அத்தியாயம் 14
"யார் சொல்றதையும் நீ கேட்க வேண்டாம் மகி! உனக்கு தோணுறதை செய்! அதான் அத்தை உங்க அப்பாகிட்ட பேசிட்டாங்க இல்ல? அந்த பையன் வேண்டாம்ன்றது உன்னோட முடிவு. அதை அப்படியே மெய்ன்டைன் பண்ணு. அவன் உன்னை சொன்னதுக்காக நீ பெரிய பொண்ணு மாதிரி யோசிச்சு உன்னை நீயே காணாம பண்ணிடாத. புரியுதா?" என்று சிவா கேட்க,
"மாமா! எனக்கு நீங்க சொல்றது புரியுது. குழந்தைக்கு சொல்ற மாதிரி ஒவ்வொண்ணும் இவ்வளவு தெளிவா சொல்றிங்க. அப்போ நான் இன்னும் வளரனும் தான?" என்றவளை எப்படி சமாதானம் செய்வது என புரியவில்லை சிவாவிற்கு.
"நானா முடிவெடுக்கணும். அதான? நான் தான் யோசிச்சு அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்னேன். நான் தான் யோசிச்சு சிவா மாமாவை கட்டிக்குறேன்னு சொன்னேன். அந்த டெல்லிக்காரன் வேண்டாம்னு நான் சொன்னது சரினா அப்போ உங்களை வேணும்னது தப்பில்ல தான?" என்று மிக தெளிவாய் தன் பக்கத்தை மகிமா கூற, திகைத்து தான் போனான் சிவா.
இதற்கு பதில் என்னவென்று கூற? அவன் கூறியதை வைத்து தானே அவளும் அவள் பக்கத்தை கூறுகிறாள்!
"மகி!" என்றவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.
"சரி நீங்க கிளம்புங்க மாமா! டைம் ஆகிடுச்சு. நான் கம்ப்ளீட் பண்ணனும்!" என்றவள்,
"இப்பவரைக்கும் காதல், கல்யாணம்னு எல்லாம் நான் எதுவும் யோசிக்கல மாமா. ஆனா உங்க கூட என் லைஃப் நல்லாருக்கும் தோணுச்சு. அதை தான் அன்னைக்கும் நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன். செல்ஃபிஷ்ஷா கூட இருக்கலாம். ஆனா அது மட்டும் இல்ல. நம்ம பேமிலி இன்னும் நெருங்கி வரும் தானே இந்த கல்யாணம் நடந்தா? அதுவும் ஒரு காரணம்!"
"அதை தான் நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க என்னென்னவோ பேசிட்டிங்க. இப்பவும் அடுத்து மாப்பிள்ளைனு வீட்டுல பேசுவாங்களேனு ஒரு பயம் இருக்கு. ஆனா அந்த இடத்துல உங்களை நினச்சா பயம் இல்ல. தப்பா இருந்தா சாரி மாமா. நீங்க தான சொன்னிங்க நான் நானா இருக்கனும்னு அதனால தான் இப்பவும் வெளிப்படையா பேசினேன். வர்றேன்!" என்றவள் சென்றுவிட, நின்றவன் அங்கேயே நின்றுவிட்டான் சில நொடிகள்.
"அப்படி என்ன தான் டா பேசினீங்க? எவ்வளவு நேரம் தனியா வெயிட் பண்றது உனக்கு?" என்று கார்த்திக் வந்து அழைக்க,
"ப்ச்!" என்று அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திருந்தான் சிவா.
"ஏன் டா அப்படி ஒரு சிரிப்பு? என்னவாம் வாயாடிக்கு?" என்று கார்த்திக் கேட்க, பதில் சொல்லாதவன் வாசல் நோக்கி நடக்க, கூடவே பேசியபடி நடந்தான் கார்த்திக்.
அன்று மண்டபத்தில் கூட சாதாரணமாக பேசி இருந்தாள் மகிமா சிவாவிடம். இந்த பேச்சுக்கள் எதுவுமே இருவரிடமும் இல்லை அன்று.
இவன் மன்னிப்பு கேட்கவும் நான் அப்படிதான் என்று தனக்கே தெரியும் என கூறியவள்,
"நானும் சாரி மாமா! நீங்களே ஒரு கஷ்டத்துல இருக்கும் போது உங்க அனுமதி இல்லாம நானே ஒரு முடிவு பண்ணி அவ்வளவு தூரம் வந்திருக்க கூடாது!" என்று மன்னிப்பும் கேட்டிருந்தாள்.
அதன்பின் இருவருமே சகஜமாய் பேசி தான் விடைபெற்றிருக்க, இப்படி மீண்டும் அதுவும் அலுவலகத்தில் வைத்து மூன்று நாட்கள் கழித்து இப்படி பேசுபவளை என்ன சொல்ல?
இதில் அன்னையிடம் வேறு மகிமாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து மறந்துவிட்டதாக சொல்லி இருக்க, இப்பொழுது அன்னையிடம் என்னவென்று கூற என்றெல்லாம் யோசித்தபடி தான் வீடு வந்து சேர்ந்தான் சிவா.
"இதை பாரு! " என வாசலில் நுழையும் பொழுதே அவன்முன் ஒரு கவரை நீட்டினார் வாழவந்தான்.
பார்த்ததும் புரிந்து ஆயாசமாய் வந்தது சிவாவிற்கு.
"வாங்குன்னு சொல்றேன்ல! ஒருமுறை தப்பா போச்சு. அதுக்காக எப்பவுமே அப்படி தான்னு நீயும் உன் அம்மாவும் முடிவு பண்ணிருவீங்களோ? நேரா பொண்ணு வீட்டுக்குலாம் போக தேவையில்ல. பொண்ணு போட்டோ இருக்கு. பாரு உன் அம்மாக்கு நீயே காட்டு. உங்களுக்கு பிடிச்சா போவோம். நல்லா விசாரிச்சு தான் வாங்கிட்டு வந்திருக்கேன்!"
"ப்பா! எதுக்கு இவ்வளவு அவசரம்? இப்ப தான பட்டு வந்துருக்கோம்?"
"பண்ணனும் டா. அவசரமா தான் பண்ணனும். உன் அம்மா சொன்ன மாதிரி ஆற அமர எல்லாம் பண்ண கூடாது. துக்க வீடு மாதிரி குசலம் விசாரிக்க நம்ம வீடு தான் கிடைச்சிருக்கு அடுத்தவனுக்கு. அவனுக எல்லாம் பொறாமைல பொசுங்கி போக வேண்டாம்?"
"அதுக்கு என் வாழ்க்கை தான் கிடைச்சுதா உங்களுக்கு?" என குரலுயர்த்தியவ் சட்டென அமைதியானான் தணிந்து.
"ப்பா! போதும்! கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். அதுக்குன்னு சட்டு சட்டுனு நீங்க நினைக்குற மாதிரி அடுத்து அடுத்துனு என்னால போக முடியாது" என்றான் அமைதியாய்.
"ஏன் முடியாது? போறதுல என்ன தப்புங்குறேன்? எவ்வளவு நாளைக்கு இப்படி வீம்பா இருக்க முடியும்?" வாழவந்தான் கோபம் வர, அவருமே சத்தமிட தான் செய்தார்.
"இது வீம்பெல்லாம் இல்ல ப்பா! எப்படி புரிய வைக்க உங்களுக்கு? எனக்கு சங்கடமா இருக்கு. உங்களுக்கு ஏன் புரியல?"
"புரியுது டா. அதனால தான் ஊருல உள்ள எவனையும் கூப்பிடல. நீ நான் உன் அம்மான்னு போய் பார்த்துட்டு வருவோம். நல்லபடியா நடக்கட்டும் அடுத்து ஊரு பார்க்க கல்யாணத்த நடத்திருவோம்!" என்பவரை என்ன சொல்ல என அயர்ந்து பார்த்தான்.
"அம்மா எங்க?" சிவா கேட்க,
"அவ இருந்தா இப்படி உன்கிட்ட தெளிவா பேச முடியுமா? அவளும் என்னை பெத்தவளும் பக்கத்து தெருல விஷேசம்னு சாப்பிட போயிருக்காங்க" என்றவர்,
"இதை முதல்ல கையில பிடி!" என அவன் கைகளைப் பிடித்து திணித்தவர்,
"உன் அம்மா வர்றதுக்கு முன்னக்க திறந்து பார்த்து சம்மதத்த சொல்லு. நான் அடுத்து என்னனு பாக்கணுமில்ல? நேரம் குறிச்சு மண்டபம் பார்த்து... மண்டபம் பிடிக்குறதுலாம் குதிரக்கொம்பு தான். ஆனாலும் நல்ல மண்டபமா பார்த்து முதல்லயே ரேட்ட முடிச்சிரனும்" என்று அவர் பாட்டுக்கு தோன்றியதெல்லாம் பேச, கையில் இருக்கும் கவரைப் பார்க்கவே கைகள் நடுங்கியது சிவாவிற்கு.
இது தான் இப்படி தான் என மகனுக்கு திணித்துக் கொண்டிருக்கிறோம் என வாழவந்தானுக்கு புரியவே இல்லை.
அதை கோபப்பட்டு சொல்லவும் மகனுக்கு தெரியவில்லை. எளிதாய் கோபத்தை காண்பித்துவிடலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ அன்னை கனகவள்ளி தான். அதற்காகவே அமைதி காத்தான்.
"இப்போ என்ன ஆச்சு? அந்த பொண்ணு உன்ன பாத்துட்டா வேண்டாம்னு சொன்னா? அவ தான் அசிங்கப்பட்டு வீட்டுக்குள்ள கிடக்கணும். உனக்கென்ன நீ ஆம்பள டா!"
"ப்பா! எல்லாம் சரி தான். இந்த பொண்ணையே கூட பேசுங்க. நீங்களும் அம்மாவும் பேசி முடிவெடுங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றவன் கவரை அவர்முன் வைத்துவிட்டு வாழவந்தான் அழைக்க அழைக்க நிற்காமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
"அவன் அம்மாவ மாதிரியே பிடிவாதத்துக்கு மட்டும் குறையே இல்ல. என்ன ஆகி போச்சுன்னு இப்படி இருக்கான். இப்போ நான் அவகிட்ட முதல்ல இருந்து பேசணுமா? என்ன நினைச்சுட்டு இப்படியெல்லாம் பண்ணுதுங்க அம்மாவும் பையனும்" என புலம்பியபடி இருந்தவருக்கு நிச்சயம் தெரியும் தன் மனைவியைப் பற்றி.
அந்த பெண் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தே அந்த பேச்சு பேசினாரே கனகவள்ளி. பொறுமையாய் கேட்கும் மகனே பொறுமையின்றி தன் பேச்சுக்காக கூட இந்த கவரை தொடாமல் செல்கிறான் என்றால் மனைவி மட்டும்?
அதே தான் நிகழ்ந்ததும். வீட்டிற்கு வந்ததும் கவரைப் பார்த்த ஈஸ்வரி அதைப் பிரிக்க, மணமகள் விவரம் என முகவரியோடு முழு விவரம் போட்டோவின் பின்புறம்.
"அம்சமா தான் இருக்கா!" என்று சொல்லி கொஞ்சம் தயங்கி தான் ஈஸ்வரியே மருமகளை திரும்பிப் பார்த்தது.
அறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாலும் வாழவந்தான் வெளியே வரவில்லை.
"ஏத்த! அவருக்கு தான் அறிவு அப்படி போகுதுன்னா உங்களுக்கு கூடவா? உங்க பேரன் முன்னாடி இப்படி எதுவும் சொல்லி வைக்காதிங்க!" என்ற வள்ளி,
"அவரை என்னனு கேட்க மாட்டிங்களா நீங்களும்? அன்னைக்கு அவ்வளவு நடந்துருக்கு. ஒரு வாரத்துல அடுத்த போட்டோவோட வந்து நிக்காருன்னா சிவாவ இவர் என்ன நினைச்சுட்டு இருக்காரு? அவனை பார்த்தா எப்படி தெரியுது இவருக்கு?" என்று சத்தம் போட, மேல சிவாவிற்கும் கேட்டது அவர் சத்தம்.
'போச்சு! இனி அம்மாவை சமாளிக்கனும்!' நினைத்தபடி எழுந்து கீழே வந்தான்.
"இப்போ என்ன டி உனக்கு? அவனே நீங்க ரெண்டு பேரும் பாருங்க. பார்த்து பண்ணுங்கனு சொல்லிட்டான். நீ என்ன ஆடிட்டு இருக்க?" என அப்பொழுது தான் வெளிவந்திருந்தார் வாழவந்தானும்.
"என்ன?" என்று அதிர்ந்த வள்ளி,
"அவன்கிட்ட காட்டினீங்களா? ஏங்க கொஞ்சமாவது கூறு இருக்கா இல்லையா உங்களுக்கு?"
"ஏன் டி! என்ன டி வாய் நீளுது. அறிவு இருக்கா கூறு இருக்கான்னு? புருஷன்னு நினைப்பு இருக்கா இல்லையா?" ஈஸ்வரி கேட்க,
"அவருக்கு சிவாக்கு அப்பான்னு நினைப்பு இருக்கான்னு முதல்ல கேளுங்க"
"நினைப்பு இருக்குறதனால தான் நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்கு முன்ன அவன் கல்யாணத்த முடிக்கணும் நினைக்கேன்!" வாழவந்தான் சொல்ல,
"அப்பவும் அடுத்தவனுக்காக தான்?" என்று வள்ளி கேட்க, வந்துவிட்டான் சிவா.
"ம்மா! என்ன ம்மா இது? எப்ப பட்டு சண்டை, கூச்சல்னு..." என்று சிவா வந்து அன்னை அருகே நிற்க,
"நீ என்கிட்ட சொன்னத உன் அம்மா காது குளிர இப்ப ஒருவாட்டி சொல்லு. அப்பவாது அவளுக்கு புத்தி தெளியுதா பாப்போம்!" என்றார் வாழவந்தான்.
"அவ என்ன சொல்லிருப்பான்னு எனக்கு தெரியும். ஒருவாட்டி உங்க பேச்சை நம்பி வந்து அசிங்கப்பட்டது போதாதா? மறுபடியும் வருவானாக்கும்? அதான் நீங்களே பார்த்து பேசி முடிங்கனு சொல்லி இருப்பான்"
"இப்ப என்னங்குற? அவனுக்கு கல்யாணமே பண்ணாம கூட வச்சு பாக்க போறியா?"
"நான் அவன் அம்மா! எனக்கும் தெரியும் எப்ப என்ன பண்ணனும்னு. உங்களுக்கு முன்னாடியே அவன்கிட்ட பேசிட்டேன். அவனும் நான் சொல்றதை கேட்குறேன் சொல்லிருக்கான்!" என்று சொல்ல,
"ம்மா!" என சிவா அழைக்க,
"நான் அவனுக்கு பொண்ணு பாத்துட்டேன். அவனுக்கு பிடிச்ச பொண்ணு. பொண்ணுக்கும் சிவாவை பிடிச்சிருக்கு. நீங்க மாப்பிள்ளைக்கு அப்பாவா அவனுக்கு துணையா இருங்க அது போதும்!" என்று சொல்ல, சிவா மட்டுமின்றி அனைவருமே புரியாமல் அதிர்ந்து தான் பார்த்தனர் கனகவள்ளியை.
தொடரும்..
"யார் சொல்றதையும் நீ கேட்க வேண்டாம் மகி! உனக்கு தோணுறதை செய்! அதான் அத்தை உங்க அப்பாகிட்ட பேசிட்டாங்க இல்ல? அந்த பையன் வேண்டாம்ன்றது உன்னோட முடிவு. அதை அப்படியே மெய்ன்டைன் பண்ணு. அவன் உன்னை சொன்னதுக்காக நீ பெரிய பொண்ணு மாதிரி யோசிச்சு உன்னை நீயே காணாம பண்ணிடாத. புரியுதா?" என்று சிவா கேட்க,
"மாமா! எனக்கு நீங்க சொல்றது புரியுது. குழந்தைக்கு சொல்ற மாதிரி ஒவ்வொண்ணும் இவ்வளவு தெளிவா சொல்றிங்க. அப்போ நான் இன்னும் வளரனும் தான?" என்றவளை எப்படி சமாதானம் செய்வது என புரியவில்லை சிவாவிற்கு.
"நானா முடிவெடுக்கணும். அதான? நான் தான் யோசிச்சு அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்னேன். நான் தான் யோசிச்சு சிவா மாமாவை கட்டிக்குறேன்னு சொன்னேன். அந்த டெல்லிக்காரன் வேண்டாம்னு நான் சொன்னது சரினா அப்போ உங்களை வேணும்னது தப்பில்ல தான?" என்று மிக தெளிவாய் தன் பக்கத்தை மகிமா கூற, திகைத்து தான் போனான் சிவா.
இதற்கு பதில் என்னவென்று கூற? அவன் கூறியதை வைத்து தானே அவளும் அவள் பக்கத்தை கூறுகிறாள்!
"மகி!" என்றவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.
"சரி நீங்க கிளம்புங்க மாமா! டைம் ஆகிடுச்சு. நான் கம்ப்ளீட் பண்ணனும்!" என்றவள்,
"இப்பவரைக்கும் காதல், கல்யாணம்னு எல்லாம் நான் எதுவும் யோசிக்கல மாமா. ஆனா உங்க கூட என் லைஃப் நல்லாருக்கும் தோணுச்சு. அதை தான் அன்னைக்கும் நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன். செல்ஃபிஷ்ஷா கூட இருக்கலாம். ஆனா அது மட்டும் இல்ல. நம்ம பேமிலி இன்னும் நெருங்கி வரும் தானே இந்த கல்யாணம் நடந்தா? அதுவும் ஒரு காரணம்!"
"அதை தான் நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க என்னென்னவோ பேசிட்டிங்க. இப்பவும் அடுத்து மாப்பிள்ளைனு வீட்டுல பேசுவாங்களேனு ஒரு பயம் இருக்கு. ஆனா அந்த இடத்துல உங்களை நினச்சா பயம் இல்ல. தப்பா இருந்தா சாரி மாமா. நீங்க தான சொன்னிங்க நான் நானா இருக்கனும்னு அதனால தான் இப்பவும் வெளிப்படையா பேசினேன். வர்றேன்!" என்றவள் சென்றுவிட, நின்றவன் அங்கேயே நின்றுவிட்டான் சில நொடிகள்.
"அப்படி என்ன தான் டா பேசினீங்க? எவ்வளவு நேரம் தனியா வெயிட் பண்றது உனக்கு?" என்று கார்த்திக் வந்து அழைக்க,
"ப்ச்!" என்று அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திருந்தான் சிவா.
"ஏன் டா அப்படி ஒரு சிரிப்பு? என்னவாம் வாயாடிக்கு?" என்று கார்த்திக் கேட்க, பதில் சொல்லாதவன் வாசல் நோக்கி நடக்க, கூடவே பேசியபடி நடந்தான் கார்த்திக்.
அன்று மண்டபத்தில் கூட சாதாரணமாக பேசி இருந்தாள் மகிமா சிவாவிடம். இந்த பேச்சுக்கள் எதுவுமே இருவரிடமும் இல்லை அன்று.
இவன் மன்னிப்பு கேட்கவும் நான் அப்படிதான் என்று தனக்கே தெரியும் என கூறியவள்,
"நானும் சாரி மாமா! நீங்களே ஒரு கஷ்டத்துல இருக்கும் போது உங்க அனுமதி இல்லாம நானே ஒரு முடிவு பண்ணி அவ்வளவு தூரம் வந்திருக்க கூடாது!" என்று மன்னிப்பும் கேட்டிருந்தாள்.
அதன்பின் இருவருமே சகஜமாய் பேசி தான் விடைபெற்றிருக்க, இப்படி மீண்டும் அதுவும் அலுவலகத்தில் வைத்து மூன்று நாட்கள் கழித்து இப்படி பேசுபவளை என்ன சொல்ல?
இதில் அன்னையிடம் வேறு மகிமாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து மறந்துவிட்டதாக சொல்லி இருக்க, இப்பொழுது அன்னையிடம் என்னவென்று கூற என்றெல்லாம் யோசித்தபடி தான் வீடு வந்து சேர்ந்தான் சிவா.
"இதை பாரு! " என வாசலில் நுழையும் பொழுதே அவன்முன் ஒரு கவரை நீட்டினார் வாழவந்தான்.
பார்த்ததும் புரிந்து ஆயாசமாய் வந்தது சிவாவிற்கு.
"வாங்குன்னு சொல்றேன்ல! ஒருமுறை தப்பா போச்சு. அதுக்காக எப்பவுமே அப்படி தான்னு நீயும் உன் அம்மாவும் முடிவு பண்ணிருவீங்களோ? நேரா பொண்ணு வீட்டுக்குலாம் போக தேவையில்ல. பொண்ணு போட்டோ இருக்கு. பாரு உன் அம்மாக்கு நீயே காட்டு. உங்களுக்கு பிடிச்சா போவோம். நல்லா விசாரிச்சு தான் வாங்கிட்டு வந்திருக்கேன்!"
"ப்பா! எதுக்கு இவ்வளவு அவசரம்? இப்ப தான பட்டு வந்துருக்கோம்?"
"பண்ணனும் டா. அவசரமா தான் பண்ணனும். உன் அம்மா சொன்ன மாதிரி ஆற அமர எல்லாம் பண்ண கூடாது. துக்க வீடு மாதிரி குசலம் விசாரிக்க நம்ம வீடு தான் கிடைச்சிருக்கு அடுத்தவனுக்கு. அவனுக எல்லாம் பொறாமைல பொசுங்கி போக வேண்டாம்?"
"அதுக்கு என் வாழ்க்கை தான் கிடைச்சுதா உங்களுக்கு?" என குரலுயர்த்தியவ் சட்டென அமைதியானான் தணிந்து.
"ப்பா! போதும்! கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். அதுக்குன்னு சட்டு சட்டுனு நீங்க நினைக்குற மாதிரி அடுத்து அடுத்துனு என்னால போக முடியாது" என்றான் அமைதியாய்.
"ஏன் முடியாது? போறதுல என்ன தப்புங்குறேன்? எவ்வளவு நாளைக்கு இப்படி வீம்பா இருக்க முடியும்?" வாழவந்தான் கோபம் வர, அவருமே சத்தமிட தான் செய்தார்.
"இது வீம்பெல்லாம் இல்ல ப்பா! எப்படி புரிய வைக்க உங்களுக்கு? எனக்கு சங்கடமா இருக்கு. உங்களுக்கு ஏன் புரியல?"
"புரியுது டா. அதனால தான் ஊருல உள்ள எவனையும் கூப்பிடல. நீ நான் உன் அம்மான்னு போய் பார்த்துட்டு வருவோம். நல்லபடியா நடக்கட்டும் அடுத்து ஊரு பார்க்க கல்யாணத்த நடத்திருவோம்!" என்பவரை என்ன சொல்ல என அயர்ந்து பார்த்தான்.
"அம்மா எங்க?" சிவா கேட்க,
"அவ இருந்தா இப்படி உன்கிட்ட தெளிவா பேச முடியுமா? அவளும் என்னை பெத்தவளும் பக்கத்து தெருல விஷேசம்னு சாப்பிட போயிருக்காங்க" என்றவர்,
"இதை முதல்ல கையில பிடி!" என அவன் கைகளைப் பிடித்து திணித்தவர்,
"உன் அம்மா வர்றதுக்கு முன்னக்க திறந்து பார்த்து சம்மதத்த சொல்லு. நான் அடுத்து என்னனு பாக்கணுமில்ல? நேரம் குறிச்சு மண்டபம் பார்த்து... மண்டபம் பிடிக்குறதுலாம் குதிரக்கொம்பு தான். ஆனாலும் நல்ல மண்டபமா பார்த்து முதல்லயே ரேட்ட முடிச்சிரனும்" என்று அவர் பாட்டுக்கு தோன்றியதெல்லாம் பேச, கையில் இருக்கும் கவரைப் பார்க்கவே கைகள் நடுங்கியது சிவாவிற்கு.
இது தான் இப்படி தான் என மகனுக்கு திணித்துக் கொண்டிருக்கிறோம் என வாழவந்தானுக்கு புரியவே இல்லை.
அதை கோபப்பட்டு சொல்லவும் மகனுக்கு தெரியவில்லை. எளிதாய் கோபத்தை காண்பித்துவிடலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ அன்னை கனகவள்ளி தான். அதற்காகவே அமைதி காத்தான்.
"இப்போ என்ன ஆச்சு? அந்த பொண்ணு உன்ன பாத்துட்டா வேண்டாம்னு சொன்னா? அவ தான் அசிங்கப்பட்டு வீட்டுக்குள்ள கிடக்கணும். உனக்கென்ன நீ ஆம்பள டா!"
"ப்பா! எல்லாம் சரி தான். இந்த பொண்ணையே கூட பேசுங்க. நீங்களும் அம்மாவும் பேசி முடிவெடுங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றவன் கவரை அவர்முன் வைத்துவிட்டு வாழவந்தான் அழைக்க அழைக்க நிற்காமல் மாடிக்கு சென்றுவிட்டான்.
"அவன் அம்மாவ மாதிரியே பிடிவாதத்துக்கு மட்டும் குறையே இல்ல. என்ன ஆகி போச்சுன்னு இப்படி இருக்கான். இப்போ நான் அவகிட்ட முதல்ல இருந்து பேசணுமா? என்ன நினைச்சுட்டு இப்படியெல்லாம் பண்ணுதுங்க அம்மாவும் பையனும்" என புலம்பியபடி இருந்தவருக்கு நிச்சயம் தெரியும் தன் மனைவியைப் பற்றி.
அந்த பெண் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தே அந்த பேச்சு பேசினாரே கனகவள்ளி. பொறுமையாய் கேட்கும் மகனே பொறுமையின்றி தன் பேச்சுக்காக கூட இந்த கவரை தொடாமல் செல்கிறான் என்றால் மனைவி மட்டும்?
அதே தான் நிகழ்ந்ததும். வீட்டிற்கு வந்ததும் கவரைப் பார்த்த ஈஸ்வரி அதைப் பிரிக்க, மணமகள் விவரம் என முகவரியோடு முழு விவரம் போட்டோவின் பின்புறம்.
"அம்சமா தான் இருக்கா!" என்று சொல்லி கொஞ்சம் தயங்கி தான் ஈஸ்வரியே மருமகளை திரும்பிப் பார்த்தது.
அறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாலும் வாழவந்தான் வெளியே வரவில்லை.
"ஏத்த! அவருக்கு தான் அறிவு அப்படி போகுதுன்னா உங்களுக்கு கூடவா? உங்க பேரன் முன்னாடி இப்படி எதுவும் சொல்லி வைக்காதிங்க!" என்ற வள்ளி,
"அவரை என்னனு கேட்க மாட்டிங்களா நீங்களும்? அன்னைக்கு அவ்வளவு நடந்துருக்கு. ஒரு வாரத்துல அடுத்த போட்டோவோட வந்து நிக்காருன்னா சிவாவ இவர் என்ன நினைச்சுட்டு இருக்காரு? அவனை பார்த்தா எப்படி தெரியுது இவருக்கு?" என்று சத்தம் போட, மேல சிவாவிற்கும் கேட்டது அவர் சத்தம்.
'போச்சு! இனி அம்மாவை சமாளிக்கனும்!' நினைத்தபடி எழுந்து கீழே வந்தான்.
"இப்போ என்ன டி உனக்கு? அவனே நீங்க ரெண்டு பேரும் பாருங்க. பார்த்து பண்ணுங்கனு சொல்லிட்டான். நீ என்ன ஆடிட்டு இருக்க?" என அப்பொழுது தான் வெளிவந்திருந்தார் வாழவந்தானும்.
"என்ன?" என்று அதிர்ந்த வள்ளி,
"அவன்கிட்ட காட்டினீங்களா? ஏங்க கொஞ்சமாவது கூறு இருக்கா இல்லையா உங்களுக்கு?"
"ஏன் டி! என்ன டி வாய் நீளுது. அறிவு இருக்கா கூறு இருக்கான்னு? புருஷன்னு நினைப்பு இருக்கா இல்லையா?" ஈஸ்வரி கேட்க,
"அவருக்கு சிவாக்கு அப்பான்னு நினைப்பு இருக்கான்னு முதல்ல கேளுங்க"
"நினைப்பு இருக்குறதனால தான் நாலு பேர் நாலு விதமா பேசுறதுக்கு முன்ன அவன் கல்யாணத்த முடிக்கணும் நினைக்கேன்!" வாழவந்தான் சொல்ல,
"அப்பவும் அடுத்தவனுக்காக தான்?" என்று வள்ளி கேட்க, வந்துவிட்டான் சிவா.
"ம்மா! என்ன ம்மா இது? எப்ப பட்டு சண்டை, கூச்சல்னு..." என்று சிவா வந்து அன்னை அருகே நிற்க,
"நீ என்கிட்ட சொன்னத உன் அம்மா காது குளிர இப்ப ஒருவாட்டி சொல்லு. அப்பவாது அவளுக்கு புத்தி தெளியுதா பாப்போம்!" என்றார் வாழவந்தான்.
"அவ என்ன சொல்லிருப்பான்னு எனக்கு தெரியும். ஒருவாட்டி உங்க பேச்சை நம்பி வந்து அசிங்கப்பட்டது போதாதா? மறுபடியும் வருவானாக்கும்? அதான் நீங்களே பார்த்து பேசி முடிங்கனு சொல்லி இருப்பான்"
"இப்ப என்னங்குற? அவனுக்கு கல்யாணமே பண்ணாம கூட வச்சு பாக்க போறியா?"
"நான் அவன் அம்மா! எனக்கும் தெரியும் எப்ப என்ன பண்ணனும்னு. உங்களுக்கு முன்னாடியே அவன்கிட்ட பேசிட்டேன். அவனும் நான் சொல்றதை கேட்குறேன் சொல்லிருக்கான்!" என்று சொல்ல,
"ம்மா!" என சிவா அழைக்க,
"நான் அவனுக்கு பொண்ணு பாத்துட்டேன். அவனுக்கு பிடிச்ச பொண்ணு. பொண்ணுக்கும் சிவாவை பிடிச்சிருக்கு. நீங்க மாப்பிள்ளைக்கு அப்பாவா அவனுக்கு துணையா இருங்க அது போதும்!" என்று சொல்ல, சிவா மட்டுமின்றி அனைவருமே புரியாமல் அதிர்ந்து தான் பார்த்தனர் கனகவள்ளியை.
தொடரும்..