தொடர்_15
***********


நான் நீ நடுவில் பேய்


************************""""""**********"
இதுவரை...
"எதுக்குமா அழற ?"
"என்னை மன்னிச்சிடுடி"
"நீ என்ன தப்புமா செஞ்ச உன்னை மன்னிக்க ?"
அவளது கையைப்பிடித்தபடி அவள் சொல்ல ஆரம்பிக்க...மாயா அப்படியே
சாய்ந்து உட்கார்ந்தாள்.
இனி..
மாயா கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகி வெளிவந்தாள் .
"சரிமா விடு எவனோ செஞ்ச தப்புக்கு நீயும் உடந்தை என்ன செய்ய முடியும்?"
"ஆமா வேணாம்னு முடிவு பண்ணின பின்னாடி கலைச்சிடுக்கலாம்ல "
"அதுக்கு தான்டி முயற்சி பண்ணி இப்படி பாவியாகி நிக்கிறேன்"
"சரிமா ஏன் என்னை அழிக்க நினைச்ச ?"
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக
இருந்தாள் வசந்தா.
என்னமா அமைதியா இருக்க ?"
"கண்களில் கண்ணீர் வழிந்தோட
எப்படிடி உன்னை பெத்துக்க முடியும்?"
"ஏன்மா நீ விரும்பித்தானே என்னை தாங்குன? அப்பாவுக்கும் அதே ஆசை இருந்திருக்கும்ல..."
"யாரு அப்பா "
"ஓடிப்போனானே அவனா நீ வேறடி "
"பின்ன என் அப்பா யாருமா "
"இங்க பாரு மாயா நான் பதினைந்து வயதிலேயே எவனோ ஒருத்தனால் கெட்டுப்போனவள்
யார் என்னை கெடுத்தது யார் உன் அப்பனு எனக்கும் தெரியாது "
"என்னமா சொல்லுற ?"
"எல்லாம் உன் பாட்டியாலதான்"
"அவங்க என்னமா பண்ணினாங்க ?"
"வெளியில் பலான தொழிலைப் பண்ணிட்டு இருந்தவ நாளாக நாளாக வீட்டுக்கே கொண்டுவந்துட்டா "
"ஒருநாள் காய்ச்சல்ல கண்ணே தொறக்கமுடியாம கிடந்த எனக்கு மறந்து வாங்கப்போறேன்னு போன நேரம் எவனோ வீட்டுக்குள் வந்து அவ இல்லனு என்னை சிதைச்சிட்டுப் போயிட்டான்"
"அதுவே கருவா வளர்ந்த பின்னாடி அங்கவோடி இங்கவோடி ஒரு வைத்தியச்சிகிட்ட கசாயம்னு ஏதோ வாங்கி கொடுத்து கலைக்க வச்சதே உன் பாட்டிதான் ."
"ஆனால் உன்னை கொல்ல முடியாதுனு சொல்றமாதிரி வந்து பிறந்தவடி நீ ."
"நீ பிறந்ததை மறைச்சு இப்போ ஓடிப்போனானே அவனுக்கு கட்டிவச்சுட்டா"
"இரண்டு பிள்ளை பிறந்த பிறகு எப்படியோ நீயாருனு தெரிஞ்சிட்டு வந்துதான் தினம் சண்டை போட்டான்
அவனையும் குறைசொல்ல முடியாது "
"அதுக்காக இரண்டு புள்ளையைப்
பெத்துட்டு ஓடிப்போறது சரியா?"
"இங்க சரி தப்பு சொல்ற இடத்தில் நாம் இல்லைடி *
அவன் நல்லாத்தான் இருந்தான்
ஊருக்கு வந்த ஆட்டக்காரி இவனுக்கு என்ன மாயம் பண்ணினாளோ அவ பின்னாடியே போயிட்டான்
"சரி போனதை எண்ணி மனம் வருந்துனா வந்துடுமா இனி நாம் வாழும் வழியை பார்ப்போம்" என்றாள் மாயா.
"என்மேல் கோபம் இல்லையா மாயா"
"உன்மேல் எதுக்கு மா கோவம் வருது
நன்றிதான் சொல்லணும்
"நீ எதுக்கு நன்றி சொல்ற ?"
"வயித்துல நான் எப்படி இருப்பேன்னு தெரியாதபோதே அழிக்க நினைச்ச நீங்க நான் இப்படி ஊனமா பிறந்தும் என்னை கவலை இல்லாம வளர்த்தீங்களே அதுக்கு தான்."
"நீ எங்க வீட்டு மகராணிடி"
"ஆமா கால் உடைந்த அரியணை" என்று சொல்லிச் சிரித்தாள்.
தனது தங்கையும் தம்பியோடு பாட்டி வந்துகொண்டிருக்க அமைதியானாள் மாயா.
" என்னடி இந்தா இருக்குற கடைக்குப்போயிட்டு வர இவ்வளவு நேரமா ?"
"இல்லக்கா கார்த்தி ஒரே அடம் டிக்டாக் மிட்டாய் வேணும்னு அது அந்த கடையில் இல்ல அதான் அண்ணாச்சி கடைக்கு கூட்டிப்போனேன்" என்றாள் ஜெனி.
"சரி சரி கால் மூஞ்சி கழுவிட்டு உள்ள போங்க"
"பாட்டி நீயெங்க பாத்த இவங்கள?"
"போற வழியில் வந்துட்டாங்க ..."
"அப்போ ஏன் லேட் ?"
"வர்ற வழியில் நம்ம பொன்னுச்சாமி
பேத்தி இருக்குல .."
"யாரைச் சொல்ற பாட்டி "
"அதான்டி உன் தங்கச்சி கூட இரண்டாம் வகுப்புல சண்டைபோட்டுட்டு பள்ளிக்கூடத்தை விட்டுப்போனாளே தாசில்தார் வேலாயுதம் மகள் ..."
"அவளுக்கென்ன?"
"அவ கடைத்தெருவில் இவளைப்பாத்துட்டு..."
"பாட்டி பாட்டி ஏதும் பிரச்சனையா?."
"பொறுடி அதெல்லாம் ஒன்னுமில்லை
கட்டிபிடிச்சு கொஞ்சுறாளுங்க "
"என்ன பாட்டி சொல்ற அவங்க இரண்டு பேரும் சண்டை தானே "
"ஆமா ஆனால் அவங்க இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமா இருந்தார்களே ..."
"அப்போ நீ வேற யாரையோ சொல்ற
இரு அவகிட்டயே கேட்கிறேன்"
"ஜெனி இங்க வா
மார்க்கெட்ல யார்கூட பேசிட்டு இருந்த ?"
"ஜானுகூடத்தான் அக்கா"
"அவகூட நீ சண்டைல அவகூட எப்படி நீ பேசுன?"
"அக்கா அந்த சண்டைகூட எங்களுக்குள் வரல நம்ம உமா இருக்காளே அவ ஜானுவோட பென்சிலை உடைச்சிட்டா அதற்கு ஜானு உமாவை கீழே தள்ளிவிட்டா
உமாவுக்கு கால்ல அரைச்சிடுச்சு
அதைக்கேட்க போய் பிரச்சனை ."
"சரி இப்போ எப்படி?"
"அது தெரியாத வயசு ,அவளுக்கு அடம்
சண்டை போட்டுப்போனாள்
இப்போ அது தப்புனு சொல்லி வந்து பேசினாள் .."
"ம்ம் "என்று எதையோ யோசித்துவிட்டு " சரி நீ போ" என்றாள் மாயா.
"எதற்காக அக்கா ஜானுவை விசாரிக்கிறா ?"என்று தலையைச் சொரிந்தபடி போக...
கார்த்தி டிக்டாக் மிட்டாயில் ஒன்றை எடுத்து மாயாவின் வாயில் போட்டு "தின்னுக்கா " என்றான்.
"அவள் அதை எடுத்து நீயே தின்னுடா எனக்கு வேண்டாம்" என்றாள்
"அய்யே எச்சி ...போ எனக்கு வேண்டாம் நீயே தின்னு" என்று சொல்ல...
"இரு இரு எச்சிலா சொல்ற வருவதானே" என்று பழிக்க..
"என் செல்ல அக்காவுல .".என்று ஓடிவந்து கட்டிக்கொண்டான்.
"சரி சரி போய் சாப்பிட்டு தூங்குங்க
நேரமாச்சு "என்று பாட்டி சொல்ல மாயா தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு நடந்தாள்.
**********
"சுரேஷ் "
"என்ன மச்சான் ?"
"அந்த பாக்ஸில் என்ன இருக்கு"
"தெரியாது "
"பின்ன எதுக்கு நமக்கு இரண்டு கோடி பணம் தர்றாங்க?"
"டேய் நீ கேள்வி கேட்க வந்தியா ? இல்லை சம்பாதிக்க வந்தியா ?"
"இருந்தாலும் உள்ளே ஏதோ மிகவும்
விலையுயர்ந்த பொருளோ இல்லை மிகவும் தேவையான பொருளோ இருக்கும்னு நினைக்கிறேன்"
"அதுக்கென்ன ? '"
"இதுல பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறேன்"
"டேய் நீ என்ன லூசா ?"
"ஏன்டா ?"
"பின்ன இவ்வளவு பெரிய அமௌண்ட சும்மா தூக்கிக்கொடுக்க அவங்க என்ன பைத்தியமா ?"
"பிரச்சினை இருப்பதால் தான் நமக்கு பணமே"
"அந்த பாக்ஸைக் கவனமா வச்சிக்கோ இன்னிக்கு அவங்க சொன்ன பார்டிக்கிட்ட கொடுத்த அடுத்த நிமிடமே நமக்கு பணம் வந்துடும் "
"அப்புறம் ஆளுக்கு ஒருகோடினு பிரிச்சிக்கிட்டு போயிட்டு இருக்க வேண்டியது தான் "என்று சொல்ல..
"சரி மச்சான் எப்போ கிளம்பணும் ?"
"இன்று இரவு "
"சரி நீ அங்க வந்துடு" என்று அந்த பாக்ஸை எடுத்துக் கொண்டு அவன் கிளம்ப..
வசந்த் எதையோ யோசித்துக்கொண்டு நின்றான்
தொடரும்
எழுத்தாளர் நாகா
***********






************************""""""**********"
இதுவரை...
"எதுக்குமா அழற ?"
"என்னை மன்னிச்சிடுடி"
"நீ என்ன தப்புமா செஞ்ச உன்னை மன்னிக்க ?"
அவளது கையைப்பிடித்தபடி அவள் சொல்ல ஆரம்பிக்க...மாயா அப்படியே
சாய்ந்து உட்கார்ந்தாள்.
இனி..
மாயா கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகி வெளிவந்தாள் .
"சரிமா விடு எவனோ செஞ்ச தப்புக்கு நீயும் உடந்தை என்ன செய்ய முடியும்?"
"ஆமா வேணாம்னு முடிவு பண்ணின பின்னாடி கலைச்சிடுக்கலாம்ல "
"அதுக்கு தான்டி முயற்சி பண்ணி இப்படி பாவியாகி நிக்கிறேன்"
"சரிமா ஏன் என்னை அழிக்க நினைச்ச ?"
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக
இருந்தாள் வசந்தா.
என்னமா அமைதியா இருக்க ?"
"கண்களில் கண்ணீர் வழிந்தோட
எப்படிடி உன்னை பெத்துக்க முடியும்?"
"ஏன்மா நீ விரும்பித்தானே என்னை தாங்குன? அப்பாவுக்கும் அதே ஆசை இருந்திருக்கும்ல..."
"யாரு அப்பா "
"ஓடிப்போனானே அவனா நீ வேறடி "
"பின்ன என் அப்பா யாருமா "
"இங்க பாரு மாயா நான் பதினைந்து வயதிலேயே எவனோ ஒருத்தனால் கெட்டுப்போனவள்
யார் என்னை கெடுத்தது யார் உன் அப்பனு எனக்கும் தெரியாது "
"என்னமா சொல்லுற ?"
"எல்லாம் உன் பாட்டியாலதான்"
"அவங்க என்னமா பண்ணினாங்க ?"
"வெளியில் பலான தொழிலைப் பண்ணிட்டு இருந்தவ நாளாக நாளாக வீட்டுக்கே கொண்டுவந்துட்டா "
"ஒருநாள் காய்ச்சல்ல கண்ணே தொறக்கமுடியாம கிடந்த எனக்கு மறந்து வாங்கப்போறேன்னு போன நேரம் எவனோ வீட்டுக்குள் வந்து அவ இல்லனு என்னை சிதைச்சிட்டுப் போயிட்டான்"
"அதுவே கருவா வளர்ந்த பின்னாடி அங்கவோடி இங்கவோடி ஒரு வைத்தியச்சிகிட்ட கசாயம்னு ஏதோ வாங்கி கொடுத்து கலைக்க வச்சதே உன் பாட்டிதான் ."
"ஆனால் உன்னை கொல்ல முடியாதுனு சொல்றமாதிரி வந்து பிறந்தவடி நீ ."
"நீ பிறந்ததை மறைச்சு இப்போ ஓடிப்போனானே அவனுக்கு கட்டிவச்சுட்டா"
"இரண்டு பிள்ளை பிறந்த பிறகு எப்படியோ நீயாருனு தெரிஞ்சிட்டு வந்துதான் தினம் சண்டை போட்டான்
அவனையும் குறைசொல்ல முடியாது "
"அதுக்காக இரண்டு புள்ளையைப்
பெத்துட்டு ஓடிப்போறது சரியா?"
"இங்க சரி தப்பு சொல்ற இடத்தில் நாம் இல்லைடி *
அவன் நல்லாத்தான் இருந்தான்
ஊருக்கு வந்த ஆட்டக்காரி இவனுக்கு என்ன மாயம் பண்ணினாளோ அவ பின்னாடியே போயிட்டான்
"சரி போனதை எண்ணி மனம் வருந்துனா வந்துடுமா இனி நாம் வாழும் வழியை பார்ப்போம்" என்றாள் மாயா.
"என்மேல் கோபம் இல்லையா மாயா"
"உன்மேல் எதுக்கு மா கோவம் வருது
நன்றிதான் சொல்லணும்
"நீ எதுக்கு நன்றி சொல்ற ?"
"வயித்துல நான் எப்படி இருப்பேன்னு தெரியாதபோதே அழிக்க நினைச்ச நீங்க நான் இப்படி ஊனமா பிறந்தும் என்னை கவலை இல்லாம வளர்த்தீங்களே அதுக்கு தான்."
"நீ எங்க வீட்டு மகராணிடி"
"ஆமா கால் உடைந்த அரியணை" என்று சொல்லிச் சிரித்தாள்.
தனது தங்கையும் தம்பியோடு பாட்டி வந்துகொண்டிருக்க அமைதியானாள் மாயா.
" என்னடி இந்தா இருக்குற கடைக்குப்போயிட்டு வர இவ்வளவு நேரமா ?"
"இல்லக்கா கார்த்தி ஒரே அடம் டிக்டாக் மிட்டாய் வேணும்னு அது அந்த கடையில் இல்ல அதான் அண்ணாச்சி கடைக்கு கூட்டிப்போனேன்" என்றாள் ஜெனி.
"சரி சரி கால் மூஞ்சி கழுவிட்டு உள்ள போங்க"
"பாட்டி நீயெங்க பாத்த இவங்கள?"
"போற வழியில் வந்துட்டாங்க ..."
"அப்போ ஏன் லேட் ?"
"வர்ற வழியில் நம்ம பொன்னுச்சாமி
பேத்தி இருக்குல .."
"யாரைச் சொல்ற பாட்டி "
"அதான்டி உன் தங்கச்சி கூட இரண்டாம் வகுப்புல சண்டைபோட்டுட்டு பள்ளிக்கூடத்தை விட்டுப்போனாளே தாசில்தார் வேலாயுதம் மகள் ..."
"அவளுக்கென்ன?"
"அவ கடைத்தெருவில் இவளைப்பாத்துட்டு..."
"பாட்டி பாட்டி ஏதும் பிரச்சனையா?."
"பொறுடி அதெல்லாம் ஒன்னுமில்லை
கட்டிபிடிச்சு கொஞ்சுறாளுங்க "
"என்ன பாட்டி சொல்ற அவங்க இரண்டு பேரும் சண்டை தானே "
"ஆமா ஆனால் அவங்க இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமா இருந்தார்களே ..."
"அப்போ நீ வேற யாரையோ சொல்ற
இரு அவகிட்டயே கேட்கிறேன்"
"ஜெனி இங்க வா
மார்க்கெட்ல யார்கூட பேசிட்டு இருந்த ?"
"ஜானுகூடத்தான் அக்கா"
"அவகூட நீ சண்டைல அவகூட எப்படி நீ பேசுன?"
"அக்கா அந்த சண்டைகூட எங்களுக்குள் வரல நம்ம உமா இருக்காளே அவ ஜானுவோட பென்சிலை உடைச்சிட்டா அதற்கு ஜானு உமாவை கீழே தள்ளிவிட்டா
உமாவுக்கு கால்ல அரைச்சிடுச்சு
அதைக்கேட்க போய் பிரச்சனை ."
"சரி இப்போ எப்படி?"
"அது தெரியாத வயசு ,அவளுக்கு அடம்
சண்டை போட்டுப்போனாள்
இப்போ அது தப்புனு சொல்லி வந்து பேசினாள் .."
"ம்ம் "என்று எதையோ யோசித்துவிட்டு " சரி நீ போ" என்றாள் மாயா.
"எதற்காக அக்கா ஜானுவை விசாரிக்கிறா ?"என்று தலையைச் சொரிந்தபடி போக...
கார்த்தி டிக்டாக் மிட்டாயில் ஒன்றை எடுத்து மாயாவின் வாயில் போட்டு "தின்னுக்கா " என்றான்.
"அவள் அதை எடுத்து நீயே தின்னுடா எனக்கு வேண்டாம்" என்றாள்
"அய்யே எச்சி ...போ எனக்கு வேண்டாம் நீயே தின்னு" என்று சொல்ல...
"இரு இரு எச்சிலா சொல்ற வருவதானே" என்று பழிக்க..
"என் செல்ல அக்காவுல .".என்று ஓடிவந்து கட்டிக்கொண்டான்.
"சரி சரி போய் சாப்பிட்டு தூங்குங்க
நேரமாச்சு "என்று பாட்டி சொல்ல மாயா தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு நடந்தாள்.
**********
"சுரேஷ் "
"என்ன மச்சான் ?"
"அந்த பாக்ஸில் என்ன இருக்கு"
"தெரியாது "
"பின்ன எதுக்கு நமக்கு இரண்டு கோடி பணம் தர்றாங்க?"
"டேய் நீ கேள்வி கேட்க வந்தியா ? இல்லை சம்பாதிக்க வந்தியா ?"
"இருந்தாலும் உள்ளே ஏதோ மிகவும்
விலையுயர்ந்த பொருளோ இல்லை மிகவும் தேவையான பொருளோ இருக்கும்னு நினைக்கிறேன்"
"அதுக்கென்ன ? '"
"இதுல பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறேன்"
"டேய் நீ என்ன லூசா ?"
"ஏன்டா ?"
"பின்ன இவ்வளவு பெரிய அமௌண்ட சும்மா தூக்கிக்கொடுக்க அவங்க என்ன பைத்தியமா ?"
"பிரச்சினை இருப்பதால் தான் நமக்கு பணமே"
"அந்த பாக்ஸைக் கவனமா வச்சிக்கோ இன்னிக்கு அவங்க சொன்ன பார்டிக்கிட்ட கொடுத்த அடுத்த நிமிடமே நமக்கு பணம் வந்துடும் "
"அப்புறம் ஆளுக்கு ஒருகோடினு பிரிச்சிக்கிட்டு போயிட்டு இருக்க வேண்டியது தான் "என்று சொல்ல..
"சரி மச்சான் எப்போ கிளம்பணும் ?"
"இன்று இரவு "
"சரி நீ அங்க வந்துடு" என்று அந்த பாக்ஸை எடுத்துக் கொண்டு அவன் கிளம்ப..
வசந்த் எதையோ யோசித்துக்கொண்டு நின்றான்
தொடரும்
எழுத்தாளர் நாகா