• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை -02

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,234
467
113
Tirupur
முத்தமழை - 02

கரூர் தான் சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர். அவர்களின் பரம்பரைத் தொழிலே ஃபைனான்ஸ்தான். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஃபைனான்ஸைத் தான் முழு நேர தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல் என கரூரை சுற்றியுள்ள அனைத்து ஊர்களில் இருக்கும் பல கம்பெனிகளுக்கு இவர்கள்தான் ஃபைனானிசியர்ஸ்.

சொக்கலிங்கமும் அதே தொழிலை தொடர்ந்தார்தான். ஆனால் அவருக்கு ஆடைகள் ஏற்றுமதியில் ஆர்வம் அதிகம் இருந்தது.

எப்படி ஆரம்பிப்பது என யோசனையில் சில வருடங்களே செல்ல, திருப்பூரில் அவர் ஃபைனான்ஸ் செய்யும் சில கம்பெனிகளில் மேலோட்டமாக விசாரித்தார்.

அப்படி அவர் விசாரித்ததில் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமான நண்பர்கள் ஆனவர்கள் தான் சிவகுருவும், ராமசாமியும்.

அவர்கள் குடும்பமும் பல வருடங்களாக சொக்கலிங்கத்திடம் வரவு செலவு வைத்திருப்பதால், அவர்கள் மீது நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது சொக்கலிங்கத்திற்கு.

நண்பர்களிடம் தன் ஆசையை அவர் கூற, முதலில் இருவருமே வேண்டாம் என்றுதான் மறுத்தனர். “பனியன் தொழில் முன்ன மாதிரி இல்லப்பா.. ரொம்ப படுத்துருச்சு.. ஏற்றுமதி செய்றதுல பாதிக்கும் மேல டேமேஜ்ன்னு சொல்லி ஏமாத்திடுறான்.. நாங்களே இதை விட்டு வெளிய வரலாம்னுதான் யோசிக்கிறோம்..” என சிவகுரு கூற, ராமசாமியும் ஆமாம் என்பது போல்தான் தலையசைத்தார்.

ஆனால் சொக்கலிங்கத்திற்குத்தான் அதை அப்படியே விட மனமில்லை. நண்பர்களிடம் பேசி ஒருவழியாக ஆரம்பிக்கலாம் என்று சம்மதிக்க வைத்தார்.

அதனால் குடும்ப பணத்தில் கை வைக்காமல், தனக்கான பணத்தில் சிறிதாக ஆரம்பித்தார்.

அகலக்கால் வைத்து மாட்டிக்கொள்ளும் அளவிற்கு அவர் முட்டாள் அல்லவே. நண்பர்களும் உதவ, அவரே எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ச்சி இருந்தது.

அந்த நேரம் சிவகுருவின் மகன் மற்றும் மகளின் கல்லூரிப் படிப்பிற்காக அவர்கள் குடும்பமாக சென்னை மாற வேண்டியாதாக இருக்க, மூன்று நண்பர்கள் இருவராகிப் போனார்கள்.

சிவகுரு அவர் மனைவி பார்வதி. அவர்களுக்கு இரு பிள்ளைகள். மகன் வெற்றி வேந்தன். மகள் வந்தனா.

ராமசாமி.. அவர் மனைவி சீதா, அவர்களுக்கு ஒரே மகள் வல்லபி..

வல்லபியின் ஐந்து வயதில் சீதா இறந்துவிட, வல்லபியின் முழு பொறுப்பும் பார்வதியிடம் வந்துவிட்டது. வந்தனாவும், வல்லபியும் ஒரே வயது, ஒரே பள்ளி என்பதால் கல்லூரியும் ஒன்றாகவே இருக்கட்டும் என்று அவளையும் சிவகுரு தன்னோடு அழைத்துக் கொண்டார்.

ராஜலட்சுமியின் ‘அவங்க பிள்ளைங்கதான் சென்னையில போய் படிக்கிறாங்களே, நம்ம யாழியையும் சேர்த்து விடுங்க. மூத்ததுங்க ரெண்டுக்கும் தான் படிப்பு ஏறல, இவ நல்லா படிக்கிறா தானே.. அவர்கிட்ட கேட்டு அனுப்புங்க..” என்ற தொடர் தொல்லையால், சொக்கலிங்கமும் யாழினியை அவர்களோடு சென்னை கல்லூரியில் சேர்த்தார்.

ஆரம்பத்தில் இருந்தே யாழினி அப்பா மகள்தான். கர்ணனிற்கு பிறகு சொக்கலிங்கத்திடம் அதிகம் ஒட்டுதலாக இருந்தது யாழினிதான். அதனால் அவருக்கும் தன் இளைய மகளை மிகவும் பிடிக்கும்.

மனைவி சொன்னதைப் போல, கர்ணனிற்கு பிறகு படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டியதும் யாழினிதான்.. அதனால் அவரும் யோசிக்காமல் மகளை அங்கு சேர்த்தார்.

ஆரம்பத்தில் இருந்தே ராஜலட்சுமிக்கு சொக்கலிங்கத்தின் இந்த ஜவுளி தொழிலில் பெரிதாக விருப்பமில்ல. அதனால் என்னதான் லாபம் வந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

காரணம் அவர்களே கரூரில் பெயர் சொல்லும் அளவிற்கு கோடீஸ்வரர்கள் தான். அப்படியிருக்க இதெல்லாம் எந்த மூளைக்கு என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.

அதிலும் வல்லபியின் தந்தையை அவருக்கு பிடிப்பதே இல்லை. சிவகுரு சென்னை சென்ற பிறகு ராமசாமி தனியாக இருக்கிறார் என்று சொக்கலிங்கமும் சில நாள் கரூர் வராமல் திருப்பூரிலேயே இருந்து விடுவார்.

அப்படி தங்கி வரும் போது, அந்த வார வசூல் பணத்தை மிகவும் கவனமாக கேட்பார் ராஜலட்சுமி. முதலில் இதை சொக்கலிங்கம் கவனிக்கவில்லை.

தொடர்ந்து அதே போல் கேட்க, கணவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

“என்ன பிரச்சினை? எதுக்காக இப்படி கணக்கு பார்க்குற?” என தீவிரமாக கேட்க,

“அது.. அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் எப்பவும் போலத்தான் கேட்டேன்..” என அவர் மழுப்ப,

“உன்னைப்பத்தி எனக்குத் தெரியும் ராஜி.. இனியொரு முறை இப்படி கேட்கக்கூடாது. அப்படி நடந்தா நான் மனுசனா இருக்கமாட்டேன்..” என அப்போதே அரட்டவும் செய்தார்தான்.

ஆனால் அதை ராஜலட்சுமி கேட்டாள்தானே. தனக்கு தெரிந்த நபரை சொக்கலிங்கத்திற்கு தெரியாமல் வேவு பார்க்க வைத்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் வாரமொரு முறை பேசும் கர்ணனிடம் “உங்க அப்பாவை நல்லா ஏமாத்தி பணம் வாங்கிடுறாங்க கர்ணா. இப்போ முன்ன மாதிரி வசூல் பணமும் முழுசா வரது இல்ல. கேட்டாலும் எங்கிட்ட கோபப்பட்டு கத்துறாரு. திடீர்னு ஒரு பிரச்சினையான என்ன செய்றது சொல்லு..” என ராஜி அவனிடமும் புலம்ப ஆரம்பித்தார்.

“ம்மா.. அப்பாவுக்கு எல்லாம் தெரியும். அந்தளவுக்கு பிரச்சினையில போய் மாட்டமாட்டார். நீங்க தைரியமா இருங்க..” என அவனும் சலிக்காமல் இதே பதிலைத்தான் சொல்வான்

ராஜலட்சுமியின் இந்த பேச்சைக் கேட்டு கேட்டு கர்ணனுக்கு, ராமசாமியின் மேல் ஒரு நல்ல மதிப்பே வரவில்லை.

பார்த்து பழகாத ஒரு நபரின் மேல் கோபத்தையும் தாண்டி ஒரு வன்மத்தை வளர்த்துக் கொண்டான் கர்ணன்.

இதற்கிடையில் வனிதாவிற்கும், சுந்தருக்கும் சொந்தத்திலே பெண் எடுத்து, பெண் கொடுக்கும்படியாக சம்மந்த அமைய, அதை ராஜி கணவனிடம் கூற, ‘கர்ணனுக்கு செய்யாமல் இதென்ன’ என சொக்கலிங்கம் கத்த, ‘கர்ணனுக்கு இப்போது விருப்பமில்ல’ என்று சொல்லிவிட்டான் எனகூற, அப்போதும் மனைவி பேச்சைக் கேட்காமல் மகனுக்கு அழைத்து பேசினார்.

அவனோ “ப்பா.. எனக்கு இப்போதைக்கு இங்க இருந்து நகர முடியாது. அதோட எனக்கு இந்த பொண்ணை பிடிக்கல. அதை அம்மாக்கிட்ட சொன்னா வருத்தப்படுவாங்கன்னு தான் சொல்லல. நீங்க அவங்களுக்கு பண்ணுங்க. எனக்கு ஒரு வருத்தமும் இல்ல. நீங்க சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் செய்வேன். பயப்படாம அங்க வேலையைப் பாருங்க..” என சொல்ல, அப்போதுதான் பெற்றவருக்கு நிம்மதியே வந்தது.

அதன் பிறகு எங்கேயும் நிறுத்தவில்லை. சம்மந்தமும் அவர்களுக்கு இணையான வசதியுள்ள இடம்தான். இதே தொழில்தான். மேலும் உள்ளூரிலே இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை என அனைத்தையும் யோசித்தே திருமண வேலைகளைத் தொடர்ந்தார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வருவதாக கூறியிருந்த கர்ணன் வரவில்லை. வேலைப்பளு.. லீவ் கிடைக்காமல் போக அவனால் வர முடியவில்லை.

அவன் வரவில்லை என்பது சொக்கலிங்கத்திற்கும், யாழினிக்கும் மட்டுமே வருத்தத்தைக் கொடுத்தது. மற்ற யாருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராஜலட்சுமியின் அம்மாவும் படுக்கையில் இருக்க, அவருக்கு கர்ணன் வராதது தெரியவே இல்லை.

திருமணத்திற்கு சிவகுரு குடும்பம், ராமசாமியின் குடும்பம் என அனைவருமே வந்திருந்தனர்.

அப்போது யாழினியோடு இருந்த வல்லபியைப் பார்த்து ராஜிக்கு பொறாமைதான். பார்ப்பவர்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பேரழகு.

அவளுக்கு அது பழகி போயிருக்கும் போல, அனைவரும் அவளை நின்று கவனித்து செல்வதை ராஜலட்சுமி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனோ அவள் ராமசாமியின் மகள் என்பதாலயே அவளை பிடிக்காமல் போய்விட்டது. அதனால் வந்தனாவிடம் பேசும் அளவிற்கு கூட வல்லபியிடம் பேசவில்லை.

இதை வல்லபி உணர்ந்தாளோ இல்லையோ வெற்றி உணர்ந்தான். அதனால் வல்லபியை ‘பாப்பா இங்கேயே இரு’ எனத் தன்னுடனே வைத்துக் கொண்டான்.

ராமசாமியும், சிவகுருவும் நண்பருக்கு எல்லா வகையிலும் உதவினர். பார்வதியும் வந்தனாவை அழைத்து, மகனோடு அமர்ந்து கொண்டார்.

‘ஏன் மா?’ என்ற கேள்வியோடு வெற்றி பார்க்க, “ம்ச்.. அந்த அம்மா பேச்சே சரியில்ல வெற்றி.. என்னமோ பணம் பணம்னு பேசிட்டே இருக்கு.. எனக்கு அங்க நிற்க முடியல.. அதான் வந்துட்டேன்..” என்றவர், வல்லபியைப் பார்த்து “இன்னைக்கு போனதும் வல்லிக்கு சுத்தி போடனும், அந்த பொம்பள பாப்பாவை முறைச்சு முறச்சு பார்த்துக்கிட்டு இருக்கு..’ என எரிச்சலாக கூறினார்.

வெற்றியும் அதைக் கவனித்ததால், ‘ஆம்’ என்பது போல் மட்டும் தலையாட்டிக் கொண்டான். வள்ளபி அருகில் இருக்க எதுவும் பேச விரும்பவில்லை.

அவனுக்கு வந்தனாவும் வல்லபியும் வேறு வேறு இல்லை. வந்தனா கூட, கத்தி சத்தம் போட்டு வீட்டை இரண்டு செய்வாள். ஆனால் வல்லபி இருக்கும் இடம் கூடத் தெரியாது. அதிர்ந்து கூட பேசமாட்டாள். அத்தனை அமைதி!

அதோடு இப்போதுதான் ராஜலட்சுமி வல்லபியை முதல்முறையாக பார்க்கிறார். பார்த்தவுடனே முறைக்கிறார் என்றால் அவரிடம் வல்லபியைப் பற்றி ஏற்கனவே தவறான எண்ணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். கோபம் வந்தாலும், சொக்கலிங்கம் என்ற மனிதருக்காக அமைதியைக் கடைப் பிடித்தான். அதனால்தான் அவளை அழைத்து தன்னோடு அமர்த்திக்கொண்டான்.

ஒருவழியாக திருமணம் முடிந்து, அவர்கள் சென்னை கிளம்பினர்.

அதற்குள் காலச்சக்கரம் இரண்டு வருடத்தை சுருட்டியிருந்தது. வனிதா மற்றும் சுமித்ரா இருவருமே பெண் குழந்தைகளுக்கு தாயாகியிருந்தனர்.

சுந்தர் மெல்ல மெல்ல தந்தையின் தொழிலை முழுவதுமாக தன் வசப்படுத்தியிருந்தான். அதற்கு சூத்திரதாரி ராஜலட்சுமியும், அவரது சம்மந்தியும்தான்.

இதெல்லாம் சொக்கலிங்கத்திற்கு புரியாமல் இல்லை. ஆனாலும் அமைதியாகவே இருந்தார். கர்ணனுக்கு இந்த தொழில் ஆகாது என்று அவருக்குத் தெரியுமே, அதனால் சுந்தர் செய்வதை கவனிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் அனைத்துமே சரியாக சென்றது. இல்லை இல்லை அப்படி காட்டி கொண்டான் சுந்தர். பின் கணக்கு வழக்குகளில் ஏகப்பட்ட தில்லு முல்லு.. அதைக் கவனித்து கேட்டு வீட்டில் பிரச்சினை உண்டானது.

அதேநேரம் அவரின் கம்பெனியும் மெல்ல மெல்ல நஷ்டத்திற்கு சென்றது. ராமசாமி முடிந்தளவு நண்பருக்கு உதவியாக இருந்தார்.

சென்னையில் வெற்றி ஐபிஎஸ் க்கான தேர்விற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு, அந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்று, பயிற்சிக்காக அவன் டெல்லி சென்றுவிட்டான். பெண்கள் மூவரும் கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் இருந்தனர்.

கல்லூரி படிப்பின் இறுதியில் மூவருக்குமே வெவ்வேறு கம்பெனிகளில் ப்ளேஸ்மென்ட் கிடைத்தது.

வந்தனாவிற்கு பெங்களூரிலும், யாழினிக்கு கோவையிலும், வல்லபிக்கு சென்னையிலும் கிடைக்க, முதல் முறையாக பிரிவதால் மூவருக்குமே மனம் மிகவும் வருத்தமாக இருந்தது.

வேலையில் சேர நாட்கள் இருப்பதால் யாழினி கரூர் வந்துவிட, மற்ற இருவரும் சென்னையில்தான் இருந்தனர்.
அனைத்தும் சரியாகத்தான் சென்றது.

அன்று சொக்கலிங்கம் திருப்பூரில் வசூல் முடித்து வந்த பிறகு, அவருக்கும் சுந்தருக்கும் கணக்கை வைத்து மிகப்பெரும் வாக்குவாதம்.

யாழினியும் அன்று வீட்டில் இருக்க, அவளும் தந்தையோடு சேர்ந்து சுந்தரிடம் சண்டையிட்டாள்.

அதை கவனித்த சுமித்ரா “உனக்கு என்ன தெரியும்னு நீ இப்போ அவர்கூட சண்டைக்கு நிக்கிற, மாமா செய்றது எல்லாம் உனக்குத் தெரியாது. அவர் வசூலிக்கிற பாதி பணத்தை நம்ம கணக்குலயே காட்டுறது இல்ல. எல்லாம் அங்க யாருக்கோ கொடுத்துட்டு வரார், அவங்க நம்ம மாமாவை யூஸ் பண்ணிக்கிறாங்க. அதைத்தான் சுந்தர் சொல்றார்..” என பேச,

சொக்கலிங்கத்திற்கு கோபம் உச்சிக்கு ஏற, “என்ன நினைச்சிட்டு இருகீங்க எல்லாரும்..?” என கத்த,

“எதுக்கு இப்போ நீங்க சத்தம் போடுறீங்க.. அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு.. எனக்கும் அந்த சந்தேகம்தான் ஆரம்பத்துல இருந்தே இருக்கு. உண்மையை சொல்லுங்க.. அங்க உங்களுக்கு வேற குடும்பம் இருக்கா..?” என கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல், தன் வயதையும் மீறி மனைவியை அறைந்திருந்தார் சொக்கலிங்கம்.

பிள்ளைகளும் இந்த செய்கையில் அதிர்ந்துதான் போயிருந்தனர்.

“இனி ஒரு வார்த்தைப் பேசினா உன்னை கொன்னு புதைச்சிடுவேன் ராஸ்கல். யாரைப் பார்த்து என்ன பேசுற.? பக்கத்துல நீ இருக்கும் போது, என் வராவை மறந்து உன்னைத் தொடவே எனக்கு அஞ்சு வருசம் ஆச்சு. நீ என்னை பேசுறியா?” என கத்த, ராஜலட்சுமி அத்தனை பேரின் முன்பும் மிகவும் அசிங்கமாகிப் போய்விட்டது.

‘இதுதான் நீ எங்கிட்ட பேசுறது கடைசியா இருக்கனும்.. இனி எப்போதும் எங்கிட்ட பேசிடாத..’ என்று அறைக்கு சென்ற அரை மணி நேரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.