• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! (NPMMN) EPI 1

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
அத்தியாயம் 1
🌸முதல் சந்திப்பு : CEO- புதிய எம்பிளாயும்🌸


சென்னை மாநகரம், ஒரு மழை பெய்ந்து கொண்டு இருந்தது . நகரின் கோலாகல சப்தங்களை மழைத்துளிகள் மென்மையான இசையாக மாற்றிக் கொண்டிருந்தன. அந்த பிஸியான மாநகரின் மத்தியில், தங்கம் போல பிரகாசிக்கும் ஒரு பெரிய IT நிறுவனம் – " AK டெக்னாலஜி ". அதன் சிறந்த தலைவர், கம்பீரமான, வெற்றிகரமான, ஆனால் கர்வம் நிறைந்த CEO – ஆதி.


அன்று அவனின் பிஎம்w அந்த நிறுவனத்தில் உள்ளே நுழைய கொஞ்சம் அலங்கரிக்கப்பட்ட அவன் அலுவலகத்தின் உள்ளே வரும் போது , அங்கு புது எம்பிளாய்கள் orientationக்கு வருவதைக் கவனித்தான்.


ஆனால் அவனது முகத்திலோ ஒரு இறுக்கம் இருந்தது, அவனோ கொஞ்சம் விசித்திரமானவன் தான் "காதல், , சமாதானம் – இவை எல்லாம் மாயை என்று நினைக்கும் ஆரோகன்ட் ceo.


அந்த நேரத்தில், மழையில் சிறிது நனைந்த முகத்துடன் ஆரன்யா அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்தாள். வெறும் ஒரு வரியில் அவள் அழகை சொல்ல முடியாது. அவளது கண்களில் புத்திசாலித்தனம், நேர்மை, மற்றும் எதார்த்தம் தெரிந்தது. அவளுக்கு இந்த வேலை அவளது கனவுகளை அடையும் ஒரு படிக்கட்டாக இருந்தது.


ஆரண்யா தனது பெயரை ரிசப்ஷனில் சொல்ல அவளுக்கான orientation பாஸ் கொடுக்கப்பட்டதை அதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாய் உள்ளே நுழைந்தாள் இருந்தாலும் அவளது முகம் சிறிது பதற்றத்துடன் இருந்தது. “இந்த பெரிய நிறுவனத்தில் நான் என்ன செய்வேன்?” என்ற கேள்விகள் மனதில் ஓடியிருந்தன. ஆனால், "நம்பிக்கை தான் வழி," என்று தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொண்டாள்.


அந்த நேரத்தில் எதிரே வந்த ஒரு உயரமான, கருப்பு சுவடு உடைய ஆடவரை கவனித்தாள். அவருடைய கண்களில் ஒரு ஆணவம், நடையில் ஒரு கட்டுப்பாடு, குரலில் ஒரு தளர்ச்சி. அவன் வேறு யாரும் இல்லை – CEO ஆதி.


ஆரண்யா, அவனை பார்த்ததும் ஒரு நொடி புருவ முடிச்சுடன் அவனை பார்க்க அவனோ அவளை கண்டுகொள்ளாமல் சென்று இருந்தான்.


ஆரண்யா,ஆனால் அவனை கவனித்து இருந்தால், தன்னுள் சிரித்துக்கொண்டாள். "இதுதான் CEO ஆதியா?, arrogant என்கிறார்களே – நிஜமாகவே அப்படிதான் இருப்பான் போல," என்று நினைத்தாள். ஆனால் அவளது முகத்தில் சிரிப்பு மறையவில்லை.

பிறகு orientation தொடங்கியது. Aaranya தனது சக புதிய பணியாளர்களுடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தாள். அங்கு இருந்து CEO ஆதி பேச ஆரம்பித்தான். அவன் உற்சாகமற்ற குரலில், "இந்த நிறுவனத்தில் வேலை என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு அல்ல. கடுமையான உழைப்பு வேண்டும். எதிர்பார்ப்புகள் அதிகம். வெற்றி பெற விரும்பினால், வேலையில் மனம் முழுமையாக இருக்க வேண்டும்," என்றான்.

அந்தப் பேச்சை கேட்ட ஆரண்யா, தனது மனதில் ஒரு சின்ன சிரிப்புடன், “என்னைத் தடுக்க CEOவால் கூட முடியாது. நான் என் அறிவாலும், மன உறுதியாலும் வெற்றி பெறுவேன்,” என்ற நம்பிக்கையுடன் அவள் அவனை கவனித்தாள்.

அந்த நேரத்தில், கூட்டம் முடிந்ததும், அனைவரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். மழை இன்னும் சிறிது சிறிதாக பெய்துக்கொண்டிருந்தது. ஆரண்யா வெளியே செல்லும்போது, அவளது பெயருடைய பார்ட் அந்த மழையில் நனைந்து கிழிந்துவிட்டது. அது கீழே விழ, அதை எடுக்க முயன்றாள். அந்த நேரத்தில் ஆதி அவளை கடந்துவிட்டான். அவளது கண்களில் இருந்த அந்த சிறிய கவலை, சோகம் அவன் கண்கள் கவனித்தது தான்.

உன் நேம் கூட என் ஆபிசியில் இருக்க தகுதி இல்லை போல என்றான் ஆதி, கம்பீரமான குரலில்.


ஆரண்யா அதை கேட்டு அதிர்ந்தாள். அவள் நிமிர்ந்து பார்த்தாள். ஒரு நொடி அவள் மனம் சுணங்கினாலும் அடுத்த நொடி கம்பீரமாய் அவனை நிர்மிர்ந்து பார்த்தவள்"நான் எப்படி இருந்தாலும் இந்த இடத்தில் என் திறமையால் என் இடத்தை பிடிப்பேன்," என்றாள்.


அந்த கணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல இருந்தது. மழை, அவ்வழியே அவள் சிந்தனையைத் தொட்டது. அந்த முதல்பார்வை – ஆதி தனது ஆணவத்தில், ஆரண்யா தனது அறிவாற்றலில் – இருவரையும் வித்தியாசமான உணர்வுகளில் இணைத்தது.

அந்த நாள் இருவரும் வீடு திரும்பும் போது இருவருக்கும் ஒரே கேள்வி மனதில் எழுந்தது – "அவள்/அவன் எங்கையோ பார்த்து இருப்பது போல் இருந்தது."


ஆதி - ஆரண்யா வருவார்கள்



ஹாய் பிரண்ட்ஸ் !!

இந்த கதைக்கு உங்க எல்லாருடைய சப்போர்ட் எதிர்பார்க்கிறேன், நிச்சயம் ஆதி ஆர்ண்யா உங்களை கவருவார்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை நிச்சயம் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நாளை அடுத்த அதியாயம் வரும் காத்து இருங்கள்.

நன்றி !
 
Last edited: