அத்தியாயம் – 7
சை சை... சை சை...
கை அளவு நெஞ்சதில...
கடல் அளவு ஆச மச்சான்அளவு ஏதும் இல்ல...
அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சை சை... சை சை...
என்ற பாடலுக்கு ஏற்ப அதே குளுங்களுடன் அந்த மினி பேருந்து ஓலப்பாலையம் கிராமத்தில் நின்றது.
“என்ன கண்டக்டரு இன்னைக்கு பஸ் நேரமே வந்திடுச்சு போல...இன்னும் நம்ம ஊரு பசங்க எல்லாம் வரலையேப்பா” என பேருந்தில் ஏறிகொண்டே ஒரு பெரியவர் கேட்க
“ஆமாம் பெருசு....இன்னைக்கு நமக்கு முன்னாடி போக வேண்டிய வண்டி இன்னும் வரலை...அதான் சீக்கிரம் கிளம்பி வந்தா அந்த டிக்கெட்டும் நம்ம வண்டியில் ஏத்திக்கலாம் அதான் வந்தோம்” என விளக்கம் கொடுத்தார் நடத்துனர்.
“என்னப்பா எல்லாரும் ஏறியாச்சா வண்டிய எடுக்கலாமா?” என ஓட்டுனர் கேட்கவும்
“ம்ம்ம்ம் ....வண்டியை நீ எடுக்கலாம்.......ஆனா அப்புறம் பஸ் டெப்போவுக்கு இந்த வண்டி டயர் தான் போகும் ..பாடி போகாது ... உனக்கு எப்படி வசதி “?என சொல்லிவிட்டு நடத்துனர் அவரை பார்க்கவும்
ஓட்டுனரோ பீதியுடன் நடத்துனரை பார்க்க ..அவரோ “நீ இன்னைக்குதான இந்த ரூட்ல வர ...போக போக தெரிஞ்சுக்குவ.....விசில் சத்தம் கேட்கிறவரைக்கும் வண்டி எடுத்திடாத ” என சொல்லிவிட்டு வேகமாக படியை விட்டு கீழே இறங்கி நின்றார்.
அதற்குள் இளைஞர்கள் பட்டாளம் வேகமாக சைக்கிளில் வந்தவர்கள் “என்ன விசிலுஊஊஉ கண்டக்டரை அவர்கள் செல்லமாக ??? இப்படிதான் அழைப்பார்கள் இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டாப்டி இருக்கு” என கேட்டுகொண்டே வண்டியில் ஏறினார்கள்.
“ஹிஹிஹிஹி எல்லாம் உங்களுக்காக தான் தம்பிங்களா என வலிந்து கொண்டே சொன்னவர் வண்டி எடுக்கலாங்களா” என பணிவுடன் கேட்க
உடனே ஒருவன் “இருப்பா இன்னும் எங்க கூட்டாளி வரலை ...கொஞ்சம் வெயிட் பண்ணு என சொல்லிவிட்டு சாவகாசமாக இருக்கையில் அமர்ந்து பின்புறம் திரும்பி டேய் மாப்பிள்ளை அன்னைக்கு ஒரு மஞ்ச தாவணி ஒன்னு அங்க உட்கார்ந்து உன்னை ஒரு மாதிரி பார்த்துச்சே ....நீயும் எதோ சிக்னல் கொடுத்த மாதிரி இருந்தது.....செட் ஆச்சா” என உலக சமாச்சாரத்தை பற்றி கேட்பது போல விசாரிக்க
அவனோ சலிப்புடன் “எங்க மாப்பிள்ளை அடுத்த ஸ்டாப்ல அவன் மாமன்காரன் வண்டியில ஏறிட்டான் ...அப்புறம் என்ன பண்றது” என சொன்னான்.
“ஏன்டா அவனவன் பார்த்த பத்து நிமிசத்துல கரெக்ட் பண்ணி கண்ணாலத்தையே முடிச்சிறாங்க......நீ என்னடானா ஒரு ஸ்டாப்க்கும் இன்னொரு ஸ்டாப்க்கும் கால்மணிநேரம் இருந்திருக்கும்.....அதுவரைக்கும் பார்த்திட்டே இருந்து இருக்க.........போடா உன்னை எல்லாம்.....ஊரு பேரையே கெடுக்கிறடா என அவன் திட்ட ஆரம்பிக்க
“அதுகெல்லாம் நம்ம ஆள் தாண்டா சரி வருவான்” என மற்றொருவன் சொல்லி முடிக்கவும்
“பார்த்துடா பரீட்சையை முடிச்சுட்டு அங்க இங்க சுத்திட்டு இருக்காம சீக்கிரம் வீடு வந்து சேரு” என பேருந்தின் முன் வண்டியை நிறுத்தி சொல்லிக்கொண்டு இருந்தான் புகழ்.
“நான் பார்த்துகிறேன் அண்ணா நீங்க கிளம்புங்க” என சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலில் பேருந்துக்குள் நுழைந்தான் பாண்டி.
அவனை பார்த்ததும் நடத்துனர் “ஆஹா இவனா .....ஐயோ கலவரத்தை கால்ஷீட் போட்டு நடத்துவானே ..... இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என மனதிற்குள் நினைத்தபடி அவனை பார்த்தவர் அவனோ என்ன விசிலு சௌக்கியமா?” என பருத்தி வீரன் கார்த்திக் ஸ்டைலில் கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்..
“இங்க பாரு சொன்ன உடனே வந்து நிற்கிறான்.மாப்பிள்ளை உனக்கு நூறு ஆயுசுடா” என பேசிகொண்டிருந்தவன் சொல்ல
“எதுக்குடா மாப்பிள்ளை” என கேட்டுகொண்டே அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் பாண்டி.
“இல்லை மாப்பிள்ளை என அவன் ஆரம்பிக்கவும் அதற்குள் என்னங்க தம்பி வண்டி எடுக்கலாங்களா” என கண்டக்டர் இடையில் நுழைந்து பணிவுடன் கேட்க
“பேசிட்டு இருக்கோம்ல என பேசினவன் முகத்தை சுளிக்கவும் அதற்குள் பாண்டி எல்லாரும் வந்திட்டாங்கனா நீங்க வண்டி எடுங்க” என்றான்.
“சரிங்க தம்பி என சொல்லியவர் பேசியவனை ஒரு முறை முறைத்துகொண்டே இவன் சும்மா இருந்தாலும் சுத்தி இருகிரவணுக சும்மா இருக்க விடமாட்டானுகலே என முனகிகொண்டே போலாம் ரைட்” என்றார்.
மீண்டும் நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக தங்களது பேச்சை தொடர அதற்குள் உள்ளிருந்த ஒருவர் “ஏம்பா நீ பேச்சியம்மா இரண்டாவது பையன்தான” என குரல் கொடுக்க
பாண்டியும் பின்னாடி திரும்பி “ஆமா தாத்தா” என்றான்..
“நீ விடுதில தங்கி படிச்சுட்டு இருக்கேன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தா ....அம்மாவை பார்க்க ஊருக்கு வந்தியா” என கேட்கவும்
“படிப்பு எல்லாம் முடிஞ்சுருச்சு தாத்தா ....பரீட்சை மட்டும்தான்... வீட்ல இருந்து போய் எழுதிக்கிலாம்னு வந்திட்டேன்” என அவன் பதில் சொன்னான்.
“டேய் மாப்பிள்ளை அப்போ இனிமேல் நீ இங்கதானா” என மற்ற கூட்டாளிகள் கேட்கவும்
“ஆமாண்டா .....அண்ணா வெளியில வேலைக்கு போன்னு சொல்றார்.நான்தான் இங்கே இருக்கேன்னு சொல்றேன் பார்க்கலாம்” என்றான்.
“அப்படியா ஹப்பா இப்பதாண்டா ரொம்ப சந்தோசமா இருக்கு....ஆனாலும் உங்க அண்ணன் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காருடா .......ஹன்சிகாவுக்கு கட்டவுட் வைச்சது ஒரு குத்தமாடா...அவனனவன் குஷ்புக்கு கோவிலே கட்டினான்...நம்ம ஒரு கட்டவுட்டு தான் வச்சோம்.....அதுக்காக நீ இங்க இருந்தினா கெட்டு போய்டுவேன்னு சொல்லி பக்கத்து ஊர்ல இருக்க காலேஜ்க்கு உன்னை விடுதில சேர்த்தினது ரொம்ப கொடுமைடா....இனி நீ வந்திட்டலே...நம்மோட கச்சேரிய ஆரம்பிச்சுடலாம்....என்னடா நான் சொல்றது” என ஒருவன் கேட்க நண்பர்கள் அனைவரும் ஆமா ஆமா என ஆரவாரத்துடன் கூச்சல் போட அங்கு உற்சாகம் நிறைந்திருந்தது .
அதற்குள் பேருந்தில் கும்பல் அதிகமாக பாண்டி அருகில் இருந்தவனிடம் “டேய் இது என்னடா இரண்டு பேர் உட்கார சீட்ல இருந்துகிட்டு மத்தவங்ககிட்ட பேசும்போது திரும்பி பேசவேண்டியதா இருக்கு ....வாடா பின்னாடி சீட்ல போய் உட்கார்ந்துகலாம்.அதான் நமக்கு வசதி” என சொல்லி முடிக்கும் முன்
“என்னது பின்னாடி சீட்டா” என அவனது கூட்டாளிகள் ஒரே குரலில் அலற
பாண்டி மட்டும் இல்லாமல் பேருந்தில் இருந்தவர்களும் சத்தத்தில் பயந்து விட்டனர்.
“டேய் ஏன்டா இப்படி கத்தரிங்க ....பின்னாடி சீட்ல உட்காரலாம்னுதான தான சொன்னேன்.....என்ன பிகருங்க மடியில உட்கார சொன்ன மாதிரி அலறிங்க .”.. என அவன் புரியாமல் கேட்க
உடனே ஒருவன் “டேய் மாப்ள அது மட்டும் வேண்டாம்டா .......அந்த சீட்டுக்கு ஒரு பெரிய வானரகூட்டமே வரும்....ஐயோ சாமி அதுகளோட மல்லுகட்ட நம்மனால முடியாதுப்பா” என மிரண்டு போய் சொல்ல
“என்னது வானரக்கூட்டமா?......யாருடா அது........எனக்கு தெரியாம என அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பேருந்து நிறுத்தத்தில் நிற்க கலகலவென சிரிப்பொலியுடன் துள்ளி குதித்து ஏறினர் பள்ளிமாணவிகள் சிலர்.
“இப்போ வண்டில ஏறுதுங்கல அதுகதான்” என திரும்பாமலே அருகில் இருந்தவன் சொல்லவும்
“டேய் எங்கடா ...யாருமே ஏறலையே” .....என அவன் சுற்றிலும் பார்க்க
“ம்ம்ம் இப்போ கடைசி சீட்ல உட்கார்ந்து யாரு இருக்கா” என அவன் மீண்டும் கேட்க
யாரு என் எட்டி விழுந்து பார்த்த பாண்டி “டேய் அது ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்கடா ...நீ சொன்ன ஆளுங்க யாரு....என மீண்டும் தேடினான்.
“அதுங்கதாண்டா நான் சொன்ன வானரகூட்டம்” என அவன் சொல்லி முடிக்கவும்
“என்னது ஹஹஹஹாஹ் என சத்தம் போட்டு சிரித்தவன் ஏண்டா ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்களை பார்த்து ...ஐயோ என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை என வாய் விட்டு சிரித்தவன் ....உங்களை எல்லாம் என் கூட்டாளிங்கனு சொல்லவே கேவலமா இருக்குடா...கடவுளே ஏண்டா ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்களை பார்த்து பயந்து ....அச்சோ என மறுபடியும் சிரித்தவன் அதுக்காடா இந்த அலறு அலர்னிங்க “ என அவன் சொல்லி மீண்டும் சிரிக்க
அதற்குள் ஒருவன் “மாப்ள நீ இன்னைக்குதான் எங்களோட பஸ்ல வர......உனக்கு ஏதும் தெரியாது.அதுக பார்க்கிறதுகுதான் சின்ன பொண்ணுங்க......ஆனா பேச ஆரம்பிச்சுதுங்க ......ரத்தத்தை பார்க்காம விடாதுங்க” .......என அழுவது போல் சொன்னான்..
பாண்டியனும் சுவாரசியமாக “அப்படியா........ஆனா இது வரைக்கும் இவங்களை நான் பார்த்தது இல்லயே” என அவன் பின்னாடி பார்த்து கொண்டே சொல்ல
“அது வந்து மாப்ள... இதுக எல்லாம் பக்கத்து ஊரு .......இவ்ளோ நாளா பள்ளிகூடத்து பஸ் வந்துகிட்டு இருந்தது.இப்போ வரது இல்லை...அதான் கொஞ்ச நாளா இந்த வானரகூட்டம் இதுலதான் வருதுங்க ......அதுக கூட பரவாயில்லை ....இந்த விசிலு அதுங்க கூட சேர்ந்துகிட்டு இல்லாத லந்து கொடுப்பான் பாரு” என சந்தடி சாக்கில் அவரையும் கோர்த்துவிட்டனர் அவனது நண்பர்கள்.
அதற்கு ஏற்றார் போல் நடத்துனர் பின்னாடி சென்று நின்று கொண்டு “முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்திட்டிங்களா ....அப்புறம் செக் பண்ணும்போது மாட்டிகிட்டு அண்ணே அண்ணேனு என் காலை பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது” என சத்தம் போட்டு சொல்ல உடனே அம்மாணவிகளிடம் இருந்து சிரிப்பொலி வர உடனே நண்பர்கள் சொன்னோம்ல என்றபடி பாண்டியை பார்த்தனர்.
“இதை ஏண்டா என்கிட்டே முன்னாடியே சொல்லலை....’’ என அவன் வேகமாக கேட்க
“ இல்ல மாப்ள இதுக இப்பதான் இரண்டு மாசமா இந்த வண்டில வருதுங்க........நீ தான் விடுதில இருந்தில” என்றான் ஒருவன்.
“அப்படியா .... ஆள் இல்லாத நேரத்துல அலம்பல் பண்றாங்களா......இருடா நான் யாருன்னு பார்த்திட்டு வரேன்” என பாண்டி எழ முயற்சிக்க
அதற்குள் அருகில் இருந்தவன் “மாப்ள இங்க வேண்டாம்.எல்லாம் நம்ம ஊரு ஆளுங்க.....நாளைக்கு விரசா வந்து பார்த்துகலாம் என சொல்லி சமாதானபடுத்தினான்.அதற்குள் அவனது நிறுத்தம் வர வண்டியில் ஒரே ஆரவாரத்துடன் நண்பர்கள் அவன் தேர்வு எழுதுவதற்கு வாழ்த்துக்கள் சொல்ல அனைவர்க்கும் நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கினான் பாண்டி.
சை சை... சை சை...
கை அளவு நெஞ்சதில...
கடல் அளவு ஆச மச்சான்அளவு ஏதும் இல்ல...
அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சை சை... சை சை...
என்ற பாடலுக்கு ஏற்ப அதே குளுங்களுடன் அந்த மினி பேருந்து ஓலப்பாலையம் கிராமத்தில் நின்றது.
“என்ன கண்டக்டரு இன்னைக்கு பஸ் நேரமே வந்திடுச்சு போல...இன்னும் நம்ம ஊரு பசங்க எல்லாம் வரலையேப்பா” என பேருந்தில் ஏறிகொண்டே ஒரு பெரியவர் கேட்க
“ஆமாம் பெருசு....இன்னைக்கு நமக்கு முன்னாடி போக வேண்டிய வண்டி இன்னும் வரலை...அதான் சீக்கிரம் கிளம்பி வந்தா அந்த டிக்கெட்டும் நம்ம வண்டியில் ஏத்திக்கலாம் அதான் வந்தோம்” என விளக்கம் கொடுத்தார் நடத்துனர்.
“என்னப்பா எல்லாரும் ஏறியாச்சா வண்டிய எடுக்கலாமா?” என ஓட்டுனர் கேட்கவும்
“ம்ம்ம்ம் ....வண்டியை நீ எடுக்கலாம்.......ஆனா அப்புறம் பஸ் டெப்போவுக்கு இந்த வண்டி டயர் தான் போகும் ..பாடி போகாது ... உனக்கு எப்படி வசதி “?என சொல்லிவிட்டு நடத்துனர் அவரை பார்க்கவும்
ஓட்டுனரோ பீதியுடன் நடத்துனரை பார்க்க ..அவரோ “நீ இன்னைக்குதான இந்த ரூட்ல வர ...போக போக தெரிஞ்சுக்குவ.....விசில் சத்தம் கேட்கிறவரைக்கும் வண்டி எடுத்திடாத ” என சொல்லிவிட்டு வேகமாக படியை விட்டு கீழே இறங்கி நின்றார்.
அதற்குள் இளைஞர்கள் பட்டாளம் வேகமாக சைக்கிளில் வந்தவர்கள் “என்ன விசிலுஊஊஉ கண்டக்டரை அவர்கள் செல்லமாக ??? இப்படிதான் அழைப்பார்கள் இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டாப்டி இருக்கு” என கேட்டுகொண்டே வண்டியில் ஏறினார்கள்.
“ஹிஹிஹிஹி எல்லாம் உங்களுக்காக தான் தம்பிங்களா என வலிந்து கொண்டே சொன்னவர் வண்டி எடுக்கலாங்களா” என பணிவுடன் கேட்க
உடனே ஒருவன் “இருப்பா இன்னும் எங்க கூட்டாளி வரலை ...கொஞ்சம் வெயிட் பண்ணு என சொல்லிவிட்டு சாவகாசமாக இருக்கையில் அமர்ந்து பின்புறம் திரும்பி டேய் மாப்பிள்ளை அன்னைக்கு ஒரு மஞ்ச தாவணி ஒன்னு அங்க உட்கார்ந்து உன்னை ஒரு மாதிரி பார்த்துச்சே ....நீயும் எதோ சிக்னல் கொடுத்த மாதிரி இருந்தது.....செட் ஆச்சா” என உலக சமாச்சாரத்தை பற்றி கேட்பது போல விசாரிக்க
அவனோ சலிப்புடன் “எங்க மாப்பிள்ளை அடுத்த ஸ்டாப்ல அவன் மாமன்காரன் வண்டியில ஏறிட்டான் ...அப்புறம் என்ன பண்றது” என சொன்னான்.
“ஏன்டா அவனவன் பார்த்த பத்து நிமிசத்துல கரெக்ட் பண்ணி கண்ணாலத்தையே முடிச்சிறாங்க......நீ என்னடானா ஒரு ஸ்டாப்க்கும் இன்னொரு ஸ்டாப்க்கும் கால்மணிநேரம் இருந்திருக்கும்.....அதுவரைக்கும் பார்த்திட்டே இருந்து இருக்க.........போடா உன்னை எல்லாம்.....ஊரு பேரையே கெடுக்கிறடா என அவன் திட்ட ஆரம்பிக்க
“அதுகெல்லாம் நம்ம ஆள் தாண்டா சரி வருவான்” என மற்றொருவன் சொல்லி முடிக்கவும்
“பார்த்துடா பரீட்சையை முடிச்சுட்டு அங்க இங்க சுத்திட்டு இருக்காம சீக்கிரம் வீடு வந்து சேரு” என பேருந்தின் முன் வண்டியை நிறுத்தி சொல்லிக்கொண்டு இருந்தான் புகழ்.
“நான் பார்த்துகிறேன் அண்ணா நீங்க கிளம்புங்க” என சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலில் பேருந்துக்குள் நுழைந்தான் பாண்டி.
அவனை பார்த்ததும் நடத்துனர் “ஆஹா இவனா .....ஐயோ கலவரத்தை கால்ஷீட் போட்டு நடத்துவானே ..... இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என மனதிற்குள் நினைத்தபடி அவனை பார்த்தவர் அவனோ என்ன விசிலு சௌக்கியமா?” என பருத்தி வீரன் கார்த்திக் ஸ்டைலில் கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்..
“இங்க பாரு சொன்ன உடனே வந்து நிற்கிறான்.மாப்பிள்ளை உனக்கு நூறு ஆயுசுடா” என பேசிகொண்டிருந்தவன் சொல்ல
“எதுக்குடா மாப்பிள்ளை” என கேட்டுகொண்டே அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் பாண்டி.
“இல்லை மாப்பிள்ளை என அவன் ஆரம்பிக்கவும் அதற்குள் என்னங்க தம்பி வண்டி எடுக்கலாங்களா” என கண்டக்டர் இடையில் நுழைந்து பணிவுடன் கேட்க
“பேசிட்டு இருக்கோம்ல என பேசினவன் முகத்தை சுளிக்கவும் அதற்குள் பாண்டி எல்லாரும் வந்திட்டாங்கனா நீங்க வண்டி எடுங்க” என்றான்.
“சரிங்க தம்பி என சொல்லியவர் பேசியவனை ஒரு முறை முறைத்துகொண்டே இவன் சும்மா இருந்தாலும் சுத்தி இருகிரவணுக சும்மா இருக்க விடமாட்டானுகலே என முனகிகொண்டே போலாம் ரைட்” என்றார்.
மீண்டும் நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக தங்களது பேச்சை தொடர அதற்குள் உள்ளிருந்த ஒருவர் “ஏம்பா நீ பேச்சியம்மா இரண்டாவது பையன்தான” என குரல் கொடுக்க
பாண்டியும் பின்னாடி திரும்பி “ஆமா தாத்தா” என்றான்..
“நீ விடுதில தங்கி படிச்சுட்டு இருக்கேன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தா ....அம்மாவை பார்க்க ஊருக்கு வந்தியா” என கேட்கவும்
“படிப்பு எல்லாம் முடிஞ்சுருச்சு தாத்தா ....பரீட்சை மட்டும்தான்... வீட்ல இருந்து போய் எழுதிக்கிலாம்னு வந்திட்டேன்” என அவன் பதில் சொன்னான்.
“டேய் மாப்பிள்ளை அப்போ இனிமேல் நீ இங்கதானா” என மற்ற கூட்டாளிகள் கேட்கவும்
“ஆமாண்டா .....அண்ணா வெளியில வேலைக்கு போன்னு சொல்றார்.நான்தான் இங்கே இருக்கேன்னு சொல்றேன் பார்க்கலாம்” என்றான்.
“அப்படியா ஹப்பா இப்பதாண்டா ரொம்ப சந்தோசமா இருக்கு....ஆனாலும் உங்க அண்ணன் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காருடா .......ஹன்சிகாவுக்கு கட்டவுட் வைச்சது ஒரு குத்தமாடா...அவனனவன் குஷ்புக்கு கோவிலே கட்டினான்...நம்ம ஒரு கட்டவுட்டு தான் வச்சோம்.....அதுக்காக நீ இங்க இருந்தினா கெட்டு போய்டுவேன்னு சொல்லி பக்கத்து ஊர்ல இருக்க காலேஜ்க்கு உன்னை விடுதில சேர்த்தினது ரொம்ப கொடுமைடா....இனி நீ வந்திட்டலே...நம்மோட கச்சேரிய ஆரம்பிச்சுடலாம்....என்னடா நான் சொல்றது” என ஒருவன் கேட்க நண்பர்கள் அனைவரும் ஆமா ஆமா என ஆரவாரத்துடன் கூச்சல் போட அங்கு உற்சாகம் நிறைந்திருந்தது .
அதற்குள் பேருந்தில் கும்பல் அதிகமாக பாண்டி அருகில் இருந்தவனிடம் “டேய் இது என்னடா இரண்டு பேர் உட்கார சீட்ல இருந்துகிட்டு மத்தவங்ககிட்ட பேசும்போது திரும்பி பேசவேண்டியதா இருக்கு ....வாடா பின்னாடி சீட்ல போய் உட்கார்ந்துகலாம்.அதான் நமக்கு வசதி” என சொல்லி முடிக்கும் முன்
“என்னது பின்னாடி சீட்டா” என அவனது கூட்டாளிகள் ஒரே குரலில் அலற
பாண்டி மட்டும் இல்லாமல் பேருந்தில் இருந்தவர்களும் சத்தத்தில் பயந்து விட்டனர்.
“டேய் ஏன்டா இப்படி கத்தரிங்க ....பின்னாடி சீட்ல உட்காரலாம்னுதான தான சொன்னேன்.....என்ன பிகருங்க மடியில உட்கார சொன்ன மாதிரி அலறிங்க .”.. என அவன் புரியாமல் கேட்க
உடனே ஒருவன் “டேய் மாப்ள அது மட்டும் வேண்டாம்டா .......அந்த சீட்டுக்கு ஒரு பெரிய வானரகூட்டமே வரும்....ஐயோ சாமி அதுகளோட மல்லுகட்ட நம்மனால முடியாதுப்பா” என மிரண்டு போய் சொல்ல
“என்னது வானரக்கூட்டமா?......யாருடா அது........எனக்கு தெரியாம என அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பேருந்து நிறுத்தத்தில் நிற்க கலகலவென சிரிப்பொலியுடன் துள்ளி குதித்து ஏறினர் பள்ளிமாணவிகள் சிலர்.
“இப்போ வண்டில ஏறுதுங்கல அதுகதான்” என திரும்பாமலே அருகில் இருந்தவன் சொல்லவும்
“டேய் எங்கடா ...யாருமே ஏறலையே” .....என அவன் சுற்றிலும் பார்க்க
“ம்ம்ம் இப்போ கடைசி சீட்ல உட்கார்ந்து யாரு இருக்கா” என அவன் மீண்டும் கேட்க
யாரு என் எட்டி விழுந்து பார்த்த பாண்டி “டேய் அது ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்கடா ...நீ சொன்ன ஆளுங்க யாரு....என மீண்டும் தேடினான்.
“அதுங்கதாண்டா நான் சொன்ன வானரகூட்டம்” என அவன் சொல்லி முடிக்கவும்
“என்னது ஹஹஹஹாஹ் என சத்தம் போட்டு சிரித்தவன் ஏண்டா ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்களை பார்த்து ...ஐயோ என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை என வாய் விட்டு சிரித்தவன் ....உங்களை எல்லாம் என் கூட்டாளிங்கனு சொல்லவே கேவலமா இருக்குடா...கடவுளே ஏண்டா ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்களை பார்த்து பயந்து ....அச்சோ என மறுபடியும் சிரித்தவன் அதுக்காடா இந்த அலறு அலர்னிங்க “ என அவன் சொல்லி மீண்டும் சிரிக்க
அதற்குள் ஒருவன் “மாப்ள நீ இன்னைக்குதான் எங்களோட பஸ்ல வர......உனக்கு ஏதும் தெரியாது.அதுக பார்க்கிறதுகுதான் சின்ன பொண்ணுங்க......ஆனா பேச ஆரம்பிச்சுதுங்க ......ரத்தத்தை பார்க்காம விடாதுங்க” .......என அழுவது போல் சொன்னான்..
பாண்டியனும் சுவாரசியமாக “அப்படியா........ஆனா இது வரைக்கும் இவங்களை நான் பார்த்தது இல்லயே” என அவன் பின்னாடி பார்த்து கொண்டே சொல்ல
“அது வந்து மாப்ள... இதுக எல்லாம் பக்கத்து ஊரு .......இவ்ளோ நாளா பள்ளிகூடத்து பஸ் வந்துகிட்டு இருந்தது.இப்போ வரது இல்லை...அதான் கொஞ்ச நாளா இந்த வானரகூட்டம் இதுலதான் வருதுங்க ......அதுக கூட பரவாயில்லை ....இந்த விசிலு அதுங்க கூட சேர்ந்துகிட்டு இல்லாத லந்து கொடுப்பான் பாரு” என சந்தடி சாக்கில் அவரையும் கோர்த்துவிட்டனர் அவனது நண்பர்கள்.
அதற்கு ஏற்றார் போல் நடத்துனர் பின்னாடி சென்று நின்று கொண்டு “முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்திட்டிங்களா ....அப்புறம் செக் பண்ணும்போது மாட்டிகிட்டு அண்ணே அண்ணேனு என் காலை பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது” என சத்தம் போட்டு சொல்ல உடனே அம்மாணவிகளிடம் இருந்து சிரிப்பொலி வர உடனே நண்பர்கள் சொன்னோம்ல என்றபடி பாண்டியை பார்த்தனர்.
“இதை ஏண்டா என்கிட்டே முன்னாடியே சொல்லலை....’’ என அவன் வேகமாக கேட்க
“ இல்ல மாப்ள இதுக இப்பதான் இரண்டு மாசமா இந்த வண்டில வருதுங்க........நீ தான் விடுதில இருந்தில” என்றான் ஒருவன்.
“அப்படியா .... ஆள் இல்லாத நேரத்துல அலம்பல் பண்றாங்களா......இருடா நான் யாருன்னு பார்த்திட்டு வரேன்” என பாண்டி எழ முயற்சிக்க
அதற்குள் அருகில் இருந்தவன் “மாப்ள இங்க வேண்டாம்.எல்லாம் நம்ம ஊரு ஆளுங்க.....நாளைக்கு விரசா வந்து பார்த்துகலாம் என சொல்லி சமாதானபடுத்தினான்.அதற்குள் அவனது நிறுத்தம் வர வண்டியில் ஒரே ஆரவாரத்துடன் நண்பர்கள் அவன் தேர்வு எழுதுவதற்கு வாழ்த்துக்கள் சொல்ல அனைவர்க்கும் நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கினான் பாண்டி.