நவிலனின் கோதையானாள்
பூவு தினமும் சொல்லுற மாதிரி இன்னைக்கும் பேசுவேன் ன்னு நினைச்சுட்டு இருக்காத இன்னைக்கு மட்டும் சொல்லுறதை கேட்கல அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்..
ஏன் இதுக்கு முன்ன நீ மனுசியா இருந்தியா என்ன என்ற குரலில் கடுப்புடன் திரும்பிய அம்சவேணி , உங்களுக்கு அவளை எதுவும் சொல்லிட கூடாது அது எங்க இருந்து தான் உங்க மூக்கு வேர்க்குமோ…
கார்த்திகேயன், “ஏன் அம்சா பிள்ளையை திட்டிட்டே இருக்க அவளுக்கு நேரம் தர வேண்டாமா?
என்னங்க நேரம் தரனும் இரண்டு வருஷமா சொல்லிட்டு தானே இருக்கோம் இவளை விட சின்னது எல்லாம பேச்சை கேட்குது இவளுக்கு என்ன?
இங்க பாரு மா எல்லாரையும் என்னோட கம்பேர் பண்ணாதன்னு சொல்லி இருக்கேன்.
போதும் டி ஃபேர் பண்ணுறாங்க ஒழுங்கா இருந்துக்க ..
இப்ப என் ஒழுக்கத்துக்கு என்ன குறை..
குறை எல்லாம் இல்ல எல்லாம் அதிகப்படியா தான் இருக்கு..
இருவரும் மாறி மாறி பேச்சை வளர்க்க..
அம்மு என்றார் கார்த்திகேயன்..
அப்பா…
என்ன பிரச்சினை என்று அவள் முகம் பார்க்க..
சொல்லமுடியாமல் தவித்தாள் பூம்பனி..
மனைவியை நிமிர்ந்து பார்த்தவர் கை நீட்டி மகளை அழைக்க எழுந்து வந்தவளை தோளோடு அணைத்து கொண்டு வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்து செல்ல
இங்கே வீட்டின் வாயிலில் தன் புடவை முந்தானையை முகத்தில் வைத்தபடி கண்கலங்கி இருந்தார் அம்சா..
என்ன ஏதுன்னு தெரியாமலே மகள் ஒவ்வொரு முறையும் தள்ளி தள்ளி போட இதோ அதோவென இரண்டு வருட காத்திருப்பு அம்சாவை பயம் கொள்ள செய்து விட்டு இருந்தது..
இங்க பாருங்க இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை இதுவே கடைசி இந்த வருஷம் என்ன ஆனாலும் சரி காட்டுற மாப்பிள்ளை பிடிக்குதா இல்லையான்னு பேசனும் இல்லன்னா நான் காட்டுற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு வாழ பார்க்கனும் இது தான் என் முடிவு என்று நான்கு மாதத்திற்கு முன் அம்சா அழுது புலம்பி பட்டினி இருந்து இதோ இன்று பெண் பார்க்க வருகின்றனர்..
ஆனால் பூம்பனி அப்படி ஒரு நிகழ்வு தனக்கு தான் என்பதை மறந்து அவள் பாட்டிற்கு அடுத்த நாள் பிள்ளைகளுக்கு எடுக்க வேண்டிய பாடங்களை தயார் செய்து கொண்டு இருக்க அதில் தான் வெகுண்டு எழுந்து கத்தி கொண்டு இருக்கிறார்..…
கார்த்திகேயன், “ஏன் அம்மு என்ன பிரச்சினை ன்னு இதுவரை நாங்க உன்னையே நேர்ல கேட்டாலும் நீ பதில் தந்தது இல்ல ஆனா உன்னையே நாங்க எங்கேயும் விட்டு தந்தது இல்ல என்ன ஏதுன்னு எங்க கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு எதுவும் விஷயமா” ?
அதெல்லாம் ஒன்னு இல்லப்பா அது ஏதோ எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்ல..
அதுக்கு ஏதாவது காரணம் இருக்கனும் இல்லடா..
அது தான் இல்லப்பா ஆனா பிடிக்கல..
ம்ம்ம என்று அவர் அமைதியாகி விட
என்னப்பா என் மேல் கோவமா?
இல்ல அம்மு உன் மேல என்ன கோவம் எங்களை நினைச்சு தான் எங்களுக்கு கோவமா வருது நாங்க தான் நீ இந்த முடிவுக்கு காரணமோ?
அப்பா என்று பூம்பனி அதிர..
நான் சொன்னது தான் உண்மையா அம்மு..
நிஜமா இல்லப்பா யூ போத் மேட் ஃபார் ஈச் அதர்..
ஹாஹாஹா அப்படியா.
பின்ன இல்லையா…
அதை நான் சொல்ல முடியாது அதுக்கு முழு உரிமையும் உன் அம்மாக்கு தான் நான் தருவேன்..
என்ன அப்படியே அம்சா மேல் அம்சமா லவ்ஸ் பொங்குது..
மெல்லிய புன்னகையை சிந்தியவர் உண்மை தானே அம்மு அவ தான் என் வாழ்க்கையோட ஆணி வேர் அவ இல்லன்னா இப்படி ஒரு மனுசனே இல்ல என்னோட குழந்தை பருவம் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை வேற அப்ப எதுவுமே என் பொறுப்போ கடமையோ இல்ல ஆனா நாலு பேர் எங்களை பத்தி பேச ஆரம்பிக்கிறதே திருமணத்திற்கு அப்புறம் தானே அந்த வாழ்க்கை எப்படி இருக்குன்னு சொல்ல வேண்டியது உன் அம்மா தான் வேற யாருமே சொல்ல முடியாது சொன்னாலும் அது நிறைவா இருக்குமான்னு கேட்டா எனக்கு தெரியாது..
அப்பா..
ஆமா டா அப்படி என் பொண்ணை ஒருத்தர் சொல்லனும் ன்னு நாங்க ஆசைப்படுறது தப்பா…
அது வந்து…
எதா இருந்தாலும் மனசு விட்டு பேசு அம்மு…
தெரியலையே ப்பா பிடிக்கலன்னு மட்டும் தான்.
அப்ப உன்னையே ஒரு குடும்பமாக நாங்க பார்க்க முடியாதா?
இல்லப்பா நான் கல்யாணம் பண்ணிக்குறேன் என்று முதன்முறை அவள் வாய் திறக்க
நிஜமாவா அம்மு…
உண்மையா தான் சொல்லுறேன் ப்பா உங்களுக்கு பிடிச்சு இருந்தா எல்லாம் சரியா இருந்தா பண்ணிக்கிறேன் என்றவள் அமைதியாகி விட..
உனக்கு பிடிச்சா தான் கல்யாணம் என்று அங்கு வந்தார் அம்சா..
பூம்பனி, “அப்படியா அப்ப நான் சொல்லாம நீ இதை புரொசீட் பண்ண மாட்ட அப்படித்தானே மம்மி..
பூவு…
நீ தான் மம்மி இப்ப சொன்ன
அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் இப்ப வந்து கிளம்பு பூவு நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க என்று முடிக்கவும் பூவு இறுக்கமாக அவளை மாற்றி கொண்டவள் யாரு வரா…
கார்த்திகேயன் அம்சாவை முறைக்க..
ஏன் முறைக்குறீங்க இப்பவும் சொல்லாம கடைசி நேரத்தில் அவளை யாரும் சங்கடப் படுத்தி பார்த்துட்டா அதான் இப்பவே சொல்லுறேன் அதுக்கு ஏத்த மாதிரி அவள் இருந்துப்பா சும்மா சும்மா என்னை முறைச்சிட்டு, வா பூவு ரெடி ஆகு அவங்க வர இன்னும் ஒருமணிநேரம் இருக்கு அதுக்குள்ள கிளம்பிடு என்றவர் அவள் கைபிடிக்க…
வரேன் என்றவள் எழுந்து வேகமாக அறைக்குள் சென்றுவிட
கார்த்திகேயன், “ஏன் மா”…
பின்ன எல்லாரும் இருக்கும் போது என் மகளை அவங்க பேசாமலா போய்டுவாங்க
அதுக்கு நீயே அவளை சொல்லிகாட்டுறியா?
என்னங்க இப்படி சொல்லுறீங்க?
வேற எப்படி அம்சா சொல்லனும் யார் என்ன பேசினாலும் அங்க திருப்பி பேசவேண்டிய நீயே அவளுக்கு எச்சரிக்கை பண்ணி அனுப்பி இருக்க அது புரியுதா இல்லையா?
எச்சரிக்கை பண்ணுறது தப்புன்னு சொல்லுறீங்களா?
ப்ச் அம்சா அவ இப்ப இருந்தே எதையோ தொலைஞ்சு மாதிரியும் அவ தான் தப்பு அப்படிங்குற மாதிரி தானே இருந்துப்பா அப்ப வரவங்க என்ன நினைப்பாங்க…
என்னங்க..
என்னம்மா நான் சொல்லுறது சரி தானே நீ இப்ப என்ன பண்ணி இருக்க வரவங்க உன்னையே குறை சொல்லுற மாதிரி இருந்திடக்கூடாதுன்னு அவ நிஜசத்தை மறைக்க வச்சுட்டு இனி அவ அவளாவே இருக்க மாட்ட சந்தோஷமா..
நான் அப்படி நினைச்சு..
நீ நினைக்கல ஆனா மத்தவங்க நினைப்பாங்க அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோன்னு சொல்லாம சொல்லிட்ட என்றவர் எழுந்து உள்ளே செல்ல
இதயம் துடிக்க மறந்து துடித்து கொண்டு இருந்தார் அம்சா…அச்சோ அப்ப நானே என் பொண்ணை என்று கலங்க ஆரம்பிக்க, வாசலில் ஹாரன் சத்தம் கேட்டு கலைந்தவர் ஒரு பெருமூச்சுடன் வந்தவர்களை வாங்க அண்ணி அண்ணா என்று வரவேற்க கூடவே அவர்களின் பிள்ளைகளும் இருந்தனர்..எல்லோரையும் அழைத்து கொண்டு உள்ளே செல்ல வா அக்கா வாங்க மாமா என்ற கார்த்திகேயன், அம்மு அத்த வந்து இருக்காங்க என்று உடனே குரல் கொடுத்தார்..
பின்ன வந்ததும் சொல்லலன்னு அதுக்கு ஒரு பாட்டு பாடுவாளே கூடப் பிறந்தவ,கார்த்தி அழைத்ததும் ..ஏன் உன் பொண்ணுக்கு நாங்க வரோம் ன்னு சொல்லலையா அந்த அளவுக்கா இருக்கு இங்க மரியாதை என்று ஆரம்பிக்க…
புடவை சகிதமாக வந்த பூம்பனி வாங்க அத்த வாங்க மாமா வாங்க என்று மற்ற இருவரை பார்க்க…
ஏன் அத்தான் ன்னு சொன்னா குறைச்சு போய்டுவியா..
அப்படி இல்ல அத்தை நீங்க தானே அத்தான் ன்னு நீ உறவு கொண்டாடதன்னு சொன்னீங்க அதான் எப்படி சொல்லுறது ன்னு என்று அவள் துடுக்கை காட்ட…
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டதுன்னு சும்மாவா சொன்னாங்க இந்த வாய்க்கு தான் இப்படி இருக்க அப்ப கூட திமிரு குறையல பார்த்தியா…
அக்கா..
என்னடா அக்கா வந்தவர்களை நக்கல் பண்ணுறது தான் உன் பொண்ணுக்கு பழக்கமோ..
ராணி…
இருங்க நான் என் தம்பி கிட்ட பேசிட்டு இருக்கேன்…
சாம்பசிவத்திற்கு சலிப்பாக இருக்க.. வேணிம்மா..
அண்ணா…
அவ இனி என்ன சொன்னாலும் கேட்கமாட்டா நீ எனக்கு இஞ்சி தட்டி டீ தாடா நான் மச்சான் ஸ்டடி ரூம் ல இருக்கேன்… அத்த எனக்கும் என்று விக்னேஷ் எழுந்து விட..
வினிதா மட்டும் ராணியுடன் அமர்ந்து கொண்டு பூம்பனியை தான் பார்த்து கொண்டு இருந்தாள்..
அவள் பார்வை வெகுநேரமாய் பூம்பனியை விட்டு அகலாமல் இருக்க அதில் எரிச்சலடைந்தவள் என்ன வினி காலேஜ் எப்படி இருக்கு?
வினிதா, “நீ இல்ல தானே சூப்பரா இருக்கு”
நல்ல விஷயம் தான் என்று பூம்பனி சிரிக்க..
கார்த்திகேயன், “அம்மு நீ போய் தயாராகு டா..
இதுக்கு மேல என்னப்பா..
இல்ல அம்மு அப்பா பூ வாங்கிட்டு வந்தேன் அதை வச்சுக்க அப்புறம் மாப்ள வீடு கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க நீ ரூம்க்கு போ..
சரிப்பா என்றவள் உள்ளே சென்ற அடுத்த நொடி..,எல்லாத்தையும் சொல்லிட்டியா கார்த்தி…
என்னக்கா…
என்ன கார்த்தி ஏற்கனவே நடந்த அவமானம் எல்லாம் பத்தாதா நீ இப்பவும் எதுவும் தெரியாத மாதிரி பேசுற..
அக்கா…
பின்ன என்னடா நாங்க வேற வந்து இருக்கோம் உனக்கே தெரியும் மாமா க்கு சின்ன அவமானம் ஏற்பட்டாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றவர் ஏய் அம்சா எனக்கும் டீயை எடுத்துட்டு வா என்றவர் டீவியை ஓட விட்டு அமர்ந்து விட
கார்த்திகேயன் சோர்ந்து போய் விட்டார்… சொந்த அத்தை இவளே இப்படி இருக்கும் போது வரவங்க மட்டும் என்ன விதிவிலக்கா…
யார் வரப்போறா இவங்க வேற வந்து இருக்காங்க இன்னைக்கு என்னென்ன பூகம்பம் வெடிக்க போகுதோ போதாதுக்கு வினி வேற வந்து இருக்கா அவளை வச்சு வேற இறக்க போறாங்க சரி விடு பனி இதெல்லாம் அரசியல் ல சகஜம் என்று அவள் சோசியல் மீடியாக்குள் நுழைந்து கொள்ள.
இங்க பாருடா போட்டோவ பார்த்து இந்த பொண்ணு தான் வேணும் ன்னு அடம்பிடிச்சன்னு வந்து இருக்கோம் அங்க போய் நீ எதுவும் பேசக்கூடாது என்று கவிதா பேச..
அக்கா நான் எதுவும் பேசல ஆனா நீ தேவையில்லாத விஷயம் பேசாம இருந்தா போதும்..
என்னம்மா இப்படி சொல்லுறான் நம்ம தகுதி என்ன இவன் இந்த சம்பந்தம் தான் வேணும் ன்னு அடமா இருந்ததால் தானே வரோம் எனக்கு என்னம்மோ சந்தேகமா இருக்கு பொண்ணை முன்னவே தெரியுமா?
அவனின் தாயோ தைரியமா இரு, தைரியமா இரு எதையும் முகத்துல காட்டாத இருக்க பிரச்சினையில் இவ வாயில விழுந்தா அங்க மொத்தமா முடிஞ்சிடும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக இருக்க..
என்னம்மா நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன யோசனையில் இருக்க?
ஒன்னு இல்ல கவிதா காலைல எழுந்தது கொஞ்சம் சோர்வாக இருக்கு.
அதுசரி அப்புறம் எதுக்கு நீ வந்த நான் பார்த்துட்டு வந்து சொல்ல மாட்டேனா என்று கவிதா சொன்னதும் பகீர் என்று இருந்தது மங்கைக்கு…
ஏன் அக்கா அம்மா பார்த்து தான் எனக்கு முடிக்கனும் அதுல யாருக்கும் உரிமை இல்லை என்றவனை பார்த்து முறைத்தவள் அப்ப நான் தேவையில்லை
அப்படி நான் சொல்லலையே..
அப்ப இப்ப சொன்னதுக்கு என்ன அர்த்தம்
ஒரு அர்த்தமும் இல்ல
ஓஓஓ என்றவளின் மனதில் ஆயிரம் யோசனைகள் அவள் முகபாவைனையே வைத்தே கதி கலங்கி இருந்தார் மங்கை..
போச்சு போச்சு என்ன பண்ண காத்து இருக்காளோ என்று மனதில் புலம்ப இதை எப்படி நிறுத்தலாம் என்று இங்கே ஒரு மனம் யோசிக்க அந்த பயணம் அழகாய் பூம்பனி இல்லத்தில் வந்து முடிந்தது…
தொடரும்