அத்தியாயம் 36
வனிதா சொல்லி சென்ற பின் அந்த புடவையை கையிலெடுத்த பின் தான் தெரிந்தது அது தானும் அவனுமாய் சென்று எடுத்த புடவை என்று.
அன்று என்னென்ன பேசினோம் என்று நினைக்க நினைக்க முகமெல்லாம் சிவந்துவிட்டது மகிமாவிற்கு.
'இதுக்கு மேட்சிங் ஷர்ட் எடுக்கலாமா மாமா?' தான் கேட்டதை நினைத்து இப்பொழுது அவ்வளவு வெட்கம். 'பட்டு வேண்டாம் அம்மு!' என்ற சொல் காதுக்குள் கேட்க, "அச்சோ!" என்று காதை மூடிக் கொண்டவள் எத்தனை நேரம் நின்றாளோ, தானே தெளிந்து தயாராகி வெளிவர வள்ளியை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அதிகமாய் சோதிக்காமல், "எல்லாம் அங்கேயே இருக்கு அம்மு! தண்ணி மட்டும் கொண்டு போ!" என்று வள்ளி கொடுக்க, வனிதா கூறிய நியாபகத்தில் அத்தையிடம் ஆசி வாங்கிக் கொண்டாள்.
அறையின் உள்ளே வந்து தண்ணீரை அவள் கீழே வைக்கும் நேரம் சிவா கதவை மூடி தாழ்பாளை இட, அவ்வளவு தான் அவனிடமே சென்று தன் வெட்கத்தை மறைக்க முயன்றிருந்தாள்.
"அச்சோ மாமா!" என்று அப்பொழுது தான் நிகழ்ந்ததை போல மீண்டுமாய் அன்று புடவை எடுத்த தின நியாபகத்தில் சிவந்தவள் அவன் தோளினில் அத்தனை அடி வைத்தாள்.
"டேய் டேய்!" என்று புன்னகைத்தவனும் சில நொடிகள் விட்டு தனக்கு முன் இழுத்துக் கொள்ளப்பார்க்க, ம்ம்ஹும்ம் 'வருவேனா!' என்றவள் அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டாள் முகத்தை மறைத்து.
"இது தான்னு நான் நினைக்குறதை எல்லாம் அப்படி இல்லைனு நீ ஒண்ணு பண்ணிட்டு இருக்குற அம்மு!" என்று புன்னகையுடன் கூறியவன்,
"மத்த விஷயமெல்லாம் ஓகே! ஆனா இந்த ரூம்குள்ள வந்து நீ என்ன மாதிரி பிரீஸ் ஆக போறனு நான் நினச்சேன். ஆனா நீ!" என்றவன் சொல்லில் இன்னமும் கெட்டியாய் அவன் தோள்களைப் பற்றினாள்.
"முன்னாடி வா அம்மு! உன் ஃபேஸ் தெரியல!" என்றவன் உற்சாகம் பல மடங்காகி இருந்தது அவள் செயல்களில்.
"ம்ம்ஹும் மாட்டேன் மாட்டேன்!" என்றவளுக்கு இன்னும் அந்த நிகழ்வுகள் எல்லாம் கண்ணுக்குள் நின்றது.
"ஏன் மாமா இப்படி பண்ணீங்க?" என்றவள் மீண்டுமாய் வலிக்க அடிக்க, அந்த நேரத்தில் அவளை தனக்கு முன் கொண்டு வந்திருந்தான்.
"என்னனு சொல்லு அம்மு!" என்று அவள் முகம் பார்க்க, அவளால் அது முடியவில்லையே.
"டேய்!" என்று சத்தமாய் சிரித்தான் அவள் வெட்கத்தில்.
"அச்சோ போங்க போங்க!" என இன்னுமாய் அடிகள்.
"கேட்டேனே எதுக்காக சாரீனு! நான் வேற! மேட்சிங் ஷர்ட்... ஃபன்க்ஷன்னு..." என்றவள் கண்களை இறுக மூடி, அவனை ஒருபக்கமாய் சாய்ந்து கொள்ள போக, மீண்டுமாய் அமைதியான கள்ளப் புன்னகையோடு அவளை தன்முன் இழுத்துக் கொண்டான்.
"ஆமால்ல! மேட்சிங் ஷர்ட் எடுத்திருக்கலாம்ல?" என இன்னுமே அவளை தவிக்கவிட்டான்.
"மாமா மாமா! ப்ளீஸ் மாமா!" என்றவள் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டு அவன் கேளாமலே அவன் எதிர்பாராமலே அவனை நெருங்கி இருக்க, தான் இன்னுமே நெருங்கி அவளுக்கு உணர வைத்தான்.
மொத்தமாய் மௌனம் கொண்டுவிட்டது பெண் மனம் அந்த நெருக்கத்தில்.
"அம்மு!" என்ற அழைப்பிற்கு பேச்சின்றி போன பெண்ணில் சிரித்துக் கொண்டவன்,
"சீரியஸா உன்னை வச்சுட்டு என்ன பண்ண போறேனோனு நினச்சேன் டா!" என்று சொல்லி புன்னகையை தனக்குள் மென்றவன், அவளை திருப்பிவிட்டு பின்பக்கமாய் நின்று அணைத்து அழைத்து வர, அந்த அணைப்பிலும் கழுத்தின் ஓரம் எழுந்த குறுகுறுப்பிலும் நெகிழ்ந்தபடி நடந்தவள் கண்களை மூடி இருந்தாள்.
"கண்ணை திற அம்மு!" காதோடு உரசி கேட்ட குரலில் மெதுவாய் மகிமா விழி திறக்க, அகம் நிறைந்து போனது தான் பார்த்த காட்சியில்.
அவள் தோளில் தன் தலையை தாங்கி நின்றவன் கைகள் அவளை இடைமுழுதும் வளைத்திருக்க, இருவரின் முகமும் நிறைந்திருந்த மலர்ச்சியோடு அந்த அறையில் இருந்த முழுநீளக் கண்ணாடியில் பிரதிபலிக்க, பார்க்க பார்க்க தெவிட்டவில்லை இருவருக்குமே!
"எப்படி இருக்கு டா?" என்றதற்கும் வார்த்தைகள் இல்லை அவளிடம்.
"புடிச்சிருக்கா?" என்ற ரகசிய குரல் உயிரை மீட்டி சென்றது.
"ம்ம்ம் ரொம்ப!"
"ஹ்ம்!" என்றவன் அதே வாக்கில் நின்று ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் இருந்த தனது அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்ட, புரிந்தவள் புன்னகையோடு புகைப்படத்தினை பதிவு செய்தாள்.
"இப்படி தான் இருப்போம் நீயும் நானும் நடந்து வரும் போது!" என்றவன் அவள் நெற்றி முட்ட, காரணம் அப்பொழுது தான் புரிந்து விழி விரித்து அவனைக் கண்டாள்.
"அன்னைக்கு நீ கேட்கும் போதே தோணுச்சு. இதோ இப்படி அணைச்சுக்கணும்னு!" என்றவன் கழுத்தினில் முகம் புதைக்க, கண்களை மூடிக் கொண்டாள்.
"இனி கேட்பியா என்ன?" என்றவன் கேள்விக்கு விழி திறந்து அவனைக் கண்ணாடியில் காண,
"அடுத்தவங்க கேள்வி வெறும் கேள்வி மட்டும் தான். ஆனா அதுக்கான பதில் நம்மோட வாழ்க்கை. அதுக்குள்ள யாரையும் வர விட கூடாது அம்மு! அன்னைக்கு நீ பேசியிருக்கணும் அவங்ககிட்ட. என் மாமாக்கு நான் மட்டும் தான் பொருத்தம்னு என்னை கூட்டிட்டு போய் அவங்க முன்னாடி நிறுத்தி இருக்கனும் அம்மு! அதைவிட்டுட்டு என்கிட்ட கேட்டியே!" என்று முறைத்தவன்,
"தப்பு அம்மு! இது லாஸ்ட் வார்னிங்! யாரா இருந்தாலும் உனக்கும் எனக்கும் நடுவில வர விடாத! நம்ம பந்தம் முடிவான நொடில இருந்து என் உயிர் நீ! எங்கயும் யார் முன்னயும் நீ கலங்கி நிக்கிறதை நான் பார்க்க கூடாது!"
"மாமா!" என்றவள் கண்கள் கலங்கிவிட, தன்புறமாய் இழுத்து அவளை திருப்பிக் கொண்டவன் தன்னில் சாய்த்துக் கொண்டான்.
"அன்னைக்கே இப்படி எனக்குள்ள உன்னை வச்சு சொல்லிருப்பேன்! ஆனா அன்னைக்கு குட்டிப் பொண்ணா இருந்தியே!" என்று சொல்லி குறும்பாய் புன்னகைக்க,
"மாமா!" என்ற சிணுங்கல் இன்னுமே பித்துக்குள்ளாக்கியது ஆடவனை.
"மகி!" என்றவன் அணைப்பின் இறுக்கத்தை அதிகரிக்க, மூச்சுக்கு தவிக்கும் நிலை மகிமாவுடையது.
உடல் அதிர புதுவித உணர்வில் தடுமாறியவள் மனம் முழுதும் சொல்ல முடியாத ஏக்கங்கள் ஆட்டிப் படைக்க, அவளின் வெளிப்படையான அதிர்வில் தான் சட்டென விலகினான் சிவா.
"ப்ச்!" என்று திரும்பிக் கொண்டவன் பின்னந்தலையை கோதிக் கொண்டு தன்னைத் தானே திட்டிக் கொண்டான் முணுமுணுவென்று.
அவள் மூச்சுக் காற்றின் வெம்மையும் வேகமும் என தன் வசமிழந்து நின்றவன் அவளின் நடுக்கத்தில் மொத்தமாய் நிதானத்தை அடைந்திருந்தான்.
"சாரி மாமா!" என்று அடுத்த நொடியே அவன்முன் தானே சென்று நின்று கொண்டாள் மகிமா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.
"ஹே அம்மு!" என்றவன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டு சென்று அமர, சில நொடிகள் மௌனம் மட்டுமே அங்கே.
கோர்த்த கைகளை கெட்டியாய் அவள் பிடித்திருக்க, அதில் தான் பார்வை இருவரிடமும்.
"ஏதாச்சும் வேணுமா மாமா?"
நீண்ட மௌனத்தின் தவிப்பினை தாள முடியாமல் தானே முன் வந்தாள் மகிமா.
"ஹ்ம்ம்?" என்றவன் கண்களை சுருக்கி அவளை கேள்வியாய் பார்க்க,
"பால்?" என்று தயங்கியபடி அங்கிருந்ததைக் காட்ட, இன்னுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது சிவாவிற்கு.
"மாமா! கிண்டல் பண்றிங்க நீங்க!" என்றவளின் சிணுங்கல் மொழிகளும் பொய் கோபமும் என அவளை ரசனையாய் கண்டவன் பார்வை உரிமையாய் நீண்டிருக்க,
"அச்சோ! ம்ம்ஹும்ம்!" என்றவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லையே என்ற கவலை.
"ஓகே! ரிலாக்ஸ்! ஹ்ம் சொல்லு!"
"ஹான்!"
"பேசு"
"என்ன மாமா?"
"எதாவது!"
"வேண்டாம்! இன்னைக்கெல்லாம் நீங்க சிரிக்குறிங்க நான் பேசினா!"
"அப்படியா!"
"மாமா!"
"எப்படி அம்மு உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க தோணுச்சு?"
நிஜமாய் இந்த நிமிடம் அந்த கேள்வி தானாய் அவனுக்குள் தோன்றி இருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது கூறி இருந்தால் நம்பி இருப்பானா என்ன? ஆனால் நடந்ததே!.
"புதுசா கேட்குற மாதிரி கேட்குறீங்க!" என்றாள் அவன் கைகளோடு விளையாடியபடி.
"புதுசா தான் இருக்கு அம்மு! ப்ச்!" என்றவன்,
"ஜஸ்ட் அ மினிட்!" என்றதும் என்னவென்று பார்க்கும் நேரம் எதிர்பாரா நேரமாய் ஒரு இதழணைப்பு.
அதிர்ந்து இமை விரித்தவள் பின் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொள்ள, நிமிடம் தாண்டி நீட்டித்திருந்தான்.
மூச்சுவாங்க இடைவெளி கொடுத்து தனித்தவன் முகம் காணவே அத்தனை அத்தனை கூச்சம் பெண்ணுக்கு.
இப்படி ஒரு நாள் இரவை பற்றி கனவிலும் சுத்தமாய் நினைத்ததில்லை. அதே இந்த ஒரு நாள் பற்றி இன்று மாலைக்கு பின் அடிவயிற்றில் இருந்து ஒரு உணர்வு பாய்ந்து முகத்தில் வெட்கத்தையும் கூச்சத்தையும் பரவ செய்திருக்க, சிவா என்றவனின் இந்த ஒரு பக்கத்தை எல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை.
தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தவன் முகம் பார்க்காமல் வாங்கிக் குடித்து தாகத்தை தணிக்க முயன்றாள்.
"மெதுவா டி!" என்றவன் குரல் ஏன் இத்தனை கரகரத்து வர வேண்டும். அந்த குரல் கூறும் செய்தியில் மயக்கம் வரும் போலிருந்தது மகிமாவிற்கு. அப்பட்டமாய் ரகசிய புன்னகை விரிந்தது சிவாவின் இதழ்களில்.
மனம் எங்கும் அலறல் சத்தம். என்ன நடக்கும் என்ற எண்ணம் பலமாய் மூச்சு வாங்க வைக்க, அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தாலும் புரிந்தாலும் முதலில் தன்னை தானே ஒருநிலைக்கு கொண்டு வர நினைத்தவள்,
"மாமா!" என்று தீர்க்கமாய் அவன் முகம் பார்க்க, அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் சுவாரசியமாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன்,
என்னவென்று கேட்காமல் புருவம் உயர்த்த, தலையை மேலும் உலுக்கிக் கொண்டு எழுந்துவிட்டாள்.
"நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் திரும்பிக்கோங்க!" என்றவள் சொல்லில்,
"ஏன் அம்மு! எதாவது பண்ண போறியா?" என்றவன் எதை குறிப்பிடுகிறான் என்று தான் தெரியவவில்லையே தவிர, அவன் சாதாரணமாய் கூறவில்லை என்று மட்டும் நன்றாய் புரிந்தது அவனது உல்லாச குரலில்.
"மாமா..." என்று மேலும் சத்தமிட்டு கண்களை மூடிக் கொண்டவள்,
"திரும்புங்க சொன்னேன்!" என்ற சொல்லுக்கு அதற்குமேல் அவளை படுத்தாமல் திரும்பிக் கொண்டான் புன்னகையுடன்.
'மகி! ஒண்ணுமில்ல!' என்றவள் முணுமுணு சத்ததிற்கு நெற்றி ஓரம் நீவிக் கொண்டவனுக்கு அத்தனை சிரிப்பு.
"எவ்ளோ நேரம் டி!" என்று கேட்க,
"மாமா!" என்று அழைக்க,
"ம்ம்! திரும்பவா?" என்றான்.
"அவ்ளோ நல்லவங்களா?"
"ஹ்ம்ம்ம் ஏன் கேட்க மாட்ட?" என்றதில் அவள் சத்தமில்லாமல் புன்னகைக்க,
"ஓய்!" என்றான்.
"மாமா! எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு!" என்ற சொல்லில் சட்டென திரும்பியவன்,
"உன்னை..." என்று வேகமாய் அருகில் வர,
"மாமா மாமா மாமா!..." என்று ஓடினாள் அவனுக்கு அகப்படாமல்.
"இம்சை பண்ணிட்டு... தூக்கம் வேற வருதா.. அதுவும்.... இவ்வளவுக்கு அப்புறமும்..." என்றவனும் விடுவேனா என தூரத்த, அதற்குமேல் முடியாமல் அமர்ந்துவிட்டவள் அருகில் அமர்ந்தவன் அவளின் இடையோடு கைகொடுத்து இன்னும் அவளை தன்னில் நெருக்கிக் கொள்ள, இருவருக்குமே மூச்சு வாங்கியது.
"எனக்கு ஆட்டம் காட்டுற நீ?" என்றவன் விரல்கள் தன் ஊர்வலத்தைத் தொடர, அது பலமாய் தாக்கியது பெண்ணை.
"ரொம்ப மயங்கிட்டேன் அம்மு!" என்றவன் முகம் அவளின் முகத்தருகே வர, பார்வையை திருப்பியவள் கன்னத்தில் தான் அச்சாரம் விழுந்தது.
"வெயிட் பண்ணணுமா?" என்று அவனே கேட்க, பதில் இல்லை அவளிடம்.
"ம்ம்ஹும்ம் முடியாது!" அவனே சொல்லிக் கொண்டான்.
"உனக்கு தான் தெரியுமே! எனக்கு நீன்னா..." என்றவன் உதடுகளை விரல் கொண்டு அவள் மூட, இவன் விரல்கள் அழுத்தமாய் பதிந்தது அவளிடையில்.
"பேசாதீங்க!"
"வேண்டாமா?"
"மாமா!"
"சொல்லு!" என்றவன் ஆக்கிரமிப்புகளில் பெண்ணவள் தொலைந்து போய் அவனில் மாலையாகி இருந்தாள்.
வெள்ளையான இரவுகளில் சாரலாய் நனைத்தவன் தன் கொள்ளைக் கனவுகளையும் கொட்டித் தீர்க்க, அவன் அணுகுமுறையில் பெண் சிக்கிக் கொண்டாள் மீள முடியாமல்.
குளிராய் ஒரு வெம்மை அங்கே தீமூட்ட அவளை ஆராதித்துக் கொண்டாடி களைத்தான்.
மாமாவென்ற ஓசையே சங்கீதமாய் ஒலிக்க, அவளின் மென் சத்தங்கள் அவனுக்கு இன்னமும் கிறக்கம் கொள்வதாய் அமைந்தது.
"எடுத்துட்டே இருக்கேன்! நீ குடுக்க வேண்டாமா மகி?" என்றவன் பேச்சில் அவனை இழுத்துக் கொண்டவள் உயிரில் கலந்தான் கணவனானவன்.
தொடரும்..
வனிதா சொல்லி சென்ற பின் அந்த புடவையை கையிலெடுத்த பின் தான் தெரிந்தது அது தானும் அவனுமாய் சென்று எடுத்த புடவை என்று.
அன்று என்னென்ன பேசினோம் என்று நினைக்க நினைக்க முகமெல்லாம் சிவந்துவிட்டது மகிமாவிற்கு.
'இதுக்கு மேட்சிங் ஷர்ட் எடுக்கலாமா மாமா?' தான் கேட்டதை நினைத்து இப்பொழுது அவ்வளவு வெட்கம். 'பட்டு வேண்டாம் அம்மு!' என்ற சொல் காதுக்குள் கேட்க, "அச்சோ!" என்று காதை மூடிக் கொண்டவள் எத்தனை நேரம் நின்றாளோ, தானே தெளிந்து தயாராகி வெளிவர வள்ளியை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அதிகமாய் சோதிக்காமல், "எல்லாம் அங்கேயே இருக்கு அம்மு! தண்ணி மட்டும் கொண்டு போ!" என்று வள்ளி கொடுக்க, வனிதா கூறிய நியாபகத்தில் அத்தையிடம் ஆசி வாங்கிக் கொண்டாள்.
அறையின் உள்ளே வந்து தண்ணீரை அவள் கீழே வைக்கும் நேரம் சிவா கதவை மூடி தாழ்பாளை இட, அவ்வளவு தான் அவனிடமே சென்று தன் வெட்கத்தை மறைக்க முயன்றிருந்தாள்.
"அச்சோ மாமா!" என்று அப்பொழுது தான் நிகழ்ந்ததை போல மீண்டுமாய் அன்று புடவை எடுத்த தின நியாபகத்தில் சிவந்தவள் அவன் தோளினில் அத்தனை அடி வைத்தாள்.
"டேய் டேய்!" என்று புன்னகைத்தவனும் சில நொடிகள் விட்டு தனக்கு முன் இழுத்துக் கொள்ளப்பார்க்க, ம்ம்ஹும்ம் 'வருவேனா!' என்றவள் அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டாள் முகத்தை மறைத்து.
"இது தான்னு நான் நினைக்குறதை எல்லாம் அப்படி இல்லைனு நீ ஒண்ணு பண்ணிட்டு இருக்குற அம்மு!" என்று புன்னகையுடன் கூறியவன்,
"மத்த விஷயமெல்லாம் ஓகே! ஆனா இந்த ரூம்குள்ள வந்து நீ என்ன மாதிரி பிரீஸ் ஆக போறனு நான் நினச்சேன். ஆனா நீ!" என்றவன் சொல்லில் இன்னமும் கெட்டியாய் அவன் தோள்களைப் பற்றினாள்.
"முன்னாடி வா அம்மு! உன் ஃபேஸ் தெரியல!" என்றவன் உற்சாகம் பல மடங்காகி இருந்தது அவள் செயல்களில்.
"ம்ம்ஹும் மாட்டேன் மாட்டேன்!" என்றவளுக்கு இன்னும் அந்த நிகழ்வுகள் எல்லாம் கண்ணுக்குள் நின்றது.
"ஏன் மாமா இப்படி பண்ணீங்க?" என்றவள் மீண்டுமாய் வலிக்க அடிக்க, அந்த நேரத்தில் அவளை தனக்கு முன் கொண்டு வந்திருந்தான்.
"என்னனு சொல்லு அம்மு!" என்று அவள் முகம் பார்க்க, அவளால் அது முடியவில்லையே.
"டேய்!" என்று சத்தமாய் சிரித்தான் அவள் வெட்கத்தில்.
"அச்சோ போங்க போங்க!" என இன்னுமாய் அடிகள்.
"கேட்டேனே எதுக்காக சாரீனு! நான் வேற! மேட்சிங் ஷர்ட்... ஃபன்க்ஷன்னு..." என்றவள் கண்களை இறுக மூடி, அவனை ஒருபக்கமாய் சாய்ந்து கொள்ள போக, மீண்டுமாய் அமைதியான கள்ளப் புன்னகையோடு அவளை தன்முன் இழுத்துக் கொண்டான்.
"ஆமால்ல! மேட்சிங் ஷர்ட் எடுத்திருக்கலாம்ல?" என இன்னுமே அவளை தவிக்கவிட்டான்.
"மாமா மாமா! ப்ளீஸ் மாமா!" என்றவள் சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டு அவன் கேளாமலே அவன் எதிர்பாராமலே அவனை நெருங்கி இருக்க, தான் இன்னுமே நெருங்கி அவளுக்கு உணர வைத்தான்.
மொத்தமாய் மௌனம் கொண்டுவிட்டது பெண் மனம் அந்த நெருக்கத்தில்.
"அம்மு!" என்ற அழைப்பிற்கு பேச்சின்றி போன பெண்ணில் சிரித்துக் கொண்டவன்,
"சீரியஸா உன்னை வச்சுட்டு என்ன பண்ண போறேனோனு நினச்சேன் டா!" என்று சொல்லி புன்னகையை தனக்குள் மென்றவன், அவளை திருப்பிவிட்டு பின்பக்கமாய் நின்று அணைத்து அழைத்து வர, அந்த அணைப்பிலும் கழுத்தின் ஓரம் எழுந்த குறுகுறுப்பிலும் நெகிழ்ந்தபடி நடந்தவள் கண்களை மூடி இருந்தாள்.
"கண்ணை திற அம்மு!" காதோடு உரசி கேட்ட குரலில் மெதுவாய் மகிமா விழி திறக்க, அகம் நிறைந்து போனது தான் பார்த்த காட்சியில்.
அவள் தோளில் தன் தலையை தாங்கி நின்றவன் கைகள் அவளை இடைமுழுதும் வளைத்திருக்க, இருவரின் முகமும் நிறைந்திருந்த மலர்ச்சியோடு அந்த அறையில் இருந்த முழுநீளக் கண்ணாடியில் பிரதிபலிக்க, பார்க்க பார்க்க தெவிட்டவில்லை இருவருக்குமே!
"எப்படி இருக்கு டா?" என்றதற்கும் வார்த்தைகள் இல்லை அவளிடம்.
"புடிச்சிருக்கா?" என்ற ரகசிய குரல் உயிரை மீட்டி சென்றது.
"ம்ம்ம் ரொம்ப!"
"ஹ்ம்!" என்றவன் அதே வாக்கில் நின்று ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் இருந்த தனது அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்ட, புரிந்தவள் புன்னகையோடு புகைப்படத்தினை பதிவு செய்தாள்.
"இப்படி தான் இருப்போம் நீயும் நானும் நடந்து வரும் போது!" என்றவன் அவள் நெற்றி முட்ட, காரணம் அப்பொழுது தான் புரிந்து விழி விரித்து அவனைக் கண்டாள்.
"அன்னைக்கு நீ கேட்கும் போதே தோணுச்சு. இதோ இப்படி அணைச்சுக்கணும்னு!" என்றவன் கழுத்தினில் முகம் புதைக்க, கண்களை மூடிக் கொண்டாள்.
"இனி கேட்பியா என்ன?" என்றவன் கேள்விக்கு விழி திறந்து அவனைக் கண்ணாடியில் காண,
"அடுத்தவங்க கேள்வி வெறும் கேள்வி மட்டும் தான். ஆனா அதுக்கான பதில் நம்மோட வாழ்க்கை. அதுக்குள்ள யாரையும் வர விட கூடாது அம்மு! அன்னைக்கு நீ பேசியிருக்கணும் அவங்ககிட்ட. என் மாமாக்கு நான் மட்டும் தான் பொருத்தம்னு என்னை கூட்டிட்டு போய் அவங்க முன்னாடி நிறுத்தி இருக்கனும் அம்மு! அதைவிட்டுட்டு என்கிட்ட கேட்டியே!" என்று முறைத்தவன்,
"தப்பு அம்மு! இது லாஸ்ட் வார்னிங்! யாரா இருந்தாலும் உனக்கும் எனக்கும் நடுவில வர விடாத! நம்ம பந்தம் முடிவான நொடில இருந்து என் உயிர் நீ! எங்கயும் யார் முன்னயும் நீ கலங்கி நிக்கிறதை நான் பார்க்க கூடாது!"
"மாமா!" என்றவள் கண்கள் கலங்கிவிட, தன்புறமாய் இழுத்து அவளை திருப்பிக் கொண்டவன் தன்னில் சாய்த்துக் கொண்டான்.
"அன்னைக்கே இப்படி எனக்குள்ள உன்னை வச்சு சொல்லிருப்பேன்! ஆனா அன்னைக்கு குட்டிப் பொண்ணா இருந்தியே!" என்று சொல்லி குறும்பாய் புன்னகைக்க,
"மாமா!" என்ற சிணுங்கல் இன்னுமே பித்துக்குள்ளாக்கியது ஆடவனை.
"மகி!" என்றவன் அணைப்பின் இறுக்கத்தை அதிகரிக்க, மூச்சுக்கு தவிக்கும் நிலை மகிமாவுடையது.
உடல் அதிர புதுவித உணர்வில் தடுமாறியவள் மனம் முழுதும் சொல்ல முடியாத ஏக்கங்கள் ஆட்டிப் படைக்க, அவளின் வெளிப்படையான அதிர்வில் தான் சட்டென விலகினான் சிவா.
"ப்ச்!" என்று திரும்பிக் கொண்டவன் பின்னந்தலையை கோதிக் கொண்டு தன்னைத் தானே திட்டிக் கொண்டான் முணுமுணுவென்று.
அவள் மூச்சுக் காற்றின் வெம்மையும் வேகமும் என தன் வசமிழந்து நின்றவன் அவளின் நடுக்கத்தில் மொத்தமாய் நிதானத்தை அடைந்திருந்தான்.
"சாரி மாமா!" என்று அடுத்த நொடியே அவன்முன் தானே சென்று நின்று கொண்டாள் மகிமா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.
"ஹே அம்மு!" என்றவன் தோளோடு அவளை அணைத்துக் கொண்டு சென்று அமர, சில நொடிகள் மௌனம் மட்டுமே அங்கே.
கோர்த்த கைகளை கெட்டியாய் அவள் பிடித்திருக்க, அதில் தான் பார்வை இருவரிடமும்.
"ஏதாச்சும் வேணுமா மாமா?"
நீண்ட மௌனத்தின் தவிப்பினை தாள முடியாமல் தானே முன் வந்தாள் மகிமா.
"ஹ்ம்ம்?" என்றவன் கண்களை சுருக்கி அவளை கேள்வியாய் பார்க்க,
"பால்?" என்று தயங்கியபடி அங்கிருந்ததைக் காட்ட, இன்னுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது சிவாவிற்கு.
"மாமா! கிண்டல் பண்றிங்க நீங்க!" என்றவளின் சிணுங்கல் மொழிகளும் பொய் கோபமும் என அவளை ரசனையாய் கண்டவன் பார்வை உரிமையாய் நீண்டிருக்க,
"அச்சோ! ம்ம்ஹும்ம்!" என்றவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லையே என்ற கவலை.
"ஓகே! ரிலாக்ஸ்! ஹ்ம் சொல்லு!"
"ஹான்!"
"பேசு"
"என்ன மாமா?"
"எதாவது!"
"வேண்டாம்! இன்னைக்கெல்லாம் நீங்க சிரிக்குறிங்க நான் பேசினா!"
"அப்படியா!"
"மாமா!"
"எப்படி அம்மு உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க தோணுச்சு?"
நிஜமாய் இந்த நிமிடம் அந்த கேள்வி தானாய் அவனுக்குள் தோன்றி இருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது கூறி இருந்தால் நம்பி இருப்பானா என்ன? ஆனால் நடந்ததே!.
"புதுசா கேட்குற மாதிரி கேட்குறீங்க!" என்றாள் அவன் கைகளோடு விளையாடியபடி.
"புதுசா தான் இருக்கு அம்மு! ப்ச்!" என்றவன்,
"ஜஸ்ட் அ மினிட்!" என்றதும் என்னவென்று பார்க்கும் நேரம் எதிர்பாரா நேரமாய் ஒரு இதழணைப்பு.
அதிர்ந்து இமை விரித்தவள் பின் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொள்ள, நிமிடம் தாண்டி நீட்டித்திருந்தான்.
மூச்சுவாங்க இடைவெளி கொடுத்து தனித்தவன் முகம் காணவே அத்தனை அத்தனை கூச்சம் பெண்ணுக்கு.
இப்படி ஒரு நாள் இரவை பற்றி கனவிலும் சுத்தமாய் நினைத்ததில்லை. அதே இந்த ஒரு நாள் பற்றி இன்று மாலைக்கு பின் அடிவயிற்றில் இருந்து ஒரு உணர்வு பாய்ந்து முகத்தில் வெட்கத்தையும் கூச்சத்தையும் பரவ செய்திருக்க, சிவா என்றவனின் இந்த ஒரு பக்கத்தை எல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை.
தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தவன் முகம் பார்க்காமல் வாங்கிக் குடித்து தாகத்தை தணிக்க முயன்றாள்.
"மெதுவா டி!" என்றவன் குரல் ஏன் இத்தனை கரகரத்து வர வேண்டும். அந்த குரல் கூறும் செய்தியில் மயக்கம் வரும் போலிருந்தது மகிமாவிற்கு. அப்பட்டமாய் ரகசிய புன்னகை விரிந்தது சிவாவின் இதழ்களில்.
மனம் எங்கும் அலறல் சத்தம். என்ன நடக்கும் என்ற எண்ணம் பலமாய் மூச்சு வாங்க வைக்க, அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தாலும் புரிந்தாலும் முதலில் தன்னை தானே ஒருநிலைக்கு கொண்டு வர நினைத்தவள்,
"மாமா!" என்று தீர்க்கமாய் அவன் முகம் பார்க்க, அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் சுவாரசியமாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன்,
என்னவென்று கேட்காமல் புருவம் உயர்த்த, தலையை மேலும் உலுக்கிக் கொண்டு எழுந்துவிட்டாள்.
"நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் திரும்பிக்கோங்க!" என்றவள் சொல்லில்,
"ஏன் அம்மு! எதாவது பண்ண போறியா?" என்றவன் எதை குறிப்பிடுகிறான் என்று தான் தெரியவவில்லையே தவிர, அவன் சாதாரணமாய் கூறவில்லை என்று மட்டும் நன்றாய் புரிந்தது அவனது உல்லாச குரலில்.
"மாமா..." என்று மேலும் சத்தமிட்டு கண்களை மூடிக் கொண்டவள்,
"திரும்புங்க சொன்னேன்!" என்ற சொல்லுக்கு அதற்குமேல் அவளை படுத்தாமல் திரும்பிக் கொண்டான் புன்னகையுடன்.
'மகி! ஒண்ணுமில்ல!' என்றவள் முணுமுணு சத்ததிற்கு நெற்றி ஓரம் நீவிக் கொண்டவனுக்கு அத்தனை சிரிப்பு.
"எவ்ளோ நேரம் டி!" என்று கேட்க,
"மாமா!" என்று அழைக்க,
"ம்ம்! திரும்பவா?" என்றான்.
"அவ்ளோ நல்லவங்களா?"
"ஹ்ம்ம்ம் ஏன் கேட்க மாட்ட?" என்றதில் அவள் சத்தமில்லாமல் புன்னகைக்க,
"ஓய்!" என்றான்.
"மாமா! எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு!" என்ற சொல்லில் சட்டென திரும்பியவன்,
"உன்னை..." என்று வேகமாய் அருகில் வர,
"மாமா மாமா மாமா!..." என்று ஓடினாள் அவனுக்கு அகப்படாமல்.
"இம்சை பண்ணிட்டு... தூக்கம் வேற வருதா.. அதுவும்.... இவ்வளவுக்கு அப்புறமும்..." என்றவனும் விடுவேனா என தூரத்த, அதற்குமேல் முடியாமல் அமர்ந்துவிட்டவள் அருகில் அமர்ந்தவன் அவளின் இடையோடு கைகொடுத்து இன்னும் அவளை தன்னில் நெருக்கிக் கொள்ள, இருவருக்குமே மூச்சு வாங்கியது.
"எனக்கு ஆட்டம் காட்டுற நீ?" என்றவன் விரல்கள் தன் ஊர்வலத்தைத் தொடர, அது பலமாய் தாக்கியது பெண்ணை.
"ரொம்ப மயங்கிட்டேன் அம்மு!" என்றவன் முகம் அவளின் முகத்தருகே வர, பார்வையை திருப்பியவள் கன்னத்தில் தான் அச்சாரம் விழுந்தது.
"வெயிட் பண்ணணுமா?" என்று அவனே கேட்க, பதில் இல்லை அவளிடம்.
"ம்ம்ஹும்ம் முடியாது!" அவனே சொல்லிக் கொண்டான்.
"உனக்கு தான் தெரியுமே! எனக்கு நீன்னா..." என்றவன் உதடுகளை விரல் கொண்டு அவள் மூட, இவன் விரல்கள் அழுத்தமாய் பதிந்தது அவளிடையில்.
"பேசாதீங்க!"
"வேண்டாமா?"
"மாமா!"
"சொல்லு!" என்றவன் ஆக்கிரமிப்புகளில் பெண்ணவள் தொலைந்து போய் அவனில் மாலையாகி இருந்தாள்.
வெள்ளையான இரவுகளில் சாரலாய் நனைத்தவன் தன் கொள்ளைக் கனவுகளையும் கொட்டித் தீர்க்க, அவன் அணுகுமுறையில் பெண் சிக்கிக் கொண்டாள் மீள முடியாமல்.
குளிராய் ஒரு வெம்மை அங்கே தீமூட்ட அவளை ஆராதித்துக் கொண்டாடி களைத்தான்.
மாமாவென்ற ஓசையே சங்கீதமாய் ஒலிக்க, அவளின் மென் சத்தங்கள் அவனுக்கு இன்னமும் கிறக்கம் கொள்வதாய் அமைந்தது.
"எடுத்துட்டே இருக்கேன்! நீ குடுக்க வேண்டாமா மகி?" என்றவன் பேச்சில் அவனை இழுத்துக் கொண்டவள் உயிரில் கலந்தான் கணவனானவன்.
தொடரும்..