அத்தியாயம் 28
"ஏதாச்சும் பேசு திகழ்!" என அதிர்ச்சி மீளாமல் அமர்ந்திருந்த திகழ்மதியிடம் ஆர்யன் சொல்ல,
"என்ன பேச? எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அசால்ட்டா சொல்றிங்க?" என்றாள் திகழ்மதி.
"ஏன்? அனன்யா உன் மாமா பொண்ணு தானே? அரவிந்த்க்கு கல்யாணம் பண்றதுல உனக்கு எதாவது வருத்தமா?"
"என்னங்க நீங்க! புரியாம பேசுறீங்க!" என்றவள் ஆயாசம் என்பதை தாண்டி பயத்தை தான் உணர்ந்தாள்.
"அர்விக்கு இப்படி ஒரு எண்ணமா? அதுவும் அனன்யா?" என இன்னுமே துடிப்பு அதிகமாகியது திகழ்மதிக்கு.
"புரியுது! இதெல்லாம் சொல்லிட்டா வரும்?" என ஆர்யன் புன்னகைக்க,
"என்னால அப்படி சந்தோஷப்பட முடியலங்க. எனக்கு அனுவை ரொம்ப பிடிக்கும் தான். ஆனா அர்விக்கான பொண்ணா?" என நிறுத்தியவள்,
"நான் லாஸ்ட் ரெண்டு டைம் சென்னை போகும் போதும் கொஞ்சம் டிஃபரண்ட்டா பீல் பண்ணினேன் அர்விக்கும் அனன்யாவுக்கும் நடுவுல. ஆனா இவ்வளவுக்கு எல்லாம் எதிர்பார்க்கல!" என்றாள் உண்மையாய்.
அரவிந்த் ஆர்யனிடம் சொல்லியதுமே அன்று இரவே தங்களது அறையில் வைத்து ஆர்யன் திகழ்மதியிடம் கூறிவிட்டான்.
அதற்கே பேச்சின்றி அமர்ந்துவிட்டாள் திகழ்மதி.
"அனு உன் தம்பிக்கு வைஃபா வர்றதுல உனக்கு என்ன பிரச்சினை?"
"எனக்கென்ன பிரச்சனை? பிரச்சனையே கனகா அத்தை தான். நிச்சயமா சம்மதிக்க மாட்டாங்க!" என அத்தனை உறுதியாய் கூறினாள் திகழ்மதி.
"நாம பேசுவோம் டா. புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்குல்ல?"
"இல்லவே இல்ல! ஏற்கனவே எங்களை அத்தைக்கு பிடிக்காது. அதுவும் அர்வினா அத்தைக்கு சுத்தமா பிடிக்காது. இது எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா? என்னங்க இது? அனு வேலைக்கு தானே அங்க சென்னை போனா? அதுக்குள்ள என்னலாமோ சொல்றிங்க!" என சொல்ல,
"அதெல்லாம் உன் தம்பிகிட்ட கேட்டுக்கோ அனு. ஆனா இப்ப ஸ்டார்ட் பண்ணல இவங்க. இவங்க நாலஞ்சு வருஷமா கண்ணாமூச்சி ஆடி இப்ப தான் கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க" என ஆர்யன் சொல்ல,
"நாலஞ்சு வருஷமா?" என அதற்கும் ஒரு அதிர்ச்சியைக் காட்டினாள் அவள்.
"நீ ஷாக் ஆக இன்னும் நிறைய நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா சொல்லி ஒவ்வொண்ணுக்கும் நீ ரியாக்சன் குடுத்து. விடிஞ்சது போ!" என்ற ஆர்யன் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.
"தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ!" என்றவன்,
"அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அனு தான் முதல்ல ப்ரொபோஸ் பண்ணிருக்கா பட் அரவிந்த் அப்ப அக்சப்ட் பண்ணல. உன்னை மாதிரியே அவனும் பிரிவுக்கு அப்புறம் தான் பீல் பண்ணி இருக்கான்" என சொல்ல, திகழ்மதி கண்களில் கலவரம் கனகாவை நினைத்து.
"இவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்ட்டிங்க்கு வர்றதுக்குள்ள அனுக்கு அவங்க அம்மா மாப்பிள்ளை கொண்டு வர, அனு பர்ஸ்ட் அவுட் ஆகி அவங்க வீட்டுல அரவிந்த்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல, அவங்க அம்மா என்ன பண்ணினாங்களோ, அனு வீட்டுல சொல்லாமலே மகி கல்யாணத்துக்கு அடுத்த நாள் சென்னைக்கு கிளம்பி போய்ட்டாளாம். அரவிந்த்க்கும் இன்னைக்கு தான் விஷயம் தெரியும் போல" என முழுதாய் சொல்ல,
"இல்ல எனக்கு புரியல!" என்றாள் திகழ்மதி ஆர்யன் முகம் பார்த்து.
"இன்னும் என்ன புரியல?"
"கனகா அத்தையை நினைச்சா எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது தான். அது வேற விஷயம். ஆனா.... இவ்வளவு தெளிவா சொல்றிங்களே! உங்களுக்கு எப்ப தெரியும்?" என சந்தேகமாய் கேட்க, முழு திருட்டுத்தனம் ஆர்யன் விழிகளில்.
"பொய் சொல்லாம சொல்லுங்க!" என திகழ்மதி தெரிந்துவிட்டதை போல இப்பொழுது பார்க்க, சரண்டர் ஆகிவிட்டான் அவன்.
"இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் சொன்னான்னு என்கிட்ட மறைச்சிருக்கிங்க இல்ல நீங்க?" என அதற்கும் ஒரு கோபம் அவளுக்கு.
"அவன் நம்மை விட சின்ன பையன் திகழ். அவன் லைஃப்ல அவன் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கட்டும். அப்ப தான் அவனுக்கும் நிறைய புரியும். அனு ஓகே தானே உனக்கு?" என கொஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அவளை மலையிறக்கி இருந்தான் ஆர்யன்.
"கூட்டு களவாணித்தனம் பண்ணிட்டு அட்வைஸ் வேற!" என்ற திகழ்மதி,
"ஈஸியா கேட்குறிங்க. ஆனா அதே மாதிரி ஈஸியா என்னால பதில் சொல்ல முடியல. அனுவை ரொம்பவே பிடிக்கும் எனக்கும் மகிக்கும். ஆனா அரவிந்த் அனு மேரேஜ்னு நாங்க கனவுல கூட நினைச்சதில்ல. கனகா அத்தை தான் அப்படி நினைப்பு வராததுக்கு ஒரே காரணமும். அனன்யா சொல்லாம சென்னை கிளம்பி போற அளவுக்கு அத்தை ஏதோ பண்ணிருக்காங்க தானே?" என்றவள் தலையில் கைவைத்து அமர,
"அரவிந்த் உங்க மாமாகிட்ட பேச போறதா சொன்னான். நான் பேசுறேன்னு தான் சொன்னேன். பட் அவனே பேசினா தான் பெட்டர்னு பீல் பன்றான்!"
"அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிட்டானா" என அதற்கும் ஒரு கோபம்.
"பிரச்சனைனு வந்தா தான் முடிவுன்னும் ஒண்ணு வரும். என்ன ஆனாலும் அரவிந்த் அனன்யாவை கல்யாணம் பண்ணிக்குறதுல தான் ஸ்ட்ரோங்கா இருக்கான். சோ வர்றது வரட்டும். பார்த்துக்கலாம். நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காத!" என மனைவியை தேற்ற, மனம் மட்டும் ஆறவே இல்லை திகழ்மதிக்கு.
"டென்ஷன் மட்டும் தான். என்னென்னவோ நினச்சேன். இப்படி நினைக்கவே இல்ல. கனகா அத்தையை ஃபேஸ் பண்ணனும் நினைச்சாலே பயமா இருக்கு!" என புலம்பல் மட்டும் முடிந்த பாடில்லை அவளுக்கு.
திங்கள் கிழமை காலை பத்து மணிக்கெல்லாம் தயாராகி கையில் கவருடன் அறையில் இருந்து கனகா வெளியே வர, அன்பரசன் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்.
அவரை கண்டும் காணாதவரா ய் கனகா வேகமாய் வாசல் நோக்கி செல்ல,
"நில்லு!" என்ற சத்தத்தில் நின்றாலும் அன்பரசன் பக்கம் திரும்பவில்லை கனகா.
"எங்க கிளம்பிட்ட?"
"கோவிலுக்கு? ஏன் எப்பவும் கேட்டுட்டா இருப்பிங்க?"
"நீ கோவிலுக்கு மட்டும் தான் போறியா?" என அன்பரசன் திருப்பி கேட்க, பதில் கூறவில்லை கனகா.
"கையில என்ன?"
"எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்லணும்? அப்படி தானே? ஆமா கோவிலுக்கு போய்ட்டு அந்த டாக்டர் வீட்டுக்கு தான் போக போறேன். சம்மந்தம் பேசி முடிக்க போறேன். கல்யாணத்துக்கு நாளை குறிச்சுட்டு தான் வீட்டுக்கு வர போறேன் போதுமா?" என கேட்க,
"உனக்கெல்லாம் அறிவே இல்லையா கனகா?" என அத்தனை அமைதியாய் கேட்டார் அன்பரசன்.
"எனக்கு எங்க இருக்கும்? உங்க கண்ணுக்கு அப்படி தானே நான் தெரிவேன்!" என்ற கனகா மீண்டும் வாசல் நோக்கி செல்ல,
"நில்லுனு சொன்னேன் கனகா!" என்ற அன்பரசன்,
"எல்லாம் தெரிஞ்சே இப்படி பண்றியே நீ?" என மெதுவாய் நிதானமாய் கேட்க,
"என்ன சொல்ல வர்றிங்க?" என்றார் கனகா.
"அனுக்கு பிடிக்காம எப்படி நீ ஏற்பாடு பண்ண முடியும்? கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது கனகா" என்றார் புரிய வைத்துவிடும் நோக்கில்.
"அப்போ! உங்க தங்கச்சி மகனுக்கு உங்க பொண்ணை குடுக்க நீங்க முடிவு பண்ணிட்டீங்க! அப்படி தானே?" என்றார் திரும்பி கணவனை நேருக்கு நேர் கண்டு.
"புரியாத மாதிரி பேசாத! அவ நம்மகிட்ட சொல்லாம கிளம்பி போயிருக்கான்னா அவ எவ்வளவு உறுதியா இருக்கான்னு புரியலையா?"
"எல்லாம் நல்லா புரியுது! எரியுறதை பிடுங்கினா கொதிக்குறது தானா அடங்கும்!"
"தப்பு மேல தப்பு பண்ற! நீ எவ்வளவு தான் அரவிந்த், திகழ், மகி வேண்டாம்னு தள்ளி போனாலும் அவங்க தான் உன் பொண்ணு குடும்பம்னு அவ முடிவு பண்ணிட்டா. இனி பேச ஒன்னும் இல்ல கனகா. தேவையில்லாம இன்னொரு குடும்பத்தையும் இதுக்குள்ள இழுத்து விட்டு சிக்கலாக்காத!"
"எனக்கு தெரியும் நான் நினைக்குறதை எப்படி நடத்திக்கணும்னு. உங்ககிட்ட நான் இப்ப கேட்டேனா புத்தி சொல்ல சொல்லி?".
"நிலைமையை புரிஞ்சிக்கோனு சொல்றேன். பட்டும் திருந்த மாட்டேன்னு நீ நிக்குற. நீ எனக்கு சோத்துல விஷம் வச்சிடுவேன்னு சொன்ன அப்பவே நினச்சேன் எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் நிக்குறனு. ஆனா அனு உன் பொண்ணு. அவளுக்கு நீ எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வச்சாலும் அவளுக்கு புடிச்சவன்னா அது அரவிந்த் மட்டும் தான்" என சொல்லவும் கனகா கோபமாய் பார்க்க,
"நீ பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்தவன் முன்னாடியே நிக்க மாட்டேன்னு கிளம்பி போனவளுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறியே! அன்னைக்கு பஸ் ஏறி கிளம்பி போனவ நாளைக்கு அரவிந்த்தை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா என்ன பண்ணிடுவ?" என கேட்க, கனகா மூச்சே நின்றுவிட்டது அந்த சொல்லில்.
"கொஞ்சமாவது மரியாதையை காப்பாத்திக்கோ! அரவிந்த் என் தங்கச்சி மகன் தான். அதுக்காக மட்டும் சொல்லல. உனக்கே தெரியும் அவன் எப்படிப்பட்டவன்னு. இங்க உன் கண்ணு முன்னாடி தான இத்தனை வருஷமும் இருந்தான். குடும்பத்துக்காக படிச்சு வேலைக்கு போய் அவன் குடும்பத்தை அவனே கரை சேர்த்துட்டு இப்ப தான் அவன் வாழ்க்கைனு ஒண்ணு இருக்கேன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கான். அது அனு கூட தான்னும் போது நீ சந்தோசம் தான் படனும். அவனை விட உன் டாக்டர் மாப்பிள்ளை ஒன்னும் என் பொண்ணை நல்லா பார்த்துக்க மாட்டான். நான் அடிச்சு சொல்றேன்!" என்றவர்,
"உன்னோட ஒரே பிரச்சனை! அரவிந்த் தான். அரவிந்த்தை மாதிரி குணமும் படிப்பும், அறிவும், வேலையும் இருக்குற வேற ஒரு பையனை அனன்யா காதலிச்சிருந்தா நிச்சயமா நீ இவ்வளவு அவ கூட மல்லுக்கு நின்னுருக்க மாட்ட!" என சொல்ல, இன்னமும் கனகாவின் முகத்தில் பிடிவாதம் தான்.
"மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! நீ என்ன தான் ட்ராமா பண்ணினாலும் அனுவை கல்யாண மேடை வர தான் கொண்டு வர முடியும். ஆனா அடுத்து அவ எடுக்குற முடிவு தான் சபை ஏறும்!" என சொல்ல, கனகா முகமே மாறிவிட்டது.
"அதுக்காக அரவிந்த்தை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பானு நான் சொன்னதை நினைச்சுக்காத. அதுக்கு அரவிந்த் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டான். ஆனா அனு அதோட நிக்க போறதில்ல. உன்னை மாதிரி தான் அவளும் பிடிவாதக்காரி. பார்த்துக்கோ. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!" என சொல்லி மீண்டுமாய் ஹாலில் தான் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். சுட்டிக்காட்டிய உண்மைகளில் அங்கேயே தேங்கி நின்றுவிட்டார் கனகா.
தொடரும்..
"ஏதாச்சும் பேசு திகழ்!" என அதிர்ச்சி மீளாமல் அமர்ந்திருந்த திகழ்மதியிடம் ஆர்யன் சொல்ல,
"என்ன பேச? எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அசால்ட்டா சொல்றிங்க?" என்றாள் திகழ்மதி.
"ஏன்? அனன்யா உன் மாமா பொண்ணு தானே? அரவிந்த்க்கு கல்யாணம் பண்றதுல உனக்கு எதாவது வருத்தமா?"
"என்னங்க நீங்க! புரியாம பேசுறீங்க!" என்றவள் ஆயாசம் என்பதை தாண்டி பயத்தை தான் உணர்ந்தாள்.
"அர்விக்கு இப்படி ஒரு எண்ணமா? அதுவும் அனன்யா?" என இன்னுமே துடிப்பு அதிகமாகியது திகழ்மதிக்கு.
"புரியுது! இதெல்லாம் சொல்லிட்டா வரும்?" என ஆர்யன் புன்னகைக்க,
"என்னால அப்படி சந்தோஷப்பட முடியலங்க. எனக்கு அனுவை ரொம்ப பிடிக்கும் தான். ஆனா அர்விக்கான பொண்ணா?" என நிறுத்தியவள்,
"நான் லாஸ்ட் ரெண்டு டைம் சென்னை போகும் போதும் கொஞ்சம் டிஃபரண்ட்டா பீல் பண்ணினேன் அர்விக்கும் அனன்யாவுக்கும் நடுவுல. ஆனா இவ்வளவுக்கு எல்லாம் எதிர்பார்க்கல!" என்றாள் உண்மையாய்.
அரவிந்த் ஆர்யனிடம் சொல்லியதுமே அன்று இரவே தங்களது அறையில் வைத்து ஆர்யன் திகழ்மதியிடம் கூறிவிட்டான்.
அதற்கே பேச்சின்றி அமர்ந்துவிட்டாள் திகழ்மதி.
"அனு உன் தம்பிக்கு வைஃபா வர்றதுல உனக்கு என்ன பிரச்சினை?"
"எனக்கென்ன பிரச்சனை? பிரச்சனையே கனகா அத்தை தான். நிச்சயமா சம்மதிக்க மாட்டாங்க!" என அத்தனை உறுதியாய் கூறினாள் திகழ்மதி.
"நாம பேசுவோம் டா. புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்குல்ல?"
"இல்லவே இல்ல! ஏற்கனவே எங்களை அத்தைக்கு பிடிக்காது. அதுவும் அர்வினா அத்தைக்கு சுத்தமா பிடிக்காது. இது எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா? என்னங்க இது? அனு வேலைக்கு தானே அங்க சென்னை போனா? அதுக்குள்ள என்னலாமோ சொல்றிங்க!" என சொல்ல,
"அதெல்லாம் உன் தம்பிகிட்ட கேட்டுக்கோ அனு. ஆனா இப்ப ஸ்டார்ட் பண்ணல இவங்க. இவங்க நாலஞ்சு வருஷமா கண்ணாமூச்சி ஆடி இப்ப தான் கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க" என ஆர்யன் சொல்ல,
"நாலஞ்சு வருஷமா?" என அதற்கும் ஒரு அதிர்ச்சியைக் காட்டினாள் அவள்.
"நீ ஷாக் ஆக இன்னும் நிறைய நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா சொல்லி ஒவ்வொண்ணுக்கும் நீ ரியாக்சன் குடுத்து. விடிஞ்சது போ!" என்ற ஆர்யன் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.
"தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ!" என்றவன்,
"அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அனு தான் முதல்ல ப்ரொபோஸ் பண்ணிருக்கா பட் அரவிந்த் அப்ப அக்சப்ட் பண்ணல. உன்னை மாதிரியே அவனும் பிரிவுக்கு அப்புறம் தான் பீல் பண்ணி இருக்கான்" என சொல்ல, திகழ்மதி கண்களில் கலவரம் கனகாவை நினைத்து.
"இவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்ட்டிங்க்கு வர்றதுக்குள்ள அனுக்கு அவங்க அம்மா மாப்பிள்ளை கொண்டு வர, அனு பர்ஸ்ட் அவுட் ஆகி அவங்க வீட்டுல அரவிந்த்தை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல, அவங்க அம்மா என்ன பண்ணினாங்களோ, அனு வீட்டுல சொல்லாமலே மகி கல்யாணத்துக்கு அடுத்த நாள் சென்னைக்கு கிளம்பி போய்ட்டாளாம். அரவிந்த்க்கும் இன்னைக்கு தான் விஷயம் தெரியும் போல" என முழுதாய் சொல்ல,
"இல்ல எனக்கு புரியல!" என்றாள் திகழ்மதி ஆர்யன் முகம் பார்த்து.
"இன்னும் என்ன புரியல?"
"கனகா அத்தையை நினைச்சா எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது தான். அது வேற விஷயம். ஆனா.... இவ்வளவு தெளிவா சொல்றிங்களே! உங்களுக்கு எப்ப தெரியும்?" என சந்தேகமாய் கேட்க, முழு திருட்டுத்தனம் ஆர்யன் விழிகளில்.
"பொய் சொல்லாம சொல்லுங்க!" என திகழ்மதி தெரிந்துவிட்டதை போல இப்பொழுது பார்க்க, சரண்டர் ஆகிவிட்டான் அவன்.
"இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் சொன்னான்னு என்கிட்ட மறைச்சிருக்கிங்க இல்ல நீங்க?" என அதற்கும் ஒரு கோபம் அவளுக்கு.
"அவன் நம்மை விட சின்ன பையன் திகழ். அவன் லைஃப்ல அவன் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கட்டும். அப்ப தான் அவனுக்கும் நிறைய புரியும். அனு ஓகே தானே உனக்கு?" என கொஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அவளை மலையிறக்கி இருந்தான் ஆர்யன்.
"கூட்டு களவாணித்தனம் பண்ணிட்டு அட்வைஸ் வேற!" என்ற திகழ்மதி,
"ஈஸியா கேட்குறிங்க. ஆனா அதே மாதிரி ஈஸியா என்னால பதில் சொல்ல முடியல. அனுவை ரொம்பவே பிடிக்கும் எனக்கும் மகிக்கும். ஆனா அரவிந்த் அனு மேரேஜ்னு நாங்க கனவுல கூட நினைச்சதில்ல. கனகா அத்தை தான் அப்படி நினைப்பு வராததுக்கு ஒரே காரணமும். அனன்யா சொல்லாம சென்னை கிளம்பி போற அளவுக்கு அத்தை ஏதோ பண்ணிருக்காங்க தானே?" என்றவள் தலையில் கைவைத்து அமர,
"அரவிந்த் உங்க மாமாகிட்ட பேச போறதா சொன்னான். நான் பேசுறேன்னு தான் சொன்னேன். பட் அவனே பேசினா தான் பெட்டர்னு பீல் பன்றான்!"
"அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிட்டானா" என அதற்கும் ஒரு கோபம்.
"பிரச்சனைனு வந்தா தான் முடிவுன்னும் ஒண்ணு வரும். என்ன ஆனாலும் அரவிந்த் அனன்யாவை கல்யாணம் பண்ணிக்குறதுல தான் ஸ்ட்ரோங்கா இருக்கான். சோ வர்றது வரட்டும். பார்த்துக்கலாம். நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காத!" என மனைவியை தேற்ற, மனம் மட்டும் ஆறவே இல்லை திகழ்மதிக்கு.
"டென்ஷன் மட்டும் தான். என்னென்னவோ நினச்சேன். இப்படி நினைக்கவே இல்ல. கனகா அத்தையை ஃபேஸ் பண்ணனும் நினைச்சாலே பயமா இருக்கு!" என புலம்பல் மட்டும் முடிந்த பாடில்லை அவளுக்கு.
திங்கள் கிழமை காலை பத்து மணிக்கெல்லாம் தயாராகி கையில் கவருடன் அறையில் இருந்து கனகா வெளியே வர, அன்பரசன் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்.
அவரை கண்டும் காணாதவரா ய் கனகா வேகமாய் வாசல் நோக்கி செல்ல,
"நில்லு!" என்ற சத்தத்தில் நின்றாலும் அன்பரசன் பக்கம் திரும்பவில்லை கனகா.
"எங்க கிளம்பிட்ட?"
"கோவிலுக்கு? ஏன் எப்பவும் கேட்டுட்டா இருப்பிங்க?"
"நீ கோவிலுக்கு மட்டும் தான் போறியா?" என அன்பரசன் திருப்பி கேட்க, பதில் கூறவில்லை கனகா.
"கையில என்ன?"
"எல்லாம் உங்களுக்கு விளக்கமா சொல்லணும்? அப்படி தானே? ஆமா கோவிலுக்கு போய்ட்டு அந்த டாக்டர் வீட்டுக்கு தான் போக போறேன். சம்மந்தம் பேசி முடிக்க போறேன். கல்யாணத்துக்கு நாளை குறிச்சுட்டு தான் வீட்டுக்கு வர போறேன் போதுமா?" என கேட்க,
"உனக்கெல்லாம் அறிவே இல்லையா கனகா?" என அத்தனை அமைதியாய் கேட்டார் அன்பரசன்.
"எனக்கு எங்க இருக்கும்? உங்க கண்ணுக்கு அப்படி தானே நான் தெரிவேன்!" என்ற கனகா மீண்டும் வாசல் நோக்கி செல்ல,
"நில்லுனு சொன்னேன் கனகா!" என்ற அன்பரசன்,
"எல்லாம் தெரிஞ்சே இப்படி பண்றியே நீ?" என மெதுவாய் நிதானமாய் கேட்க,
"என்ன சொல்ல வர்றிங்க?" என்றார் கனகா.
"அனுக்கு பிடிக்காம எப்படி நீ ஏற்பாடு பண்ண முடியும்? கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது கனகா" என்றார் புரிய வைத்துவிடும் நோக்கில்.
"அப்போ! உங்க தங்கச்சி மகனுக்கு உங்க பொண்ணை குடுக்க நீங்க முடிவு பண்ணிட்டீங்க! அப்படி தானே?" என்றார் திரும்பி கணவனை நேருக்கு நேர் கண்டு.
"புரியாத மாதிரி பேசாத! அவ நம்மகிட்ட சொல்லாம கிளம்பி போயிருக்கான்னா அவ எவ்வளவு உறுதியா இருக்கான்னு புரியலையா?"
"எல்லாம் நல்லா புரியுது! எரியுறதை பிடுங்கினா கொதிக்குறது தானா அடங்கும்!"
"தப்பு மேல தப்பு பண்ற! நீ எவ்வளவு தான் அரவிந்த், திகழ், மகி வேண்டாம்னு தள்ளி போனாலும் அவங்க தான் உன் பொண்ணு குடும்பம்னு அவ முடிவு பண்ணிட்டா. இனி பேச ஒன்னும் இல்ல கனகா. தேவையில்லாம இன்னொரு குடும்பத்தையும் இதுக்குள்ள இழுத்து விட்டு சிக்கலாக்காத!"
"எனக்கு தெரியும் நான் நினைக்குறதை எப்படி நடத்திக்கணும்னு. உங்ககிட்ட நான் இப்ப கேட்டேனா புத்தி சொல்ல சொல்லி?".
"நிலைமையை புரிஞ்சிக்கோனு சொல்றேன். பட்டும் திருந்த மாட்டேன்னு நீ நிக்குற. நீ எனக்கு சோத்துல விஷம் வச்சிடுவேன்னு சொன்ன அப்பவே நினச்சேன் எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் நிக்குறனு. ஆனா அனு உன் பொண்ணு. அவளுக்கு நீ எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வச்சாலும் அவளுக்கு புடிச்சவன்னா அது அரவிந்த் மட்டும் தான்" என சொல்லவும் கனகா கோபமாய் பார்க்க,
"நீ பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்தவன் முன்னாடியே நிக்க மாட்டேன்னு கிளம்பி போனவளுக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறியே! அன்னைக்கு பஸ் ஏறி கிளம்பி போனவ நாளைக்கு அரவிந்த்தை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா என்ன பண்ணிடுவ?" என கேட்க, கனகா மூச்சே நின்றுவிட்டது அந்த சொல்லில்.
"கொஞ்சமாவது மரியாதையை காப்பாத்திக்கோ! அரவிந்த் என் தங்கச்சி மகன் தான். அதுக்காக மட்டும் சொல்லல. உனக்கே தெரியும் அவன் எப்படிப்பட்டவன்னு. இங்க உன் கண்ணு முன்னாடி தான இத்தனை வருஷமும் இருந்தான். குடும்பத்துக்காக படிச்சு வேலைக்கு போய் அவன் குடும்பத்தை அவனே கரை சேர்த்துட்டு இப்ப தான் அவன் வாழ்க்கைனு ஒண்ணு இருக்கேன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கான். அது அனு கூட தான்னும் போது நீ சந்தோசம் தான் படனும். அவனை விட உன் டாக்டர் மாப்பிள்ளை ஒன்னும் என் பொண்ணை நல்லா பார்த்துக்க மாட்டான். நான் அடிச்சு சொல்றேன்!" என்றவர்,
"உன்னோட ஒரே பிரச்சனை! அரவிந்த் தான். அரவிந்த்தை மாதிரி குணமும் படிப்பும், அறிவும், வேலையும் இருக்குற வேற ஒரு பையனை அனன்யா காதலிச்சிருந்தா நிச்சயமா நீ இவ்வளவு அவ கூட மல்லுக்கு நின்னுருக்க மாட்ட!" என சொல்ல, இன்னமும் கனகாவின் முகத்தில் பிடிவாதம் தான்.
"மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! நீ என்ன தான் ட்ராமா பண்ணினாலும் அனுவை கல்யாண மேடை வர தான் கொண்டு வர முடியும். ஆனா அடுத்து அவ எடுக்குற முடிவு தான் சபை ஏறும்!" என சொல்ல, கனகா முகமே மாறிவிட்டது.
"அதுக்காக அரவிந்த்தை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பானு நான் சொன்னதை நினைச்சுக்காத. அதுக்கு அரவிந்த் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டான். ஆனா அனு அதோட நிக்க போறதில்ல. உன்னை மாதிரி தான் அவளும் பிடிவாதக்காரி. பார்த்துக்கோ. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!" என சொல்லி மீண்டுமாய் ஹாலில் தான் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். சுட்டிக்காட்டிய உண்மைகளில் அங்கேயே தேங்கி நின்றுவிட்டார் கனகா.
தொடரும்..