• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மந்திரங்கள் (Mantra's)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
மனதின் திரம் மந்திரம் எனப்படும். இவை அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளிடமோ அல்லது தேவதையிடமோ தொடர்பு கொண்டது. மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு அடுத்த நிலையை அறிந்து உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவைகள் தேவதை வசிய சக்தியை உடையவை.

இவை வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை.
 
  • Like
Reactions: Krithika ravi

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
காயத்ரீ மந்திரம்
1628485645731.png





காயத்ரி மந்திரமானது 24எழுத்துக்களைக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கடவுளின் சக்தியினைக் கொண்டது. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. தினமும் காலை ஒரு ஜபமாலை இந்த மந்திரங்களைச் ஜெபிக்க உலகின் எல்லா வகையான பலன்களும் கிடைக்கும்.

காயத்ரீ தேவி மந்திரம்.


ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.


ஸ்ரீ கணபதி காயத்ரீ:


ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.


ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:


ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய
தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.


ஸ்ரீ சிவ காயத்ரீ:


ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய
தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.


ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:


ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ ராம காயத்ரீ:


ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே
தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:


ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே
தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.


ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:


ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை
தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:


ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை
தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.
 
  • Like
Reactions: Krithika ravi

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்



ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.

தியான சுலோகம்:-


சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
அம்புஜாசநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
கரண்ட மகுடாம் பஜே.


பலன்கள்:-

மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.
 
  • Like
Reactions: Krithika ravi