• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN EPI 5

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai

அத்தியாயம் 5

🌸அறிமுகமான உணர்வுகள் 🌸


"AK டெக்னாலஜி" project grand success-ஆக launch ஆனது. அனைத்து senior management மற்றும் board members ஆரண்யா மற்றும் ஆதி டீம்-ஐ பாராட்டினர். அந்த project-ஐ மிகச்சிறப்பாக முடிக்கவும், deadline-க்கு முன்னதாக launch செய்யவும் அவர்கள் இருவரும் இரவு பகல் பாராமல் உழைத்தனர்.

Success meet அன்று அனைவரும் claps-களுடன் அந்த project-ஐ celebrate செய்தனர். CEO ஆதி அந்த பாராட்டுகளை எடுத்து, நேராக பேசினான்.

“இந்த project-ஐ சிறப்பாக handle செய்த Miss Aaranya வுக்கு நன்றி. Her dedication and brilliance made this project a reality. Congrats Aaranya”.

ஆரண்யா, அவனது பாராட்டை கேட்டபோது அவளது இதயம் அத்தனை பலமாய் அடித்து கொள்ள ஆரம்பித்து, இப்படி ஒரு பாராட்டை அவனிடம் இருந்து பெற அவள் எத்தனை ஆசை கொண்டாள்.

இன்று அது உண்மையில் நடக்கவும் அவளுக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது அவள் முகத்திலும் அது தெரிந்தது.

சில நாட்களாகவே அடங்கியிருந்த உணர்வுகளை மெதுவாக வெளியே கொண்டு வந்தது. அவள் அவனிடம் மெல்லிய பார்வை வீசினாள், அது முதல் முறையாக அவனுக்கு அவளது மனதிலுள்ள உணர்வுகளை காட்டியது. ஒரு நொடி அவள் பார்வையின் பொருள் புரியாமல் நின்றவன் அவனின் pa வினய் அவனிடம் ஃபோன் கொடுக்க, அதில் அவளிடம் இருந்து பார்வையை விலகியவன் ஃபோன் வாங்கி பேசினான்.

பின் ஃபோன் வினையிடம் கொடுத்தவன்.
"டு add ஆன் டு திஸ் வி காட் அனதெர் நியூஸ் ப்ரம் அவர் அமெரிக்கன் கிளைன்ட்" என்றான்

அனைவரும் அவனை பார்க்க "இந்த project-ஐ client site-ல் implement செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் மிஸ் ஆரண்யா அவளுடன் இணைந்து 5 பேர் அமெரிக்காவிற்கு வர சொல்லி இருக்காங்க இட்ஸ் அ கிரேட் ஒப்பூர்டுனிட்டி for நியூ டீம், திஸ் இஸ் வெரி ஃபர்ஸ்ட் டைம் கிளைன்ட் காலிங் அ நியூ டீம் டு தேர் பிளேஸ்" என்று அவன் அனௌன்ஸ் செய்ய அனைவரும் அத்தனை உற்சாகமாய் கை தட்ட, ஆனால் ஆர்ண்யாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் அத்தனை கவலையா இருந்தது.

அவள் அதிர்ந்து அவனை பார்க்க அவனோ எதும் பேசாமல், "பிளீஸ் என்ஜாய் யுவர் டின்னர் கைஸ்" என்று சொன்னவன் அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி வந்தான், முக்கியமான நபர்கள் ஆதியிடம் பேசி விட்டு கிளம்ப

ஆரண்யா எதும் சாப்பிடாமல் பேருக்கு எதோ வாங்கி கொண்டு அப்படியே அமர்ந்து இருப்பதை பார்த்த ஆதி புருவங்கள் சுருங்கியது,

அவளின் அந்த தோற்றம் அவனுக்கு என்ன வென்றே சொல்ல முடியாத வலி, தன்னை சுத்தி அத்தனை பெரிய கூட்டம் இருக்கிறது ஆனால் அவனுக்கோ அவள் மேல் கவனம் இருக்க, வினையை அழைத்தவன் எதோ சொல்ல
"எஸ் பாஸ் " என்றவன் நேராய் ஆரண்யாவிடம் சென்றான்.

அவள் அமைதியா அமர்ந்து தட்டை பார்த்து கொண்டு இருக்க

"ஆரண்யா !! " உடனே வேகமாய் அவள் அவனை ஏறிட

"உங்களுக்கு கேப் அரேன்ஜ் செய்து இருக்காங்க நீங்க தனியா போக வேண்டாம்" என்று அவன் சொல்ல

"இல்லை வினய் சார். i can மேனேஜ்" என்றாள். " ஸ்டாப் சேப்டி முக்கியம் யூ know about our பாஸ்" என்றவன் விலக

ஆரண்யா கண்கள் ஆதியை தேடியது, அவன் அங்கு கையில் மதுவுடன் எல்லாரிடமும் பேசி கொண்டு இருப்பதை பார்த்தவள் மணியை பார்க்க 9 மணி ஆகி இருந்தது. ஆதியிடம் பேச வாய்ப்பு இருக்குமா என்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் , பின் ஒரு வழியா வைத்து இருந்த உணவை வேஸ்ட் செய்யாமல் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

அவள் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் கிளம்ப, ஆரண்யாவும் அவர்களுடன் கீழே இறங்கினாள்.

ஆரண்யா கீழே இறங்கியவள் ரெஸ்ட் ரூம் செல்ல தனியாய் நடக்க அந்த சமயம் அவளை ஒரு வலிய கரம் பிடித்து இழுத்தது,
பதற்றத்துடன் அவள் கத்த வர அதற்குள் அவள் வாயை கைக்கொண்டு மூடி இருந்தான்.

அவள் திகைத்து அந்த நபரை பார்க்க, அது ஆதி தான்.

ஆரண்யாவால் நம்ப கூட முடியவில்லை கண்கள் வீரிய அவனை பார்த்து கொண்டு இருந்தால், ஆதியும் அத்தனை
நெருக்கத்தில் முதல் முறை அவளை பார்க்க அந்த நொடி முதல் முறை தடுமாறி இருந்தான்.

அவன் நினைவு தெரிந்த நாளில் இருந்து இத்தனை நெருக்கமாய் ஒரு பொண்ணுடன் அவன் நின்றது இல்லை.

"பாஸ்!" என்று அவள் அவன் கைகளுக்குள் முனுமுனுக்க, அவள் முணுமுணுப்பு ஏற்படுத்திய குறுகுறுப்பில், கையை மெதுவாய் விளக்கியவன்.

ஆர் யூ ஓகே ? என்று அவன் கேட்க

அவள் புரியாமல் திகைத்தாள், அவளை பார்த்தவன் சரி போயிட்டு வா என்றான்

அவள் அதற்கும் அவனை பார்க்க

வாஷ்ரூம் போய்ட்டு வா என்று அவன் சொல்ல
ஹான் என்று வேகமாய் தலை அசைத்தவள் ஓடினால்

ஏனோ அந்த நொடி ஆதி இதழ்கள் புன்னகையில் விரிந்தது அவனே அறியாமல்.



➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

ரைட்டு !! ஆரண்யா இனிமேல் இந்த ஆபிசியில் இருக்க மாட்டாளா ? ஆரண்யா விரும்புவது ஆதிக்கு புரியுமா ?? அடுத்த அடுத்த எபிசோட் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்

என்னுடைய நாவல் அப்டேட் பத்தி தெரிஞ்சிக்க என்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜ் follow செய்யுங்கள் unfoldnook. கதை அப்டேட் செய்ததும் அதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


ஆதி அரண்யா வருவார்கள் 🩷