• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 17.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 17.

நிக்கியோடான விஷ்வாவின் ‘உறவு’ தொடர்கதையாகிப் போக, அவள் புதிதாக நடித்த படம், சக்கைபோடு போட்டது. அதுவும் அந்த படத்துக்கென அவள் எடுத்த உடல் உழைப்பும், மெனக்கெடலும் பாராட்டை பெற்றுத் தர, அவளைக் கையில் பிடிக்கவே முடியவில்லை.

அடுத்த படத்துக்கு அவள் ஒரு மாத இடைவெளி எடுத்திருக்க, அந்த நேரத்தில் தன் உடலை சாதாரண நிலைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

அதற்கென அவள் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்வதாக அவனிடம் சொல்ல, விஷ்வாவுக்கோ அவளை விட்டு இருக்க முடியாது என்னும் நிலையே.

“நிக்கி... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... பிறகு நீ எங்கே வேணா போ” அவன் சொல்ல, அவனிடம் ஆடித் தீர்த்துவிட்டாள்.

“இங்கே பாருங்க விச்சு... சினிமாவில் நடிக்க வரணும்னு அவ்வளவு பிடிவாதமா எங்க வீட்டில் இருந்து சாதிச்சு இருக்கேன். இந்த கனவுக்கன்னி பட்டம் எல்லாம் என் கழுத்தில் தாலி ஏறிட்டா எதுக்கும் இல்லாமல் போய்டும்.

“என்னால் இதை அப்படி எல்லாம் தூக்கிப் போட முடியாது. இப்போ கல்யாணம் பண்ணிட்ட உடனே என்ன நமக்குள் மாறிடும்? நினைச்ச நேரம் நாம ஒண்ணா இருக்கோம்... எல்லா விதத்திலும் நான் உங்களுக்கு திருப்தி அளிக்கறேன்.

“இதுக்கு மேல என்ன எதிர்பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றீங்க? இன்னும் ஒரு அஞ்சு, பத்து வருஷத்துக்கு இதைப்பத்தி பேசாதீங்க. நீங்களும் வேலையைப் பாருங்க, என்னையும் வேலையைப் பார்க்க விடுங்க” சொன்னவள், வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குப் பறந்திருந்தாள்.

அவள் என்னவோ அனைத்தையும் சுலபமாக சொல்லிவிட்டு சென்றுவிட, அவன்தான் குழம்பிப் போனான்.

‘இவ என்ன கல்யாணம் பண்ணிக்கற ஐடியால இருக்காளா? இல்லன்னா இப்படியே மெயின்டெயின் செய்ய நினைக்கறாளா?’ அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

அதே நேரம், அவனது வீட்டில் இருந்து அழைப்பு வர, வீட்டுக்குப் போய் நாட்கள் ஆகிவிட்டது என்பதால், அன்று மாலையில் வீட்டுக்குப் போனான்.

அந்த மாளிகை அவனை கைநீட்டி வரவேற்க, ‘ச்சே... ஆசையா கட்டின வீட்டில், நிம்மதியா தூங்கி எழக் கூட முடியலையே’ எண்ணியவாறே காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போனான்.

“சாமி... வாய்யா... வர்றேன்னு சொல்லவே இல்லையே... எப்படிப்பா இருக்க?” கேட்ட அவனது தாய், அவனை ஓடி வந்து வரவேற்றார்.

“நல்லா இருக்கேன்ம்மா, நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க? மத்தவங்க எல்லாரும் எங்கம்மா? யாரையுமே காணோம்?” அவன் கேட்க, சற்று தடுமாறிப் போனார்.

“அவங்களாப்பா... இப்போ வரச் சொல்றேன்... நீ போய் குளிச்சுட்டு வா” அவனை அனுப்ப முயல,

“தம்பியை எங்கே? அறிவு... அறிவு...” அவன் இந்த நேரம் வீட்டில்தான் இருப்பான் என்பதால் அழைத்தான்.

“அவன் ப்ரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கான்ப்பா... நைட் வந்துடுவான். நான் உனக்கு குடிக்க சூடா டீ போட்டு கொண்டு வர்றேன்” சொன்னவர் கிச்சனுக்கு விரைந்தார்.

“ப்ரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கானா? அவன் வண்டி வெளியே நிக்குது” தாயை அவன் தடுக்க, அவரோ விழித்தார்.

“அது... அது... ப்ரண்ட்ஸ் வண்டியில் போயிருக்கான்” வேகமாக சமாளித்தார்.

“அப்போ அப்பா... அப்பா எங்க போயிருக்கார்?” அவருக்குத்தான் வேலை எதுவும் இல்லையே... என்பதுபோல் அவனது குரல் ஒலித்தது.

“அவரு காய்கறி வாங்கப் போயிருக்கார்... நீ குளிச்சுட்டு வாப்பா. டீ குடிச்சுட்டே பேசலாம்” அவரும் எவ்வளவு நேரம் சமாளிப்பதாம்?

“தோட்டக்காரனும், வேலைக்காரங்களும் எங்க? செக்கியூரிட்டி மட்டும் நிக்கறார்?” தாயிடம் கேட்டான்.

“எல்லாரும் பகல்லதானப்பா இருப்பாங்க... இப்போ எப்படி இருப்பாங்க?” தாய் கேட்க, ‘அதுவும் சரிதான்’ என எண்ணியவாறே தன் அறைக்குச் சென்றான்.

அப்பொழுதுதான் போனமுறை இங்கே வந்திருந்த பொழுது அவர்களோடு போட்ட சண்டையும், அதன் பிறகு இங்கே வராமலே போனதும் நினைவுக்கு வர, தன்னையே நொந்துகொண்டான்.

‘நடுவில் இவங்ககிட்டே எல்லாம் பேசி இருக்கணும்...’ காலம் கடந்த நினைவு.

அவன் தன் அறைக்குச் சென்றவுடன், வேகமாக அலைபேசியை எடுத்த வடிவு, மகனுக்கும், கணவனுக்கும் அழைக்க, பொதுவாக அந்த நேரத்துக்கு அழைக்க மாட்டார் என்பதால் இருவரும் அழைப்பை ஏற்றார்கள்.

“என்னம்மா சொல்லுங்க... எதுக்கு இந்த நேரம் கூப்ட்டு இருக்கீங்க?” அறிவு தன் வண்டியை தெருவோரம் நிறுத்தியவாறே தாயிடம் கேட்டான்.

“உங்க அண்ணா வீட்டுக்கு வந்திருக்கான்டா... வந்த உடனே உன்னைத்தான் கேட்டான். வண்டி நிக்குது, வேலைக்காரங்க எல்லாம் எங்க? அப்பா எங்கன்னு ஒரே கேள்விதான்... கிளம்பி வாப்பா” அவர் அழைக்க, அவனுக்கு கோபம்தான் வந்தது.

“அம்மா... நான் இப்போ வேலையில் இருக்கேன்... வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுது. இப்போ எப்படி லீவ் கேட்க முடியும்? நைட் வந்து பார்த்துக்கறேன்... நீங்க அப்பாவை வரச் சொல்லுங்க” சொன்னவன், பீட்ஸாவை டெலிவரி செய்யப் போனான்.

அவர் கணவனுக்கு அழைக்க, “இந்த சவாரியை இறக்கிட்டு வீட்டுக்கு வாறேன் வடிவு... வர்றப்போ காய் வாங்கிட்டே வர்றேன்” சொன்னவர் அலைபேசியை வைக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தார்.

அப்படி ஒன்றும் பெரிதாக ஆறுதல் பட்டுக்கொள்ள முடியாதுதான்... தகப்பனும், மகனும் கட்டித் தழுவி பேசிக்கொள்ள மாட்டார்களே. எப்படியோ தன்னிடம் கேள்வி கேட்பது குறைந்துவிடும் என்பதால் ஆறுதலானார்.

விஷ்வா கீழே இறங்கி வர, அந்த நேரம் அங்கே வந்தார் கோட்டைச்சாமி. வெளியே ஆட்டோவின் சத்தம் கேட்ட நொடியே அவனது புருவம் முடிச்சிட்டது.

அவன் வெளியே வந்து எட்டிப் பார்க்க, காய்கறி பையோடு அவர் உள்ளே வந்து கொண்டிருந்தார். தாய்க்கு அவனிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்க, ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்துகொண்டே இருக்க, “இன்னுமா அறிவு வரல? டைம் பத்தாகுது... ப்ரண்ட்ஸ் கூட வெளிய போனாலும், ஒன்பது மணிக்குள்ள வீட்ல இருக்கணும்னு சொல்ல மாட்டீங்க?

“அவனை நம்பித்தானே நான் தைரியமா வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். அவன் இப்படி ஊர் சுத்திட்டு இருக்கறானா? எப்போ வருவான்? ஃபோனைப் போடுங்க...” சொன்னவன் தாயைப் பார்த்தான்.

வேலை நேரத்தில் மகனைத் தொல்லை செய்ய மனமின்றி அவர் கையைப் பிசைய, “ஃபோனைப் போடலையா? சரி, நானே போடறேன்...” சொன்னவன் அவனுக்கு அழைக்க, அப்பொழுது வேறு வீட்டுக்கு டெலிவரிக்கு சென்று கொண்டிருந்தான் அறிவு.

விஷ்வாவின் அழைப்பை பார்த்தவனுக்கு, இந்த அழைப்புக்காக ஒரு காலத்தில் ஏங்கியது எல்லாம் நினைவுக்கு வர, இப்பொழுது அதை எடுக்க மனமின்றி அப்படியே விடுத்தான்.

“என் ஃபோனை எடுக்க முடியாத அளவுக்கு ப்ரண்ட்ஸ் கூட பிஸியா? யார் பணம்? ப்ரண்ட்ஸ் கூட ஊர்சுத்த போயிருக்கறதே என் பணத்தில்தான்... அவன் என் போனை எடுக்க மாட்டானா?” தான் அழைத்தும் அவன் அழைப்பை எடுக்கவில்லையே என்ற கோபத்தில் வார்த்தைகளை சிதறடித்தான்.

“அவன் ஒண்ணும் ப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்தப் போகலை... வேலைக்குப் போயிருக்கான்” கோட்டைச்சாமி சொல்ல, வடிவு அவரைப் பேச விடாமல் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

“என்னங்க... வேண்டாம்...” ‘அவன் இப்போ போய்டுவான்...’ என கண்களால் ஜாடை பேச, அது அவனுக்குப் புரிந்தது.

“என்ன வேலைக்கா? என்ன வேலை? எப்போ இருந்து போறான்? எதுக்குப் போறான்? அதுக்கு என்ன அவசியம் வந்தது?” கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அந்த வீடே அதிர கத்தினான்.

“அவன் வேலைக்குப் போக ஆரம்பிச்சு எட்டு மாசமாச்சு... நானும் ஆட்டோவை கையில் எடுத்து ஒரு வருஷம் ஆகப் போகுது. எங்களை நாங்க பார்த்துக்கறோம்ப்பா... தம்பியோட படிப்பு, சாப்பாடுக்கு எல்லாம் என்னாலேயே உழைக்க முடியும்.

“இந்த வீட்ல வாடகை கொடுக்காம தங்கிகிட்டு இருக்கோம், அது மட்டும்தான். சும்மா எல்லாம் இல்ல... உங்க அம்மா, வீட்டை சுத்தம்பண்ற வேலையை நல்லாவே செய்யறா... நான் தோட்டம், பின்னாடி இடத்தை பராமரிக்கறது எல்லாம் செய்யறேன்.

“வேலைக்காரங்க வேலையை நாங்க பார்த்துக்கறோம்... பெத்த பிள்ளைகிட்டன்னாலும்... ஓசி சாப்பாடு உடம்புல ஒட்டாதுப்பா. உழைச்சு சாப்பிடறதில் எங்களுக்கு எந்த கௌரவ குறைச்சலும் இல்லை” கோட்டைச்சாமி பேசப் பேச, அவன் எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.

அவன் ஒரு வருடமாக அங்கே வருவதே இல்லை... அதற்குள்ளாக, அங்கே நேர்ந்திருக்கும் மாற்றம்... ‘அப்போ நான் யாருக்காக இவ்வளவு சம்பாதிக்கறேன்?’ அவன் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளம் அவன் கண்ணுக்குள் உலா போனது.

“எதுக்குப்பா இதெல்லாம்?” அவர் தகர்ந்துபோய் கேட்க,

“நீங்க திங்கறது யார் பணம்ன்னு நீ கேட்டுடக் கூடாது பார்... வடிவு, சோத்தை எடுத்து வை... பசிக்குது” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவர் செல்ல, அவன் அங்கேயே நின்றிருந்தான்.

“ஐயா... நீ எதுவும் மனசுக்குள்ள வச்சுக்காதய்யா...” தாய் அவனை சமாதானம் செய்ய முயல,

“நான் எதுவுமே செய்யக் கூடாதாம்மா?” அவன் வேதனையாக கேட்க, தாயிடம் ஒரு அழுத்தமான அமைதியே.

இடையில் ஒரு முறை அவனை நேரில் பார்த்து, அவனுக்கு பெண் பார்த்திருப்பதாக சொல்லப் போயிருக்க, அன்று நடந்தது இன்றும் வடிவின் தொண்டையை நெரித்தது.

வந்து செல்லும் தூரத்தில் இருக்கும் தங்கள் வீட்டுக்கே அவன் வராமல் போக, அவன் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.

‘அங்கே படுக்கற நேரம், இங்கே வந்து படுக்கலாமேப்பா...’ அவனிடம் கேட்க,

“படுக்கற ரெண்டுமணி நேரத்தை கார்லேயே தூங்க முடியுமா? நேரம் கெட்ட நேரத்தில் படுப்பேன், வேண்டாம்...” அவன் உறுதியாக மறுத்திருக்க, அதிலும் தோல்வியே.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
சென்னையில் இருக்கும் மகனை, ஒரு வருடமாக பார்க்க கூட முடியவில்லை என்றால் எப்படி? எனவே அன்று அவனைப் பார்த்தே ஆகவேண்டும் என வந்திருந்தார்கள்.

“எதுக்கு இப்போ இங்கே வந்தீங்க? யாராவது பார்த்தா நான் என்னன்னு விளக்கம் கொடுக்கறது?” தங்களைப் பார்த்தவுடன் பாசமாக பேசுவான் என எதிர்பார்த்தவர்களுக்கு, அவன் இப்படிப் பேசியதே பெரிய வருத்தம்.

“ஏன்ப்பா... நாங்க இங்கே எல்லாம் வரக் கூடாதா? செக்கியூரிட்டி கூட எதுவும் சொல்லலையே” தாய்தான் கேட்டார்.

“சரி என்னைப் பார்க்கத் தானே வந்தீங்க? நான் நல்லா இருக்கேன், கிளம்புங்க” அவர்களை கிளப்புவதிலேயே குறியாக இருந்தான்.

“என்ன சாமி இது? வந்தவங்கள உக்கார வச்சு கூட பேசாம...” அவனது தகப்பன் முகத்தில் கோபம் தெரியவே, மகனை அடக்க முயன்றார்.

“இங்கே என்ன விசேஷமா நடக்குது? உங்களுக்கு என்னதான் வேணும்? முதல்ல நீங்க சொல்லாமல் வந்ததே தப்பு. கிளம்புங்கன்னு சொன்னா, ஏதோ கதை சொல்றீங்க? எனக்கு தலைக்கு மேலே வேலை இருக்கு” அவனுக்கு அவர்கள் அங்கே நிற்பதே ஒருவித அவஸ்தையை கொடுத்துக் கொண்டிருந்தது.

“ஏய்... உன் புள்ளைக்கு நாம இங்கே நிக்கறது கௌரவக் குறைச்சலா இருக்காம். நம்மளை போகச் சொல்றான்...” கோட்டைச்சாமி சொல்ல, அவன் திகைத்தான்.

“என்னப்பா பேசறீங்க? வர வர என்னைக் குறை சொல்றதே உங்களுக்கு வேலையா போச்சு?” அவரிடம் சாடினான்.

வடிவுமே, “நம்ம புள்ளையை அப்படிச் சொல்லாதீங்கங்க, அவன் நம்ம குல சாமி” வடிவு மகனைத் தாங்க, கோட்டைச்சாமி அதற்கு மேலே எதையும் பேசவில்லை.

நிஜத்தில் இப்பொழுது வேதாந்தின் காதுக்கு இவர்கள் இங்கே வந்த தகவல் செல்லுமே என்பதும், இங்கே யாராவது இவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் தோற்றத்தையும், உடையையும் கவனித்து, தன்னை எப்படி எடை போடுவார்கள்?’ என்பதே அவனது எண்ண ஓட்டமாக இருந்தது.

கீழ்மட்டத்தில் இருந்து, கனவு உலகுக்குள் வந்தது, துவக்கத்தில் மிகவும் பெருமையாக தோன்றிய ஒரு விஷயம், நாளடைவில் அவமானமாகத் தெரிவதை என்ன செய்ய?

“ம்ச்... நீங்க வாங்க...” அவர்களை அழைத்துக்கொண்டு பின்பக்கம் இருந்த வீட்டுக்குச் சென்றான்.

“முருகா, மூணு டீ...” அங்கே வந்த முருகனுக்கு குரல் கொடுத்துவிட்டு சென்றான்.

டீ வரும் வரைக்கும், வீட்டைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தார்கள். அது வரவே, “டீயைக் குடிங்க...” சொன்னவன், தானும் ஒன்றை எடுத்து பருகினான்.

டீ குடித்து முடிக்கவே, “எப்பா... இந்த பொண்ணோட போட்டோவைப் பாருப்பா” தாய் அவன் பக்கமாக நீட்ட, அதை அவன் பார்வையில் கூட தீண்டவில்லை.

“அம்மா, இந்த பொண்ணு பார்க்கற வேலையே வேண்டாம்... விடுங்க...” அவன் அழுத்திச் சொல்ல, பெற்றவர்கள் விழித்தார்கள்.

“உனக்கு வயசு போய்ட்டே இருக்குப்பா... இப்போ நீ இதே வீட்ல, பொண்டாட்டி, குழந்தையோட இருந்தா எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். உன்னை அவ பார்த்துப்பா... நடக்க வேண்டிய நல்லது எல்லாம் காலா காலத்தில் நடக்கணும் சாமி” தாய் கெஞ்ச, அவன் முகத்தில் பெரும் ஒவ்வாமையே.

“பொண்ணு யாரு...?” அவன் முகத்தைச் சுழித்தவாறே கேட்க, அதற்கே ஆர்வமானார்.

“நம்ம முத்துவோட ஒண்ணு விட்ட சொந்தத்தில் உள்ள பொண்ணு. ரெண்டு டிகிரி முடிச்சு இருக்காளாம். இங்கே சென்னையில்தான் ஏதோ கம்பெனியில் வேலை பாக்காளாம். கல்யாணத்துக்குப் பிறகு வீட்டைப் பார்த்துப்பா... நான் பேசிட்டேன்” வடிவு சொல்லிக்கொண்டே போக, தன் வாட்சை பார்த்தான்.

“அம்மா... என் உயரம் தெரியாமல் பேசிகிட்டு இருக்கீங்க. இன்னுமே இந்த அருக்காணி, மருதாணின்னு பொண்ணெல்லாம் எனக்கு செட் ஆகும்னு எப்படி எதிர்பார்க்கறீங்க?

“நானே உங்ககிட்டே சொல்லணும்னு தான் இருந்தேன்... நடிகை ‘நிக்கி’யை உங்களுக்குத் தெரியுமா?” அவன் கேட்க, அவரது சின்ன மகன் ஒரு வாரத்துக்கு முன்புதான் அவளது புகைப்படத்தைக் காட்டி, “அண்ணாவுக்கு இப்படி பொண்ணுதான் புடிக்கும். இவ பேர் நிக்கி” எனச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“அது ஆட்டக்காரிப்பா...”

“அம்மா...” அவன் போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தார். அவர்கள் ஊர் திருவிழாவில், கரகம், ஒயில், மயிலாட்டம், கூடவே இசை நாடகம் நடிக்கவரும் பெண்களை ஆட்டக்காரி எனச் சொல்வதும், அவர்களுக்கான மதிப்பும் என்னவென அவனுக்குத் தெரியுமே, எனவே கத்தி இருந்தான்.

வடிவு அவனை சிறு பயமும், வருத்தமும் கலந்த பார்வை பார்க்க, “அவ அப்பா யார்ன்னு தெரியுமா? இங்கே தயாரிக்கற பல படத்தை தயாரிக்கறதே அவர்தான். அவங்களை எல்லாம் நாம நேர்ல பார்க்கணும்னா கூட அப்பாயின்மென்ட் வாங்கணும்” அவன் பெருமையாக எடுத்துச் சொல்ல,

“நாம எதுக்குப்பா அவங்களைப் போய் பார்க்கணும்?” வடிவு புரியாமல் கேட்டார்.

“இன்னுமாடி உனக்குப் புரியல? உன் புள்ளை அவளைப் பார்த்து வச்சிருக்கான் போல... கல்யாணமாவது கட்டிப்பானா? இல்லன்னா சேத்துகிட்டு வாழுதுங்களே, அப்படியான்னு கேட்டுக்க...” கோட்டைச்சாமி இருக்கையில் இருந்து எழுந்துவிட, அவரை முறைத்துப் பார்த்தான்.

இப்பொழுது நடந்துகொண்டிருப்பது அதுதான் என்றாலும், அவரிடம் அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

“என்னப்பா பேசறீங்க? நாங்க ரெண்டுபேரும் லவ் பண்றோம். கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” அப்படியும் சொன்னான்.

“ஓ... அப்படியாப்பா... அப்போ வா... அவர் வீட்டில் போய் சம்பந்தம் பேசி முடிச்சுடலாம். கல்யாணத்த சீக்கிரம் வைக்கச் சொல்லலாம்” தகப்பன் சொல்ல,

“அவங்களை என்ன உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாமல் சும்மா உக்காந்து இருக்காங்கன்னு நினைக்கறீங்களா? அவங்களைப் பார்க்கவே அப்பாயின்மென்ட் வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா சம்பந்தம் பேசப் போலாம்னு சொல்றீங்க.

“இப்படி கந்தல் கோலத்தில் அங்கே போய் நின்னா, வாசல்ல கூர்க்கா கூட உள்ளே விட மாட்டான். அதை விட, நான் எப்படி உங்களை எல்லாம் அங்கே கூட்டி போறது?” ஒரு மாதிரி குரலில் அவன் வினவ, தங்கள் எதிரில் இருப்பது தாங்கள் பெற்று வளர்த்த மகன் இல்லை எனப் புரிந்து போனது.

அதற்கு மேலே அவர்கள் ஒரு நிமிடம் கூட அங்கே இருக்கவில்லை. “வடிவு... வா போகலாம்...” கோட்டைச்சாமி தன் மனைவியை அங்கிருந்து அழைத்து வந்துவிட்டார்.

அதையெல்லாம் நினைத்தவாறு அனைவரும் அப்படியே நின்றிருக்க, உள்ளே வந்தான் அறிவு. தன் பீட்ஸா கடையின் டிஷர்ட்டிலேயே அவன் உள்ளே வர, விஷ்வா அவனை கோபமாக முறைத்தான்.

“என்னடா கோலம் இது?” அவனிடம் சாட,

“நாம இதைப்பத்தி பேச வேண்டாம்... எனக்கு பேச விருப்பமும் இல்லை. எனிவே கங்க்ராட்ஸ்...” சொன்னவன் மாடியேற, திகைப்பாய் அவனைப் பார்த்திருந்தான்.

“தம்பி என்னவோ சொல்லிட்டுப் போறானேப்பா” வடிவு அவனிடம் கேட்க, அவனிடம் பெரும் தடுமாற்றம்.

“அது... எனக்கு அவார்ட் கிடைச்சிருக்கு...” அவன் சொல்ல,

“அம்மா... பிலிம்ஃபேர் அவார்ட்... அதெல்லாம் கிடைக்கறது ரொம்ப பெரிய விஷயம். சார் அதையெல்லாம் நம்மகிட்டே சொல்ல மாட்டார். ஏன்னா, இப்போ அவருக்கு அதையெல்லாம் சொல்ல வேற சொந்தங்கள் கிடைச்சுடுச்சுல்ல” அறிவு மேலிருந்தே கத்த, விஷ்வாவிடம் பெருத்த அமைதி.

முதல் விருது வந்தபொழுது, வீட்டையே இரண்டாக்கி குதித்த தங்கள் மகனை எண்ணிப் பார்த்த பெற்றவர்களுக்கு மனம் கலங்கி பாரமாகிப் போனது.

“டேய்... இந்த விருதே நீ சொன்ன அந்த சொந்தம் சொல்லித்தான்டா கிடைக்குது” அவர்களை விட்டுக் கொடுக்க முடியாமல் சொன்னான்.

“ஓ... அப்போ உன் திறமையால இல்ல...” அவன் சென்றுவிட, அந்த இரவு எப்படிக் கடந்தது என்றே சொல்வதற்கு இல்லை.

மறுநாள் காலையில் அவர்கள் எல்லாம் எழும் முன்பே விஷ்வா அங்கிருந்து சென்றிருக்க, அவர்களும் தங்கள் வேலைகளைப் பார்க்கப் போனார்கள்.

‘இவனுக்கு எப்படித் தெரியும்? அவார்ட் வின் பண்ணதை நான் யார்கிட்டேயும் சொல்லவே இல்லையே...’ அவன் நினைக்க, அவனது விஷயம் ஒவ்வொன்றும், வாசுதேவன் வழியாக அறிவுக்கு சென்றுகொண்டு இருந்தது அவனுக்குத் தெரியாதே.

அந்த அவார்ட் வின் செய்ததில் அவனுக்கு அத்தனை பெருமையாக இருந்தது. அந்த அவார்ட் ஃபங்க்ஷன் நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காகப் போயிருக்கும் நிக்கி, அப்பொழுதுதான் திரும்பி வருகிறாள் என்பதால், இன்னும் ஆர்வம்தான்.

எப்படியோ ஒரு வழியாக அந்த நாளும் வர, அரங்கத்துக்குச் சென்றவனை பத்திரிகை அன்பர்களும், புகைப்படக் கலைஞர்களும் மொத்தமாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், சிலர் தேடிவந்து புகைப்படம் எடுத்துச் சென்றார்கள்.

திரையில் முகம் தெரியும் ஹீரோக்களைத்தானே அனைவரும் கொண்டாடுவார்கள். அவன் அரங்கத்துக்குள் சென்று அமர, பார்வையோ நிக்கி எப்பொழுது வருவாள்?’ என சுற்றி வந்தது.

அவன் வந்த தகவலை அவளுக்குச் சொல்ல, அவள் ‘ஆன் தி வே’ என தகவல் அனுப்பி இருந்தாள். சில பல நிமிடங்களில் அவளும் வர, வந்தவளோ அவனைக் கண்டுகொள்ளாமல், ஒரு ஹீரோவின் அருகே சென்று அமர்ந்துகொள்ள, அவனுக்கு பெருத்த ஏமாற்றம்.

‘என்ன இது...?’ என அவன் நினைக்க, ‘பொது இடத்தில் கண்டுகொள்ள முடியுமா என்ன?’ தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

ஆனால் கொஞ்சமாக இருந்த தலைவலி அதிகரிக்கத் துவங்க, அவள் அந்த ஹீரோவோடு சிரித்துப் பேசி மகிழ, அவனது தலைவலி அதிகரித்தது.

ஒரு வழியாக அவனை அதிகம் சோதித்த பிறகே அவனது முறை வர, சிரித்த முகமாக மேடை ஏறினான். இந்த மேடை, அரங்கம், வண்ண விளக்குகள் அனைத்தும் அலர்ஜி, பயம் என்றாலும், அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவன் இதயம் தொண்டைக்குழியில் துடிக்க, பார்வையோ தன்னவள் இருக்கும் பக்கம்தான் பாய்ந்தது. அவளும் புன்னகை முகமாக அவனையே பார்த்திருக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.

கைத்தட்டலுக்கு மத்தியில் அவன் அவார்டை வாங்கிக் கொள்ள, அவனிடம் மைக் கொடுக்கப் பட்டது. மைக்கை வாங்கியவனுக்கு, ஒரு நடுக்கம் பிறக்க, மொத்த அரங்கமும் கறுப்பு, வெள்ளையில் மாறிப் போனது.

கூடவே மொத்தமாக வியர்த்து வழிந்தவன், “இந்த அவார்டைக் கொடுத்த ஃபிலிம்பேருக்கும், வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குனர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” சொன்னவன் வேகமாக மேடையை விட்டு இறங்கி விட்டான்.

அங்கே இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவன், ஒரு மாதிரி தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிறகுதான், அவனால் இயல்பாக முடிந்தது. தலைவலி இப்பொழுது உச்சத்துக்கு சென்றிருக்க, “நான் கிளம்பறேன்... வர்றியா?” அவன் தகவல் அனுப்ப,

‘எஸ்...’ என கண்ணடிக்கும் ஸ்மைலியோடு ரிப்ளை வர, அவனது அனைத்து வலிகளும் பறந்து ஓடும் உணர்வு.

தொடரும்......
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
319
25
28
Hosur
.meendu varatha edathula irukan
Nama aalutan avanuku uir kuduka porala
Waiting infaa
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Ithanai thiramaiyodu irukkuravanuku manitharkalay pirithu ariya theriyaleye :(

அவன் வயதுக்கு எல்லாம் மீறின செயல்கள் என்பதால், அவனுக்குத் தெரியலை.


நன்றி!
 
  • Love
Reactions: gomathy

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
அவனே விரும்பி ஏற்றுக்கொண்ட பாதை ஆனால் அதில் முட்களும், வலிகளும் மிஞ்சி இருக்கும் ,
இதை கடந்து வந்து விடுவானா விஷ்வா .?