[
தொடர்_13
***********


நான் நீ நடுவில் பேய்


************************""""""**********"
இதுவரை...
ஒரு மாதிரியான வெட்கத்துடன்
அவள் எந்தவித சத்தமும் இல்லாமல் இருக்க..கதவைத்தள்ளினான் வசந்த் அதுதானாகத் திறந்து கொண்டது...
"மாயா... மாயா இன்னும் ரெடியாகலையா ?" என்று உள்ளே வந்து பார்த்தால் மாயா பேனில் தூக்குமாட்டித் தொங்கிக்கொண்டு இருந்தாள்.
வசந்த் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
இனி..
பங்களாவில் நடந்த கொலையைப் பார்த்த முருகன் சுரேஷை சந்தேகிக்க சுரேஷின் உடலில் புகுந்த ஜெனி முருகனை அடித்து பங்களாவிற்குள் தூக்கிப்போனது சுரேஷின் உடம்பில் இருந்தபடி..
கோபத்திலும் கொலைபசியிலும் இருந்த ஜெனி முருகனின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் போனது .
திடீரென என்ன நினைத்ததோ
தெரியவில்லை அப்படியே விட்டுவிட்டு அவனது கையையும் காலையும் கட்டிப்போட்டுவிட்டு அடுத்த குறியை நோக்கிப் பயணித்தது.
அதுவரை தனது உடலில் இருந்த ஜெனி வெளியேற ...
முருகன் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் அரை மயக்கத்தில் ஒரு மூலையில் கிடந்ததைப் பார்த்து பதறியடித்து
"என்னடா ஆச்சு உன்னை யாரு கட்டிப்போட்டது ?"
கண்களைக் கசக்கியபடி எழுந்த முருகன் பயத்தில்....
"கிட்ட வராதே
என்னடா நடிக்கிற ?"
"என்னை அடிச்சு கட்டிப்போட்டதுமில்லாம
யாருனு கேட்கிறாயா?"
"என்னடா சொல்ற ? நான் எதுக்குடா உன்னை அடிக்கிறேன் ."
"அப்பப்பா என்ன நடிப்புடா சாமி ப்ளீஸ் என்கிட்ட வராதே ."
"டேய் ஒருவேளை அந்த ஜெனியாக இருக்குமோ ?"
"ஆமாடா ஜெனி என்னைக் கட்டிட்டு உன்னை விட்டுட்டு போயிருக்கும் நல்ல கதைடா"
"ஆமால்ல "
"என்ன நோமால்ல..போய்டு என் கண்முன்னே நிக்காதே"
"டேய் என்னை நம்புடா நான் பண்ணலடா "
"அய்யா சாமி நீ எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம் நீ போனாலே அதுவே எனக்கு நல்லது ."
"சொன்னா புரிஞ்சுக்கோ இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு"
"அதான் தெரியுமே
நீ நடத்துற நாடகம்னு"
"எப்படியோ போ சொன்னா கேட்க மாட்ட நான் தப்பிச்சுப் போறேன் " என்று கதவைத் திறக்க முயன்றான் அது வெளியில் அடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான்.
"முருகா இங்க பாரு நம்மை உள்ளே வச்சு வெளியில் யாரோ பூட்டியிருக்காங்க ."
"நம் இருவருக்கும் இடையே சண்டை வரவழைக்கப் பண்ணியிருக்காங்க நம்பு "
முருகனுக்கு கொஞ்சம் குழப்பம் வர .".சுரேஷ் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?" என்று எண்ணினான்.
"சரி கட்டை அவிழ்த்து விடு நாம இங்கிருந்து தப்பி விடலாம்" என்று சொல்ல..
சுரேஷ் முருகனின் கட்டை அவிழ்க்க
ஜெனி முருகனின் உடலில் புகுந்து கொண்டது .
அவன் முருகனின் கால் கட்டை அவிழ்க்க ஒரே மிதியாக மிதித்தான் முருகன் .
மூன்றடி தூரத்திற்கு அப்பால் போய்விழுந்தான் சுரேஷ்.
*****************
கம்பெனி மீட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருந்து வந்த வசந்த் மாலினியின் விருப்பத்திற்காக அவளது வீட்டில் தங்க...
ஜெனி அவளது உடலில் புகுந்து வேலையைக்காட்ட இரவில் நடந்த கசமுசாவில் அவள் வசந்திடம் கோபம் கொள்ள அவசரவேலையாக ஆபீஸ் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியும் கேட்காமல் தூக்குப்போட்டு நிற்க .. அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான் வசந்த்.
அவனது ஃபோன் பெல்லடிக்க..எடுத்து ஹலோ என்றான்.
அவனது அம்மா ஃபோன் அடித்தாள்
"வசந்த் எங்க இருக்க ? ஊருக்கு வந்துட்டியா இல்லையா? எந்த பதிலும் சொல்லாம இருக்க நேத்து உன் பொண்டாட்டி ஃபோன் போட்டாளாம் நீ எடுக்கலையாம் என்னாச்சு உனக்கு."
"இல்லைமா அதுவந்து ஆபீஸ்ல வேலை அங்கேயே தங்கி விட்டேன்
நான் நேர்ல வந்து பேசிக்கறேன்"
"சரிப்பா நீ உன் பொண்டாட்டிக்கு ஃபோன் போடு பர்ஸ்ட் " என்று சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்தாள்
ஃபோனை எடுத்து கால் ஹிஸ்டரி செக் செய்ய.. ஐம்பத்து நான்கு மிஸ்டுகால் இருந்தது.
மனைவிக்கு ஃபோன் போட்டான்
அவள் எடுத்து ஹலோ என்றாள்
"சொல்லுமா எதுக்கு அத்தனை கால் பண்ணின?"
"என்னங்க பண்றீங்க ? உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு ஃபோன் வந்தது நானும் பிள்ளைகளும் ஏர்போர்ட் வந்துட்டோம்."
"யாருமா சொன்னது நான் நல்லாத்தான் இருக்கேன் நீ வரவேண்டாம் " என்று சொல்ல ..
"நாங்க இப்ப சென்னை ஏர்போர்ட்டில்
இருக்கோம் எப்ப வர்றீங்க ? "என்று கேட்க...
"என்னது சென்னை ஏர்போர்ட்டிலா ..?" என்று அதிர்ச்சியோடு கேட்க..பின்னால் இருந்து யாரோ அவனது தலையில் அடிக்க அப்படியே மயங்கி விழுந்தான்.
கத்துக்குட்டியும் பாபுவும் வீட்டின் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிவிட்டு வீட்டிற்குள் வருகையில் ஜெனியின் ஆட்டம் தொடங்கியது
பாபு கத்துக்குட்டியிடம்
"எக்காரணத்தை கொண்டும் உன் கழுத்தில் கையில் இருக்கும் கயிற்றை அவிழ்த்து விடாதே எதற்காகவும் பயந்து விடாதே" என்றான்
"நான் ஏன் பயப்பட வேண்டும் ? "
"நீ இருக்கையில் ,ஆமா இந்த ஜெனிக்கு என்ன தான் வேண்டும் ? யார் இந்த ஜெனி ?
எதற்காக நம்மை இப்படி தொல்லை செய்கிறது ?"என்று கேட்டான் பாபு .
"அது உனக்கு தான் தெரியும் உன்னால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த வேலையை செய்கிறார்கள் அது நாம் கோவிலுக்கு போனால் தான் உறுதியாகும்" என்றான் கத்துக்குட்டி
"வேறு வழி ஏதும் இல்லையா ?"
"வேறு எந்த வழியும் இல்லை நாம் கோவிலுக்குப் போவதைத் தவிர"
" நாம் எப்படி கோவிலுக்கு போவது ? வீட்டை விட்டு வெளியில் வந்தாலே இந்த ஜெனி நம்மைத் தாக்குகிறது எப்படி நாம் போவது "?"
"நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டிப்பாகக் கோவிலுக்கு போக வேண்டும் கோவிலுக்குள் போய்விட்டால் நாம் நினைத்தபடி இந்த ஜெனியை ஒழித்துக் கட்ட முடியும் " என்றான் கத்துக்குட்டி.
"இப்பவே கிளம்பணும் தாமதப்படுத்துற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்துத்தான்" என்றான் கத்துக்குட்டி.
"ஒன்னு செய்வோமா இந்த ஜெனிக்கு தெரியாம போயிடலாமா ?"
"தெரிஞ்சுதான் பேசுறியா பாபு "
"ஏன் என்னாச்சு உங்களைப்பழிவாங்க நினைக்குற ஜெனி உங்களை,
தன் கட்டுபாட்டுக்குள்ள வச்சிருக்கு அதுக்கு எப்படி தெரியாம இருக்கும்? "
"அதுமட்டுமின்றி ஆத்மாக்கள் எங்கிருந்தாலும் அவைகளுக்கு தேவையானதைத் தனக்குள்ளே கொண்டு வந்துடும்"
"இப்ப என்னதான் செய்வது?"
"ஒரே வழி அவற்றைத் திசைதிருப்பணும்"
"அது எப்படி முடியும் ?"
"அதுக்கு ஒரு வழி இருக்கிறது இங்கிருக்கும் ஒருவர் இந்த கூட்டணியில் இருந்து பிரிந்து தனியா போகணும் "
"என்ன சொல்ற டா அப்படிப் போனா
அவங்க உயிருக்கு உத்திரவாதம் இருக்கா ? "
"நீதான் சொன்ன எல்லோரும் ஒன்றாக இருந்தா நல்லதுன்னு இப்போ இப்படி சொல்ற ?"
"டேய் இதைவிட வேறு வழியில்லை.
ஒன்னு செய்யலாம் நான் எல்லோரையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குப் போறேன் நீ இங்கேயே இருந்து இந்த மந்திரத்தைச் சொல்லிட்டே இரு அதுக்குள்ள அவங்களை அங்க விட்டுவிட்டு வந்து உன்னைக் கூப்பிட்டுக்கொள்கிறேன் "
"சரி டா ஆனால் இது சரிவருமா ?"
"வேறு வழியில்லை பாபு."
"அப்படினா இப்பவே கிளம்புங்க நான் இங்கிருந்து வேண்டிக்கொள்கிறேன் "
"எல்லோரும் கையில் உள்ள கயிற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் பூஜைக்குப் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றதும் அனைவரும் உடனடியாக எல்லாம் எடுத்துக்கொள்ள கத்துக்குட்டி அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர ஜெனியின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது .
பாபு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிக்க கத்துக்குட்டி அனைவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.
அதுவரை வராதிருந்த ஜெனி வீட்டுக்குள் நுழைந்தது. பாபு மந்திரத்தைச் சொல்ல சொல்ல ஆக்ரோசமாக அவனைத் தாக்க ...ஜெனியால் அவனைத் தீண்ட முடியவில்லை .
அவன் மந்திரத்தை நிறுத்தினால் அவனைத் தாக்கலாம் என்று அவனையே சுற்றிச்சுற்றி வந்தது.
அனைவரையும் அழைத்து கொண்டு போய் கொண்டிருந்த கார் திடிரென டயர் வெடித்து அங்குமிங்கும் அலைபாய ..காரை ஓரமாக நிறுத்தினான் கத்துக்குட்டி.
தூங்கிக்கொண்டு இருந்த மது எழுந்து" என்னாச்சு அண்ணா ஏன் வண்டி நின்றுவிட்டது ?" கேட்டாள்.
"வண்டி பிரேக் டவுன் ஆகிடுச்சுமா, இரு பார்க்கிறேன்" என்று இறங்கி வந்து டயரைப்பார்க்க டயர் வெடித்துப் போயிருந்தது.
"சரி ஸ்டெப்னி எடுத்து மாற்றலாம் என்று நினைக்கையில் அதுவும் காற்று இறங்கிப்போயிருந்து."
அவன் யோசனையில் நிற்க...
"என்ன அண்ணா அப்படியே நிக்குறீங்க?"
"இல்லைமா ஸ்டெப்னியும் சரியில்லை பக்கத்தில் ஏதும் கடையிருக்கானு பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கிளம்பிப்போனான் .
"அண்ணா இப்படி நடுவழியில் விட்டுட்டுப் போறீங்க பயமா இருக்கு" என்றாள்
"நீ கவலைப் படாதேமா உங்களுக்கு ஜெனியால்தான் பிரச்சினை அது இப்போ பாபு கூட இருக்கு
சோ டோன்ட் ஒர்ரி" என்றான்
"நான் வரும்வரை கார்லயே இருங்க" என்று சொல்லிட்டு அகன்றான்
நீண்ட நேரமாகியும் வராததால் அவள் காரை விட்டு இறங்கிப்பார்த்தாள் .
பொழுது இருட்டியிருந்து.
சாப்பிடாமல் இருந்ததால் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டில் எல்லாம் காலியாயிருக்க..நாக்கு வறள ஆரம்பித்தது.
அந்த வழியாக காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டு ஒரு வயதான பாட்டி நடத்துவர ..அவளைக் கூப்பிட்டாள் மது.
"பாட்டி பாட்டி"
"சொல்லும்மா என்னையா கூப்பிட்ட ?"
"ஆமாம் பாட்டி இங்க மெக்கானிக் கடை எங்க இருக்கு தெரியுமா ?"
"வண்டி ஒக்கடுற கடையா ?"
"ம்ம் ஆமாம் பாட்டி ."
"அது இங்கிருந்து இருபது கல் தொலைவில் இருக்கு "
ஆமா நீங்க ஊருக்கு புதுசா இருக்கீங்க யாரு ?
என்னாச்சு ஏன் இங்க நிக்குறீங்க ?" பதிலுக்குப் திரும்பிக்கேட்டாள்.
"பாட்டி நாங்க வெளியூரு எங்க குலதெய்வம் கோவிலுக்கு வந்தோம்
வர்ற வழியில் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு
ஆளு கூப்பிட அண்ணன் போயிருக்காரு "
"சரிமா ஆனால் இப்பவே இருட்டிடுச்சு
இங்க நின்னா காட்டு விலங்குகள் இங்க வரும் என்ன பண்ண போறீங்க?"
"என்ன பாட்டி சொல்றீங்க ? "
"ஆமாம்மா உண்மைதான் நீங்க ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தீங்களா ?"
"இங்க யாராவது வந்தாங்களா ஆறுமணி ஆனாலே யாரும் வெளியில் வரமாட்டாங்க "
"அச்சச்சோ இங்க பக்கத்துல ஊர் இல்லையா பாட்டி "
"இருக்குமா ஆனால் ஆறுமணிக்கு எல்லோரும் வீட்டுக்குள் அடங்கிடுவாங்க ."
"சாப்பாடு கடை ஏதும் இருக்கா ?"
"நல்ல பொண்ணுமா ஆளுக வெளியில் வராம எப்படிமா கடையிருக்கும் ?"
"தண்ணிவேறு இல்லைமா என்ன பண்றது இப்ப?"
"இங்க பாருங்க மா எங்க வீடு இங்கிருந்து ஒரு கல் தூரத்தில் தான் இருக்கு ஆனா நீங்க நடந்துடுவீங்களா ?"
"உங்களை இங்க விட்டுப்போகவும் மனசில்ல வேணும்னா எங்க வீட்டுக்கு வர்றீங்களா ?"
"வேண்டாம் பாட்டி நீங்களே பாவம் உங்களுக்கு எதுக்கு சிரமம் "
"என் பொண்ணா இருந்தா பாக்க மாட்டேனா வீடு அரண்மனை மாதிரி சும்மாதா கிடக்கு
வாங்க போகலாம்" என்றாள்
"அண்ணா வந்தா தேடுவாரே "
"அவரு நைட் இங்க வர வாய்ப்பில்லை அவரு மெக்கானிக் கூப்பிடாமல் வரமுடியாது."
"வந்தா பாக்குற மாதிரி அதுக்கு நாம ஏதாவது தடயம் விட்டுப் போகலாம்" என்று சொல்லிவிட்டு பாட்டி வண்டியின் பேனட்டில் ஏதோ கிறுக்கிவைத்தாள்.
"இதுக்கு மேல இங்க நிக்க வேண்டாம்
முழுதும் இருட்டிடுச்சு " என்று வேகப்படுத்தினாள் அந்த பாட்டி .
மது தனது ஃபோனை எடுத்துப்பார்த்தாள் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது .
தூரத்தில் நரியின் ஊளையிடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
சரி இனி நிக்க வேண்டாம் என்று அவள் பின்னால் அனைவரும் நடக்கலானார்கள்.
முன்னால் சென்றுகொண்டிருந்த பாட்டியின் முகத்தில் குரூரப் புன்னகை வெளிப்படத் தொடங்கியது
தொடரும்
எழுத்தாளர் நாகா
தொடர்_13
***********






************************""""""**********"
இதுவரை...
ஒரு மாதிரியான வெட்கத்துடன்
அவள் எந்தவித சத்தமும் இல்லாமல் இருக்க..கதவைத்தள்ளினான் வசந்த் அதுதானாகத் திறந்து கொண்டது...
"மாயா... மாயா இன்னும் ரெடியாகலையா ?" என்று உள்ளே வந்து பார்த்தால் மாயா பேனில் தூக்குமாட்டித் தொங்கிக்கொண்டு இருந்தாள்.
வசந்த் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
இனி..
பங்களாவில் நடந்த கொலையைப் பார்த்த முருகன் சுரேஷை சந்தேகிக்க சுரேஷின் உடலில் புகுந்த ஜெனி முருகனை அடித்து பங்களாவிற்குள் தூக்கிப்போனது சுரேஷின் உடம்பில் இருந்தபடி..
கோபத்திலும் கொலைபசியிலும் இருந்த ஜெனி முருகனின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் போனது .
திடீரென என்ன நினைத்ததோ
தெரியவில்லை அப்படியே விட்டுவிட்டு அவனது கையையும் காலையும் கட்டிப்போட்டுவிட்டு அடுத்த குறியை நோக்கிப் பயணித்தது.
அதுவரை தனது உடலில் இருந்த ஜெனி வெளியேற ...
முருகன் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் அரை மயக்கத்தில் ஒரு மூலையில் கிடந்ததைப் பார்த்து பதறியடித்து
"என்னடா ஆச்சு உன்னை யாரு கட்டிப்போட்டது ?"
கண்களைக் கசக்கியபடி எழுந்த முருகன் பயத்தில்....
"கிட்ட வராதே
என்னடா நடிக்கிற ?"
"என்னை அடிச்சு கட்டிப்போட்டதுமில்லாம
யாருனு கேட்கிறாயா?"
"என்னடா சொல்ற ? நான் எதுக்குடா உன்னை அடிக்கிறேன் ."
"அப்பப்பா என்ன நடிப்புடா சாமி ப்ளீஸ் என்கிட்ட வராதே ."
"டேய் ஒருவேளை அந்த ஜெனியாக இருக்குமோ ?"
"ஆமாடா ஜெனி என்னைக் கட்டிட்டு உன்னை விட்டுட்டு போயிருக்கும் நல்ல கதைடா"
"ஆமால்ல "
"என்ன நோமால்ல..போய்டு என் கண்முன்னே நிக்காதே"
"டேய் என்னை நம்புடா நான் பண்ணலடா "
"அய்யா சாமி நீ எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம் நீ போனாலே அதுவே எனக்கு நல்லது ."
"சொன்னா புரிஞ்சுக்கோ இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு"
"அதான் தெரியுமே
நீ நடத்துற நாடகம்னு"
"எப்படியோ போ சொன்னா கேட்க மாட்ட நான் தப்பிச்சுப் போறேன் " என்று கதவைத் திறக்க முயன்றான் அது வெளியில் அடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான்.
"முருகா இங்க பாரு நம்மை உள்ளே வச்சு வெளியில் யாரோ பூட்டியிருக்காங்க ."
"நம் இருவருக்கும் இடையே சண்டை வரவழைக்கப் பண்ணியிருக்காங்க நம்பு "
முருகனுக்கு கொஞ்சம் குழப்பம் வர .".சுரேஷ் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?" என்று எண்ணினான்.
"சரி கட்டை அவிழ்த்து விடு நாம இங்கிருந்து தப்பி விடலாம்" என்று சொல்ல..
சுரேஷ் முருகனின் கட்டை அவிழ்க்க
ஜெனி முருகனின் உடலில் புகுந்து கொண்டது .
அவன் முருகனின் கால் கட்டை அவிழ்க்க ஒரே மிதியாக மிதித்தான் முருகன் .
மூன்றடி தூரத்திற்கு அப்பால் போய்விழுந்தான் சுரேஷ்.
*****************
கம்பெனி மீட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருந்து வந்த வசந்த் மாலினியின் விருப்பத்திற்காக அவளது வீட்டில் தங்க...
ஜெனி அவளது உடலில் புகுந்து வேலையைக்காட்ட இரவில் நடந்த கசமுசாவில் அவள் வசந்திடம் கோபம் கொள்ள அவசரவேலையாக ஆபீஸ் போய்விட்டு வந்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்லியும் கேட்காமல் தூக்குப்போட்டு நிற்க .. அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான் வசந்த்.
அவனது ஃபோன் பெல்லடிக்க..எடுத்து ஹலோ என்றான்.
அவனது அம்மா ஃபோன் அடித்தாள்
"வசந்த் எங்க இருக்க ? ஊருக்கு வந்துட்டியா இல்லையா? எந்த பதிலும் சொல்லாம இருக்க நேத்து உன் பொண்டாட்டி ஃபோன் போட்டாளாம் நீ எடுக்கலையாம் என்னாச்சு உனக்கு."
"இல்லைமா அதுவந்து ஆபீஸ்ல வேலை அங்கேயே தங்கி விட்டேன்
நான் நேர்ல வந்து பேசிக்கறேன்"
"சரிப்பா நீ உன் பொண்டாட்டிக்கு ஃபோன் போடு பர்ஸ்ட் " என்று சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்தாள்
ஃபோனை எடுத்து கால் ஹிஸ்டரி செக் செய்ய.. ஐம்பத்து நான்கு மிஸ்டுகால் இருந்தது.
மனைவிக்கு ஃபோன் போட்டான்
அவள் எடுத்து ஹலோ என்றாள்
"சொல்லுமா எதுக்கு அத்தனை கால் பண்ணின?"
"என்னங்க பண்றீங்க ? உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு ஃபோன் வந்தது நானும் பிள்ளைகளும் ஏர்போர்ட் வந்துட்டோம்."
"யாருமா சொன்னது நான் நல்லாத்தான் இருக்கேன் நீ வரவேண்டாம் " என்று சொல்ல ..
"நாங்க இப்ப சென்னை ஏர்போர்ட்டில்
இருக்கோம் எப்ப வர்றீங்க ? "என்று கேட்க...
"என்னது சென்னை ஏர்போர்ட்டிலா ..?" என்று அதிர்ச்சியோடு கேட்க..பின்னால் இருந்து யாரோ அவனது தலையில் அடிக்க அப்படியே மயங்கி விழுந்தான்.
கத்துக்குட்டியும் பாபுவும் வீட்டின் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிவிட்டு வீட்டிற்குள் வருகையில் ஜெனியின் ஆட்டம் தொடங்கியது
பாபு கத்துக்குட்டியிடம்
"எக்காரணத்தை கொண்டும் உன் கழுத்தில் கையில் இருக்கும் கயிற்றை அவிழ்த்து விடாதே எதற்காகவும் பயந்து விடாதே" என்றான்
"நான் ஏன் பயப்பட வேண்டும் ? "
"நீ இருக்கையில் ,ஆமா இந்த ஜெனிக்கு என்ன தான் வேண்டும் ? யார் இந்த ஜெனி ?
எதற்காக நம்மை இப்படி தொல்லை செய்கிறது ?"என்று கேட்டான் பாபு .
"அது உனக்கு தான் தெரியும் உன்னால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த வேலையை செய்கிறார்கள் அது நாம் கோவிலுக்கு போனால் தான் உறுதியாகும்" என்றான் கத்துக்குட்டி
"வேறு வழி ஏதும் இல்லையா ?"
"வேறு எந்த வழியும் இல்லை நாம் கோவிலுக்குப் போவதைத் தவிர"
" நாம் எப்படி கோவிலுக்கு போவது ? வீட்டை விட்டு வெளியில் வந்தாலே இந்த ஜெனி நம்மைத் தாக்குகிறது எப்படி நாம் போவது "?"
"நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டிப்பாகக் கோவிலுக்கு போக வேண்டும் கோவிலுக்குள் போய்விட்டால் நாம் நினைத்தபடி இந்த ஜெனியை ஒழித்துக் கட்ட முடியும் " என்றான் கத்துக்குட்டி.
"இப்பவே கிளம்பணும் தாமதப்படுத்துற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்துத்தான்" என்றான் கத்துக்குட்டி.
"ஒன்னு செய்வோமா இந்த ஜெனிக்கு தெரியாம போயிடலாமா ?"
"தெரிஞ்சுதான் பேசுறியா பாபு "
"ஏன் என்னாச்சு உங்களைப்பழிவாங்க நினைக்குற ஜெனி உங்களை,
தன் கட்டுபாட்டுக்குள்ள வச்சிருக்கு அதுக்கு எப்படி தெரியாம இருக்கும்? "
"அதுமட்டுமின்றி ஆத்மாக்கள் எங்கிருந்தாலும் அவைகளுக்கு தேவையானதைத் தனக்குள்ளே கொண்டு வந்துடும்"
"இப்ப என்னதான் செய்வது?"
"ஒரே வழி அவற்றைத் திசைதிருப்பணும்"
"அது எப்படி முடியும் ?"
"அதுக்கு ஒரு வழி இருக்கிறது இங்கிருக்கும் ஒருவர் இந்த கூட்டணியில் இருந்து பிரிந்து தனியா போகணும் "
"என்ன சொல்ற டா அப்படிப் போனா
அவங்க உயிருக்கு உத்திரவாதம் இருக்கா ? "
"நீதான் சொன்ன எல்லோரும் ஒன்றாக இருந்தா நல்லதுன்னு இப்போ இப்படி சொல்ற ?"
"டேய் இதைவிட வேறு வழியில்லை.
ஒன்னு செய்யலாம் நான் எல்லோரையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குப் போறேன் நீ இங்கேயே இருந்து இந்த மந்திரத்தைச் சொல்லிட்டே இரு அதுக்குள்ள அவங்களை அங்க விட்டுவிட்டு வந்து உன்னைக் கூப்பிட்டுக்கொள்கிறேன் "
"சரி டா ஆனால் இது சரிவருமா ?"
"வேறு வழியில்லை பாபு."
"அப்படினா இப்பவே கிளம்புங்க நான் இங்கிருந்து வேண்டிக்கொள்கிறேன் "
"எல்லோரும் கையில் உள்ள கயிற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் பூஜைக்குப் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்றதும் அனைவரும் உடனடியாக எல்லாம் எடுத்துக்கொள்ள கத்துக்குட்டி அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர ஜெனியின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது .
பாபு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிக்க கத்துக்குட்டி அனைவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.
அதுவரை வராதிருந்த ஜெனி வீட்டுக்குள் நுழைந்தது. பாபு மந்திரத்தைச் சொல்ல சொல்ல ஆக்ரோசமாக அவனைத் தாக்க ...ஜெனியால் அவனைத் தீண்ட முடியவில்லை .
அவன் மந்திரத்தை நிறுத்தினால் அவனைத் தாக்கலாம் என்று அவனையே சுற்றிச்சுற்றி வந்தது.
அனைவரையும் அழைத்து கொண்டு போய் கொண்டிருந்த கார் திடிரென டயர் வெடித்து அங்குமிங்கும் அலைபாய ..காரை ஓரமாக நிறுத்தினான் கத்துக்குட்டி.
தூங்கிக்கொண்டு இருந்த மது எழுந்து" என்னாச்சு அண்ணா ஏன் வண்டி நின்றுவிட்டது ?" கேட்டாள்.
"வண்டி பிரேக் டவுன் ஆகிடுச்சுமா, இரு பார்க்கிறேன்" என்று இறங்கி வந்து டயரைப்பார்க்க டயர் வெடித்துப் போயிருந்தது.
"சரி ஸ்டெப்னி எடுத்து மாற்றலாம் என்று நினைக்கையில் அதுவும் காற்று இறங்கிப்போயிருந்து."
அவன் யோசனையில் நிற்க...
"என்ன அண்ணா அப்படியே நிக்குறீங்க?"
"இல்லைமா ஸ்டெப்னியும் சரியில்லை பக்கத்தில் ஏதும் கடையிருக்கானு பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கிளம்பிப்போனான் .
"அண்ணா இப்படி நடுவழியில் விட்டுட்டுப் போறீங்க பயமா இருக்கு" என்றாள்
"நீ கவலைப் படாதேமா உங்களுக்கு ஜெனியால்தான் பிரச்சினை அது இப்போ பாபு கூட இருக்கு
சோ டோன்ட் ஒர்ரி" என்றான்
"நான் வரும்வரை கார்லயே இருங்க" என்று சொல்லிட்டு அகன்றான்
நீண்ட நேரமாகியும் வராததால் அவள் காரை விட்டு இறங்கிப்பார்த்தாள் .
பொழுது இருட்டியிருந்து.
சாப்பிடாமல் இருந்ததால் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டில் எல்லாம் காலியாயிருக்க..நாக்கு வறள ஆரம்பித்தது.
அந்த வழியாக காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டு ஒரு வயதான பாட்டி நடத்துவர ..அவளைக் கூப்பிட்டாள் மது.
"பாட்டி பாட்டி"
"சொல்லும்மா என்னையா கூப்பிட்ட ?"
"ஆமாம் பாட்டி இங்க மெக்கானிக் கடை எங்க இருக்கு தெரியுமா ?"
"வண்டி ஒக்கடுற கடையா ?"
"ம்ம் ஆமாம் பாட்டி ."
"அது இங்கிருந்து இருபது கல் தொலைவில் இருக்கு "
ஆமா நீங்க ஊருக்கு புதுசா இருக்கீங்க யாரு ?
என்னாச்சு ஏன் இங்க நிக்குறீங்க ?" பதிலுக்குப் திரும்பிக்கேட்டாள்.
"பாட்டி நாங்க வெளியூரு எங்க குலதெய்வம் கோவிலுக்கு வந்தோம்
வர்ற வழியில் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு
ஆளு கூப்பிட அண்ணன் போயிருக்காரு "
"சரிமா ஆனால் இப்பவே இருட்டிடுச்சு
இங்க நின்னா காட்டு விலங்குகள் இங்க வரும் என்ன பண்ண போறீங்க?"
"என்ன பாட்டி சொல்றீங்க ? "
"ஆமாம்மா உண்மைதான் நீங்க ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தீங்களா ?"
"இங்க யாராவது வந்தாங்களா ஆறுமணி ஆனாலே யாரும் வெளியில் வரமாட்டாங்க "
"அச்சச்சோ இங்க பக்கத்துல ஊர் இல்லையா பாட்டி "
"இருக்குமா ஆனால் ஆறுமணிக்கு எல்லோரும் வீட்டுக்குள் அடங்கிடுவாங்க ."
"சாப்பாடு கடை ஏதும் இருக்கா ?"
"நல்ல பொண்ணுமா ஆளுக வெளியில் வராம எப்படிமா கடையிருக்கும் ?"
"தண்ணிவேறு இல்லைமா என்ன பண்றது இப்ப?"
"இங்க பாருங்க மா எங்க வீடு இங்கிருந்து ஒரு கல் தூரத்தில் தான் இருக்கு ஆனா நீங்க நடந்துடுவீங்களா ?"
"உங்களை இங்க விட்டுப்போகவும் மனசில்ல வேணும்னா எங்க வீட்டுக்கு வர்றீங்களா ?"
"வேண்டாம் பாட்டி நீங்களே பாவம் உங்களுக்கு எதுக்கு சிரமம் "
"என் பொண்ணா இருந்தா பாக்க மாட்டேனா வீடு அரண்மனை மாதிரி சும்மாதா கிடக்கு
வாங்க போகலாம்" என்றாள்
"அண்ணா வந்தா தேடுவாரே "
"அவரு நைட் இங்க வர வாய்ப்பில்லை அவரு மெக்கானிக் கூப்பிடாமல் வரமுடியாது."
"வந்தா பாக்குற மாதிரி அதுக்கு நாம ஏதாவது தடயம் விட்டுப் போகலாம்" என்று சொல்லிவிட்டு பாட்டி வண்டியின் பேனட்டில் ஏதோ கிறுக்கிவைத்தாள்.
"இதுக்கு மேல இங்க நிக்க வேண்டாம்
முழுதும் இருட்டிடுச்சு " என்று வேகப்படுத்தினாள் அந்த பாட்டி .
மது தனது ஃபோனை எடுத்துப்பார்த்தாள் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது .
தூரத்தில் நரியின் ஊளையிடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
சரி இனி நிக்க வேண்டாம் என்று அவள் பின்னால் அனைவரும் நடக்கலானார்கள்.
முன்னால் சென்றுகொண்டிருந்த பாட்டியின் முகத்தில் குரூரப் புன்னகை வெளிப்படத் தொடங்கியது
தொடரும்
எழுத்தாளர் நாகா