• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 29

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
அத்தியாயம் 29

"எவ்ளோ லேட் பண்ற நீ!" என வந்து கொண்டிருந்த அனன்யாவை முறைத்த அரவிந்த்,

"லஞ்ச் டிபன் ரெண்டும் இருக்கு. போய் சாப்பிட்டு கிளம்பு. டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்!" என அவளிடம் பையை கொடுத்த அரவிந்த் மணியைப் பார்க்க, எட்டை தாண்டி இருந்தது.

"மீட்டிங் என்ன பண்ண போறேனோ. ப்ரிப்பார் பண்ணது எல்லாம் போய் தான் பார்க்கணும்!" என அவன் புலம்பி தயாராக,

"த்தான்!" என அழைத்தாள் அனன்யா.

"ம்ம்!" என அரவிந்த் அவள் முகம் பார்க்கவும், "சோ ஸ்வீட் நீங்க!" என புன்னகைக்க, அதில் சிரித்தவனும்,

"ஐஸ் வைக்குற இல்ல? கல்யாணம் வரை தான். அப்புறம் நீ தான் எல்லாம் செய்யணும். பார்த்துக்கோ!" என முறைத்தபடி புன்னகைக்க,

"பண்ணிக்கலாம்!" என்றாள் கண் சிமிட்டி.

"எது கல்யாணமா?" என்றவன்,

"சனிக்கிழமை ஊருக்கு போய்ட்டு வந்து தான் தெரியும் என்ன நிலைமைல நாம இருக்கோம்னு!" என்றான் மலைப்பாய்.

"நானும் வர்றேன்னு சொல்றேன். நீங்க தான் கேட்க மாட்றிங்க!" என்றாள் அனன்யாவும் குறையாய்.

"நீ அன்னைக்கு அவ்வளவு அவசரமா கிளம்பிருக்க கூடாது. அப்பவே கால் பண்ணி என்னை வர சொல்லி இருந்தா ரெண்டு பேருமா சேர்ந்து ஃபேஸ் பண்ணி இருந்திருக்கலாம். இப்ப நானே என்ன பேச போறேன்னு தெரியல. நீ வந்து உன் அம்மா பேச்சுக்கு நீ பதில் பேசினு என்னை டென்ஷன் பண்ணிடுவ. அதனால இங்கயே நீ இரு. நான் பார்த்துக்குறேன் இனி!" என்றவன்,

"ஓகே டைம் ஆச்சு டா. வந்து பேசலாம். நீ சாப்பிட்டு கிளம்பு" என சொல்லிக் கொண்டு கிளம்பிவிட, அரவிந்த் கொடுத்ததை சாப்பிட பிரித்தவள் மனம் அத்தனை இலகுவாய் இருந்தது கடந்த இரண்டு தினங்களாய்.

தன்னை சுற்றிலும் அத்தனையும் பிரச்சனைகள் தான் எனினும். இதோ அவனும் தானும் எனும் இந்த நிமிடங்களை அத்தனைக்கு அவள் ரசிப்பதை ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.

திகழ்மதி அரவிந்த்திடம் இது தொடர்பாய் இன்னமும் பேசி இருக்கவில்லை அரவிந்த்திடம்.

ஆர்யன் தான் அழைத்து அரவிந்த்திற்கு திகழ்மதி கூறியதை சொல்ல,

"ஷாக்ல இருப்பாங்க அக்கா. நான் வர்றேன் மாமா. வந்து பேசிக்குறேன்!" என்றுவிட்டான் அரவிந்த்.

அதை அனன்யாவிடமும் அரவிந்த் பகிர, "என்னால எத்தனை பேருக்கு கஷ்டம்? நான் ஏன் த்தான் இப்படி இருக்கேன்?" என அவனிடமே கேட்க,

"ம்ம்ஹும்! உன்னால மட்டும் இல்ல. என்னாலையும் தான்" என பெருமூச்சை கொடுத்தவன்,

"எல்லாத்தையும் கடந்து தான் வரணும். பிரச்சனை வரட்டும். வரும் தான். ஆனா அது பிரச்சனையாவே இருந்துட கூடாது. எல்லாரும் சமாதானம் ஆனா தான் நம்ம கல்யாணத்துல ஒரு அர்த்தம் இருக்கும்!" என்றான்.

"அம்மா சமாதானமாக மாட்டாங்க த்தான்! எனக்கு தெரியும்!" அனன்யா சொல்ல,

"ஆகலைனா?" அரவிந்த் கேட்டான் அனன்யாவை பார்த்து புருவம் உயர்த்தி.

"ஆகலைனா என்ன! இப்படியே இருக்க வேண்டியது தான். நான் இந்த வீடு நீங்க அந்த வீடுனு. ரெண்டு வீட்டுக்கும் வாடகை குடுத்தே நாம வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்!" என சொல்லி சிரிக்க,

"எனக்கும் சேர்த்து நீ முடிவு பண்ணுவியா? அப்போ நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா?" என்றான் கிண்டலாய்.

"அதெல்லாம் பண்ண மாட்டிங்க. திகழ் அண்ணி தம்பியை எனக்கு தெரியாது!" என்றவள் சிரிப்பில் கனிந்தவன் மனம் அப்போதிருந்தே சஞ்சலம் சூழ்ந்தது நடக்கவிருப்பது என்னவோ என.

அந்த வாரம் முழுக்க, திகழ்மதி, கனகா, அன்பரசன் என அனைவருக்கும் ஒருவித அமைதியில் கழிந்திருந்தது.

அரவிந்த் அனன்யா இருவரின் பேச்சுக்களும் எங்கே ஆரம்பித்தாலும் முடிந்தது என்னவோ கனகா சம்மதிப்பாரா? வீட்டினரின் பேச்சுக்கள் எந்த விதமாய் செல்லும், கோபம் பேச்சோடு நின்றுவிடுமா என தான் இருந்தது.

அரவிந்த் தன் சகோதரி, தாய்மாமன், அவர் மனைவி என நினைத்து மனம் ஒரு நிலையில் நில்லாமல் கொஞ்சம் பயத்தை அதிகமாய் எடுத்துக் கொள்ள,

"சாரி த்தான்! என்னால தான?" என முன்னே வந்து நின்றுவிடுவாள் அனன்யா.

"உன்னால இல்ல உனக்காக" என அவள் நெற்றியில் வலிக்காமல் தட்டுபவன் சிரித்துக் கொண்டான்.

"எது வந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும் அனு" என்றவன்,

"ஆனா பயமா தான் இருக்கு. அக்கான்னா கனகா அத்தைக்கு எப்பவுமே ஆகாது. எப்பவுமே ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க இல்ல அக்காவை?" என கேட்கவும் அனன்யா அமைதியாகிவிட்டாள்.

"இதுக்கும் அத்தை அக்காவை தான் திட்டுவாங்க. ஆனா எனக்கும் கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி தான் அனு. சொந்தமா வீடில்ல ஒண்ணுமில்ல. ஆனாலும் ரெடியா நிக்குறேன் பாரேன்!" என சொல்ல,

"த்தான்! என்ன நீங்க! இப்படிலாம் பேசினா நீங்க ஒன்னும் ஊருக்கு போக வேண்டாம். விடுங்க. ஒரு வருஷம் போகட்டும்!" என்றாள் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

"ஆமா! ஒரு வருஷத்துல இவளை அப்படியே தூக்கி என் கையில கொடுத்துடுவாங்க பாரு!" என்ற அரவிந்த்,

"என்னவோ பக்பக்னு இருக்கு அனு. மாமாவை பார்த்து பேசுற வரை எனக்கு டென்ஷன் தான்!" என்றான்.

"ஆனா நான் சொன்னதும் நிஜம் தான். இப்ப போய் முதல்ல அத்தை மாமாவை பார்த்து பேசணும். கையோட ஆர்யா மாமாகிட்ட சொல்லி வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணனும். எப்படியும் முட்டி மோதி எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சு கல்யாணத்துக்கு தயாராக ஆறு மாசம் எடுக்கும் இல்ல? இப்போ ஆரம்பிச்சா தான் வீட்டை கட்டி முடிக்க முடியும்" என்றான் அத்தனை தெளிவாய் யோசித்து.

"வீடு கட்ட போறோமா? சூப்பர் த்தான்! குட்டியா அழகா இருக்கட்டும்!" என்றாள் பளிச்சென புன்னகைத்தாள் அனன்யா.

"உன்னை மாதிரியே அழகா பண்ணிடலாம்." என கன்னம் கிள்ளி சொல்லிவிட்டு ஒற்றை ரோஜாவை அவள் கைகளில் நீட்டி இருந்தவன், அடுத்த நாள் அனன்யாவிடமும் சொல்லிக் கொண்டு அனன்யா தாய் தந்தையை பார்க்க கிளம்பிவிட்டான் அரவிந்த்.

ஏற்கனவே ஆர்யனிடம் தான் வரும் தகவலை அரவிந்த் சொல்லி இருக்க, திகழ்மதி அரவிந்த்தை தனியே அனுப்ப சம்மதிக்கவே இல்லை.

"என்ன விளையாடுறீங்களா? அவன் போனதும் எங்க அத்தை சரினு சொல்லிடுவாங்களா? இப்ப நீங்க வர்றிங்களா இல்ல நான் மட்டும் போகவா?" என திகழ்மதி ஆர்யனை பேச விடாமல் அரவிந்த் வருவதற்கு முன்பே அன்பரசன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் கணவனோடு.

அன்பரசனின் எந்த மாதிரியான பார்வை தன் மீது விழும் என அத்தனை எண்ண ஓட்டத்தோடு தான் அரவிந்த் சென்னையில் இருந்து வந்து சேர்ந்தான்.

மாமாவை பார்த்துவிட்டு தான் வீட்டிற்கு வருவேன் என ஆர்யனிடமும் அரவிந்த் சொல்லி இருக்க, ஆர்யன் திகழ்மதியை அங்கே அவன் எதிர்பார்க்கவே இல்லை.

ஆர்யன் திகழ்மதி வந்து கால் மணி நேரம் கடந்தும் வெளிவரவே இல்லை கனகா. அத்தனை கோபம். கணவனிடமும் பேசி ஒரு வாரமாகி இருக்க, யோசிக்க கூட முடியவில்லை அடுத்து என்ன என்று.

இந்த நிலையில் திகழ்மதி ஆர்யன் வரவை எதிர்பார்க்காத கனகா அவர்களைப் பார்த்ததும் தான் எழுந்து உள்ளே சென்றது.

திகழ்மதி கணவனை கவலையாய் பார்க்க, "திகழ்! உள்ள வா டா!" என வந்துவிட்டார் அன்பரசன்.

"மாமா!" என சிறிய குரலில் அழைத்து உள்ளே சென்று அமர்ந்தவள் நிமிர்ந்து மாடியில் தாங்கள் தாங்கி இருந்த இடத்தைக் கண்டாள்.

"என்ன சாப்பிடுற திகழ்?" என்ற அன்பரசன் தன் மனைவியை அழைக்கவில்லை என்பதே அவர்களுக்குள் சண்டையோ எனும் எண்ணத்தை கொண்டு வந்தது திகழ்மதிக்கு.

"எதுவும் வேணாம் மாமா!" என்றவள் தயங்கி தன் கணவனைக் காண, ஆர்யன் கண்களால் அவளை அமைதி காக்க கூறினான்.

"இவளை எல்லாம் திருத்த முடியாது. நீ எதுவும் நினைச்சுக்காத திகழ்!" என்ற அன்பரசன் ஆர்யனையும் பார்த்து புன்னகைத்துவிட்டு சாய்வு நாற்காலியில் அமர, அவரருகில் அமர்ந்து நாற்காலியின் காலில் தலையை சாய்த்துக் கொண்டாள் திகழ்மதி.

"அப்படியே இருக்க டா!" என அன்பரசன் அப்போதும் புன்னகைக்க, கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது திகழ்மதிக்கு.

"மன்னிச்சிருங்க மாமா. இப்படிலாம் நடக்கும்னு நானும் நினைக்கல!" என கண்ணீரோடு அவள் கூற,

"என்ன திகழ்! எதுக்கு அழுவுற?" என அப்போது தான் அவள் முகம் பார்த்தார் அன்பரசன். ஆர்யனும் மனைவியை முறைத்து தலையசைக்க, கண்களை துடைத்துக் கொண்டவள்,

"அனு மனசுலயும் இப்படி ஒரு எண்ணம் வரும்னு நான் நினைக்கல மாமா. அத்தைக்கு இது எவ்வளவு வருத்தம் குடுக்கும்னு எனக்கு புரியுது!" என்றும் சொல்லியவள் கலங்கிய கண்களை மீண்டுமாய் துடைத்துக் கொள்ள, உள்ளிருந்து அத்தனை உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்த கனகாவிற்கு கொதித்துக் கிண்டல் வந்தது திகழ்மதியின் பேச்சு.

"நீ எதுக்கு டா அழுதுட்டு இருக்க. அரவிந்த்க்கு என்ன? அரவிந்த் மாதிரி ஒரு பையனை எங்க போய் நான் தேட?" என்றவர் பதிலில் இன்னுமே உடைந்தாள் திகழ்மதி.

"நானும் அனுக்கு இப்படி ஒரு நினைப்பு வரும்னு எதிர்பார்க்கல. அரவிந்த் அத்தானை ஒரு வார்த்தை சொன்னாலும் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு அனு சொல்றா" என சொல்லி அவர் சிரிக்க, திகழ்மதி மௌனமா மை இருந்தாள்.

"அரவிந்த்கிட்ட போன்ல அன்னைக்கு பேசினேன். அனுவை பார்த்துக்கோ லன்னு சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்துல பஸ் ஏறிட்டான். ரொம்ப நல்லவன். உன் வளர்ப்புல்ல!" என சொல்லி அத்தனை பெருமை அவரிடம்.

"சரி இரு எதாவது வாங்கிட்டாவது வர்றேன்!" என எழ இருந்தவரை ஆர்யனும் மறுத்து விட, அரவிந்த்தும் அப்பொழுது தான் வந்து சேர்ந்தான்.

வந்தவன் ஆர்யன் திகழ்மதியை எதிர்பார்க்காத அதிர்ச்சியோடு வாசலில் நிற்க,

"அட அரவிந்தா! வா டா!" என அழைத்த அன்பரசன் அழைப்பில் தான் மற்ற இருவரும் அவனைக் கண்டது.

"க்கா!" என்ற அரவிந்த் அழைப்பிற்கு திகழ்மதி அவனை முறைக்க, தயங்கி நின்றான் அவன்.

அதற்கு மேலும் உள்ளேயே இருக்கவா என எழுந்து வந்துவிட்டார் கனகாவும்.

"சந்தோசமா? இப்ப சந்தோசமா? குடும்பமா சேர்ந்து என் பொண்ணை உங்க பக்கமா இழுத்தாச்சா?" என கனகா சத்தமிட ஆரம்பிக்க, ஆர்யன் பேச்சுக்கள் எல்லாம் அவர் மூளைக்கு செல்லவே இல்லை.

"மறுபடியும் என்கிட்ட அடி வாங்கிட்டு போயிராத கனகா!" என அன்பரசன் திருப்பி சத்தமிட,

"ஏன் டா? இதெல்லாம் தேவையா? மாமா பாவம் டா அர்வி!" என திகழ்மதி அழவே ஆரம்பித்துவிட, அரவிந்த் அதன்பின் தான் பேசவே ஆரம்பித்தான்.

தொடரும்..
 
  • Love
Reactions: Vathani

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
880
647
93
Chennai
ம்ம் என்ன பேசுவானு பார்ப்போம்
பார்த்துடுவோம் kka