பகுதி – 26.
விஷ்வா வீட்டுக்கு வந்த நாள் முதல், அவனது உடல்நிலையை, முடிவைத் தெரிந்துகொண்ட அவனது தாய் வடிவு அழுதே கரைய, அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.
“அம்மா, இப்படி அழுதுட்டே இருந்தா உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்?” விஷ்வா கவலையாக கேட்க, அவன் கன்னம் வருடியவரின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
“என் குல சாமிக்கு இப்படி வந்திருக்க வேண்டாம். உனக்காய்யா இப்படி? என் புள்ளை சாகறதை பார்க்கவா நான் உசுரோட இருக்கேன்?” அவர் சொல்லி அழ அவனால் தாங்க முடியவில்லை.
அந்த வீட்டில் இருந்த ஒட்டுமொத்த சந்தோஷமும் தன்னால் ஆவியாகிப் போனது புரிய, அவனால் முடியவில்லை.
அவன் வீட்டில் இருந்த ஒரு வாரத்தில், மூன்று முறை மயக்கம் போட்டு விழ, அவனை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுவதே அவர்களது வேலையாக இருந்தது.
அறிவும் தன் வேலைக்கு விடுப்பு எடுக்க, ‘தன்னால் அனைவருக்கும் துன்பம்தான்’ என எண்ணியவன் மாய்ந்து போனான்.
மூன்றாவது முறை அவன் மயக்கம் போட்டு விழ, அவனைத் தேடி வந்த மருத்துவர், “மிஸ்டர் விஷ்வா, நீங்க ஏன் உங்களையே போட்டு அழுத்தறீங்க? மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...” அவர் சொல்ல, அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
‘எல்லாத்தையும் இவ்வளவு சீக்கரமா அனுபவிச்சது, ஆடினது எல்லாம் இதுக்கா?’ அந்த நினைப்பு அவனை உள்ளுக்குள் செல்லரித்துக் கொண்டிருந்தது.
“எதையாவது பேசுங்க விஷ்வா?” அவர் அவனை பேச வைக்க முயன்றார்.
“பேசறதுக்கு என்ன இருக்கு டாக்டர்? நான் சாகப்போறேன், அவ்வளவுதான்” அவன் முடிக்க,
“என்னோட கொஞ்சம் வெளியே வரீங்களா?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.
“கொஞ்சம் வாங்க...” அவர் கட்டாயப்படுத்தவே, அரை மனதாக எழுந்தவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
‘கேன்சர் பிரிவு’ என எழுதி இருந்த கட்டிடத்துக்குள் அவனை அழைத்துச் செல்ல, நகர மறுத்து நின்றுவிட்டான்.
“எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கற மூட் இல்லை டாக்டர்...” அவன் மறுக்க,
“முதல்ல உள்ளே வாங்க... இது நீங்க நினைக்கற மாதிரி இடம் இல்லை...” சொன்னவர், அவனை அண்டர்கிரவுண்டில் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கே இருந்தவர்கள் அனைவருமே பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
அவர்களது தோற்றம், சில சோர்வான குழந்தைகள் தவிர, மற்றவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சட்டென பார்த்தால், அங்கிருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.
அவன் அங்கேயே அப்படியே நின்றுவிட, “இந்த குழந்தைகளைப் பாருங்க, அவங்களுக்குள்ளே உயிரைக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கற ஒரு வியாதி இருக்கு. ஆனாலும், அவங்க முகங்களில் ஒரு அமைதி இருக்கறது உங்களுக்குத் தெரியுதா?” கேட்டவர், அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
அவன் அமைதியாக வர, அங்கே கிடந்த ஒரு இருக்கையில் அவனை அமர வைத்து, தானும் அமர்ந்தார்.
“அவங்களும் சாகத்தான் போறாங்க விஷ்வா” அவர் சொல்ல, அவரை ஏறிட்டு பார்த்தான்.
“அவங்களால் நல்லா விளையாட முடியற நேரம், எதைப்பத்தியும் கவலையே படாமல் விளையாடுவாங்க. முடியாதப்போ சோர்ந்து படுத்துப்பாங்க, ‘எனக்கு இப்படி’ன்னு நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருக்க மாட்டாங்க.
“நீங்க இப்போ இந்த குழந்தைங்க மாதிரி இருக்க வேண்டிய நேரம். நேற்றைக்கு வரைக்கும் உங்களுக்குன்னு முடிக்க நிறைய கடமை, வேலை, டென்ஷன், பொறுப்புன்னு ஏகப்பட்டது இருந்தது.
“ஆனா இனிமேல் அப்படி எதுவும் உங்களுக்கு இல்லை. நீங்க எப்படியும் சாகப் போறீங்க... அதை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க என்பதுதான் சவால். அழுதுட்டேவும் சாகலாம்... சிரிச்சுட்டேவும் சாகலாம்... சந்தோஷமாவும் சாகலாம்...
“சாவுதான் இங்கே இருக்கும் எல்லாருக்கும் முடிவு... அது உங்களுக்கு தெரிஞ்சு, உங்க கூடவே ஓடிகிட்டு இருக்கறதுதான் ஒரு டென்ஷனை, பயத்தை கொடுக்குது. அதை விட்டு ஒழிங்களேன்...
“சொல்றது ரொம்ப ஈசி, செய்யறது கஷ்டம்னு நீங்க சொல்லலாம்... உங்க சாவு பயத்தை விட்டு வெளியே வாங்க. கொஞ்ச நாள், ஒரு புது மனுஷனா, ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சப்போ இருந்த ஒரு விஷ்வாவா வாழ்ந்து பாருங்களேன்” அவர் சொல்ல, அவன் இதழ்களில் ஒரு புன்னகை.
“என்னை சுத்தி இருக்கறவங்க அதுக்கு விட மாட்டாங்க டாக்டர்...” அவன் சொல்ல, அவன் தோளைத் தட்டினார்.
“முதல்ல இந்த சூழலை விட்டு வெளியே போங்க... ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க, புது மனிதர்கள், புது இடம், புது வாழ்க்கை... ஜஸ்ட் ட்ரை...
“இருக்கறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு இந்த உலகமே வீடு... நீங்களே புதுசா ஃபீல் பண்ணுவீங்க. ஏதாவது கஷ்டமா இருந்தா, எந்த நிமிஷமும் என்னை நீங்க காண்டேக்ட் பண்ணலாம்...” அவர் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.
வீட்டுக்கு வந்தவன், அவர் சொன்னதைக் குறித்து அதிகம் சிந்தித்தான். அதே நேரம், அன்று மாலையில் வேலையில் இருந்து வந்த அறிவு, விஷ்வாவைத் தேடி ஓடியவன், அவன் அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
“அண்ணா, இங்கே பார்...” அவன் அத்தனை பரபரப்பாக, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
‘நடிகை நிக்கி வேதாந்த், துபாயில் மாரடைப்பில் மரணம்...’ செய்தி வாசிப்பாளினி தந்தி குரலில் செய்தியை சொல்ல, அதைக் கேட்டவனுக்கு அதற்குப் பிறகு அவள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.
“என்னடா இது? இது எப்போ?” தன் தம்பியிடம் அவன் கேட்க,
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே நடந்து இருக்கும்னு சொல்றாங்க. அவங்களோட யாரோ இருந்திருக்காங்க... அது யார்ன்னு விசாரணை நடக்குது போல...” அவன் சொல்ல, விஷ்வா எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.
“அந்த டிவியை நிறுத்து...” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தான்.
“என்னண்ணா இது? அவங்களும் ட்ரக்ஸ் எடுத்துப்பாங்களா?” அவன் கேட்க, அவளது ஹார்மோன் இன்ஜெக்ஷன் விஷயங்கள் எல்லாம் அவனுக்குத் தெரிந்தாலும் அமைதியாக இருந்தான்.
“அது இனிமேல் நமக்குத் தேவை இல்லாதது விடு...” சொன்னவனுக்கு தான் எப்படி உணர எனத் தெரியாத நிலையே.
“அவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சிருக்கேன்... அது நடந்துடுச்சு...” அறிவு சொல்லச் சொல்ல, அமைதியாக படுத்துக் கொண்டான்.
‘இப்படி பொசுக்குன்னு போகத்தானா எல்லாம்?’ எண்ணியவன், அதற்கு மேலே அவளைப்பற்றி சிந்திக்கவில்லை. மனதின் ஓரம் தான் ஏமாற்றப்பட்டதின் வலியும், இப்போதைய நிலையும் அவனை அழுத்த, தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
விஷ்வா கிளம்பிச் சென்று, இரவான பிறகும் அவன் வீட்டுக்கு வரவில்லையே எனத் தேட, அவனது கார் வீட்டுக்கு வெளியிலேயே நிற்க, அவனைக் காணவில்லை.
காருக்குள் இருந்த கடிதத்தில், ‘என்னைத் தேட வேண்டாம்... நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன். நான் இறந்தால், அந்த சேதி உங்களைத் தேடி வரும்’ என்ற சேதியும், அவனது அலைபேசியும் உடன் இருக்க, அவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார்கள்.
அவனது தாய் தன் மகனைத் தேடியே ஆக வேணும், போலீசுப்புப் போகலாம் எனச் சொன்னதை எல்லாம் அறிவு கண்டுகொள்ளவே இல்லை. தன் அண்ணன் தன்னிடம் பேசியதே அவன் நினைவில் ஆடியது.
‘நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன்’ என அவன் சொல்லி இருக்க, அறிவு எப்படி அதைக் கலைக்க? இப்போதைக்கு அவர்களால் கொடுக்க முடிந்தது அது மட்டும்தான் என்கையில் வேறு என்னதான் செய்ய?
***தன் படுக்கையில் சோர்ந்துபோய் படுத்திருந்த பூமி, தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்க, அதைப் பார்த்த தேன்மொழிக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
“பூமி, போதும்... இன்னும் எவ்வளவு நேரம் அதையே பார்த்துட்டு இருப்ப? அதைக் கீழே வை...” தேன்மொழி சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.
“என்ன பூமி இது? சொல்றதை கேட்கவே மாட்டியா?” சற்று கண்டிப்புடனே கேட்டாள்.
அதற்கும் மறுப்பான தலை அசைப்பையே கொடுத்தவள், ‘நான் அவருக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேனோ?’ தன் கையில் இருந்த அலைபேசியில் டைப் செய்தவள், தேன்மொழிக்கு, ப்ரதிக் வாங்கிக் கொடுத்திருந்த புது அலைபேசிக்கு செய்தியை அனுப்பினாள்.
அதை வாசித்த தேன்மொழி, “பூமி... அதான் அவசர வேலையா போறேன், சீக்கிரமே வர்றேன்னு மெஸ்சேஜ் அனுப்பி இருக்காரே. அப்படியும் நீ இப்படி கேட்டா என்னதான் செய்யட்டும் பூமி?” கடந்த இரண்டு நாட்களாக, இதையே கேட்பவளிடம் பதில் சொல்லி முடியவில்லை.
‘இல்ல, நீ பொய் சொல்ற... அவசர வேலைன்னாலும், சொல்லிட்டு போக கூட முடியலையாமா? நான் சாகறதை பார்க்க முடியாதுன்னு விட்டுட்டு போயிட்டாரா? ஒரு வேளை அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, விட்டுட்டு போய்ட்டாரோ?’ அவள் ஒவ்வொன்றாக செய்தி அனுப்ப, வேகமாக அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி கீழே வைத்தாள்.
“அவருக்கு உன்னைப் பிடிக்காதா? யார் சொன்னா? இதைப்பார்... பார்த்துட்டு சொல்லு. ஆனா உணர்ச்சிவசப்படக் கூடாது பூமி...” ஆயிரம் விதத்தில் எச்சரிக்கை செய்தவள், அன்று மருத்துவமனையில் தான் எடுத்த வீடியோவை அவளுக்கு ஓடவிட்டு காட்டினாள்.
கடைவிழியோரம் கண்ணீர் வழிய அதைப் பார்த்தவளுக்கு... ஒரு பெரும் திகைப்பும், ஆசையும், தேகத்தில் ஒரு சிலிர்ப்பும் ஓட அந்த அலைபேசியை இமைக்க கூட மறந்து வெறித்தாள்.
அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர முயல, வேகமாக அவளைத் தாங்கி எழுப்பி அமர வைக்க உதவியவள், ஆக்ஸிஜன் மாஸ்கை சரியாக மாட்டி விட்டாள்.
பூமிகா மீண்டும் மீண்டுமாக அதையே பார்த்திருக்க, “போதும் பூமி, போனை வை...” தேன்மொழி அவள் கையில் இருந்து அலைபேசியை வாங்கி கீழே வைக்க, தன் தோழியின் முகம் பார்த்தாள்.
“என்ன பூமி?” அவள் கரத்தை பற்றிக் கொள்ள,
“நான் முழிச்சு இருந்தப்போ ஏன் அவர் ‘இதை’த் தரலை?” சின்னக் குரலில் வினவிய தோழியின் கண்களில் வழிந்த ஏக்கமும், காதலும் பெண்ணவளை புரட்டிப் போட்டது.
“அவர் நேர்ல வர்றப்போ கேளு... இனிமேல் இப்படி லூசு மாதிரி உன்னைப்போட்டு நீயே குழப்பிக்கறத்தை நிப்பாட்டு சரியா” அவள் சொல்ல, பூமிகாவின் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
“மனசை அலட்டிக்காத பூமி...” தோழியை தேற்ற முயன்றாள்.
“நான் போக முன்னாடி...” அவள் மேலே எதையும் சொல்லும் முன்பு, அவளது வாயை மூடிய தேன்மொழி மறுப்பாக தலை அசைத்தாள்.
“இப்படியெல்லாம் பேசாதே பூமி... உன்னை பேசவே விடக்கூடாதுன்னு அவர் சொல்லிட்டு போயிருக்கார்” அவள் கடிந்துகொள்ள, அமைதியாகிவிட்டாள்.
“இந்த ரூமுக்குள்ளேயே இருக்க கொடுமையா இருக்கு தேனு, கொஞ்சம் வெளியே போகலாமா?” அவள் கேட்க, சற்று நேரத்துக்கு முன்னர் வரைக்கும் எழக் கூட தெம்பின்றி இருந்த அவளை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, சட்டென அவளுக்குள் வந்துவிட்ட அந்த எனர்ஜியைப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக கூட இருந்தது.
அவர்கள் இருவரும் வெளியே வர, காவேரி அங்கே வரவே, “அத்த, சிவா எங்கே? ஆளையே காணோம்?” கண்களால் வீட்டை துழாவியவாறே கேட்டாள்.
விஷ்வா வீட்டுக்கு வந்த நாள் முதல், அவனது உடல்நிலையை, முடிவைத் தெரிந்துகொண்ட அவனது தாய் வடிவு அழுதே கரைய, அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.
“அம்மா, இப்படி அழுதுட்டே இருந்தா உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்?” விஷ்வா கவலையாக கேட்க, அவன் கன்னம் வருடியவரின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
“என் குல சாமிக்கு இப்படி வந்திருக்க வேண்டாம். உனக்காய்யா இப்படி? என் புள்ளை சாகறதை பார்க்கவா நான் உசுரோட இருக்கேன்?” அவர் சொல்லி அழ அவனால் தாங்க முடியவில்லை.
அந்த வீட்டில் இருந்த ஒட்டுமொத்த சந்தோஷமும் தன்னால் ஆவியாகிப் போனது புரிய, அவனால் முடியவில்லை.
அவன் வீட்டில் இருந்த ஒரு வாரத்தில், மூன்று முறை மயக்கம் போட்டு விழ, அவனை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுவதே அவர்களது வேலையாக இருந்தது.
அறிவும் தன் வேலைக்கு விடுப்பு எடுக்க, ‘தன்னால் அனைவருக்கும் துன்பம்தான்’ என எண்ணியவன் மாய்ந்து போனான்.
மூன்றாவது முறை அவன் மயக்கம் போட்டு விழ, அவனைத் தேடி வந்த மருத்துவர், “மிஸ்டர் விஷ்வா, நீங்க ஏன் உங்களையே போட்டு அழுத்தறீங்க? மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...” அவர் சொல்ல, அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
‘எல்லாத்தையும் இவ்வளவு சீக்கரமா அனுபவிச்சது, ஆடினது எல்லாம் இதுக்கா?’ அந்த நினைப்பு அவனை உள்ளுக்குள் செல்லரித்துக் கொண்டிருந்தது.
“எதையாவது பேசுங்க விஷ்வா?” அவர் அவனை பேச வைக்க முயன்றார்.
“பேசறதுக்கு என்ன இருக்கு டாக்டர்? நான் சாகப்போறேன், அவ்வளவுதான்” அவன் முடிக்க,
“என்னோட கொஞ்சம் வெளியே வரீங்களா?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.
“கொஞ்சம் வாங்க...” அவர் கட்டாயப்படுத்தவே, அரை மனதாக எழுந்தவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
‘கேன்சர் பிரிவு’ என எழுதி இருந்த கட்டிடத்துக்குள் அவனை அழைத்துச் செல்ல, நகர மறுத்து நின்றுவிட்டான்.
“எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கற மூட் இல்லை டாக்டர்...” அவன் மறுக்க,
“முதல்ல உள்ளே வாங்க... இது நீங்க நினைக்கற மாதிரி இடம் இல்லை...” சொன்னவர், அவனை அண்டர்கிரவுண்டில் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கே இருந்தவர்கள் அனைவருமே பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள்.
அவர்களது தோற்றம், சில சோர்வான குழந்தைகள் தவிர, மற்றவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சட்டென பார்த்தால், அங்கிருக்கும் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.
அவன் அங்கேயே அப்படியே நின்றுவிட, “இந்த குழந்தைகளைப் பாருங்க, அவங்களுக்குள்ளே உயிரைக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கற ஒரு வியாதி இருக்கு. ஆனாலும், அவங்க முகங்களில் ஒரு அமைதி இருக்கறது உங்களுக்குத் தெரியுதா?” கேட்டவர், அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
அவன் அமைதியாக வர, அங்கே கிடந்த ஒரு இருக்கையில் அவனை அமர வைத்து, தானும் அமர்ந்தார்.
“அவங்களும் சாகத்தான் போறாங்க விஷ்வா” அவர் சொல்ல, அவரை ஏறிட்டு பார்த்தான்.
“அவங்களால் நல்லா விளையாட முடியற நேரம், எதைப்பத்தியும் கவலையே படாமல் விளையாடுவாங்க. முடியாதப்போ சோர்ந்து படுத்துப்பாங்க, ‘எனக்கு இப்படி’ன்னு நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருக்க மாட்டாங்க.
“நீங்க இப்போ இந்த குழந்தைங்க மாதிரி இருக்க வேண்டிய நேரம். நேற்றைக்கு வரைக்கும் உங்களுக்குன்னு முடிக்க நிறைய கடமை, வேலை, டென்ஷன், பொறுப்புன்னு ஏகப்பட்டது இருந்தது.
“ஆனா இனிமேல் அப்படி எதுவும் உங்களுக்கு இல்லை. நீங்க எப்படியும் சாகப் போறீங்க... அதை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க என்பதுதான் சவால். அழுதுட்டேவும் சாகலாம்... சிரிச்சுட்டேவும் சாகலாம்... சந்தோஷமாவும் சாகலாம்...
“சாவுதான் இங்கே இருக்கும் எல்லாருக்கும் முடிவு... அது உங்களுக்கு தெரிஞ்சு, உங்க கூடவே ஓடிகிட்டு இருக்கறதுதான் ஒரு டென்ஷனை, பயத்தை கொடுக்குது. அதை விட்டு ஒழிங்களேன்...
“சொல்றது ரொம்ப ஈசி, செய்யறது கஷ்டம்னு நீங்க சொல்லலாம்... உங்க சாவு பயத்தை விட்டு வெளியே வாங்க. கொஞ்ச நாள், ஒரு புது மனுஷனா, ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சப்போ இருந்த ஒரு விஷ்வாவா வாழ்ந்து பாருங்களேன்” அவர் சொல்ல, அவன் இதழ்களில் ஒரு புன்னகை.
“என்னை சுத்தி இருக்கறவங்க அதுக்கு விட மாட்டாங்க டாக்டர்...” அவன் சொல்ல, அவன் தோளைத் தட்டினார்.
“முதல்ல இந்த சூழலை விட்டு வெளியே போங்க... ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க, புது மனிதர்கள், புது இடம், புது வாழ்க்கை... ஜஸ்ட் ட்ரை...
“இருக்கறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு இந்த உலகமே வீடு... நீங்களே புதுசா ஃபீல் பண்ணுவீங்க. ஏதாவது கஷ்டமா இருந்தா, எந்த நிமிஷமும் என்னை நீங்க காண்டேக்ட் பண்ணலாம்...” அவர் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.
வீட்டுக்கு வந்தவன், அவர் சொன்னதைக் குறித்து அதிகம் சிந்தித்தான். அதே நேரம், அன்று மாலையில் வேலையில் இருந்து வந்த அறிவு, விஷ்வாவைத் தேடி ஓடியவன், அவன் அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
“அண்ணா, இங்கே பார்...” அவன் அத்தனை பரபரப்பாக, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
‘நடிகை நிக்கி வேதாந்த், துபாயில் மாரடைப்பில் மரணம்...’ செய்தி வாசிப்பாளினி தந்தி குரலில் செய்தியை சொல்ல, அதைக் கேட்டவனுக்கு அதற்குப் பிறகு அவள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.
“என்னடா இது? இது எப்போ?” தன் தம்பியிடம் அவன் கேட்க,
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே நடந்து இருக்கும்னு சொல்றாங்க. அவங்களோட யாரோ இருந்திருக்காங்க... அது யார்ன்னு விசாரணை நடக்குது போல...” அவன் சொல்ல, விஷ்வா எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை.
“அந்த டிவியை நிறுத்து...” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தான்.
“என்னண்ணா இது? அவங்களும் ட்ரக்ஸ் எடுத்துப்பாங்களா?” அவன் கேட்க, அவளது ஹார்மோன் இன்ஜெக்ஷன் விஷயங்கள் எல்லாம் அவனுக்குத் தெரிந்தாலும் அமைதியாக இருந்தான்.
“அது இனிமேல் நமக்குத் தேவை இல்லாதது விடு...” சொன்னவனுக்கு தான் எப்படி உணர எனத் தெரியாத நிலையே.
“அவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சிருக்கேன்... அது நடந்துடுச்சு...” அறிவு சொல்லச் சொல்ல, அமைதியாக படுத்துக் கொண்டான்.
‘இப்படி பொசுக்குன்னு போகத்தானா எல்லாம்?’ எண்ணியவன், அதற்கு மேலே அவளைப்பற்றி சிந்திக்கவில்லை. மனதின் ஓரம் தான் ஏமாற்றப்பட்டதின் வலியும், இப்போதைய நிலையும் அவனை அழுத்த, தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
விஷ்வா கிளம்பிச் சென்று, இரவான பிறகும் அவன் வீட்டுக்கு வரவில்லையே எனத் தேட, அவனது கார் வீட்டுக்கு வெளியிலேயே நிற்க, அவனைக் காணவில்லை.
காருக்குள் இருந்த கடிதத்தில், ‘என்னைத் தேட வேண்டாம்... நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன். நான் இறந்தால், அந்த சேதி உங்களைத் தேடி வரும்’ என்ற சேதியும், அவனது அலைபேசியும் உடன் இருக்க, அவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார்கள்.
அவனது தாய் தன் மகனைத் தேடியே ஆக வேணும், போலீசுப்புப் போகலாம் எனச் சொன்னதை எல்லாம் அறிவு கண்டுகொள்ளவே இல்லை. தன் அண்ணன் தன்னிடம் பேசியதே அவன் நினைவில் ஆடியது.
‘நிம்மதியான சாவைத் தேடித் போகிறேன்’ என அவன் சொல்லி இருக்க, அறிவு எப்படி அதைக் கலைக்க? இப்போதைக்கு அவர்களால் கொடுக்க முடிந்தது அது மட்டும்தான் என்கையில் வேறு என்னதான் செய்ய?
***தன் படுக்கையில் சோர்ந்துபோய் படுத்திருந்த பூமி, தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்க, அதைப் பார்த்த தேன்மொழிக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
“பூமி, போதும்... இன்னும் எவ்வளவு நேரம் அதையே பார்த்துட்டு இருப்ப? அதைக் கீழே வை...” தேன்மொழி சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.
“என்ன பூமி இது? சொல்றதை கேட்கவே மாட்டியா?” சற்று கண்டிப்புடனே கேட்டாள்.
அதற்கும் மறுப்பான தலை அசைப்பையே கொடுத்தவள், ‘நான் அவருக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேனோ?’ தன் கையில் இருந்த அலைபேசியில் டைப் செய்தவள், தேன்மொழிக்கு, ப்ரதிக் வாங்கிக் கொடுத்திருந்த புது அலைபேசிக்கு செய்தியை அனுப்பினாள்.
அதை வாசித்த தேன்மொழி, “பூமி... அதான் அவசர வேலையா போறேன், சீக்கிரமே வர்றேன்னு மெஸ்சேஜ் அனுப்பி இருக்காரே. அப்படியும் நீ இப்படி கேட்டா என்னதான் செய்யட்டும் பூமி?” கடந்த இரண்டு நாட்களாக, இதையே கேட்பவளிடம் பதில் சொல்லி முடியவில்லை.
‘இல்ல, நீ பொய் சொல்ற... அவசர வேலைன்னாலும், சொல்லிட்டு போக கூட முடியலையாமா? நான் சாகறதை பார்க்க முடியாதுன்னு விட்டுட்டு போயிட்டாரா? ஒரு வேளை அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, விட்டுட்டு போய்ட்டாரோ?’ அவள் ஒவ்வொன்றாக செய்தி அனுப்ப, வேகமாக அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி கீழே வைத்தாள்.
“அவருக்கு உன்னைப் பிடிக்காதா? யார் சொன்னா? இதைப்பார்... பார்த்துட்டு சொல்லு. ஆனா உணர்ச்சிவசப்படக் கூடாது பூமி...” ஆயிரம் விதத்தில் எச்சரிக்கை செய்தவள், அன்று மருத்துவமனையில் தான் எடுத்த வீடியோவை அவளுக்கு ஓடவிட்டு காட்டினாள்.
கடைவிழியோரம் கண்ணீர் வழிய அதைப் பார்த்தவளுக்கு... ஒரு பெரும் திகைப்பும், ஆசையும், தேகத்தில் ஒரு சிலிர்ப்பும் ஓட அந்த அலைபேசியை இமைக்க கூட மறந்து வெறித்தாள்.
அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர முயல, வேகமாக அவளைத் தாங்கி எழுப்பி அமர வைக்க உதவியவள், ஆக்ஸிஜன் மாஸ்கை சரியாக மாட்டி விட்டாள்.
பூமிகா மீண்டும் மீண்டுமாக அதையே பார்த்திருக்க, “போதும் பூமி, போனை வை...” தேன்மொழி அவள் கையில் இருந்து அலைபேசியை வாங்கி கீழே வைக்க, தன் தோழியின் முகம் பார்த்தாள்.
“என்ன பூமி?” அவள் கரத்தை பற்றிக் கொள்ள,
“நான் முழிச்சு இருந்தப்போ ஏன் அவர் ‘இதை’த் தரலை?” சின்னக் குரலில் வினவிய தோழியின் கண்களில் வழிந்த ஏக்கமும், காதலும் பெண்ணவளை புரட்டிப் போட்டது.
“அவர் நேர்ல வர்றப்போ கேளு... இனிமேல் இப்படி லூசு மாதிரி உன்னைப்போட்டு நீயே குழப்பிக்கறத்தை நிப்பாட்டு சரியா” அவள் சொல்ல, பூமிகாவின் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
“மனசை அலட்டிக்காத பூமி...” தோழியை தேற்ற முயன்றாள்.
“நான் போக முன்னாடி...” அவள் மேலே எதையும் சொல்லும் முன்பு, அவளது வாயை மூடிய தேன்மொழி மறுப்பாக தலை அசைத்தாள்.
“இப்படியெல்லாம் பேசாதே பூமி... உன்னை பேசவே விடக்கூடாதுன்னு அவர் சொல்லிட்டு போயிருக்கார்” அவள் கடிந்துகொள்ள, அமைதியாகிவிட்டாள்.
“இந்த ரூமுக்குள்ளேயே இருக்க கொடுமையா இருக்கு தேனு, கொஞ்சம் வெளியே போகலாமா?” அவள் கேட்க, சற்று நேரத்துக்கு முன்னர் வரைக்கும் எழக் கூட தெம்பின்றி இருந்த அவளை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, சட்டென அவளுக்குள் வந்துவிட்ட அந்த எனர்ஜியைப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக கூட இருந்தது.
அவர்கள் இருவரும் வெளியே வர, காவேரி அங்கே வரவே, “அத்த, சிவா எங்கே? ஆளையே காணோம்?” கண்களால் வீட்டை துழாவியவாறே கேட்டாள்.