அத்தியாயம் 13
"என்ன அண்ணி சொல்றிங்க?" அதிர்ச்சியை மறைக்காமல் கேட்டார் மாலா.
"ப்ச் உனக்கு தோணலயா?" வள்ளி கேட்க,
"எப்படி தோணும்? என்னவோ மகி சொன்னதும் இதை எப்படி நினைக்காம போனோம்னு வலிக்க தான் செஞ்சது. ஆனா என் வீட்டுக்காரர நினைச்சதும் இதெல்லாம் அதிகப்படியான ஆசைனு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்" என்ற மாலா,
"அதுவும் சிவாக்கு பிடிக்கலைனு தெரிஞ்ச பின்னாடி அந்த மாதிரி நினைப்பு எனக்கு சுத்தமா இல்ல. இப்ப நீங்க கேட்கவும் பக்குன்னு தான் இருக்கு!" என்றார் உண்மையாய்.
"அவன் பிடிக்கலனு சொல்லலயே மாலா. வேண்டாம்னு தான சொன்னான்?" வள்ளி சொல்ல,
"நீங்க வேற அண்ணி! வேண்டாம்னு சொல்ற பையனை கட்டாயப்படுத்த போறிங்களா? பேசாம இருங்க. எனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்"
"சும்மா இரு நீ! மகி மாதிரி ஒரு பொண்ணை வச்சுட்டு நீயும் அண்ணனும் வேண்டாத வேலையை பார்த்து அந்த பொண்ணை அழ வச்சுட்டு இருக்கீங்க!" என கோபமாய் கூறியவர்,
"எனக்கு என்னமோ தோணுது சிவாக்கு மகி மாதிரி பொண்ணு தான் சரினு!" என்றார்.
"இது நாம மட்டும் பேசுற விஷயம் இல்லயே அண்ணி? அதுவும் சிவாவே அன்னைக்கு அவ்வளவு தெளிவா சொன்ன பிறகும்?"
"என்ன சொன்னான் அவன்? நல்லா நினச்சு பாரு! அவன் கோவமே வேற! ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையை வர சொல்லி பார்த்து வச்சுட்டு இப்ப வந்து இப்படி பேசிட்டாளேனு தான் அவன் கோவம். நீயே சொல்லு! மகிக்கு சம்மதம் தான். நாலு நாள் முன்ன மகி மட்டும் இவனை கட்டிக்குறேன் சொன்னா. இப்போ அவளுக்கு ஆதரவா நாம இருக்கோம்.. நாம கொஞ்சம் தைரியமா இறங்குனா ஆவாதுன்னா நினைக்க?" என்று சொல்லியவர்,
"இல்ல உனக்கு சிவாவ..." என்று சொல்லும் முன்பே,
"அண்ணி! அப்படி ஒரு வார்த்தையை நீங்களே சொல்லிடாதீங்க. சிவாவை போய் நான் வேண்டாம்னு சொல்லுததாட்டம் நீங்க கனவுல கூட நினைக்க கூடாது. என் மனசு என்ன பாடுபடும் தெரியுமா?"
"சரி சரி! தெரியும் தான். இருந்தாலும் வாய் வார்த்தையா கேட்டுட்டா நல்லாருக்குமேன்னு தான். நான் சிவாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று வள்ளி முடிவாய் சொல்ல,
"அண்ணி!" என்று பயத்தோடு ஆசையுமாய் அழைத்தார் மாலா.
"சும்மா பயந்து பயந்து ஒன்னும் ஆவ போறதில்ல மாலா. பிள்ளைங்க வாழ்க்கை முக்கியம். அதுவும் அன்னைக்கு மண்டபத்துல சிவாவும் அம்முவும் சிரிச்சுட்டு நின்னத பாக்கும் போது என் கண்ணு குளுந்து போச்சு. அப்போ தான் முடிவு பண்ணேன் இதை நடத்தியே ஆகணும்னு!" என்று சொல்ல, இப்பொழுது மாலாவிற்குமே ஆசை துளிர்விட துவங்கியது.
வளைகாப்பிற்கு என சென்று வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. புதன்கிழமை தான் மாலாவும் வள்ளியும் தனியே பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
இடைப்பட்ட இந்த தினங்களில் தான் வள்ளி தன் மகன் சிவா மகிமா திருமணம் குறித்து முடிவெடுக்க போதுமான நாட்களாக எடுத்துக் கொண்டது.
அத்தனை ஆராய்ச்சி நடத்தினார் தனக்குள்ளேயே!
சிவாவின் கோபம் புரியாமல் இல்லை. மகிமா மேல் வருத்தம் தான் அவனுக்கு அதுவும் ஒரு திருமணத்தை எளிதாய் நிறுத்தப் பார்க்கிறாளே என்று. புரிய வைத்து விடலாம். மகிமாவிற்கு ஏற்கனவே சம்மதம். இன்னும் தன் கணவரோடு அண்ணன் வினோதனை சமாளித்து சம்மதிக்க வைக்க வேண்டும்.
அது பெரிய வேலை தான் எனும் பொழுதிலும் முடியாது என்றில்லை.
மகிமா எனும் ஒரு பெண்ணை தன் மருமகளாய் நினைத்துப் பார்த்துவிட்ட மாத்திரத்தில் அந்த இடத்தில் அவளை தவிர யார் பொருந்திவிட முடியும் என அத்தனை ஆதங்கம் இருக்க தான் செய்தது.
அதுவும் மண்டபத்தில் மகன் மகிமாவிடம் மன்னிப்பு கேட்டதை அன்னையிடம் கூறி இருக்க, அவருமே இருவரும் பேசி சிரித்து விடைபெற்றதை கவனித்திருக்க, முடிவிற்கு வந்துவிட்டார் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று.
எதுவானாலும் தன்னிடம் முதலில் கூறிவிடும் மகனிடம் தான் இதையுமே அவர் கூற நினைத்தது. ஆனால் அதற்கு முன் மாலாவின் சம்மதமும் சந்தோசமும் முக்கியமாய் படவே காத்திருந்து அவரை தனியே சந்தித்து தன் விருப்பத்தை அவரிடம் கூற, அதிர்ந்து, பயந்து, ஆசையும் கனவும் கொண்டு பல குழப்பங்களை கேட்டு பேசி தான் தன் சம்மதத்தோடு தன் உறுதுணையாக இருப்பதையும் கூறினார் மாலா.
"நான் சும்மா பேச்சுக்கு வாய் வார்த்தைக்கு எல்லாம் சொல்லல அண்ணி! மனசு முழுக்க ஆசை இருக்கு மகியை சிவாக்கு குடுக்கணும்னு. அது நடந்தா எனக்கு கிடைக்குற சந்தோசம் வேற எது நடந்தாலும் கிடைச்சுடாது. அதுவும் என் பொண்ணு ஆசைப்பட்டு கேட்டு அதை அவளுக்கு கொடுத்துட்டா அதைவிட என்ன சந்தோசம் எனக்கு கிடைச்சுட போகுது?" என்று மாலா சொல்ல, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார் கனகவள்ளி..
"நீங்க சிவாகிட்ட எதுக்கும் பேசுங்க. சிவாக்கு பிடிச்சு நடந்தா போதும். அவனுக்கு இஷ்டம் இல்லைனா கஷ்டப்படுத்த வேண்டாம் அண்ணி. ஏனோ தானோன்னு வீட்டுல பாக்குற பொண்ணு பையன்னு கல்யாணம் பண்ணி அவங்க சந்தோசத்தை தொலைச்சு ஒரு வாழ்க்கை ரெண்டு பேருக்கும் வேண்டாம்!" என்று மாலா சொல்ல, வள்ளியும் சம்மதமாய் பேசினார்.
"எல்லாம் நல்லதா நடக்கும் மாலா. ஆமா உன் வீட்டுக்காரர்ட்ட மகிக்கு பிடிக்கலைனு பேசி பார்த்தியா? அந்த பையன் வீட்டுல எதாவது பேசி அனுப்பினாங்களா?" வள்ளி கேட்க,
"அதெல்லாம் பேசியாச்சு அண்ணி! இங்க இருந்து கிளம்புன அன்னைக்கே அவரை ஒரு பிடி பிடிச்சுட்டேன். அதான் போன்ல சொன்னேனே! மனுஷன் இன்னும் என்கிட்டயும் பேசல மகிட்ட கூட பேசல. ஆனா அந்த பையன் வேண்டாம்னு மட்டும் தெளிவா சொல்லிட்டேன். அதையும் மீறி அவர் எதாவது செய்யட்டும். அன்னைக்கு தெரியும் அவருக்கு இந்த மாலா யாருன்னு!"
"சரி விடு! எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும். ஒவ்வொருத்தரா பேசுவோம்"
எதுவும் நம் கையில் இல்லை. அவரவர் செயல்களைக் கொண்டு அவரவருக்கான பலன்கள். இருவர் இணைய தெய்வம் வழி கொடுத்தால் அத்தனை தடைகளும் தன்னால் தீரும் தானே?
மூன்று மணி அளவில் "காபி கார்த்தி!" என்று கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு மகிமா முன் தன் அலுவலகத்தின் கேன்டீனில் அமர்ந்தான் சிவா.
"மாமா!" என்றவள் நிமிர்ந்து அமர,
"என்னாச்சு?"
"ஒண்ணுமில்லயே மாமா!"
"பீவர் தலைவலி கோல்ட் எதுவுமா?"
"அதெல்லாம் இல்லையே! நல்லா தான் இருக்கேன்!"
"தென் என்னாச்சு மகி உனக்கு? ரெண்டு நாளா உர்ருனு இருக்க? வர்றதும் தெரில போறதும் தெரில?"
"அவ்வளவு தெரியுதா?" என கண்களை விரித்தவளைப் பார்த்து சிரித்தவன்,
"ஆமா! அவ்வளவு தெரியுது. நீ ஆபீஸ்ல தான் இருக்குறியானு உன் பிளேஸ்ல நீ இருக்கறதை பார்த்து தான் கன்ஃபார்ம் பண்ணிக்குறேன்!"
"ஓஹ்!" என்று தலையை ஆட்டியவள்,
'ம்ம் குட் குட்!' என்றும் நினைத்துக் கொண்டிருக்க,
"இதெல்லாம் தெரியுமா உனக்கு? கேள்விக்கு ஒரு வேர்டுல அன்சர்.. தலையை மட்டும் ஆட்டுறது.." என்றவன் கார்த்திக் வைத்துவிட்டு சென்ற காபியை கலக்கிவிட்டு,
"அத்தை எதாவது சொன்னாங்களா? எதாவது பிரச்சனையா? அம்மா எதுவும் என்கிட்ட சொல்லலயே!" என்றான் யோசித்தபடி.
"அதெல்லாம் எதுவுமில்ல. ஆனா இப்படி தான் இனி எப்பவும்!" என்றாள் முகத்தை கடினமாய் வைத்து.
"அதான் ஏனாம்?" என்றான் அவள் பாவனைகளில் புருவம் சுருக்கி.
"ப்ச்! ஏன்னா! மெச்சூர்ட் பொண்ணா இருக்க ட்ரை பண்றேன். தெரியல உங்களுக்கு?" என்று கோபமாய் கேட்க, சிவாவிற்கு வாயில் வைத்த காபி மூக்கிற்கு சென்றுவிட்டது அவள் பதிலில்.
தலையில் தட்டி தன்னை தானே ஒருநிலைக்கு கொண்டு வந்தவன் அவள் பதிலில்,
"ஹேய் அம்மு!" என்று சொல்லி சத்தமாய் சிரிக்க, அருகில் இருந்தவர்கள் சிலர் இவர்கள் பக்கம் திரும்பி இருந்தனர் அவன் புன்னகையில்.
"மாமா!" என்று அவன் தோளில் ஒரு அடி வேறு அவளிடம் இருந்து.
"யார் சொன்னாங்க உனக்கு இது தான் மெச்சூரிட்டின்னு?" என்று கேட்டு இன்னும் சிரிக்க,
"உங்களுக்கு தெரியல. இருக்குற இடம் தெரியாம இருக்கனும். அது தான் குட் கேர்ள் கேட்டகரியாம். மெச்சூரிட்டி எல்லாம் இவங்ககிட்ட தான் கத்துக்கணுமாம். நம்ம ஆபீஸ்ல யாழினி அக்கா, பிரியா மேம், சுஜாதா அக்கா இவங்க எல்லாம் அப்படி தான் இருக்காங்க தெரியுமா உங்களுக்கு?" என்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் பழையபடி அவனிடம் பேச ஆரம்பித்து இருக்க, அதை உணர்ந்தவன் இன்னுமே தனக்குள் தன்னையே சாடிக் கொண்டான் தன்னால் தானே இவ்வளவுக்கு சிந்திக்கின்றாள் என்று.
"அப்படியா? யார் சொன்னாங்க உனக்கு?"
"நீங்க இன்னும் வளரனும் மாமா! கூகிள் சேர்ச் பண்ணி பாருங்க. அதுவே சொல்லும்!"
"என்ன மகி நீ!" என்று பின்னால் சாய்ந்து அமர்ந்தவன்,
"யார் சொன்னாங்க உனக்கு? உன்னால கம்ஃபோர்ட்டா இதை ஃபால்லோ பண்ண முடியுதா?" என்று கேட்க, திருதிருவென விழித்தாள்
"உனக்கு பிடிச்சு தான் இதை பண்றியா?"
"மாமா?" என்றவள் பாவமாய் விழித்தாள்.
"நீ நீயா இருந்தா மட்டும் தான் உனக்கான ஃபியூச்சர் உனக்கானதா இருக்கும். இதென்ன புதுசா உன்னையே ஏமாத்திட்டு... யாருக்காக இதெல்லாம்? அடுத்தவங்களுக்காக நீ என்ன பண்ணிட்டு இருக்குற தெரியுதா உனக்கு?"
"நீங்க தானே சொன்னது?"
"நானே சொல்லி இருந்தாலும் நானும் அடுத்தவன் தான் உனக்கு!" என்று சொல்ல பதிலில்லை அவளிடம்.
"உங்களுக்கு ஷிப்ட் முடிஞ்சதா?" என்று கேட்க, அவள் பேச்சை மாற்றுவது புரிந்து தலையசைத்தான்.
"அதான் மொக்க போட்டுட்டு இருக்கீங்க. வேலை டைம்ல மட்டும் கண்டுக்கறதே இல்ல. இப்ப மட்டும் வருமே நல்லா உங்களுக்கு. எனக்கு இன்னும் ஒன் ஹவர் இருக்கு" என்றவள் எழுந்து கொண்டாள்.
"ஒரு நிமிஷம் மகி!" என்று தானும் எழுந்து கொண்டவன்,
"நான் மட்டும் இல்ல. கார்த்தி கூட என்கிட்ட கேட்டான் மகி என்ன சைலன்ட் மோட்னு. இன்னும் உன்னோட பிரண்ட்ஸ் நிச்சயமா உன்கிட்ட கேட்ருப்பாங்க. சோ இனி இப்படி இருக்கவே கூடாது. இது நீயே இல்ல" என்றவன்,
"அண்ட் நிஜமா நான் இப்படி ஒரு மீனிங்ல உன்னை எப்பவும் பேசவே மாட்டேன். அன்னைக்கு நான் சொன்னது முழுக்க முழுக்க வேற! உன்னை நீயே கஷ்டபடுத்திக்க சொல்லி நான் சொல்வேனா? ப்ளீஸ் அம்மு! கொஞ்சம் திங்க் பண்ணு! நீ பண்றதெல்லாம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஹ்ம்ம்?" என்றவன் சிறு புன்னகை கொடுத்து நகர, புரியாமல் நின்றாள் மகிமா.
தொடரும்..
"என்ன அண்ணி சொல்றிங்க?" அதிர்ச்சியை மறைக்காமல் கேட்டார் மாலா.
"ப்ச் உனக்கு தோணலயா?" வள்ளி கேட்க,
"எப்படி தோணும்? என்னவோ மகி சொன்னதும் இதை எப்படி நினைக்காம போனோம்னு வலிக்க தான் செஞ்சது. ஆனா என் வீட்டுக்காரர நினைச்சதும் இதெல்லாம் அதிகப்படியான ஆசைனு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்" என்ற மாலா,
"அதுவும் சிவாக்கு பிடிக்கலைனு தெரிஞ்ச பின்னாடி அந்த மாதிரி நினைப்பு எனக்கு சுத்தமா இல்ல. இப்ப நீங்க கேட்கவும் பக்குன்னு தான் இருக்கு!" என்றார் உண்மையாய்.
"அவன் பிடிக்கலனு சொல்லலயே மாலா. வேண்டாம்னு தான சொன்னான்?" வள்ளி சொல்ல,
"நீங்க வேற அண்ணி! வேண்டாம்னு சொல்ற பையனை கட்டாயப்படுத்த போறிங்களா? பேசாம இருங்க. எனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்"
"சும்மா இரு நீ! மகி மாதிரி ஒரு பொண்ணை வச்சுட்டு நீயும் அண்ணனும் வேண்டாத வேலையை பார்த்து அந்த பொண்ணை அழ வச்சுட்டு இருக்கீங்க!" என கோபமாய் கூறியவர்,
"எனக்கு என்னமோ தோணுது சிவாக்கு மகி மாதிரி பொண்ணு தான் சரினு!" என்றார்.
"இது நாம மட்டும் பேசுற விஷயம் இல்லயே அண்ணி? அதுவும் சிவாவே அன்னைக்கு அவ்வளவு தெளிவா சொன்ன பிறகும்?"
"என்ன சொன்னான் அவன்? நல்லா நினச்சு பாரு! அவன் கோவமே வேற! ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையை வர சொல்லி பார்த்து வச்சுட்டு இப்ப வந்து இப்படி பேசிட்டாளேனு தான் அவன் கோவம். நீயே சொல்லு! மகிக்கு சம்மதம் தான். நாலு நாள் முன்ன மகி மட்டும் இவனை கட்டிக்குறேன் சொன்னா. இப்போ அவளுக்கு ஆதரவா நாம இருக்கோம்.. நாம கொஞ்சம் தைரியமா இறங்குனா ஆவாதுன்னா நினைக்க?" என்று சொல்லியவர்,
"இல்ல உனக்கு சிவாவ..." என்று சொல்லும் முன்பே,
"அண்ணி! அப்படி ஒரு வார்த்தையை நீங்களே சொல்லிடாதீங்க. சிவாவை போய் நான் வேண்டாம்னு சொல்லுததாட்டம் நீங்க கனவுல கூட நினைக்க கூடாது. என் மனசு என்ன பாடுபடும் தெரியுமா?"
"சரி சரி! தெரியும் தான். இருந்தாலும் வாய் வார்த்தையா கேட்டுட்டா நல்லாருக்குமேன்னு தான். நான் சிவாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று வள்ளி முடிவாய் சொல்ல,
"அண்ணி!" என்று பயத்தோடு ஆசையுமாய் அழைத்தார் மாலா.
"சும்மா பயந்து பயந்து ஒன்னும் ஆவ போறதில்ல மாலா. பிள்ளைங்க வாழ்க்கை முக்கியம். அதுவும் அன்னைக்கு மண்டபத்துல சிவாவும் அம்முவும் சிரிச்சுட்டு நின்னத பாக்கும் போது என் கண்ணு குளுந்து போச்சு. அப்போ தான் முடிவு பண்ணேன் இதை நடத்தியே ஆகணும்னு!" என்று சொல்ல, இப்பொழுது மாலாவிற்குமே ஆசை துளிர்விட துவங்கியது.
வளைகாப்பிற்கு என சென்று வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. புதன்கிழமை தான் மாலாவும் வள்ளியும் தனியே பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
இடைப்பட்ட இந்த தினங்களில் தான் வள்ளி தன் மகன் சிவா மகிமா திருமணம் குறித்து முடிவெடுக்க போதுமான நாட்களாக எடுத்துக் கொண்டது.
அத்தனை ஆராய்ச்சி நடத்தினார் தனக்குள்ளேயே!
சிவாவின் கோபம் புரியாமல் இல்லை. மகிமா மேல் வருத்தம் தான் அவனுக்கு அதுவும் ஒரு திருமணத்தை எளிதாய் நிறுத்தப் பார்க்கிறாளே என்று. புரிய வைத்து விடலாம். மகிமாவிற்கு ஏற்கனவே சம்மதம். இன்னும் தன் கணவரோடு அண்ணன் வினோதனை சமாளித்து சம்மதிக்க வைக்க வேண்டும்.
அது பெரிய வேலை தான் எனும் பொழுதிலும் முடியாது என்றில்லை.
மகிமா எனும் ஒரு பெண்ணை தன் மருமகளாய் நினைத்துப் பார்த்துவிட்ட மாத்திரத்தில் அந்த இடத்தில் அவளை தவிர யார் பொருந்திவிட முடியும் என அத்தனை ஆதங்கம் இருக்க தான் செய்தது.
அதுவும் மண்டபத்தில் மகன் மகிமாவிடம் மன்னிப்பு கேட்டதை அன்னையிடம் கூறி இருக்க, அவருமே இருவரும் பேசி சிரித்து விடைபெற்றதை கவனித்திருக்க, முடிவிற்கு வந்துவிட்டார் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று.
எதுவானாலும் தன்னிடம் முதலில் கூறிவிடும் மகனிடம் தான் இதையுமே அவர் கூற நினைத்தது. ஆனால் அதற்கு முன் மாலாவின் சம்மதமும் சந்தோசமும் முக்கியமாய் படவே காத்திருந்து அவரை தனியே சந்தித்து தன் விருப்பத்தை அவரிடம் கூற, அதிர்ந்து, பயந்து, ஆசையும் கனவும் கொண்டு பல குழப்பங்களை கேட்டு பேசி தான் தன் சம்மதத்தோடு தன் உறுதுணையாக இருப்பதையும் கூறினார் மாலா.
"நான் சும்மா பேச்சுக்கு வாய் வார்த்தைக்கு எல்லாம் சொல்லல அண்ணி! மனசு முழுக்க ஆசை இருக்கு மகியை சிவாக்கு குடுக்கணும்னு. அது நடந்தா எனக்கு கிடைக்குற சந்தோசம் வேற எது நடந்தாலும் கிடைச்சுடாது. அதுவும் என் பொண்ணு ஆசைப்பட்டு கேட்டு அதை அவளுக்கு கொடுத்துட்டா அதைவிட என்ன சந்தோசம் எனக்கு கிடைச்சுட போகுது?" என்று மாலா சொல்ல, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டார் கனகவள்ளி..
"நீங்க சிவாகிட்ட எதுக்கும் பேசுங்க. சிவாக்கு பிடிச்சு நடந்தா போதும். அவனுக்கு இஷ்டம் இல்லைனா கஷ்டப்படுத்த வேண்டாம் அண்ணி. ஏனோ தானோன்னு வீட்டுல பாக்குற பொண்ணு பையன்னு கல்யாணம் பண்ணி அவங்க சந்தோசத்தை தொலைச்சு ஒரு வாழ்க்கை ரெண்டு பேருக்கும் வேண்டாம்!" என்று மாலா சொல்ல, வள்ளியும் சம்மதமாய் பேசினார்.
"எல்லாம் நல்லதா நடக்கும் மாலா. ஆமா உன் வீட்டுக்காரர்ட்ட மகிக்கு பிடிக்கலைனு பேசி பார்த்தியா? அந்த பையன் வீட்டுல எதாவது பேசி அனுப்பினாங்களா?" வள்ளி கேட்க,
"அதெல்லாம் பேசியாச்சு அண்ணி! இங்க இருந்து கிளம்புன அன்னைக்கே அவரை ஒரு பிடி பிடிச்சுட்டேன். அதான் போன்ல சொன்னேனே! மனுஷன் இன்னும் என்கிட்டயும் பேசல மகிட்ட கூட பேசல. ஆனா அந்த பையன் வேண்டாம்னு மட்டும் தெளிவா சொல்லிட்டேன். அதையும் மீறி அவர் எதாவது செய்யட்டும். அன்னைக்கு தெரியும் அவருக்கு இந்த மாலா யாருன்னு!"
"சரி விடு! எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும். ஒவ்வொருத்தரா பேசுவோம்"
எதுவும் நம் கையில் இல்லை. அவரவர் செயல்களைக் கொண்டு அவரவருக்கான பலன்கள். இருவர் இணைய தெய்வம் வழி கொடுத்தால் அத்தனை தடைகளும் தன்னால் தீரும் தானே?
மூன்று மணி அளவில் "காபி கார்த்தி!" என்று கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு மகிமா முன் தன் அலுவலகத்தின் கேன்டீனில் அமர்ந்தான் சிவா.
"மாமா!" என்றவள் நிமிர்ந்து அமர,
"என்னாச்சு?"
"ஒண்ணுமில்லயே மாமா!"
"பீவர் தலைவலி கோல்ட் எதுவுமா?"
"அதெல்லாம் இல்லையே! நல்லா தான் இருக்கேன்!"
"தென் என்னாச்சு மகி உனக்கு? ரெண்டு நாளா உர்ருனு இருக்க? வர்றதும் தெரில போறதும் தெரில?"
"அவ்வளவு தெரியுதா?" என கண்களை விரித்தவளைப் பார்த்து சிரித்தவன்,
"ஆமா! அவ்வளவு தெரியுது. நீ ஆபீஸ்ல தான் இருக்குறியானு உன் பிளேஸ்ல நீ இருக்கறதை பார்த்து தான் கன்ஃபார்ம் பண்ணிக்குறேன்!"
"ஓஹ்!" என்று தலையை ஆட்டியவள்,
'ம்ம் குட் குட்!' என்றும் நினைத்துக் கொண்டிருக்க,
"இதெல்லாம் தெரியுமா உனக்கு? கேள்விக்கு ஒரு வேர்டுல அன்சர்.. தலையை மட்டும் ஆட்டுறது.." என்றவன் கார்த்திக் வைத்துவிட்டு சென்ற காபியை கலக்கிவிட்டு,
"அத்தை எதாவது சொன்னாங்களா? எதாவது பிரச்சனையா? அம்மா எதுவும் என்கிட்ட சொல்லலயே!" என்றான் யோசித்தபடி.
"அதெல்லாம் எதுவுமில்ல. ஆனா இப்படி தான் இனி எப்பவும்!" என்றாள் முகத்தை கடினமாய் வைத்து.
"அதான் ஏனாம்?" என்றான் அவள் பாவனைகளில் புருவம் சுருக்கி.
"ப்ச்! ஏன்னா! மெச்சூர்ட் பொண்ணா இருக்க ட்ரை பண்றேன். தெரியல உங்களுக்கு?" என்று கோபமாய் கேட்க, சிவாவிற்கு வாயில் வைத்த காபி மூக்கிற்கு சென்றுவிட்டது அவள் பதிலில்.
தலையில் தட்டி தன்னை தானே ஒருநிலைக்கு கொண்டு வந்தவன் அவள் பதிலில்,
"ஹேய் அம்மு!" என்று சொல்லி சத்தமாய் சிரிக்க, அருகில் இருந்தவர்கள் சிலர் இவர்கள் பக்கம் திரும்பி இருந்தனர் அவன் புன்னகையில்.
"மாமா!" என்று அவன் தோளில் ஒரு அடி வேறு அவளிடம் இருந்து.
"யார் சொன்னாங்க உனக்கு இது தான் மெச்சூரிட்டின்னு?" என்று கேட்டு இன்னும் சிரிக்க,
"உங்களுக்கு தெரியல. இருக்குற இடம் தெரியாம இருக்கனும். அது தான் குட் கேர்ள் கேட்டகரியாம். மெச்சூரிட்டி எல்லாம் இவங்ககிட்ட தான் கத்துக்கணுமாம். நம்ம ஆபீஸ்ல யாழினி அக்கா, பிரியா மேம், சுஜாதா அக்கா இவங்க எல்லாம் அப்படி தான் இருக்காங்க தெரியுமா உங்களுக்கு?" என்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் பழையபடி அவனிடம் பேச ஆரம்பித்து இருக்க, அதை உணர்ந்தவன் இன்னுமே தனக்குள் தன்னையே சாடிக் கொண்டான் தன்னால் தானே இவ்வளவுக்கு சிந்திக்கின்றாள் என்று.
"அப்படியா? யார் சொன்னாங்க உனக்கு?"
"நீங்க இன்னும் வளரனும் மாமா! கூகிள் சேர்ச் பண்ணி பாருங்க. அதுவே சொல்லும்!"
"என்ன மகி நீ!" என்று பின்னால் சாய்ந்து அமர்ந்தவன்,
"யார் சொன்னாங்க உனக்கு? உன்னால கம்ஃபோர்ட்டா இதை ஃபால்லோ பண்ண முடியுதா?" என்று கேட்க, திருதிருவென விழித்தாள்
"உனக்கு பிடிச்சு தான் இதை பண்றியா?"
"மாமா?" என்றவள் பாவமாய் விழித்தாள்.
"நீ நீயா இருந்தா மட்டும் தான் உனக்கான ஃபியூச்சர் உனக்கானதா இருக்கும். இதென்ன புதுசா உன்னையே ஏமாத்திட்டு... யாருக்காக இதெல்லாம்? அடுத்தவங்களுக்காக நீ என்ன பண்ணிட்டு இருக்குற தெரியுதா உனக்கு?"
"நீங்க தானே சொன்னது?"
"நானே சொல்லி இருந்தாலும் நானும் அடுத்தவன் தான் உனக்கு!" என்று சொல்ல பதிலில்லை அவளிடம்.
"உங்களுக்கு ஷிப்ட் முடிஞ்சதா?" என்று கேட்க, அவள் பேச்சை மாற்றுவது புரிந்து தலையசைத்தான்.
"அதான் மொக்க போட்டுட்டு இருக்கீங்க. வேலை டைம்ல மட்டும் கண்டுக்கறதே இல்ல. இப்ப மட்டும் வருமே நல்லா உங்களுக்கு. எனக்கு இன்னும் ஒன் ஹவர் இருக்கு" என்றவள் எழுந்து கொண்டாள்.
"ஒரு நிமிஷம் மகி!" என்று தானும் எழுந்து கொண்டவன்,
"நான் மட்டும் இல்ல. கார்த்தி கூட என்கிட்ட கேட்டான் மகி என்ன சைலன்ட் மோட்னு. இன்னும் உன்னோட பிரண்ட்ஸ் நிச்சயமா உன்கிட்ட கேட்ருப்பாங்க. சோ இனி இப்படி இருக்கவே கூடாது. இது நீயே இல்ல" என்றவன்,
"அண்ட் நிஜமா நான் இப்படி ஒரு மீனிங்ல உன்னை எப்பவும் பேசவே மாட்டேன். அன்னைக்கு நான் சொன்னது முழுக்க முழுக்க வேற! உன்னை நீயே கஷ்டபடுத்திக்க சொல்லி நான் சொல்வேனா? ப்ளீஸ் அம்மு! கொஞ்சம் திங்க் பண்ணு! நீ பண்றதெல்லாம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஹ்ம்ம்?" என்றவன் சிறு புன்னகை கொடுத்து நகர, புரியாமல் நின்றாள் மகிமா.
தொடரும்..