• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பரிதி - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
பரிதி - 04

நித்திலன் வந்து இரண்டு நாட்கள் ஆகிருந்தது. அவன் வருவதற்கு ஒருவாரம் முன்புதான் தசிராவின் உடனிருந்த பெண் விடுமுறையென தாயகம் சென்றிருந்தாள்.

இதை நித்திலன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இப்போது அங்கு இருப்பதா வேண்டாமா என்றும் புரியவில்லை.

வீட்டில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்காது. தெரிந்தும் எப்படி இருவரையும் தனியாக விட்டார்கள். மூளை சூடாகிப் போனது பையனுக்கு.

மெதுவாக விக்ரமிடம், “மாமா அந்த ரூம் மேட் பொண்ணு இல்ல போல..” என ஆரம்பிக்க,

“ஆமா நித்தி, லயா இங்க வந்துட்டா.! அம்மு தனியா இருக்காளேன்னு பயந்துட்டு இருந்தேன். நல்லவேலை நீ போய்ட்ட..” எனவும், தலையிலடித்துக் கொண்டான்.

பிறகும் மனம் கேட்காமல் ரேணுகாவிடம் கேட்க, “நித்தி இதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்ததில்லையா.? என்ன புதுசா.?” என படபடவென் பேசியவர், சில நொடிகளில் நித்திலனின் அமைதியை புரிந்து கொண்டார். கூடவே அவன் நிலையையும்.

“நித்தி கண்ணா.! உன் மேல நம்பிக்கை இருக்கப்போய் தான் அனுப்பிருக்காங்க.” என ஆதுரமாக சொல்ல,

“ம்ச் ரேனும்மா… உங்க நம்பிக்கையை எல்லாம் காப்பத்த முடியும்னு எனக்குத் தோணல. இதுக்குத்தான் மேரேஜ் பண்ணிட்டு அனுப்பி வைங்கன்னு சொன்னேன்..” என்றான் எரிச்சலாக.

அவனால் அவன் நிலையை விளக்கவே முடியவில்லை. அதை வெளிப்படுத்த முடியாமல் கோபமாகக் கத்த ஆரம்பித்துவிட்டான் ரேணுகாவிடம்.

“டேய் மறுபடியும் ஆரம்பிக்காத, அம்மு இங்க வரும் போது எங்கேஜ்மென்ட் வைக்கிற மாதிரியாவது விக்ரம்கிட்ட பேசுறேன். ஆனா அவன் சம்மதிப்பானா தெரியாது.” என அவனுக்கு மேலே கத்த,

“ம்ச் ரேணும்மா…” என்றவன் “சரி நான் பார்த்துக்குறேன். நீங்க மாமாவை கன்வின்ஸ் பண்ணுங்க..” எனவும்,

“நித்திம்மா.. உன் மாமாவை கன்வின்ஸ் பண்றது இருக்கட்டும், உன் அம்மாவை கன்வின்ஸ் பண்ண வேண்டாமா.? நிலாவுக்கு பண்ணாம உனக்கு எப்படி செய்வா.?” என நமுட்டு சிரிப்பு சித்தார்.

“அப்படியா சொன்னாங்க, அப்போ நிலாவுக்கு சீக்கிரம் பாருங்க..” எனவும் பக்கென்று சிரித்துவிட்டார்.

அவருக்குமே பேரனின் அவசரமும், அவஸ்தையும் சிரிப்பை வர வைத்தது. தன் பேத்தியை இந்தளவிற்கு விரும்புவான் என்று அவருமே நினைத்திருக்கவில்லை.

ஏதோ வயது கோளாறு, ஒன்றாக இருந்ததால் வந்த ஈர்ப்பு என்றுதான் எல்லாரும் நினைத்திருந்தனர், அவருமே அப்படித்தான் நினைத்திருந்தார்.

ஆனால் அப்படியில்லை என்று பேரன் தன் பிடிவாதத்தில் காட்டிவிட்டான். சீக்கிரம் விக்ரமிடம் பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

அன்று தசிராவிற்கு பிறந்தநாள் என்பதால்ன்காலையில் வீட்டில் அனைவரும் போனில் அழைத்து வாழ்த்து சொல்லியிருந்தனர்.

தம்பிகள் இருவரும் அவளுக்கு வீடியோ காலில் வாழ்த்துக்களை கூற, அழுகை வந்தது பெண்ணுக்கு. இதுவே அவள் தனியாக இருக்கும் முதல் பிறந்தநாள். ஒருவழியாக இருவரும் தமக்கையை சமாதானம் செய்து போனை வைக்க அரை மணி நேரத்திற்கும் மேலானது.

அன்று விடுமுறை எடுக்க வேண்டுமென்று, ‘அவள் இருக்கிறேன்’ என்று சொல்லியும் கேட்காமல் கல்லூரிக்கு அனுப்பிவிட்டான் நித்திலன்.

அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவன் படும் அவஸ்தையை விவரிக்க முடியாது. அதோடு முதல்நாள் ஏதோ ஒரு அதிர்ச்சியில் கட்டிப்பிடித்தாள் என்று நித்திலன் நினைத்திருக்க, அவளோ நினைத்த நேரமெல்லாம் கட்டிப்பிடித்தால்? அவனும் என்னதான் செய்வான்.

அவளிடம் ஒட்டவும் முடியாமல், அவளை ஒதுக்கவும் முடியாமல் திணறித்தான் போனான். இதில் அவள் கூடவே இருக்கிறேன் என்றால் எப்படி.?

ஐயோ சத்தியமாக சமாளிக்கவே முடியாது. முதலில் கல்யாணத்தை பண்ணனும் சாமி.! என மனதில் நொந்தவன் அவளிடம் கராராகவே நடந்துகொண்டான்.

“நான் லீவே எடுக்கல மாமா, இப்போ எடுத்தாலும் எனக்கு அட்டனன்ஸ் இருக்கு. நான் உங்ககூட இருக்கேன்..” என கெஞ்சியவளை கண்டுகொள்ளாமல் அவனே கல்லூரியில் கொண்டு போய்விட்டு வந்தான்.

அதில் பெண்ணுக்கு ஏகப்பட்ட எரிச்சல். ‘ரொம்பத்தான் பண்றாங்க’ என முனங்கியபடியே கல்லூரிக்குப் போனவள் ஈவ்னிங்க் வரும் போது ஒரு பெரிய இடியோடு வந்தாள்.

காரில் வரும் போதே “மாமா ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் ட்ரீட் கேட்டாங்க. நானும் ஓக்கே சொல்லிட்டேன். என் ஃப்ரண்ட்ஸ் மட்டும் கூப்பிட்டு நைட் ஒரு பார்டி வைக்கலாம்..” என சந்தோசமாக சொல்ல,

“ஹேய் என்னடி நீ பார்ட்டி அது இதுன்னு. மாமாவுக்கு இதெல்லாம் தெரியுமா.? இதுக்கு முன்னாடி இப்படி வெளியே போயிருக்கியா.?” என அதிர்ச்சியாகக் கேட்க

அவன் அதிர்ச்சியைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது பெண்ணுக்கு. அவனிடம் விளையாடும் ஆசையும் கூட. இது தான் தன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் என்று தெரியாமலே அவனிடம் விளையாட ஆரம்பித்தாள்.

“ஹேய் நான் என்ன கேட்குறேன், நீ என்ன சிரிச்சிட்டு இருக்க.? எனக் கடுப்பாக கேட்க,

அதில் மேலும் சிரித்தவள், “ம்ச் மாமா இங்க இருந்துட்டு இதெல்லாம் பண்ணலன்னா தான் தப்பு. பார்ட்டி எல்லாம் இங்க யூஸ்வல்தானே. இதுல என்ன மாமா தப்பு இருக்கு சொல்லுங்க. எங்க இருக்கோமோ அதுக்கு தகுந்த மாதிரி நாமளும் மாறிக்கனும்தானே..” என அவன் முகம் போன போக்கைப் பார்த்து மேலும் மேலும் சிரிக்க, அப்போதே இது விளையாட்டு பேச்சென்று அவனுக்கு புரிய வைத்திருக்கலாம்.

அவனும் அவளிடம் உண்மையா என்று ஒருமுறைக்கு இருமுறை கேட்டு உணர்ந்திருக்கலாம். இருவருமே அதை செய்யாமல் விட்டனர்.

விளைவு! அடுத்தடுத்து அவர்கள் வாழ்வில் நடந்த இழப்பு. அவனின் காதலை அவள் இழந்தாள். அவளின் நம்பிக்கையை அவன் இழந்தான்.

வீட்டிற்கு வரும் வரை நித்திலன் உம்மென்றேதான் இருந்தான். இங்கு அனுப்ப வேண்டாம் என்று அவ்வளவு சொல்லியும் யாரும் கேட்கவில்லையே என்று வீட்டினர் மேலும் கோபம்.

அடுத்தநாள் மாலை அவன் கிளம்ப வேண்டும். அவளை பிரிய வேண்டும் என்ற வேதனை ஒருபக்கம். தசிராவின் பேச்சின் வலி ஒருபக்கம் என அவன் நிலை கொள்ளாமல் தவித்தான்.

இப்படியே தன்னவளை ஊருக்கு அழைத்துச் சென்றுவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

“அம்மு இந்த பார்ட்டி எல்லாம் நமக்கு செட்டாகாது, ரேணும்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. அதனால எல்லாரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணு. இங்கேயே பார்ட்டி போல பண்ணலாம்.” என்று மெதுவாக ஆரம்பிக்க,

நித்திலன் பேசியதில் ஏனோ அவனிடம் மேலும் மேலும் விளையாடத்தான் தோன்றியது பெண்னவளுக்கு. விளையாட்டு வினையாகும் என்று புரியவில்லை. அவனிடம் விளையாடும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டென்று எண்ணினாளோ?

“மாமா இதுக்கு பேர் பார்ட்டி இல்ல.. நான் ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிட்டேன். இப்போ முடியாதுன்னு சொன்னா எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க.” என முகத்தை சுருக்கியவள், அவனின் முகம் மேலும் இறுகுவதைக் கண்டு “ப்ளீஸ் மாமா இந்த ஒரு டைம் மட்டும் ஓக்கே சொல்லுங்க. இனி நான் எப்பவும் கேட்கமாட்டேன். டாடி ப்ராமிஸ். ப்ளீஸ் மாமா..” என கெஞ்சவும், அவனுக்கும் இளகிவிட்டது.

“ஓக்கே இதுதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்.. இதுக்குப் பிறகு எப்பவும் நான் அலோவ் பண்ணமாட்டேன். நீ என்னைத் தப்பா நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. அத்தை ஒரு ஜட்ஜ். மாமா ஒரு கார்பரேட் லீடிங்க் அட்வைசர். இவங்க நேம் எங்கேயும் கெட்டுப்போயிடக்கூடாது. பார்த்துக்கோ..” என மிகவும் சீரியசாக பேச,

‘அச்சோ மாமாவை சீண்டுறதுக்காக ஆரம்பிச்சு, அம்மாவை யோசிக்காம விட்டுட்டோமே. வீட்டுக்கு தெரிஞ்சா என்ன சொல்வாங்களோ’ என மனதுக்குள் அரண்டவள், அவனைப் பார்த்து, “மாமா நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு இதெல்லாம் மைண்டலயே ஓடுது. நான் பார்ட்டியை கேன்சல் பண்ணிடுறேன். ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்லிடுறேன்” என முகத்தை உம்மென்று வைத்து சொல்ல,

அந்த பாவனையில் என்ன கண்டானோ, அதுவரை இருந்த இறுக்கம் தொலைந்து இயல்பாகி “அப்போ மாமாக்கிட்ட பெர்மிசன் வாங்காமத்தான் ஃப்ரண்ட்ஸ்க்கு சொன்னியா.. எவ்வளவு தைரியம்டி உனக்கு.” என சிரித்தபடியே கேட்க,

“உங்க மாமா பக்கத்துல இல்ல, அதனால கேட்கல. என் மாமா பக்கத்துல இருக்கார். அதனால தைரியமா ஓக்கே சொன்னேன். இப்போ அதுவும் போச்சு. சரி விடுங்க.” என நகரப்போக,

நகர்ந்தவளின் கையைச் சுற்றி இழுத்தவன், தன்னோடு அனைத்து “இந்த டைம் ஓக்கே, நான் இருக்கேன் பார்த்துக்குவேன். மாமாக்கிட்ட நான் சொல்லிடுறேன். இனி..” என ஆரம்பிக்கும் போதே,

“இனி இப்படி பெர்மிசன் கேட்காம பண்ணமாட்டேன் ஓக்கேவா..” என அவள் முடிக்க, இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

காலையிலிருந்து உம்மென்று இருந்தவன், இப்போதுதான் சிரிக்க, அதைப்பார்த்தவள் உதட்டை சுழிக்க, அதில் அவளை இழுத்து அனைத்தவன் அவள் விழிகளைப் பார்த்துக்கொண்டே ‘அம்மு’ என்றான் குரலில் காதலைத் தேக்கி.

அந்தப் பார்வையிலும், அவனின் காந்தமாய் இழுக்கும் குரலிலும் தன்னை மறந்தவள் “ம்ம்” என்றபடியே அவன் மார்பில் சாய,

“உன் பர்த்டேக்கு எனக்கு கிஃப்ட் இல்லையா?” என்றான் காதோர குழல்களை ஒதுக்கி,

“இது உல்டா. நீங்கதான் எனக்குத் தரனும்..” என அவளும் சட்டம் பேச,

“ம்ம் அப்போ தரவா..” என்றான் உள்ளுக்குள் சிரித்தபடி.

“எஸ் தாங்க.. என்ன வாங்குனீங்க..” என முடிக்கும் முன்னே அவள் இதழை தனக்குள் எடுத்திருந்தான் முழுமையாக.

-

இங்கு விக்ரமிடம் பேசுவதற்கு முன் ரித்தியிடமும், ரவியிடமும் பேசினார் ரேனுகா.

“ரவி நீங்க நிலாவுக்கு செஞ்சிட்டு நித்திக்கு செய்ற ஐடியால இருந்தா, நிலாவுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிடலாம். அம்மு வந்ததுமே கல்யாணம் வைக்கனும்னு ஒரே பிடியா இருக்கான் நித்தி..” என ரேனுகா ஆரம்பிக்க,

“இப்போ என்ன அத்தை அவசரம் அவனுக்கு. இருபத்தியேழுதானே ஆகுது. அதோட அம்மு இங்க வந்து விக்கியோட ஷேரை ஹேண்ட் ஓவர் செஞ்சி ஒன் யேர் கழிச்சுத்தான் மேரேஜுன்னு சொல்லிட்டு இருக்கான். இப்போ இதை சொன்னா விக்கி டென்சன் ஆவான் அத்தை..” என நண்பனைப் பற்றி சொல்ல,

“என்ன ரவி பேச்சு இது. இருபத்தியேழுங்கிறது சின்ன வயசா.? அம்மு வர இன்னும் ஒன் யேர் முழுசா இருக்கு. நாம நிலாவுக்கு பார்த்து எல்லாம் முடிய, நித்திக்கு செய்ய சரியா இருக்கும். அம்முவுக்கும் இப்போ இருபத்தி இரண்டு ஆச்சு. எல்லாம் சரியா இருக்கும். நாம நிலாவுக்கு பார்க்க ஆரம்பிக்கலாம்.” என்ற ரித்தியிடம் சரியென்று தலையாட்டுவதை தவிர அவன் வேறு என்ன சொல்ல முடியும்.

“நம்ம முகுந்தனோட அக்கா பையன் இருக்கானே, அவனை விசாரிக்கலாமா ரவி. உங்களுக்கு சரின்னா நான் அண்ணிக்கிட்ட பேச சொல்றேன்..” என்ற ரேணுகாவிடம்,

“நிலாவுக்கு பிடிக்கனும் அத்த, முக்கியமா நித்திக்கு பிடிக்கனும். முதல்ல நீங்க அவங்க அந்த பையனுக்கு வரன் தேடுறாங்களான்னு கேளுங்க. அப்படி பார்க்க ஆரம்பிச்சா நித்திக்கும், விக்ரமுக்கும் சொல்லுங்க. விசாரிக்கட்டும். அப்புறம் நிலாவுக்கு சொல்லலாம்.” என்ற ரவிக்கு இப்போதே முகம் வாடிவிட்டது.

அதைக் கவனித்த ரித்தி தான், “ரவி என்ன இது? எப்படியென்றாலும் நாம நிலாவுக்கு வரன் பார்க்குறது தானே, அவளும் இன்னொரு வீட்டுக்குத்தானே போகனும். அதோட இன்னும் ஒருவருஷம் டைம் இருக்கு. இப்பவே நீங்க டல்லடிச்சு, உங்க பொண்ணை கல்யாணமே வேண்டாம்னு யோசிக்க வச்சிடாதீங்க. அப்புறம் என்னால சமாளிக்கவே முடியாது.” என்றதும்,

“என் கவலை எனக்கு. உன் அண்ணன் மட்டும் அவன் பொண்ணை பக்கத்துலயே வச்சுக்குவான், நான் மட்டும் எங்கேயோ அனுப்பனுமா? அதெல்லாம் முடியாது. அத்தை இங்கேயே பார்க்கலாம். தூரமா எல்லாம் வேண்டாம்.” என்றவன் மனைவியை முறைத்துக்கொண்டே சென்றுவிட, தாயும் மகளும் சிரித்துக்கொண்டனர்.

“அம்மா நீங்க நவீனையே கேளுங்க. நீங்க கேட்குற வரை எனக்கு ஒன்னும் பெரிய அபிப்ராயம் இல்ல. ஆனா சொன்னபிறகு அந்த பையனை பத்தி யோசிச்சேன். ரொம்ப நல்ல டைப்தான். அத்தையும் அவனைப்பத்தி சொன்னாங்க. நியுரோ சர்ஜனாம். என்ன கனடாவுல இருக்கான். இங்க வர வாய்ப்பிருக்கான்னு தான் தெரியல. முதல்ல கேட்டு பாருங்க. அப்புறம் கடவுள் விட்ட வழி..” எனவும்,

“சரி ரித்தி, நான் அண்ணிக்கிட்ட பேசிட்டு விக்கிக்கும் நிசாவுக்கும் சொல்லிடுறேன். நித்திக்கிட்ட நீயே பேசு. நாளைக்கு நைட் வந்துடுவான்ல. எங்கிட்ட செல்லம் கொஞ்சிட்டு, சொல்ல வர்ரதை கவனிக்க மாட்டான்..” என்றுவிட,

“செல்லம் கொடுத்து கெடுத்ததே நீங்கதான். இப்போ குறை சொன்னா என்ன செய்ய, நானே பேசுறேன்..” என்ற ரித்தி புலம்பியபடியே நகர, பேரனை நினைத்து சிரித்துக் கொண்டார் ரேணுகா.

விதியும் அவனைப் பார்த்து சிரித்தது!

ஆப்பு ஆன் தி வே..







 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
இனி புதுசா வேற ஆப்பு வைக்கனுமா ரைட்டரு
 
  • Love
Reactions: Vimala

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
இதுலயாச்சும் இந்த கூமுட்டை வக்கீல் பெர்ஃபாமன்ஸ் பண்ணுவாரா எப்படி?
 
  • Haha
Reactions: Vathani and Vimala

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
112
30
28
Trichy
Nice sis..
Niththi aedho thappa ninaikkiran pola. adhunala rendu perukkum pirachinai varappokutha?
 
  • Haha
Reactions: Vathani

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
351
6
28
Hosur
Lovely update vani
Adeiii velaaatu
Ivanun nambitan pola enna agumo