தொடர்_2
***********


நான் நீ நடுவில் பேய்


************************""""""**********"
இதுவரை...
"உன் புருஷன் கிட்ட கேளு ,போமா போய் வேலையைப்பாரு ,மறந்துறாம அவர்கிட்ட சொல்லிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிச்சனில் ஏதோ கீழே உடைந்தது போல பலத்த சத்தம் கேட்க...
"இந்த பூனைக்கு இதே வேலையாய் போச்சு சரிமா வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
இனி...
கிச்சனில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் தாறுமாறாய் கலைந்து கிடக்க .."இந்த ஜெனி இருக்கே வரவரச் சரியில்ல"
"எல்லா பொருட்களையும் தட்டிவிட்டுட்டு எங்க போச்சு?"
ஜெனி ஜெனி என்று கூப்பிட்டும் எந்த
சத்தம் வரவே இல்லை, "கூப்பிட்டதும் மியாவ் என்று ஓடிவரும் ஜெனி இன்னிக்கு எல்லாத்தையும் தட்டியதால் பயந்து ஒளிந்து கொண்டதோ?" என்று நினைத்தாள்
"ஜெனி ,அம்மா ஒன்னும் பண்ண மாட்டேன் வா இல்லை இன்னிக்கு நீ பட்டினிதான் சொல்லிட்டேன்
ஒழுங்கா வந்திடு.."என்று எவ்வளவோ சொல்லியும் வராததால் கோபமாக
வெளியில் வந்தாள்..
"என்னதான் குழந்தையாக நாம் வளர்த்தாலும் இந்த ஐந்தறிவு பிராணிகள் சேட்டையை ஒடுக்காதுங்க.. வரட்டும்" என்று புலம்பிக்கொண்டிருக்க ...
மது அம்மா ஃபோன் செய்தாள்
"என்னடி அங்க சத்தம்
என்ன ஆச்சு ?"
"அது ஒன்னும் இல்லைமா நம்ம ஜெனி பாத்திரத்தை உருட்டிவிட்டுருச்சு"
"அப்பவே சொன்னேன் வளர்க்கிறதா இருந்தா அதை ஒழுங்கா கூண்டுக்குள்ள போட்டு வளருனு
நீ எங்க கேட்கிற"
"மாசமாசம் எவ்வளவு செலவு பண்ணுவ"
"அம்மா சும்மா இருமா நானே ஜெனியைக் காணோம்னு தேடிட்டு இருக்கேன் நீ வேற.."
"சனியன் தொலைஞ்சிச்சுனு விட்டுட்டு
வேலையைப்பாருடி"
"அம்மா..நீ ஃபோனை வை டென்ஷன் பண்ணாம"
"எது சொன்னாலும் என்கிட்டயே ஏறு .
அதுக பண்றதை விட்டுடு "
நான் பாத்துக்கறேன் நீ வேலையைப்பாரு
"என்னமோ போ மாப்ள வந்துட்டாரா?"
"இன்னும் வரல சரி வைக்கிறேன்" என்று டொக்கென்று வைத்தாள்.
"எங்க போயிருக்கும் எல்லா இடங்களிலும் தேடியாச்சு ..
சரி தோட்டத்தில் பார்க்கலாம் " என்று வெளியில் வர...
பாபு சாப்பாட்டோட வந்தான் .
"என்னடி எனக்காக காத்திட்டு இருக்கியா ? என் செல்லம் "என்று கன்னத்தில் கிள்ளி " வாவா சாப்பிடலாம் " என்றவனை முறைத்தாள்
"எதுக்குடி முறைக்கிற லேட் ஆயிடுச்சினா
நான் என்ன பண்ண அங்க கூட்டம்
வாங்கிட்டு வரவேண்டாமா?"
"நாமதான் ஹோட்டல் சாப்பாடுனு நினைச்சா அங்க ஏற்கனவே ஒரு ஊரே நிக்குது யாருமே சமைக்க மாட்டாங்க போல இருக்கு."
பாபு பேசிக்கொண்டே போக மது அமைதியாய் இருந்தாள்
"என்னடி நானா பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்க ? என்னாச்சு உனக்கு ?"
"நம்ம ஜெனியைக் காணோம் "
"அது எங்கயாவது ஒளிஞ்சு தூங்கும்
அதுக்கா மூஞ்சைத்தூக்கி வச்சிருக்க
"ம்ம் சரி வா பார்க்கலாம்
நீ நல்லா தேடுனியா?"
"எல்லா இடங்களிலும் தேடியாச்சு காணோம் "
"நல்லா பார்த்திருக்க மாட்ட
நான் பார்க்கிறேன் நீ பசியில் இருக்க போய் சாப்பிடு" என்றான்.
"இல்லைங்க எனக்குப்பசிக்கல"
"கொலைப்பசினு கத்துன இப்ப பசிக்கல சொல்ற?"
"ஜெனியை நான் தேடுறேன் நீ சாப்பிடு போ"
"இல்ல ஜெனி வராம நான் சாப்பிட மாட்டேன் "
பேசிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தவன் " என்னடி இது
எல்லாம் கீழே விழுந்து கிடக்கு
யார் பண்ணின வேலை?"
"ஜெனியாத்தான் இருக்கும்
அப்போ அது இங்கதான் இருக்கும்"
"இல்லைங்க அது தட்டிவிட்டுருந்தாலும் இவ்வளவு கூப்பிட்டும் வராம இருக்காது "
"பயத்துல எங்கயாவது உட்கார்ந்து இருக்கும்
ஸ்டோர் ரூம் பார்த்தியா ?"
"இல்லைங்க "
"அப்போ அங்கதான் இருக்கும் , இரு வாரேன், என்று ஜெனி ஜெனி என்று கூப்பிட்டபடி ஸ்டோர் ரூமைத் திறக்க ஒரே இருட்டாக இருந்தது.
"அந்த லைட்டைப் போடு " என்றதும் மது லைட் சுவிட்சைப்போட்டாள்.
பாபு ஒரு இடம் விடாமல் தேடியும் ஜெனியைக் காணவில்லை "சரி நீ வெளியில் வா " என்று சொல்லி லைட் சுவிட்ச்சை ஆப்செய்து கதவை அடைக்க...அந்த இருட்டில் இரண்டு கண்கள் அவனையே முறைத்து பார்க்க திரும்பவும் சுவிட்ச்சைப்போட்டான் அங்கே எதுவும் இல்லை.
"ஏங்க மறுபடி சுவிட்ச்சை போட்டு ஆஃப் பண்ணுறீங்க.?"
"சும்மாதான் நீ போ "என்று திரும்பவும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கதவைச் சாத்தினான்.
"என்னங்க ஜெனி எங்க போயிருக்கும்?"
"அட இங்கதான் பயத்தில் இருக்கும்
வரும் நீ சாப்பிடு" என்று சொல்ல..
"வேண்டாங்க ஜெனி இல்லாம சாப்பிட முடியாது "
"இங்கபாரு ஹனி நீ சாப்பிடாம கிடந்து உடம்பைக் கெடுத்துக்கப் போறியா?"
"இல்லைங்க அது வந்து.."
"நான் எப்படியும் ஜெனியைக்கண்டுபிடிச்சு கொண்டு வாரேன்."
"நீ சாப்பிடு,நானே ஊட்டி விடுறேன்" என்று வாங்கிவந்த இட்லியை பிசைந்து ஊட்டிவிட்டான்
மனசு முழுவதும் ஜெனி நினைப்பால் இரண்டு இட்லியையே வேண்டா விருப்பாக விழுங்க ...
"இன்னும் ஒன்னு "
"ப்ளீஸ் வேண்டாங்க அப்புறம் வாமிட் பண்ணிடுவேன்."
"சரி சரி இந்த தண்ணியைக்குடி "என்று எடுத்துத் தந்துவிட்டு மிச்ச இட்லியை மூடிவச்சிட்டு ஜெனியைத்தேடிப்போனான்.
"என்னங்க நீங்க சாப்பிடாம போறீங்க
சாப்பிட்டு பாருங்க, என்னைச் சாப்பிடச்சொல்லிட்டு நீங்க பட்டினி கிடக்கீங்க ?"
"நான் சாப்பிடாமல் தூங்கிட்டேன் நீ இரு ஜெனியைப் பார்த்துவாரேன்" என்று கிளம்பித் தோட்டத்திற்கு வந்தான் ஒரு மூளையில் ஈக்கள் மொய்க்கும் சத்தம்கேட்க அங்கிருந்த குரோட்டன்ஸ் செடியை விலக்கிப் பார்க்க ஜெனி வாயைப்பிளந்தபடி ஐந்தாறு இடங்களில் வெட்டுப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தது.
"ஜெனிக்கு என்னாச்சு யார் இந்தமாதிரிக் கொடூர கொலை பண்ணியிருப்பா "
"வாயில்லா ஜீவனை அடிப்பதே பாவம் இதில் இவ்வளவு வக்கிரத்தைக் காட்டியிருக்கிறார்களே
இதை மது பார்த்தால் எப்படித் தாங்குவாள்" என்று யோசித்தவன் காணாமல் போன ஜெனி காணாமல் போனதாகவே இருக்கட்டுமென்று அவசரமாக குழிதோண்டிப்புதைத்துவிட்டு கையைக் கழுவிக்கொண்டு இருக்கும்போதே..
மதுவிடம் இருந்து ஃபோன் வர எடுத்து "ஹலோ" என்றான்.
"என்னங்க நம்ம ஜெனி வந்துடுச்சு
நீங்க எங்க இருக்கீங்க ?"
"என்னது ஜெனி வந்துடுச்சா?"
"ஆமாங்க பயத்தில் நடுங்கிட்டே இருக்கு சீக்கிரம் வாங்க " என்றதும்
"என்ன இது ஜெனியை இப்போதுதான் புதைத்தேன் அங்க என்னன்னா ஜெனி வந்திருக்குனு சொல்றாளே " என்று நினைத்துக்கொண்டு உள்ளே ஓடினான்.
அங்கே சுவரின் மூளையில் பயத்தில் நடுங்கியபடி ஜெனி நின்றிருக்க அவனது முகத்தில் ஈயாடவில்லை
"என்னங்க என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்கீங்க?"
"எனக்கு இப்பத்தான் போன உயிரு வந்திருக்கு தெரியுமா?"
"உண்மை தான் எனக்கும் இப்பத்தான் போன உயிரு வந்திருக்குனு தெரியுது"
"நீங்க என்னங்க சொல்றீங்க? ஒன்னுமே புரியலை "
"புரியாமல் இருப்பதே நல்லது தான்
சரி விடு நீ இப்பவாவது நிம்மதியா இருக்க தானே "
"சரி அதுக்கு சாப்பாடு கொடு" என்றதும் அதைநோக்கிச் சாப்பாட்டோடு மது போக அது இன்னும் பயத்தில் நடுங்கிட்டே இருந்தது.
"ஜெனி நான் அம்மாடா
உன்னை அடிக்க மாட்டேன் நீ பயப்படாதே சாப்பிடு பர்ஸ்ட் "என்றாள் மது.
ஜெனி சாப்பாட்டை முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தது
"சரி நீ வச்சிட்டு வா மது ,அது சாப்பிடும்
நேரமாச்சு காலைல மீட்டிங் இருக்கு சொன்னல ?"
"ஆமாங்க ,ஜெனியைக் காணோம்னு எல்லாத்தையும் மறந்துட்டேன்"
"அப்புறம் அம்மா ஃபோன் பண்ணினாங்க தங்கைக்கு மாப்ள பார்த்து இருக்காங்களாம் ஞாயிறு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களாம் "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னவா ஊருக்குப் போகணும், யாரோ மாதிரி பேசுறீங்க ?"
"வீட்டிற்கு மூத்த மாப்பிள்ளை பொறுப்பு இல்லாம பேசுறீங்க?"
"அம்மா ஃபோன் பண்ணலனு கோபமோ?"
"அதெல்லாம் ஒன்னுமில்லை "
"பின்ன எதுக்கிப்போ மூஞ்சைத்தூக்கி வச்சிருக்கீங்க ?"
"மாப்ளனு நினைச்சிருந்தா நான் இருக்கும் போது வேற மாப்ள பாப்பாங்களா அதான் கோபம் "
*எங்க அந்த மூஞ்சியைக் கொஞ்சம் காட்டுங்க இங்க ஒன்னுக்கே அல்லாடுது இதுல இரண்டு கேட்குதோ? " என்று காதைப்பிடித்துத் திருகினாள் மது.
"சரி சரி விடுடி , மச்சினி ஆளு கும்முன்னு இருக்காளேனு கண்ணு வச்சிருந்தேன் இப்படி பொக்குனு போக வச்சிட்டீங்களே?"
"கண்ணு வைப்பீங்க வைப்பீங்க கண்ணை நோண்டினா ,மூஞ்சைப்பாரு "
"ஏன்டி மச்சானுக்கு என்ன குறை ?"
"இவரு ஆணழகன், இவருக்கு இரண்டு கேட்குது ? போய் படுங்க என்று சொல்ல ..
"நான் இன்னும் சாப்பிடலடி "
"இன்னிக்கு பட்டினிதா போங்க"
"ஹனி ப்ளீஸ்" என்று கெஞ்சியும் "சும்மா படுங்க" என்று முறைத்தாள்.
ஜெனி இருவருக்கும் நடுவே வந்து படுத்துக் கொண்டது.
"என்னடி மது, ஜெனி கிட்டயே வரமாட்டேனு சொல்லுச்சு நடுவுல வந்து படுத்துக்கிச்சு..."
"அதுக்குக் கூட தெரிஞ்சிருக்குங்க நீங்க சும்மா இருக்க மாட்டீங்கனு" என்று சொல்லிச் சிரித்தாள்.
"இந்த கிண்டலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை நான் என்ன சொல்றேன் இவ என்ன சொல்றா?" என்று நினைத்துக்கொண்டு..
ஜெனியைப் பார்க்கப் பயமாக இருந்தது.
"மது...மது.."
"சும்மா படுங்க .."
"ப்ளீஸ் ...மது.."
"சும்மா இருங்க நாளை மாலைக்கு ஊருக்கு கிளம்பனும் "
ச்ச்..என்று திரும்பிப் படுத்தவனை "என்ன கோபமா என் செல்லத்துக்கு "
"நானே டயர்டுல இருக்கேன் புரியுதா ?"
"ஒரு இச் தரலாம்ல..."
"பேசாம படுங்க ஜெனி பார்த்துக்கிட்டு இருக்கு.."
என்று பிளேன் கிஸ் கொடுக்க...அதைத் தட்டிவிட்டது ஜெனி...
"ஹாஹா" என்று சிரித்தபடி அவள் திரும்பிப்படுக்க..
பாபு கோபத்தில் அப்படியே தூங்கிவிட்டான் .
நள்ளிரவு பன்னிரண்டு மணி.
சின்ன முள் பன்னிரெண்டுக்கு நேராக வந்துநிற்க...
பாபுவின் மீது இரண்டு கரங்கள் தழுவ ஆரம்பித்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாபு புரண்டு படுத்தான்.
அவனை இறுக்கமாகக் கட்டியணைத்த அந்த கரங்களுக்கு சொந்தக்காரி இப்போது அவனது உதட்டில் நச்சென்று முத்தமிடத் திடுக்கிட்டு எழுந்தான்.
"என்னடி பண்ற ? டயர்டா இருக்குனு சொன்ன , இந்த ராத்திரில வந்து கொஞ்சுற ? "
"வேணாம்னா போங்க" என்று திரும்பிப்படுக்க...
"சரி சரி கோவிச்சிக்காத ஹனி .." என்று அவளை இறுக்கமாக கட்டியணைக்க ..
மதுவின் ஃபோன் அடித்தது...
பதறி விழித்த மது ஃபோனை எடுத்து ஹலோ என்றாள்
"ஹேப்பி பர்த்டே மது " என்றாள் அவள் அம்மா.
"தேங்க்ஸ் மா "என்று சொல்லிவிட்டு
ஃபோனை வைக்க பாபு யாரையோ கட்டியணைத்திருக்க..
"என்னங்க ..என்ன பண்றீங்க ?" என்று கத்தினாள்
பாபு பதறியடித்துச் சுயநினைவு வந்து
தான் கட்டியணைத்திருப்பது யாரென்று பார்க்க அச்சு அசலாக மதுவாகவே இருந்தாள் .
அவளைத்தள்ளிவிட்டு எழுந்தான் பாபு.
"என்னங்க இவ என்னை மாதிரி இருக்கா யாருங்க இவ ..என் கட்டிலிலே இவகூட நீங்க?"
"ஏய் ஏய் நிறுத்து இதுல யார் உண்மை?
என்ன நடக்குது தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிக் கொஞ்சிட்டு இப்போ யாரு என்னனு கேட்கிற?"
இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க அந்த உருவம் இருவரையும் பார்த்துச்சிரித்தது.
மது பயத்தில் பாபுவின் மேல் சாய்ந்தாள்.
"மது ரிலாக்ஸ் இது ஏதோ கெட்ட சக்திமாதிரி தெரியுது "
"இதோ வாரேன்" என்று சாமிரூம் போய் விபூதியோடு வந்தான்.
அந்த உருவம் சுவரை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
பயம் தெளிந்த மது "என்னங்க நடக்குது இங்க?
ஆமா எதுக்கு எங்க அம்மா எனக்கு
ஃபோன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொன்னாங்க?"
"பிறந்த நாளா யாருக்கு எப்போ பண்ணினாங்க?"
"இப்பத்தாங்க "
"எங்க ஃபோன் எடு பாப்போம் "
என்று மதுவின் ஃபோன் எடுத்து கால் ஹிஸ்டரி செக் பண்ணினான்.
"எந்த காலும் வரவில்லை .
என்ன மது எந்த ஃபோனும் வரலையே."
"என்னங்க சொல்றீங்க?"
"நான் ஃபோன் வந்துதான் எழுந்தேங்க."
"உண்மையாவே வந்ததுங்க"
"நான் என்ன பொய்யா சொல்றேன்
சரி இரு உங்க அம்மாகிட்ட கேட்கலாம்"
"வேண்டாங்க அப்புறம் அவங்களும் பயப்படுவாங்க"
"அதுவும் சரிதான். சரி நம்ம ஜெனி எங்க ?"
"இங்க தாங்க இருந்துச்சு
நான் கத்துன கத்துல ஓடியிருக்குமோ?"
"ஹாஹா" என்று சிரித்தான்
"எதுக்குங்க இப்ப சம்பந்தம் இல்லாம சிரிக்கிறீங்க?"
"பின்ன நீ கத்துனதாலதான் ஓடிச்சின்னு தெரியலையா?"
"என்னங்க சொல்றீங்க?
அப்போ ஜெனிதா அந்த பொண்ணா?"
"நம்ப முடியலங்க
அப்ப நம்ம ஜெனி?"
"அது நேத்தே செத்துப் போச்சு"
"என்னங்க சொல்லுறீங்க ஒன்னுமே புரியல"
"ஆமா மது ,யாரோ நம்ம ஜெனியைக் கொன்று குரோட்டன்ஸ் செடி அருகில் போட்டு இருந்தாங்க."
"நான் தான் புதைத்தேன் , அந்த நேரம் தான் நீ ஜெனி வந்திருக்குனு ஃபோன் பண்ணின "
"நானும் ஷாக்கோடு உள்ளே வந்து பார்த்தால் ஜெனி இருந்தது
அதே நேரம் நீ கூப்பிட்டு வராத ஜெனி நடுவில் வந்து படுத்தபோது சந்தேகம்
இருந்தது ஆனால் அது இந்த அளவுக்கு ஆகும்னு நினைக்கல"
ஏங்க இதை முதலிலேயே சொல்லல."
"நீ பயப்படுவனுதான்"
"அதுக்காக இதையெல்லாமா மறைப்பீங்க
நமக்கு நடுவில் யாரும் வரக்கூடாது
புரியுதா? "என்றாள்
"சரி சரி நீ தூங்கு காலைல வேலை இருக்கு."
"நீங்களும் தூங்குங்க" என்று இருவரும் நெருக்கமாகப் படுத்திருக்க..
அந்த உருவம் முறைத்து கொண்டு இருந்தது.
**********
" என்னங்க மணி ஏழு ஆச்சு எழுந்திருங்க "என்று குளித்துவிட்டு வந்து எழுப்பிய மதுவை இழுத்து கட்டியணைக்க முற்பட ..."போதும் போதும் உங்க கொஞ்சல் .. நான் இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்...
ஒழுங்கா எழுந்து குளிங்க ..பல்விளக்காம கிஸ்ஸா ஓடுங்க " என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
வேண்டாவிருப்பாக எழுந்து குளித்து ரெடியாகி வர சுடச்சுட இட்லியோடு வந்தாள் மது.
"ஏன்டி டெய்லி இட்லிதானா?"
"பின்ன சாருக்கு என்ன வேணுமாம்?"
"ஒரு பூரி சப்பாத்தி ?"
"இப்போ யாருக்கு நேரமிருக்கு"
"தோசை ஊத்தவே நேரமில்லாமத்தான் இட்லி ஊத்தினேன் நீங்க வேறங்க"
"சரி சரி ..இதுவே போதும் நீ சொல்ற கதையைக் கேட்க நேரமில்லை ஈவினிங் பேசுவோம் "என்று அவசரமாக சாப்பிட்டு எழுந்து ஆபிஸ் ஃபேக்கை எடுத்துகொண்டு ஓட "இருங்க நானும் வாரேன் என்னை ட்ராப் பண்ணிடுங்க..."
"சாரி ஹனி எனக்கு இப்பவே லேட் ஆச்சு நீ ஸ்கூட்டில போயிடு நான் ஒரு க்ளையண்ட்டைப் பார்த்துட்டு ஆபீஸ் போகணும்..."
"சரிங்க மறந்துடாதீங்க ஈவினிங் ஊருக்குக் கிளம்பணும்" என்றவளிடம்
சரி சரி என்று தலையாட்டிவிட்டு
"இந்த பொண்ணுங்க அம்மாவீட்டுக்கு
போவதாக இருந்தால் மட்டும் மறக்கவே மாட்டாங்க நாம் ஒரு இடத்துக்கு கூப்பிட்டா வேலையிருக்கு அது இதுன்னு ஆயிரம் காரணம் அடுக்கறது
என்ன நடிப்பு டா சாமி என்று மனத்திற்குள் நினைத்துகொண்டு சரி வாரேன் "என்று காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
மது வீட்டைப் பூட்டிவிட்டுத் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஆபிஸ் கிளம்பினாள்.
ஜெனி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தது.
"*************
"அம்மா அக்காவும் மச்சானும் ஈவினிங் வந்துடுவாங்க தானே?"
என்று வனிதா கேட்க..
"வந்துடுவாங்கடி ஏன் திடீர்னு இந்த கேள்வி ?"
"இல்லை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது ஆளு இல்லைனா ஒரு மாதிரி இருக்கும்ல"
"அதெல்லாம் நீ கவலைப்படாதே
உங்க மச்சான் உனக்காக வந்துடுவாங்க.
"சரிமா என் பிரண்ட் அனுவ கூப்பிட்டுக்கவா?"
"கூப்பிடுடி ,அவ கல்யாணம் ஆனவதானே ?"
"ஆமாம்மா ஏன் கல்யாணம் ஆகலனா என்ன ? கூப்பிடக்கூடாதா?"
"அப்படி இல்லை வர்ற மாப்பிள்ளைக்கு யார் பொண்ணுன்னு கன்பியூஸ் ஆகக்கூடாதுல.."
"அம்...மா நீ வேற என்னைத்தானே பொண்ணுகேட்டு வாராங்க இதுல
என்ன குழப்பம்?"
"இன்னிக்கு இருக்க நிலையைச் சொன்னேன்டி."
"அக்கா வந்தா அக்காவைப் பிடிச்சிருக்குனு சொன்னா என்ன பண்ணுவ ? "
"அடியே உங்க அக்கா மாதிரியே பேசாதே
அடக்கவொடுக்கமா இரு சரியா ?"
"நான் என்ன ஆடிட்டா இருக்கேன்
சும்மா ஏதாவது சொல்லாதம்மா""
"சரிடி நான் ஏதும் சொல்லல போய் வேலையைப்பாரு.
உன் பிரண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டு நீயே கூப்பிடு."
சரிமா என்று ஃபோனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப்போக...
அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது.
எடுத்து ஹலோ என்றாள் வனிதா.
எதிர்முனையில் ஒரு பெண் பேசினாள்
"உங்க அக்கா தானே மது?"
"ஆமா அவங்களுக்கு என்ன?"
"அவங்களுக்கு ரொம்ப முடியல திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க."
"பக்கத்துல இருக்க ஜெனிபர் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு உடனே வாங்க " என்று சொல்ல...
"ஹலோ ஹலோ யாரு நீங்க?" என்று கேட்க அதற்குள் ஃபோன் துண்டிக்கப்பட்டிருந்தது.
திரும்ப அடித்தும் எடுக்கவில்லை.
யாராக இருக்கும் எதற்காக ஃபோன் போட்டார்கள் என்று யோசித்தவள்.
நாமே கேட்டுவிடலாம் என்று மதுவுக்குப் ஃபோன் செய்ய நீண்ட நேரமாக ஃபோன் எடுக்கவில்லை அவள்.
குழப்பத்தில் மச்சான் பாபுக்கு ஃபோன் செய்ய தொடர்பு பலமுறை நிராகரிக்கப்பட்டது.
பயத்தில் அம்மாவிடம் விசயத்தைச்சொல்ல ஓடிவர
அம்மா யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டு நின்றாள்.
அவள் முகத்தை பார்க்க அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது.
தொடரும்....
எழுத்தாளர் நாகா
***********






************************""""""**********"
இதுவரை...
"உன் புருஷன் கிட்ட கேளு ,போமா போய் வேலையைப்பாரு ,மறந்துறாம அவர்கிட்ட சொல்லிடு" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிச்சனில் ஏதோ கீழே உடைந்தது போல பலத்த சத்தம் கேட்க...
"இந்த பூனைக்கு இதே வேலையாய் போச்சு சரிமா வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
இனி...
கிச்சனில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் தாறுமாறாய் கலைந்து கிடக்க .."இந்த ஜெனி இருக்கே வரவரச் சரியில்ல"
"எல்லா பொருட்களையும் தட்டிவிட்டுட்டு எங்க போச்சு?"
ஜெனி ஜெனி என்று கூப்பிட்டும் எந்த
சத்தம் வரவே இல்லை, "கூப்பிட்டதும் மியாவ் என்று ஓடிவரும் ஜெனி இன்னிக்கு எல்லாத்தையும் தட்டியதால் பயந்து ஒளிந்து கொண்டதோ?" என்று நினைத்தாள்
"ஜெனி ,அம்மா ஒன்னும் பண்ண மாட்டேன் வா இல்லை இன்னிக்கு நீ பட்டினிதான் சொல்லிட்டேன்
ஒழுங்கா வந்திடு.."என்று எவ்வளவோ சொல்லியும் வராததால் கோபமாக
வெளியில் வந்தாள்..
"என்னதான் குழந்தையாக நாம் வளர்த்தாலும் இந்த ஐந்தறிவு பிராணிகள் சேட்டையை ஒடுக்காதுங்க.. வரட்டும்" என்று புலம்பிக்கொண்டிருக்க ...
மது அம்மா ஃபோன் செய்தாள்
"என்னடி அங்க சத்தம்
என்ன ஆச்சு ?"
"அது ஒன்னும் இல்லைமா நம்ம ஜெனி பாத்திரத்தை உருட்டிவிட்டுருச்சு"
"அப்பவே சொன்னேன் வளர்க்கிறதா இருந்தா அதை ஒழுங்கா கூண்டுக்குள்ள போட்டு வளருனு
நீ எங்க கேட்கிற"
"மாசமாசம் எவ்வளவு செலவு பண்ணுவ"
"அம்மா சும்மா இருமா நானே ஜெனியைக் காணோம்னு தேடிட்டு இருக்கேன் நீ வேற.."
"சனியன் தொலைஞ்சிச்சுனு விட்டுட்டு
வேலையைப்பாருடி"
"அம்மா..நீ ஃபோனை வை டென்ஷன் பண்ணாம"
"எது சொன்னாலும் என்கிட்டயே ஏறு .
அதுக பண்றதை விட்டுடு "
நான் பாத்துக்கறேன் நீ வேலையைப்பாரு
"என்னமோ போ மாப்ள வந்துட்டாரா?"
"இன்னும் வரல சரி வைக்கிறேன்" என்று டொக்கென்று வைத்தாள்.
"எங்க போயிருக்கும் எல்லா இடங்களிலும் தேடியாச்சு ..
சரி தோட்டத்தில் பார்க்கலாம் " என்று வெளியில் வர...
பாபு சாப்பாட்டோட வந்தான் .
"என்னடி எனக்காக காத்திட்டு இருக்கியா ? என் செல்லம் "என்று கன்னத்தில் கிள்ளி " வாவா சாப்பிடலாம் " என்றவனை முறைத்தாள்
"எதுக்குடி முறைக்கிற லேட் ஆயிடுச்சினா
நான் என்ன பண்ண அங்க கூட்டம்
வாங்கிட்டு வரவேண்டாமா?"
"நாமதான் ஹோட்டல் சாப்பாடுனு நினைச்சா அங்க ஏற்கனவே ஒரு ஊரே நிக்குது யாருமே சமைக்க மாட்டாங்க போல இருக்கு."
பாபு பேசிக்கொண்டே போக மது அமைதியாய் இருந்தாள்
"என்னடி நானா பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்க ? என்னாச்சு உனக்கு ?"
"நம்ம ஜெனியைக் காணோம் "
"அது எங்கயாவது ஒளிஞ்சு தூங்கும்
அதுக்கா மூஞ்சைத்தூக்கி வச்சிருக்க
"ம்ம் சரி வா பார்க்கலாம்
நீ நல்லா தேடுனியா?"
"எல்லா இடங்களிலும் தேடியாச்சு காணோம் "
"நல்லா பார்த்திருக்க மாட்ட
நான் பார்க்கிறேன் நீ பசியில் இருக்க போய் சாப்பிடு" என்றான்.
"இல்லைங்க எனக்குப்பசிக்கல"
"கொலைப்பசினு கத்துன இப்ப பசிக்கல சொல்ற?"
"ஜெனியை நான் தேடுறேன் நீ சாப்பிடு போ"
"இல்ல ஜெனி வராம நான் சாப்பிட மாட்டேன் "
பேசிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தவன் " என்னடி இது
எல்லாம் கீழே விழுந்து கிடக்கு
யார் பண்ணின வேலை?"
"ஜெனியாத்தான் இருக்கும்
அப்போ அது இங்கதான் இருக்கும்"
"இல்லைங்க அது தட்டிவிட்டுருந்தாலும் இவ்வளவு கூப்பிட்டும் வராம இருக்காது "
"பயத்துல எங்கயாவது உட்கார்ந்து இருக்கும்
ஸ்டோர் ரூம் பார்த்தியா ?"
"இல்லைங்க "
"அப்போ அங்கதான் இருக்கும் , இரு வாரேன், என்று ஜெனி ஜெனி என்று கூப்பிட்டபடி ஸ்டோர் ரூமைத் திறக்க ஒரே இருட்டாக இருந்தது.
"அந்த லைட்டைப் போடு " என்றதும் மது லைட் சுவிட்சைப்போட்டாள்.
பாபு ஒரு இடம் விடாமல் தேடியும் ஜெனியைக் காணவில்லை "சரி நீ வெளியில் வா " என்று சொல்லி லைட் சுவிட்ச்சை ஆப்செய்து கதவை அடைக்க...அந்த இருட்டில் இரண்டு கண்கள் அவனையே முறைத்து பார்க்க திரும்பவும் சுவிட்ச்சைப்போட்டான் அங்கே எதுவும் இல்லை.
"ஏங்க மறுபடி சுவிட்ச்சை போட்டு ஆஃப் பண்ணுறீங்க.?"
"சும்மாதான் நீ போ "என்று திரும்பவும் ஒருமுறை பார்த்துவிட்டுக் கதவைச் சாத்தினான்.
"என்னங்க ஜெனி எங்க போயிருக்கும்?"
"அட இங்கதான் பயத்தில் இருக்கும்
வரும் நீ சாப்பிடு" என்று சொல்ல..
"வேண்டாங்க ஜெனி இல்லாம சாப்பிட முடியாது "
"இங்கபாரு ஹனி நீ சாப்பிடாம கிடந்து உடம்பைக் கெடுத்துக்கப் போறியா?"
"இல்லைங்க அது வந்து.."
"நான் எப்படியும் ஜெனியைக்கண்டுபிடிச்சு கொண்டு வாரேன்."
"நீ சாப்பிடு,நானே ஊட்டி விடுறேன்" என்று வாங்கிவந்த இட்லியை பிசைந்து ஊட்டிவிட்டான்
மனசு முழுவதும் ஜெனி நினைப்பால் இரண்டு இட்லியையே வேண்டா விருப்பாக விழுங்க ...
"இன்னும் ஒன்னு "
"ப்ளீஸ் வேண்டாங்க அப்புறம் வாமிட் பண்ணிடுவேன்."
"சரி சரி இந்த தண்ணியைக்குடி "என்று எடுத்துத் தந்துவிட்டு மிச்ச இட்லியை மூடிவச்சிட்டு ஜெனியைத்தேடிப்போனான்.
"என்னங்க நீங்க சாப்பிடாம போறீங்க
சாப்பிட்டு பாருங்க, என்னைச் சாப்பிடச்சொல்லிட்டு நீங்க பட்டினி கிடக்கீங்க ?"
"நான் சாப்பிடாமல் தூங்கிட்டேன் நீ இரு ஜெனியைப் பார்த்துவாரேன்" என்று கிளம்பித் தோட்டத்திற்கு வந்தான் ஒரு மூளையில் ஈக்கள் மொய்க்கும் சத்தம்கேட்க அங்கிருந்த குரோட்டன்ஸ் செடியை விலக்கிப் பார்க்க ஜெனி வாயைப்பிளந்தபடி ஐந்தாறு இடங்களில் வெட்டுப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தது.
"ஜெனிக்கு என்னாச்சு யார் இந்தமாதிரிக் கொடூர கொலை பண்ணியிருப்பா "
"வாயில்லா ஜீவனை அடிப்பதே பாவம் இதில் இவ்வளவு வக்கிரத்தைக் காட்டியிருக்கிறார்களே
இதை மது பார்த்தால் எப்படித் தாங்குவாள்" என்று யோசித்தவன் காணாமல் போன ஜெனி காணாமல் போனதாகவே இருக்கட்டுமென்று அவசரமாக குழிதோண்டிப்புதைத்துவிட்டு கையைக் கழுவிக்கொண்டு இருக்கும்போதே..
மதுவிடம் இருந்து ஃபோன் வர எடுத்து "ஹலோ" என்றான்.
"என்னங்க நம்ம ஜெனி வந்துடுச்சு
நீங்க எங்க இருக்கீங்க ?"
"என்னது ஜெனி வந்துடுச்சா?"
"ஆமாங்க பயத்தில் நடுங்கிட்டே இருக்கு சீக்கிரம் வாங்க " என்றதும்
"என்ன இது ஜெனியை இப்போதுதான் புதைத்தேன் அங்க என்னன்னா ஜெனி வந்திருக்குனு சொல்றாளே " என்று நினைத்துக்கொண்டு உள்ளே ஓடினான்.
அங்கே சுவரின் மூளையில் பயத்தில் நடுங்கியபடி ஜெனி நின்றிருக்க அவனது முகத்தில் ஈயாடவில்லை
"என்னங்க என்ன ஆச்சு ஒரு மாதிரி இருக்கீங்க?"
"எனக்கு இப்பத்தான் போன உயிரு வந்திருக்கு தெரியுமா?"
"உண்மை தான் எனக்கும் இப்பத்தான் போன உயிரு வந்திருக்குனு தெரியுது"
"நீங்க என்னங்க சொல்றீங்க? ஒன்னுமே புரியலை "
"புரியாமல் இருப்பதே நல்லது தான்
சரி விடு நீ இப்பவாவது நிம்மதியா இருக்க தானே "
"சரி அதுக்கு சாப்பாடு கொடு" என்றதும் அதைநோக்கிச் சாப்பாட்டோடு மது போக அது இன்னும் பயத்தில் நடுங்கிட்டே இருந்தது.
"ஜெனி நான் அம்மாடா
உன்னை அடிக்க மாட்டேன் நீ பயப்படாதே சாப்பிடு பர்ஸ்ட் "என்றாள் மது.
ஜெனி சாப்பாட்டை முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தது
"சரி நீ வச்சிட்டு வா மது ,அது சாப்பிடும்
நேரமாச்சு காலைல மீட்டிங் இருக்கு சொன்னல ?"
"ஆமாங்க ,ஜெனியைக் காணோம்னு எல்லாத்தையும் மறந்துட்டேன்"
"அப்புறம் அம்மா ஃபோன் பண்ணினாங்க தங்கைக்கு மாப்ள பார்த்து இருக்காங்களாம் ஞாயிறு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களாம் "
"சரி அதுக்கு என்ன ?"
"என்னவா ஊருக்குப் போகணும், யாரோ மாதிரி பேசுறீங்க ?"
"வீட்டிற்கு மூத்த மாப்பிள்ளை பொறுப்பு இல்லாம பேசுறீங்க?"
"அம்மா ஃபோன் பண்ணலனு கோபமோ?"
"அதெல்லாம் ஒன்னுமில்லை "
"பின்ன எதுக்கிப்போ மூஞ்சைத்தூக்கி வச்சிருக்கீங்க ?"
"மாப்ளனு நினைச்சிருந்தா நான் இருக்கும் போது வேற மாப்ள பாப்பாங்களா அதான் கோபம் "
*எங்க அந்த மூஞ்சியைக் கொஞ்சம் காட்டுங்க இங்க ஒன்னுக்கே அல்லாடுது இதுல இரண்டு கேட்குதோ? " என்று காதைப்பிடித்துத் திருகினாள் மது.
"சரி சரி விடுடி , மச்சினி ஆளு கும்முன்னு இருக்காளேனு கண்ணு வச்சிருந்தேன் இப்படி பொக்குனு போக வச்சிட்டீங்களே?"
"கண்ணு வைப்பீங்க வைப்பீங்க கண்ணை நோண்டினா ,மூஞ்சைப்பாரு "
"ஏன்டி மச்சானுக்கு என்ன குறை ?"
"இவரு ஆணழகன், இவருக்கு இரண்டு கேட்குது ? போய் படுங்க என்று சொல்ல ..
"நான் இன்னும் சாப்பிடலடி "
"இன்னிக்கு பட்டினிதா போங்க"
"ஹனி ப்ளீஸ்" என்று கெஞ்சியும் "சும்மா படுங்க" என்று முறைத்தாள்.
ஜெனி இருவருக்கும் நடுவே வந்து படுத்துக் கொண்டது.
"என்னடி மது, ஜெனி கிட்டயே வரமாட்டேனு சொல்லுச்சு நடுவுல வந்து படுத்துக்கிச்சு..."
"அதுக்குக் கூட தெரிஞ்சிருக்குங்க நீங்க சும்மா இருக்க மாட்டீங்கனு" என்று சொல்லிச் சிரித்தாள்.
"இந்த கிண்டலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை நான் என்ன சொல்றேன் இவ என்ன சொல்றா?" என்று நினைத்துக்கொண்டு..
ஜெனியைப் பார்க்கப் பயமாக இருந்தது.
"மது...மது.."
"சும்மா படுங்க .."
"ப்ளீஸ் ...மது.."
"சும்மா இருங்க நாளை மாலைக்கு ஊருக்கு கிளம்பனும் "
ச்ச்..என்று திரும்பிப் படுத்தவனை "என்ன கோபமா என் செல்லத்துக்கு "
"நானே டயர்டுல இருக்கேன் புரியுதா ?"
"ஒரு இச் தரலாம்ல..."
"பேசாம படுங்க ஜெனி பார்த்துக்கிட்டு இருக்கு.."
என்று பிளேன் கிஸ் கொடுக்க...அதைத் தட்டிவிட்டது ஜெனி...
"ஹாஹா" என்று சிரித்தபடி அவள் திரும்பிப்படுக்க..
பாபு கோபத்தில் அப்படியே தூங்கிவிட்டான் .
நள்ளிரவு பன்னிரண்டு மணி.
சின்ன முள் பன்னிரெண்டுக்கு நேராக வந்துநிற்க...
பாபுவின் மீது இரண்டு கரங்கள் தழுவ ஆரம்பித்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாபு புரண்டு படுத்தான்.
அவனை இறுக்கமாகக் கட்டியணைத்த அந்த கரங்களுக்கு சொந்தக்காரி இப்போது அவனது உதட்டில் நச்சென்று முத்தமிடத் திடுக்கிட்டு எழுந்தான்.
"என்னடி பண்ற ? டயர்டா இருக்குனு சொன்ன , இந்த ராத்திரில வந்து கொஞ்சுற ? "
"வேணாம்னா போங்க" என்று திரும்பிப்படுக்க...
"சரி சரி கோவிச்சிக்காத ஹனி .." என்று அவளை இறுக்கமாக கட்டியணைக்க ..
மதுவின் ஃபோன் அடித்தது...
பதறி விழித்த மது ஃபோனை எடுத்து ஹலோ என்றாள்
"ஹேப்பி பர்த்டே மது " என்றாள் அவள் அம்மா.
"தேங்க்ஸ் மா "என்று சொல்லிவிட்டு
ஃபோனை வைக்க பாபு யாரையோ கட்டியணைத்திருக்க..
"என்னங்க ..என்ன பண்றீங்க ?" என்று கத்தினாள்
பாபு பதறியடித்துச் சுயநினைவு வந்து
தான் கட்டியணைத்திருப்பது யாரென்று பார்க்க அச்சு அசலாக மதுவாகவே இருந்தாள் .
அவளைத்தள்ளிவிட்டு எழுந்தான் பாபு.
"என்னங்க இவ என்னை மாதிரி இருக்கா யாருங்க இவ ..என் கட்டிலிலே இவகூட நீங்க?"
"ஏய் ஏய் நிறுத்து இதுல யார் உண்மை?
என்ன நடக்குது தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிக் கொஞ்சிட்டு இப்போ யாரு என்னனு கேட்கிற?"
இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க அந்த உருவம் இருவரையும் பார்த்துச்சிரித்தது.
மது பயத்தில் பாபுவின் மேல் சாய்ந்தாள்.
"மது ரிலாக்ஸ் இது ஏதோ கெட்ட சக்திமாதிரி தெரியுது "
"இதோ வாரேன்" என்று சாமிரூம் போய் விபூதியோடு வந்தான்.
அந்த உருவம் சுவரை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
பயம் தெளிந்த மது "என்னங்க நடக்குது இங்க?
ஆமா எதுக்கு எங்க அம்மா எனக்கு
ஃபோன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொன்னாங்க?"
"பிறந்த நாளா யாருக்கு எப்போ பண்ணினாங்க?"
"இப்பத்தாங்க "
"எங்க ஃபோன் எடு பாப்போம் "
என்று மதுவின் ஃபோன் எடுத்து கால் ஹிஸ்டரி செக் பண்ணினான்.
"எந்த காலும் வரவில்லை .
என்ன மது எந்த ஃபோனும் வரலையே."
"என்னங்க சொல்றீங்க?"
"நான் ஃபோன் வந்துதான் எழுந்தேங்க."
"உண்மையாவே வந்ததுங்க"
"நான் என்ன பொய்யா சொல்றேன்
சரி இரு உங்க அம்மாகிட்ட கேட்கலாம்"
"வேண்டாங்க அப்புறம் அவங்களும் பயப்படுவாங்க"
"அதுவும் சரிதான். சரி நம்ம ஜெனி எங்க ?"
"இங்க தாங்க இருந்துச்சு
நான் கத்துன கத்துல ஓடியிருக்குமோ?"
"ஹாஹா" என்று சிரித்தான்
"எதுக்குங்க இப்ப சம்பந்தம் இல்லாம சிரிக்கிறீங்க?"
"பின்ன நீ கத்துனதாலதான் ஓடிச்சின்னு தெரியலையா?"
"என்னங்க சொல்றீங்க?
அப்போ ஜெனிதா அந்த பொண்ணா?"
"நம்ப முடியலங்க
அப்ப நம்ம ஜெனி?"
"அது நேத்தே செத்துப் போச்சு"
"என்னங்க சொல்லுறீங்க ஒன்னுமே புரியல"
"ஆமா மது ,யாரோ நம்ம ஜெனியைக் கொன்று குரோட்டன்ஸ் செடி அருகில் போட்டு இருந்தாங்க."
"நான் தான் புதைத்தேன் , அந்த நேரம் தான் நீ ஜெனி வந்திருக்குனு ஃபோன் பண்ணின "
"நானும் ஷாக்கோடு உள்ளே வந்து பார்த்தால் ஜெனி இருந்தது
அதே நேரம் நீ கூப்பிட்டு வராத ஜெனி நடுவில் வந்து படுத்தபோது சந்தேகம்
இருந்தது ஆனால் அது இந்த அளவுக்கு ஆகும்னு நினைக்கல"
ஏங்க இதை முதலிலேயே சொல்லல."
"நீ பயப்படுவனுதான்"
"அதுக்காக இதையெல்லாமா மறைப்பீங்க
நமக்கு நடுவில் யாரும் வரக்கூடாது
புரியுதா? "என்றாள்
"சரி சரி நீ தூங்கு காலைல வேலை இருக்கு."
"நீங்களும் தூங்குங்க" என்று இருவரும் நெருக்கமாகப் படுத்திருக்க..
அந்த உருவம் முறைத்து கொண்டு இருந்தது.
**********
" என்னங்க மணி ஏழு ஆச்சு எழுந்திருங்க "என்று குளித்துவிட்டு வந்து எழுப்பிய மதுவை இழுத்து கட்டியணைக்க முற்பட ..."போதும் போதும் உங்க கொஞ்சல் .. நான் இப்போதான் குளிச்சிட்டு வந்தேன்...
ஒழுங்கா எழுந்து குளிங்க ..பல்விளக்காம கிஸ்ஸா ஓடுங்க " என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
வேண்டாவிருப்பாக எழுந்து குளித்து ரெடியாகி வர சுடச்சுட இட்லியோடு வந்தாள் மது.
"ஏன்டி டெய்லி இட்லிதானா?"
"பின்ன சாருக்கு என்ன வேணுமாம்?"
"ஒரு பூரி சப்பாத்தி ?"
"இப்போ யாருக்கு நேரமிருக்கு"
"தோசை ஊத்தவே நேரமில்லாமத்தான் இட்லி ஊத்தினேன் நீங்க வேறங்க"
"சரி சரி ..இதுவே போதும் நீ சொல்ற கதையைக் கேட்க நேரமில்லை ஈவினிங் பேசுவோம் "என்று அவசரமாக சாப்பிட்டு எழுந்து ஆபிஸ் ஃபேக்கை எடுத்துகொண்டு ஓட "இருங்க நானும் வாரேன் என்னை ட்ராப் பண்ணிடுங்க..."
"சாரி ஹனி எனக்கு இப்பவே லேட் ஆச்சு நீ ஸ்கூட்டில போயிடு நான் ஒரு க்ளையண்ட்டைப் பார்த்துட்டு ஆபீஸ் போகணும்..."
"சரிங்க மறந்துடாதீங்க ஈவினிங் ஊருக்குக் கிளம்பணும்" என்றவளிடம்
சரி சரி என்று தலையாட்டிவிட்டு
"இந்த பொண்ணுங்க அம்மாவீட்டுக்கு
போவதாக இருந்தால் மட்டும் மறக்கவே மாட்டாங்க நாம் ஒரு இடத்துக்கு கூப்பிட்டா வேலையிருக்கு அது இதுன்னு ஆயிரம் காரணம் அடுக்கறது
என்ன நடிப்பு டா சாமி என்று மனத்திற்குள் நினைத்துகொண்டு சரி வாரேன் "என்று காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
மது வீட்டைப் பூட்டிவிட்டுத் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஆபிஸ் கிளம்பினாள்.
ஜெனி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தது.
"*************
"அம்மா அக்காவும் மச்சானும் ஈவினிங் வந்துடுவாங்க தானே?"
என்று வனிதா கேட்க..
"வந்துடுவாங்கடி ஏன் திடீர்னு இந்த கேள்வி ?"
"இல்லை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது ஆளு இல்லைனா ஒரு மாதிரி இருக்கும்ல"
"அதெல்லாம் நீ கவலைப்படாதே
உங்க மச்சான் உனக்காக வந்துடுவாங்க.
"சரிமா என் பிரண்ட் அனுவ கூப்பிட்டுக்கவா?"
"கூப்பிடுடி ,அவ கல்யாணம் ஆனவதானே ?"
"ஆமாம்மா ஏன் கல்யாணம் ஆகலனா என்ன ? கூப்பிடக்கூடாதா?"
"அப்படி இல்லை வர்ற மாப்பிள்ளைக்கு யார் பொண்ணுன்னு கன்பியூஸ் ஆகக்கூடாதுல.."
"அம்...மா நீ வேற என்னைத்தானே பொண்ணுகேட்டு வாராங்க இதுல
என்ன குழப்பம்?"
"இன்னிக்கு இருக்க நிலையைச் சொன்னேன்டி."
"அக்கா வந்தா அக்காவைப் பிடிச்சிருக்குனு சொன்னா என்ன பண்ணுவ ? "
"அடியே உங்க அக்கா மாதிரியே பேசாதே
அடக்கவொடுக்கமா இரு சரியா ?"
"நான் என்ன ஆடிட்டா இருக்கேன்
சும்மா ஏதாவது சொல்லாதம்மா""
"சரிடி நான் ஏதும் சொல்லல போய் வேலையைப்பாரு.
உன் பிரண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டு நீயே கூப்பிடு."
சரிமா என்று ஃபோனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப்போக...
அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது.
எடுத்து ஹலோ என்றாள் வனிதா.
எதிர்முனையில் ஒரு பெண் பேசினாள்
"உங்க அக்கா தானே மது?"
"ஆமா அவங்களுக்கு என்ன?"
"அவங்களுக்கு ரொம்ப முடியல திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க."
"பக்கத்துல இருக்க ஜெனிபர் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு உடனே வாங்க " என்று சொல்ல...
"ஹலோ ஹலோ யாரு நீங்க?" என்று கேட்க அதற்குள் ஃபோன் துண்டிக்கப்பட்டிருந்தது.
திரும்ப அடித்தும் எடுக்கவில்லை.
யாராக இருக்கும் எதற்காக ஃபோன் போட்டார்கள் என்று யோசித்தவள்.
நாமே கேட்டுவிடலாம் என்று மதுவுக்குப் ஃபோன் செய்ய நீண்ட நேரமாக ஃபோன் எடுக்கவில்லை அவள்.
குழப்பத்தில் மச்சான் பாபுக்கு ஃபோன் செய்ய தொடர்பு பலமுறை நிராகரிக்கப்பட்டது.
பயத்தில் அம்மாவிடம் விசயத்தைச்சொல்ல ஓடிவர
அம்மா யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டு நின்றாள்.
அவள் முகத்தை பார்க்க அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது.
தொடரும்....
எழுத்தாளர் நாகா