• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் _16

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
[
தொடர்_16
***********

👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"

இதுவரை...


"சரி மச்சான் எப்போ கிளம்பணும் ?"

"இன்று இரவு "

"சரி நீ அங்க வந்துடு" என்று அந்த பாக்ஸை எடுத்துக் கொண்டு அவன் கிளம்ப..

வசந்த் எதையோ யோசித்துக்கொண்டு நின்றான்.

இனி....

சுரேஷின் மனதுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த பேராசை மிருகம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கும் வசந்தை பேசாமல் விட்டுவிட்டு அந்த பார்ட்டியிடம் கொடுத்து மொத்த பணத்தோடு கிளம்பி விட்டாலென்ன என்று நினைத்தவன்
யோசனையை மாற்றிக்கொண்டான்

இல்லை இது இல்லீகல் பிரச்சினை ஒருவேளை இந்த பொருளை வாங்கியவன் நம்மை ஏமாற்றி விட்டால் உள்ளதும் போகும் அதுமட்டுமின்றி ஏதேனும் பிரச்சினை என்றால் நமக்கு மட்டுமே வரும்
அதனால் அவன் துணைக்கு வேண்டும்
ஒருவேளை மாட்டினால் தப்பிக்க ஒரு ஆள் வேண்டும் என்ன செய்வதென தீர்க்கமாய் முடிவெடுத்தவன் அவனோடு கூட்டணி வைத்துக்கொள்ளவே விரும்பினான்

நேரம் இரவு பதினொன்றை தொட வசந்த் ஃபோனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டான்

"தயாராயிரு வருகிறேன்"

மெசேஜைப் பார்த்த வசந்த் உடனே கிளம்பத் தயாரானான்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டின் வாசலில் வந்து நின்று பைக் ஹார்ன்னை அழுத்த வசந்த் கீழிறங்கி வந்து சுரேஷ் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டான்

"கவனம் வசந்த் அது கீழே போட்டுவிடாதே நமது வாழ்க்கையே அதை நம்பித்தான் இருக்கு"

"ஓகே மச்சான் "என்றவாறு இருவருக்கும் இடையில் வைத்து பிடித்துக்கொண்டான்.
பைக் வேகம் எடுக்க யாரோ இருவர் இவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.

*****************


முகம் தெரியாத இருவர் மார்க்கெட்டுக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க ...ஒருவன் மட்டும் ஏதோ தொலைபேசியில் புரியாத மொழியில் எதையெதையோ சொல்லிக்கொண்டிருந்தான்

ஒருவனது இடுப்பில் துப்பாக்கி லேசாக அடித்த காற்றில் சட்டை தூக்கிக்கொள்ள தெரிந்ததை அவசரமாக மூடிக்கொண்டான்

மற்றொருவன் யாருக்கோ காத்திருந்தான் .
நிச்சயமாக இவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இல்லை.
எதற்காக வந்திருக்கக் கூடும் யோசித்தும் பதில் தெரியவில்லை
சரியாக ஆள்அரவம் இல்லாத நேரம் பார்த்து இவர்கள் வந்திருக்கிறார்கள்
இவர்களின் நோக்கம் என்ன ?

அப்படியே அரைமணி நேரம் கடந்தபின் ஒரு பைக் வந்து நின்றது அதில் வந்தவர்கள் ஹெல்மெட்டைக் கழற்றாமல் இருந்ததால் யாரென அறிந்துகொள்ள முடியவில்லை

அவர்கள் அங்கு நின்றவர்களிடம் ஒரு பெட்டியை நீட்ட அவர்கள் பதிலுக்கு ஒரு பெட்டியை மாற்ற பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர்.

கைகளைக் குலுக்கி விட்டு மீண்டும் பைக்கில் வந்தவர்கள் புறப்பட அங்கு நின்ற இருவர் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிப்புறப்பட தயாராக...

மற்றொரு பைக்கில் வந்தவர்கள் அவர்களை நோக்கிச் சராமாரியாக சுட ஆரம்பித்தார்கள்.அப்போது பைக்கில் வந்தவர்களில் ஒருவனின் ஹெல்மெட் கீழே விழ அவசரமாக எடுத்துமாட்டிக்கொண்டான் அவனது முகம் ஆழமாய் பதிய .. மீண்டும்
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் காதுகளைத் துளைக்கப் பதறிவிழித்த மாயா
அடச்சே கனவு என்று மீண்டும் படுக்கப்போனாள்.

பாட்டி எழுந்து " என்ன ஆச்சு மாயா" என்று கேட்க...
"ஒன்றும் இல்லை கெட்ட கனவு "என்றாள்

"தண்ணிகுடிச்சிட்டு படு" என்றாள் பாட்டி

தூங்க முயற்சி செய்தும் வராததால் யோசித்துக்கொண்டே இருந்தாள்.இது கனவா இல்லை நிசமா உண்மையில் ஏன் இந்த கனவு வந்தது ?

சரி காலையில் முதல்வேலையாக மாரியம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தூங்கினாள் மாயா

*****************


சுரேஷும் வசந்தும் பைக்கில் வந்து சேர இவர்களுக்காகவே காத்திருந்த வடநாட்டைச்சேர்ந்த இருவர் அவர்களை வரவேற்க பெட்டிகள் கைமாறும் நேரத்தில் யாரோ இருவர் இவர்களைச் சுட அந்த இடமே போர்க்களமாகிப்போனது.

வசந்தும் சுரேஷும் அவர்களிடம் தான் கொண்டு வந்த பெட்டியைக்கொடுத்துவிட்டு தப்பிக்க
காரில் வந்த ஒருவனது நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்தான்
மற்றொருவன் பெட்டியோடு காரில் ஏறித்தப்பித்தான்

****

அதிகாலை நேரத்தில் விழிக்கும் மாயா இன்று 8 மணிவரை எழும்பாமல் படுத்திருக்க ஜெனி அவளைத் தட்டி எழுப்பினாள்

"அக்கா இங்க பாரு நம்ம மார்கெட்டில் இரவு துப்பாக்கி சூடு நடந்திருக்கு ஒருத்தர் பலியாகி இருக்கார்னு நியூஸ் வந்திருக்கு" என்று சொல்ல பதறி விழித்து கண்ணைக் கசக்கிக் பார்த்தாள்.

#மார்க்கெட்டில்_துப்பாக்கிச்_சூடு :
அடையாளம் தெரியாத வட இந்தியர் பலி

படித்ததும் பேப்பரைத் தூர எறிந்தவள் மீண்டும் எடுத்து இறந்து கிடந்தவனைப் பார்த்தாள்.

அவன் கனவில் வந்தவனில் ஒருவன்

அவள் அப்படியே சரிந்தாள் ஜெனி "அக்கா அக்கா" என்று கத்தினாள்










எதற்காக பேப்பரைப் பார்த்ததும் அக்கா மயங்கி விழுந்தாள்.
அப்படி என்ன இருக்கிறது என்று எடுத்துப் பார்க்க
ஒருவன் இறந்து கிடந்தான்

இதற்கெல்லாம் அவள் பயப்படுபவள் இல்லையே என்னவாக இருக்கும் ?
பாட்டியைக் கூப்பிட்டாள்

"ஏன்டி இப்படி காலங்காத்தால கத்துற ?"

"இங்க வா பாட்டி அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டா"

"என்னடி சொல்ற ஏன் மயக்கம் போட்டு
விழுந்தாள்?"

"அது தெரியல இந்த பேப்பரைப் பார்த்ததும் மயங்கிட்டா "

அப்படி என்ன இருக்கிறது என்று அவளும் பார்த்துவிட்டு சரி சரி கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா" என்று சொல்ல பாட்டியிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்து வந்து தெளித்தாள்

மயக்கம் தெளிந்து எழுந்த மாயா அந்த பேப்பரைத் தேடினாள்

"மறுபடி எதுக்குடி அந்த பேப்பரைத் தேடுற ?"

"இல்லை பாட்டி அதுல ஒருத்தன் செத்துப்போயிட்டான் "

"அதுக்கென்ன ?"

"பாட்டி நான் அவனைப் பார்த்திருக்கேன் ஆனால் பத்திரிகையில் அடையாளம் தெரியாத நபர்னு போட்டுருக்கு‌"

"அடியேய் என்னடி உளறுற?"

"நான் உளறல பாட்டி இவன் கூட ஒருத்தனும் இருந்தான் "

"ஆமா இவனை நீ எங்க பார்த்த ?"

அந்த மார்கெட்டுல.

"நீ என்ன டி சொல்ற ? எப்ப பார்த்த ?"

"நேத்து நைட்டு."

"உனக்கு என்னமோ ஆச்சு நீ எங்கடி அங்க போன?
நீ இரண்டு வருசமா இந்த வீட்டைவிட்டு வெளியே போகலையே"

"நீயெப்படி போயிருக்க முடியும் கனவு கினவு கண்டு ஒளறாம சும்மா இரு யாராவது கேட்டா பிரச்சினை ஆகிடப்போகுது
செத்தவன் வடநாட்டு காரனாம் பார்த்தா நல்லவனா தெரியல "

"ஆமா பாட்டி கனவுலதான் பார்த்தேன்
அவன் ஏதோ தப்பு பண்ணுனான்
இரண்டு பேரு வந்தாங்க இவனும் இவன் கூட்டாளியும் வேறு இரண்டு பேருகிட்ட ஒரு பெட்டி வாங்கிட்டு இவனுக ஒரு பெட்டி கொடுத்தானுக "

"அப்போ யாரோ இரண்டு பேர் வந்து இவனுகள சுட்டானுக அதில்தான் இவன் செத்தான் அதுல ஒருத்தன் முகம் இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது"

"ஏய் ஏய் உன் கனவுல நடந்ததை உண்மையினு போட்டுக் குழப்பிக்காத "
"ஒருவேளை நீ கண்ட கனவுப்படி நடந்தாலும் நமக்கு அதால எந்த பிரச்சனையும் இல்லை நாமாக போய் மாட்டிக்கக்கூடாது."

"நாமிருக்கும் சூழ்நிலை தெரியும்ல யார் எக்கேடு கெட்டா என்ன ?"

"என்ன பாட்டி இப்படி சொல்ற ?"

"பின்ன என்னடி நாம போய் சொன்னதும் மாலை மரியாதை போட்டு வரவேற்க போறாங்களா ?"

"உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு நம்மள உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்க"

"இல்லை பாட்டி உண்மை எப்படியும் வெல்லும் "

"அடி போடி பைத்தியக்காரி உண்மை எப்போதுமே கொல்லுமடி "

"போ பாட்டி நான் சொல்லத்தான் போறேன் "

"பொட்டப்புள்ளைக்கு இம்புட்டு பிடிவாதம் ஆகாதுடி ‌போலீஸ்காரங்க அங்கிட்டும் பேசுவானுக இங்கிட்டும் பேசுவானுக
அவனுகளுக்கும் அந்த கூட்டத்திற்கும் சம்பந்தம் இருக்கும் "

"பின்னாடி நமக்குத்தான் பிரச்சினை உங்கம்மா வேற முடியாம படுத்துருக்கா நீ ஏதும் குண்டக்க மண்டக்க பண்ணிடாதே " என்று கெஞ்சினாள் பாட்டி.

இதற்குமேல் இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த மாயா அமைதியானாள்.

ஜெனிக்கு , மாயாவுக்கு வந்த கனவு எப்படி பலித்தது என்று யோசனை வந்தது.

*****************************

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்த வசந்தும் சுரேஷும் நேராக தங்களது அறைக்கு வந்து கிடைத்த பணத்தை சரிபாதியாக பங்கிட்டுகொண்டார்கள்.

"மச்சான் இன்னிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்தது கடவுள் புண்ணியம் "

"இனி நாம எப்பவும் சந்தித்துக்கொள்ள வேண்டாம் யாரோ நம்மைக் குறிவைக்க ஆரம்பித்துவிட்டார்கள் "

"இந்த பணத்தை வைத்து ஏதாவது தொழில் பண்ணிச் செட்டிலாயிடு
சிம் கார்டு எல்லாம் உடைச்சி போட்டுவிடு சரியா " என்றான் சுரேஷ்.

"சரி மச்சான் உன்னால் எனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைச்சிருக்கு என்னைக்கும் உன்னை மறக்க மாட்டேன்"

"ஏய் லூசா நீ இந்த நிமிடமே நீயாரோ நான் யாரோ ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் இந்த விசயத்தை இத்தோடு மறந்துடு "

"சரி மச்சான் பை " என்று தனக்குரிய பங்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் சுரேஷ்.

அவன் போன பின்னே அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த போட்டோவின் பின்புறம் வைத்திருந்த வீடியோகேமராவை எடுத்தான் அதிலிருந்த மெமரிக்கார்டை கழற்றி எடுத்துக்கொண்டு கூடவே அங்கிருந்த கப்போர்ட்டில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன் சிலிண்டரை ஓபன் செய்து வெளியில் இருந்து லைட்டரைப் பற்ற வைத்து தூக்கிப்போட்டான்
அந்த அறை வெடித்துச்சிதற அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

சுரேஷ் வசந்த்துக்குத் தெரியாமல் தன் பாக்கெட்டில் வைத்து எடுத்த வீடியோவைப் பார்த்து சிரித்தான்.

தொடரும்

எழுத்தாளர் நாகா
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
ரெண்டு பேருமே ஒருத்தனுக்கொருத்தன் சளைச்சவனில்லை 🤣