• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராக நந்தனம்-5

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம்-5

காரில் கோபமாக ஏறியவளைப் பார்த்துக் முன்னிருக்கும் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டே வந்தான் சரவணன்.

“ராக்ஸ்.”

“சரோ அமைதியாக வா. நானே செம காண்டில் இருக்கேன். அந்த சிடுமுஞ்சி இப்ப நம்ம கிளையண்ட். நம்மளை வேற கண்டுபிடிச்சுட்டான். அவன் பேசறதக் கேட்டாவே இரிடேட் ஆகுது.”

“என்ன கண்டுபிடிச்சாட்டாரா?”

“ஆமாடா. எதாவது மீட்டிங்க்னா நீ மட்டும் போ. அவனைப் பார்க்க எனக்கு இஷ்டமே இல்லை. அவனைப் பார்த்தால் இன்னும் இரிடேட் ஆகும்.”

“சரிமா பார்த்துக்கலாம். கோபப்படாமல் கூலா டீல் பண்ணுவோம்.”

“ம்ம்ம்..” ஆனாலும் ராகாவின் மனம் இன்னும் கனன்று கொண்டுதான் இருந்தது.

“டேய் காரோட ரூஃபை ஓப்பன் பண்ணி விடுடா.”

“சும்மா இரு ராகா. விண்டோஸ் எல்லாம் ஓப்பனில் தான் இருக்கு. நீ எந்திரிச்சு நின்னு கத்துவ. சேரியில் வேற இருக்க. விழுந்திடப் போற.” நண்பன் எச்சரிக்க அதன் பொருட்படுத்தினால் அவள் ராகா இல்லையே! மேலும் அடம்பிடிக்க வேறு வழியின்றி கார் மேற்கூரையின் கதவைத் திறந்து விட்டான். ஹீல்சைக் கழற்றிவிட்டு சீட்டின் மேல் ஏறி நின்று, தலையை வெளியே நீட்டி, கைகளையும் நீட்டிக் கொண்டாள்.

விழிகளை மூடி, முகத்தில் மோதும் குளிர்க்காற்றை உள்ளிழுத்தாள். காரின் வேகத்தில், அவள் தலைமுடி பின்னோக்கிப் பறந்தது.

1000182902.jpg


விழிகளைத் திறந்தவள், “ஊ ஊ…” எனக் கத்தினாள்.
அப்போது அவர்களைக் கடந்து பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவரும் அவளைப் போலவே கத்தினர்.

“ராகா அமைதியாக உட்காருமா. பாரு அவங்க எல்லாம் கத்தறாங்க.”
ராகா அமரவில்லையே. மேலும் கத்தினாள். தன் நண்பி அடங்கமாட்டாள் என்பதால் சாலையில் மட்டும் கவனத்தை வைத்தான் சரவணன்.

“நீ ரொம்ப அழகாக இருக்க” பைக்கில் இருந்த இளைஞன் கத்தினான்.

“தேங்க் யூ. ஆனால் இப்படி மத்த நாள் எங்கிட்ட சொல்லாத. பிச்சிடுவேன். குட் நைட்.” என அவர்களை மிரட்டினாள்.

“நீ உன் கையால் பிச்சாலும் ஒகேதான்.” என்றான் ஒருவன்.

இப்போது டிரைவிங்க் சீட்டில் இருக்கும் கண்ணாடியை இறக்கிய சரவணன், “டேய் தம்பிகளா! தப்பிச்சு ஓடிடுங்க. மாரியாத்தா இப்பத்தான் மலை ஏறி இருக்கு. இறங்குனா அடிச்சுடுவா. அதுக்குள்ள இடத்தைக் காலி பண்ணுங்கடா. அவங்க இன்னிக்கு செம கோபத்தில் இருக்காங்க. போங்கடா.” என்றான்.

“என்ன பிரதர் உங்க ஆளா?” பைக்கில் இருந்தவன் கேட்டான்.

“பிரண்டுடா. கிளம்புங்கடா முதலில். அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.”

“ஓகே பிரதர் பார்த்து.”
உடனே அவர்கள் பைக்கை முடுக்கி முன்னே சென்றனர்.

“ராகா கீழ இறங்கு பக்கி. இம்சை பண்ணாத.”

“போடா. காரை ஓட்டு நீ. அவனுகதான் போயிட்டாங்கல்ல. அப்புறம் என்ன?”

வேடிக்கைப் பார்த்தப்படி வந்தாள் ராகவர்சினி. நடப்பதை எல்லாம் கவனித்தப்படி அவன் பின்னால் காரில் வந்து கொண்டிருந்தான் நந்தன்.

‘ரவுடி பேபிதான். இத்தூணுண்டு இருந்துட்டு என்ன என்ன அலப்பறை செய்யறா!’ என அவன் உதடுகள் தானாக முனு முனுத்தன.

சிறிது நேரம் கழித்து காரினுள் அமர்ந்து கொண்டாள் ராகா.

“இப்ப ஓகேவா?”

“ஓகே சரோ. இனிமேல் தேவையில்லாமல் அந்த சி.பி.கே கூட பேச்சு வார்த்தை வச்சுக்கக் கூடாது. வேலை மட்டும்தான். அவனை எல்லாம் தலையில் ஏத்திகிட்டா நாம நிம்மதியாக இருக்க முடியாது. கொசு கடிக்கும் தான் அதுக்குனு அதைப் பத்தி நாம நினைச்சுட்டே இருக்க முடியாது.”
என்றாளே பார்க்கலாம்.

சரவணன் நினைத்துக் கொண்டான், ‘அடியே அவர் முன்னாடி நீ‌ தான் கொசு மாதிரி இருக்க. இதை மட்டும் அவர் கேட்கனும். உன்னை அப்படியே நசுக்கிப் போட்டுருவார்’ நினைப்பது மட்டும் தான் வெளியில் சொன்னால் அவனை சும்மா விட்டு விடுவாளா? அதனால் மிகச் சிறந்த ஆயுதமான அமைதியைக் கையில் எடுத்து தலையை மட்டும் ஆட்டினான்.

“சரி பக்கி. நாளைக்குப் பார்க்கலாம்”
வீட்டில் அமர்ந்திருந்த நந்தன் சம்ருதா கூறியதை யோசித்தவண்ணம் அமர்ந்திருந்தான்.

“ரகு இது உன்னோட இயல்பு கிடையாது. நீ இந்தப் பொண்ணு விஷயத்தில் ரொம்ப இன்வால்வ் ஆகறமாதிரி இருக்கு”

“ச்சே அப்படி எல்லாம் இல்லை.”

அவன் தோளைத் தட்டியபடி சம்ருதா சென்றுவிட்டாள். அதன் பின் தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றவன் வரும் வழியில் அவளின் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான்.

வீட்டில் வந்து யோசித்த போது இனி அவள் விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்தான்.

நாட்கள் நகர்ந்தது.
ஊட்டியில் ரகு நந்தவர்மன் புதிதாக ஒரு எஸ்டேட்டை வாங்கி இருந்தான். அதில் மாபெரும் தேயிலைப் பொடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தது. அதனுடைய கணக்குகளைப் பார்க்க அங்கேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதலில் சரவணன் செல்வதாக இருக்க, அவனுக்கு இன்னொரு கம்பெனியில் வேலை வந்துவிட்டது. அதனால் கடைசி நேரத்தில் ராகவர்சினியைப் போகச் சொல்லிவிட்டார்கள்.
நந்தனுடன் இருக்கும் மோதல்களைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை ராகா. அதை முற்றிலும் ஒதுக்கிவிட்டு ஊட்டி செல்லத் தேவையான உடைமைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய தந்தை அறைக்குள் வந்தார்.

“ராகாம்மா”

“அப்பா வாங்க. இப்பதான் டிரஸ் எடுத்து வச்சுட்டு இருக்கேன்”

“நீ தனியா போகனுமா ராகா? அப்பா வேணால் கூட வரட்டுமா?”
அழகாச் சிரித்தாள் ராகா.

“என்னப்பா ஊட்டியில் என்னை யாராவது தூக்கிட்டுப் போயிருவாங்களா என்ன? ஐஞ்சு நாள். அப்புறம் திரும்பி வந்துடுவேன். இதுக்கு எதுக்கு நீங்க?”

“இல்லைம்மா. சரவணாவும் கூட இல்லை. நீ தனியாகப் போய் அங்க தங்கி இருக்கனும். அதான் கவலையாக இருக்கு”

“அப்பா இப்படி எல்லாம் பிஸ்னஸ் டிரிப் போறது சாதாரணம். இதுக்குப் போய் ரொம்ப யோசிச்சுட்டு? எத்தனை தடவை நான் ஊட்டி போயிட்டு வந்துருக்கேன். நீங்க இங்க வொர்க் பாருங்க. நான் இப்படி மின்னல் மாதிரி போயிட்டு இப்படி வந்தறேன்”

“கார் எடுத்துட்டுப் போகலாம்ல.”

“தனியாக ஓட்டிட்டு போக சோம்பேறித்தனமாக இருக்குப்பா. அங்கேயே கார் அரேஞ்ச் செஞ்சு தருவாங்க. நான் பஸ்ஸில் டிராவல் செஞ்சு ரொம்ப நாளாச்சு. அதில் போறேன். அப்படி எஞ்சாய் பண்ணிட்டு, புது பிரண்ட்ஸ் பிடிக்கலாம்.”

ஒருவாறாகத் தந்தையை சமாதானம் செய்து, தன் உடைமைகளை ஒரு டிராலியில் எடுத்து அடுக்கி வைத்தாள் ராகா. இரவு பேருந்தில் ஏற வேண்டும்.
தேவையானவற்றை அடுக்கி முடித்தவள் அலுவலகம் கிளம்பினாள். சரவணா வெளியில் சென்றிருக்க, ராகா தான் முடிக்க வேண்டிய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மதியம் அவளுடைய சீஃப் ஆடிட்டர் வந்தார்.

“வர்சினி எப்ப கிளம்புற?”

“இன்னிக்கு நைட் பஸ்ஸில் டிக்கெட் போட்டிருக்கேன். எல்லாம் ரெடி”

“நீ ஒன்னு பண்ணு. ரகு இன்னிக்கு நைட் ஊட்டி போறேனு சொன்னாரு. நீ அவரோட போயிக்கோ. சேஃபாவும் இருக்கும்.”

இதைக் கேட்டதும் ராகாவுக்கு பிடிக்கவில்லை. அவனுடன் பயணம் செய்வதா? அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“இல்லை பரவால்லை சார். நான் பஸ்ஸிலேயே போயிக்கிறேன். அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு?” அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு மறுத்தாள்.

“இரு மா நீ. சரவணாவும் இல்லை. உங்க அப்பா ஏற்கனவே நீ ஐஞ்சு நாள் போறேனு வருத்தப்பட்டு இருந்தாரு. ரகு கூட அனுப்பி வச்சா கொஞ்சம் எனக்கும் நிம்மதியாக இருக்கும்.”

ராகாவின் அப்பாவும், அவரும் நண்பர்கள் என்பதால் ராகாவின் மீது சீஃப் ஆடிட்டருக்கு மிகவும் அக்கறை உண்டு. பெண் என்பதால் அவளின் பாதுகாப்புப் பற்றிக் கவலை உண்டு. அது மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் ஒரே பெண் அவள்தான்.

அதனால் எந்தப் பிரச்சினையும் அவளுக்கு நேரிடக் கூடாது என்பதில் எப்போதும் அவருக்கும் கவனம் உண்டு. ராகா எப்போதும் கர்ணனின் கவச குண்டலம் போன்று சரவணனனை வைத்துக் கொண்டிருக்க, அவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார். இப்போது தனியே செல்ல வேண்டும் என்பதால் யோசிக்கிறார்.

‘ரைட் இனி இவரு முடிவெடுத்துட்டாரு. வேலையிலும் சரி இதிலும் சேரி. இந்த கொடாக்கண்டனை வச்சுகிட்டு நான் படற பாடு இருக்கே. அப்போவோட பிரண்ட், ஆட்டுகுட்டி பிரண்டுனு இந்த தெரிஞ்சவங்க இருக்கற இடத்தில் வேலை பார்க்கக் கூடாது. இனி அவரே என்னைத் தூக்கி அந்தக் காரில் போட்டு அனுப்பினாலும் அனுப்புவாரு. சொல்ல முடியாது.’ என அவரின் அக்கரை சர்க்கரையாக எண்ணாமல் அலுத்துக் கொண்டாள்.

சில சமயம் அவளுடன் இருப்பவர்கள், அவளை மிகவும் அதிகமாகப் பாதுகாக்க முயலுவது போன்று தோன்றும். இனி நந்தனுடன் பயணிக்கப் போகும் விதியை எண்ணி நொந்தபடி தலையாட்டினாள் ராகா.

‘நந்தனுக்கு பதிலாக நொந்தனு வச்சுருக்கலாம்’ என மனதில் வர்மனை வறுக்கவும் தவறவில்லை ரவுடிபேபி.

ரகுவை கைப்பேசியில் அழைத்தார் ஆடிட்டர்.

“ஹலோ சொல்லுங்க சார்.”

“ரகு நம்ம ஆடிட்டர் ராகவர்சினி நைட் பஸ்ஸில் தனியாக ஊருக்கு கிளம்புறாங்க. நீங்களும் இன்னிக்கு நைட் போறீங்க. அப்படியே ராகாவும் கூட்டிட்டு போனீங்கனா நல்லாயிருக்கும். நைட் தனியாகப் போகனும். உங்க கூட போனா எங்களுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும்.”

‘எதே ரவுடி பேபிக்கு நான் பாதுகாப்பா? அவகிட்ட இருந்துதான் எல்லாரையும் காப்பத்தனும்’ என நினைத்துக் கொண்டான் ரகு.

“ஓகே சார். நானே பிக்கப் அப் செஞ்சுகிறேன். அவங்களுக்கு பிக்கப் லெகேசன் நான் ஷேர் பண்ணிடறேன்”

“தேங்க் யூப்பா”

“என்ன சார்? இதுக்கு எதுக்கு தேங்க்ஸ். அவங்க நம்ம வேலையாத்தான் வராங்க. நாமதானே பார்த்துக்கனும்.”


“சரிப்பா வச்சுடறேன்.

“ஓகே சார்.” என அழைப்பைத் துண்டித்தார்.

“ராகா நான் பேசிட்டேன். உனக்கு லொகேஷன் வரும். நீ சரவணோட போய் காரில் போயிக்கோ”

“ஓகே சார். தேங்க்ஸ்.”

“பத்திரமா போயிட்டு வாம்மா.” அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு தலையாட்டினாள் ராகா.

அவர் போனதும் தனது நண்பனுக்கு அழைத்து விட்டாள்.

“சொல்லு ராக்ஸ்”

“சரோ ஈவினிங்க் நான் சிபிகே கூட டிராவல் பண்ணப் போறேன். சீஃப் ஆடிட்டர் ஏற்பாடு”

மறுமுனையில் சரவணன் சத்தமாகச் சிரித்தான்.

“என்னடா சிரிப்பு?”

“ஒன்னுமில்லைமா. அவரோட நிலைமையை நினைச்சு சிரிச்சேன்.”

“அடேய்!!” பற்களைக் கடித்தாள் ராகா.

“விடு ராக்ஸ் பார்த்துக்கலாம். ஈவினிங்க் வரேன் ரெடியா இரு. எங்க விடனுமோ விட்றேன். வைக்கிறேன்”

“ம்ம்ம்ம்.”
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.


மாலை நேரம், நந்தன் கூறிய இடத்தில் சரவணனுடன் காத்திருந்தாள் ராகா.

அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பயணத்திற்கு எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தவளுக்கு அருகில் வந்து நின்றது நந்தனின் கார்.
 
  • Love
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
எதுக்கு இந்த அம்மினிக்கு இவ்லோ பில்டப்