• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் நீ நடுவில் பேய் _20

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
40
57
18
Chinna Rettaiyurani Ramanathapuram
தொடர்_20
***********

👻👻👻நான் நீ நடுவில் பேய்👻👻👻
************************""""""**********"

இதுவரை..




"யார் இவங்க ஏன் நம்மை கடத்தி இருக்காங்க அவங்களுக்கும் உனக்கும் சம்பந்தம் ?" என்று கேட்க அமைதியாய் தலைகுனிந்து கொண்டாள்

ஜெனி கோபமாகப் பார்த்தாள்.

இனி....

மாயாவின் அமைதி ஜெனியின் கோபத்தை அதிகப்படுத்த "இப்ப சொல்லுறியா இல்லையா ?" கத்தினாள்

நான் சொல்றேன்னு கார்த்தி வாயைத் திறந்தான்

"ஓ சாருக்குக்கூட தெரிஞ்சிருக்கு நமக்குத்தான் தெரியலை
சொல்லித்தொலை "

"அதுவந்து அக்கா ..."

"வந்துபோயினு ஒழுங்கா சொல்லிடு "

"அன்றைக்கு நியூஸ் பேப்பர்ல கொலை நடந்தது பத்தி நியூஸ் வந்ததுல"

"ஆமா அதுகென்ன ?"

"அதே நைட்டு அக்காவுக்கு கனவு வந்து அந்த கனவுல நடந்த மாதிரியே நடந்திருக்கு "

"அதான் பாட்டி அதை மறந்துடுனு சொன்னாங்களே "

"ஆமா ஆனா அதை மறக்க முடியாம அக்கா போலீஸ்ல சொல்லிடுச்சு"

"இது எப்படா நடந்தது ?"

"நா..நான் தான் அக்கா கொடுத்த கடிதத்தை போலீஸ்ல கொடுத்தேன் "

"அடப்பாவி...சரி அதுக்கும் நாம் கடத்தப்பட்டதுக்கும் என்ன சம்பந்தம் ?"

"அந்த விசயம் கடத்தல் காரங்களுக்கு தெரிஞ்சிருக்கும் "

"நான் அப்போதே சொன்னேன் நாம் நிலைமையே மோசமா இருக்கு இதுல ஊர் வம்பு வேணாம்னு சொன்னா எங்க கேட்கிறா அவ .."என்று புலம்ப ஆரம்பித்தாள் பாட்டி .

"ஏன்மா அவளைத் திட்டுற ?" "அவளைப் பொய்சொல்லக்கூடாது உண்மையை மறைக்கக்கூடாதுனு சொல்லி வளர்த்தது நாம், இப்ப ஒரு பிரச்சனைனு வந்ததும் அவளைத் திட்டி என்ன பண்றது விடு
இதுதான் நம்ம தலைவிதினு போக வேண்டியதுதான் "

"அதுக்காக வீணா போய் மாட்டிக்கனுமா?"என்றாள் ஜெனி

"அப்படி இல்லைடி அவ இடத்தில் இருந்து யோசித்து பார்த்தால் புரியும் "

"எப்படியோ போங்க நாம் கைலாசம் போறது உறுதி "என்று அமைதியானாள் ஜெனி.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது காலடித் தடங்கள் சத்தம் கேட்டதும் அனைவரும் அமைதியானார்கள்.

*********

ஹோட்டல் ஷெரட்டன்ல வசந்த் மற்றும் சுரேஷ்க்கு காத்திருந்து ஏமாந்த ரீட்டா வசந்த்க்கு ஃபோன் பண்ணி வருவதாகச்சொல்ல ..வசந்த் அவளுக்காக காத்திருந்தான்.

ஹார்ன் பெல் அடிக்க போய் கதவைத் திறக்க ரீட்டா நின்றிருந்தாள்.

சீத்ரோ ஆடையில் வெகுகிளாமராக உதட்டு சாயம் பூசப்பட்ட சரியாக சொல்லப்போனால் விலைமாதுவைப்போல வந்து நின்றவளை பார்த்து ஒருகணம் சொக்கித்தான் போனான்.

"உள்ளே வா டார்லிங் "

"வரத்தானே வந்தேன்" என்றாள் போதைததும்பும் சொற்களால்...

"உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
வா"

"என்ன சாருக்கு ரொமான்ஸ் கூடுது ?"

"பின்ன இப்படி ஒரு அழகி கண் முன் நின்றால் கொல்லணும் சாரி கொள்ளணும்னு மனசு தவிக்காதா?"

"ச்சீ ச்சீ நீ மோசம் , வரவர நீயும் கவிஞனாக ஆகுற பேபி "

"கவிதை, உன்னை வாசித்தால் கவிஞன் தானே நான் ."

"போதும் போதும் இப்படியே பேசித்தானே என்னை மயக்குன ..."

"யார் யாரை மயக்கியது இன்றோடு உன் கதை முடிந்தது" என்று மனதுக்குள் நினைத்தபடி நிற்க...

"என்னாச்சு பேபி அப்பிடி பார்க்கிற ?"

"உன் அழகில் மயங்கிவிட்டேன் ஹனி "

ஹாஹா ஹாஹா தொடர்ந்து சிரித்தாள்

"டார்லிங் நான் போய் கிளம்பி வாரேன் நீ இரு " என்று பாத்ரூம் கதவை திறந்து உள்ளே போனான் .

அரைமணி நேரம் வரை வராத வசந்த்தை தேடி எழ முற்பட்டவளை அவளது தோளைத் தொட்டு திருப்பிய
ஆளைக்கண்டு மிரண்டாள் ,சுரேஷ் நின்றிருந்தான்

"சார் நீங்களா ? " என்றபடி கட்டிலில் கிடந்த பெட்சீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டாள்.

"நானேதான் ஏன் பயப்படுற ? "

"இ..இல்லை... நீங்க வெளிய போங்க அவரு பாத்ரூம்ல இருக்காரு ."

"தெரியும் "

"தெரிஞ்சுமா வந்தீங்க ?"

"ஆமா அவன் வர்றதுக்குள்ள ஒரு ரவுண்ட் போலாம் வா "

"ச்சீ நாயே வெளியே போ அவருக்கு தெரிஞ்சா நீ காலி .
என்னை பார்த்தா எப்படி தெரியுது ?"

"அடச்சீ வாயை மூடு , நீ யார் என்னனு தெரிஞ்சு தான் வந்திருக்கேன்."

"நான் வசந்தோட லவ்வர் "

"அப்படினு அவனை நம்பவச்சிருக்க மிஸ் ராதா "

"எ..என்னது ..நான் ராதாவா ...
என்ன உளறுறீங்க ?"

"நான் உளறுறனா இல்லை நீ உளறுறியா கண்ணு "

"என்ன அப்படி உறைஞ்சுபோய் நிக்கிறீங்க சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் மிஸ் ராதா "
என்று சுரேஷ் சொன்னதும் அவளது இடுப்பில் சொருகி இருந்த ரிவால்வாரை எடுக்க முயல பின்னால் இருந்து எட்டி உதைத்தான் வசந்த்.

"ஏன்டி என்கிட்ட இருந்து என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்தி என்னோட இரகசியங்களை தெரிஞ்சிக்க நினைச்ச நீ உண்மையிலேயே வேசிதான் " என்று கத்தினான்.

"ப்ளீஸ் புரிஞ்சுக்கோ வசந்த் உன்னை மனசார லவ் பண்றேன் "

"அடிப்பாவி இப்படி கையும் களவுமா மாட்டிக்கிட்ட பின்னால கூட லவ் என்று சொல்கிறாயே உனக்கு வெக்கமா இல்ல"

"இல்ல , சத்தியமா இல்ல வசந்த் நான் உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன்"

"அதான் என்ன போட்டு தல பிஸ்டலோட வீட்டுக்கு வந்தியா ?"

"இல்ல ஹனி உண்மையிலேயே நீ தப்பானவன் நான் நினைக்கவே இல்ல எனது சேஃப்டிக்காகத்தான் பிஸ்டல்"

"என்னதான் இருந்தாலும் நீ லவ் என்கிற பேர்ல வீட்டுக்குள்ள வந்தது தப்பு ,உன்னை உயிரோடவிட்டா நாங்க வாழ முடியாது செத்துப் போ" என்று அவளின் பிஸ்டலை எடுத்து இருட்டாவை நோக்கி நீட்டினான் வசந்த்

"பொறு வசந்த் இவளை சுட்டம்னா அது வேறு மாதிரி ஆயிரும் இவள ரேப் பண்ணி நம்ம கிட்ட இருக்கிற மருந்தை வைத்து கொலை பண்ணி ஆத்துல போட்டுடுவோம் அப்புறம் இவ கேஸ் வேற மாதிரி முடியும்
நம்மையும் கண்டுபிடிக்க முடியாது ."

"இல்லை மச்சான் இவளைத்தொடவே கூசுது நான் இவளை லவ் வேற பண்ணித்தொலைச்சிட்டேன்.
என்னை மன்னித்து விடு"

"நீ சொல்றதும் சரிதா ஆனா இவ அழகுல கொஞ்சம் குழம்பிப்போயிட்டேன்"

"அந்த மருந்தை எடுத்து வா இவளோட உதட்டுல தடவி கொஞ்சம் கொஞ்சமாக சாவைக்கொடுப்போம்
பொய் சொல்லி ஏமாற்றிய அவளது உதடுகளுக்கு கிஃப்ட் போலோனியம் 210 தான் ."என்றான் சுரேஷ்

பாட்டிலில் இருந்த ஒரு சிறுகுப்பியை எடுத்து சுரேஷிடம் நீட்ட குழந்தைக்கு நீவிவிடுவதைப்போல அவளது உதட்டில் மருந்தைத் தேய்த்தான்.

அவளது விழிகள் மேலேறி கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடல் துடிதுடித்தடங்க அதைக்கண்டு குரூரமான சிரிப்புடன் நின்றிருந்தான் வசந்த்

முழுவதும் அவள் மூஞ்சடங்க அவளைத் தூக்கிக்கொண்டு காருக்கு வந்தார்கள் .காரை எடுத்துக்கொண்டு ஏர்ப்போர்ட் போகிற வழியில் நிறுத்தி
ஏற்கனவே திட்டமிட்டபடி காரின் டிரைவர் சீட்டில் அமரவைத்துவிட்டு அவர்கள் வேறு ஒரு வண்டியை வரவழைத்து ஏர்ப்போர்ட் வந்து இந்தியா வரும் விமானத்தில் சென்னை வந்திறங்கி அவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்த காரில் ஏறி மாயா குடும்பத்தைக் கடத்தி வைத்திருந்த அந்த பாழடைந்த பங்களாவிற்கு வந்தார்கள்.

**********

நீண்ட நேரமாக ஒரு கார் தனியாக நின்றுகொண்டு இருப்பதைக் கண்டு போலீஸாருக்கு தகவல் செல்ல காரின் கதவை உடைத்து பார்க்க ரீட்டா என்கிற ராதா காரின்முன்சீட்டில்
சாய்ந்தபடி உயிரற்றுப்போய் கிடந்தாள்


ரீட்டா உயிரற்று கிடக்க, உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பட்டாள்

சீஃப் ஜெனரல் மார்டின் உடனே ஹெட் குவார்ட்ஸ்க்கு தகவல் தெரிவிக்க உடனடியாக வசந்த் வீட்டிற்கு போலீஸ் படை விரைந்தது .

வசந்த் வீட்டை சுற்றி வளைத்து கதவை உடைத்து உள்ளே புகுந்த மார்டின் மற்றும் அவரது படை நாலாபக்கமும் தேடி கடைசியில் அவனது இரகசிய அறையில் இருந்த ஃபிரிட்ஜ் பிரீசரில் இருந்த அந்த பாட்டிலைக் கைப்பற்றினர் .

"போலோனியம் 210."

மெடிக்கல் சீஃப் பலரையும் வரவழைத்து அந்த பாட்டிலைச் சோதனையிட செய்தனர் .

அத்தோடு வசந்த் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கைப்பற்றி வீட்டைப்பூட்டிச் சீல் வைத்தனர் .

அவனது பாஸ்போர்ட்டைச் சோதனையிட அவன் திடீரென இந்தியா கிளம்பிப்போனது மேலும் சந்தேகத்தைக் கிளப்ப அவன்தான் கொலையாளி என்ற சந்தேகம் வலுத்தது

இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அவனைப் பிடித்துத்தர வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ரீட்டா மரணம் இயற்கை மரணம் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வர
மார்டின் மற்றும் அவரது குழு குழம்ப ஆரம்பித்தது.

அதேவேளையில் ...

பாழடைந்த பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாயா பேமிலியை எப்படி தீர்த்துக்கட்டுவது என்று காததிருந்த கூலிப்படை அவர்களை நெருங்க ஆரம்பித்தது .

போதை மிகுதியில் இருந்த ஒருவன் "மச்சி இவளுகளை அநியாயமாக கொல்லப்போறோம்
மண்ணு திங்கிற உடம்பை மனிதன் தின்றா என்ன ? நம்ம பாஸ் வர்றதுக்குள்ள மேட்டரை முடித்தாலென்ன ?"

"அதுவும் சரிதா இளங்குட்டிகளாக இருக்கு நீ ஒன்னு நான் ஒன்னு "என்று சொல்ல ..

"இல்ல மச்சான் எனக்கு இவதான் பிடிச்சிருக்கு "என்று மாயாவின் அம்மாவைக் கைகாட்டிச் சொல்ல..

"அட ஆன்டி பைத்தியமே ...போபோ என்னமோ பண்ணு "என்று கிண்டலடித்தான்.

"அட போடா உனக்கு அந்த பீல் புரியாது"

"இப்போ எதுக்கு ஆராய்ச்சி நேரத்தை வீணடிக்காதே "என்று மற்றொருவன் சொல்ல மாயா அம்மாவை தரதரவென்று ஒருவன் இழுத்துப்போனான் அவள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் விடாமல் போராட அவளை பிடித்துத் தள்ளினான்

அவள் அங்கிருந்த டேபிளின் மேல் போய் விழ...அவளது பின்மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வர அவள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டு இருந்தாள்.

"அடச்சே எவ்வளவு ஆசையா இருந்தேன் மூதேவி இப்படி பொட்டுனு போயிட்டாளே"

"என்ன மச்சி இப்படி பண்ணிட்ட
பாஸ் வந்து கேட்டா என்ன சொல்றது ?"

"தப்பிக்க முயற்சி பண்ணினா அதான் தள்ளி விட்டோம்னு சொல்வோம் நீ ஏன்டா கவலை படுற ?"

"எனக்கு பயமா இருக்கு டா "

"போடா பயந்தாங்கொள்ளி ..பேச்சை நிறுத்து ..இப்போ செம்ம மூடுல இருக்கிறேன் ..இந்த சின்ன குட்டியை முடிச்சிட்டு வந்து பேசுறேன்" என்று ஜெனியை நோக்கிப் பாய்ந்தான்

"டேய் பாத்துடா பச்சை மண்ணு கொஞ்சம் மெதுவா ஹேண்டில் பண்ணு "என்றதும் போடா என்று அவளை இழுத்துச்செல்வதிலேயே குறியாக இருந்தான்.

ஜெனியின் பாட்டி அவன் கால்களைக் கட்டிக்கொண்டு "அவளை விட்டுடுடா அவ சின்ன பொண்ணு "என்று கெஞ்சினாள்.

"ஏய் கிழவி ஒம்பொண்ணு ஒழுங்கா ஒத்துழைச்சு இருந்தா ஏன் உன் பேத்தியை நான் தொடப்போறேன்
அவளுக்கு அல்ப ஆயுசு அதுக்காக நான் என்வெறியை எப்படி தீர்த்துக்கறது ?"

"அடச்சீ நீ மனுசனா இப்படி கேவலமா பேசுற?"

"அய்யோ டா பாருடா கிழவிக்கு ஆத்திரத்தைப் போடி அங்கிட்டு" என்று எட்டி உதைக்க பாட்டி அந்தப்பக்கம் போய் விழுந்தாள்.

மாயாவும் கார்த்தியும் எவ்வளவோ கெஞ்சியும் ஜெனியை அடுத்த அறைக்கு இழுத்து போனார்கள் இருவரும்

அந்த அறையில் இருந்து ஜெனியின் அலறல் அந்த அறைமுழுதும்எதிரொலிக்க மாயா தன்னால் தான் இத்தனை பிரச்சனையும் என்று கதறி அழுதாள்.

ஜெனியின் அலறல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி ஈனசுரத்தில் கேட்க..

ஒவ்வொருவராக வெளியில் வந்தார்கள்.அதில் ஒருவன் வெறி அடங்காமல் மாயாவை நோக்கி வந்தான் அவளது தோளில் கைபோட
கதவு தட்டப்பட்டது.

தொடரும்

எழுத்தாளர் நாகா