனு மாமா சொன்னாங்க.” மழலைக் குரலில் ஒலித்த மகிழ்ச்சியில் உடனே மகா அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.
எம்.எஸ். செம்மொழி பாண்டியன். நான்கு வயதாகும் குழந்தை இந்த வருடம்தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். மாமன் தோளில் இருந்த நாட்கள் அதிகம் என்பதால் மாமனைப் போல் செயல் என அனைத்தும் வரும் அவளுக்கு. குணத்தில் தாய்மாமனின் ஜெராக்ஸ் காஃபிதான். மகா ஜஸ்ரா என்றாலும் கொள்ளைப் பிரியம்.”
நகை அழுந்தாத வண்ணம் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் செம்மொழி. குழந்தை கூறும் கதைகளைக் கேட்டப்படி வந்தவள் விழிகளில் திரும்பி நின்றபடி பட்டு வேட்டி பட்டு சட்டையில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனின் பரந்த தோள்கள்தான் பட்டது.
குழந்தையை இறக்கி விட அது தாய்மாமனைப் போய் கட்டிக் கொண்டது. அவனும் ஏதோ குழந்தையிடம் பேசி சிரித்தான். மஹாவுக்கு அவனைப் பார்த்ததும் கோபம் கனன்றது.
சில நிமிடங்களில் தமிழ் முறைப்படி சடங்குகள் ஆரம்பித்தது.
வீடியோ கிராபரும், போட்டோ கிராபரும் கூட இருந்தனர்.
மஹாவும் சிறிது நேரத்தில் அவன் பக்கத்தில் அமர வைக்கப்பட்டாள்.
“ஜஸ்ரா கோபமா?” அவள் அமர்ந்ததும் விஜய் அவளிடம் முனுமுனுத்தான்.
“கோபப்பட்டால் இந்தக் கல்யாணம் நின்னுடுமா?”
“வாய்ப்பில்லை.”
“அப்புறம் என்ன கேள்வி? என்னைக் கேட்டியா நீ?”
மரியாதை இல்லை அவனிடம்.
“இவ்வளவு பேசுவியா நீ?”
“அரசியல்வாதினா நீ மட்டும்தான் பேசனுமோ? நான் பேச மாட்டேனு நினைச்சியோ?”
“தைரியம்னு தெரியும். இவ்வளவு தைரியம்னு தெரியலை.”
“இப்ப தெரிஞ்சுருச்சுல்ல. அப்ப அமைதியாக வேலையைப் பாரு.”
தனுர் விஜயனின் வாய் கோணலாக அசைந்தது.
“எனக்கு உன் மேல் இன்ஸ்ட்ர்ஸ்ட் இல்லை ஜஸ்ரா. சூழ்நிலைதான்.”
“அப்படியா அக்கா மாமா ஒன்னு சேர்ந்தால் நாம டைவர்ஸ் பண்ணிடலாமா?”
கையில் தாலியை வாங்கிக் கொண்டான் விஜயன்.
“தலாக் இஸ் நான் ஏன் ஆப்சன் ஜஸ்ரா. என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுதான். அது இனி நீ மட்டும்தான். ஒன்வே. திரும்பிப் போக வாய்ப்பில்லை.” கூறிவிட்டு அவள் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.
“உனக்கு மஹர் கொடுக்கலை. உனக்கு என்ன வேணுமோ கேளு. அதை வாங்கித் தரேன்.”
தன் மனைவி பாதி இந்துப் பெண், பாதி இஸ்ஸாமியப் பெண். இரண்டு மதங்களையும் அவள் பின் பற்றுவதால் அவளிடம் கேட்டிருந்தாள் மஹா ஜஸ்ரா. அவளுடைய பெயர் கூட இந்து அல்ல.
“உங்கிட்ட இருந்து விடுதலைதான் வேணும். அதுக்கு வாய்ப்பில்லை. அதனால் எனக்கு வேணுங்கப்பறப்ப கேட்கிறேன்.” என அவன் விரல் பிடித்து அக்னியை வலம் வர ஆரம்பித்தாள் மகா ஜஸ்ரா.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள்.
எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி. பார்த்தாலே ஒரு அப்பாவித்தனம் இருப்பது போல் தெரிந்தது. பார்த்தவுடன் பிடித்து விடும் முகம் அவனுக்கு.
“ஹலோ சிஸ்டர் இப்ப எப்படி இருக்கு?”
மெதுவாக எழுந்து அமர்ந்தாள் ஹேமவள்ளி.
“நான்.. அந்த வண்டி..”
“அந்த வண்டி இடிச்சதும் மயங்கி விழுந்துட்டீங்க. கால்ல அடி பட்டிருக்கு. இரண்டு வாரம் ஸ்டிரைன் பண்ண வேண்டாம்னு டாக்டர் சொன்னாரு. உங்க மொபைலில் இருந்து மித்ரா மேமுக்கு கூப்பிட்டு சொல்லிட்டேன். அவங்க வந்துட்டே இருக்காங்க.”
“மித்ரா மேமுக்கா…” என அவள் தன் விழிகளை விரிக்கும் சமயம் வந்து சேர்ந்தாள் மித்ரா. அருகில் ராகவனும் ஹேமாவை ஏறிட்டப்படியே வந்து நின்றான்.
மித்ரா ஊதா நிற டீசர்ட் அணிந்து, அதே நிறத்தில் பேண்டுடன் போனி டெயிலுடன் வந்திருந்தாள். அதிலும் அவள் அழகு சுடரிட்டது என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். கண்ணாடி அணிந்தவனின் விழிகளில் ஒரு சில நொடிகள் மித்ரவிந்தாவின் முகத்தில் நிலைத்தது.
“மேம்..” என ஹேமா இழுக்க, உடனே கண்ணாடி அணிந்தவன் பேச ஆரம்பித்தான்.
“ஹலோ மித்ரா மேம். நான் தான் உங்களுக்குக் கால் பண்ணேன். ஐம் லாயர் பாரதி யது நந்தனன். சென்னை ஹைகோர்ட்டில் பிராக்டிஸ் பண்றேன்.”
வெண்ணிறச் சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அவன் வழக்கறிஞர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அவன் கை நீட்டவும், மித்ராவும் கைகளைப் பற்றிக் குலுக்கினாள்.
“ஐம் மித்ரவிந்தா சாமூண்டீஸ்வரி தேவி.”
“ஓகே மிஸஸ் மித்ரா மேம், இவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க. காலில் அடி. டூ வீக்ஸ் கேர்புல்லா இருக்கனும். மெடிசன்ஸ் பெரிசாக இல்லை. இங்க இருக்கு.” என மருந்துகள் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
“எனக்கு இப்ப ஒரு மீட்டிங்க் இருக்கு. ஐ ஹேவ் டூ லிவ்.”
தெளிவாகவும், நிதானமாகவும் அவன் பேச மித்ராவும், ஹேமாவும் அவனைப் பார்க்க, ராகவன் லேசாக முறைத்தது போல் இருந்தது.
“ராகவன் சார்கிட்ட பில் எவ்ளோனு கேட்டு கொடுத்துருங்க.”
“இட்ஸ் ஓகே. நாட் மச். இவங்களைப் பார்க்கும் போது என்னோட சிஸ்டர் மாதிரி தோணுச்சு. சோ வேண்டாம். டேக் கேர் ஹேமா சிஸ்டர்.”
“புரோ தேங்க்ஸ்.”
ஹேமாவும் கூறினாள்.
“தேங்க்ஸ் மிஸ்டர் பாரதி.” மித்ராவும் நன்றி உரைக்க, “வெல்கம்” என உரைத்து விட்டு நகர்ந்தான் பாரதி.
மித்ரா விழிகளை அசைக்க ராகவன் அவர் பின்னே சென்று அவனுடைய விசிட்டிங்க் கார்டை வாங்கிக் கொண்டான்.
“ஹேமா பார்த்து ரோட் கிராஸ் பண்ணக் கூடாதா?”
“மேம் அது..”
“டூ வீக்ஸ் லீவ் எடுத்துக்கோ. வொர்க் பிரம் ஹோம்.”
அப்போது மருத்துவர் செவிலியருடன் வந்து அறிவுரைகள் கூறி ஹேமாவை வீட்டுக்குப் போகலாம் என்று கூறிவிட, சக்கர நாற்காலியில் அவளைப் பொட்டலம் போல் தூக்கி அமர வைத்தான் ராகவன்.
‘அடேய்.. ராகவா.. என்னை இப்படி பொட்டலம் மாதிரி தூக்கி வைக்கிறியே?'
அவளைக் காரில் ஏற்றும் போதும் ராகவன் அப்படியே தூக்கி வைத்தான். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை அவளிடம் நலமாய் இருக்கிறாயா? எனக் கேட்கவில்லை.
‘கல்லூளி மங்கன். வாயைத் திறந்து ஒரு வார்த்தை எப்படி இருக்கேனு கேட்கிறானா? இரண்டு வருஷமாகக் கூட இருக்கேன். மித்ரா மேடம்கிட்ட மட்டும் பேசறான். நானும் பக்கத்தில் தானே இருக்கேன். கல்நெஞ்சக்காரன் கரிஷூ.’ மனதில் அவனை வறுத்து தாளித்துக் கொட்டினாள் ஹேமவள்ளி.
அவளைக் காரில் பின் புறத்தில் அமர வைத்திருக்க, பின் சீட்டில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தாள். இவள் முகபாவனையை முன்னிருக்கும் கண்ணாடியில் கவனித்ததைப் போல் ராகவன் திரும்பிப் பார்க்க, சட்டென்று பார்வையை மாற்றினாள் ஹேமவள்ளி.
ராகவனும் பின் அமைதியாகக் காரைச் செலுத்த, வீட்டினை அடைந்தனர்.
அவர்களுக்கு முன்னே சென்றிருந்த மித்ரா, நீள் விரி இருக்கையில் தலையை மேல் நோக்கி சாய்த்தப்படி அமர்ந்து விழிகளை மூடி இருந்தாள்.
இப்போதும் ராகவன் அவளைப் பொட்டலம் போல் தூக்கி அந்த பிரம்மாண்ட மாளிகையின் ஹாலில் மித்ராவுக்கு எதிரே அமர வைக்க, ஹேம வள்ளிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
இவர்கள் வரும் அரவம் கேட்ட, சில விநாடிகளுக்குள் விழிகளைத் திறந்தாள் மித்ரா.
“எதுக்கு எர்லி மார்னிங்கே சூப்பர் மார்க்கெட் போன ஹேமா?”
“மேம்.. அது சிஸ்டர் நேத்து சில திங்க்ஸ் கேட்டிருந்தாங்க. அதான் வாங்கி கொரியர் செஞ்சிடலாம்னு போனேன். அப்புறம் எனக்கும் சில திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது. சாரி மேம்.”
“எனக்கு எதுக்கு சாரி சொல்ற ஹேமா. உனக்கு பெரிசா அடிபடலைனு கடவுளுக்குத் தேங்க்ஸ் சொல்லு.”
உணர்வுகள் எதுவும் இன்றி மெதுவாக ஒலித்த குரலில் ஹேமாவுக்கு இன்னும் பயத்தில் வியர்த்தது. மித்ரா எதிரில் இருப்பவளின் மன நிலையைக் கணித்தவள், “ஹேமா நீ எப்பவும் செய்யற வொர்க்கை வீட்டில் இருந்து பாரு, ராகவன் என் கூட இருப்பாரு. ஹெட் ஹவுஸ் கீப்பர் இங்க இல்லை, அம்மாவோட செகரட்டரியும் இங்க இல்லை. இப்ப இருக்கற அசிஸ்டண்ட்ட சொல்லிடறேன். அவங்க உனக்கு ஒருத்தரை எப்போதும் கூட இருக்கற மாதிரி பார்த்துக்குவாங்க. கெட் வெல் சூன். ராகவன் ஹேமவள்ளி திங்சில் எதை கொரியர் செய்யனும் கேட்டு கொரியர் பண்ணிடுங்க. இப்ப அவங்க ரூமில் விட்ருங்க.” கூறிவிட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல தானியங்கி மின் தூக்கியில் ஏறினாள்.
ராகவன் மீண்டும் ஹேமவள்ளியைத் தூக்க அவள் விழிகளில் உறைந்து நின்ற கண்ணீர் கருப்புச் சட்டையில் படிந்தது. வெண்ணிற மூக்கும், கன்னமும் கண நேரத்தில் ரோஜா வண்ணத்தைப் பூசி சோகத்தைத் தாங்கியது. அவன் விரல்கள் அவளை அறியாமல் அவனுடைய சட்டைக் காலரை இறுகப் பிடிக்க ராகவன் முகம் இறுகியது.
அறைக்குள் நுழையும் போது, “ஹேமவள்ளி இப்ப எதுக்கு அழறீங்க?” என அவன் சாதரணமாகக் கேட்டதே, மிரட்டல் போல் தோன்ற மீண்டும் கண்ணீர் இப்போது நன்றாக வந்து விட்டது.
“ப்ச்ச். என்ன வேணும்?”
அவளைப் படுக்கையின் நடுவில் அமரவைக்கும் முன் ஒரு பணிப்பெண் ஹேமவள்ளியின் பொருட்களை அறையில் கொண்டு வந்து வைத்துவிட, ராகவன் அவரிடம் பெட்டி ஒன்றைக் கொண்டுவரும் படி கூறிவிட்டு அவரை அனுப்பி விட்டு, “எந்த திங்க்ஸ்னு சொல்லுங்க.” என்றவன் அந்தப் பெரிய நெகிழிப் பையைத் திறக்க முயல ஹேமா தன்னுடைய கையை வைத்து அவனைத் தடுத்தாள். அவளுக்குத் தேவையான சுகாதரத்திற்குத் தேவையானப் பொருட்களும் இருந்தன.
அவளை நிமிர்ந்து தன் கூரிய விழிகளால் ஏறிட்டான்.
ஹேமா ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்தப்படியே, “பர்சனல். நானே எடுத்து வைக்கிறேன்.’ என்றாள். உடனே ராகவன் திரும்பி நின்று கொண்டான்.
அவனுக்குப் பின்னால் பொருள்கள் நெகிழிப்பையில் உரசும் போது எழும் சர சரவென்ற சத்தம். மெத்தையில் தன்னுடைய பொருட்களை போர்வையின் அடியில் பதுக்கினாள். தன் தங்கைக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை மட்டும் மீண்டும் பையில் போட்டுக் கொடுத்தாள்.
பணிப்பெண் பெட்டியைக் கொடுத்துவிட, அதில் அந்தப் பொருட்களைப் போட்டுக் கொண்டவன், “நான் ஏற்கனவே எல்லாத்தையும் பார்த்துட்டேன்.” என போர்வையால் உருவான குட்டி மேட்டை விழிகளால் நோக்கியபடி கூறியவன் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அந்த கண நேர இயலாமை, விபத்தில் மாட்டிக் கொண்ட கோபம், ராகவனிடம் உதவி வாங்க வேண்டிய நேரத்தை நொந்து கொண்டவள் சட்டென்று உருவான கோபத்தில் கையில் தட்டுப்பட்ட பொருளை எடுத்து ராகவனை நோக்கி வீச, அவன் சட்டென்று கை நீட்டி அதைப் பிடித்தவன் அவள் அருகில் வந்தான். அதற்குள் இன்னொன்றையும் அவன் மேல் வீசக் கையில் எடுத்திருந்தாள்.
ஹேமவள்ளிக்கு இப்போது பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கொண்டது.
‘அய்யோ டெரர் பார்ட்டியை வேற சீண்டிட்டோமே? இப்ப என்ன செய்வானு தெரியலை.’ என்ற பயம் மனதில் ஒட்டிக் கொண்டது.
ஹேமவள்ளி கோபத்தில் நடுத்தர அளவில் உள்ள குச்சி மிட்டாயைத் தூக்கி வீசி இருக்க, அவன் கையின் அளவில் அது சிறிதாகத்தான் தெரிந்தது.
அவள் அருகில் வந்ததும் மேலும் பயம் அதிகரித்தது. ஹேமா இந்த வீட்டில் பயப்படுவது மித்ரா மற்றும் ராகவனுக்குத்தான்.
அவன் கையை ஓங்க, ஹேமா பயத்தில் விழிகளை மூட, அவள் கன்னத்தில் லேசாகத் தட்டினான் ராகவன்.
“தேங்க்ஸ் ஹேமவள்ளி. பட் சுகர் கமி பண்ணிக்கோ. கொஞ்சம் வெயிட் போட்டுட்ட. எனக்கு இந்தப் பிளேவர் பிடிக்காது. இதை எடுத்துக்கிறேன்.”
அவள் கையில் இருந்த மற்றொரு குச்சி மிட்டாயைப் பிடிங்கி விட்டு, தன் கையில் இருந்ததை வைத்து விட்டுச் செல்ல, ஹேமவள்ளிக்கு சகலமும் உறைந்து விட்டது. எப்போதும் அதிகம் பேசாதவன், தன்னிடம் இவ்வளவு வாக்கியங்கள் பேசி உள்ளான்.
அவள் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே ராகவன் அவளிடம் அதிகம் பேசியதில்லை. இயல்பிலேயே அதிகம் பேசாதவள் அவள் அருகில் எப்போதும் பாராமுகம் தான். ஹேமவள்ளிதான் அவன் மன நிலையைக் கணிக்க முயன்று அவனிடம் பேச முயற்சிப்பாள். அதற்கும் ஓரிரு வார்த்தையில் பதில்கள்தான். அவள் வந்த சில நாட்களிலேயே ராகவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என உணர்ந்து கொண்டிருந்தாள். அதற்குக் காரணமும் இருந்தது.
***
ராமசந்திரனும், மஹா ஜஸ்ராவும் மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், தந்தை கூறிய செய்தியில் அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி இன்றி தந்தை கேட்டதற்காக சம்மதித்திருந்தாள்.
“மஹாக்குட்டி என்னை மன்னிச்சுடும்மா. நம்ம குடும்பத்துக்காக இதை நீ செஞ்சாகனும். உன்னோட அண்ணி உனக்கு எவ்வளவு செஞ்சுருக்காங்க. நாம இதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது.”
“அப்பா அண்ணாகிட்ட கூட சொல்லாமல் எப்படி?”
“உன் அண்ணன் செஞ்ச சில விஷயங்களால் தான் இந்தப் பிரச்சினையே. உன்னை மாப்பிள்ளை நல்லாப் பார்த்துக்குவாரு. நீ விஜய் மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டால் உன் அண்ணன் எதுவும் செய்ய முடியாது. நம்ம குடும்பம் உடையாமல் இருக்கும்.”
“அப்பா நீங்க சொல்றதுக்கு ஒத்துக்கிறேன். ஆனால் உண்மையான அன்பைத் தவிர எதுவும் கல்யாண பந்தத்தைத் தொடர வைக்க முடியாது. அதை நீங்க தெரிஞ்சுக்கனும்.”
அந்த இருபத்தி ஐந்தைத் தொடும் பெண்ணின் சொல்லைக் கார் ஓட்டுநரின் கைப்பேசி வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் தனுர் விஜயப் பாண்டியன்.
அவளிடம் உறவினர் என்பதைத் தாண்டி எந்த அன்பும் அவனுக்கு இல்லை. அதைத் தாண்டி மஹா எப்போதும் அவனிடம் ஒரு அமைதியைக் கடைபிடிப்பாள். அதிகம் பேச்சு வார்த்தை அவர்களுக்குள் இல்லை.
மஹா ஜஸ்ராவை அவனும் அந்த ரீதியில் நினைத்துப் பார்த்ததில்லை. பெரிதாக அவளிடம் பேசியதும் இல்லை. ஏனோ முதல் முறை அவளைப் பார்த்த தருணம் சட்டென்று மனதில் வந்து போனது.
பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோயிலில் வெளியாட்கள் யாருமில்லை. காவல் ஆட்கள் மட்டும் இருந்தனர்.
மஹா பயப்படவெல்லாம் இல்லை. தைரியமாக இறங்கினாள்.
இராமசந்திரனுக்குத்தான் பயமாக இருந்தது. இருவரும் இறங்கிக் கோயிலுக்குள் செல்ல, ஒரு குட்டி வாண்டு ஒன்று அவள் காலைக் கட்டிக் கொண்டது.
“அத்தை.. அத்தை.. இன்னிக்கு நீங்க மாமாவை கல்யாணம் பண்ணிட்டு பர்மெணண்ட்டா மாமா வீட்டில் இருக்கப் போறீங்களாம். தனு மாமா சொன்னாங்க.” மழலைக் குரலில் ஒலித்த மகிழ்ச்சியில் உடனே மகா அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.
எம்.எஸ். செம்மொழி பாண்டியன். நான்கு வயதாகும் குழந்தை இந்த வருடம்தான் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். மாமன் தோளில் இருந்த நாட்கள் அதிகம் என்பதால் மாமனைப் போல் செயல் என அனைத்தும் வரும் அவளுக்கு. குணத்தில் தாய்மாமனின் ஜெராக்ஸ் காஃபிதான். மகா ஜஸ்ரா என்றாலும் கொள்ளைப் பிரியம்.”
நகை அழுந்தாத வண்ணம் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் செம்மொழி. குழந்தை கூறும் கதைகளைக் கேட்டப்படி வந்தவள் விழிகளில் திரும்பி நின்றபடி பட்டு வேட்டி பட்டு சட்டையில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனின் பரந்த தோள்கள்தான் பட்டது.
குழந்தையை இறக்கி விட அது தாய்மாமனைப் போய் கட்டிக் கொண்டது. அவனும் ஏதோ குழந்தையிடம் பேசி சிரித்தான். மஹாவுக்கு அவனைப் பார்த்ததும் கோபம் கனன்றது.
சில நிமிடங்களில் தமிழ் முறைப்படி சடங்குகள் ஆரம்பித்தது.
வீடியோ கிராபரும், போட்டோ கிராபரும் கூட இருந்தனர்.
மஹாவும் சிறிது நேரத்தில் அவன் பக்கத்தில் அமர வைக்கப்பட்டாள்.
“ஜஸ்ரா கோபமா?” அவள் அமர்ந்ததும் விஜய் அவளிடம் முனுமுனுத்தான்.
“கோபப்பட்டால் இந்தக் கல்யாணம் நின்னுடுமா?”
“வாய்ப்பில்லை.”
“அப்புறம் என்ன கேள்வி? என்னைக் கேட்டியா நீ?”
மரியாதை இல்லை அவனிடம்.
“இவ்வளவு பேசுவியா நீ?”
“அரசியல்வாதினா நீ மட்டும்தான் பேசனுமோ? நான் பேச மாட்டேனு நினைச்சியோ?”
“தைரியம்னு தெரியும். இவ்வளவு தைரியம்னு தெரியலை.”
“இப்ப தெரிஞ்சுருச்சுல்ல. அப்ப அமைதியாக வேலையைப் பாரு.”
தனுர் விஜயனின் வாய் கோணலாக அசைந்தது.
“எனக்கு உன் மேல் இன்ஸ்ட்ர்ஸ்ட் இல்லை ஜஸ்ரா. சூழ்நிலைதான்.”
“அப்படியா அக்கா மாமா ஒன்னு சேர்ந்தால் நாம டைவர்ஸ் பண்ணிடலாமா?”
கையில் தாலியை வாங்கிக் கொண்டான் விஜயன்.
“தலாக் இஸ் நான் ஏன் ஆப்சன் ஜஸ்ரா. என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுதான். அது இனி நீ மட்டும்தான். ஒன்வே. திரும்பிப் போக வாய்ப்பில்லை.” கூறிவிட்டு அவள் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான்.
“உனக்கு மஹர் கொடுக்கலை. உனக்கு என்ன வேணுமோ கேளு. அதை வாங்கித் தரேன்.”
தன் மனைவி பாதி இந்துப் பெண், பாதி இஸ்ஸாமியப் பெண். இரண்டு மதங்களையும் அவள் பின் பற்றுவதால் அவளிடம் கேட்டிருந்தாள் மஹா ஜஸ்ரா. அவளுடைய பெயர் கூட இந்து அல்ல.
“உங்கிட்ட இருந்து விடுதலைதான் வேணும். அதுக்கு வாய்ப்பில்லை. அதனால் எனக்கு வேணுங்கப்பறப்ப கேட்கிறேன்.” என அவன் விரல் பிடித்து அக்னியை வலம் வர ஆரம்பித்தாள் மகா ஜஸ்ரா.