• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 3

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
நேசம் - 3



திருமணம் முடிந்த இரவே மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே அறைக்குள் விட்டுவிட்டார்கள். (இங்கு எல்லாம் முதல் இரவு என்று கையில் பால் சொம்பு காெடுத்து மாப்பிள்ளை காலில் விழுந்து வணங்க வேண்டும் என்ற சடங்கும் இல்லை சம்பிரதாயமும் இல்லை. திருமணம் முடிந்தால் போதும், இருவரையும் ஒன்றாகச் சேர்த்து விட்டுவிடுவார்கள்)

இதுவரை வயதுக்கு வந்த ஆண்களோடு கதைத்துப் பழக்கமில்லாதவளுக்கு, இருவரும் ஒரே அறையில் என்றதும் பயம் தொற்றிக் கொண்டது. அதனால் கட்டிலின் மறுபக்கம் அவனைப் பாராது திரும்பி நின்றாள் மிருதுளா.

பாவம் பக்குவப்படாதப் பெண்ணைப் பிடித்துத் திருமணம் செய்து வைத்தால் என்ன செய்வாள்? மண்டபத்தில் இருக்கும் போதே, அதைச் செய் இதைச் செய் என்றபோது பயங்கரமாகத் தடுமாறியவளை, பரிமளாவே அருகில் நின்று தைரியம் சொல்லிக் காெண்டிருந்தார். இப்போது தைரியம் சொல்ல யார் வருவார்?

நீண்ட நேரமாக அருகில் வருவாள் என்று பார்த்திருந்த மாப்பிள்ளையான சியாம்,

"ஏன் அங்கேயே நிக்கிறீர் மிருதுளா? பக்கத்தில வாரும்." என்றான்.

முதன்முதலில் அவன் குரலைக் கேட்கிறாள். அதுவும் கம்பீரமான குரல். அது வெண்கலத்தின் சத்தத்தைப் போல், அவள் செவிப்பறை மாேதி அடங்க, அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள், அவனது காந்த விழிகள் இரண்டும் அவளையே குறுகுறு எனப் பார்ப்பதைக் கண்டு, மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. சட்டெனத் தலையினைக் குனிந்தவள் தயக்கம் கண்டு உதட்டினுள் புன்னகைத்தவன், மெல்லக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகில் வந்தான்.

"நான் உம்மட புருஷன்... என்னைப் பார்த்து என்ன பயம்?" கேட்டவாறு அவள் கையினைப் பிடித்தவன்,

"எனக்கு இனி எல்லாமே நீர் தான். உமக்கும் நான் தான் எண்டு நினைச்சா பயம் வராது." என்றவன் விரல்களோ, அவளது உள்ளங்கையினில் கோலம் வரைந்தது. அதில் கூசிப் போனவள், அவனிடமிருந்து கையை உருவி இழுக்க, அவள் முயற்சி அறிந்தவன், அதை விடாது இறுகப் பற்றி, முகம் முழுவதும் அழுந்த அதில் முத்தம் வைத்தான்.

ஆணொருவன் தரும் முதல் முத்தம்… மீசையின் குறுகுறுப்பு உள்ளங்கையில் பட்டதும், பெண்மை சிலிர்த்து, உணர்வுகள் கட்டவிழத் தொடங்கியது. என்ன தான் ஊர் சூழ கணவன் பட்டம் பெற்றுவிட்டாலும், இத்தனை ஆண்டுகள் பத்திரப் படுத்தியிருந்த பெண்மையைச் சட்டென ஓர் ஆண்மகனிடம் கொடுத்து விடப் பெண்மை துணியாதே!

பிடிவாதமாக அவன் பிடியிலிருந்து கையினை உருவிக் கொண்டு, சற்று தூரம் விலகி வந்து திரும்பி நின்றவள் இதயத்தாளத்தின் சத்தம் மற்றைய அறையில் இருந்தவர்களுக்குக் கேட்டு விடுமாே என்று பயம் கொண்டிருப்பாளாே என்னமோ, நெஞ்சினை அழுத்தி அதன் சத்தத்தை நிறுத்த நினைத்தவள் இடையில் புதிதாய் ஓர் சுமை.

அவனே தான். சத்தம் வராது பூனை நடையிட்டு அவள் பின்புறம் வந்தவன் கரங்களோ, மெல்ல ஊர்ந்து வந்து அவளது இடையினை வளைத்து, தன் வயிற்றோடு அசையாது அழுத்திப் பிடிக்க... பின் கழுத்தில் ராேந்துப் பயணத்தை ஆரம்பித்த அவனது தடித்த உதடுகள், மெல்ல முன்னேறி, கழுத்து வளைவுக்குள் முற்றுகை இட்டு, அங்கொரு ஆழமான முத்தத்தை வைத்தது. அவனது செயலில், ஆரம்பத்தில் திமிறித் தாேற்றவள், வாடிய கொடியாய் அவன் கையில் தளர்ந்து பாேனாள்.

இது தானே அவனுக்கு வேண்டும். இப்படி ஓர் அழகிய மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ரசிக்க முடியுமா? முழுமையாக அள்ளி அல்லவா பருக வேண்டும்.

தொய்ந்தவள் கன்னம் தாங்கிப் பிடித்தவன், "கண்ணம்மா..." என்றான் கிறக்கமான குரலில்.

"ம்ம்...." முனகல் மட்டுமே அவளிடமிருந்து பதிலாய் வந்தது. அதுவே அவனுக்குள் இருக்கும் ஆண்மையைக் கட்டவிழ்த்து விட, சட்டென வாரி நெஞ்சோடு தனக்குள் புதைந்து போவதைப் போல் அணைத்தவன் கைகளோ, எல்லை மீறியது.

சாறியின் தலைப்பினை அவள் அறியாது நழுவ விட்டிருந்தவன் நொடியும் தாமதிக்கவில்லை. அதற்கான பாெறுமை அவனிடம் இருக்க வேண்டுமே!

வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மிருதுளாவின் உடலானது சற்று தசைப்பிடிப்பானது தான். அதனால் அவள் போட்டிருந்த பிளவுஸின் இறுக்கத்தால், தசைக் கோளமானது பிதுங்கி வெளியே வழிந்திருப்பது முந்தானை அற்றக் கோலத்தில் அப்பட்டமாகவே புலப்பட்டது. அதைக் கண்டவன் விழிகளோ, கள்ளுண்ட கருவண்டாக, அதையே மேய்ந்து வர, அதனுடன் முரட்டுக் கரங்களும் இணைந்து கொண்டு, தன் வேலையில் இறங்கியது.

வடிகட்டி மாத்திரம் இல்லை என்றால், மாங்கனிகள் இரண்டும் அவன் கையோடே வந்திருக்கும். அத்தனை அழுத்தம் அதில். அதன் பின்பும் அவன் பசி தீர்ந்ததா...? க்ஹூம்... எப்படித் தீரும்...? ஒரு பருக்கை சோற்றில் பசியாறியவர் இவ்வுலகில் தான் யாரும் உண்டா... மெல்லத் தன் நெருக்கத்தைத் தளர்த்தி அவளைப் பார்த்தான்.

அவனது விரலின் சாகசத்தில் வலி உணர்ந்தவள், கத்தவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், கீழ் உதட்டினைப் பற்களால் கடித்து வலியை அடக்கியிருப்பாள் போல. கண்மூடி நின்றவள் தாடையினை உயர்த்தி, தன்னைப் பார்க்க வைத்தவன், மறு நிமிடமே சட்டெனக் கழுத்தினை வளைத்துப் பிடித்து, அவள் பற்றியிருந்த பற்களுக்கு மேலாகத் தன் வன்மையாக உதட்டினால் கவ்விக் கொண்டவன் வேகமானது, இதற்குப் பின்னர் இனி என்றும் கிடைக்காது என்பது போன்ற வெறியானது.

இதழ்களைச் சப்பிச் சப்பியே அடி வாய்வரை கொண்டு சென்றவன் கையானது தானாக இயக்கத்தை ஆரம்பித்து, அவள் உணராது ஒவ்வொரு ஆடையாகக் களைந்தவன் விரல்கள் தான், ஓர் இடத்தில் நிற்கவில்லை.

இவனது ஒவ்வொரு தீண்டலிலும் மருகிப் போனவள் தான், வலுவிழந்த கொடியாட்டம் சாய, அதற்குமேல் தாங்க முடியாதவனும், தன் கைகளில் ஏந்தி வந்து கட்டிலில் போட்டதும், உடனே அவள்மீது பாய்ந்தான்.

பெண்ணவள் தான் பாவம்... முதல் முற்றுகையே முடிவு முற்றுகை ஆகிவிடுமோ என்று அவனது அணுகுமுறையில் பயந்து போய் விட்டாள்.

ஒரு வழியாக அவளை விடுவித்து எழுந்தவன், பாத்ரூம் சென்று விட்டான். மிருதுளாவினால் தான் எழுந்துகொள்ள முடியவில்லை. அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அத்தனை வலி. சின்னப்பெண், இதை எல்லாம் எப்படித் தாங்குவாள்? ஆனால் பெண்ணாகப் பிறந்து விட்டால் தாங்கித் தான் ஆக வேண்டும். வேறு வழி என்ன இருக்கின்றது.

கீழே கிடந்த உடையினைக் கூட எடுக்காது, கட்டிலில் கிடந்த பெட் சீட்டினால், கழுத்து வரை மூடிப் படுத்திருந்தாள். தன்னை சுத்தம் செய்து விட்டு வந்தவன், அசையாது கிடந்தவளைக் கண்டு, அவள் அருகே சென்று அமர்ந்து,

"ஏலாம இருக்கோ மிருதுளா...? கொஞ்சம் முரடனா நடந்திட்டனோ...?" என்றான் அக்கறையாய்.

அவன் அப்படிக் கேட்டதும் சற்று வலி குறைந்து போனது போன்ற உணர்வு அவளுக்கு. இன்று எத்தனை பேர், தாம்பத்தியம் முடிந்ததும் இப்படிக் கனிவாகப் பேசி இருக்கிறார்கள். தம் பசி தீர்ந்தாலே போதுமே! பெண்ணவளின் நிலையினை உணராது, உழைத்த அசதியில் உறங்கிப் போபவர்கள் தானே இங்கு அதிகம். இதில் அவள் நிலையினைக் கண்டுகொள்ள யாருக்கு இங்கே நேரம் இருக்கிறது.

"ம்ம்..." எனத் தலையசைத்தவள் முகத்தில் வலியைவிட, வெட்கமே முந்திக் கொண்டது. அதைக் கண்டதும் தானும் முறுவலித்தவன், அவள் தலையினைத் தன் மடிமீது தூக்கி வைத்து,

"அந்த நேரத்தில என்ன செய்யுறம் எண்டு தெரியிறேல மிருதுளா... அதால தான், இப்பிடி செய்தா உமக்கு வலிக்கும் எண்டு கூட யோசிக்கிறேல... இனிமேல் என்ன உச்சத்தில இருந்தாலும், கொஞ்சம் பதமா செய்யிறன். இப்ப எங்க நோகுதென்டு சொல்லும்... தடவி விடுறன்..." என்று பெட் சீட்டினை விலக்கியவனிடமிருந்து பெட்சீட்டை இழுத்து மீண்டும் தன் உடலை மூடியவள்.

"ஒண்டும் வேண்டாம்... நீங்கள் வந்து படுங்கோ..." என்றாள் கூச்சத்தில் அவசரமாக.

"ஏன் இப்ப இழுக்குறீர்... நான் தானே விடும்... தடவி விட்டுக் கொண்டே படுக்கிறன்..." என்று அருகிலே படுத்துக் கொண்டவன் கைப்பெட்சீட்டுக்குள் நுழைய, அதைத் தன் உடல் தீண்டாது தடுத்தவள் தடுப்பையும் மீறி, தடவியவன் கையினில் வித்தியாசமான பிசுபிசுப்பை உணர்ந்து சட்டென எழுந்து கொண்டவன், பெட்சீட்டினை விலக்கிப் பார்த்தான்.

மெத்தை முழுவதும் இரத்தக் கறைகள். அதைக் கண்டதும் அடித்துப் பிடித்து எழுந்து நின்றவன்,

"ரத்தம் மிருதுளா... இது எங்க இருந்து வந்தது" அவனுக்குத் தான் தெரியாதே! முதல் உறவின்போது பெண்களுக்கு இது சாதாரணம் என்று. தெரிவதற்கு அப்படி யாரை அவனுக்குத் தெரியும்.

ஆனால் மிருதுளா அறிவாள். அவள் பதினோராம் வகுப்பில் மனைப் பொருளியல் பாடம் எடுத்திருந்ததால் இப்படி ஒன்று இருப்பதை அறிந்திருந்தாள்.

"ஊஸ்... பெருசா கதைக்காதைங்கோ... வெளியால ஆக்கள் நின்டா கேக்கபோது." அவசரமாக அடக்கியவள்,

"பயப்பிட ஒண்டும் இல்ல... முதல் தரம் சேரேக்க இப்பிடி வரும். பள்ளிக்கூடத்தில சொல்லித் தந்திருக்கினம். கொஞ்சத்தாலச் சரியாகிடும்... நான் போய்க் கழுவிக் கொண்டு வாரன்." என வலியைக் கூடப் பொருட்படுத்தாது, மெல்ல எழுந்து, சிதறிக் கிடந்த உடையினை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன்னை மறைத்தவாறு, மெல்ல மெல்ல அருகில் இருந்த குளியல் அறைக்குள் சென்று கதவடைத்தவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சிந்தையோ பிரான்ஸுக்குச் சென்றது.

பின்னே இன்னும் இரண்டு நாட்களில், அங்குச் சென்றாக வேண்டுமே! மூன்றாவது நாள், அங்கு மட்டும் அவன் இல்லை என்றால், அவன் வேலையிலிருந்து, இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்துக்குப் பலன் கிடைக்காமல் போய் விடும்.

திருமணம் ஆகி மூன்றாவது நாளே மனைவியை எப்படிப் பிரியப் போகிறோம் என்ற கவலை அவனிடம் தொற்றிக் கொள்ள, இருக்கின்ற மூன்று நாட்களும், மனைவியே கதியென அவளையே சுற்றிச் சுற்றி வந்தான்.

இதுவரை இப்படி ஓர் உறவை நினைத்துப் பார்த்திராதவளை, எல்லா விதத்தலும் ராணி போல் அவன் நடத்தியதில், அவளுக்குமே அந்த உறவு பிடித்துப் போனது. இந்த மூன்று நாட்களின் பின்னர், கணவனின் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறோம் என நினைக்கையில் அவளுக்குமே பயமாகத் தான் இருந்தது.
 
Last edited:

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
102
45
28
Trichy
அட காஞ்சமாட்டுக்கு பொறந்த கழிசடையா இருப்பான் போலயே,
இவனுக்கு எக்ஸ் லைஃப் இருக்கும் போலையே
 
  • Like
Reactions: Gowri Yathavan

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
253
155
43
Theni
இவன் மிருதுகிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன்.
இவ்வளவு அவசரமா ஏன் பிசிக்கல் ரிலேஷன்சிப் வச்சிக்கிறான்.......
என்னமோ தப்பா இருக்கு
 
  • Like
Reactions: Gowri Yathavan

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
எப்போ எப்போன்னு இருந்திருப்பான் போல.. அதான் பாய்ஞ்சிட்டான் 🙄

பக்கத்துல வெச்சு ரசிக்க முடியுமான்னு கேக்குற?
அப்ப அள்ளிப் பருக அவ என்ன ஆத்துத் தண்ணியாடா? 😡

அவ சொன்ன விளக்கத்துக்கு இவனோட மூளை உடனே ஏன் பிரான்ஸ்க்கு தாவுது? 🤨

மூணு நாள்ல அவன் மட்டும் போறானா?
அதுக்கு எதுக்கு மிருதுவ கல்யாணம் பண்ணனும்? 🧐
 
  • Like
Reactions: Gowri Yathavan

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
அட காஞ்சமாட்டுக்கு பொறந்த கழிசடையா இருப்பான் போலயே,
இவனுக்கு எக்ஸ் லைஃப் இருக்கும் போலையே
அப்பட்டமான பழி இது.அப்பிடி சொல்லாதீங்க சிஸ்.
 

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
இவன் மிருதுகிட்ட எதையோ மறைக்கிறான்னு நினைக்கிறேன்.
இவ்வளவு அவசரமா ஏன் பிசிக்கல் ரிலேஷன்சிப் வச்சிக்கிறான்.......
என்னமோ தப்பா இருக்கு


நன்றி சிஸ்.. தாெடந்து படியுங்கோ உங்கட கேள்விக்கான பதில் கிடைக்கும்.
 

Gowri Yathavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
26
36
13
Srilanka
எப்போ எப்போன்னு இருந்திருப்பான் போல.. அதான் பாய்ஞ்சிட்டான் 🙄

பக்கத்துல வெச்சு ரசிக்க முடியுமான்னு கேக்குற?
அப்ப அள்ளிப் பருக அவ என்ன ஆத்துத் தண்ணியாடா? 😡

அவ சொன்ன விளக்கத்துக்கு இவனோட மூளை உடனே ஏன் பிரான்ஸ்க்கு தாவுது? 🤨

மூணு நாள்ல அவன் மட்டும் போறானா?
அதுக்கு எதுக்கு மிருதுவ கல்யாணம் பண்ணனும்? 🧐
பக்கத்தில பாயாசத்தை வைச்சுக் கொண்டு ஆற போடுறது படையலுக்கு நாங்கள் செய்யிற பாவம் எல்லோ சிஸ்.. இப்ப எடுத்தாலும் பிறகு எடுத்தாலும் அது அவனுக்கு சொந்தானது.. நன்றி சிஸ்