• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 7

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் – 7

சை சை... சை சை...
கை அளவு நெஞ்சதில...
கடல் அளவு ஆச மச்சான்அளவு ஏதும் இல்ல...
அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சை சை... சை சை...
என்ற பாடலுக்கு ஏற்ப அதே குளுங்களுடன் அந்த மினி பேருந்து ஓலப்பாலையம் கிராமத்தில் நின்றது.
“என்ன கண்டக்டரு இன்னைக்கு பஸ் நேரமே வந்திடுச்சு போல...இன்னும் நம்ம ஊரு பசங்க எல்லாம் வரலையேப்பா” என பேருந்தில் ஏறிகொண்டே ஒரு பெரியவர் கேட்க
“ஆமாம் பெருசு....இன்னைக்கு நமக்கு முன்னாடி போக வேண்டிய வண்டி இன்னும் வரலை...அதான் சீக்கிரம் கிளம்பி வந்தா அந்த டிக்கெட்டும் நம்ம வண்டியில் ஏத்திக்கலாம் அதான் வந்தோம்” என விளக்கம் கொடுத்தார் நடத்துனர்.
“என்னப்பா எல்லாரும் ஏறியாச்சா வண்டிய எடுக்கலாமா?” என ஓட்டுனர் கேட்கவும்
“ம்ம்ம்ம் ....வண்டியை நீ எடுக்கலாம்.......ஆனா அப்புறம் பஸ் டெப்போவுக்கு இந்த வண்டி டயர் தான் போகும் ..பாடி போகாது ... உனக்கு எப்படி வசதி “?என சொல்லிவிட்டு நடத்துனர் அவரை பார்க்கவும்
ஓட்டுனரோ பீதியுடன் நடத்துனரை பார்க்க ..அவரோ “நீ இன்னைக்குதான இந்த ரூட்ல வர ...போக போக தெரிஞ்சுக்குவ.....விசில் சத்தம் கேட்கிறவரைக்கும் வண்டி எடுத்திடாத ” என சொல்லிவிட்டு வேகமாக படியை விட்டு கீழே இறங்கி நின்றார்.
அதற்குள் இளைஞர்கள் பட்டாளம் வேகமாக சைக்கிளில் வந்தவர்கள் “என்ன விசிலுஊஊஉ கண்டக்டரை அவர்கள் செல்லமாக ??? இப்படிதான் அழைப்பார்கள் இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டாப்டி இருக்கு” என கேட்டுகொண்டே வண்டியில் ஏறினார்கள்.
“ஹிஹிஹிஹி எல்லாம் உங்களுக்காக தான் தம்பிங்களா என வலிந்து கொண்டே சொன்னவர் வண்டி எடுக்கலாங்களா” என பணிவுடன் கேட்க
உடனே ஒருவன் “இருப்பா இன்னும் எங்க கூட்டாளி வரலை ...கொஞ்சம் வெயிட் பண்ணு என சொல்லிவிட்டு சாவகாசமாக இருக்கையில் அமர்ந்து பின்புறம் திரும்பி டேய் மாப்பிள்ளை அன்னைக்கு ஒரு மஞ்ச தாவணி ஒன்னு அங்க உட்கார்ந்து உன்னை ஒரு மாதிரி பார்த்துச்சே ....நீயும் எதோ சிக்னல் கொடுத்த மாதிரி இருந்தது.....செட் ஆச்சா” என உலக சமாச்சாரத்தை பற்றி கேட்பது போல விசாரிக்க
அவனோ சலிப்புடன் “எங்க மாப்பிள்ளை அடுத்த ஸ்டாப்ல அவன் மாமன்காரன் வண்டியில ஏறிட்டான் ...அப்புறம் என்ன பண்றது” என சொன்னான்.
“ஏன்டா அவனவன் பார்த்த பத்து நிமிசத்துல கரெக்ட் பண்ணி கண்ணாலத்தையே முடிச்சிறாங்க......நீ என்னடானா ஒரு ஸ்டாப்க்கும் இன்னொரு ஸ்டாப்க்கும் கால்மணிநேரம் இருந்திருக்கும்.....அதுவரைக்கும் பார்த்திட்டே இருந்து இருக்க.........போடா உன்னை எல்லாம்.....ஊரு பேரையே கெடுக்கிறடா என அவன் திட்ட ஆரம்பிக்க
“அதுகெல்லாம் நம்ம ஆள் தாண்டா சரி வருவான்” என மற்றொருவன் சொல்லி முடிக்கவும்
“பார்த்துடா பரீட்சையை முடிச்சுட்டு அங்க இங்க சுத்திட்டு இருக்காம சீக்கிரம் வீடு வந்து சேரு” என பேருந்தின் முன் வண்டியை நிறுத்தி சொல்லிக்கொண்டு இருந்தான் புகழ்.
“நான் பார்த்துகிறேன் அண்ணா நீங்க கிளம்புங்க” என சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலில் பேருந்துக்குள் நுழைந்தான் பாண்டி.
அவனை பார்த்ததும் நடத்துனர் “ஆஹா இவனா .....ஐயோ கலவரத்தை கால்ஷீட் போட்டு நடத்துவானே ..... இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என மனதிற்குள் நினைத்தபடி அவனை பார்த்தவர் அவனோ என்ன விசிலு சௌக்கியமா?” என பருத்தி வீரன் கார்த்திக் ஸ்டைலில் கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்..
“இங்க பாரு சொன்ன உடனே வந்து நிற்கிறான்.மாப்பிள்ளை உனக்கு நூறு ஆயுசுடா” என பேசிகொண்டிருந்தவன் சொல்ல
“எதுக்குடா மாப்பிள்ளை” என கேட்டுகொண்டே அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் பாண்டி.
“இல்லை மாப்பிள்ளை என அவன் ஆரம்பிக்கவும் அதற்குள் என்னங்க தம்பி வண்டி எடுக்கலாங்களா” என கண்டக்டர் இடையில் நுழைந்து பணிவுடன் கேட்க
“பேசிட்டு இருக்கோம்ல என பேசினவன் முகத்தை சுளிக்கவும் அதற்குள் பாண்டி எல்லாரும் வந்திட்டாங்கனா நீங்க வண்டி எடுங்க” என்றான்.
“சரிங்க தம்பி என சொல்லியவர் பேசியவனை ஒரு முறை முறைத்துகொண்டே இவன் சும்மா இருந்தாலும் சுத்தி இருகிரவணுக சும்மா இருக்க விடமாட்டானுகலே என முனகிகொண்டே போலாம் ரைட்” என்றார்.
மீண்டும் நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக தங்களது பேச்சை தொடர அதற்குள் உள்ளிருந்த ஒருவர் “ஏம்பா நீ பேச்சியம்மா இரண்டாவது பையன்தான” என குரல் கொடுக்க
பாண்டியும் பின்னாடி திரும்பி “ஆமா தாத்தா” என்றான்..
“நீ விடுதில தங்கி படிச்சுட்டு இருக்கேன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தா ....அம்மாவை பார்க்க ஊருக்கு வந்தியா” என கேட்கவும்
“படிப்பு எல்லாம் முடிஞ்சுருச்சு தாத்தா ....பரீட்சை மட்டும்தான்... வீட்ல இருந்து போய் எழுதிக்கிலாம்னு வந்திட்டேன்” என அவன் பதில் சொன்னான்.
“டேய் மாப்பிள்ளை அப்போ இனிமேல் நீ இங்கதானா” என மற்ற கூட்டாளிகள் கேட்கவும்
“ஆமாண்டா .....அண்ணா வெளியில வேலைக்கு போன்னு சொல்றார்.நான்தான் இங்கே இருக்கேன்னு சொல்றேன் பார்க்கலாம்” என்றான்.
“அப்படியா ஹப்பா இப்பதாண்டா ரொம்ப சந்தோசமா இருக்கு....ஆனாலும் உங்க அண்ணன் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காருடா .......ஹன்சிகாவுக்கு கட்டவுட் வைச்சது ஒரு குத்தமாடா...அவனனவன் குஷ்புக்கு கோவிலே கட்டினான்...நம்ம ஒரு கட்டவுட்டு தான் வச்சோம்.....அதுக்காக நீ இங்க இருந்தினா கெட்டு போய்டுவேன்னு சொல்லி பக்கத்து ஊர்ல இருக்க காலேஜ்க்கு உன்னை விடுதில சேர்த்தினது ரொம்ப கொடுமைடா....இனி நீ வந்திட்டலே...நம்மோட கச்சேரிய ஆரம்பிச்சுடலாம்....என்னடா நான் சொல்றது” என ஒருவன் கேட்க நண்பர்கள் அனைவரும் ஆமா ஆமா என ஆரவாரத்துடன் கூச்சல் போட அங்கு உற்சாகம் நிறைந்திருந்தது .
அதற்குள் பேருந்தில் கும்பல் அதிகமாக பாண்டி அருகில் இருந்தவனிடம் “டேய் இது என்னடா இரண்டு பேர் உட்கார சீட்ல இருந்துகிட்டு மத்தவங்ககிட்ட பேசும்போது திரும்பி பேசவேண்டியதா இருக்கு ....வாடா பின்னாடி சீட்ல போய் உட்கார்ந்துகலாம்.அதான் நமக்கு வசதி” என சொல்லி முடிக்கும் முன்
“என்னது பின்னாடி சீட்டா” என அவனது கூட்டாளிகள் ஒரே குரலில் அலற
பாண்டி மட்டும் இல்லாமல் பேருந்தில் இருந்தவர்களும் சத்தத்தில் பயந்து விட்டனர்.
“டேய் ஏன்டா இப்படி கத்தரிங்க ....பின்னாடி சீட்ல உட்காரலாம்னுதான தான சொன்னேன்.....என்ன பிகருங்க மடியில உட்கார சொன்ன மாதிரி அலறிங்க .”.. என அவன் புரியாமல் கேட்க
உடனே ஒருவன் “டேய் மாப்ள அது மட்டும் வேண்டாம்டா .......அந்த சீட்டுக்கு ஒரு பெரிய வானரகூட்டமே வரும்....ஐயோ சாமி அதுகளோட மல்லுகட்ட நம்மனால முடியாதுப்பா” என மிரண்டு போய் சொல்ல
“என்னது வானரக்கூட்டமா?......யாருடா அது........எனக்கு தெரியாம என அவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பேருந்து நிறுத்தத்தில் நிற்க கலகலவென சிரிப்பொலியுடன் துள்ளி குதித்து ஏறினர் பள்ளிமாணவிகள் சிலர்.
“இப்போ வண்டில ஏறுதுங்கல அதுகதான்” என திரும்பாமலே அருகில் இருந்தவன் சொல்லவும்
“டேய் எங்கடா ...யாருமே ஏறலையே” .....என அவன் சுற்றிலும் பார்க்க
“ம்ம்ம் இப்போ கடைசி சீட்ல உட்கார்ந்து யாரு இருக்கா” என அவன் மீண்டும் கேட்க
யாரு என் எட்டி விழுந்து பார்த்த பாண்டி “டேய் அது ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்கடா ...நீ சொன்ன ஆளுங்க யாரு....என மீண்டும் தேடினான்.
“அதுங்கதாண்டா நான் சொன்ன வானரகூட்டம்” என அவன் சொல்லி முடிக்கவும்
“என்னது ஹஹஹஹாஹ் என சத்தம் போட்டு சிரித்தவன் ஏண்டா ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்களை பார்த்து ...ஐயோ என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை என வாய் விட்டு சிரித்தவன் ....உங்களை எல்லாம் என் கூட்டாளிங்கனு சொல்லவே கேவலமா இருக்குடா...கடவுளே ஏண்டா ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்களை பார்த்து பயந்து ....அச்சோ என மறுபடியும் சிரித்தவன் அதுக்காடா இந்த அலறு அலர்னிங்க “ என அவன் சொல்லி மீண்டும் சிரிக்க
அதற்குள் ஒருவன் “மாப்ள நீ இன்னைக்குதான் எங்களோட பஸ்ல வர......உனக்கு ஏதும் தெரியாது.அதுக பார்க்கிறதுகுதான் சின்ன பொண்ணுங்க......ஆனா பேச ஆரம்பிச்சுதுங்க ......ரத்தத்தை பார்க்காம விடாதுங்க” .......என அழுவது போல் சொன்னான்..
பாண்டியனும் சுவாரசியமாக “அப்படியா........ஆனா இது வரைக்கும் இவங்களை நான் பார்த்தது இல்லயே” என அவன் பின்னாடி பார்த்து கொண்டே சொல்ல
“அது வந்து மாப்ள... இதுக எல்லாம் பக்கத்து ஊரு .......இவ்ளோ நாளா பள்ளிகூடத்து பஸ் வந்துகிட்டு இருந்தது.இப்போ வரது இல்லை...அதான் கொஞ்ச நாளா இந்த வானரகூட்டம் இதுலதான் வருதுங்க ......அதுக கூட பரவாயில்லை ....இந்த விசிலு அதுங்க கூட சேர்ந்துகிட்டு இல்லாத லந்து கொடுப்பான் பாரு” என சந்தடி சாக்கில் அவரையும் கோர்த்துவிட்டனர் அவனது நண்பர்கள்.
அதற்கு ஏற்றார் போல் நடத்துனர் பின்னாடி சென்று நின்று கொண்டு “முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்திட்டிங்களா ....அப்புறம் செக் பண்ணும்போது மாட்டிகிட்டு அண்ணே அண்ணேனு என் காலை பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது” என சத்தம் போட்டு சொல்ல உடனே அம்மாணவிகளிடம் இருந்து சிரிப்பொலி வர உடனே நண்பர்கள் சொன்னோம்ல என்றபடி பாண்டியை பார்த்தனர்.
“இதை ஏண்டா என்கிட்டே முன்னாடியே சொல்லலை....’’ என அவன் வேகமாக கேட்க
“ இல்ல மாப்ள இதுக இப்பதான் இரண்டு மாசமா இந்த வண்டில வருதுங்க........நீ தான் விடுதில இருந்தில” என்றான் ஒருவன்.
“அப்படியா .... ஆள் இல்லாத நேரத்துல அலம்பல் பண்றாங்களா......இருடா நான் யாருன்னு பார்த்திட்டு வரேன்” என பாண்டி எழ முயற்சிக்க

அதற்குள் அருகில் இருந்தவன் “மாப்ள இங்க வேண்டாம்.எல்லாம் நம்ம ஊரு ஆளுங்க.....நாளைக்கு விரசா வந்து பார்த்துகலாம் என சொல்லி சமாதானபடுத்தினான்.அதற்குள் அவனது நிறுத்தம் வர வண்டியில் ஒரே ஆரவாரத்துடன் நண்பர்கள் அவன் தேர்வு எழுதுவதற்கு வாழ்த்துக்கள் சொல்ல அனைவர்க்கும் நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கினான் பாண்டி.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அதற்குள் வண்டியில் “ஏண்டி இன்னைக்கு வண்டில இம்புட்டு அலபறையா இருக்கு ........... இந்த ஆட்டு கூட்டங்க ஏன் இப்படி கத்துதுங்க” என பின் சீட்டில் இருந்து ஒருத்தி கேட்க
“ம்ம்ம்ம் அதுங்கதான் செம்மரி ஆட்டு கூட்டமாச்சே...... ஏதாவது ஒரு ஆடு கத்திருக்கும்.... ....அதான் எல்லாமே கத்துதுங்க”....என ஒரு மாணவி சொல்ல
“ஏய் சும்மா இருங்கடி......அந்த கூட்டத்துல யாரோ ஒருத்தன் புதுசா வண்டியில இருக்காண்டி...... ஏறும்போதே பார்த்தேன்” ..... என்று சொல்லவும் சொல்லவும்
“அதான ...என்னடா மட்டு மரியாதை இல்லாம பயபுள்ளைங்க இன்னைக்கு ரொம்ப துள்ளுதுங்கலேய்னு பார்த்தேன்” என தோரணையாக சொன்னாள் இன்னொரு மாணவி .
“நீ கொஞ்சம் சும்மா இருடி....ஏதோ அன்னைக்கு அவ புண்ணியத்துல அவனுகளை மிரட்டி உட்காரவச்சிருக்கோம்.......அவனுகளும் லேசுபட்டவணுக இல்லடி....... விபரம் தெரிஞ்சுது...விலாசிபுடுவாணுக சாக்கிரதை“என பேசியவளை அடக்கினால் முதலில் பேசிய மாணவி.
மீண்டும் முன்புறம் சத்தமாக இருக்க “யாருடி அவன்...அவ்ளோ பெரிய ஆளா ” என கேட்டபடி மாணவிகள் அனைவரும் எட்டி விழுந்து பார்க்க
அதற்குள் நிறுத்தம் வந்ததும் அவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி விட,மேலே ஏறிய கும்பலின் நடுவில் அவனை பார்க்க முடியாமல் மாணவிகள் தடுமாற அதுவரை அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவள் மெதுவாக தலையை வெளியே விட்டு தனது இரு விழிகளையும் அங்கும் இங்கும் ஓடவிட்டாள்.
நண்பர்களுக்கு கையாட்டிகொண்டே இறங்கியவன் கண்கள் பின்புறம் செல்ல அங்கு சித்திரம் போன்ற போன்ற அழகிய முகத்துடன் வெண்புறாவின் சிறகுகள் போல் இமைகள் படபடக்க ,எடுப்பான நாசியும்,லேசாக சுளித்த இதழ்களுடன் கண்களை சுருக்கி கொண்டு ஒரு வெண்ணிலவு விண்ணில் இருந்து மெல்ல வெளிவருவது போல் மெதுவாக தலையை வெளியே நீட்டி கொண்டு இருக்க அதை பார்த்த நொடியில் கண்கள் இமைக்க மறந்து ,இதயம் துடிக்க மறந்து .ஐம்புலன்களும் செயலற்று நின்றான் பாண்டி.
அலைந்த விழிகள் ஓரிடத்தில் நிலைப்பட அவனாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவனை அவள் பார்க்க..... அவனோ அவளையே பார்த்தபடி சிலையாக நிற்க.... அவள் முகத்தில் தெரிந்த பலவித உணர்வுகள் அவனை சிறைபிடிதிருக்க ..........சில வினாடிகள் அப்படியே இருந்தவர்கள் மீண்டும் வண்டி கிளம்ப அதன் குலுங்களில் நிதானத்திற்கு வந்த அவள் வேகமாக தலையை உள்ளே இழுத்து கொண்டாள்.சில நொடிகளுக்கு பிறகே அவன் நினைவிற்கு வர யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மீண்டும் பேருந்தை பார்க்க அது அவனை கடந்து செல்லும்போது தான் அவள் பின் இருக்கையின் ஓரத்தில் பள்ளி மாணவிகளின் உடையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. சிறிது நேரம் அங்கே நின்றவன் பின்னர் தலையை குலுக்கி கொண்டு கல்லூரியை நோக்கி நடந்தான்.
“டேய் மருது நேத்து சந்தையில இருந்து வாங்கிட்டு வந்த சிந்து மாடு மேச்சலுக்கு விட்டியா...இல்லை கட்டி போட்டே தீனி போட்டியா” என கேட்டபடி வந்தான் புகழ்.
“அய்யா அதை நேரத்திலே காட்டுல மேச்சலுக்கு விட்டுபுட்டேனுங்க” ........என மருது சொல்ல
“பரவாயில்லியே புது இடம்,சண்டித்தனம் ஏதும் பண்ணலியா” என புகழ் கேட்கவும்
“நீங்க பதம் பார்த்து புடிச்சு வந்ததுல...சண்டித்தனம் பண்ணுமுங்களா என்ன ?”என சொல்லி அவன் சிரிக்க
புகழும் சிரித்து கொண்டே “நான் என்ன செஞ்சேன் மருது....இந்த மாட்டை பார்த்த உடனே நமக்கு தோதாகும்னு தோனுச்சு.....அதான் விலைகூட கூட்டி குறைச்சு இருந்தாலும் பேசி முடிச்சுபுட்டேன்...என் மனசு சொல்றது இது வரைக்கும் தப்பானது இல்லை பார்கலாம்....அப்புறம் நம்ம பால்காரங்ககிட்ட சொல்லிடு......புது மாடு...கொஞ்சம் பார்த்து பக்குவமா கறக்க சொல்லு.....தீவனம் தீர்ந்து போச்சுனா முன்னாடியே சொல்லிடு..... வாயில்லா ஜீவன் ....ஒரு நேரம் கூட பட்டினி போடகூடாது”........ என தன்னை காக்கும் ஜீவன்களின் நலனில் அக்கறைகொண்டு அவன் சொல்லி முடிக்கவும்
இந்த வயசில இவ்ளோ பொறுப்பா பேசறத பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி என்றபடி வந்தனர் பக்கத்து ஊர் பெரியமனிதர்கள் சிலர்.
அவர்களை பார்த்ததும் முகத்தில் புன்னகையுடன் தனது பேச்சை நிறுத்தியவன் அருகில் இருக்கும் தனது சித்தப்பா மகனை பார்த்ததும் முகம் மாற எதற்கு வந்து இருக்கிறார்கள் என புரிய ,பின்னர் “வாங்க மாமா,வாங்க சித்தப்பு ,வாங்க அண்ணே” என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் வேப்பமரத்தின் அடியில் சென்று நின்றவன் ...”மருது அந்த கயித்து கட்டிலை எடுத்திட்டு வந்து இங்க போடு...இவங்க எல்லாரும் உட்காரட்டும்” என அவர்களை உபசரிக்காமல் உபசரித்தான்.அதற்குள் அங்கிருந்த ஒருவர் “எல்லாரும் உட்காருங்கன்னு சொன்னா குறைஞ்சா போய்டுவான்” என வாய்க்குள் முனக
அது புகழின் காதில் விழுந்தாலும் விழாது போல் அருகில் இருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்தான் அவன்.......இது தான் புகழ்.அதிகம் பேசமாட்டான். எதற்கும் உணர்சிவசபடமாட்டான்..தானாக வம்புக்கு செல்லமாட்டான்.ஆனால் அவனுடைய விஷயத்தில் தலையிட்டால் ஏண்டா அப்படி செய்தோம் என அவர்கள் வருந்தும் அளவிற்கு அவர்களை வாட்டி விடுவான்.கத்தியின்றி, ரத்தமின்றி, மௌனத்தாலும் செயல்களாலுமே அவர்களை காயபடுத்தி விடுவான்.எதிரிகள் பகைவர்கள் அவனை தேடி வந்தாலும் வருபவர்களுக்கு மரியாதைக்கு குறை இருக்காது. ஆனால் வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் குறை சொல்லமுடியாத அளவிற்கு தனது கோபத்தை காட்டுவான் புகழ்.
சிறிது நேரம் அங்கு மௌனம் நிறைந்து இருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் “இப்படியே அமைதியா இருந்தா இதுக்கு முடிவு தான் என்ன ...பேச தானே வந்தோம்....ஆரம்பிங்கப்பா...என்ன கோவிந்தா எங்ககிட்ட சொன்னத தம்பி கிட்டயும் சொல்லு ...” என சொல்லவும்
புகழ் வயதில் இருக்கும் கோவிந்தன் உடனே ...”நான் என்னத்தைங்க சொல்றது........நடந்தது என்னனு உங்களுக்கே தெரியும்......உரிமையை கேட்டா சண்டைக்கு வராங்க......இவனுக்கு எந்த அளவுக்கு அந்த இடத்துல பங்கு இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு.....என்னதான் சித்தப்பார் பெரியப்பார் மகனுகலா இருந்தாலும் சொத்துன்னு வந்திட்டா எல்லாமே சரி பாதி பிரிச்சாகனும்ல.....இவன் மட்டும் அந்த மல்லிகைப்பூ தோட்டம் அவனுக்கு மட்டுமே வேணும்னு சொல்லறது என்ன நியாயம் ?...எனக்கும் அது வேணும்...பாதி பங்கு எனக்கும் அதுல இருக்குதுல்ல “ என அவன் தனது பக்கம் விளக்கத்தை எடுத்துரைத்தான்.
அவன் சொல்வதை முழுவதும் கேட்டு விட்டு அவர்கள் திரும்பி புகழை பார்க்க அவனோ “இங்க பாருங்க......நான் அதிகம் பேச விரும்பலை..... ஆரம்பித்துல எல்லா பூமியும் நாங்க தான் விவசாயம் பண்ணிட்டு இருந்தோம்.நான் சொத்து பிரிக்கிரதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன்...இந்த மல்லிகை தோட்டம் எனக்கு வேணும்னு.........அதுவுமில்லாம இந்த பத்துவருசமா நான் அதை எப்படி பார்த்துகிட்டு இருக்கேன்னு இந்த ஊருக்கே தெரியும்.....இவ்ளோ காலமா பட்டணத்துல இருந்துபுட்டு இப்போ வந்து எனக்கு அந்த தோட்டம் வேணும்னு சொன்னா நான் எப்படி தரமுடியும் .......எத்தனை முறை தண்ணீ இல்லாம விவசாயமே நின்னு போனப்பவும் நான் அந்த தோட்டத்துக்கு காசு போட்டு தண்ணீ வாங்கி ஊத்தினேன் ....உங்களுக்கும் தெரியும் தானே ” என சொல்லி புகழ் நிறுத்தவும்
“அது தெரிஞ்சனாலதானபா நாங்களும் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கோம் என அவர்கள் சொல்லவும்
“எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசினா நான் என்ன சொல்ல முடியும் ...எனக்கு அந்த தோட்டம் வேணும்.....அதுக்காக நான் எதுனாலும் செய்ய தயாரா இருக்கேன்...இது தான் என் முடிவு என தீர்க்கமாக சொன்னவன் ...இளநீர் சொல்லிருக்கேன்...இருந்து குடிச்சுட்டு தான் நீங்க போகணும்” என அவர்களை இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை கிளம்புங்கள் என சொல்லாமல் சொன்னான் புகழேந்தி.
“என்னய்யா இது.....இந்த தம்பி இப்படி சொல்லுது” என சலித்தபடி ஒருவர் சொல்ல
“அதான் அந்த தம்பி தெளிவா சொல்லுதுள்ள ....அந்த தோட்டம் வேணும்னு ....அப்புறம் அது சொல்றதிலையும் நியாயம் இருக்குபா...பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி அது ஒடக்கான் கூட ஒண்ணுக்கு போகாத காடா இருந்தது.அதுக்கு இந்த தம்பி என்ன பாடு பட்டதுன்னு நம்மளும் நேர்ல பார்த்தோம்தான....அப்புறம் நம்மலே இப்படி பேசுனா எப்படி?” என இன்னொருவர் புகழ் சார்பாக பேச
“இங்க பாருங்க அதெல்லாம் எனக்கு தெரியாது....என்னோட பங்குக்கு அந்த தோட்டம் பாதி வருது...அது எனக்கு வேணும்......ஒண்ணுவேணா பண்ணுங்க...அந்த மல்லிகை செடியை எல்லாம் புடுங்கி எறிஞ்சுட்டு” என கோவிந்தன் சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டைகாலர் புகழின் கைபிடியில் இருக்க ...”என்னடாஆஆஅ சொன்ன என கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க கர்ஜித்தவன் இனி ஒரு வார்த்தை அந்த தோட்டத்தை பத்தி பேசின உடம்புல உசிரு இருக்காது சொல்லிட்டேன் அதுல இருக்கு ஒவ்வொரு செடியிலும் என் உசிரு இருக்குடா.......அதுல யாராவது கை வச்சாங்க அவங்க உசிரோட வெளியே வர முடியாது” என அவன் கோபத்தில் வார்த்தைகளை அழுத்தி சொல்ல கேட்ட அவனும் உடன் இருந்த பெரியவர்களுமே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டனர்.
அதற்குள் ஒருவர் “அடவிடுப்பா......நகரத்துல படிச்சா பையன் மண்ணோட அருமை தெரியாம பேசிட்டான்.......என சொல்லி புகழை தடுத்த ஊர் பெரியவர்கள் கோவிந்தனிடம் திரும்பி “இங்க பாரு தம்பி நாங்க எங்களுக்கு படி அளக்கிற இந்த மண்ணை எங்க உசிரவிட பெருசா நினைக்கிறோம்...இதுல நாங்க விதைக்கிற ஒவ்வொரு நாத்தும், செடியும் எங்க சொந்த புள்ளை போல பார்த்து பார்த்து வளர்கிறோம். விதச்சவன் கணக்கு பார்த்தா விதை நெல்லுகூட வீடு வந்து சேராது...........நீ என்ன புடுங்கி எரிஞ்சுடுங்கனு ஒரு வார்த்தையில சொல்லிபுட்ட ... இந்த மண்ணுதான் நாங்க கும்பிடற சாமி......கஷ்டமோ ,நஷ்டமோ எங்களுக்கு எல்லாமே இந்த மண்ணுதான்....நாலுபக்கம் சுவரும்,நடக்கிற தரையும் உரிமையில்லாத அடுக்குமாடி கட்டிடத்தில இருக்க உங்களுக்கு இதோட அருமை தெரியாது......இனி இப்படி பேசாத.....மண்ணை பத்தி பேசுனா நாங்களும் சும்மா இருக்கமாட்டோம் ” என அவனை மிரட்டும் தோனியில் எச்சரித்தனர்.
பின்னர் கோவிந்தன் ,புகழ் இருவரும் தங்களது நிலைபாட்டில் இருந்து இறங்க மறுக்க ...”இது பங்காளிங்க பிரச்சனை...நீங்களே பேசி முடிவு பண்ணிக்கங்க” என சொல்லிவிட்டு ஊர் பெரியவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் செல்லும்வழியில் “.ம்ம்ம்ம் சின்ன வயசிலே இந்த அளவுக்கு முன்னேறி எல்லாரிடமும் அனுசரனையா போற பையன் இந்த தோட்டத்து விஷயத்தில மட்டும் ஏன் இப்படி பிடிவாதமா இருக்கான் .......மண்ணு மேல உசிரவசுட்டா அதை விட்டு கொடுக்க மனசே வராது....ஒரு விவசாயா இருந்திட்டு நமக்கு இது புரிது...ஆனா அதை வித்து காசாக்கணும்னு நினைக்கிற அவன் தம்பிக்கு புரியலியே...இது எங்க கொண்டு போய் முடியுமோ என புலம்பியபடியே நடந்தனர் அப்பெரியவர்கள்.
அவர்கள் சென்ற பின்னரும் அங்கு நடந்த நிகழ்வுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பிடித்து வைத்த சிலைபோல் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான் புகழ் .
அந்த செடிகளை வேண்டுமானால் பிடுங்கி எரிந்து விடு என கோவிந்தனின் வார்த்தை அவன் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க ஒவ்வொரு முறையும் உடல் குலுங்கி நின்றது. அவன் மனமோ தரையில் விழுந்த மீனை போல படபடவென வேகமாக துடித்து கொண்டு இருந்தது.என்ன வார்த்தை சொல்லிவிட்டான்....நான் அவனிடம் பலமுறை எடுத்து சொல்லியும் அவன் அந்த தோட்டத்தின் மீதே பிடிவாதமாக இருக்கிறான் என மனதிற்குள் புலம்பியவன்
அதற்கு அவன் மட்டும்தான் காரணமா என அவன் மனம் அவனை பார்த்து கேட்க
அவனோ தன மனதிடம் “ எனக்கும் தெரியும்...இதில் என் மாமவின் பங்கும் இருக்கிறது என்று...ஆனால்?????” என சொல்லிபடியே மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தான்.
ஆம் புகழின் தந்தை தனது தூரத்து சொந்தமான தம்பியோடு சேர்ந்து வாங்கிய சொத்து இது....இரண்டு பெரியவர்களும் இறந்துவிட அந்த சொத்து பிரிக்காமல் இருந்தது.தரசு நிலமாக இருந்ததால் யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரின் மகன் கோவிந்தன் படித்து முடித்துவிட்டு நகரத்தில் வேலை பார்க்கிறான்.மூதாதையர் சொத்து என நான்கு ஏக்கர் இருக்க அது அண்ணன் தம்பி இருவரும் பிரித்து கொண்டனர்.அப்போது புகழின் பராமரிப்பில் இருக்கும் மல்லிகை தோட்டம் இருவருக்கும் பொதுவான பங்காக வந்தது. தனது பங்கிற்கு வந்த காட்டை மாணிக்கத்திடம் தான் விற்றான் கோவிந்தன்..முழுவதும் தென்னந்தோப்பு இருக்க ஓரத்தில் இந்த மல்லிகை தோட்டமும் இருக்கிறது.சொத்து பிரிக்கும்போது அது இருவருக்கும் பொதுவாக வர அதற்கான முழுதொகையும் கொடுத்து விடுவதாக புகழ் சொல்ல அவனும் ஒத்துகொண்டான்.ஆனால் மாணிக்கமோ அந்த மல்லிகை தோட்டம் கொடுத்தால் மட்டுமே எல்லா நிலங்களையும் வாங்குவேன் என அடம்பிடிப்பதால் இப்போது இந்த பிரச்சனை.மாணிக்கத்திற்கும் புகழிற்கும் இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு போர் இருந்து கொண்டே இருக்கும்.அதில் இதுவும் ஒன்று.
எந்த காரணத்திற்காகவும் அந்த தோட்டத்தை அவன் யாருக்கும் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.அவன் நினைத்தாலும் அவனால் அதை கொடுக்கமுடியாது.அந்த தோட்டத்தில் விதைகளை தூவவில்லை...தன் கனவுகளையும் ,ஆசைகளையும் தூவி இருக்கிறான்...அது இன்று செழித்து வளர்ந்து மலர்களாக மலர்ந்திருக்க அவனது நினைவுகளும் அதுனுடனே மனம் வீசிக்கொண்டு இருகின்றன.அங்கு சென்றாலே அந்த நினைவுகள் நெஞ்சில் நிலவுபோல் தாலாட்ட அந்த சுகத்தில் பலமணிநேரம் தன்னை மறந்து கிடப்பான் புகழ்.அங்கு பூக்கும் பூக்களை யாரும் பறிப்பதற்கு அனுமதி இல்லை.அங்கே பூத்து வாடி மடிந்து அந்த மண்ணிற்கு உரமாகி மீண்டும் பூக்கும்.அந்த தோட்டத்தில் நுழைய கூட யாருக்கும் அனுமதி இல்லை.
தன் உயிருடன் கலந்த அந்த தோட்டத்தை அவன் உறவுக்காக விட்டுகொடுப்பானா என்ன? அதற்காக தன் உயிரைவிடவும் அவன் தயாராக இருந்தான்.
அப்போது “அய்யா நீங்க இங்க தான் இருக்கீங்களா....... இன்னும் சாப்பாட்டுக்கு வரலைன்னு அங்க ஆத்தா ரவுசுபோட்டுகிட்டு இருக்குதுங்க” என சொல்லிகொண்டே அங்கு வந்தான் மருது.
“இதோ கிளம்பிட்டேன் மருது” என சொல்லியபடி வீட்டை நோக்கி நடந்தான் புகழ்.
“ ... இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்குனு அந்த காலத்தில காரணம் இல்லாமலா சொல்லி இருப்பாங்க.....உறவுன்னு சொல்லிட்டு திண்ணையில வந்து உட்கார்ந்து உங்களுக்கு எல்லாம் வாயில பல்லு போட்டு பேச என் வீட்டு சமாச்சாரம்தான் கிடைச்சுதா ?யாரை பார்த்து என்ன பேச்சு பேசறிங்க.......என் பையன் வவுசுக்கும் வனப்புக்கும் இந்த ஜில்லாவுல பொண்ணே கிடையாது தெரியும்ல ....... பேசவந்துட்டாலுக பேச்சு “ என வெளித்திண்ணையில் அமர்ந்து கொண்டு பேச்சியம்மா நாயம் முழக்கி கொண்டு இருக்க அதை இரண்டு பெண்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அதில் ஒருத்தி “அட நான் என்னத்த சொல்லிபுட்டேன் பேச்சி.......நீ வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசற .........என்னதான் இருந்தாலும் புகழு எனக்கும் சித்தபாரு பேரன்தான .......அதான் சேதி கேட்ட உடனே மனசு கேட்காம உன்கிட்ட வந்து சொன்னேன்...... நம்ம மணி பொண்ண அவங்க நாத்தனார் கோமதி மவனுக்கு கேட்கிறாங்களாம்.....அந்த பயனும் படிச்சு பேங்க்வேலையில இருக்கிறானாம்.....அவங்க பொண்ணுக்கு கண்ணாலத்தை முடிச்சதும் அடுத்தது இவங்க கண்ணாலம் தானாம்.இப்போ பேச்சுவார்த்தையோட இருக்குதாம் இதான சொன்னேன்.......ம்ம்ம்ம் நம்ம புகழும் கட்டிக்கிற முறை தான் ......ஆனா என்ன பண்றது ..... விவிசாயிக்கு வாக்கபட்டா சேருலையும்,சானிய்ளையும் அல்ல பொழப்பை நடத்தனும்...அதான் பட்டணத்துல பொண்ண கொடுத்தா பவுசா இருப்பான்னு மணியம்மை முடிவு பண்ணிட்டா .........ம்ம்ம்ம் என்ன பண்றது எல்லார்த்துக்கும் கொடுப்பினை வேணும் இத சொன்னதுக்கு ஏன் நீ இந்த சிலும்பு சிலும்புற”.... என சந்தடி சாக்கில் அவரது கோபத்தை இன்னும் சற்று தூபம் போட்டு ஏற்றிவிட அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் புகழ்.
புகழை பார்த்ததும் “இதோ தம்பி வந்திடுச்சு......பாவம் வேலை செஞ்சு கலைச்சு போய் வருது...அதுக்கு சோத்தபோடு பேச்சி...அப்புறம் உட்கார்ந்து நாயம் பேசலாம்” என நல்லவர்கள் போல் சொல்லிவிட்டு நடையை கட்டினார்கள்.
“ம்ம்ம்ம்ம்ம்ம் “.ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடுமாமா ........ வீதில போறவ எல்லாம் நின்னு விசனப்பட்டு போறளவுக்கு என் குடும்ப நிலமை இருக்கு..... என் பேச்சுக்கு இந்த வீட்ல எங்க மரியாதை இருக்கு”......... யாரை குறை சொல்ல நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி” என புலம்பிகொண்டே வீட்டிற்குள் சென்று அவர் உணவை எடுத்து வைக்க
ஏற்கனவே மனக்குழப்பத்தில் இருந்த புகழ் அவர் சொன்னதை கவனிக்காமல் “ஏன்மா எப்போ பார்த்தாலும் புலம்பிகிட்டே இருக்கீங்க .........சே எங்க போனாலும் நிம்மதியே இல்லை” என வார்த்தையை விட அதுவரை கோபமாக மட்டுமே பேசிக்கொண்டு இருந்த பேச்சியம்மாள் இதை கேட்டதும் பொங்கி எழுந்துவிட்டார்.

நேசம் கொண்ட மனது
தனது ஆசைகளை விதைகளாக தூவி
உயிரை நீராக பாய்ச்சி
தன்னையே மண்ணிற்கு உரமாக்கி
உருவாக்கிய நந்தவனம் அல்லவா அது.
அவளது புன்னகையில் சிந்திய
முத்துகளே அங்கு மலர்களாக...
அவளது பாதம் பதிந்த இடங்களே
அதன் ஆணிவேர்களாக...
அங்கு நிறைந்துள்ள அவளது மூச்சுகாற்றே
அப்பூக்களின் வாழ்விற்கு உயிர் கொடுக்க....
வேராக அவனும் செடியாக அவளும்
நிறைந்திருக்க அதை...
பங்கென்று சொல்லி பறித்திட நினைத்தால்

அது நியாயமா??????? தர்மமா ????????