• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பரிதி - 02

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
Parithi – 2

நிலா கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, ரேனுகாவும் விக்ரமும் நிலாவை கூர்மையாக பார்க்க, அதை உணர்ந்த நிலா “மாமா ப்ளீஸ் நீங்க என்னைத் தப்பா நினைச்சிடாதீங்க. நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி நித்தியோ இல்ல அம்முவோ இதை எனக்கு சொல்லல, நானாத்தான் கண்டுபிடிச்சேன்..” என்றதும்,

ரேனுகா விக்ரமைப் பார்க்க, விக்ரமோ இன்னும் நிலாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் “மாமா” என நிலா திணற, அவளை விட்டு ரேனுகாவிடம் திரும்பிய விக்ரம்,

“ம்மா.. என் பொண்ணோட விருப்பம்தான் எனக்கு முக்கியம். அவளுக்கு விருப்பம் இல்லாத எதையும் நான் செய்யமாட்டேன், செய்ன்னு என் பொண்ணையும் கட்டாயப்படுத்தமாட்டேன். இதை உங்க பேரனுக்கு புரிய வச்சிடுங்க..” என்றவன், அழுதுகொண்டிருந்த மனைவியை சமாதானம் செய்தபடியே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.

“சபீ.. அழறதை நிறுத்திட்டு தனுவுக்கு கால் செஞ்சி ஹாஸ்பிடல் போயாச்சா என்னனு கேளு..” என அதட்ட,

“என்ன பாவா இதெல்லாம். கண்ணாவா இப்படியெல்லாம், அம்மு எப்படி இவ்வளவு கஷ்டத்தையும் மனசுக்குள்ள வச்சு சாதாரணமா நம்மக்கிட்ட இருந்துருக்கா, எவ்வளவு வேதனைப்பட்டிருப்பா. நம்ம பொண்ணு இவ்வளவு வருத்தத்துல இருந்தது நமக்கு தெரியவே இல்லையே. அப்போ நாம சரியான பேரன்ட் இல்லையோ..” என புலமபியபடியே அழ,
அது விக்ரமிற்கும் குற்றவுணர்ச்சியைக் கொடுக்க, “சபீ.. அழறதை நிறுத்திவிட்டு முதல்ல நான் சொல்றதை செய்..” என அழுத்தமாக சொல்ல,

“ம்ம்..” என்றவள் அழுதபடியே மகனுக்கு போனில் அழைக்க ஆரம்பித்தாள்.

இங்கு “அம்மா என்னம்மா விக்கி இப்படியெல்லாம் பேசிட்டு போறான்.” என ரித்தி ரேனுகாவிடம் கேட்க,

“ரித்திம்மா.. விக்கி பேசுறதுல என்ன தப்பு இருக்கு சொல்லு. அவங்களுக்குள்ள என்ன நடந்தது, எப்படி நடந்தது எதுவும் நமக்குத் தெரியாது. அம்மு நம்மக்கிட்ட சொல்லலன்னா கண்டிப்பா ஏதோ காரணம் இருக்கும். அதோட நான் சொல்றேன்னு நீ தப்பா நினைச்சிக்காத, நம்ம நித்திக்கு அந்த ஸ்வாதியோட குணம் அப்படியே இருக்கு.” என்றவர், பின் ஒரு பெருமூச்சோடு “விக்கியோட முடிவுதான் என் முடிவும் ரித்திம்மா, அவன் பொண்ணுக்காக அவன் யோசிக்கத்தான் செய்வான் பார்ப்போம்..” என்றுவிட, மற்றவர்களுக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

அந்த சூழலை தாங்கிக்கொள்ள முடியாத நிலா “ரேனும்மா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. தப்பு என்மேலயும் இருக்கு. நானாவது வீட்டுல சொல்லிருக்கனும், தப்புத்தான். நித்தி சரிபண்ணிடுவான்னு நினைச்சேன்.”

“என்னோட வெட்டிங்க் முதல்நாள் நான் அம்முவைத் தேடி அவளோட ரூமுக்கு போயிருந்தேன். அப்போ அவ பெட்ல ஒரு ஆல்பம் இருந்தது, அதை பார்த்து எனக்கு ஒரே ஷாக். அதுல நம்ம அம்முவும் நித்தியும் நெருக்கமா, அந்நியோன்யமா, சந்தோசமா, கல்யாணம் செஞ்சிக்கிட்டமாதிரி நெறைய போட்டோஸ். எப்படி இதெல்லாம், ஏன் யாருக்கிட்டயும் சொல்லலன்னு எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை.”

“முதல்ல நான் அம்முக்கிட்டத்தான் இதைப்பத்தி கேட்கனும் நினைச்சேன், ஆனா அம்மு ஆஃபிஸ்க்கு போய்ட்டா. அப்போ நித்திதான் வீட்டுல இருந்தான். அதனால அவன்கிட்ட கேட்டேன்.”

“நீ பார்த்தது எல்லாம் உண்மைதான். நானும் தாராவும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், எங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸண்டர்ஸ்டேன்டிங்க். சீக்கிரம் சரியாகிடும். அதுவரை இதைப்பத்தி வீட்டுல யாருக்கிட்டயும் பேசவேண்டாம், உன் வெட்டிங்க் முடிஞ்சதும் பேசிக்கிலாம்னு சொல்லிட்டான்.”

“அதுக்கப்புறம் எப்போ இதைப்பத்தி பேசினாலும், என்னை அவாய்ட் பண்ணிட்டான், நானும் கனடா போயிட்டேன். தப்புத்தான் உங்ககிட்டயாச்சும் சொல்லிட்டு போயிருக்கனும், நித்தி எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்னு நினைச்சேன் ரேனும்மா..” என குற்றவுணர்ச்சியில் அழவே ஆரம்பித்துவிட்டாள் நிலா.

“விடு நிலாம்மா. இப்படியெல்லாம் நடக்கனும்னு இருக்கு, நடந்திருக்கு..” என உஷா சொல்ல,

“அப்போ அதனாலத்தான் ருத்துக்குட்டியை என்னை அங்க நம்ம வீட்டுக்கு தூக்கிட்டுப் போகவேண்டாம்னு அம்மு சொன்னாளா.? ஆனா ருத்துக்குட்டியைப் பார்த்த பிறகும் கூட ஏன் நித்தி அமைதியா இருந்தான். அவனுக்கு நம்ம ருத்து மேல பாசமே இல்லையா.? இல்லையே நான் ருத்துவ வீட்டுக்கு தூக்கிட்டு போனா கீழேயே விடமாட்டானே, வேற என்ன.?” என தன்போல் ரித்தி புலம்ப, என்ன நடந்திருந்தாலும் நித்தி செய்தது தப்பு என்ற உண்மை உரைக்க, அங்கு யாருக்கும் எதுவும் பேசமுடியவில்லை.

அக்ஷிதா நிலாவை சமாதானம் செய்ய, இளா தயாவிடமிருந்த ருத்ரனை வாங்கியபடியே, “மாமா நீங்க ஹாஸ்பிடல் கிளம்புங்க, தனுவை அங்க யாராலயும் சமாளிக்க முடியாது.” என மெல்ல முணுமுணுக்க,
அவளை ஒரு பார்வை பார்த்த தயானந்த், பதிலேதும் சொல்லாமல் கிளம்பிவிட, அவனோடே இனியனும் கிளம்ப,
இங்கு ரவியும் நரேனும் திருமணம் முடிந்துவிட்டது என அறிவித்து, ‘பெரிய இடம்னா இப்படித்தான்’ என முணுமுணுத்தவர்களை சரிகட்டி கவனித்து அனுப்பினர்.

நிலாவை உஷாவிடம் விட்டுவிட்டு இளா ரேனுகாவின் வீல்சேரோடு நடக்க, அக்ஷிதாவும் பெரியவர்களை சமாதானம் செய்ய ஒருவழியாக எல்லோரும் மருத்துவமனைக்கே கிளம்பிவிட்டனர்.

இங்கு ரஞ்சனிதான் தசிராவிற்கு ட்ரீட்மென்ட் பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கும் ஆதங்கம்தான் எப்படி இவ்வளவு பெரிய விசயத்தை யாரிடமும் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்று.

கன்னம் கன்னமாக அடித்து துவைக்கும் அளவிற்கு கோபமும் கூட, ஆனால் மனதளவில் மிகுந்த வேதனையில் இருப்பவளிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் அழுதபடியே ஊசியை செலுத்திவிட்டு வெளியில் வர, தனு அவளை விட்டு நகரவில்லை.
ரஞ்சனியின் வரவை எதிர்பார்த்தபடி பதட்டத்துடன் நின்றிருந்த நித்திலனைப் பார்த்து முறைத்த ரஞ்சனியைக் கண்டு தலை குனிந்தான் நித்திலன்.

அடுத்த நொடியே “சித்தி ப்ளீஸ். உங்க கோபம் எனக்கு புரியுது. என் மேலத்தான் தப்பு. இப்போ அது பிரச்சினை இல்லை. தாராவுக்கு என்ன? இப்போ எப்படி இருக்கா.?” என அதே பதட்டத்துடன் கேட்க,

“ம்ச்… நீ இப்படின்னு இப்போக்கூட என்னால நம்பமுடியல நித்தி. உன்னைப் பார்த்துதான் நம்ம வீட்டுல மத்தவங்களும் பழகுவாங்க.” என ஆதங்கமாக பேசியவர், அவன் குற்றவுணர்ச்சியோடு தலை குனியவும்,
அதைப் பார்க்க சகிக்காமல் “ம்ச்..” என கோபமாக சலித்து, “அளவுக்கதிகமான ஸ்ட்ரெஸ், பயம், கோபம். நைட் தூக்கம் வராம ஃபோர் டைம் டோஸ் எடுத்துருக்கா. அவளா முழிக்கிறவரை எந்த டிஸ்டர்பன்சும் வேண்டாம். நீ போய் பார்க்குறதுனா பார்த்துட்டு வா. உள்ள தனு இருக்கான்..” என்றுவிட,

“ம்ம்” என்று தலையசைக்க, அர்ஜூன் அவன் தோளைத் தட்டி சமாதானம் செய்ய, ரஞ்சனியோ அப்போதுதான் உள்ளே வந்த விக்ரமிடம் வேகமாக சென்றாள்.

“ரஞ்சிக்கா..” என அழுத நிசாவைத் தன் தோளில் சாய்த்தபடியே அனைத்தையும் சொல்ல,

“எப்போ முழிப்பா.. துருவ்குட்டி கேட்டா என்ன சொல்ல..” என்ற விக்ரமிடம்,
“எதையும் எக்சாட்டா சொல்லமுடியாது விக்கி. அவ தூங்குறதுதான் பெட்டர் ட்ரீட்மென்ட். தூங்கி எழுந்தாலே அம்முவுக்கு பாதி ஸ்ட்ரெஸ் குறைஞ்சிரும்” எனவும், “ம்ம்” என்றதோடு அமைதியாக அமர்ந்துவிட்டான்.

அடுத்து என்ன செய்ய, மகளிடம் என்ன பேச, மகன்களை எப்படி சமாளிக்க என யோசனை ஓடியது.

மனைவியைப் பற்றி பிரச்சினை இல்லை. அவன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசமாட்டாள். ஆனால் அவனின் பிள்ளைகள் அப்படியில்லையே.

நித்திலனுக்கு எதிரே அமர்ந்திருந்தாலும் அவனிடம் எதையும் கேட்கவும் இல்லை, மகளைப்பற்றி பேசவுமில்லை விக்ரம்.

அது நித்திலனுக்கு வலித்தாலும், கோபத்தில் இருப்பவரிடம் என்ன பேசி, எப்படி புரியவைக்க எனத் தெரியவில்லை. அனைவரின் நம்பிக்கையும் உடைத்துவிட்டான் என்று புரிந்தது.

அந்த நம்பிக்கையைத் திரும்ப பெறவேண்டும், அதற்கு முதலில் மனைவியானவள் கண்விழிக்க வேண்டும் என நினைத்தவன் அவள் விழிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தான்.
அடுத்தடுத்து எல்லோரும் வர, அவனால் அங்கு அமரவே முடியவில்லை.

அதிலும் அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பட்டென்று எழுந்து வெளியில் சென்றுவிட்டான்.
அவனது நிலை அங்குள்ளவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் எதுவும் பேசவில்லை. அதுவே அவனை கொன்றது.

அர்ஜூன் தான் நித்திலன் பின்னே சென்றான். அவனைப் பார்த்து “ம்ச் என் பின்னாடியே வராம போடா. அங்க இரு..” என அதட்ட,

“எனக்குத் தெரியும் ப்ரோ.. நீங்க ஒன்னும் சொல்லாதீங்க..” என அவனும் கடிக்க,

“ம்ச்..” என எரிச்சலானவன், “என்னமோ பண்ணித்தொல..” என்றுவிட்டு அங்கேயே அமர்ந்தான்.

“ம்மா எல்லாரும் கிளம்புங்க. அம்மு தூங்கி எழவே நேரமாகும். இங்க தனுவும் நானும் இருப்போம். தேவைப்பட்டா கூப்பிடுறேன்” என ரேனுகாவின் உடல்நிலையை முன்னிட்டு விக்ரம் சொல்ல,

“அதெல்லாம் தேவையில்ல, நீங்களும் கிளம்புங்க மாமா, நானும் தனுவும் இருக்கோம்.” என நித்திலன் சாதாரனமாக சொல்ல,

“தேவையில்ல நீங்க முதல்ல கிளம்புங்க. என் அக்காவை பார்த்துக்க எங்களுக்கு தெரியும். உங்க வேலையை பாருங்க..” என தனு முகத்திலடித்தாற் போல பேச,

நித்திலனின் முகம் கருக்க, மற்றவர்களும் தலையை குனிய, அதைப் பார்க்க சகிக்காமல், “தனு..” என விக்ரம் மகனை அதட்டினான்.

தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு தன்னையே அதட்டும் தந்தையைப் பார்த்து “எனக்குத் தெரியும்ப்பா. எங்களை விட உங்களுக்கு அவர்தான் முக்கியம். அதனால் அவர் செஞ்ச தப்பைக்கூட நீங்க மன்னிச்சிடுவீங்க. ஆனா அக்கா அவங்க வாழ்க்கை. அதுக்கு என்ன செய்யப்போறீங்க.” என எகிறிக்கொண்டு வர,

“போதும் தனு.. அப்பாக்கிட்ட என்ன பேசிட்டு இருக்க. அவருக்கு தெரியும். என்ன செய்யனும் எப்படி செய்யனும்னு. நீ உன்னோட சத்தத்தை குறை.” என கணவனிடம் எகிறிய மகனைக் கண்டித்து, நிசப்தி கத்த,

“அதானே எங்கடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன். உங்க கண்ணாவை ஒன்னு சொல்லிட்டா உடனே வந்துடுவீங்களே..” எனத் தாயிடமும் எகிறியவன்,

“எனப் தனு..” என்ற தயாவின் சத்தம் கேட்டதும்தான் சற்று அமைதியானான் தன்வந்த்.

இப்படி எல்லாரையும் ஒருவழி செய்த தன்வந்த், மீண்டும் தசிராவின் அறைக்குள் சென்றுவிட, தயாவும் அவன் பின்னே செல்ல, ‘ஷப்பா’ என பெருமூச்சுவிட்டனர் வெளியிலிருந்த அனைவரும்.

நித்திலனையும், விக்ரம் தம்பதியையும் தவிர்த்து மற்ற அனைவரும் கிளம்பி, மாலையில் வருவதாக ஏற்பாடு..

விக்ரமிடம் பேசுவதை தவிர்த்து விடலாம் என்று நினைத்த நித்திலனால் நிசப்தியை தவிர்க்க முடியவில்லை.

கண்மூடி சாய்ந்திருந்தவனின் அருகில் வந்தமர்ந்த நிசப்தி,
“கண்ணா இந்த காபியை குடி.” எனவும், என்ன முயன்றும் அவனால் அவரிடம் சாதாரனமாக பேசவே முடியவில்லை.

“அத்தை..” எனக் குற்றவுணர்ச்சியில் திணறியவன், அவரின் அன்பான தாய்மை நிரம்பிய பார்வையில் அவரை நிமிர்ந்துகூட பார்க்கமுடியாமல் தவித்தான்.

“கண்ணா.. உங்க ரெண்டு பேருக்கும் இடைல என்ன நடந்ததுனு எங்க யாருக்கும் தெரியாது. அது நீங்களா சொல்லாம தெரிஞ்சிக்கவும் விருப்பம் இல்ல. நீ அவளைக் கட்டாயப்படுத்தியோ இல்லை அவ உன்னை கட்டாயப்படுத்தியோ ருத்துக்குட்டி வரல, ரைட்..” என்றாள் அவனைப் பார்த்து தீர்க்கமாக.

தன் அத்தையின் அந்த பார்வையை அவனால் எதிர்கொள்ளவே முடியவில்லை. உண்மைதானே அவர் சொல்வது முழுவதும் உண்மைதானே.
இருவரும் உயிருக்குயிராக நேசித்து, காதலை வெளிப்படுத்தி, ஊனும் உயிருமாக கலந்து, நேசமெனும் விதையைத் தூவி, கலந்து, கலைந்து, களைத்து என உண்மையான காதலுக்கான சான்றுதானே அவனது மகன் ருத்ரன்.

‘அவனை எப்படி? ப்ச்.. நோ..’ எனக் கத்த வேண்டும் போல் இருக்க, ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆமா” என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் நித்திலன்.

“ஓக்கே கண்ணா. உனக்கு சரியா மூனு மாசம் டைம். இந்த மூனு மாசத்துல என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, அம்முவே வந்து நானும் ருத்துவும் உங்கிட்ட போறோம்னு சொல்லனும்.
அப்படியில்லன்னா அடுத்த ஒரே வாரத்துல அம்முவுக்கு நான் வேற மேரேஜ் பண்ணிடுவேன்..” என நிதானமாகவும், அழுத்தமாகவும் கூற,

முதலில் அதிர்ந்தவன் பின் “அத்த ப்ளீஸ்.. தாரா மேல எந்த தப்பும் இல்ல..” எனவும்,

“எனக்கு அது தேவையே இல்ல கண்ணா. இனி நான் உன்னையோ அவளையோ எதுவும் கேட்கமாட்டேன். எங்களுக்குத் தெரியக்கூடாதுனு நினைச்சது தெரியாமலே இருக்கட்டும்.” என பட்டென்று சொல்ல,

அதுவரை இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம், மனைவியின் கோபத்தில், அடுத்து எதுவும் தப்பாக பேசிவிடுவாளோ என்று நினைத்து “சபீ..” என அதட்ட,

“ம்ச் ஒன்னும் சொல்லல..” என எரிச்சலாக எழுந்து சென்றுவிட, இப்போது நித்திலனும் விக்ரமும் நேருக்கு நேராக அமர்ந்திருந்தனர்.

விக்ரம் நித்திலனையே கூர்மையாகப் பார்க்க, அந்தப் பார்வையில் “மாமா தாரா உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டான்னு நினைக்கிறேன்.” என்றான் மெல்ல.

இப்போதும் பார்வையில் மாற்றமில்லை. ஆனால் அதில் சிறு பாராட்டும் இருந்தது. சரிதான் என்பது போல.

அதன்பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தன் அத்தை மாமா இருவரும் அவன்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயம். அதோடு இனியும் அவனது தாராவை தனியே தவிக்க விடக்கூடாது என்ற எண்ணமும் ஆல்போல் வளர, சட்டென்று எழுந்தவன், யாரையும் கண்டுகொள்ளாமல் தசிராவின் அறைக்குள் நுழைந்தான்.
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
792
79
63
Coimbatore
ஆனாலும் நிலத்தினை ஸ்வாதியுடன் ஒப்பிட்டு பேசுவது சரி என்று தோன்றவில்லை.