• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 26)-நிறைவுப் பகுதி!

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
அருமையான கதை சகி 👌👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍💐💐
நன்றிகள் சகி 😍❤️❤️
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
நன்றிகள் சகி 😍❤️❤️
கௌதமியின் தாய் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லையே 😩😩😩 ஒரு தண்டனையும் அவர்களுக்கு இல்லையா 🤨🤨🤨
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
ஓஹ்... கௌதமி தெரிஞ்சே தான் போயிருக்காங்க...
அவன கொன்னது சரிதான்...😡

அவருக்கு பப்லு தான் தான் னு தெரிஞ்சிடுச்சு... லவ் சொல்லிக்கிட்டாங்க... 😍

ஆது க்கு தினேஷ் கூட பேபி கூடவும் இனி ஒரு நல்ல லைப்... 🥰

கௌஷிக்... வர்ஷி pair அஹ்... சரி தான்... ❤

விஜய் லைப் அஹ் வசந்தமா மாத்திட்டாங்க... ஆமா... 🥰🥰

விஜய் - கௌதமி...😍

கியூட் pair ப்பா... 😍

என்னைக்கும் எல்லாரும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

லவ்லி ஸ்டோரி... ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr... 🥰🤝

All the best for all your upcomming novels... 💞
 

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
கௌதமியின் தாய் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லையே 😩😩😩 ஒரு தண்டனையும் அவர்களுக்கு இல்லையா 🤨🤨🤨
காலம் அவர்களுக்கு தண்டனை கொடுக்குமென்று நம்புவோம் சகி. வார்த்தை உபயோகம் மட்டுப்படுத்தப் பட்டது. ஸோ எல்லாத்தையும் விளக்கமா கொடுக்க முடியல.
நன்றி ❤
 

Upparu

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
225
ஓஹ்... கௌதமி தெரிஞ்சே தான் போயிருக்காங்க...
அவன கொன்னது சரிதான்...😡

அவருக்கு பப்லு தான் தான் னு தெரிஞ்சிடுச்சு... லவ் சொல்லிக்கிட்டாங்க... 😍

ஆது க்கு தினேஷ் கூட பேபி கூடவும் இனி ஒரு நல்ல லைப்... 🥰

கௌஷிக்... வர்ஷி pair அஹ்... சரி தான்... ❤

விஜய் லைப் அஹ் வசந்தமா மாத்திட்டாங்க... ஆமா... 🥰🥰

விஜய் - கௌதமி...😍

கியூட் pair ப்பா... 😍

என்னைக்கும் எல்லாரும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

லவ்லி ஸ்டோரி... ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dr... 🥰🤝

All the best for all your upcomming novels... 💞
❤️😍😍
ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிச்சி சலிச்சுக்காம தனி தனியா கமெண்ட் பண்ணீங்க.. நிஜமாவே ரொம்ப மகிழ்ச்சி சகி. நன்றிகள் பல..
Thank u so much!!❤️😍
 

Thoshi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 17, 2021
Messages
32
#வைகைதளம்
#சித்திரை_மை_திருவிழா_2022
#completednovelreviews

கதை பெயர் : வண்ணமலரே வாசம் தருவாயா ?
ஆசிரியர் : உப்பாறு

சூழ்நிலையின் சூழ்ச்சியால் இறுகிபோன நாயகனை தன் குழந்தைதனத்தால் மீட்கும் நாயகியின் கதை.

நாயகன் : விஜய்ஆதித்யன்
நாயகி : கௌதமி இனியாள்

விஜய் - இவனின் அறிமுகத்திலே தனிமையில் வெறுமையாய் இறுகி நிற்பவனின் சோகம் ஏன் என்ற கேள்வி நம்முள்ளும் எழுகிறது . அதன் காரணம் அறிந்து கலங்கினாலும் ஒருவர் மற்றவருக்கு பேச வாய்ப்பளித்திருந்தாலே இவனின் இத்துயரத்திற்க்கு இடமில்லாமல் போயிருக்கலாம் என தோன்றியது. இவனின் கார்த்திக்கின் மேலான பாசமும் , இனியா மேலான அன்பும் அழகாய் இருந்தது.

இனியா - வளர்ந்த குழந்தையே தான் . சில நேரம் இப்படி எல்லாம் குழந்தையா இருப்பாங்களா என சந்தேகம் வந்தாலும் அவள் தந்தை அவளை வளர்த்தவிதம் அப்படி என்பதால் அதை நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டியுள்ளது . இவள் வரும் இடங்களில் விஜயை போலவே நம்மிடமும் ஓர் புன்னகை உதயமாகிறது.

பழனி - அண்ணன் மகளை தன் பிள்ளையாய் பார்த்தது மட்டுமின்றி அதை அவளிடமும் சொல்லியே வளர்த்தது அருமை . இனியாவுடன் இணைந்து இவர் செய்யும் செயல்கள் எல்லாம் ரசனையானவை தான் .இருவரின் பாசமும் அலாதியாய் இருந்தது.

கார்த்தி - இவன் விஷயத்துல நான் உங்க மேல கோவமா இருக்கேன் ஆசிரியரே ..என்னவோ கொஞ்சுண்டு வந்தாலும் இவனை பிடிச்சிடுச்சி . ஆனா இடியட் அழவைச்சுட்டான் .

செல்வநாயகமும் யமுனாவும் பிள்ளை பாசத்துக்காக ஏங்குற பெற்றோர் , இவர்கள் செய்த ஒரே தவறு அவனிடம் உண்மையை மறைத்தது தான் . இறுதியாய் இவர்களை விஜய் புரிஞ்சிக்கிட்டானா ?அவங்க மறைச்ச விஷயம் என்னனு ?கதையில தெரிஞ்சிக்கோங்க டியர்ஸ்..

ஆதர்யா - சாதுர்யா , வர்ஷினி -கௌஷிக் என அனைவரும் அவரவர் இடத்தை சிறப்பாய் நிரப்பினர் .
அருமையான கதை , எதிர்பாரா திருப்பங்கள் , தெளிவான எழுத்து அதற்க்கு ஆசிரியருக்கு பாராட்டுகள் . ஆனால் கதையின் ஆரம்பம் வேறுபோல் சென்று இறுதியில் வேறாய் முடிந்ததோ என்பது என் எண்ணம் . வில்லனும் அதற்கான காரணமும் ஏனோ இடைசொறுகலாய் தோன்றியது . இறுதியில் இனியா செய்தவையும் கதைபோக்கில் ஒன்றாதவாறு தோன்றியது . (என் எண்ணம் மட்டுமே )

தந்தை-மகள் பாசம் , தாயன்பு , சகோதரபாசம் , நட்பு , காதல் , துரோகம் என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய அருமையான கதை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசிரியரே ..
 

Zeenath

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 13, 2022
Messages
6
#வைகை_சித்திரைத்திருவிழா_2022 தளத்தில் நடக்கும் போட்டி கதைகள் உப்பாரரு அவர்கள் எழுதிய" வண்ண மலரே வாசம் தருவாயா" விஜய ஆதித்யன்... கௌதமி இனியாள்... அழுத்தமான இன்ஸ்பெக்டருக்கும் குழந்தைத்தனம் மாறாத குமரிக்கும் இடையே நடக்கும் திருமணமும் காதலும்.. தன் நண்பனின் சகோதரியின் திருமணத்தில் பார்க்கும் நாயகனின் மீது ஒரு தலையாக காதல் கொண்டு காத்திருக்கிறாள் நாயகி அவனுக்காக காதல் கொண்டு... அவனுக்கு பப்லு என்று ஒரு செல்ல பேரையும் சூட்டி 🥰🥰
தன் குடும்பத்தின் மேல் ஏதோ ஒரு கோபத்தில் இருக்கும் விஜய் அவர்களை விட்டு ஒதுங்கி வாழ்கிறான் தன் தம்பி கார்த்திக்கு ஏற்பட்ட விபத்தை அறிந்து பதட்டத்தோடு வரும் அவனிடம் தன் உயிர் நண்பியும் அண்ணனை ஒருதலையாக காதலிக்கும் தன் நன்பி கௌதமியை அவன் கையில் ஒப்படைத்து விட்டு உலகத்துடன் ஆன தன் உறவை முடித்துக் கொள்கிறான்... 😔 கார்த்திக்கின் மறைவு மனதில் மிகவும் பாதித்தது கௌதமியுடன் அவனுக்கு இருக்கும் நட்புறவும் இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும் கலாய்த்து கொள்வதும் அவர்களின் பாசமும் அன்பும் அவ்வளவு அழகு... விஜய் தன் குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருப்பதற்கான காரணம் என்ன கார்த்திக்கின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்... கௌதமி பப்லுவை பற்றி கூறும்போது விஜய்க்கு ஏற்படும் அந்த பொறாமை உணர்வும் அவனை கொன்று விட்டால் என்ன என்று அவனின் மைண்ட் வாய்ஸ்ம் அருமை 😀😀 கௌதமியின் பப்புவும் அவளுக்காக திருமணம் முடிக்காமல் அண்ணன் மகளை தன் மகளாக கொண்டு அவர் வளர்த்த விதமும் இருவருக்குள்ளும் இருக்கும் அந்த பாசமும் பரிவும் மனம் நெகிழ்ந்தது... மனதை நிறைத்து விட்டார் பழனிவேல் 🥰 அவருக்கும் ஒரு ஜோடியை ஏற்படுத்திருக்கலாம் எழுத்தாளரே... விஜய் அவருக்கான ஒரு துணையை ஏற்படுத்தித் தருவான் என்று நான் மிகவும் எதிர்பார்த்தேன் 😔 குழந்தைத்தனத்தோடும் பயந்த சுபாவத்துடனும் இருக்கும் கௌதமி தன் நண்பனை கொன்றவனை தன் கையாலேயே கொன்றது செம சூப்பர் 👏
அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை 👏👏நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்... 👍
Good luck dear 💐🥰❤️
 
Top