அத்தியாயம் 22
"சிவா! சும்மா உன் அம்மா சொன்னான்னு எல்லாம் நீ பேசாத! எதுவா இருந்தாலும் என்கிட்ட உடைச்சு பேசிரு! உனக்கு வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு. உன் அம்மாக்காக எல்லாம் பாக்காத. கல்யாணமெல்லாம் ரொம்ப பெரிய விசயம்!" என மகன் மனதை மாற்ற முடியுமா என பேசிப் பார்த்தார் வாழவந்தான்.
கூடவே ஈஸ்வரிக்கும் இதில் அவ்வளவாய் உடன்பாடு இல்லை. இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்துவிட்டு இப்படி அவர்கள் முன் சென்று நிற்க வேண்டுமா என்று தான் அவருமே நினைத்தார்.
"ஆமான்டா சிவா! எனக்கும் என்னமோ மனசுக்கு சரினு படல. இத்தனை வருசமும் உன் அம்மா அங்க பேச்சு வச்சு இருந்ததே இதுக்கு தான்ங்குற மாதிரி எனக்கு தோணுது!" என்றார் ஈஸ்வரியும்.
"அப்படியே இருந்தாலும் என்ன தப்பு பாட்டி?" சட்டென கேட்டுவிட்டான் சிவா.
தந்தையின் கேள்விக்கு பதில் சொல்வது எளிது தான் ஆனாலும் அதை தான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அவர் என்று தான் நினைத்தான்.
இப்பொழுது பாட்டியின் பேச்சும் அன்னையை குற்றம் சாட்ட, சிவாவும் பேச ஆரம்பித்துவிட்டான்.
வினோதனிடம் கருப்பையா பேசி சென்ற அன்று மாலை வள்ளி மாலா இருவரும் சந்தித்து பேசி இருக்க, அன்றிரவே கணவனிடம் கூறிவிட்டார் கனகவள்ளி.
வாழவந்தான் கனகவள்ளி புறம் திரும்பாமல் ஆரம்பமே சிவாவிடம் தான் அவன் மனதை மாற்றும் படி மெதுவாய் கூற, தந்தையை தெரியாதவனா மகன்?
"நீங்க எனக்காக பொண்ணு பார்த்தா என்னென்ன அந்த பொண்ணுகிட்ட எதிர்பார்ப்பிங்க? அதை மட்டும் இங்கேயும் பாருங்க. அப்பா மாமா சண்டை ஏன் எதுக்குன்னே புரியாம இவ்வளவு நாள் நாம பேசாம இருந்ததெல்லாம் இனி வேண்டாம்னு நான் சொல்றேன். அம்மாக்கு அவங்க அண்ணே வீடு வேணும்னு அவங்க கேட்குறாங்க. இதுல தப்பில்லயே பாட்டி!"
"சிவா! அன்னைக்கு பொண்ணு பாருங்க பிடிச்சிருந்தா பார்க்கலாம் இல்லைனா நீங்க சொன்ன பொண்ணை பார்க்கலாம்னு சொன்ன. இப்போ இந்த பொண்ணு தான்னு முடிவு பண்ணின மாதிரி சொல்ற?" வாழவந்தான் கேட்டவர்,
"உன் அம்மா சொல்லி குடுத்து நீ பேசுறியா?" என்று கேட்க,
"இது தான் ப்பா நம்ம வீட்டுல பிரச்சனையே! அம்மாவை ஏன் நீங்க தனியாவே பாக்குறீங்க? ஒதுக்கி வக்கிறீங்க? அவங்க இந்த வீட்டுல ஒருத்தங்க. அவங்க ஒரு முடிவெடுத்தா அதை ஏன் நீங்க யோசிக்க கூடாது? என் அம்மான்னா உங்களுக்கு மனைவி. அதுக்கான இடம் நீங்க குடுத்ததே இல்ல" கோபமாய் சிவா சொல்ல,
"குடுக்காமலே இவ்வளவு செய்றா!" என்று ஈஸ்வரி.
"குடுக்காததனால தான் இவ்வளவும்!" என்றான் அழுத்தமாய் சிவா.
"இப்போ என்ன உனக்கு? அந்த பொண்ணை தான் கட்டுவ! அதான?"
"அப்பா நான் பேசுறது உங்களுக்கு புரியுதா? நாம எல்லாருமே சமாதானமா போகலாம் சொல்றேன். நீங்க மாட்டேன்னு நிக்கிறீங்க!"
"அதுக்கு இந்த கல்யாணம் தான் கிடைச்சுதா உனக்கு? நீ ஒரே பையன் டா எனக்கு. நான் பார்த்து உன் கல்யாணம் நடக்கணும்னு நான் நினைக்க கூடாதா? அன்னைக்கு என்ன சொன்ன நீ?"
"இன்னைக்கும் அதை தான் சொல்றேன். அம்மாக்கு எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க வந்து பாருங்க ப்பா. பார்க்கும் முன்னயே முடிவு பண்ணாதீங்க!" என்று சொல்ல,
"நீ சின்ன பையன் டா உனக்கு என்ன தெரியும்? இவ்வளவு நாளும் பேசாம கோவமா இருந்துட்டு இப்போ போய் அந்த வீட்டுல நின்னா உன் அப்பா சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்கனு நினைச்சு பார்த்தியா நீ?" என்றார் ஈஸ்வரி.
"ம்ம்ஹும்.. உங்களுக்கெல்லாம் புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவீங்க. உங்ககிட்ட பேசுறதே வேஸ்ட் தான். ஆனாலும் சொல்றேன். அப்பா சொந்தக்காரங்கன்னு பேசுற நீங்க அம்மாக்குன்னு இருக்குற ஒரே அண்ணனை வெட்டி வைக்குறதை தான் என்னால ஏத்துக்க முடியல பாட்டி!" என்றான் இவர்களிடம் பேசி புரியவைக்க முடியவில்லையே எனும் இயலாமையோடு ஆதங்கமாய். அருகே அமைதியாய் இருந்தாலும் அத்தனை மனக் கஷ்டம் தான் கனகவள்ளிக்கு.
மாமியார் கணவர் கொடுமை என்றால் அடித்து கொடுமைப்படுத்துவது ஒரு ரகம் என்றால் ஒரே வீட்டில் ஒன்றாய் அமர்ந்து மருமகளை ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது ஒரு விதம்.
இதோ இந்த வாழவந்தான் இல்லம் போல தான். கனகவள்ளியும் பதிலுக்கு பதில் பேசிவிடுவதால் அந்த வீட்டிலாவது அவருக்கான இடத்தை அவரே தக்க வைத்திருக்கிறார். இன்னும் சில வீடுகளில் வாயில்லா பூச்சிக்களின் நிலை சொல்ல முடியாததாய் தான் உள்ளது.
"உங்க முடிவுக்கு தான் நாங்க வளைஞ்சு வரணும்?" ஈஸ்வரி.
"நீங்க பெரியவங்க பாட்டி! ஆனா நீங்க அப்பாக்கு சொல்லி குடுக்குற மாதிரி அம்மா எனக்கு சொல்லி தந்தா என்னாகும்னு நினைச்சு பாருங்க!" என்ற சிவா,
"ம்மா! அவங்க வீட்டுல கேட்டதெல்லாம் குடுத்தனுப்புங்க. என்னைக்குன்னு நல்ல நாள் அப்பா பாக்குறதா இருந்தா கேட்டு கன்ஃபார்ம் பண்ணுங்க. இல்லைனா அதையும் அவங்க வீட்டுலயே முடிவு பண்ணட்டும்!" என்றவன்,
"ஆனா அப்பா! உங்களை எதிர்த்து எதுவும் பண்ணனும் நினைக்கல. அம்மா விருப்பத்தையும் கவனியுங்கனு சொல்றேன். எந்த விதத்துலயும் அவங்க நம்மல்ல இருந்து குறைஞ்சவங்க இல்ல. உங்களுக்கே தெரியும். ஆனா வீண் பிடிவாதம். என் கல்யாணம் எனக்கு மட்டும் பிடிச்ச பொண்ணா இருக்க விரும்பல. இங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் பிடிச்சு ஒவ்வொருத்தர் சம்மதத்தோட சந்தோசத்தோட ஆசீர்வாதத்தோட நடக்கணும்னு விரும்புறேன்" என்று சொல்லி சென்றுவிட, கனகவள்ளி எதுவும் பேசாமலே உள்ளே சென்றுவிட்டார்.
கணவரின்மேல் எப்பொழுதும் இருக்கும் வருத்தம் தான். ஆனால் அத்தை ஈஸ்வரி அப்படி இல்லை. மறைமுகமாய் பல பேசி இருக்கிறார். அதையே இன்று நேராய் பேச மனம் துவண்டு போனது கனகவள்ளிக்கு.
வாழவந்தான் அடுத்த நிமிடமே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் நினைத்தது என்னவோ விட்டுப் பிடிக்கலாம் என்று தான். ஆனால் இத்தனை ஸ்திரமாய் மகன் பேசுவது உள்ளுக்குள் உறுத்தல் கொடுக்க, அவனை எதிர்க்கவும் ஏற்கவும் முடியாமல் கிளம்பிவிட்டார்.
ஒரே மகன். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை என்பதை பெருமையாய் அவர் நினைத்திருக்க, அவரின் நடத்தைகள் தான் அவனை ஒதுங்கி செல்ல வைத்தது என்பது அவருக்கு புரியவில்லை.
ஆக மகனுக்காக வேறு வழியின்றி அமைதியாய் வாழவந்தான் இருக்க, சிவாவின் புகைப்படம், ஜாதகம், அவனின் குறிப்புகள் என அனைத்தும் வினோதன் கைகளுக்கு சென்றிருந்தது அடுத்த இரண்டு நாட்களில்.
அடுத்தடுத்த நாட்கள் என ஒரு வாரமும் வள்ளி மாலாவிற்கு எதிர்பார்ப்புடன் கழிய, சிவாவிற்கு அத்தனை சுவாரஸியமாய் கடந்தது நாட்கள்.
வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அலுவலகம் வந்ததும் மறப்பதை போல அத்தனை சாதாரணமாய் தன் முன் வந்து தன் வருகையை அவனுக்கு காட்டிவிட்டு தான் அவளிடத்திற்கே செல்கிறாள் மகிமா.
"குட் மார்னிங் மாமா!" என்று வருபவளிடம் முன்பு போல அமைதியாய் இல்லாமல் பார்த்ததும் மனதில் இருந்து பூத்த மலர்ச்சியோடு புன்னகைத்து தானும் பதில் வணக்கம் கூறுபவன் அவள் கண்களை தான் ஆராய்ந்து கொண்டிருப்பான் அதிகத்திற்கும்.
காலையே வந்துவிடுவதால் மூன்று மணிக்கெல்லாம் அவன் வேலை நேரம் முடிய, மெதுவாய் தலை சாய்த்து அவள் இருப்பிடம் பார்ப்பவன் மொபைலில் அழைத்து சொல்லிவிட்டே கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அதில் அவள் முகமும் மலருதே! அதற்காகவே வாடிக்கையாக்கிக் கொண்டான் அதை.
வெள்ளிக் கிழமை மதியம் ஒரு மணி சாப்பிடும் நேரம் கார்த்திக் சிவாவை அழைக்க, "மெயில் அனுப்பிட்டு வர்றேன் கார்த்தி. நீ போ!" என்று சொல்லவும் அவன் கிளம்பிவிட்டான்.
"மாமா!" என்று அருகே வந்தவள் குரல் வேறுபாடு புரிய நிமிர்ந்து பார்த்தவன், என்னவென்று புருவம் உயர்த்தினான்.
"பிஸியா மாமா?" கூற வந்ததை விட்டு மகிமா கேட்க,
"ம்ம் கொஞ்சம்! நீ என்ன பண்ணி வச்ச? ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே!" என்றான் அவள் முகம் வைத்தே! அதில் ஆச்சர்யமாய் கண்களை விரித்தாள் அவள்.
"என்ன மகி? சாப்பிட போகலையா?" என்றான் அப்பொழுதும்.
"போனும் மாமா!" என்றவள் கார்த்திக்கின் சீட்டில் வந்து அமர்ந்து அமைதியாய் இருக்க, எதுவோ கூற வருகிறாள் என புரிந்து அவளே பேசட்டும் என அமைதியாய் வேலையை தொடர்ந்தான் சிவா.
"மாமா! நான் இன்னைக்கு ரெண்டு மணிக்கு பெர்மிஸ்ஸன் கேட்ருக்கேன்!" என்றதும் சட்டென திரும்பி அவளைக் கண்டான்.
இருவரின் ஜாதகத்தோடு வினோதன் வெளியில் கிளம்பியதாய் மாலா காலையில் கூறி இருந்தார்.
வினோதனின் பதிலுக்காக தான் வீட்டில் அனைவரோடு சிவாவும் காத்திருக்க, பெர்மிஸ்ஸன் கேட்டிருப்பதாய் சொல்லவும் அந்த ஆர்வத்தில் வீட்டிற்கு தான் அவள் செல்ல இருப்பதாய் நினைத்தான் சிவா.
"அத்தை வர சொன்னாங்களா மகி?"
"அம்மாவா! அம்மாக்கு தெரியாது!" என்றதும் புருவம் சுருக்கியவன் கேள்வியாய் பார்க்க,
"பிரண்ட்ஸ் கூட வெளில போறேன்!" என்றதும் நேராய் நன்றாய் அவள்புறம் திரும்பி முறைக்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கண்களால் கெஞ்சினாள் அவள்.
"வீட்டுக்கு தெரியாம போய்ட்டு ஹைட் பண்ணி ஸ்டேட்டஸ் வச்சு தானே உனக்கு பழக்கம்? இதென்ன புதுசா என்கிட்ட இன்ஃபார்ம் பண்ற?" என்றவன் மனம் நிஜமாய் காற்று போன பலூன் போல மாறியது.
கொஞ்சம் கூடவா திருமண விஷயம் பற்றிய ஆர்வம் அவளுக்கு இல்லை என்று நினைக்கையில் கடியாய் தான் இருந்தது சிவாவிற்கு.
"ஆமா தான்! அம்மாகிட்ட சொல்லல. ஆனா உங்ககிட்ட சொல்லாம போக முடியல!" என்ற மகிமா சொல்லில் மனம் கொஞ்சம் சமாதானம் அடைய மெல்ல அவள்புறம் திரும்பினான்.
"ஏன்?" அவன் கேட்க,
"ஏன்னா? சீக்கிரம் கிளம்பிட்டா நீங்க தான் கண்டுபுடிச்சு அம்மாகிட்ட போட்டு குடுத்துடுவீங்களே!" என்றதும் அவ்வளவு கோபம் வந்து அவன் பேச வர,
"சும்மா சும்மா! சும்மா சொன்னேன் மாமா!" என கண் சிமிட்டியவள்,
"நிஜமாவே உங்ககிட்ட சொல்லாம போக தோணல. எப்படியும் ஃபியூச்சர்ல இது மாதிரி பிரண்ட்ஸ் கூப்பிட்டா உங்ககிட்ட தானே கேட்கணும்? அதான் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டு போக தோணுச்சு" என்றாள் அவன் என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்போடு.
"ம்ம் ஐஸ் வைக்குற நீ!" சிரித்தபடி தான் கூறினான். இவ்வளவுக்காவது தன்னை யோசிக்கிறாளே என்று தான் தோன்றியது அவனுக்கு.
"அப்போ உங்களுக்கு ஓகே தானே மாமா? நான் போலாமில்ல?"
"பார்த்து போய்ட்டு வா. அத்தைக்கும் சொல்லிடு!"
"ஃபர்ஸ்ட் ஒன் அக்ஸப்டட். செகண்ட் ஒன்..." என்று யோசித்தவள்,
"சரி உங்களுக்காக ஹைட் பண்ணாம ஸ்டேட்டஸ் வைக்குறேன். டீல்?"
"வாலு! போய் சாப்பிடு முதல்ல! எங்க போனாலும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு போதும். ஓகே?" என்று சொல்ல,
"சோ ஸ்வீட் மாமா!" துள்ளி குதித்து எழுந்து சென்றவளை பார்வையால் நேசித்து நின்றவன் பிரியம் அவளை அடையக் காத்திருந்தது.
தொடரும்..
"சிவா! சும்மா உன் அம்மா சொன்னான்னு எல்லாம் நீ பேசாத! எதுவா இருந்தாலும் என்கிட்ட உடைச்சு பேசிரு! உனக்கு வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லு. உன் அம்மாக்காக எல்லாம் பாக்காத. கல்யாணமெல்லாம் ரொம்ப பெரிய விசயம்!" என மகன் மனதை மாற்ற முடியுமா என பேசிப் பார்த்தார் வாழவந்தான்.
கூடவே ஈஸ்வரிக்கும் இதில் அவ்வளவாய் உடன்பாடு இல்லை. இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்துவிட்டு இப்படி அவர்கள் முன் சென்று நிற்க வேண்டுமா என்று தான் அவருமே நினைத்தார்.
"ஆமான்டா சிவா! எனக்கும் என்னமோ மனசுக்கு சரினு படல. இத்தனை வருசமும் உன் அம்மா அங்க பேச்சு வச்சு இருந்ததே இதுக்கு தான்ங்குற மாதிரி எனக்கு தோணுது!" என்றார் ஈஸ்வரியும்.
"அப்படியே இருந்தாலும் என்ன தப்பு பாட்டி?" சட்டென கேட்டுவிட்டான் சிவா.
தந்தையின் கேள்விக்கு பதில் சொல்வது எளிது தான் ஆனாலும் அதை தான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அவர் என்று தான் நினைத்தான்.
இப்பொழுது பாட்டியின் பேச்சும் அன்னையை குற்றம் சாட்ட, சிவாவும் பேச ஆரம்பித்துவிட்டான்.
வினோதனிடம் கருப்பையா பேசி சென்ற அன்று மாலை வள்ளி மாலா இருவரும் சந்தித்து பேசி இருக்க, அன்றிரவே கணவனிடம் கூறிவிட்டார் கனகவள்ளி.
வாழவந்தான் கனகவள்ளி புறம் திரும்பாமல் ஆரம்பமே சிவாவிடம் தான் அவன் மனதை மாற்றும் படி மெதுவாய் கூற, தந்தையை தெரியாதவனா மகன்?
"நீங்க எனக்காக பொண்ணு பார்த்தா என்னென்ன அந்த பொண்ணுகிட்ட எதிர்பார்ப்பிங்க? அதை மட்டும் இங்கேயும் பாருங்க. அப்பா மாமா சண்டை ஏன் எதுக்குன்னே புரியாம இவ்வளவு நாள் நாம பேசாம இருந்ததெல்லாம் இனி வேண்டாம்னு நான் சொல்றேன். அம்மாக்கு அவங்க அண்ணே வீடு வேணும்னு அவங்க கேட்குறாங்க. இதுல தப்பில்லயே பாட்டி!"
"சிவா! அன்னைக்கு பொண்ணு பாருங்க பிடிச்சிருந்தா பார்க்கலாம் இல்லைனா நீங்க சொன்ன பொண்ணை பார்க்கலாம்னு சொன்ன. இப்போ இந்த பொண்ணு தான்னு முடிவு பண்ணின மாதிரி சொல்ற?" வாழவந்தான் கேட்டவர்,
"உன் அம்மா சொல்லி குடுத்து நீ பேசுறியா?" என்று கேட்க,
"இது தான் ப்பா நம்ம வீட்டுல பிரச்சனையே! அம்மாவை ஏன் நீங்க தனியாவே பாக்குறீங்க? ஒதுக்கி வக்கிறீங்க? அவங்க இந்த வீட்டுல ஒருத்தங்க. அவங்க ஒரு முடிவெடுத்தா அதை ஏன் நீங்க யோசிக்க கூடாது? என் அம்மான்னா உங்களுக்கு மனைவி. அதுக்கான இடம் நீங்க குடுத்ததே இல்ல" கோபமாய் சிவா சொல்ல,
"குடுக்காமலே இவ்வளவு செய்றா!" என்று ஈஸ்வரி.
"குடுக்காததனால தான் இவ்வளவும்!" என்றான் அழுத்தமாய் சிவா.
"இப்போ என்ன உனக்கு? அந்த பொண்ணை தான் கட்டுவ! அதான?"
"அப்பா நான் பேசுறது உங்களுக்கு புரியுதா? நாம எல்லாருமே சமாதானமா போகலாம் சொல்றேன். நீங்க மாட்டேன்னு நிக்கிறீங்க!"
"அதுக்கு இந்த கல்யாணம் தான் கிடைச்சுதா உனக்கு? நீ ஒரே பையன் டா எனக்கு. நான் பார்த்து உன் கல்யாணம் நடக்கணும்னு நான் நினைக்க கூடாதா? அன்னைக்கு என்ன சொன்ன நீ?"
"இன்னைக்கும் அதை தான் சொல்றேன். அம்மாக்கு எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க வந்து பாருங்க ப்பா. பார்க்கும் முன்னயே முடிவு பண்ணாதீங்க!" என்று சொல்ல,
"நீ சின்ன பையன் டா உனக்கு என்ன தெரியும்? இவ்வளவு நாளும் பேசாம கோவமா இருந்துட்டு இப்போ போய் அந்த வீட்டுல நின்னா உன் அப்பா சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்கனு நினைச்சு பார்த்தியா நீ?" என்றார் ஈஸ்வரி.
"ம்ம்ஹும்.. உங்களுக்கெல்லாம் புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவீங்க. உங்ககிட்ட பேசுறதே வேஸ்ட் தான். ஆனாலும் சொல்றேன். அப்பா சொந்தக்காரங்கன்னு பேசுற நீங்க அம்மாக்குன்னு இருக்குற ஒரே அண்ணனை வெட்டி வைக்குறதை தான் என்னால ஏத்துக்க முடியல பாட்டி!" என்றான் இவர்களிடம் பேசி புரியவைக்க முடியவில்லையே எனும் இயலாமையோடு ஆதங்கமாய். அருகே அமைதியாய் இருந்தாலும் அத்தனை மனக் கஷ்டம் தான் கனகவள்ளிக்கு.
மாமியார் கணவர் கொடுமை என்றால் அடித்து கொடுமைப்படுத்துவது ஒரு ரகம் என்றால் ஒரே வீட்டில் ஒன்றாய் அமர்ந்து மருமகளை ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது ஒரு விதம்.
இதோ இந்த வாழவந்தான் இல்லம் போல தான். கனகவள்ளியும் பதிலுக்கு பதில் பேசிவிடுவதால் அந்த வீட்டிலாவது அவருக்கான இடத்தை அவரே தக்க வைத்திருக்கிறார். இன்னும் சில வீடுகளில் வாயில்லா பூச்சிக்களின் நிலை சொல்ல முடியாததாய் தான் உள்ளது.
"உங்க முடிவுக்கு தான் நாங்க வளைஞ்சு வரணும்?" ஈஸ்வரி.
"நீங்க பெரியவங்க பாட்டி! ஆனா நீங்க அப்பாக்கு சொல்லி குடுக்குற மாதிரி அம்மா எனக்கு சொல்லி தந்தா என்னாகும்னு நினைச்சு பாருங்க!" என்ற சிவா,
"ம்மா! அவங்க வீட்டுல கேட்டதெல்லாம் குடுத்தனுப்புங்க. என்னைக்குன்னு நல்ல நாள் அப்பா பாக்குறதா இருந்தா கேட்டு கன்ஃபார்ம் பண்ணுங்க. இல்லைனா அதையும் அவங்க வீட்டுலயே முடிவு பண்ணட்டும்!" என்றவன்,
"ஆனா அப்பா! உங்களை எதிர்த்து எதுவும் பண்ணனும் நினைக்கல. அம்மா விருப்பத்தையும் கவனியுங்கனு சொல்றேன். எந்த விதத்துலயும் அவங்க நம்மல்ல இருந்து குறைஞ்சவங்க இல்ல. உங்களுக்கே தெரியும். ஆனா வீண் பிடிவாதம். என் கல்யாணம் எனக்கு மட்டும் பிடிச்ச பொண்ணா இருக்க விரும்பல. இங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் பிடிச்சு ஒவ்வொருத்தர் சம்மதத்தோட சந்தோசத்தோட ஆசீர்வாதத்தோட நடக்கணும்னு விரும்புறேன்" என்று சொல்லி சென்றுவிட, கனகவள்ளி எதுவும் பேசாமலே உள்ளே சென்றுவிட்டார்.
கணவரின்மேல் எப்பொழுதும் இருக்கும் வருத்தம் தான். ஆனால் அத்தை ஈஸ்வரி அப்படி இல்லை. மறைமுகமாய் பல பேசி இருக்கிறார். அதையே இன்று நேராய் பேச மனம் துவண்டு போனது கனகவள்ளிக்கு.
வாழவந்தான் அடுத்த நிமிடமே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அவர் நினைத்தது என்னவோ விட்டுப் பிடிக்கலாம் என்று தான். ஆனால் இத்தனை ஸ்திரமாய் மகன் பேசுவது உள்ளுக்குள் உறுத்தல் கொடுக்க, அவனை எதிர்க்கவும் ஏற்கவும் முடியாமல் கிளம்பிவிட்டார்.
ஒரே மகன். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை என்பதை பெருமையாய் அவர் நினைத்திருக்க, அவரின் நடத்தைகள் தான் அவனை ஒதுங்கி செல்ல வைத்தது என்பது அவருக்கு புரியவில்லை.
ஆக மகனுக்காக வேறு வழியின்றி அமைதியாய் வாழவந்தான் இருக்க, சிவாவின் புகைப்படம், ஜாதகம், அவனின் குறிப்புகள் என அனைத்தும் வினோதன் கைகளுக்கு சென்றிருந்தது அடுத்த இரண்டு நாட்களில்.
அடுத்தடுத்த நாட்கள் என ஒரு வாரமும் வள்ளி மாலாவிற்கு எதிர்பார்ப்புடன் கழிய, சிவாவிற்கு அத்தனை சுவாரஸியமாய் கடந்தது நாட்கள்.
வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அலுவலகம் வந்ததும் மறப்பதை போல அத்தனை சாதாரணமாய் தன் முன் வந்து தன் வருகையை அவனுக்கு காட்டிவிட்டு தான் அவளிடத்திற்கே செல்கிறாள் மகிமா.
"குட் மார்னிங் மாமா!" என்று வருபவளிடம் முன்பு போல அமைதியாய் இல்லாமல் பார்த்ததும் மனதில் இருந்து பூத்த மலர்ச்சியோடு புன்னகைத்து தானும் பதில் வணக்கம் கூறுபவன் அவள் கண்களை தான் ஆராய்ந்து கொண்டிருப்பான் அதிகத்திற்கும்.
காலையே வந்துவிடுவதால் மூன்று மணிக்கெல்லாம் அவன் வேலை நேரம் முடிய, மெதுவாய் தலை சாய்த்து அவள் இருப்பிடம் பார்ப்பவன் மொபைலில் அழைத்து சொல்லிவிட்டே கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அதில் அவள் முகமும் மலருதே! அதற்காகவே வாடிக்கையாக்கிக் கொண்டான் அதை.
வெள்ளிக் கிழமை மதியம் ஒரு மணி சாப்பிடும் நேரம் கார்த்திக் சிவாவை அழைக்க, "மெயில் அனுப்பிட்டு வர்றேன் கார்த்தி. நீ போ!" என்று சொல்லவும் அவன் கிளம்பிவிட்டான்.
"மாமா!" என்று அருகே வந்தவள் குரல் வேறுபாடு புரிய நிமிர்ந்து பார்த்தவன், என்னவென்று புருவம் உயர்த்தினான்.
"பிஸியா மாமா?" கூற வந்ததை விட்டு மகிமா கேட்க,
"ம்ம் கொஞ்சம்! நீ என்ன பண்ணி வச்ச? ஏதோ திருட்டுத்தனம் தெரியுதே!" என்றான் அவள் முகம் வைத்தே! அதில் ஆச்சர்யமாய் கண்களை விரித்தாள் அவள்.
"என்ன மகி? சாப்பிட போகலையா?" என்றான் அப்பொழுதும்.
"போனும் மாமா!" என்றவள் கார்த்திக்கின் சீட்டில் வந்து அமர்ந்து அமைதியாய் இருக்க, எதுவோ கூற வருகிறாள் என புரிந்து அவளே பேசட்டும் என அமைதியாய் வேலையை தொடர்ந்தான் சிவா.
"மாமா! நான் இன்னைக்கு ரெண்டு மணிக்கு பெர்மிஸ்ஸன் கேட்ருக்கேன்!" என்றதும் சட்டென திரும்பி அவளைக் கண்டான்.
இருவரின் ஜாதகத்தோடு வினோதன் வெளியில் கிளம்பியதாய் மாலா காலையில் கூறி இருந்தார்.
வினோதனின் பதிலுக்காக தான் வீட்டில் அனைவரோடு சிவாவும் காத்திருக்க, பெர்மிஸ்ஸன் கேட்டிருப்பதாய் சொல்லவும் அந்த ஆர்வத்தில் வீட்டிற்கு தான் அவள் செல்ல இருப்பதாய் நினைத்தான் சிவா.
"அத்தை வர சொன்னாங்களா மகி?"
"அம்மாவா! அம்மாக்கு தெரியாது!" என்றதும் புருவம் சுருக்கியவன் கேள்வியாய் பார்க்க,
"பிரண்ட்ஸ் கூட வெளில போறேன்!" என்றதும் நேராய் நன்றாய் அவள்புறம் திரும்பி முறைக்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கண்களால் கெஞ்சினாள் அவள்.
"வீட்டுக்கு தெரியாம போய்ட்டு ஹைட் பண்ணி ஸ்டேட்டஸ் வச்சு தானே உனக்கு பழக்கம்? இதென்ன புதுசா என்கிட்ட இன்ஃபார்ம் பண்ற?" என்றவன் மனம் நிஜமாய் காற்று போன பலூன் போல மாறியது.
கொஞ்சம் கூடவா திருமண விஷயம் பற்றிய ஆர்வம் அவளுக்கு இல்லை என்று நினைக்கையில் கடியாய் தான் இருந்தது சிவாவிற்கு.
"ஆமா தான்! அம்மாகிட்ட சொல்லல. ஆனா உங்ககிட்ட சொல்லாம போக முடியல!" என்ற மகிமா சொல்லில் மனம் கொஞ்சம் சமாதானம் அடைய மெல்ல அவள்புறம் திரும்பினான்.
"ஏன்?" அவன் கேட்க,
"ஏன்னா? சீக்கிரம் கிளம்பிட்டா நீங்க தான் கண்டுபுடிச்சு அம்மாகிட்ட போட்டு குடுத்துடுவீங்களே!" என்றதும் அவ்வளவு கோபம் வந்து அவன் பேச வர,
"சும்மா சும்மா! சும்மா சொன்னேன் மாமா!" என கண் சிமிட்டியவள்,
"நிஜமாவே உங்ககிட்ட சொல்லாம போக தோணல. எப்படியும் ஃபியூச்சர்ல இது மாதிரி பிரண்ட்ஸ் கூப்பிட்டா உங்ககிட்ட தானே கேட்கணும்? அதான் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டு போக தோணுச்சு" என்றாள் அவன் என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்போடு.
"ம்ம் ஐஸ் வைக்குற நீ!" சிரித்தபடி தான் கூறினான். இவ்வளவுக்காவது தன்னை யோசிக்கிறாளே என்று தான் தோன்றியது அவனுக்கு.
"அப்போ உங்களுக்கு ஓகே தானே மாமா? நான் போலாமில்ல?"
"பார்த்து போய்ட்டு வா. அத்தைக்கும் சொல்லிடு!"
"ஃபர்ஸ்ட் ஒன் அக்ஸப்டட். செகண்ட் ஒன்..." என்று யோசித்தவள்,
"சரி உங்களுக்காக ஹைட் பண்ணாம ஸ்டேட்டஸ் வைக்குறேன். டீல்?"
"வாலு! போய் சாப்பிடு முதல்ல! எங்க போனாலும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு போதும். ஓகே?" என்று சொல்ல,
"சோ ஸ்வீட் மாமா!" துள்ளி குதித்து எழுந்து சென்றவளை பார்வையால் நேசித்து நின்றவன் பிரியம் அவளை அடையக் காத்திருந்தது.
தொடரும்..