அத்தியாயம் 25
"எனக்கு அர்வி அத்தானை பிடிச்சிருக்கு ப்பா!" என அனன்யா சொல்லவும் கனகாவின் அதிர்ச்சியை விடவும் அன்பரசன் தான் அதிகமாய் அதிர்ந்தது.
சுத்தமாய் மகளிடம் இப்படி ஒரு எண்ணத்தை எதிர்பார்க்கவே இல்லை அவர்.
"நினச்சேன்! நான் நினைச்சேன்!" என கனகா சொல்ல,
"ம்மா! உண்மை தெரியாம எதுவும் பேசிடாதீங்க!" என சொல்லும் போதே,
"இன்னும் என்ன இருக்கு பேச?" என்ற கனகா,
"பார்த்திங்களா உங்க தங்கச்சி மவன் பண்ணின வேலையை? இதுக்கு தான் சென்னை அனுப்பி விட்டிங்களோ? இந்தா நான் நினச்சா மாதிரி வந்து நிக்கா பாருங்க!" என கணவனிடம் அத்தனை வெறி கொண்டு பல்லைக் கடித்து கூறினார்.
"நான் இன்னும் முடிக்கல ம்மா. வார்த்தையை விடாதீங்க" என்ற அனன்யாவும்,
"ப்பா! அத்தான் மேல எந்த தப்பும் இல்ல. இப்ப இல்ல அஞ்சு வருஷம் முன்னாடி அண்ணி கல்யாணத்துக்கு முன்னவே நான் தான் அத்தான்கிட்ட பேசினேன். எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஆனா அத்தான் அதுக்கப்புறம் என்கிட்ட பேசவே இல்ல. என் முகத்துலயே முழிக்காதனு சொல்லிட்டு போய்ட்டாங்க!" என்றவள் சொல்லில் அன்பரசன் அமைதியாய் நிற்க,
"நல்லா கதை எல்லாம் சொல்லி தான் அனுப்பி விட்ருக்கான். நேத்து கல்யாணத்துல ஒரே மாதிரி வேஷ்டி சேலைனு எல்லாரும் நிக்கும் போதே நான் நினச்சேன். நான் தான் சொன்னேனே. கேட்டீங்களா நீங்க. பாருங்க உங்க மக பண்ணுன வேலையை. அந்த வெறும் பய.. அதுவும் என் வீட்டுல ஓசில தங்கி இருந்த பய...." என கனகா சொல்லவுமே,
"ம்மா!" என அன்னை அருகே வந்துவிட்டவள்,
"அத்தானை எதாவது பேசின... நான் மனுஷியா இருக்க மாட்டேன். நான் தான் சொல்லுறேனே. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அத்தானுக்கு எதுவுமே தெரியாது!" என கத்தியவள்,
"எனக்கு திகழ் அண்ணி மகி கூட எப்பவுமே ஒண்ணா இருக்கனும்னு தான் ப்பா ஆசை. எனக்கு ஏன் எப்படி அத்தானை பிடிச்சதுன்னு எல்லாம் தெரியாது. அண்ணியும் மகியும் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே மாதிரி அத்தானையும் பிடிச்சது. ஆனா அவங்க அப்படி சொன்ன அப்புறம் அவங்களை நான் டிஸ்டர்ப் பண்ணவே கூடாதுன்னு இருந்துட்டேன். சென்னைக்கு வேலைக்கு போக ஆசைப்பட்டேன். ஆனா அத்தான்கிட்டயே நீங்க ஹெல்ப் கேட்பிங்கனு நான் நினைக்கல ப்பா. அத்தானை ஒரு வார்த்தை கூட தப்பு சொல்ல முடியாது!" என ஏங்கி அழ ஆரம்பிக்க,
"மக பேசுறது தேனா இருக்கோ உங்களுக்கு. வாயடைச்சு நிக்கிறீங்க. வர்ற கோவத்துக்கு இவளை..." என அனன்யாவை கனகா நெருங்க, அன்பரசன் மகளை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டார்.
அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அனன்யா.
"இங்க பாருங்க. மக ஆசை தங்கச்சி மவன் பாசம்னு நீங்க எதாவது முடிவெடுத்தா நான் சும்மா இருக்க மாட்டேன். நான் சொல்றவனோட தான் அனன்யா கல்யாணம் நடக்கணும். நாலு மாசம் முழுசா ஆகல சென்னைக்கு அனுப்பி. எப்படி குட்டிச்சுவரா வந்து சேர்ந்திருக்கா பாருங்க. எல்லாம் அவன் ட்ரைனிங். இங்க இருக்க அம்புட்டையும் சுருட்டப் பார்க்கான் வெறும் பய!" என அத்தனை பேச்சு.
"ம்மா! என்ன பேசுற நீ? அத்தான் மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறாங்க. உன்னை விட உசத்தி தான் அவங்க. அப்படியே அவங்க எதுவுமில்லாதவங்களா இருந்தாலும் நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லைனா செத்து போய்டுவேன்!" என அத்தனை கத்தி சொல்ல, பேச்சச்சு நின்றுவிட்டார் அன்பரசன் மகள் உறுதியில்.
"செத்து போ டி! செத்து கூட போ! ஆனா அவனை கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன். ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளை வீட்டாளுங்ககிட்ட பேசி வச்சிருக்கேன். வந்தவனை விரட்டி விட்ட மாதிரி இன்னொருத்தனையும் விரட்டி விட்டுரலாம் நினைக்காத. இப்பவே போன் பண்ணி நாளைக்கு அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்ல போறேன். எதாவது எகத்தாளம் பண்ணுன... உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன் அப்பனுக்கு சோத்துல விஷம் வச்சுட்டு நானும் போய் சேர்ந்துடுவேன்" என்றவர் சொல்லில் அனன்யா வாயடைத்து நிற்க,
"ஏய்! வீட்டு பொம்பள பேசுற பேச்சா டி இது! அறிவில்ல உனக்கு? பொண்ணுகிட்ட போய்..." என்றவர் மகளை தன் பக்கமாய் இழுக்க,
"ப்பா!" என அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் அனன்யா.
"அத்தான் பாவம் ப்பா. அம்மா சொல்ற மாதிரி எல்லாம் இல்ல. அத்தான் அண்ணி மகின்னு யாருக்கும் எதுவும் தெரியாது ப்பா. நான் தான்.. எனக்கு தான் அத்தானை பிடிச்சது!" என மீண்டும் மீண்டும் சொல்ல,
"நீ என்ன கதை சொன்னாலும் நான் நம்ப போறதில்ல. நான் சொன்னது தான் நாளைக்கு நடக்கணும். நடக்கும்." என கனகாவும் விடாமல் பேச, அன்பரசனால் சுத்தமாய் முடியவில்லை நடக்கும் நிகழ்வுகளை தாங்கிக் கொள்ள.
"முடியாது ம்மா! நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்"
"அதான் சொன்னேனே டி. நீ செத்தாலும் அது நடக்காது. அவன் கூட ஓடி போக என்னலாம் பேசுற நீ? உன்னை இங்க தூண்டி விட்டுட்டு அங்க என்ன கிழிக்குறான் அவன் குடும்பத்தோட!" என்ற கனகா,
"உன் தம்பி லட்சணத்தை பாருன்னு இப்பவே அந்த திகழை நாலு கேள்வி கேட்கல.." என அங்கே செல்லப் போகப் பார்க்க, ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் கனகாவை அன்பரசன்.
"பெத்த பொண்ணை என்னலாம் சொல்ற நீ?" என்றவர்,
"அவ்வளவு அழுதாளே கொஞ்சம் கூடவா அவளை புரியல உனக்கு?" என கேட்க,
"கூறு கெட்ட மனுஷா! உன் மவளுக்காக தான் நானும் பேசிட்டு இருக்கேன். அந்த திகழு என் வீட்டுல தங்கி என் கையில சாப்பிட்டவ. கல்யாணத்துக்கு பிறவு என்ன ஒரு ஆளா மதிச்சாளா? இல்ல அவ கொட்டி குடுத்து தான் எனக்கு நிறையுதா? அந்த மகி குட்டி கழுத. அவளுக்கு நகைகடைகாரன் கூட கல்யாணம் பண்ணி ஆளாளுக்கு செட்டில் ஆயிட்டாளுங்க. நான் மட்டும் ஒண்ணுமில்லாதவனுக்கு என் மகள குடுக்கணுமா?" என அத்தனை பேச்சு அப்பொழுது கனகாவிடம்.
"அந்த திகழ் இல்லைனா என்னை உயிரோட பாத்துருப்பியா நீ?" என அன்பரசன் ஒற்றை கேள்வி கேட்க, அனன்யாவும் அன்னையை முறைத்தாள்.
"நான் நடக்க முடியாம படுத்த படுக்கையான அப்போ எனக்காக அவ வாழ்க்கையை எங்க கொண்டு போய் நிறுத்தி இருந்தானு மறந்து போச்சா உனக்கு? அந்த ஆர்யா தம்பி நல்லவனா இருக்க போய் இப்ப அவ நல்ல நிலமைல இருக்கா இல்லைனா நமக்காக அவ எடுத்த ரிஸ்க்க்குக்கு அவ என்ன ஆகி இருப்பா? எத்தனை ஜென்மத்துலயும் அவளுக்கான நன்றிக்கடனை தீர்க்க முடியாது!"
"அதுக்கு? என் பொண்ணை தூக்கி நான் குடுக்கணுமா?" என்ற கனகா,
"நல்லா செஞ்சா உங்களுக்கு. அவ திட்டமே அது தான். அதான் காண்ட்ராக்ட்ல கல்யாணம் பண்ணிட்டு போய் நல்ல பணக்காரன்னதும் இப்ப அவன் கூடவே கல்யாணம் பண்ணிட்டு இருக்கா. தங்கச்சியையும் கரை சேர்த்தாச்சு!" என்றார்.
"ச்சீ! நாக்குல எப்பவுமே விஷத்தை வச்சுட்டு சுத்துற நீயெல்லாம்!" என்ற அன்பரசன்,
"அனு! நீ உள்ள போ! அரவிந்த் என்ன சொல்றான்னு பேசிக்குவோம்!" என தன்மையாய் அன்பரசன் சொல்ல,
"என்னை மீறி யார் என்ன பண்றீங்கனு நான் பார்த்துடுறேன்!" என்றார் கனகாவும் சவாலாய்.
மொத்தமாய் அயர்ந்து போனாள் அனன்யா. அதுவும் அடுத்த சில நிமிடங்களிலேயே அன்பரசன் அனன்யா காதுபடவே மற்றொரு மாப்பிள்ளை வீட்டில் பேசி நாளை பெண் பார்க்க என வர சொல்ல, அன்னையை நினைத்து அத்தனை பயம் அனன்யாவிற்கு.
அந்த பயத்தின் முன் அன்பரசன் வார்த்தைகள் எல்லாம் காணாமல் போக, அன்று இரவுக்கு பேருந்தில் பதிவு செய்தவள் தந்தையிடமும் சொல்லிக் கொள்ளாமல் கனகா கண்ணில் படாதவாறு கிளம்பிவிட்டாள் வீட்டில் இருந்து.
பேருந்தில் ஏறிய மறு நிமிடமே தந்தைக்கு தான் செல்லும் பேருந்து பற்றிய தகவல்களை அவள் அனுப்பிவிட, பார்த்த அன்பரசன் உடனே மகளுக்கு அழைத்துவிட்டார்.
"என்ன டா நீ?" என அன்பரசனுக்கு பொறுக்கவே இல்லை.
"என்னை மன்னிச்சுடுங்க ப்பா. ஆனா நான் தப்பில்ல. தப்பான பொண்ணில்ல. இப்ப வரை அர்வி அத்தானுக்கு நம்ம வீட்டுல நடந்த எதுவுமே தெரியாது. நான் சொல்லவும் இல்ல. நான் தனியா தான் ஊருக்கு போறேன். அவங்க நம்ம ஊர்ல தான் இருக்காங்க. அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லப்பா. நீங்க நம்புங்க ப்பா என்னை!" என அழுகை அனன்யாவிடம்.
"எனக்கும் தெரியும் டா உன்னை. நீ இவ்வளவு சொல்லனுமா? ஆனாலும் இப்படி தனியா உடனே அப்பாகிட்ட கூட சொல்லாம கிளம்பிட்டியே!" என சொல்லவும் இன்னும் அவள் அழ,
"பெத்தவ இப்படி இருந்தா நீ என்ன பண்ணுவ? சரி பார்ப்போம். நீ எதுவும் நினைக்காம இரு. அரவிந்த்கிட்ட நான் பேசுறேன்!" என சொல்ல, அனன்யா சரி என்றோ வேண்டாம் என்றோ கூறவில்லை.
இப்போதைக்கு அன்னையிடம் இருந்து தப்பிக்கும் மனநிலையில் அவள் கிளம்பி இருக்க, அரவிந்த்தின் மூன்று தவறிய அழைப்புகளை கூட கண்டவள் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் திருப்பி அழைக்கவே இல்லை. மகிழினிக்கு எந்த குறையும் இல்லாமல் அனைத்தையும் செய்து முடித்து அவன் வரட்டும் என மௌனமாய் காத்திருக்க ஆரம்பித்தாள்.
சனிக்கிழமை காலை வழக்கம் போல அனன்யா சென்னை வந்து சேர்ந்தவள் கிளம்பி அலுவலகம் சென்று வந்து அறைக்குள் இருந்து கொண்டாள்.
அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. நன்றாய் சாப்பிட்டது எப்பொழுது என யோசித்தால் அரவிந்த் அருகே மகிழினி திருமணத்தில் சாப்பிட்டது. அடுத்த நாள் காலையே அன்னை செய்து வைத்த வேலையில் சாப்பாடு என்றதை மறந்திருக்க, மதியம் வீட்டில் நடந்த கலவரத்தில் சாப்பாடு எல்லாம் யாரின் நினைவிலும் இல்லை. இரவும் அன்னைக்கு தெரியாமல் கிளம்பி பேருந்திற்கு வந்துவிட்டவளுக்கு அடுத்த நாள் அலுவலகத்தில் அத்தனை சோகமாய் தான் சென்றது.
சாப்பாடு என்ற நினைவே சுத்தமாய் இல்லாமல் என்னவோ பேருக்கு வேலைக்கு சென்று வந்தவள் அறைக்குள் சுருண்டு கிடந்தாள்.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டின் கதவு தட்டப்பட, அத்தனை ஆசைகளையும் நெஞ்சில் வைத்து அவனாய் மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணி கதவை திறந்தவள் முன் அரவிந்த் நிற்க, அவனைக் கட்டிக் கொண்டு அழுதவள் அவன் தோளிலேயே மயங்கி இருந்தாள்.
தொடரும்..
"எனக்கு அர்வி அத்தானை பிடிச்சிருக்கு ப்பா!" என அனன்யா சொல்லவும் கனகாவின் அதிர்ச்சியை விடவும் அன்பரசன் தான் அதிகமாய் அதிர்ந்தது.
சுத்தமாய் மகளிடம் இப்படி ஒரு எண்ணத்தை எதிர்பார்க்கவே இல்லை அவர்.
"நினச்சேன்! நான் நினைச்சேன்!" என கனகா சொல்ல,
"ம்மா! உண்மை தெரியாம எதுவும் பேசிடாதீங்க!" என சொல்லும் போதே,
"இன்னும் என்ன இருக்கு பேச?" என்ற கனகா,
"பார்த்திங்களா உங்க தங்கச்சி மவன் பண்ணின வேலையை? இதுக்கு தான் சென்னை அனுப்பி விட்டிங்களோ? இந்தா நான் நினச்சா மாதிரி வந்து நிக்கா பாருங்க!" என கணவனிடம் அத்தனை வெறி கொண்டு பல்லைக் கடித்து கூறினார்.
"நான் இன்னும் முடிக்கல ம்மா. வார்த்தையை விடாதீங்க" என்ற அனன்யாவும்,
"ப்பா! அத்தான் மேல எந்த தப்பும் இல்ல. இப்ப இல்ல அஞ்சு வருஷம் முன்னாடி அண்ணி கல்யாணத்துக்கு முன்னவே நான் தான் அத்தான்கிட்ட பேசினேன். எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஆனா அத்தான் அதுக்கப்புறம் என்கிட்ட பேசவே இல்ல. என் முகத்துலயே முழிக்காதனு சொல்லிட்டு போய்ட்டாங்க!" என்றவள் சொல்லில் அன்பரசன் அமைதியாய் நிற்க,
"நல்லா கதை எல்லாம் சொல்லி தான் அனுப்பி விட்ருக்கான். நேத்து கல்யாணத்துல ஒரே மாதிரி வேஷ்டி சேலைனு எல்லாரும் நிக்கும் போதே நான் நினச்சேன். நான் தான் சொன்னேனே. கேட்டீங்களா நீங்க. பாருங்க உங்க மக பண்ணுன வேலையை. அந்த வெறும் பய.. அதுவும் என் வீட்டுல ஓசில தங்கி இருந்த பய...." என கனகா சொல்லவுமே,
"ம்மா!" என அன்னை அருகே வந்துவிட்டவள்,
"அத்தானை எதாவது பேசின... நான் மனுஷியா இருக்க மாட்டேன். நான் தான் சொல்லுறேனே. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அத்தானுக்கு எதுவுமே தெரியாது!" என கத்தியவள்,
"எனக்கு திகழ் அண்ணி மகி கூட எப்பவுமே ஒண்ணா இருக்கனும்னு தான் ப்பா ஆசை. எனக்கு ஏன் எப்படி அத்தானை பிடிச்சதுன்னு எல்லாம் தெரியாது. அண்ணியும் மகியும் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே மாதிரி அத்தானையும் பிடிச்சது. ஆனா அவங்க அப்படி சொன்ன அப்புறம் அவங்களை நான் டிஸ்டர்ப் பண்ணவே கூடாதுன்னு இருந்துட்டேன். சென்னைக்கு வேலைக்கு போக ஆசைப்பட்டேன். ஆனா அத்தான்கிட்டயே நீங்க ஹெல்ப் கேட்பிங்கனு நான் நினைக்கல ப்பா. அத்தானை ஒரு வார்த்தை கூட தப்பு சொல்ல முடியாது!" என ஏங்கி அழ ஆரம்பிக்க,
"மக பேசுறது தேனா இருக்கோ உங்களுக்கு. வாயடைச்சு நிக்கிறீங்க. வர்ற கோவத்துக்கு இவளை..." என அனன்யாவை கனகா நெருங்க, அன்பரசன் மகளை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டார்.
அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அனன்யா.
"இங்க பாருங்க. மக ஆசை தங்கச்சி மவன் பாசம்னு நீங்க எதாவது முடிவெடுத்தா நான் சும்மா இருக்க மாட்டேன். நான் சொல்றவனோட தான் அனன்யா கல்யாணம் நடக்கணும். நாலு மாசம் முழுசா ஆகல சென்னைக்கு அனுப்பி. எப்படி குட்டிச்சுவரா வந்து சேர்ந்திருக்கா பாருங்க. எல்லாம் அவன் ட்ரைனிங். இங்க இருக்க அம்புட்டையும் சுருட்டப் பார்க்கான் வெறும் பய!" என அத்தனை பேச்சு.
"ம்மா! என்ன பேசுற நீ? அத்தான் மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறாங்க. உன்னை விட உசத்தி தான் அவங்க. அப்படியே அவங்க எதுவுமில்லாதவங்களா இருந்தாலும் நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லைனா செத்து போய்டுவேன்!" என அத்தனை கத்தி சொல்ல, பேச்சச்சு நின்றுவிட்டார் அன்பரசன் மகள் உறுதியில்.
"செத்து போ டி! செத்து கூட போ! ஆனா அவனை கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன். ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளை வீட்டாளுங்ககிட்ட பேசி வச்சிருக்கேன். வந்தவனை விரட்டி விட்ட மாதிரி இன்னொருத்தனையும் விரட்டி விட்டுரலாம் நினைக்காத. இப்பவே போன் பண்ணி நாளைக்கு அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்ல போறேன். எதாவது எகத்தாளம் பண்ணுன... உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன் அப்பனுக்கு சோத்துல விஷம் வச்சுட்டு நானும் போய் சேர்ந்துடுவேன்" என்றவர் சொல்லில் அனன்யா வாயடைத்து நிற்க,
"ஏய்! வீட்டு பொம்பள பேசுற பேச்சா டி இது! அறிவில்ல உனக்கு? பொண்ணுகிட்ட போய்..." என்றவர் மகளை தன் பக்கமாய் இழுக்க,
"ப்பா!" என அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் அனன்யா.
"அத்தான் பாவம் ப்பா. அம்மா சொல்ற மாதிரி எல்லாம் இல்ல. அத்தான் அண்ணி மகின்னு யாருக்கும் எதுவும் தெரியாது ப்பா. நான் தான்.. எனக்கு தான் அத்தானை பிடிச்சது!" என மீண்டும் மீண்டும் சொல்ல,
"நீ என்ன கதை சொன்னாலும் நான் நம்ப போறதில்ல. நான் சொன்னது தான் நாளைக்கு நடக்கணும். நடக்கும்." என கனகாவும் விடாமல் பேச, அன்பரசனால் சுத்தமாய் முடியவில்லை நடக்கும் நிகழ்வுகளை தாங்கிக் கொள்ள.
"முடியாது ம்மா! நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்"
"அதான் சொன்னேனே டி. நீ செத்தாலும் அது நடக்காது. அவன் கூட ஓடி போக என்னலாம் பேசுற நீ? உன்னை இங்க தூண்டி விட்டுட்டு அங்க என்ன கிழிக்குறான் அவன் குடும்பத்தோட!" என்ற கனகா,
"உன் தம்பி லட்சணத்தை பாருன்னு இப்பவே அந்த திகழை நாலு கேள்வி கேட்கல.." என அங்கே செல்லப் போகப் பார்க்க, ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் கனகாவை அன்பரசன்.
"பெத்த பொண்ணை என்னலாம் சொல்ற நீ?" என்றவர்,
"அவ்வளவு அழுதாளே கொஞ்சம் கூடவா அவளை புரியல உனக்கு?" என கேட்க,
"கூறு கெட்ட மனுஷா! உன் மவளுக்காக தான் நானும் பேசிட்டு இருக்கேன். அந்த திகழு என் வீட்டுல தங்கி என் கையில சாப்பிட்டவ. கல்யாணத்துக்கு பிறவு என்ன ஒரு ஆளா மதிச்சாளா? இல்ல அவ கொட்டி குடுத்து தான் எனக்கு நிறையுதா? அந்த மகி குட்டி கழுத. அவளுக்கு நகைகடைகாரன் கூட கல்யாணம் பண்ணி ஆளாளுக்கு செட்டில் ஆயிட்டாளுங்க. நான் மட்டும் ஒண்ணுமில்லாதவனுக்கு என் மகள குடுக்கணுமா?" என அத்தனை பேச்சு அப்பொழுது கனகாவிடம்.
"அந்த திகழ் இல்லைனா என்னை உயிரோட பாத்துருப்பியா நீ?" என அன்பரசன் ஒற்றை கேள்வி கேட்க, அனன்யாவும் அன்னையை முறைத்தாள்.
"நான் நடக்க முடியாம படுத்த படுக்கையான அப்போ எனக்காக அவ வாழ்க்கையை எங்க கொண்டு போய் நிறுத்தி இருந்தானு மறந்து போச்சா உனக்கு? அந்த ஆர்யா தம்பி நல்லவனா இருக்க போய் இப்ப அவ நல்ல நிலமைல இருக்கா இல்லைனா நமக்காக அவ எடுத்த ரிஸ்க்க்குக்கு அவ என்ன ஆகி இருப்பா? எத்தனை ஜென்மத்துலயும் அவளுக்கான நன்றிக்கடனை தீர்க்க முடியாது!"
"அதுக்கு? என் பொண்ணை தூக்கி நான் குடுக்கணுமா?" என்ற கனகா,
"நல்லா செஞ்சா உங்களுக்கு. அவ திட்டமே அது தான். அதான் காண்ட்ராக்ட்ல கல்யாணம் பண்ணிட்டு போய் நல்ல பணக்காரன்னதும் இப்ப அவன் கூடவே கல்யாணம் பண்ணிட்டு இருக்கா. தங்கச்சியையும் கரை சேர்த்தாச்சு!" என்றார்.
"ச்சீ! நாக்குல எப்பவுமே விஷத்தை வச்சுட்டு சுத்துற நீயெல்லாம்!" என்ற அன்பரசன்,
"அனு! நீ உள்ள போ! அரவிந்த் என்ன சொல்றான்னு பேசிக்குவோம்!" என தன்மையாய் அன்பரசன் சொல்ல,
"என்னை மீறி யார் என்ன பண்றீங்கனு நான் பார்த்துடுறேன்!" என்றார் கனகாவும் சவாலாய்.
மொத்தமாய் அயர்ந்து போனாள் அனன்யா. அதுவும் அடுத்த சில நிமிடங்களிலேயே அன்பரசன் அனன்யா காதுபடவே மற்றொரு மாப்பிள்ளை வீட்டில் பேசி நாளை பெண் பார்க்க என வர சொல்ல, அன்னையை நினைத்து அத்தனை பயம் அனன்யாவிற்கு.
அந்த பயத்தின் முன் அன்பரசன் வார்த்தைகள் எல்லாம் காணாமல் போக, அன்று இரவுக்கு பேருந்தில் பதிவு செய்தவள் தந்தையிடமும் சொல்லிக் கொள்ளாமல் கனகா கண்ணில் படாதவாறு கிளம்பிவிட்டாள் வீட்டில் இருந்து.
பேருந்தில் ஏறிய மறு நிமிடமே தந்தைக்கு தான் செல்லும் பேருந்து பற்றிய தகவல்களை அவள் அனுப்பிவிட, பார்த்த அன்பரசன் உடனே மகளுக்கு அழைத்துவிட்டார்.
"என்ன டா நீ?" என அன்பரசனுக்கு பொறுக்கவே இல்லை.
"என்னை மன்னிச்சுடுங்க ப்பா. ஆனா நான் தப்பில்ல. தப்பான பொண்ணில்ல. இப்ப வரை அர்வி அத்தானுக்கு நம்ம வீட்டுல நடந்த எதுவுமே தெரியாது. நான் சொல்லவும் இல்ல. நான் தனியா தான் ஊருக்கு போறேன். அவங்க நம்ம ஊர்ல தான் இருக்காங்க. அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லப்பா. நீங்க நம்புங்க ப்பா என்னை!" என அழுகை அனன்யாவிடம்.
"எனக்கும் தெரியும் டா உன்னை. நீ இவ்வளவு சொல்லனுமா? ஆனாலும் இப்படி தனியா உடனே அப்பாகிட்ட கூட சொல்லாம கிளம்பிட்டியே!" என சொல்லவும் இன்னும் அவள் அழ,
"பெத்தவ இப்படி இருந்தா நீ என்ன பண்ணுவ? சரி பார்ப்போம். நீ எதுவும் நினைக்காம இரு. அரவிந்த்கிட்ட நான் பேசுறேன்!" என சொல்ல, அனன்யா சரி என்றோ வேண்டாம் என்றோ கூறவில்லை.
இப்போதைக்கு அன்னையிடம் இருந்து தப்பிக்கும் மனநிலையில் அவள் கிளம்பி இருக்க, அரவிந்த்தின் மூன்று தவறிய அழைப்புகளை கூட கண்டவள் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் திருப்பி அழைக்கவே இல்லை. மகிழினிக்கு எந்த குறையும் இல்லாமல் அனைத்தையும் செய்து முடித்து அவன் வரட்டும் என மௌனமாய் காத்திருக்க ஆரம்பித்தாள்.
சனிக்கிழமை காலை வழக்கம் போல அனன்யா சென்னை வந்து சேர்ந்தவள் கிளம்பி அலுவலகம் சென்று வந்து அறைக்குள் இருந்து கொண்டாள்.
அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. நன்றாய் சாப்பிட்டது எப்பொழுது என யோசித்தால் அரவிந்த் அருகே மகிழினி திருமணத்தில் சாப்பிட்டது. அடுத்த நாள் காலையே அன்னை செய்து வைத்த வேலையில் சாப்பாடு என்றதை மறந்திருக்க, மதியம் வீட்டில் நடந்த கலவரத்தில் சாப்பாடு எல்லாம் யாரின் நினைவிலும் இல்லை. இரவும் அன்னைக்கு தெரியாமல் கிளம்பி பேருந்திற்கு வந்துவிட்டவளுக்கு அடுத்த நாள் அலுவலகத்தில் அத்தனை சோகமாய் தான் சென்றது.
சாப்பாடு என்ற நினைவே சுத்தமாய் இல்லாமல் என்னவோ பேருக்கு வேலைக்கு சென்று வந்தவள் அறைக்குள் சுருண்டு கிடந்தாள்.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டின் கதவு தட்டப்பட, அத்தனை ஆசைகளையும் நெஞ்சில் வைத்து அவனாய் மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணி கதவை திறந்தவள் முன் அரவிந்த் நிற்க, அவனைக் கட்டிக் கொண்டு அழுதவள் அவன் தோளிலேயே மயங்கி இருந்தாள்.
தொடரும்..