அத்தியாயம் – 21
அன்று இரவு தன் மனதிலிருப்பதை எல்லாம் கொட்டிவிட்ட நிம்மதியில் மலர் உறங்க மாதேஷோ அவளது வார்த்தைகளில் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.
அதிகாலை கதிரவன் சிறகுகள் ஜன்னளில் பட்டு அவள்மீது தெறிக்க அந்த அனலில் அவளது உறக்கம் களைய மெதுவாக எழுந்தவள் மணியை பார்க்க அது ஏழு என கட்டியது....... வேகமாக எழுந்தவள் முதலில் சென்றது மாதேஷை தேடி தான்...........ஆனால் அங்கு யாரும் இல்லை. “இவர் எங்க காணோம் ...இன்னும் கோபம் தீரலையா” என்றபடி வீடு முழுவதும் தேடியவள் அவன் இல்லாமல் போக அவனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டாள். அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற பதில் வந்தது. அக்கம் பக்கம் விசாரிக்க அவர்களும் பார்க்கவில்லை என்றனர்..... . உடனே கோபியை அலைபேசியில் அழைக்க அவனும் நேற்று ஆபிசில பார்த்தது தான் என்றான்.
அவளது இதயத்துடிப்பு படபடவென எகிற “எங்க போனாரு.....இதுவரை இப்படி போனதில்லியே......அதுவும் இந்த நேரத்தில ...அச்சோ நான் ஒரு முட்டாள்...... .....எப்பவும் ஒரு நம்ம வார்த்தை பேசினா அவரு நூறு வார்த்தை பேசுவாரு........நேற்று நான் பேசினதுக்கு எல்லாம் அமைதியா இருக்கும்போதே நான் உஷாரா இருந்திருக்கணும்..........இப்போ என்ன பண்றது......வேற யாரை கேட்கிறது” என புலம்பியவள் அவன் வரவை எதிர்பார்த்து வாசலிலே அமர்ந்திருந்தாள். கண்கள் வாசற்படியில் இருக்க .. நினைவுகள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் மூழ்கி இருந்தது.....
மலரு மலரு நான் ரொம்ப சந்தோஷாமா இருக்கேன் என்றபடி அவளை தூக்கி சுற்றியவன் அவன் சொன்ன காரணம் கேட்டு மூர்ச்சையாகி போனாள். அது வேறு ஒன்றுமில்லை.....அவன் கோவிலில் பார்த்த அந்த பாடகர் அவளுக்கு பாட்டு கத்துகொடுக்க ஒத்துகொண்டார் என்பது தான் அவனின் சந்தோஷத்திற்கும் மலரின் மயக்கத்திற்கும் காரணம்.
“ஏண்டி நான் எவ்ளோ சந்தோஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன்......நீ இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என அவன் கேட்கவும்
“அதுவந்து எனக்கு எக்ஸாம் இருக்கு...நிறையா படிக்கணும்.....அதனால இப்போ வேண்டாம்.....இன்னும் 2 மாசம் கழிச்சு நான் கிளாஸ் போய்கிறேன்” என்றாள் மலர். தனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னால் எங்கே திட்டுவானோ என்று பயந்து அவள் சாக்கு சொல்ல ஆனால் அதற்கு எல்லாம் மசிந்து விடுவானா அவள் கணவன்.....
உடனே “இங்கபாரு மலரு இந்த வாய்ப்பை வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா..... சாதரனமா அவங்க யாருக்கும் சொல்லி கொடுக்க ஒத்துக்க மாட்டங்க......ஆனா உன் அதிர்ஷ்டம் ஒத்துகிட்டாங்க.... எனக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு...... உனக்கு தெரியுமா மலரு...சின்ன வயசில இருந்தே எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்.....சாப்பாடு இல்லாம கூட இருப்பேன்......பாட்டு கேட்காம என்னால இருக்க முடியாது.....நானும் பாட்டு கத்துக்க முயற்சி பண்ணினேன்.....வாய்ப்பு கிடைக்களை...... உனக்கு அது கிடைச்சிருக்கு....நீ மாட்டேன்னு சொல்லிடாத மலரு.....என்னோட ஆசை உன் மூலமாதான் நிறைவேற போகுது” என தனது மனதின் ஏக்கத்தை அவன் சொல்லவும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதே தெரியவில்லை..
இதுவரை அவன் இப்படி மனம் விட்டு பேசி அவள் கேட்டதில்லை.முதன்முறையாக தனது ஆசையை அவன் வெளிபடுத்த அதை தட்டி பேசமுடியாமல் அதே நேரத்தில் அவளுக்கு இதில் எல்லாம் விருப்பாம் இல்லை என்பதயும் அவனுக்கு எப்படி புரியவைப்பது என தெரியாமல் தவித்து நின்றாள்.
விருப்பம் இல்லை என சொல்ல மனமில்லாமல் முடியாது என்று சொன்னால் அதற்கும் திட்டு விழும் என பயந்து பல சாக்குகள் சொல்லியும் அவன் பிடிவாதமாக இருந்ததால் அவள் ஒத்து கொண்டாள்..ஆனால் மறுநாள் புத்தகம் வாங்க சென்ற இடத்தில இப்படி நடக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை......அதற்கு பிறகு நடந்தது எல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.
சூரியன் உச்சி பொழுதில் நிற்க நேரம் செல்ல செல்ல அவள் மனதில் ஒரு பயம் எழ ஆரம்பித்தது. மனதின் பயம் உடலுக்குள் பரவ கைகால்கள் சற்று நடுக்கம் எடுக்க என்ன செய்வது எனதெரியாமல் மூளை குழம்பி அவள் அமர்ந்திருக்க அந்த நேரத்தில் அவளது அலைபேசி ஒலித்தது.
அவன் தான் பேசுகிறான் என்ற எண்ணத்தில் வேகமாக போனை எடுத்து உடன் “ஏங்க சொல்லாம எங்க போனீங்க.....நான் பேசினது தப்புன்னா திட்டுங்க ஏன் இரண்டு அடிகூட அடிச்சிடுங்க...ஆனா இப்படி எல்லாம் சொல்லாம எங்கும் போகாதீங்க.....எனக்கு பயமா இருக்குங்க.....எனக்கு உங்களைவிட்டா வேற யார் இருக்கா...சீக்கிரம் வாங்க “ என தேம்பலும் அழகையுமாய் அவள் பேசவும்
“ ஐயோ என்னாச்சு மலரு....மாதேஷ் எங்க போய்ட்டான்?...உங்க இரண்டுபேருக்குள்ள என்ன பிரச்சனை?....என்ன நடக்குது அங்க? என எதிர்புறத்தில் மோகனிடம் இருந்து படபடவென கேள்விகள் வர இதை சற்றும் எதிர்பார்க்காத மலர் திகைத்து நிற்க .
“மலரு...மலரு” என அவன் கத்தவும்
அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அழுகையாய் வெளிவர அவள் வெடித்து அழுகவும்
“என்னாச்சு மலரு....ஏன் இப்படி அழற....சொல்லுமா,,,என்ன நடந்தது ?” என மோகன் பதட்டத்துடன் கேட்டான்.
“அது வந்து... வந்து.... மோகன் மாமா அவர் மேல எந்த தப்பும் இல்லை.....நான் தான்..... நான் தான்” என நேற்று நடந்ததை அவனிடம் முழுவதுமாக அழுகையுடன் சொல்லி முடித்தாள் மலர்.
“அடகடவுளே ஏம்மா உனக்குதான் அவனை பத்தி தெரியுமே......அப்புறம் நீ ஏன் அங்க போன......அடுத்த நாளாவது ப்ரிண்ட்ஸ் கூட போய் இருக்கலாம்ல” என்றான் மோகன்
“நான் வேணும்னு இப்படி பண்ணலை ....எனக்கு பாட்டு கிளாஸ் போக பிடிக்கலை தான்......ஆனா இவருக்காக சரின்னு சொன்னேன்..... கடைக்கு போன இடத்தில திடிர்னு மழை வரும்னு எனக்கு எப்படி தெரியும்......அதும் இவருக்காக தான போனேன்... ...அவர் இப்போ ஒரு பரீட்சை எழுதறார். அதுக்கான கொஸ்டீன் பேப்பர்ஸ் அந்த கடையில இருக்குனு ப்ரிண்ட்ஸ் சொன்னாங்க......இவரும் அது கிடச்சா கண்டிப்பா நான் பாஸ் பண்ணிடுவேன்னு சொன்னார். அவரோட இந்த கனவாவது நிறைவேரட்டும்னு தான் நான் போனேன்...ஆனா அது இந்த மாதிரி விபரீதத்தில கொண்டு வந்து விடும்னு எனக்கு தெரியலை” என அவள் நடந்ததை சொல்ல
“சரி உங்களுக்காக தான் நான் அங்க போனேன்னு நீ அவன்கிட்ட சொல்ல வேண்டியது தான” என மோகன் வேகமாக கேட்க
நானும் சொல்றதுக்கு முயற்சி பண்ணினேன் ..ஆனா அவர் அதை எல்லாம் கேட்காம என்னை கண்டபடி பிடிச்சு திட்டிட்டார்... எனக்கும் கோபம் வந்திடுச்சு அதனால் நானும் திட்டிட்டேன் என்றவள் இவரோட ஆசையை என் மேல திணிச்சா நான் என்ன பண்றது .....எனக்கு பிடிச்சாதான செய்ய முடியும்.....ஆனாலும் இவருக்காக நான் ஒத்துகிட்டேன் .....இவர் ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேன்கிறாரு என அவள் பக்க நியாத்தை அவள் கேட்க
“இரண்டு பேருக்கும் இந்த கோபத்தில் ஒன்னும் குறைச்சல் இல்லை......உப்பு சப்பில்லாத விஷியத்தை இப்படி ஊதி பெருசு பண்ணி வச்சிருக்கீங்க ...உங்களை எல்லாம்”.... என பல்லை கடித்தவன் பின்னர் “நீ கவலைபடாத மலர்......அவன் எங்க போய் இருப்பான்னு எனக்கு தெரியும்....நீ உடனே கிளம்பி ஊருக்கு வா...நம்ம இங்க பேசிக்கலாம்” என்றான் மோகன்.
“இல்லை மோகன் மாமா ...அவர் இல்லாம நான் அங்க வரமாட்டேன்...................எப்பவுமே அவர் திட்டினா நான் அமைதியா போய்டுவேன்னு...இன்னிக்குனு பார்த்து எனக்கு கோபம் வந்திடுச்சு.....நான் ஒரு லூசு மாமா...அவருக்கு பிடிச்ச மாதிரி என்னால் நடந்துக்க முடியலை......அவர் சொல்ற மாதிரி அவருக்கு நான் பொருத்தமானவ இல்லையோ” என அவள் ஏதோ ஏதோ புலம்பவும்
“அப்படி எல்லாம் இல்லை மலர், நீ உடனே கிளம்பி வா.......பிடிவாதம் பிடிக்காத.....அவன் வந்திடுவான்” என மோகன் சொல்ல
“இல்லை மாமா நான் வரமாட்டேன்...ஒருவேளை அவர் இங்க வந்து நான் இல்லைனா இன்னும் திட்டுவாரு ....ஏற்கனவே என்மேல கோபத்தில இருக்கார்.....வேண்டாம்...நான் இங்கே இருக்கேன்” என்றாள்.
இரண்டுபேருக்குமே பிடிவாதம் அதிகம் .......உங்களை திருத்தமுடியாது....சரிவிடு நீ கவலைபடாத ...... காணாமபோறதுக்கு அவன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது....இங்கதான் எங்காவது போய் இருப்பான்.....நான் பார்க்கிறேன்.......நீ அழுகாம கொஞ்சம் அமைதியா இரு” என அவளுக்கு சிறிது நேரம் ஆறுதல் சொல்லிவிட்டு அழைபேசியை வைத்தான் மோகன்.
மலரிடம் பேசியபிறகு அவள் சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்க என்ன நடந்திருக்கும் என்பது மோகனுக்கும் ஓரளவு புரிந்தது. “இவன் மனசில என்ன நினச்சுகிட்டு இருக்கான்......இவன் சுத்திவிட்டா ஆடறதுக்கு அந்த பொண்ணு என்ன பம்பரமா.......நம்மளும் சின்ன பையன் இப்போ புரிஞ்சுக்குவான் ,அப்புறம் புரிஞ்சுக்குவானு பார்த்தா இவன் திருந்திற மாதிரி தெரியலை......எங்க போய் இருப்பான் என யோசித்தவன் சட்டென நியாபகம் வர அட ஆமா இத எப்படி மறந்தோம் கழுதை கெட்டா குட்டி சுவரு....அங்க தான் இருப்பான்” என்றபடி மீனாவை அழைத்து சொல்லிவிட்டு அங்கு கிளம்பினான் மோகன்.
.
சிவனும் பார்வதியும் இணைந்து அருள்பாவிக்கும் சுயம்பு லிங்கமான அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் முன் போல் அண்ணன் தம்பி இருவரும் எதிர் எதிர் துருவங்களில் முறைத்து பார்த்தபடி நின்று இருந்தனர்.
“ நீ உன் மனசில என்னடா நினச்சுகிட்டு இருக்க......உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நினைகிரியா....இல்லை இவங்க சொல்லி நம்ம என்ன கேட்கிறதுன்னு இப்படி பண்றியா....வாயை திறந்து ஏதாவது பேசுடா” என அவன் முன் கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தான் மோகன்.
மாதேஷோ எதுவும் பேசாமல் கோவிலின் முன் இருக்கும் அந்த கல்தூணில் சாய்ந்து நின்று இருந்தான்.
“டேய் பாவமடா அந்த பொண்ணு ....... ரொம்ப பயந்து போய்இருக்கு ......நான் இனிமேல் எதுவும் பேசமாட்டேன்.....அவரை வர சொல்லுங்க மாமானு சொல்லி அழுகுது....... என அவன் சொல்லவும்
உடனே மாதேஷ் புருவத்தை சுளித்தபடி தமையனை பார்க்க
உடனே மோகன் “என்னடா பார்க்கிற .....மலரு எல்லா விஷியமும் சொல்லுச்சு....... ஏண்டா இப்படி பண்ற........எங்களுக்கும் தான் முதல்ல இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை....ஆனா இப்போ பார்த்தா இதைவிட நம்ம குடும்பத்துக்கு நல்ல பொண்ணா தேடினாலும் கிடைக்காது மாதேஷ்...உங்க வீட்டுக்கு வந்திட்டு இங்க வந்த அம்மா அப்பாகிட்ட இதை தான் சொன்னாங்க......நான் கூட பயந்துகிட்டு இருந்தேன்....ஆனா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமக என் பையனுக்கு ஏத்த பொண்டாட்டின்னு பெருமையா சந்தோஷமா சொன்னாங்க......இப்போ நாங்க எல்லாரும் அவளை ஏத்துகிட்டோம் ...நீ மட்டும் ஏண்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற.....உனக்கு அவதான் மனைவி.......நீயே இப்போ வேண்டாம்னு சொன்னாலும் அது மாறாது” என அவன் சொல்லி கொண்டிருக்க
மாதேஷோ அதற்கும் பதில் பேசாமல் நின்று இருக்க
“ம்ம்ம் இது வேளைக்கு ஆகாது.... உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும் ....... நீ என்கூட வா” என அவன் கையை பிடித்து இழுத்தான் மோகன்
“இதாண்டா...இதாண்டா என் பிரச்சனை..........எனக்கு என்ன வேணும், நான் என்ன செய்யணும், எல்லாமே நீங்களே முடிவு பண்ணுங்க......எல்லாமே உங்க விருப்பம் போலவே செய்யுங்க......ஆரம்பித்திலே இருந்தே இதான நடந்துகிட்டு இருக்கு.......சின்ன வயசில உனக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே கிடைக்கும்...... கல்யாண வயசில அவ நினச்சத நடத்திட்டா ....ஆக என்னை தவிர எல்லாரும் என்னை பத்தின முடிவ எடுக்கிறீங்க” என படபடவென ஆத்திரத்துடன் கத்தியவன் வேகமாக மோகனின் கையை உதறிவிட்டு விடுவிடுவென படிகளில் இறங்கி நடந்தான், சிலவினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற மோகன் அவன் பின்னே ஓடியவன் அவனை பிடித்து நிறுத்தியவன் பின்னர் இருவரும் சேர்ந்தே நடந்தனர்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக படி இறங்கி கொண்டிருக்க அப்போது “டேய் அண்ணா நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடு” என மாதேஷ் சொல்லவும் நின்று அவன் முகத்தை உற்று நோக்கி “இப்போ எனக்கு ஒரு உண்மை தெரியனும் மாதேஷ்” என்றான் மோகன் .
அவனின் அழுத்தமான பார்வையும் ,கடினமான குரலும் மாதேஷிற்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்த நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் கண்ணீர் ததும்பி கொண்டிருந்தது.
ஆனால் மோகனோ அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து “இங்க பாரு மறுபடியும் எனக்கு பிடிக்காத கல்யாணம் ...அது இதுன்னு காரணம் சொல்லாத... உன்னை பத்தி எனக்கு தெரியும்...... உனக்கு மலர பிடிச்சிருக்கு......உன் மனசில மலர் இருக்கா அதை தவிர வேற என்ன பிரச்சனை உனக்கு” என அவன் அழுத்தம் திருத்தமாக கேட்கவும்
அடைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று உடைத்து வெளி வந்தது போல் தான் சொல்லாமலே தன் மனநிலையை புரிந்து கொண்ட சகோதரனின் பாசத்தை நினைத்த மாதேஷ் நெஞ்சுருகி போனான். “டேய் அண்ணாஆஆஅ” என்றபடி அவன் தோளில் சாய்ந்தவனின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் அழவிட்டவன் பின்னர் தமையனை நிமிர்த்தி அவன் தோளில் கைபோட்ட மோகன் “இங்க பாரு மாதேஷ் உன் மனசில இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு எனக்கு தெரியாது....ஆனா எல்லாருக்கும் எல்லாமே அவங்க நினச்ச மாதிரி கிடைக்கிறதில்லை.....நமக்கு கிடச்சத வச்சு நினச்ச மாதிரி வாழ பழகிக்கணும் மாதேஷ்.....உன்னை பொறுத்தவரை மலரும் அப்படி ஒன்னும் மோசமான பொண்ணு இல்லடா...உன் மேல உசிரே வச்சிருக்கு” என சொல்லி கொண்டு இருக்கும்போதே
“எனக்கும் அது தெரியும் அண்ணா......அவளோட உலகமே நான் தான் எனக்கும் தெரியும் ...ஆனாலும்” என அவன் இழுக்கவும்
“வேற என்னதாண்டா உனக்கு வேணும்” என மோகன் வேகமாக கேட்க
“என்னால முடியலைண்ணா...... என்னால ஏத்துக்க முடியலை...நான் தோத்திட்டேனு என்னால ஏத்துக்க முடியலை” என ஆற்றாமையும் அழுகையுமாய் சொன்னான் மாதேஷ் .
இதை சற்றும் எதிர்பார்க்காத மோகன் திடுக்கிட்டு அவனை பார்த்தவன் “என்னடா தம்பி...என்னடா உளற ......எதில நீ தோத்திட்ட...... என்ன ஏத்துக்க முடியலை” என பதறி போய் கேட்க
நிமிர்ந்து தமையனை பார்த்த மாதேஷ் “அண்ணா உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.....நான் என்னோட படிப்பை நிறுத்திட்டு ஒரு வருஷம் அப்பா கூட வேலை பார்த்தேன் இல்லையா ....அப்போ இருந்தே என் மனசுக்குள்ள ஒரு வெறி நான் படிச்சு பெரிய ஆளா வரனும்......இந்த ஊரே மெச்சிற மாதிரி நம்ம குடும்பம் இருக்கணும்.......அப்புறம் அப்புறம் என தயங்கியவன் என்னாலதான் இஞ்சினியரிங் படிக்க முடியலை.....அதனால் நல்ல படிச்சா பொண்ணா பெரிய கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும் அப்படி எல்லாம் பல கனவுகளோட ஆசைகளோட இருந்தேன்... என் நண்பர்கள்கிட்ட கூட அடிக்கடி சொல்லுவேன்......நான் நினச்சத அடைஞ்சே தீர்வேன்னு சவால் விட்டேன்.....அதுக்காக தான் அம்மாகிட்ட சண்டை பண்ணி கோயம்புத்தூர் போனேன்” என்றவன் ....
“எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது மலர் என் வாழ்கையில வரதுக்கு முன்னாடி” என சொல்லி நிறுத்தியவன் சில நொடிகள் மௌனமாக இருக்க
மோகனும் அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கட்டும் என அவன் முகத்தியே பார்த்திருந்தான்.
“எனக்கே புரியலைண்ணா......மலருக்கு எப்படி என் மேல இவ்ளோ அன்பு வந்திச்சுன்னு...நான் அவளுக்கு என்ன செஞ்சேன்....அவ ஏன் இப்படி என் வாழ்கையில வந்தா ....... எதிரியா இருந்திருந்தா கூட சண்டை போட்டு ஜெயிச்சிருப்பேன் ...ஆனா அவகிட்ட” என சொல்ல முடியாமல் அவன் தடுமாற
அவனது மண நிலையை புரிந்து கொண்ட மோகனோ அவனது கைகளை பிடித்து ஆசுவாசபடுத்தினான்.
பின்னர் “சாரிடா மாதேஷ் உன் மனசுக்குள்ள இவ்ளோ வேதனைகளை அடக்கி வச்சிருக்க...நான் அதை புரிஞ்சுக்காம எதோ எதோ பேசிட்டேன்” என சொன்ன தமையனிடம் “இல்லண்ணா நீங்க சரியாதான் சொன்னீங்க......உன்கிட்ட வெட்கத்தை விட்டு சொல்றேன்னா ...... மலர் அவளோட விருப்பத்த என்கிட்டே சொல்ற வரை அவ மேல எனக்கு எந்த எண்ணமும் இல்லை......ஆனா அத்தனைபேருக்கு முன்னாடி அவ என்னை தான் பிடிச்சிருக்குன்னு சொன்னா பாருங்க அந்த நொடி என் மனசுக்குள்ள ஒரு கர்வம்......அப்போ அவ அழகு ,படிப்பு குணம் எதுவுமே எனக்கு தெரியலை.....அவளோட அந்த வார்த்தை அது மட்டும் தான் என் மனசில பதிஞ்சிருச்சு..... உடனே அப்பவே உனக்கு மலர பிடிச்சு போயடுச்சானு கேட்டீங்கனா சத்தியமா இல்லை..... என்னோட ஆசை கனவு எல்லாம் என்னை அந்த மாதிரி யோசிக்க விடலை.....ஆனா அந்த பீலிங்க்ஸ் எனக்கு பிடிச்சிருந்தது....... அப்புறம் வேண்டாம்னு சொன்னாலும் அவ விடாம என்னையே சுத்தி வந்தது, எனக்கு போன் பண்ணியது இது எல்லாம் என்னை அறியாமலே அவ மேல ஒரு தாக்கத்தை எற்படுத்திடுச்சு......
அன்று இரவு தன் மனதிலிருப்பதை எல்லாம் கொட்டிவிட்ட நிம்மதியில் மலர் உறங்க மாதேஷோ அவளது வார்த்தைகளில் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.
அதிகாலை கதிரவன் சிறகுகள் ஜன்னளில் பட்டு அவள்மீது தெறிக்க அந்த அனலில் அவளது உறக்கம் களைய மெதுவாக எழுந்தவள் மணியை பார்க்க அது ஏழு என கட்டியது....... வேகமாக எழுந்தவள் முதலில் சென்றது மாதேஷை தேடி தான்...........ஆனால் அங்கு யாரும் இல்லை. “இவர் எங்க காணோம் ...இன்னும் கோபம் தீரலையா” என்றபடி வீடு முழுவதும் தேடியவள் அவன் இல்லாமல் போக அவனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டாள். அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற பதில் வந்தது. அக்கம் பக்கம் விசாரிக்க அவர்களும் பார்க்கவில்லை என்றனர்..... . உடனே கோபியை அலைபேசியில் அழைக்க அவனும் நேற்று ஆபிசில பார்த்தது தான் என்றான்.
அவளது இதயத்துடிப்பு படபடவென எகிற “எங்க போனாரு.....இதுவரை இப்படி போனதில்லியே......அதுவும் இந்த நேரத்தில ...அச்சோ நான் ஒரு முட்டாள்...... .....எப்பவும் ஒரு நம்ம வார்த்தை பேசினா அவரு நூறு வார்த்தை பேசுவாரு........நேற்று நான் பேசினதுக்கு எல்லாம் அமைதியா இருக்கும்போதே நான் உஷாரா இருந்திருக்கணும்..........இப்போ என்ன பண்றது......வேற யாரை கேட்கிறது” என புலம்பியவள் அவன் வரவை எதிர்பார்த்து வாசலிலே அமர்ந்திருந்தாள். கண்கள் வாசற்படியில் இருக்க .. நினைவுகள் எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் மூழ்கி இருந்தது.....
மலரு மலரு நான் ரொம்ப சந்தோஷாமா இருக்கேன் என்றபடி அவளை தூக்கி சுற்றியவன் அவன் சொன்ன காரணம் கேட்டு மூர்ச்சையாகி போனாள். அது வேறு ஒன்றுமில்லை.....அவன் கோவிலில் பார்த்த அந்த பாடகர் அவளுக்கு பாட்டு கத்துகொடுக்க ஒத்துகொண்டார் என்பது தான் அவனின் சந்தோஷத்திற்கும் மலரின் மயக்கத்திற்கும் காரணம்.
“ஏண்டி நான் எவ்ளோ சந்தோஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன்......நீ இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என அவன் கேட்கவும்
“அதுவந்து எனக்கு எக்ஸாம் இருக்கு...நிறையா படிக்கணும்.....அதனால இப்போ வேண்டாம்.....இன்னும் 2 மாசம் கழிச்சு நான் கிளாஸ் போய்கிறேன்” என்றாள் மலர். தனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னால் எங்கே திட்டுவானோ என்று பயந்து அவள் சாக்கு சொல்ல ஆனால் அதற்கு எல்லாம் மசிந்து விடுவானா அவள் கணவன்.....
உடனே “இங்கபாரு மலரு இந்த வாய்ப்பை வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா..... சாதரனமா அவங்க யாருக்கும் சொல்லி கொடுக்க ஒத்துக்க மாட்டங்க......ஆனா உன் அதிர்ஷ்டம் ஒத்துகிட்டாங்க.... எனக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு...... உனக்கு தெரியுமா மலரு...சின்ன வயசில இருந்தே எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்.....சாப்பாடு இல்லாம கூட இருப்பேன்......பாட்டு கேட்காம என்னால இருக்க முடியாது.....நானும் பாட்டு கத்துக்க முயற்சி பண்ணினேன்.....வாய்ப்பு கிடைக்களை...... உனக்கு அது கிடைச்சிருக்கு....நீ மாட்டேன்னு சொல்லிடாத மலரு.....என்னோட ஆசை உன் மூலமாதான் நிறைவேற போகுது” என தனது மனதின் ஏக்கத்தை அவன் சொல்லவும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதே தெரியவில்லை..
இதுவரை அவன் இப்படி மனம் விட்டு பேசி அவள் கேட்டதில்லை.முதன்முறையாக தனது ஆசையை அவன் வெளிபடுத்த அதை தட்டி பேசமுடியாமல் அதே நேரத்தில் அவளுக்கு இதில் எல்லாம் விருப்பாம் இல்லை என்பதயும் அவனுக்கு எப்படி புரியவைப்பது என தெரியாமல் தவித்து நின்றாள்.
விருப்பம் இல்லை என சொல்ல மனமில்லாமல் முடியாது என்று சொன்னால் அதற்கும் திட்டு விழும் என பயந்து பல சாக்குகள் சொல்லியும் அவன் பிடிவாதமாக இருந்ததால் அவள் ஒத்து கொண்டாள்..ஆனால் மறுநாள் புத்தகம் வாங்க சென்ற இடத்தில இப்படி நடக்கும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை......அதற்கு பிறகு நடந்தது எல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.
சூரியன் உச்சி பொழுதில் நிற்க நேரம் செல்ல செல்ல அவள் மனதில் ஒரு பயம் எழ ஆரம்பித்தது. மனதின் பயம் உடலுக்குள் பரவ கைகால்கள் சற்று நடுக்கம் எடுக்க என்ன செய்வது எனதெரியாமல் மூளை குழம்பி அவள் அமர்ந்திருக்க அந்த நேரத்தில் அவளது அலைபேசி ஒலித்தது.
அவன் தான் பேசுகிறான் என்ற எண்ணத்தில் வேகமாக போனை எடுத்து உடன் “ஏங்க சொல்லாம எங்க போனீங்க.....நான் பேசினது தப்புன்னா திட்டுங்க ஏன் இரண்டு அடிகூட அடிச்சிடுங்க...ஆனா இப்படி எல்லாம் சொல்லாம எங்கும் போகாதீங்க.....எனக்கு பயமா இருக்குங்க.....எனக்கு உங்களைவிட்டா வேற யார் இருக்கா...சீக்கிரம் வாங்க “ என தேம்பலும் அழகையுமாய் அவள் பேசவும்
“ ஐயோ என்னாச்சு மலரு....மாதேஷ் எங்க போய்ட்டான்?...உங்க இரண்டுபேருக்குள்ள என்ன பிரச்சனை?....என்ன நடக்குது அங்க? என எதிர்புறத்தில் மோகனிடம் இருந்து படபடவென கேள்விகள் வர இதை சற்றும் எதிர்பார்க்காத மலர் திகைத்து நிற்க .
“மலரு...மலரு” என அவன் கத்தவும்
அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அழுகையாய் வெளிவர அவள் வெடித்து அழுகவும்
“என்னாச்சு மலரு....ஏன் இப்படி அழற....சொல்லுமா,,,என்ன நடந்தது ?” என மோகன் பதட்டத்துடன் கேட்டான்.
“அது வந்து... வந்து.... மோகன் மாமா அவர் மேல எந்த தப்பும் இல்லை.....நான் தான்..... நான் தான்” என நேற்று நடந்ததை அவனிடம் முழுவதுமாக அழுகையுடன் சொல்லி முடித்தாள் மலர்.
“அடகடவுளே ஏம்மா உனக்குதான் அவனை பத்தி தெரியுமே......அப்புறம் நீ ஏன் அங்க போன......அடுத்த நாளாவது ப்ரிண்ட்ஸ் கூட போய் இருக்கலாம்ல” என்றான் மோகன்
“நான் வேணும்னு இப்படி பண்ணலை ....எனக்கு பாட்டு கிளாஸ் போக பிடிக்கலை தான்......ஆனா இவருக்காக சரின்னு சொன்னேன்..... கடைக்கு போன இடத்தில திடிர்னு மழை வரும்னு எனக்கு எப்படி தெரியும்......அதும் இவருக்காக தான போனேன்... ...அவர் இப்போ ஒரு பரீட்சை எழுதறார். அதுக்கான கொஸ்டீன் பேப்பர்ஸ் அந்த கடையில இருக்குனு ப்ரிண்ட்ஸ் சொன்னாங்க......இவரும் அது கிடச்சா கண்டிப்பா நான் பாஸ் பண்ணிடுவேன்னு சொன்னார். அவரோட இந்த கனவாவது நிறைவேரட்டும்னு தான் நான் போனேன்...ஆனா அது இந்த மாதிரி விபரீதத்தில கொண்டு வந்து விடும்னு எனக்கு தெரியலை” என அவள் நடந்ததை சொல்ல
“சரி உங்களுக்காக தான் நான் அங்க போனேன்னு நீ அவன்கிட்ட சொல்ல வேண்டியது தான” என மோகன் வேகமாக கேட்க
நானும் சொல்றதுக்கு முயற்சி பண்ணினேன் ..ஆனா அவர் அதை எல்லாம் கேட்காம என்னை கண்டபடி பிடிச்சு திட்டிட்டார்... எனக்கும் கோபம் வந்திடுச்சு அதனால் நானும் திட்டிட்டேன் என்றவள் இவரோட ஆசையை என் மேல திணிச்சா நான் என்ன பண்றது .....எனக்கு பிடிச்சாதான செய்ய முடியும்.....ஆனாலும் இவருக்காக நான் ஒத்துகிட்டேன் .....இவர் ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேன்கிறாரு என அவள் பக்க நியாத்தை அவள் கேட்க
“இரண்டு பேருக்கும் இந்த கோபத்தில் ஒன்னும் குறைச்சல் இல்லை......உப்பு சப்பில்லாத விஷியத்தை இப்படி ஊதி பெருசு பண்ணி வச்சிருக்கீங்க ...உங்களை எல்லாம்”.... என பல்லை கடித்தவன் பின்னர் “நீ கவலைபடாத மலர்......அவன் எங்க போய் இருப்பான்னு எனக்கு தெரியும்....நீ உடனே கிளம்பி ஊருக்கு வா...நம்ம இங்க பேசிக்கலாம்” என்றான் மோகன்.
“இல்லை மோகன் மாமா ...அவர் இல்லாம நான் அங்க வரமாட்டேன்...................எப்பவுமே அவர் திட்டினா நான் அமைதியா போய்டுவேன்னு...இன்னிக்குனு பார்த்து எனக்கு கோபம் வந்திடுச்சு.....நான் ஒரு லூசு மாமா...அவருக்கு பிடிச்ச மாதிரி என்னால் நடந்துக்க முடியலை......அவர் சொல்ற மாதிரி அவருக்கு நான் பொருத்தமானவ இல்லையோ” என அவள் ஏதோ ஏதோ புலம்பவும்
“அப்படி எல்லாம் இல்லை மலர், நீ உடனே கிளம்பி வா.......பிடிவாதம் பிடிக்காத.....அவன் வந்திடுவான்” என மோகன் சொல்ல
“இல்லை மாமா நான் வரமாட்டேன்...ஒருவேளை அவர் இங்க வந்து நான் இல்லைனா இன்னும் திட்டுவாரு ....ஏற்கனவே என்மேல கோபத்தில இருக்கார்.....வேண்டாம்...நான் இங்கே இருக்கேன்” என்றாள்.
இரண்டுபேருக்குமே பிடிவாதம் அதிகம் .......உங்களை திருத்தமுடியாது....சரிவிடு நீ கவலைபடாத ...... காணாமபோறதுக்கு அவன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது....இங்கதான் எங்காவது போய் இருப்பான்.....நான் பார்க்கிறேன்.......நீ அழுகாம கொஞ்சம் அமைதியா இரு” என அவளுக்கு சிறிது நேரம் ஆறுதல் சொல்லிவிட்டு அழைபேசியை வைத்தான் மோகன்.
மலரிடம் பேசியபிறகு அவள் சொன்னதை எல்லாம் நினைத்து பார்க்க என்ன நடந்திருக்கும் என்பது மோகனுக்கும் ஓரளவு புரிந்தது. “இவன் மனசில என்ன நினச்சுகிட்டு இருக்கான்......இவன் சுத்திவிட்டா ஆடறதுக்கு அந்த பொண்ணு என்ன பம்பரமா.......நம்மளும் சின்ன பையன் இப்போ புரிஞ்சுக்குவான் ,அப்புறம் புரிஞ்சுக்குவானு பார்த்தா இவன் திருந்திற மாதிரி தெரியலை......எங்க போய் இருப்பான் என யோசித்தவன் சட்டென நியாபகம் வர அட ஆமா இத எப்படி மறந்தோம் கழுதை கெட்டா குட்டி சுவரு....அங்க தான் இருப்பான்” என்றபடி மீனாவை அழைத்து சொல்லிவிட்டு அங்கு கிளம்பினான் மோகன்.
.
சிவனும் பார்வதியும் இணைந்து அருள்பாவிக்கும் சுயம்பு லிங்கமான அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் முன் போல் அண்ணன் தம்பி இருவரும் எதிர் எதிர் துருவங்களில் முறைத்து பார்த்தபடி நின்று இருந்தனர்.
“ நீ உன் மனசில என்னடா நினச்சுகிட்டு இருக்க......உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நினைகிரியா....இல்லை இவங்க சொல்லி நம்ம என்ன கேட்கிறதுன்னு இப்படி பண்றியா....வாயை திறந்து ஏதாவது பேசுடா” என அவன் முன் கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தான் மோகன்.
மாதேஷோ எதுவும் பேசாமல் கோவிலின் முன் இருக்கும் அந்த கல்தூணில் சாய்ந்து நின்று இருந்தான்.
“டேய் பாவமடா அந்த பொண்ணு ....... ரொம்ப பயந்து போய்இருக்கு ......நான் இனிமேல் எதுவும் பேசமாட்டேன்.....அவரை வர சொல்லுங்க மாமானு சொல்லி அழுகுது....... என அவன் சொல்லவும்
உடனே மாதேஷ் புருவத்தை சுளித்தபடி தமையனை பார்க்க
உடனே மோகன் “என்னடா பார்க்கிற .....மலரு எல்லா விஷியமும் சொல்லுச்சு....... ஏண்டா இப்படி பண்ற........எங்களுக்கும் தான் முதல்ல இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை....ஆனா இப்போ பார்த்தா இதைவிட நம்ம குடும்பத்துக்கு நல்ல பொண்ணா தேடினாலும் கிடைக்காது மாதேஷ்...உங்க வீட்டுக்கு வந்திட்டு இங்க வந்த அம்மா அப்பாகிட்ட இதை தான் சொன்னாங்க......நான் கூட பயந்துகிட்டு இருந்தேன்....ஆனா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமக என் பையனுக்கு ஏத்த பொண்டாட்டின்னு பெருமையா சந்தோஷமா சொன்னாங்க......இப்போ நாங்க எல்லாரும் அவளை ஏத்துகிட்டோம் ...நீ மட்டும் ஏண்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற.....உனக்கு அவதான் மனைவி.......நீயே இப்போ வேண்டாம்னு சொன்னாலும் அது மாறாது” என அவன் சொல்லி கொண்டிருக்க
மாதேஷோ அதற்கும் பதில் பேசாமல் நின்று இருக்க
“ம்ம்ம் இது வேளைக்கு ஆகாது.... உனக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும் ....... நீ என்கூட வா” என அவன் கையை பிடித்து இழுத்தான் மோகன்
“இதாண்டா...இதாண்டா என் பிரச்சனை..........எனக்கு என்ன வேணும், நான் என்ன செய்யணும், எல்லாமே நீங்களே முடிவு பண்ணுங்க......எல்லாமே உங்க விருப்பம் போலவே செய்யுங்க......ஆரம்பித்திலே இருந்தே இதான நடந்துகிட்டு இருக்கு.......சின்ன வயசில உனக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே கிடைக்கும்...... கல்யாண வயசில அவ நினச்சத நடத்திட்டா ....ஆக என்னை தவிர எல்லாரும் என்னை பத்தின முடிவ எடுக்கிறீங்க” என படபடவென ஆத்திரத்துடன் கத்தியவன் வேகமாக மோகனின் கையை உதறிவிட்டு விடுவிடுவென படிகளில் இறங்கி நடந்தான், சிலவினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற மோகன் அவன் பின்னே ஓடியவன் அவனை பிடித்து நிறுத்தியவன் பின்னர் இருவரும் சேர்ந்தே நடந்தனர்.
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக படி இறங்கி கொண்டிருக்க அப்போது “டேய் அண்ணா நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடு” என மாதேஷ் சொல்லவும் நின்று அவன் முகத்தை உற்று நோக்கி “இப்போ எனக்கு ஒரு உண்மை தெரியனும் மாதேஷ்” என்றான் மோகன் .
அவனின் அழுத்தமான பார்வையும் ,கடினமான குரலும் மாதேஷிற்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்த நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் கண்ணீர் ததும்பி கொண்டிருந்தது.
ஆனால் மோகனோ அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து “இங்க பாரு மறுபடியும் எனக்கு பிடிக்காத கல்யாணம் ...அது இதுன்னு காரணம் சொல்லாத... உன்னை பத்தி எனக்கு தெரியும்...... உனக்கு மலர பிடிச்சிருக்கு......உன் மனசில மலர் இருக்கா அதை தவிர வேற என்ன பிரச்சனை உனக்கு” என அவன் அழுத்தம் திருத்தமாக கேட்கவும்
அடைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று உடைத்து வெளி வந்தது போல் தான் சொல்லாமலே தன் மனநிலையை புரிந்து கொண்ட சகோதரனின் பாசத்தை நினைத்த மாதேஷ் நெஞ்சுருகி போனான். “டேய் அண்ணாஆஆஅ” என்றபடி அவன் தோளில் சாய்ந்தவனின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் அழவிட்டவன் பின்னர் தமையனை நிமிர்த்தி அவன் தோளில் கைபோட்ட மோகன் “இங்க பாரு மாதேஷ் உன் மனசில இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு எனக்கு தெரியாது....ஆனா எல்லாருக்கும் எல்லாமே அவங்க நினச்ச மாதிரி கிடைக்கிறதில்லை.....நமக்கு கிடச்சத வச்சு நினச்ச மாதிரி வாழ பழகிக்கணும் மாதேஷ்.....உன்னை பொறுத்தவரை மலரும் அப்படி ஒன்னும் மோசமான பொண்ணு இல்லடா...உன் மேல உசிரே வச்சிருக்கு” என சொல்லி கொண்டு இருக்கும்போதே
“எனக்கும் அது தெரியும் அண்ணா......அவளோட உலகமே நான் தான் எனக்கும் தெரியும் ...ஆனாலும்” என அவன் இழுக்கவும்
“வேற என்னதாண்டா உனக்கு வேணும்” என மோகன் வேகமாக கேட்க
“என்னால முடியலைண்ணா...... என்னால ஏத்துக்க முடியலை...நான் தோத்திட்டேனு என்னால ஏத்துக்க முடியலை” என ஆற்றாமையும் அழுகையுமாய் சொன்னான் மாதேஷ் .
இதை சற்றும் எதிர்பார்க்காத மோகன் திடுக்கிட்டு அவனை பார்த்தவன் “என்னடா தம்பி...என்னடா உளற ......எதில நீ தோத்திட்ட...... என்ன ஏத்துக்க முடியலை” என பதறி போய் கேட்க
நிமிர்ந்து தமையனை பார்த்த மாதேஷ் “அண்ணா உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.....நான் என்னோட படிப்பை நிறுத்திட்டு ஒரு வருஷம் அப்பா கூட வேலை பார்த்தேன் இல்லையா ....அப்போ இருந்தே என் மனசுக்குள்ள ஒரு வெறி நான் படிச்சு பெரிய ஆளா வரனும்......இந்த ஊரே மெச்சிற மாதிரி நம்ம குடும்பம் இருக்கணும்.......அப்புறம் அப்புறம் என தயங்கியவன் என்னாலதான் இஞ்சினியரிங் படிக்க முடியலை.....அதனால் நல்ல படிச்சா பொண்ணா பெரிய கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும் அப்படி எல்லாம் பல கனவுகளோட ஆசைகளோட இருந்தேன்... என் நண்பர்கள்கிட்ட கூட அடிக்கடி சொல்லுவேன்......நான் நினச்சத அடைஞ்சே தீர்வேன்னு சவால் விட்டேன்.....அதுக்காக தான் அம்மாகிட்ட சண்டை பண்ணி கோயம்புத்தூர் போனேன்” என்றவன் ....
“எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது மலர் என் வாழ்கையில வரதுக்கு முன்னாடி” என சொல்லி நிறுத்தியவன் சில நொடிகள் மௌனமாக இருக்க
மோகனும் அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கட்டும் என அவன் முகத்தியே பார்த்திருந்தான்.
“எனக்கே புரியலைண்ணா......மலருக்கு எப்படி என் மேல இவ்ளோ அன்பு வந்திச்சுன்னு...நான் அவளுக்கு என்ன செஞ்சேன்....அவ ஏன் இப்படி என் வாழ்கையில வந்தா ....... எதிரியா இருந்திருந்தா கூட சண்டை போட்டு ஜெயிச்சிருப்பேன் ...ஆனா அவகிட்ட” என சொல்ல முடியாமல் அவன் தடுமாற
அவனது மண நிலையை புரிந்து கொண்ட மோகனோ அவனது கைகளை பிடித்து ஆசுவாசபடுத்தினான்.
பின்னர் “சாரிடா மாதேஷ் உன் மனசுக்குள்ள இவ்ளோ வேதனைகளை அடக்கி வச்சிருக்க...நான் அதை புரிஞ்சுக்காம எதோ எதோ பேசிட்டேன்” என சொன்ன தமையனிடம் “இல்லண்ணா நீங்க சரியாதான் சொன்னீங்க......உன்கிட்ட வெட்கத்தை விட்டு சொல்றேன்னா ...... மலர் அவளோட விருப்பத்த என்கிட்டே சொல்ற வரை அவ மேல எனக்கு எந்த எண்ணமும் இல்லை......ஆனா அத்தனைபேருக்கு முன்னாடி அவ என்னை தான் பிடிச்சிருக்குன்னு சொன்னா பாருங்க அந்த நொடி என் மனசுக்குள்ள ஒரு கர்வம்......அப்போ அவ அழகு ,படிப்பு குணம் எதுவுமே எனக்கு தெரியலை.....அவளோட அந்த வார்த்தை அது மட்டும் தான் என் மனசில பதிஞ்சிருச்சு..... உடனே அப்பவே உனக்கு மலர பிடிச்சு போயடுச்சானு கேட்டீங்கனா சத்தியமா இல்லை..... என்னோட ஆசை கனவு எல்லாம் என்னை அந்த மாதிரி யோசிக்க விடலை.....ஆனா அந்த பீலிங்க்ஸ் எனக்கு பிடிச்சிருந்தது....... அப்புறம் வேண்டாம்னு சொன்னாலும் அவ விடாம என்னையே சுத்தி வந்தது, எனக்கு போன் பண்ணியது இது எல்லாம் என்னை அறியாமலே அவ மேல ஒரு தாக்கத்தை எற்படுத்திடுச்சு......