இலைகளை மறைத்து மஞ்சள் மலர்களைப் பூக்க விட்டிருந்த அந்தப் பெயர் தெரியாத மரத்தின் கீழே நின்றிருந்தது அந்தப் பெரிய கறுப்புநிறத்து ஜீப்.
ஜீப்பின் வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற தோரணையே, அவர்கள் தங்கள் பாஸுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியது.
அதிலும் வலது பக்கம் நின்றிருந்தவன் பக்கவாட்டில் ஓரப் பார்வை பார்ப்பதும், பின்னர் நேரே பார்ப்பதுமாக ஒரு நிலையில் இல்லாமல் நெளிந்து கொண்டே இருக்க,
"ஓய்.. மோகனம்.."
என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவனின் முன்னால் குதித்தவளைப் பார்த்ததும், முதலில் திடுக்கிட்டுப் பின்னர் தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
"ஏன்டி எருமை மாடே.. வெளி இடங்களில கண்டால் இப்புடிக் கத்திக் குதிக்காத எண்டு ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறனோ இல்லையோ.."
"பொய் சொல்லாதடா புளுகுமூட்டை.. ஆயிரம் தடவை எல்லாம் சொல்லேல்லை ஒரு அஞ்சாறு தடவை தான் சொல்லியிருக்கிறாய் சரியோ.."
"ரொம்ப முக்கியம் இப்போ.. சீக்கிரமாப் போடி பாஸ் வந்திடப் போறாரு.."
"வந்தால் வரட்டுமென்.. அந்தாள் வந்தால் எனக்கென்ன பயமே.."
"உனக்குப் பயம் எண்டு ஆரடி சொன்னது.. எனக்குத் தான்டி பயம்.."
"அவனுக்கெல்லாம் ஏன்டா நீ பயந்து சாவுறாய்.."
"அதெல்லாம் அப்புடித் தான்.. இப்ப என்ரை உசிரை வாங்காமல் போய்த் தொலையேன்டி எருமை.."
"அதெப்புடி.. என்ரை வேலையே உன்ரை உசிரை வாங்கிறது தானே.. பிறகு எப்புடி.."
"தெய்வமே.. உன்ரை காலில எண்டாலும் விழுந்து தொலையிறன் போம்மா தாயே.."
என்று கொண்டு, கலைமோகன் தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிடவும்,
"பிழைச்சுப் போ முண்டமே.."
என்று கொண்டு பக்கத்தில் இருந்த புத்தகக் கடைக்குள் புகுந்து கொண்டாள், இதுவரையும் கலைமோகனோடு வம்பிழுத்த அவனின் தோழி பாரதி.
அவள் போகிறேன் என்றதும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன், அவள் பக்கத்துக் கடையினுள் நுழையவும் ஐயோடா என்று மீண்டும் தலையில் கைவைத்துக் கொண்டான்.
இன்னும் சற்று நேரத்தில் தான் நிற்கும் இடத்தில், அரங்கேறப் போகும் சம்பவத்தைப் பாரதி மட்டும் பார்த்தாள் என்றால், அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டவன்
"செல்வச் சந்நிதியானே.. எப்புடியாவது அந்தக் குட்டிச் சாத்தானிட்டை இருந்து என்னையைக் காப்பாத்துப்பா.. நல்ல பெரிய தேங்காயாவே வாங்கி உனக்கு உடைக்கிறன்.."
என வாய் விட்டே வேண்டிக் கொள்ள
"ஏன்டா.. ஆ ஊ எண்டால் தேங்காய் உடைக்கிறன் மாங்காய் உடைக்கிறன் எண்டு கூசாமல் சொல்லீட்டு எப்பயாச்சும் எனக்கு ஒரு தேங்காயாவது உடைச்சிருக்கியா நீயி.. அவ கிட்ட இருந்து தப்பிக்கிற நேரம் மட்டும் தான் நான் உனக்கு நினைவே வாறனோ.. எனக்கு இதை விட வேறை வேலை இருக்குப் போடா.."
என முருகப் பெருமான் நினைத்தார் போலும், கலைமோகனை அப்படியே விட்டு அவர் தன் மயில் வாகனம் ஏறிப் பறந்து விட்டார்.
சரியாக ஐந்து நிமிடத்தில், பாரதி நுழைந்த புத்தகக் கடைக்கு எதிர்ப் பக்கமாக இருந்த நகைக் கடையில் இருந்து ஒருவன் வெளியே வந்து விழ, அவனை இருவர் புரட்டிப் போட்டு எடுக்க, அதைப் பார்த்தபடியே பக்கத்தில் நின்றிருந்த ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டான் கலைமோகனால் பாஸ் என அழைக்கப்பட்ட ஜோசப் மைக்கேல்.
புத்தகக் கடையினுள் தனக்குப் பிடித்த வேள்பாரி எங்காவது இருக்கிறதா எனத் தேடிக் கொண்டிருந்த பாரதியின் கவனத்தை, வெளியே கேட்ட 'ஐயோ' என்ற சத்தம் திசை திருப்பவே வேகமாக ஓடி வந்து பார்த்தாள்.
யாரோ ஒருவனை இருவர் போட்டு அடித்துக் கொண்டு இருக்க, அதைக் கறுப்பு கண்ணாடி போட்டபடி ஜோசப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும், சற்றே தள்ளி நின்று அவனுக்குக்காக கலைமோகன் ஜீப் கதவைத் திறந்தபடி நிற்பதையும் பார்த்தவளுக்குக் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் தான் வந்தது.
யாருமே ஏன் என்று கேட்காமலும் அப்படி அடிப்பதைத் தடுக்காமலும் போய்க் கொண்டிருக்க, வேகமாக இறங்கி அவள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாக, புளுதியைக் கிளப்பியபடி அந்த ஜீப் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டிருந்தது.
அவளுக்குக் கண்ணுக்குள் தூசு விழுந்தது தான் மிச்சமாகிப் போனது. கண்களை லேசாகக் கசக்கி விட்டுக் கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில், தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த கலைமோகன் விழவே, வேகமாகச் சென்று அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டாள் பாரதி.
"ஹேய்.. என்னத்துக்கடி என்ரை சட்டையைப் பிடிக்கிறாய்.."
"ஏன்டா எருமை.. போயும் போயும் அந்த மிருகத்துக்குக் கதவு திறந்து விடுற வேலையோ நீ பாக்கிறாய்.. அதுலயும் கட்டைப் பஞ்சாயத்து வேறை.."
"இதைப் பாருடி பாரு.. என்ரை பாஸை மிருகம் எண்டெல்லாம் சொல்லாத சொல்லீட்டன்.."
"சரி சொல்லலை.. ஆனா அந்த அவனோட சேந்து நீ கட்டப்பஞ்சாயத்து செய்யிறியோ.."
"ஐயோ இல்லையடீ.."
"பொய் சொல்லாத நாயே.. அந்த ஆளு வந்ததும் நீ இந்தப் பக்கம் பாத்துப் பம்மினதை நான் பாத்தேன்.. எத்தினை தடவை சொல்லி இருக்கிறன்டா அவன் கூட எல்லாம் சவகாசம் வச்சுக் கொள்ளாத எண்டு.."
"எத்தினை தடவை சொன்னீ.. ஆயிரம் தடவையோ.."
"தூக்கி அடிச்சிருவன் பாத்துக்கோடா.."
"ஹா ஹா குட்ஜோக்.. நீ முதல்ல என்னையைத் தூக்குடி.. பிறகு அடிக்கிறதைப் பத்திப் பாத்துக் கொள்ளலாம்.."
"நாயே.. நான் சீரியஸாக் கதைக்கிறன்டா.."
"என்னடி வர வர நீ நாயே பேயே எண்டெல்லாம் ஏசுறாய்.."
"நீ செய்யிற வேலையிந்தை லச்சணம் அப்புடி.. படிச்ச படிப்புக்கு ஒரு வேலையைப் பாக்காமல் ரவுடியளோட சேந்து அடுத்தவனை அடிக்கிற உன்னை எல்லாம் நாயே நரியே எண்டு சொல்லாமல் அன்பே அமுதே எண்டோ சொல்லோணும்.."
"இருந்தாலும் நீ ஓவர்.."
"ஆரடா ஓவர் ஆர் ஓவர்.. அப்பாவுக்கு நீ இங்க அடிக்கிற கூத்துத் தெரியுமோ இல்லையோ.. பாவம் அந்த மனுஷன் எந்தை பிள்ளை கொழும்புல உழைச்சுக் கொட்டுது எண்டு உன்னைய மலை மாதிரி நம்பிக் கொண்டு அங்க யாழ்ப்பாணத்துல கிடக்க.. இவரு இங்க பெரிய பிஸ்தாப் பருப்பு மாதிரி ரவுடிசம் செய்து கொண்டு இருக்கிறாரு.."
"பாரு பாரு பிளீஸ்டி.. உன்னட்டை நான் இதைப் பத்தி முதலே கதைக்கோணும் எண்டு நினைச்சன்டீ.. ஆனா அதுக்குள்ள நீயா வந்து என்னையைப் பிடிச்சுக் கேள்வி கேக்கிற மாதிரி ஆயிட்டுது.."
"ஆஹா அப்புறம்.."
"இப்ப நான் அவசரமாப் போகோணும்.. ஈவினிங் வந்து உனக்கு விளக்கம் சொல்லுறன்.. நான் சொல்லுற விசியத்தைக் கேட்டப் பிறகு வேணும் எண்டால் நீ என்னையைத் திட்டு.. இப்ப பாஸ் என்னைப் பாத்துக் கொண்டு நிப்பார்.."
"போடா போ.. அடிதடி செய்ற உனக்கு எல்லாம் என்ன விளக்கம் வேண்டிக் கிடக்கு.. முதல்ல அடுத்தவன் மேல கை வைக்க உன்ரை பாஸுப்பருப்புக்கோ இல்லாட்டிக்கு உனக்கோ என்ன உரிமை கிடக்கு எண்டு கேக்கிறன்.."
"பாரு பிளீஸ்.. உன்ரை காலுல எண்டாலும் விழுறன்.. போற வாற ஆக்கள் பாக்குதுகள்.. இப்புடிச் சத்தம் போடாதேயன்.. நான் வந்து கதைக்கிறன்.."
"ஓஹோ கதை அப்புடிப் போகுதோ.. நீங்கள் எல்லாம் அந்த மனுஷனை வெறும் தரையில புரட்டிப் போட்டு அடிக்கேக்க மட்டும் போற வாற ஆக்கள் பாக்கேல்லை.. நான் கதைக்கேக்க தான் பாக்கினமோ.. பாக்கட்டுமென்.. நல்லாப் பாக்கட்டும்.."
"என்ரை பட்டுக்குட்டீ.. இண்டைக்கு வந்து எல்லாம் சொல்லுறன்டீ.."
"சீ.. போய்த் தொலை.. பட்டுக்குட்டி புட்டுக்கட்டி எண்டு கொண்டு.. உனக்கு இண்டைக்கு வெறும் பாணும் பச்சை மிளகாயும் தான் சொல்லீட்டன்.."
"நீ பச்சைத் தண்ணி குடுத்தாக் கூடப் பரவாயில்லையடி பாருக்குட்டீ.."
என்று கொண்டு புல்லட்டில் பறந்த தன் தோழனையே பார்த்திருந்தவள், தலையிலடித்துக் கொண்டு திரும்பவும், சற்று முன்னால் அடி வாங்கிய நகைக்கடை ஆள் அம்புலன்ஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்வதைப் பார்த்தாள்.
"செய்யிறதையும் செய்திட்டு அம்புலன்ஸை வேறை தாங்களே கூப்பிட்டு விட்டிட்டுப் போறாங்களே.. இவனுங்களை எல்லாம் பொலீசுல புடிச்சுக் குடுக்கோணும்.."
என்று முணுமுணுத்துக் கொண்டபடி பாரதி மீண்டும் புத்தகக் கடையினுள் புகுந்து கொண்டாள்.
பாரதியிடம் இருந்து தப்பிப் புல்லட்டில் பறந்து போய்க் கொண்டிருந்த கலைமோகனோ மனதோடு முருகனோடு சண்டை போட்டுக் கொண்டு தான் போய்க் கொண்டிருந்தான்.
"செல்வச்சந்நிதியானே.. பாத்தியே வழமை போலக் கையை விட்டிட்டாய்.. ஊருக்கு வரேக்குள்ள ஒரு உரைச்சாக்குத் தேங்காய் உடைப்பம் எண்டு இருந்தனான்.. ஆனா நீ கை விட்டதால அந்தச் சாக்குப் பை கான்செல் போ.."
எனக் கலைமோகன் முணுமுணுக்க
"இருடா மவனே இண்டைக்குப் பின்னேரம் அந்தக் குட்டிச் சாத்தானுக்குப் பதில் சொல்லும் போது.. நீ திருதிரெண்டு முழிச்சுக் கொண்டு என்னையைத் தான் கூப்பிடுவாய் அப்ப உன்னைய வைச்சுக் கொள்ளுறன்.."
என முருகப்பெருமான் நினைத்ததைப் பாவம் அப்போது அவன் அறிய வாய்ப்பில்லை.
ஒரு மாதிரி வேகமாகத் தனது பாஸின் ஜீப்பை அண்மித்தவன் அதன் பிறகே நிதானமாக மூச்சு விடத் தொடங்கினான். அவன் ஜீப்பின் பக்கம் போகும் போதே எதிர்த் திசையில் தெரிந்த பூக்கன்றுக் கடைகள் அவனது கண்ணில் தட்டுப் படவே, நொடியில் தன் பாருவைச் சமாதானம் செய்யும் யுக்தி அவனுக்குப் பிடி பட்டு விட்டது.
அவ்வளவு தான் அந்த நொடி அவனுக்கு அவனது பாஸின் முகம் மறைய, தான் கொடுக்கப் போகும் பரிசைப் பார்த்து விட்டு, பற்கள் அத்தனையையும் காட்டிச் சிரிக்கப் போகும் பாருவின் முகமே அவன் முன்னால் வந்து தொலைத்தது.
சட்டென்று புல்லட்டை ஓரங்கட்டி விட்டு, அந்தப் பூக்கன்றுக் கடைக்குள் நுழைந்தவன், மஞ்சள், சிகப்பு, வெள்ளை என மூன்று வண்ணங்களில் ரோசாப்பூச் செடிகள் வாங்கிக் கொண்டு, அவற்றைப் புல்லட்டின் முன்னால் பத்திரப் படுத்தி விட்டு, மீண்டும் ஜீப்பைத் தொடர, ஜீப் இப்போது ஒரு பெரிய மரத்தின் கீழ் தேங்கி நின்றது.
ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிய ஜோசப் மைக்கேல் தனக்குப் பின்னால் நின்றிருந்தவர்களை ஒரு பார்வை பார்க்க, எதிரே இருந்த இன்னுமொரு நகைக் கடையினுள் புகுந்து அங்கிருந்த முதலாளி ஒருவனையும் இழுத்து வந்து தெருவில் போட்டு அடிக்கத் தொடங்கினார்கள் அவர்கள்.
அந்த முதலாளியை அடிப்பதைத் தன் பிரவுன் கண்கள் சுருங்கப் பார்த்தபடி நின்றிருந்த மைக்கேல், லேசாக மூக்கை உறிஞ்சி விட்டு, முகத்தைச் சுளித்தபடி சுற்றும்முற்றும் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, கடைசியில் அவன் பார்வை கலைமோகனின் புல்லட்டின் முன்னால் இருந்த ரோசாச் செடிகள் மீது நிலை குத்தி நின்றது.
"வாட் இஸ் திஸ்.."
என்று கொண்டு அதன் கிட்டே போனவன், ரோசாப் பூக்களைப் பார்த்ததும் முகம் மாற, அதைத் தூக்கித் தூரமாக வீசினான்.
மைக்கேல் பூக்களுக்கு அருகில் போகும் போதே
"ஆத்தி.. பாஸுக்கு ரோசாப்பூ வாசம் பிடிக்காதே.. புல்லட்டைத் தள்ளி நிப்பாட்டி விடாமல் வந்திட்டனே.."
என்று கொண்டு திரும்பிய கலைமோகன், தங்களைக் கடந்து போன பேருந்தைப் பார்த்ததும் கிட்டத்தட்ட தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.
பேருந்தில் ஜன்னலோரமாக இருந்தபடி, ரோசாப்பூக்களைத் தூக்கி வீசிய மைக்கேலை முறைத்து விட்டு, மோகனைப் பார்த்து கழுத்தை வெட்டுவது போலச் சைகை செய்தபடி போனாள் பாரதி.
"ஆத்தி.. குட்டிச் சாத்தான் பாத்திட்டுதே.. இண்டைக்குச் செத்தன் நான்.. இந்தப் பாஸ் அவள் பாக்கும் போதா பூவைத் தூக்கி எறியோணும்.."
எனப் புலம்பியபடி, மைக்கேல் அங்கிருந்து போகும் வரை காத்திருந்து, அவன் தூக்கி வீசிய பூச்செடிகளிடம் ஓடினான் அவன்.
அந்தப் பூக்களுக்கும் ஆயுசு கெட்டி போல, எந்த விதமான சேதாரமும் இல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன அந்த ரோசாப்பூக்கள்.
பூச்செடிகளை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்ட மோகன், இப்போது தன் குடியிருப்பை நோக்கித் தன் புல்லட்டைப் பறக்க விட்டான்.
அங்கே அவனுக்காக ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாதவன்
"தொண்டைமானாற்றில் நீ சிரித்தால் முருகா கொழும்புக் கோட்டையெங்கும் எதிரொலிக்கும்.."
எனப் பாடிக் கொண்டே போக, உண்மையிலும் அவனைப் பார்த்து முருகப் பெருமான் சிரித்துக் கொண்டுதான் நின்றிருந்தார்.
ஜீப்பின் வலது பக்கத்தில் ஒருவனும் இடது பக்கத்தில் ஒருவனும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற தோரணையே, அவர்கள் தங்கள் பாஸுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியது.
அதிலும் வலது பக்கம் நின்றிருந்தவன் பக்கவாட்டில் ஓரப் பார்வை பார்ப்பதும், பின்னர் நேரே பார்ப்பதுமாக ஒரு நிலையில் இல்லாமல் நெளிந்து கொண்டே இருக்க,
"ஓய்.. மோகனம்.."
என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவனின் முன்னால் குதித்தவளைப் பார்த்ததும், முதலில் திடுக்கிட்டுப் பின்னர் தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
"ஏன்டி எருமை மாடே.. வெளி இடங்களில கண்டால் இப்புடிக் கத்திக் குதிக்காத எண்டு ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறனோ இல்லையோ.."
"பொய் சொல்லாதடா புளுகுமூட்டை.. ஆயிரம் தடவை எல்லாம் சொல்லேல்லை ஒரு அஞ்சாறு தடவை தான் சொல்லியிருக்கிறாய் சரியோ.."
"ரொம்ப முக்கியம் இப்போ.. சீக்கிரமாப் போடி பாஸ் வந்திடப் போறாரு.."
"வந்தால் வரட்டுமென்.. அந்தாள் வந்தால் எனக்கென்ன பயமே.."
"உனக்குப் பயம் எண்டு ஆரடி சொன்னது.. எனக்குத் தான்டி பயம்.."
"அவனுக்கெல்லாம் ஏன்டா நீ பயந்து சாவுறாய்.."
"அதெல்லாம் அப்புடித் தான்.. இப்ப என்ரை உசிரை வாங்காமல் போய்த் தொலையேன்டி எருமை.."
"அதெப்புடி.. என்ரை வேலையே உன்ரை உசிரை வாங்கிறது தானே.. பிறகு எப்புடி.."
"தெய்வமே.. உன்ரை காலில எண்டாலும் விழுந்து தொலையிறன் போம்மா தாயே.."
என்று கொண்டு, கலைமோகன் தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிடவும்,
"பிழைச்சுப் போ முண்டமே.."
என்று கொண்டு பக்கத்தில் இருந்த புத்தகக் கடைக்குள் புகுந்து கொண்டாள், இதுவரையும் கலைமோகனோடு வம்பிழுத்த அவனின் தோழி பாரதி.
அவள் போகிறேன் என்றதும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன், அவள் பக்கத்துக் கடையினுள் நுழையவும் ஐயோடா என்று மீண்டும் தலையில் கைவைத்துக் கொண்டான்.
இன்னும் சற்று நேரத்தில் தான் நிற்கும் இடத்தில், அரங்கேறப் போகும் சம்பவத்தைப் பாரதி மட்டும் பார்த்தாள் என்றால், அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டவன்
"செல்வச் சந்நிதியானே.. எப்புடியாவது அந்தக் குட்டிச் சாத்தானிட்டை இருந்து என்னையைக் காப்பாத்துப்பா.. நல்ல பெரிய தேங்காயாவே வாங்கி உனக்கு உடைக்கிறன்.."
என வாய் விட்டே வேண்டிக் கொள்ள
"ஏன்டா.. ஆ ஊ எண்டால் தேங்காய் உடைக்கிறன் மாங்காய் உடைக்கிறன் எண்டு கூசாமல் சொல்லீட்டு எப்பயாச்சும் எனக்கு ஒரு தேங்காயாவது உடைச்சிருக்கியா நீயி.. அவ கிட்ட இருந்து தப்பிக்கிற நேரம் மட்டும் தான் நான் உனக்கு நினைவே வாறனோ.. எனக்கு இதை விட வேறை வேலை இருக்குப் போடா.."
என முருகப் பெருமான் நினைத்தார் போலும், கலைமோகனை அப்படியே விட்டு அவர் தன் மயில் வாகனம் ஏறிப் பறந்து விட்டார்.
சரியாக ஐந்து நிமிடத்தில், பாரதி நுழைந்த புத்தகக் கடைக்கு எதிர்ப் பக்கமாக இருந்த நகைக் கடையில் இருந்து ஒருவன் வெளியே வந்து விழ, அவனை இருவர் புரட்டிப் போட்டு எடுக்க, அதைப் பார்த்தபடியே பக்கத்தில் நின்றிருந்த ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டான் கலைமோகனால் பாஸ் என அழைக்கப்பட்ட ஜோசப் மைக்கேல்.
புத்தகக் கடையினுள் தனக்குப் பிடித்த வேள்பாரி எங்காவது இருக்கிறதா எனத் தேடிக் கொண்டிருந்த பாரதியின் கவனத்தை, வெளியே கேட்ட 'ஐயோ' என்ற சத்தம் திசை திருப்பவே வேகமாக ஓடி வந்து பார்த்தாள்.
யாரோ ஒருவனை இருவர் போட்டு அடித்துக் கொண்டு இருக்க, அதைக் கறுப்பு கண்ணாடி போட்டபடி ஜோசப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும், சற்றே தள்ளி நின்று அவனுக்குக்காக கலைமோகன் ஜீப் கதவைத் திறந்தபடி நிற்பதையும் பார்த்தவளுக்குக் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் தான் வந்தது.
யாருமே ஏன் என்று கேட்காமலும் அப்படி அடிப்பதைத் தடுக்காமலும் போய்க் கொண்டிருக்க, வேகமாக இறங்கி அவள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாக, புளுதியைக் கிளப்பியபடி அந்த ஜீப் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டிருந்தது.
அவளுக்குக் கண்ணுக்குள் தூசு விழுந்தது தான் மிச்சமாகிப் போனது. கண்களை லேசாகக் கசக்கி விட்டுக் கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில், தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த கலைமோகன் விழவே, வேகமாகச் சென்று அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டாள் பாரதி.
"ஹேய்.. என்னத்துக்கடி என்ரை சட்டையைப் பிடிக்கிறாய்.."
"ஏன்டா எருமை.. போயும் போயும் அந்த மிருகத்துக்குக் கதவு திறந்து விடுற வேலையோ நீ பாக்கிறாய்.. அதுலயும் கட்டைப் பஞ்சாயத்து வேறை.."
"இதைப் பாருடி பாரு.. என்ரை பாஸை மிருகம் எண்டெல்லாம் சொல்லாத சொல்லீட்டன்.."
"சரி சொல்லலை.. ஆனா அந்த அவனோட சேந்து நீ கட்டப்பஞ்சாயத்து செய்யிறியோ.."
"ஐயோ இல்லையடீ.."
"பொய் சொல்லாத நாயே.. அந்த ஆளு வந்ததும் நீ இந்தப் பக்கம் பாத்துப் பம்மினதை நான் பாத்தேன்.. எத்தினை தடவை சொல்லி இருக்கிறன்டா அவன் கூட எல்லாம் சவகாசம் வச்சுக் கொள்ளாத எண்டு.."
"எத்தினை தடவை சொன்னீ.. ஆயிரம் தடவையோ.."
"தூக்கி அடிச்சிருவன் பாத்துக்கோடா.."
"ஹா ஹா குட்ஜோக்.. நீ முதல்ல என்னையைத் தூக்குடி.. பிறகு அடிக்கிறதைப் பத்திப் பாத்துக் கொள்ளலாம்.."
"நாயே.. நான் சீரியஸாக் கதைக்கிறன்டா.."
"என்னடி வர வர நீ நாயே பேயே எண்டெல்லாம் ஏசுறாய்.."
"நீ செய்யிற வேலையிந்தை லச்சணம் அப்புடி.. படிச்ச படிப்புக்கு ஒரு வேலையைப் பாக்காமல் ரவுடியளோட சேந்து அடுத்தவனை அடிக்கிற உன்னை எல்லாம் நாயே நரியே எண்டு சொல்லாமல் அன்பே அமுதே எண்டோ சொல்லோணும்.."
"இருந்தாலும் நீ ஓவர்.."
"ஆரடா ஓவர் ஆர் ஓவர்.. அப்பாவுக்கு நீ இங்க அடிக்கிற கூத்துத் தெரியுமோ இல்லையோ.. பாவம் அந்த மனுஷன் எந்தை பிள்ளை கொழும்புல உழைச்சுக் கொட்டுது எண்டு உன்னைய மலை மாதிரி நம்பிக் கொண்டு அங்க யாழ்ப்பாணத்துல கிடக்க.. இவரு இங்க பெரிய பிஸ்தாப் பருப்பு மாதிரி ரவுடிசம் செய்து கொண்டு இருக்கிறாரு.."
"பாரு பாரு பிளீஸ்டி.. உன்னட்டை நான் இதைப் பத்தி முதலே கதைக்கோணும் எண்டு நினைச்சன்டீ.. ஆனா அதுக்குள்ள நீயா வந்து என்னையைப் பிடிச்சுக் கேள்வி கேக்கிற மாதிரி ஆயிட்டுது.."
"ஆஹா அப்புறம்.."
"இப்ப நான் அவசரமாப் போகோணும்.. ஈவினிங் வந்து உனக்கு விளக்கம் சொல்லுறன்.. நான் சொல்லுற விசியத்தைக் கேட்டப் பிறகு வேணும் எண்டால் நீ என்னையைத் திட்டு.. இப்ப பாஸ் என்னைப் பாத்துக் கொண்டு நிப்பார்.."
"போடா போ.. அடிதடி செய்ற உனக்கு எல்லாம் என்ன விளக்கம் வேண்டிக் கிடக்கு.. முதல்ல அடுத்தவன் மேல கை வைக்க உன்ரை பாஸுப்பருப்புக்கோ இல்லாட்டிக்கு உனக்கோ என்ன உரிமை கிடக்கு எண்டு கேக்கிறன்.."
"பாரு பிளீஸ்.. உன்ரை காலுல எண்டாலும் விழுறன்.. போற வாற ஆக்கள் பாக்குதுகள்.. இப்புடிச் சத்தம் போடாதேயன்.. நான் வந்து கதைக்கிறன்.."
"ஓஹோ கதை அப்புடிப் போகுதோ.. நீங்கள் எல்லாம் அந்த மனுஷனை வெறும் தரையில புரட்டிப் போட்டு அடிக்கேக்க மட்டும் போற வாற ஆக்கள் பாக்கேல்லை.. நான் கதைக்கேக்க தான் பாக்கினமோ.. பாக்கட்டுமென்.. நல்லாப் பாக்கட்டும்.."
"என்ரை பட்டுக்குட்டீ.. இண்டைக்கு வந்து எல்லாம் சொல்லுறன்டீ.."
"சீ.. போய்த் தொலை.. பட்டுக்குட்டி புட்டுக்கட்டி எண்டு கொண்டு.. உனக்கு இண்டைக்கு வெறும் பாணும் பச்சை மிளகாயும் தான் சொல்லீட்டன்.."
"நீ பச்சைத் தண்ணி குடுத்தாக் கூடப் பரவாயில்லையடி பாருக்குட்டீ.."
என்று கொண்டு புல்லட்டில் பறந்த தன் தோழனையே பார்த்திருந்தவள், தலையிலடித்துக் கொண்டு திரும்பவும், சற்று முன்னால் அடி வாங்கிய நகைக்கடை ஆள் அம்புலன்ஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்வதைப் பார்த்தாள்.
"செய்யிறதையும் செய்திட்டு அம்புலன்ஸை வேறை தாங்களே கூப்பிட்டு விட்டிட்டுப் போறாங்களே.. இவனுங்களை எல்லாம் பொலீசுல புடிச்சுக் குடுக்கோணும்.."
என்று முணுமுணுத்துக் கொண்டபடி பாரதி மீண்டும் புத்தகக் கடையினுள் புகுந்து கொண்டாள்.
பாரதியிடம் இருந்து தப்பிப் புல்லட்டில் பறந்து போய்க் கொண்டிருந்த கலைமோகனோ மனதோடு முருகனோடு சண்டை போட்டுக் கொண்டு தான் போய்க் கொண்டிருந்தான்.
"செல்வச்சந்நிதியானே.. பாத்தியே வழமை போலக் கையை விட்டிட்டாய்.. ஊருக்கு வரேக்குள்ள ஒரு உரைச்சாக்குத் தேங்காய் உடைப்பம் எண்டு இருந்தனான்.. ஆனா நீ கை விட்டதால அந்தச் சாக்குப் பை கான்செல் போ.."
எனக் கலைமோகன் முணுமுணுக்க
"இருடா மவனே இண்டைக்குப் பின்னேரம் அந்தக் குட்டிச் சாத்தானுக்குப் பதில் சொல்லும் போது.. நீ திருதிரெண்டு முழிச்சுக் கொண்டு என்னையைத் தான் கூப்பிடுவாய் அப்ப உன்னைய வைச்சுக் கொள்ளுறன்.."
என முருகப்பெருமான் நினைத்ததைப் பாவம் அப்போது அவன் அறிய வாய்ப்பில்லை.
ஒரு மாதிரி வேகமாகத் தனது பாஸின் ஜீப்பை அண்மித்தவன் அதன் பிறகே நிதானமாக மூச்சு விடத் தொடங்கினான். அவன் ஜீப்பின் பக்கம் போகும் போதே எதிர்த் திசையில் தெரிந்த பூக்கன்றுக் கடைகள் அவனது கண்ணில் தட்டுப் படவே, நொடியில் தன் பாருவைச் சமாதானம் செய்யும் யுக்தி அவனுக்குப் பிடி பட்டு விட்டது.
அவ்வளவு தான் அந்த நொடி அவனுக்கு அவனது பாஸின் முகம் மறைய, தான் கொடுக்கப் போகும் பரிசைப் பார்த்து விட்டு, பற்கள் அத்தனையையும் காட்டிச் சிரிக்கப் போகும் பாருவின் முகமே அவன் முன்னால் வந்து தொலைத்தது.
சட்டென்று புல்லட்டை ஓரங்கட்டி விட்டு, அந்தப் பூக்கன்றுக் கடைக்குள் நுழைந்தவன், மஞ்சள், சிகப்பு, வெள்ளை என மூன்று வண்ணங்களில் ரோசாப்பூச் செடிகள் வாங்கிக் கொண்டு, அவற்றைப் புல்லட்டின் முன்னால் பத்திரப் படுத்தி விட்டு, மீண்டும் ஜீப்பைத் தொடர, ஜீப் இப்போது ஒரு பெரிய மரத்தின் கீழ் தேங்கி நின்றது.
ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிய ஜோசப் மைக்கேல் தனக்குப் பின்னால் நின்றிருந்தவர்களை ஒரு பார்வை பார்க்க, எதிரே இருந்த இன்னுமொரு நகைக் கடையினுள் புகுந்து அங்கிருந்த முதலாளி ஒருவனையும் இழுத்து வந்து தெருவில் போட்டு அடிக்கத் தொடங்கினார்கள் அவர்கள்.
அந்த முதலாளியை அடிப்பதைத் தன் பிரவுன் கண்கள் சுருங்கப் பார்த்தபடி நின்றிருந்த மைக்கேல், லேசாக மூக்கை உறிஞ்சி விட்டு, முகத்தைச் சுளித்தபடி சுற்றும்முற்றும் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, கடைசியில் அவன் பார்வை கலைமோகனின் புல்லட்டின் முன்னால் இருந்த ரோசாச் செடிகள் மீது நிலை குத்தி நின்றது.
"வாட் இஸ் திஸ்.."
என்று கொண்டு அதன் கிட்டே போனவன், ரோசாப் பூக்களைப் பார்த்ததும் முகம் மாற, அதைத் தூக்கித் தூரமாக வீசினான்.
மைக்கேல் பூக்களுக்கு அருகில் போகும் போதே
"ஆத்தி.. பாஸுக்கு ரோசாப்பூ வாசம் பிடிக்காதே.. புல்லட்டைத் தள்ளி நிப்பாட்டி விடாமல் வந்திட்டனே.."
என்று கொண்டு திரும்பிய கலைமோகன், தங்களைக் கடந்து போன பேருந்தைப் பார்த்ததும் கிட்டத்தட்ட தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.
பேருந்தில் ஜன்னலோரமாக இருந்தபடி, ரோசாப்பூக்களைத் தூக்கி வீசிய மைக்கேலை முறைத்து விட்டு, மோகனைப் பார்த்து கழுத்தை வெட்டுவது போலச் சைகை செய்தபடி போனாள் பாரதி.
"ஆத்தி.. குட்டிச் சாத்தான் பாத்திட்டுதே.. இண்டைக்குச் செத்தன் நான்.. இந்தப் பாஸ் அவள் பாக்கும் போதா பூவைத் தூக்கி எறியோணும்.."
எனப் புலம்பியபடி, மைக்கேல் அங்கிருந்து போகும் வரை காத்திருந்து, அவன் தூக்கி வீசிய பூச்செடிகளிடம் ஓடினான் அவன்.
அந்தப் பூக்களுக்கும் ஆயுசு கெட்டி போல, எந்த விதமான சேதாரமும் இல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன அந்த ரோசாப்பூக்கள்.
பூச்செடிகளை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்ட மோகன், இப்போது தன் குடியிருப்பை நோக்கித் தன் புல்லட்டைப் பறக்க விட்டான்.
அங்கே அவனுக்காக ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாதவன்
"தொண்டைமானாற்றில் நீ சிரித்தால் முருகா கொழும்புக் கோட்டையெங்கும் எதிரொலிக்கும்.."
எனப் பாடிக் கொண்டே போக, உண்மையிலும் அவனைப் பார்த்து முருகப் பெருமான் சிரித்துக் கொண்டுதான் நின்றிருந்தார்.