[
தொடர்_1
***********


நான் நீ நடுவில் பேய்


************************""""""**********"
" ஏன்டி எத்தனை மணி நேரமா கத்துவேன்
நாலு இட்லி அவிக்க நாலு மணி நேரமா ?"
"உன்கிட்ட சாப்பிடுறதுக்கு பேசாம பட்டினி கிடக்கலாம்" என்று எரிச்சலோடு எழுந்தவனுக்கு ஆவிபறக்க இட்லியைக் கொண்டு வைத்துவிட்டு
"சாரிங்க சட்னி வைக்க லேட் ஆகிடுச்சு உட்காருங்க ப்ளீஸ் குட்டி எனக் கொஞ்சினாள் மது."
"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை ,இப்படித்தானே டி நீங்க ஐஸ் வச்சு சமாதானப்படுத்துறீங்க"
"சரி சரி தண்ணி எடுத்துட்டு வா" தொண்டைக்குள்ள சிக்கிக்கிடப் போவுது உன் இட்லி என்று அந்த கோபத்திலும் கிண்டலடிக்க...
"பசில இருக்கீங்கனு அவசரம் அவசரமாக செஞ்சு கொண்டுவந்தா
சில்மிஷம் பண்றீங்க விடுங்க"..என்று விலகிப்போக..
"ஏய் ஏய் சும்மா தான்டி சொன்னேன் ஹனி தங்கம் வைரம் புஜ்ஜி" என்று கொஞ்சியபடியே பின்னாலே ஓடி கதவில் முட்டிக் கீழே விழுந்தான் பாபு.
விழுந்தவனைத் தூக்கியபடி என்ன "இன்னும் வயசுப்புள்ளையினு நினைப்போ இப்படி கதவு இருக்கிறது தெரியாமல் ஓடி வந்து விழுந்து கிடக்கீங்க? "என்று கேட்டாள் மது.
"நீ நின்னுருந்தா நான் ஏன்டி தொரத்திட்டு வந்து இப்படி விழப்போறேன்."
"எங்க நின்னுருந்தா?"
"சரி இட்லி அவிக்க மாவு வாங்கிட்டு வரச்சொல்லி மாடா கத்திட்டு இருக்கேன்"
"அப்படி என்னதான் பண்ணுறீங்களோனு பார்க்க வந்தால் இப்படி கிடக்கீங்க ""
"என்ன விளையாடுறியா ?"
"ஆமா இவருக்கிட்ட விளையாடுறாங்க
வேலைக்குப் போயிட்டு வந்து பத்து நிமிசம் ரெஸ்ட் எடுக்க முடியுதா இந்த வீட்டில்..?""
"சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க சொன்னாலும் உடம்பு கெட்டுப்போகும் அதுயிது ஏதாவது சொல்லிச் சமைக்கவச்சு சாப்பிடுறதுல என்னதான் இருக்கோ?"
"நானும் மனுசிதானே "என்று அங்கலாய்க்க...
"என்னடி சொல்ற இப்பத்தான் சுடச்சுட இட்லி அவிச்சு கொண்டு வந்து தந்த ,
இப்போ இட்லி அவிக்க மாவு கேட்டேனே எங்கனு கேட்கிற?"
"இங்க பாருங்க நானே கொலைப்பசியில இருக்கேன் இதுல நான் இட்லி அவிச்சு உங்களுக்கு தந்தனா ?நல்ல காமெடி போங்க கொஞ்ச நேரத்தில் கடையை அடைச்சிடப் போறான் கடைகாரன்"
"சீக்கிரம் போங்க" என்று துணிப்பையையும் காசையும் கையில் திணிக்க....
ஒன்றும் புரியாமல் டைனிங் டேபிளைத் திரும்பிப் பார்த்தான் பாபு.
அங்கே கழுவித்துடைத்தது போல இருந்தது."அப்படியானால் யார் வந்தது, நான் ஏன் இங்கு வந்து விழுந்தேன், மது ஏன் என்னைத் திட்டுகிறாள்?"
"ஒருவேளை மது நடிக்கிறாளோ?" "இருக்க வாய்ப்பில்லை அவளிடம் எந்த மாதிரியான மாற்றமும் இல்லை அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் "என்று யோசித்துக்கொண்டு இருக்க..
"என்னங்க உங்களைத்தான் என்ன யோசனை ?"
"ஒன்னுமில்லை மது " என்றபடி
தன்னைத்தான் கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.
நடப்பது எல்லாம் உண்மைதான் ஆனால் இட்லியும் சட்னியும் எப்படி இல்லாமல் இருக்கும்.
"இதற்குமேல் நின்றால் என்ன சொல்வாளோ" என்று நினைத்தபடி
பையும் காசுமாய் வெளிக்கேட்டைத்திறந்து மூடு கையில் அதே டேபிளில் மது இட்லி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
"தனக்கு இட்லியைத் தந்தவள் இல்லையென்கிறாள்,மீண்டும் என்னை அனுப்பிவிட்டுத் தின்று கொண்டு இருக்கிறாள் ஒன்றுமே புரியவில்லையே "
"பேசாமல் உள்ளேபோய் ஓங்கி அறைவிட்டால் என்ன என்று நினைத்துக்கொண்டு நிற்கும்போதே உள்ளே இருந்து "அம்....மா "என்ற சத்தம்கேட்க உள்ளே ஓடினான்.
மது கீழே விழுந்து கிடக்க அப்படியே மலைத்துப்போய் நின்றான்
"என்னங்க உங்களைத்தான் கையைக் கொடுங்க, நானே விழுந்து கிடக்கேன் நீங்க என்னடான்னா எதையோ பார்த்துக்கொண்டு இருக்கீங்க? "என்று சொன்னது கூடக் கேட்காமல் நின்றவனை அவளே எழுந்து வந்து தலையிலேயே குட்டினாள்.
"ஆ...ஆஆ.."
"இப்போ எதுக்குடி அடிச்ச?"
"பின்ன கொஞ்சுவாங்களோ
கீழ விழுந்த என்னைத் தூக்காமல் அப்படியே சிலை மாதிரி நிக்கிறீங்க ?"
"அது...அது...வந்து..."
"எது..வந்து..."
"கொஞ்சநாளா நானும் பார்க்கிறேன்
ஆளே சரியில்லை
ஏதும் செட்டப் பண்ணிட்டீங்களா?"
"எப்போடா ஒழிவானு இருக்கோ?"
"ஏன்டி இப்படி பேசுற?"
"நீ என் உயிர் டி..."
"நல்லா சொல்லிடப்போறேன் போங்க அங்கிட்டு...உயிராம்ல .....உயிர்....ம.....ரா கூட நினைக்கலனு தெரியுது...."
"ஐயோ ஹனி நீ இல்லாம இருக்கவே முடியாது தெரியுமா?"
"இந்த சோப் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் "
"அதான் பார்த்தேனே பக்கத்துவீட்டுக்கு அந்த கேரளாக்கரி வந்ததுல இருந்து குட்டிபோட்ட பூனையாட்டாம் சுத்திச்சுத்தி வந்ததை.."
"ஏன்டி இப்போ அதெல்லாம் கிளப்புற?
அதான் அவளே போயிட்டாளே..."
"ஓ சாருக்கு அவ போனதுதான் கஷ்டமா இருக்கோ?"
"அதான் அதுக்குப்பதிலா ஒரு ஹிந்திக்காரி வந்துருக்காளே.."
"நீ வேற அவளுக்கு தமிழ் தெரியல எனக்கு ஹிந்தி தெரியல பின்ன எங்க?"
"என்னது விட்டா அவகூடவே போயிடுவீங்க போல...
இந்த ஆம்பளைங்களே இப்படித்தானா ?"
தன் வாயாலேயே தானே மாட்டிக்கொண்டோமே என்று நினைத்தவன்
" ஹனி நீ ரெஸ்ட் எடு நான் சாப்பாடே வாங்கிட்டு வந்துடுறேன் "
"நீ பாவம் கீழ வேற விழுந்துட்ட .."
"ஓ நான் பாவமா இல்லை நீங்க பாவமா ?"
"நீதான் டி கண்ணு "
"நல்லா சமாளிக்கிறீங்க மிஸ்டர் பாபு."
"எங்க மாவு வாங்கிட்டு வந்தா நம்மளையே செய்ய சொல்லிடுவாளோனு பயம் சாருக்கு..."
"ஹி..ஹி.."
"ரொம்ப இளிக்காதீங்க பல்லுத்தெரியுது மூடிட்டு போங்க..."
"என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட.."
"நான் சொன்னது வாயை..."
"க்கூம்."..இனி பேசினா மானம் விமானம் ஏறிடுமென்று உணர்ந்தவன் "அது சரி அப்போ அந்த இட்லி.."என்று யோசித்தான்.
"சீக்கிரம் போங்க பசிக்குது " என்று துரத்தினாள் மது.
அவன் அவளையே பார்த்துக் கொண்டு போனான்
*****
மதுவின் ஃபோன் அடித்தது
எடுத்து "ஹலோ" என்றாள்
"அம்மாடி நான்தான்மா பேசுறேன்
எப்படி இருக்க, மாப்ள எப்படி இருக்காரு?"
"நல்லா இருக்கோம் மா" "அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு"
"ஏன்டி மாப்ளைக்கும் உனக்கும் ஏதும் சண்டையா ?"
"இல்லையே ஏன்?"
"சும்மாதான் கேட்டேன் "
"நீ சும்மா கேட்க மாட்டியே அந்த மனுசன் ஏதாவது சொன்னாரா ?"
"இல்லைடி நானாத்தான் கேட்டேன் நல்லாத்தான் இருக்காருனு இழுத்தியே அதான் "
"அவரு எப்ப மா சண்டை போட்டுருக்காரு, நான் போடாம இருந்தா போதாதா ?"
"பாவம் டி அந்த மனுசன், ஏன் நீ அப்படி பண்ற?"
"உனக்குப் புரியாது புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கனும் இல்ல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்."
"எப்படியோ போ ஆனால் ஓவரா கன்ட்ரோல் பண்ணாதே பின்ன பிரச்சினை ஆகிடப்போவுது "
"சரி சரி இப்போ எதுக்கு ஃபோன் பண்ணின?"
"ஒன்னுமில்லை "
"சரி வைக்கட்டுமா?"
"என்கிட்டயேவா டி ,நான் உன்னை பெத்தவ அதை மனசுல வச்சிட்டுப்பேசு ..."
"பின்ன எப்பப் பாரு அவருக்கே சப்போர்ட் பண்ணுற?"
"உனக்காகத்தான் பேசுறேன் நீ புரிஞ்சிக்க மாட்ற,சரி விடு
நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் "
"நம்ம வனிதாவைப் பொண்ணு கேட்டு வர ஞாயிறு வர்றாங்க
நீயும் மாப்பிள்ளையும் கண்டிப்பா வந்துடுங்க."
"உன் தம்பி சுரேஷ் வேறு ஏதோ ட்ரெயினிங்குனு பெங்களூர் போயிட்டான் வர ஒரு வாரம் ஆகுமாம் .
என்னடி அமைதியா இருக்க சொல்றது கேட்குதா ?"
"கேட்குது ,கேட்குது வர்றோம் மா ,அந்த மனுசன் கிட்டயும் நீ ஒரு வார்த்தை சொல்லிடு அப்புறம் கோவிச்சுக்கப் போறாரு..."
"அட பார்ரா இப்போ புருசனுக்கு சப்போர்ட்ட"
"என்ன இருந்தாலும் அவர் என் புருசன்
நான் என்ன வேணா சொல்லுவேன்
மத்தவங்க அவரை மதிக்கணும்"
"நாங்கல்லாம் டூ.கே கிட்ஸ் வீட்டுக்குள்ள போட்டு மிதிப்போம் வெளியில் வந்தா சாமியா மதிப்போம்"
"ஏன் அப்படி முழிக்குற? இதைப்படிக்கிற பாதிப் பொண்ணுங்க என்ன மாதிரிதான் வேணும்னா கேட்டுப்பாரேன்" என்றதும்
"நீ எப்படிடி என் வயித்துல வந்து பொறந்த இப்படி வாயடிக்கிற?"
"உன் புருஷன் கிட்ட கேளு ,போமா போய் வேலையைப்பாரு ,மறந்துறாம அவர்கிட்ட சொல்லிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிச்சனில் ஏதோ கீழே உடைந்தது போல பலத்த சத்தம் கேட்க...
"இந்த பூனைக்கு இதே வேலையாய் போச்சு சரிமா வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
தொடரும்....
எழுத்தாளர் நாகா
தொடர்_1
***********






************************""""""**********"
" ஏன்டி எத்தனை மணி நேரமா கத்துவேன்
நாலு இட்லி அவிக்க நாலு மணி நேரமா ?"
"உன்கிட்ட சாப்பிடுறதுக்கு பேசாம பட்டினி கிடக்கலாம்" என்று எரிச்சலோடு எழுந்தவனுக்கு ஆவிபறக்க இட்லியைக் கொண்டு வைத்துவிட்டு
"சாரிங்க சட்னி வைக்க லேட் ஆகிடுச்சு உட்காருங்க ப்ளீஸ் குட்டி எனக் கொஞ்சினாள் மது."
"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை ,இப்படித்தானே டி நீங்க ஐஸ் வச்சு சமாதானப்படுத்துறீங்க"
"சரி சரி தண்ணி எடுத்துட்டு வா" தொண்டைக்குள்ள சிக்கிக்கிடப் போவுது உன் இட்லி என்று அந்த கோபத்திலும் கிண்டலடிக்க...
"பசில இருக்கீங்கனு அவசரம் அவசரமாக செஞ்சு கொண்டுவந்தா
சில்மிஷம் பண்றீங்க விடுங்க"..என்று விலகிப்போக..
"ஏய் ஏய் சும்மா தான்டி சொன்னேன் ஹனி தங்கம் வைரம் புஜ்ஜி" என்று கொஞ்சியபடியே பின்னாலே ஓடி கதவில் முட்டிக் கீழே விழுந்தான் பாபு.
விழுந்தவனைத் தூக்கியபடி என்ன "இன்னும் வயசுப்புள்ளையினு நினைப்போ இப்படி கதவு இருக்கிறது தெரியாமல் ஓடி வந்து விழுந்து கிடக்கீங்க? "என்று கேட்டாள் மது.
"நீ நின்னுருந்தா நான் ஏன்டி தொரத்திட்டு வந்து இப்படி விழப்போறேன்."
"எங்க நின்னுருந்தா?"
"சரி இட்லி அவிக்க மாவு வாங்கிட்டு வரச்சொல்லி மாடா கத்திட்டு இருக்கேன்"
"அப்படி என்னதான் பண்ணுறீங்களோனு பார்க்க வந்தால் இப்படி கிடக்கீங்க ""
"என்ன விளையாடுறியா ?"
"ஆமா இவருக்கிட்ட விளையாடுறாங்க
வேலைக்குப் போயிட்டு வந்து பத்து நிமிசம் ரெஸ்ட் எடுக்க முடியுதா இந்த வீட்டில்..?""
"சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க சொன்னாலும் உடம்பு கெட்டுப்போகும் அதுயிது ஏதாவது சொல்லிச் சமைக்கவச்சு சாப்பிடுறதுல என்னதான் இருக்கோ?"
"நானும் மனுசிதானே "என்று அங்கலாய்க்க...
"என்னடி சொல்ற இப்பத்தான் சுடச்சுட இட்லி அவிச்சு கொண்டு வந்து தந்த ,
இப்போ இட்லி அவிக்க மாவு கேட்டேனே எங்கனு கேட்கிற?"
"இங்க பாருங்க நானே கொலைப்பசியில இருக்கேன் இதுல நான் இட்லி அவிச்சு உங்களுக்கு தந்தனா ?நல்ல காமெடி போங்க கொஞ்ச நேரத்தில் கடையை அடைச்சிடப் போறான் கடைகாரன்"
"சீக்கிரம் போங்க" என்று துணிப்பையையும் காசையும் கையில் திணிக்க....
ஒன்றும் புரியாமல் டைனிங் டேபிளைத் திரும்பிப் பார்த்தான் பாபு.
அங்கே கழுவித்துடைத்தது போல இருந்தது."அப்படியானால் யார் வந்தது, நான் ஏன் இங்கு வந்து விழுந்தேன், மது ஏன் என்னைத் திட்டுகிறாள்?"
"ஒருவேளை மது நடிக்கிறாளோ?" "இருக்க வாய்ப்பில்லை அவளிடம் எந்த மாதிரியான மாற்றமும் இல்லை அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் "என்று யோசித்துக்கொண்டு இருக்க..
"என்னங்க உங்களைத்தான் என்ன யோசனை ?"
"ஒன்னுமில்லை மது " என்றபடி
தன்னைத்தான் கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.
நடப்பது எல்லாம் உண்மைதான் ஆனால் இட்லியும் சட்னியும் எப்படி இல்லாமல் இருக்கும்.
"இதற்குமேல் நின்றால் என்ன சொல்வாளோ" என்று நினைத்தபடி
பையும் காசுமாய் வெளிக்கேட்டைத்திறந்து மூடு கையில் அதே டேபிளில் மது இட்லி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
"தனக்கு இட்லியைத் தந்தவள் இல்லையென்கிறாள்,மீண்டும் என்னை அனுப்பிவிட்டுத் தின்று கொண்டு இருக்கிறாள் ஒன்றுமே புரியவில்லையே "
"பேசாமல் உள்ளேபோய் ஓங்கி அறைவிட்டால் என்ன என்று நினைத்துக்கொண்டு நிற்கும்போதே உள்ளே இருந்து "அம்....மா "என்ற சத்தம்கேட்க உள்ளே ஓடினான்.
மது கீழே விழுந்து கிடக்க அப்படியே மலைத்துப்போய் நின்றான்
"என்னங்க உங்களைத்தான் கையைக் கொடுங்க, நானே விழுந்து கிடக்கேன் நீங்க என்னடான்னா எதையோ பார்த்துக்கொண்டு இருக்கீங்க? "என்று சொன்னது கூடக் கேட்காமல் நின்றவனை அவளே எழுந்து வந்து தலையிலேயே குட்டினாள்.
"ஆ...ஆஆ.."
"இப்போ எதுக்குடி அடிச்ச?"
"பின்ன கொஞ்சுவாங்களோ
கீழ விழுந்த என்னைத் தூக்காமல் அப்படியே சிலை மாதிரி நிக்கிறீங்க ?"
"அது...அது...வந்து..."
"எது..வந்து..."
"கொஞ்சநாளா நானும் பார்க்கிறேன்
ஆளே சரியில்லை
ஏதும் செட்டப் பண்ணிட்டீங்களா?"
"எப்போடா ஒழிவானு இருக்கோ?"
"ஏன்டி இப்படி பேசுற?"
"நீ என் உயிர் டி..."
"நல்லா சொல்லிடப்போறேன் போங்க அங்கிட்டு...உயிராம்ல .....உயிர்....ம.....ரா கூட நினைக்கலனு தெரியுது...."
"ஐயோ ஹனி நீ இல்லாம இருக்கவே முடியாது தெரியுமா?"
"இந்த சோப் போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் "
"அதான் பார்த்தேனே பக்கத்துவீட்டுக்கு அந்த கேரளாக்கரி வந்ததுல இருந்து குட்டிபோட்ட பூனையாட்டாம் சுத்திச்சுத்தி வந்ததை.."
"ஏன்டி இப்போ அதெல்லாம் கிளப்புற?
அதான் அவளே போயிட்டாளே..."
"ஓ சாருக்கு அவ போனதுதான் கஷ்டமா இருக்கோ?"
"அதான் அதுக்குப்பதிலா ஒரு ஹிந்திக்காரி வந்துருக்காளே.."
"நீ வேற அவளுக்கு தமிழ் தெரியல எனக்கு ஹிந்தி தெரியல பின்ன எங்க?"
"என்னது விட்டா அவகூடவே போயிடுவீங்க போல...
இந்த ஆம்பளைங்களே இப்படித்தானா ?"
தன் வாயாலேயே தானே மாட்டிக்கொண்டோமே என்று நினைத்தவன்
" ஹனி நீ ரெஸ்ட் எடு நான் சாப்பாடே வாங்கிட்டு வந்துடுறேன் "
"நீ பாவம் கீழ வேற விழுந்துட்ட .."
"ஓ நான் பாவமா இல்லை நீங்க பாவமா ?"
"நீதான் டி கண்ணு "
"நல்லா சமாளிக்கிறீங்க மிஸ்டர் பாபு."
"எங்க மாவு வாங்கிட்டு வந்தா நம்மளையே செய்ய சொல்லிடுவாளோனு பயம் சாருக்கு..."
"ஹி..ஹி.."
"ரொம்ப இளிக்காதீங்க பல்லுத்தெரியுது மூடிட்டு போங்க..."
"என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட.."
"நான் சொன்னது வாயை..."
"க்கூம்."..இனி பேசினா மானம் விமானம் ஏறிடுமென்று உணர்ந்தவன் "அது சரி அப்போ அந்த இட்லி.."என்று யோசித்தான்.
"சீக்கிரம் போங்க பசிக்குது " என்று துரத்தினாள் மது.
அவன் அவளையே பார்த்துக் கொண்டு போனான்
*****
மதுவின் ஃபோன் அடித்தது
எடுத்து "ஹலோ" என்றாள்
"அம்மாடி நான்தான்மா பேசுறேன்
எப்படி இருக்க, மாப்ள எப்படி இருக்காரு?"
"நல்லா இருக்கோம் மா" "அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு"
"ஏன்டி மாப்ளைக்கும் உனக்கும் ஏதும் சண்டையா ?"
"இல்லையே ஏன்?"
"சும்மாதான் கேட்டேன் "
"நீ சும்மா கேட்க மாட்டியே அந்த மனுசன் ஏதாவது சொன்னாரா ?"
"இல்லைடி நானாத்தான் கேட்டேன் நல்லாத்தான் இருக்காருனு இழுத்தியே அதான் "
"அவரு எப்ப மா சண்டை போட்டுருக்காரு, நான் போடாம இருந்தா போதாதா ?"
"பாவம் டி அந்த மனுசன், ஏன் நீ அப்படி பண்ற?"
"உனக்குப் புரியாது புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கனும் இல்ல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்."
"எப்படியோ போ ஆனால் ஓவரா கன்ட்ரோல் பண்ணாதே பின்ன பிரச்சினை ஆகிடப்போவுது "
"சரி சரி இப்போ எதுக்கு ஃபோன் பண்ணின?"
"ஒன்னுமில்லை "
"சரி வைக்கட்டுமா?"
"என்கிட்டயேவா டி ,நான் உன்னை பெத்தவ அதை மனசுல வச்சிட்டுப்பேசு ..."
"பின்ன எப்பப் பாரு அவருக்கே சப்போர்ட் பண்ணுற?"
"உனக்காகத்தான் பேசுறேன் நீ புரிஞ்சிக்க மாட்ற,சரி விடு
நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் "
"நம்ம வனிதாவைப் பொண்ணு கேட்டு வர ஞாயிறு வர்றாங்க
நீயும் மாப்பிள்ளையும் கண்டிப்பா வந்துடுங்க."
"உன் தம்பி சுரேஷ் வேறு ஏதோ ட்ரெயினிங்குனு பெங்களூர் போயிட்டான் வர ஒரு வாரம் ஆகுமாம் .
என்னடி அமைதியா இருக்க சொல்றது கேட்குதா ?"
"கேட்குது ,கேட்குது வர்றோம் மா ,அந்த மனுசன் கிட்டயும் நீ ஒரு வார்த்தை சொல்லிடு அப்புறம் கோவிச்சுக்கப் போறாரு..."
"அட பார்ரா இப்போ புருசனுக்கு சப்போர்ட்ட"
"என்ன இருந்தாலும் அவர் என் புருசன்
நான் என்ன வேணா சொல்லுவேன்
மத்தவங்க அவரை மதிக்கணும்"
"நாங்கல்லாம் டூ.கே கிட்ஸ் வீட்டுக்குள்ள போட்டு மிதிப்போம் வெளியில் வந்தா சாமியா மதிப்போம்"
"ஏன் அப்படி முழிக்குற? இதைப்படிக்கிற பாதிப் பொண்ணுங்க என்ன மாதிரிதான் வேணும்னா கேட்டுப்பாரேன்" என்றதும்
"நீ எப்படிடி என் வயித்துல வந்து பொறந்த இப்படி வாயடிக்கிற?"
"உன் புருஷன் கிட்ட கேளு ,போமா போய் வேலையைப்பாரு ,மறந்துறாம அவர்கிட்ட சொல்லிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிச்சனில் ஏதோ கீழே உடைந்தது போல பலத்த சத்தம் கேட்க...
"இந்த பூனைக்கு இதே வேலையாய் போச்சு சரிமா வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
தொடரும்....
எழுத்தாளர் நாகா