• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -13

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -13

ராஜேஷ்..... என்று கூப்பிட்டான் மணிகண்டன்.

எஸ் ஸார்..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

அவர் போயிட்டாரா?

யாரு செல்வமா?

ஆமாம்.....

இப்போ தான் சார் போறார்.....

கூப்பிடுங்க..... என்றான் மணிகண்டன்.

ராஜேஷ் வேகமாக ஓடிச் சென்று வாசலில் நின்று கொண்டு.....

செல்வம்..... செல்வம்..... என்றான்.

கேட் வரைக்கும் சென்ற செல்வம் திரும்பி வந்தான்.

சொல்லுங்க சார்......

சார் உங்களை கூப்பிடறாரு......

உள்ளே சென்றான் செல்வம்.

சொல்லுங்க சார் ..... என்றான்.

நீங்க உங்க ஒயிஃபை போன மாசம் தான் கடைசியா பார்த்ததா சொன்னீங்க இல்ல?

ஆமாம் சார்......

ஏன் இந்த மாசம் ஜீவனாம்சம் கொடுக்க போகும் போது போகலீயா?

இல்ல சார்..... நான் வேலை விஷயமா வெளியூர் போயிருந்தேன்..... அதான் ஊர்ல இருந்து வந்து கொடுக்கிறேன் ன்னு சொன்னேன்.....

ஃபோன்ல பேசனீங்களா?

ஆமாம் சார்....

என்னைக்கு?

இந்த மாசம் நாலாம் தேதி......

அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க.....

வெறுப்பா பேசினா..... நீ எப்போ வேணும்னா வா...... ஆனா அடுத்த மாசத்துல இருந்து என் அக்கவுண்டுல போட்டிடு......

இந்த சாக்குலேயாவது உன்னை பார்த்துக்கிறேனே.....

மிச்..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் காவேரி.

ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க?

ரெண்டு நாள் முன்னாடி.....

அப்போ போய் பார்க்கலீயா?.....

இல்ல சார்..... வேற வேலையா இருந்தேன்..... என்றான் திக்கி திணறினான்.

என்ன சார்...... திக்கறீங்க..... ஒழுங்கா மரியாதையா சொல்லுங்க..... என்றான் ராஜேஷ்.

இல்ல சார்...... அது வந்து.....

நீங்க எதையோ மறைக்கிறீங்க ன்னு நல்லா தெரியுது.... ஒழுங்கா உண்மையை சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது..... என்றான் மணிகண்டன்.

இல்லன்னா சஸ்பெக்ட் லிஸ்ட்ல உங்களை அரெஸ்ட் பண்ணி விசாரிக்க வேண்டி இருக்கும்..... என்றான் ராஜேஷ்.

இல்ல சார்..... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..... நான் சொல்லிடறேன்......

சொல்லுங்க.....

சார்..... பிளீஸ் இதை மட்டும் ரெக்கார்டு பண்ணாதீங்க..... பிளீஸ் பிளீஸ்..... என்று கெஞ்சினான்.

உன் இஷ்டத்துக்கு எல்லாம் நாங்க வேலை செய்ய முடியாது..... என்றான் ராஜேஷ்.

ராஜேஷ்..... என்றான் மணிகண்டன்.

சாரி சார்......

நான் உண்மையை சொல்லிடறேன்..... அப்புறமாவாவது அந்த ரெக்கார்டிங்கை டெலீட் பண்ணிடுறீங்களா?..... என்றான் செல்வம்.

நீங்க சொல்லுங்க முதல்ல..... என்றான் ராஜேஷ்.

நான் காவேரிக்கு காசு கொடுக்க ரெயில்வே ஸ்டேஷனிற்கு வரச் சொன்னேன்...... அப்போ நான் அவளை பார்க்க போற சந்தோஷத்தில அவ ஆஃபீஸ்ல இருந்து வர டிரெயின் டைமுக்கு கால் மணி நேரம் முன்னாடியே போயிட்டேன்..... அப்போது அங்கே ஒரு திருநங்கை என் கிட்ட வந்தாங்க..... என் ஃபிரெண்டு சொன்னான் திருநங்கைங்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் விஷயம் தெரியும் ன்னு சொன்னான்..... அதனால அவங்க கூட போயிட்டேன்..... அப்புறம் காவேரி ஃபோன் பண்ணினா..... எடுக்கக்கூடிய சூழல்ல நான் இல்ல..... அதான் அவளுக்கு நாளைக்கு வந்து தரேன் ன்னு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பிட்டு விட்டுட்டேன்..... அதுக்கு அப்புறம் ரெண்டு நாளாக அவ கால் பண்ணல..... நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல......கோபத்தில் இருக்கா ன்னு நினைச்சு விட்டுட்டேன்..... அப்புறம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கால் வந்த அப்புறம் தான் தெரியுது..... என்று சொல்லி கண்கள் கலங்கினான் செல்வம்.

சே..... இவ்வளவு தானா..... நான் கூட இவனுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கும் ன்னு நினைச்சேன்..... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ்.

சரி..... நீங்க போகலாம்..... என்றான் மணிகண்டன்.

சார்..... இந்த ரெக்கார்டிங்கை அழிச்சிடுரீங்களா.... பிளீஸ்..... வெளியே தெரிஞ்சா..... எனக்கு......

தலையை மட்டும் அசைத்தான் மணிகண்டன்.

ஓகே சார் தேங்க்ஸ்..... என்று சொல்லி விட்டு கிளம்பினான் செல்வம்.

அவன் சென்றதும்....

இளங்கோ..... என்று கூப்பிட்டான் மணிகண்டன்.

சார் இளங்கோவும் நவீனும் எம் எல் ஏ மீட்டிங் பந்தோபஸ்த் க்கு போயிருக்காங்க.....

ஓ..... எத்தனை மணிக்கு மீட்டிங்.....

பத்து மணிக்கு.....

ஓ சரி சரி.....
ரவி எங்கே?.....

ரவி அந்த செயின் ஸ்நாட்சிங் கேஸை விசாரிக்க போயிருக்காரு.

மீனா?

அவ இன்னைக்கு லீவு சார்....

ராஜேஷ்.....

சாரி சார்..... அவங்க இன்னைக்கு லீவு.....

பன்னீர் செல்வம் சார் மட்டும் தான் இருக்காரா?

ஆமாம் சார்..... வெளியே டியூட்டில இருக்காங்க.....

அது தெரியும்......

சரி சரி.... ரவி சாருக்கு கால் பண்ணி எவ்வளவு நேரத்தில வருவாரு ன்னு கேளு..... நாம மர்டர் கேஸ் விஷயமா விக்டிம் ஆஃபீஸூக்கு நேராக போய் விசாரிக்கனும்.

ஓகே சார்..... என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்தான் ராஜேஷ்.

அப்போது மணிகண்டனுக்கு அவனுடைய அம்மா சிவகாமி கால் செய்தார்.

சொல்லுங்க அம்மா.....

ஹாஸ்பிட்டலுக்கு போகனுமே பா.....

தெரியும் அம்மா..... அப்பாயின்மெண்ட்டுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வீட்ல இருப்பேன்..... அப்புறம் கரெக்டா நம்ம ஹாஸ்பிடலுக்கு போயிடலாம்.

சரிப்பா...... டிபன் சாப்பிடாமலேயே போயிட்டியே பா.....
நான் தூங்கிட்டேன்....

பரவாயில்லை அம்மா.... நீங்க தான் தலைவலி ன்னு சொன்னீங்க இல்ல..... நீங்க ரெஸ்ட் எடுங்க..... நான் வாங்கி சாப்பிட்டுக்கிறேன்.....

பாலாவது குடிச்சிட்டு போனீயா பா.....

கிரீன் டீ குடிச்சேன் மா.....

சரிப்பா ஜாக்கிரதை..... நீ ஸ்டேஷனில் இருந்து கிளம்பும் போது கால் பண்ணு.... நான் ரெடியாகி இருக்கேன்.....

சரிம்மா..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் மணிகண்டன்.

சிவகாமி கிட்சன் ஜன்னலை திறந்தார்.

அப்போது அன்று நடந்தது அவருக்கு ஞாபகம் வந்தது.

அம்மா..... இப்போதைக்கு நீங்க பக்கத்து வீட்டு அத்தை வீட்டிலேயே இருங்க..... நான் போய் மாயா கிட்ட பேசிட்டு வரேன்..... அவ பயப்படறா..... மாமா மாமி பார்த்திட்டா..... நீங்களாவது ஓடி விடுவீங்க மாமா.... அத்தையால எப்படி ஓட முடியும் ன்னு சொன்னா. அதுவும் இல்லாம அடியாள் யாரோ போட்டிருக்காங்கலாம்...... மாயாவை வெளியே போகாம இருக்க..... என்றான் மணிகண்டன்.

சரிப்பா..... நீ சொல்றது போல செய்யறேன்..... என்றார் சிவகாமி.

அவன் கிளம்பி சென்றதும் டாக்டர் மதனகோபாலுக்கு கால் செய்தார் சிவகாமி.

டாக்டர் என் பையன் என்று ஆரம்பித்து அனைத்தும் சொல்லி முடித்தார்.

கவலைப்படாதீங்க மா..... நேரா வாங்க பார்துக்கலாம்..... பயப்படத் தேவை இல்லை.....

சரிங்க டாக்டர்.....

தம்பி என்ன எல்லாம் பண்றாரு கவனிச்சிக்கிட்டே இருங்க மா.....

சரிங்க டாக்டர்...... என்றார் சிவகாமி.

பத்து நிமிடத்திற்கு பிறகு சிவகாமி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றார்.

அப்போது ஜன்னல் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தான் மணிகண்டன்.

அந்த பக்கம் யாரும் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது.

கேள்வியையும் இவனே கேட்டு பதிலும் இவனே சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது சோலார் லைட் ஆன் ஆனது.....

சுவற்றில் மாட்டப் பட்டிருந்த ஃபோட்டோவை தன் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தான் மணிகண்டன்.

மறுபடியும் ஜன்னல் வழியாக பேசி கொண்டு இருந்தான்.

மாயா.... ஐ லவ் யூ ஸோ மச்.....

லவ் யூ டூ மாமா.... என்று அவள் சொல்வது போல பேசினான்.

மாமா.... என்று அவள் கத்துவது போலவும்.....

என்னாச்சு மாயா என்று பதறி போய் இவன் தலையில் யாரோ கட்டை வைத்து அடிப்பது போல நினைத்துக் கொண்டு தரையில் விழுந்தான்.

அப்போது அலறி அடித்து கொண்டு ஓடினார் சிவகாமி.
பக்கத்து வீட்டுக்காரம்மாவின் உதவியோடு அவனை பிடித்து வந்து அவர் வீட்டு திண்ணையில் படுக்க வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தனர்.

பின்னர் மெதுவாக நடந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

மறுநாள் காலை சென்னைக்கு சென்றுவிட்டனர்.

டாக்டர் மதனகோபாலிடம் அழைத்து சென்றார் சிவகாமி.

டெஸ்ட் எடுத்துவிட்டு..... அவர் தலையில் அடிப்பட்டதால் அவர் கற்பனையில் இருப்பதை உருவக படுத்திக்கொள்கிறார்..... என்றார் டாக்டர்.

நாட்கள் செல்லச் செல்ல.... மாத்திரைகள் போடப் போட சரி ஆகிவிடும்..... என்றார் டாக்டர்.

தினமும் பத்து முறைக்கு மேல் மாயா கால் செய்வாள் என்று கூறி இருந்தான்..... அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து..... வாரத்திற்கு ஒரு முறை கால் செய்வதாக கூறினான். ஆனால் அன்று ஒரே நாளில் மூன்று முறை கால் செய்ததாக கூறவே பயந்து டாக்டருக்கு கால் செய்தார் சிவகாமி.

சிந்தனை கலைந்தவர் பீரோவில் இருந்து அவன் மெடிக்கல் ரெக்கார்ட்ஸை எடுத்த வைத்தார். சிவகாமி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவனுக்கு இருக்கும் பிரச்சனை வெளியே தெரியாமல் டிரீட்மெண்ட் தருகிறார் டாக்டர் மதனகோபால். மேலும் அவர் மணிகண்டனை டெஸ்ட் செய்ததால் அவனால் அவனுடைய போலீஸ் டிபார்ட்மென்ட்டிற்கு எந்த பாதிப்பும் வராது.... என்பதை தெரிந்து கொண்டதால் அதற்கு சம்மதித்தார்.

##########

தொடரும் .....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Love
Reactions: Joss uby

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
ஸூப்பர் சிஸ்