• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 8

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -8



இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின் நடுவில்தடைகள் வரும் என்று நினைத்தான் தான்........ ...ஆனால் பாதையே தடைபட்டால் பயணிப்பவனின் நிலை என்ன ?விடையே இல்லாத வினா ஒன்றிற்கு விடைதேடும் முயற்சியில் அவன் இருந்தான்.

வீண் கனவுகளை நெஞ்சில் விதைக்காதேஎன ஆழ்மனம் எச்சரித்தும் .....அலைகடலென பொங்கி எழும் நினைவுகலும் , ஆசைகளும் அதை அலட்சியபடுத்த,கனவு தான் என்றாலும் அந்த நினைவுகளாவது நெஞ்சில் எப்பொதும் பசுமையாக இருக்கட்டும் என சிறுபிள்ளைதனமாக அன்று அவன் மனதில் விதைத்த விதை இன்று விருட்சமாக வளர்ந்து இதயத்தை இரண்டாக பிளப்பது போல் ரணத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது..

பேசியம்மா சொன்ன சேதி அவன் மனதை கூறுபோட்டு கொண்டிருந்தது.” ம்ம்ம்ம் என்னை கட்டுன மகராசன் கண்ணமூடுரப்ப என்னை பார்த்து ........ தேசிங்குராசாமாதிரி ரண்டு சிங்க குட்டிங்க உனக்கு இருக்காங்க பேச்சி...நீ எதுக்கும் கலங்காத.....எப்பாடுபட்டாவது அவங்களை நல்லா படிக்க வச்சிடு அப்டின்னு சொல்லிட்டு கண்ணை மூடினாரு .....ஆனா என் போதாத காலம் மஞ்சகாமாலை வந்து நான் படுக்க உன்னோட படிப்பு பாதியிலே நின்னு போச்சு... களைப்பையை நீ கையில எடுக்க வேண்டியதா போய்டுச்சு............. ம்ம்ம்ம் நீ இப்போ சம்பாரிச்சு பெரிய மனுஷன் ஆகிட்ட ....அதனால நாங்க எல்லாம் நீ சொல்றத தானே கேட்டாகணும்.......பேசு ராசா பேசு... பாவி மக அப்பவே இந்த உசிரு போயிருந்தா இப்போ இந்த அவமானம் எனக்கு வந்து இருக்காது ......இப்பதான் அவளுக பேசிட்டு போறாளுக......இப்போ நீயும் பேசு” என ஆத்திரமும் அழுகையுமாக சொன்னதோடு நிற்காமல்

.....”என்னதான் காசுபணம் இருந்தாலும் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் வந்திடுமா என்ன? கண்ணாலம் பண்ற வயசில காளைமாடு மாதிரி பையனை வச்சுக்கிட்டு இருக்கும்போதே தெரியலை......அவ குடும்ப வவுசபத்தினு நாலு பேரு நாலுவிதமா பேசறப்போ எனக்குதான் சாகனும்போல இருக்கு.... உனக்கு அதை பத்தி என்ன கவலை......நீ சாப்பிடுப்பா சாப்பிடு” என சொல்லிவிட்டு அழுகையுடனே சுவற்றின் ஓரத்தில் சென்று அமர்ந்தார்.

எப்போதும் போல் அம்மா கோபத்தில் பேசுகிறார் என நினைத்து அவன் பேச , ஆனால் அவரின் ஆத்திரமும் அழுகையுமான இந்த பேச்சு அவனுக்கு அதிர்ச்சியாக இருக்க ..... உடனே சாப்பாட்டில் இருந்து எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்தவன்..... “அச்சோ அம்மா நான் என்ன சொன்னேன் ...நீங்க சின்ன விஷயத்திற்கு கூட பெருசா கவலைபடுவிங்க ........அதனால நீங்க ஏன் புலம்பிட்டு இருக்கீங்க அப்டினுதான கேட்டேன்....நான் இருக்கும்போது நீங்க எதுக்குமே கவலை படகூடாதும்மா ...அதுக்குதான் அப்படி சொன்னேங்ம்மா......நீங்க என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க..........”என்றவன்

மீண்டும் அவர் முகத்தை தன் பக்கம் திருப்பி “ என்னாச்சும்மா ....யார் உங்களை என்ன சொன்னா? அந்த வளரு சித்தி ஏதாவது சொன்னாங்களா ?இல்ல வேற யாரு என்ன சொன்னா?எதுக்கு இப்படி ஆத்திரபட்ரிங்க...அதும் நான் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க ” எனகேட்டுகொண்டே அவரின் கைகளை எடுத்து ஆதரவாக மடியில் வைத்துகொண்டு அன்புடன் வினவ

பிள்ளையின் கனிவான பேச்சில் நெகிழ்ந்த தாயின் மனம் ஆத்திரத்தின் தணல் சற்று மட்டுப்பட “அது வந்து தம்பி என ஆரம்பித்தவர் பூரணிக்கும் அழகனுக்கும் திருமணம் என்ற விஷியத்தை சொல்லி .என்னமோ ஊரு உலகத்திலே இல்லாத மாப்பிள்ளை கிடச்ச மாதிரி எல்லாம் பேசறாளுக...பட்டணத்து வவுசு போய் பார்த்தா தான தெரியும் “என அவர் சந்தடி சாக்கில் தனது எரிச்சலை வெளிபடுத்தினார். .

பேச்சியம்மாள் பேச்சை ஆரம்பித்தவுடன் வேறு எதோ சொல்ல போகிறார் என நினைத்து அவன் ஆர்வமாக கேட்க ஆனால் அவர் சொன்ன சேதி ஒரு நிமிடம் அவன் இதய துடிப்பையே நிறுத்து விட்டது “என்னம்மா சொல்றீங்க நீங்க “ என அவன் உடல் ஒருநிமிடம் அதிர்ந்து குலுங்க அதிர்ச்சியுடன் தன் தாயின் முகத்தை அவன் பார்க்க

ஆனால் அவரோ அதை அறியாமல் “அட உண்மையதான் சொல்றேன் புகழு.... இப்போ இததான் உன் சித்தி சொல்லிட்டு போறா...ஆனா எனக்கு அதுகூட கோபம் இல்லை பெரியவனே....அந்த சண்டிராணி யாரையோ கண்ணாலம் பண்ணிட்டு போகட்டும்..... அவங்க சகவாசமே நமக்கு வேண்டாம்.....ஆனா நீ படிக்காதவன் அதுனால உனக்கு கட்டுற உரிமை இல்லை அப்டின்னு பேசறாங்க பாரு...அதான் என்னால தாங்க முடியலை.......அதுக்கு நான் தான் காரணம்.....மஞ்சகாமாலை வந்தப்பவே இந்த உசிரு போயிருந்தா உனக்கு இந்த பேச்சு வந்து இருக்கதுல்ல” என அவர் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க

“அம்மாஆஆ எனகத்தியவாறே கோபத்துடன் அவரது வாயை கைகளால் மூடியவன்...அமைதியாக சிறிது நேரம் கண்களை மூடி மூச்சை இழுத்துவிட, அப்போதும் அவனது புஜத்தின் நரம்புகள் துடிக்க...... அதை அடக்கி தன்னை கட்டு படுத்த அவன் முயன்று கொண்டு இருந்தான்..

பேச்சியம்மாவோ அவனது இந்த செயலில் தனது பேச்சை நிறுத்தி திகைப்புடன் அவன் முகத்தை பார்க்க அதில் அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை அவரால் உணரமுடியவில்லை..... அவரும் ஏதும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டு இருக்க சில நிமிடங்களுக்கு பின்னரே கண்களை திறந்தவன் ... தன் அன்னை தன்னை பார்க்கிறார் என உணர சட்டென்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு “இனி அப்படி சொல்லாதிங்கம்மா” என சொல்லியவாறே விருடென்று அங்கிருந்து நகர்ந்தான்..அப்போது அவன் கால்கள் சற்று தடுமாற “தம்பி பார்த்துடா என பேச்சியம்மா பதற அவனோ...ஒண்ணுமில்லை....நான் பார்த்துகிறேன்”என்றவாறு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்.

“டேய் சாப்பிட்ட கையை கழுவாம கூட போறியே” என பேச்சியம்மா சொல்ல அதை கேட்கும் நிலையில் அவன் இல்லை.

புகழின் மனமோ புயலில் சிக்கிய காற்றாடி போல் அல்லாடிக்கொண்டு இருந்தது.

அப்போது அருகில் இருக்கும் ரேடியோவில்



நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு...என்றாச்சு




மாடு மனை எல்லாம் உண்டு என்னோட… என்
நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட…
உன்னத் தொட்டு நான் வாறேன்
என்னவிட்டு ஏம்போறே
நிழல்போல் கூடவந்தா ஆகாதோ….
சொல்லம்மா … என்னம்மா … என் கண்ணம்மா …




என்ற பாடல் ஒலிக்க அதை கேட்டது அவனது உயிர்த்துடிப்பு நின்று மீண்டும் துடிக்க அந்த நொடி அவன் எதிரிக்கு கூட வரகூடாது என் நினைத்தான் புகழ்.



கால் போனபோக்கில் அவன் நடந்து கொண்டிருக்க “உங்க அத்தைக்காரி அதான் அந்த கோமதி இருக்கால அவ மகனுக்கு தன் பொண்ண கொடுக்கிறாளாம்.அவன் ஏதோ பாங்க்ல வேலை செய்யறானாம்.வெளிநாடுகூட போகபோறானாம்” என பேச்சியம்மா சொன்ன வார்த்தைகள் அவன நெஞ்சை கடப்பாரையால் இடிப்பது போன்ற ரணத்தை எற்படுத்திகொண்டிருந்தது. கால்கள் நேராக மல்லிகை தோட்டத்திற்கு இழுத்துவர அங்கு வந்தும் அவனது வேதனை குறையவில்லை. அந்த மல்லிகை தோட்டத்தில் படுத்தவன் சோறு தண்ணீ இல்லாமல் நாள் முழுவதும் அங்கேயேஇருந்தான் .மருது வந்து அழைத்தும் அவன் செல்லவில்லை.

இங்கே “வீட்டுக்குள்ள போட்டது போட்டபடி அப்படியே கிடக்குது....என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ....உன்கிட்ட நான் வயலுக்கு போயிட்டு வந்திடறேன்.....அந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வைன்னு சொன்னேன்ல......அதை செய்யாம அங்க என்னடி பண்ற “ என்றபடி உள்ளே வந்தார் மணியம்மை.

“ஏன்மா கத்தற....... டிவில நம்ம தலைவர் படம் போட்ருக்காங்க ...பார்த்திட்டு வந்து செஞ்சிடறேன்” என பதிலுக்கு கத்தியபடி படத்தில் மூழ்கி இருந்தாள் பூரணி.

“ஆமாண்டி இப்படியே வாய்க்கு வாய் பேசிட்டு இரு ....... இப்படி நீ உன் மாமியார்கிட்ட பதில் சொன்னா பொண்ண வளர்த்தி வச்சிருக்கிற லட்சணத்தை பாருன்னு என்னைத்தான் திட்டுவாங்க......அதும் உன் அத்தை என்னை குறை சொல்றதுல முதல் ஆளா இருப்பா ......மரியாதையா வந்து இந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வை” என மணியம்மை மீண்டும் சத்தம் போடவும்

“அடடா உன்னோட பெரிய தொந்தரவா போச்சும்மா என்ற படியே எழுந்து மணியம்மையின் முன் வந்து நின்றவள் ....... இங்க பாரும்மா என்ற அத்தை வீட்ல எல்லாம் இந்த மாதிரி அம்மி கள்ளு எல்லாம் இல்லை....சுவிட்ச் போட்டா மிக்சியே துவையல் அரைச்சுடும்.அதும் டிவி பார்த்துகிட்டே செய்யலாம்.... எல்லா வேலைக்கும் அங்க மிசின் இருக்காம்.... நம்ம அரசி சொன்னாள் ....பாத்திரம் கூட விலக்கி கழுவிடுமா தெரியுமா உங்களுக்கு .....இங்க மாதிரி எல்லாம் இடுப்பு வலிக்க வேலை கிடையாது....அதுனால நீ ஒன்னும் கவலைபடவேண்டாம்....உன்னை யாரும் தப்பா பேசமாட்டங்க” என தலையும் கையும் அவள் பேச்சுக்கு ஏற்றபடி நயனம் வாசிக்க தனது மாமியார் வீட்டின் பெருமையை பூரணி பறைசாற்றிகொண்டிருந்தாள்.

“ஆமாமா அங்க எல்லாத்துக்கும் மிசின் இருக்கும்...கூடவே கொலஸ்ட்ரால் ,சுகர்,பிபீ எல்லாம் அவங்க உடம்புளையும் இருக்கும்....அதான உனக்கு வேணும் என கிண்டலாக கேட்டபடி அங்கு வந்தாள் பாரி..

அவள் சொன்னதும் முகம் சுருங்கிய பூரணி “உனக்கு ஏண்டி பொறாமை.......அம்மா இவளை கொஞ்சம் கண்டிச்சு வை...எப்போ பார்த்தாலும் அந்த வீட்டை பத்தி மட்டமாவே சொல்லிட்டு இருக்கா ...இது நல்லாயில்லை சொல்லிட்டேன்” என கோபமாக தாயிடம் புகார் செய்தாள் பூரணி.

“பாரி நீ சும்மா இருக்க மாட்டியா......அது நம்ம பூரணி போய் வாழ போற வீடு.....அப்படி எல்லாம் சொல்ல கூடாது” என மணியம்மை பாரியை கண்டிக்க

“ம்ம்ம் நல்லா உரைக்கிற மாதிரி சொல்லும்மா....என்ன வார்த்தை பேசறா” என பூரணி பாரிக்கு பலிப்பு காட்ட

பாரியோ “அம்மா நான் யாரையும் குறை சொல்லல ......உங்களுக்கு தெரியும் தான .....ஒரு பரீட்சைகாக அத்தை வீட்ல போய் ஒருவாரம் தங்கி இருந்தேன்......அவங்களோட பழக்கவழக்கம் எல்லாம் நமக்கு ஒத்து வராதும்மா .அதும் நம்ம பூரணி குணத்திற்கு சுத்தமா ஒத்துவராது.........அரைமணிநேரத்திற்கு மேல வீட்டுக்குள்ள இவ இருக்க மாட்டா......ஆனா அங்க எல்லாம் வீட்டு கதவை திறந்து வைப்பதே ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தான்....என்னாலயே இருக்க முடியலை.....இவ எப்படி சமாளிக்க போறா...அதான் சொன்னேன் “ என தனது தமக்கையை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் சொல்லி கவலை பட

உடனே பூரணி “அப்படியா..என்ன பாரி இப்படி சொல்ற......அங்க சுத்தி பார்க்க நிரயா இடம் இருக்கு.....எல்லாரும் தினமும் வெளியில போவாங்கனு நம்ம சாந்தி சொன்னா...........நீ என்ன இப்படி சொல்ற.......அவங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்களா ? வீட்டுக்குள்ளே என்ன பண்ணுவாங்க ......கடை கன்னிக்கு போறதுக்கு வெளியே வரணும் தான” என அவள் அப்பாவியாக கேட்கவும்

“இல்ல பூரணி...அது எல்லாம் போன் பண்ணா வீட்டிற்கே வந்திடும்.....அதுவும் அத்தை வீட்ல ஹோம்தியேட்டர் ரூம்னு இருக்கு.சினிமா கூட வீட்லயே பார்த்துக்குவாங்க...வெளியே போக வேண்டிய அவசியமே இல்ல “ என்றாள்.

“அப்படியா “என அவள் ஆச்சரியத்தில் வாய் பிளக்க

“ஏன் இதெல்லாம் உனக்கு தெரியாதா ?அழகன் மச்சான் உன்கிட்ட ஏதும் சொல்லலையா?” என பாரி கேட்கவும்

“இதெல்லாம் ஒன்னும் சொல்லலை.....அவரு படிச்ச ஸ்கூல் ,காலேஜ் பத்தி சொன்னாரு....வேலையை பத்தி சொன்னாரு.....ஆனா இது எல்லாம் சொல்லலை....நாங்க எங்கடி பேசுனோம்.....அவங்க வேலையை பார்க்கவே நேரம் சரியா இருக்கு.....இதும் அன்னைக்கு கார்ல வரும்போது அரசி நானு மச்சான் பேசிட்டு வந்தோம்...அப்போதான் சொன்னாரு என்றாள் பூரணி.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை........நீ போய் இருந்தா அப்படியே பழகிக்கலாம்....நீ கவலைபடாத....” என அவள் முகம் வாடுவதை கண்டுபொறுக்கமாட்டாமல் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள் பாரி..

அதுவரை துள்ளலாக பேசிகொண்டிருந்த பூரணி இப்போது யோசனையாக தலையாட்டினாள். மனதிற்குள் ஒரு அச்சம் மெல்ல உள்ளே நுழைந்தது.

அதே மனநிலையில் தான் மணியம்மையும் இருந்தார். பாரி சொன்னதும் அதை கேட்ட உடன் பூரணியின் முகமாற்றமும் அவருக்கும் சிறிது கவலையை ஏற்படுத்தியது. சிறுவயதில் இருந்தே அவரின் கைகளுக்குல்லே இருந்து பழகியவள் பூரணி .....கோபமும் அதிகம்...அதே நேரத்தில் எளிதில் சமாதனமும் ஆகிவிடுவாள்.ஆனால் கோபம் வரும் நேரத்தில் அவள் என்ன செய்கிறாள் என்பது அவளுக்கே தெரியாது.வீட்டில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வார்கள்.ஆனால் அழகன் வீட்டில் அப்படி இருப்பார்களா???.......என்னதான் சொந்த நங்கையாராக இருந்தாலும் கோமதியின் குணத்தை பற்றியும் மணியம்மைக்கு நன்கு தெரியும்.இவள் அங்கு எப்படி சமாளிக்க போகிறாளோ என்ற புதிய கலக்கம் அவரின் நெஞ்சில் மூண்டது.

அன்று அழகன் தன் மனதை சொல்லிவிட்டு சென்ற பின்னர் நன்றாக யோசித்தே மணியம்மை மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.

அவர் யோசித்தது என்னவென்றால் இந்த காலத்தில் படிப்பு ரொம்ப முக்கியம்.வசதி இல்லாத பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.பூரணிதான் சரியாக படிக்கவில்லை.ஆனால் அழகன் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறான்.மேலும் குணமும் நல்ல குணம்.உறவுமுறையும் இருப்பதால் நாளை ஏதாவது பிரச்சனை என்றால் சரி செய்து கொள்ளலாம்.அழகனே விரும்பி திருமணத்திற்கு கேட்கிறான். மேலும் பூரணிக்கும் இதில் விருப்பம் என்பதால் காதல் மனம் புரிந்து அதன் பலனை அனுபவிக்கும் மணியம்மைக்கு அதன் அருமை புரிய .அதனால் தான் அவர் மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.

மாணிக்கமோ முதலில் நம்ப மறுத்தாலும் மணியம்மை தான் அழகன் சொன்னதை விளக்கினார். அதை கேட்டதும் தனக்கு வரும் மருமகன் தன் அக்காவின் மகன் என்பதில் அவர் மனம் மகிழ்ச்சி கொள்ள மேலும் மணியம்மையும் இதற்க்கு முழு மனதாக சம்மதித்தது அவருக்கு மிகவும் சந்தோசமாக இருக்க மாணிக்கமும் சரி என சொல்லிவிட்டார்.

“இப்போது ஏதும் வெளியில் சொல்ல வேண்டாம்......முதலில் அரசி கண்ணாலம் முடியட்டும்...அதற்கு பின்பு இதை பற்றி மாமாவிடம் பேசுகிறேன்” என அலைபேசியில் கோமதியும் இதற்கு சம்மதம் கொடுக்க அழகன் பூரணி திருமணம் இப்படியாக உறுதி செய்யப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அழகன் பூரணி திருமணத்தில் உறுதியாக இருந்தனர்.

பிறப்பும் இறப்பும் நம் கையில இல்லாத இடைப்பட்ட நாட்களில் வாழும் இந்த வாழ்க்கையில் தான் மனிதனுக்கு எத்தனை ஆசைகள், கனவுகள், சந்தோசம், கோபம், வெறுப்பு என பல பரிணாமங்களில் தன்னை வெளிபடுத்தி கொள்கிறான்.

தடைகல் இல்லாத வெற்றி, சோதனை இல்லாத சாதனை என்பது இந்த உலகில் இல்லை.வானவில்லை வளைத்து விட்ட சந்தோசத்தில் இவர்கள் இருக்க ஆனால்அது சில மணித்துளிகள் தான் வானத்தில் இருக்கும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து போனார்கள்.

இரவு முழுவதும் மல்லிகை தோட்டத்திலே இருந்தவன் விடிகாலையில் வீட்டிற்கு வர பாண்டி திண்ணையில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் “இன்னைக்கும் ஊரை சுத்திட்டு லேட்டா வந்து இங்க படுத்திருக்கான் பாரு என திட்டியபடியே பாண்டியின் அருகில் வந்தவன் டேய் பாண்டி என்னடா இங்க படுத்து தூங்கற....இன்னைக்கும் சினிமா பார்த்திட்டு வந்தியா .....எத்தனை முறை சொல்லி இருக்கேன்......இப்படி ராத்திரி நேரத்துல போகாதேன்னு” என படபடவென அவன் பேசிக்கொண்டு இருக்க .

புகழின் உலுக்களில் திடுக்கிட்டு விழித்தவன் கண்களை கசக்கி கொண்டே “அண்ணா வந்திட்டிங்களா ......உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தோம்...பசிக்குது வாங்க சாப்பிடலாம்” என சொல்லி கொண்டே வேகமா எழுந்தவன் சுற்றிலும் பார்க்க பொழுது விடிந்து கதிரவன் கதிர்கள் அவன் கண்களை துளைத்தன .

அதற்குள் “புகழ் என்னடா உளற.....இந்நேரத்தில யார் சாப்பிடுவாங்க.......என்ன ராத்திரி பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஏதாவது....” என அவன் முறைக்க

“ என்னங்கண்ணா நீங்க......விடிஞ்சதே எனக்கு இப்பதான் தெரியும்.... .......நீங்கதான் மதியம் சாப்பிட வந்தப்ப அம்மாகூட சண்டைபோட்டுகிட்டு தோட்டத்திலே போய் படுத்திட்டங்கனு மருது சொன்னான். நான் வந்து பார்கலாம்னு பார்த்தா இங்க அம்மாவும் பாவம் அழுதுகிட்டே இருந்தாங்க.....அதான் இரவு நீங்க வந்த பிறகு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருந்தோம்....நீங்க வரலையா அப்படியே தூங்கிட்டோம் போல இருக்கு....அதான் நீங்க எழுப்பின உடனே நான் உளறிட்டேன்” என்றான்.

“என்னது அம்மாவும் நீயும் சாப்பிடலையா ?எனக்காக காத்துகிட்டு இருந்தீங்களா ?..ஏண்டா இப்படி பண்றீங்க.....நான் வரலைனா என்ன நீங்க சாப்பிடவேண்டியது தான...அச்சோ அம்மாவுக்கு வேற பீபி இருக்கே.... என்ன ஆச்சே” எனஎன படபடவென பேசிகொண்டே வேகமாக வீட்டிற்குள் புகழ் செல்ல பாண்டியும் பின்னால் சென்றான்.
 
  • Like
Reactions: BhagavathyShanker

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அங்கு பேச்சியம்மா முற்றத்தில் சாய்ந்தபடி கண்களை மூடி இருக்க புகழ் ,பாண்டியை திரும்பி முறைத்தவாரே “பாரு இப்படியே தூங்கி இருக்காங்க இவங்களும்” என்றபடி அருகில் சென்று அவரை உலுக்க அவரோ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்.

“ஐயோ அம்மா என்ன ஆச்சு.....இங்க பாருங்க அம்மா” என புகழ் பதற

பாண்டியோ “அம்மா என்னாச்சு அண்ணன் வந்துட்டாங்க ...இங்க பாருங்க” என அவனும் கத்த

அதற்குள் புகழ் “பாண்டி அந்த தண்ணீர் எடு” என்றவன் அவர் முகத்தில் தொளிக்கவும் அவர் உடலில் லேசான அசைவு ஏற்பட “அம்மா...அம்மா இங்க பாருங்க” என பாண்டி அவர் கன்னத்தை தட்டி அவரை எழுப்ப அவரோ கண்களை திறக்க முடியாமல் பிதற்றிக்கொண்டு இருந்தார்.

“தம்பி புகழு ...புகழு....” என அவர் இடைவிடாமல் முனக புகழோ வேகமாக அவருக்கு முதல் உதவி செய்தவன் அவரை தூக்கி இருவரும் சேர்ந்து கட்டிலில் படுக்க வைத்தனர்.

அவரை படுக்கவைத்து விட்டு வேகமாக பாண்டியிடம் திரும்பியவன் “உனக்கு அறிவு இருக்காடா...அம்மாவுக்கு தான் உடம்பு சரியில்லைன்னு தெரியும்ல.....அப்புறம் ஏன் சாப்பிடாம இருந்தீங்க.....ஏண்டா எல்லாருமா என்ன கொல்றீங்க” என கோபத்தோடு ஆரம்பித்து ஆற்றாமையோடு முடித்தான் புகழ்.

“இல்லைங்கணா அம்மாதான் ஏதோ உங்களை திட்டிட்டேன் ...அதான் அவன் சாப்பிடவரலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க...அதான்” என பாண்டி சொன்னதும்

“அவங்க சொன்னா உனக்கு எங்க புத்தி போச்சு...படிச்சவன்தான நீ.....ஆமா படிப்பு...படிப்பு....படிச்சவங்க பொழப்பு எல்லாம் இப்படிதான் இருக்கும்.....அவங்களே வயசானவங்க ...உடம்பு சரியில்லாதவங்க ....அவங்களை சாப்பிட சொல்றத விட்டுட்டு நீயும் கூட சேர்ந்து சாப்பிடாம இருந்து இருக்க......உங்களுக்கு எல்லாம் அறிவு வேலையே செய்யாதா என மனதில் உள்ள கோபத்தை பாண்டியை வடிகாலாக நினைத்து அவன் கொட்டி கொண்டு இருந்தவன் . படிச்சா மட்டும் போதாது ...சமயோசித புத்தி வேணும்....படிச்சவன் நிலைமை எல்லாம் இப்படிதான் இருக்கு...ஆனா யாரு அத புரிஞ்சுகிரா” என அவன் வார்த்தைகளை கொட்ட பாண்டியோ தலை குனிந்தபடி அமைதியாக நின்றான்.

“புகழுஊஊ புகழு” என ஈனஸ்வரத்தில் பேச்சியம்மாவின் குரல் கேட்க பாய்ந்து அவரின் அருகில் சென்றவன்“அம்மா...அம்மா என்னம்மா பண்ணுது....நல்லா இருக்குல்ல” என அவன் பதட்டத்துடன் கேட்க

மகனின் பாசத்தில் கண்களில் கண்ணீர் நிற்க அவனை அன்போடு பார்த்தவர் “எனக்கு ஒண்ணுமில்லை புகழு.....நீ பாண்டிய திட்டாத.....அவன் என்னை சாப்பிடதான் சொன்னான்....நான்தான் நீ வரட்டும்னு” என சொல்லி நிறுத்த

“என்னம்மா நீங்க....வெளியில வேலை சேதின்னு போறவங்க நேரம் காலம் பார்த்து சாப்பிடமுடியுமா......எனக்காக எதுக்கு காத்துகிட்டு இருந்தீங்க.....நீங்க சாப்பிடவேண்டியதுதான”.....என அவன் சொல்லவும்

“இந்த அம்மா மேல உனக்கு கோபம் இல்லேலே புகழு.......எதோ அந்த போக்கத்தவளுக சொன்னத கேட்டு ரோசம் வந்து நாலு வார்த்தை சுருக்குனு சொல்லிபுட்டேன்...அதுக்கு போய் இப்படி சோறு தண்ணீ இல்லாம நீ இருக்கும்போது நாங்க மட்டும் எப்படி சாப்பிடமுடியும் ராசா ... என சொல்லவும்

“இல்லம்மா அது வந்து” என அவன் இழுக்க ...

“சரி விடு எவளோ என்னமோ சொல்லிட்டு போறா... நான் இனி உன்னை ஒன்னும் சொல்லமாட்டேன்” என்றவர் .

“என் பையனுக்கு படிப்பு இல்லைனாலும் தும்பைபூபோல நல்ல மனசு இருக்கு....அதுக்கே ஆயிரம் பேர் வரிசையில நிப்பாங்க என பெருமையுடன் சொன்னவர் சட்டென்று குரல் தழுதழுக்க உன்னைவிட சின்ன பையன் அவனுக்கு கண்ணாலம் நடக்குது....நீ இன்னும் இப்படியே இருக்கியே அப்டிங்கிற ஆதங்கத்துல தான் அப்படி பேசிட்டேன்...........இனி அப்படி பேசமாட்டேன் தம்பி என அவர் தன்னால் தான் தான் மகன் வேதனைபடுகிறான் என நினைத்து புலம்ப

அவரது அன்பில் நெகிழ்ந்தவன்“அப்படி எல்லாம் இல்லம்மா... நீங்க ஏதும் தப்பா சொல்லலை.......என்னை திட்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்லயா என்ன?நீங்களும் என் நல்லதுக்குதான சொன்னீங்க ....... என அவன் தயை தேற்றினான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் மீண்டும் புகழு என அழைக்கவும் அவன் அவரது கைகளை பிடித்தபடி என்னம்மா என கேட்டான்.

என்னாலதான் புகழு உன்னால படிக்க முடியாம போச்சு....நான் அப்பவே செத்து இருந்தனா இப்போ உனக்கு நல்ல இடத்துல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்......இந்த பாவினாலதான் உனக்கு இன்னும் கண்ணாலம் ஆகமே இருக்கு என அவர் எதோ எதோ சொல்லிகொண்டே செல்ல

அம்மாஆஆஅ கொஞ்சம் நிறுத்தரிங்களா என புகழ் கோபமாக கர்ஜிக்க அவனது சத்தத்தில் பாண்டியே அரண்டு போய்விட பேச்சியம்மாவும் புலம்பலை நிறுத்தி முகத்தில் பயத்துடன் அவனை பார்க்க கோபத்தில் அவன் முகம் துடிக்க கண்கள் சிவக்க அவரை பார்த்தவன் யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டீங்களா......இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை ...நான் கண்ணாலம் பண்ணனும் அவ்ளோதானே.......பண்ணிக்கிறேன்...நீங்க சொன்ன பொண்ணே பண்ணிக்கிறேன்.... அது யாரா இருந்தாலும் சரி போதுமா...சந்தோசமா .....இனி இப்படி பேசாதிங்க என அவன் சொல்லவும்

பாண்டி மெதுவாக அவன் தோளில் கைவைத்து “அண்ணா என்ன ஆச்சுண்ணா....அவங்களை சொல்லிட்டு நீங்க ஏன் இவ்ளோ கோபபட்ரிங்க.....அம்மாதான் ஏதோ புரியாம பேசறாங்க.....நீங்க அதுக்கு போய்...அங்க பாருங்க அவங்களே மிரண்டு போய் இருக்காங்க” என சொல்லவும்

அதற்குள் நிதானத்திற்கு வந்துவிட்ட புகழ் தாயின் காலடியில் அமர்ந்தவன் “அம்மா உங்களுக்கு வேதனை தர மாதிரி எந்த செயலும் நாங்க செய்ய மாட்டோம்.என்னோட கல்யாணம் தான் உங்களுக்கு சந்தோசம் அப்டினா நான் அதுக்கு சம்மதிக்கிறேன் என நிறுத்தி நிதனமாக முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் அவன் சொன்னான்.

அதை கேட்டதும் படுத்திருந்த பேச்சியம்மா வேகமாக எழுந்து அமர்ந்து “என் ராசா ...நிசமாவா.....நீ கண்ணாலத்துக்கு சம்மதிச்சுட்டியா அப்புறம் பேச்சுமாறமாட்டியே” என தன் மகனை பற்றி தெரிந்தவராக அவர் பேச

“கண்டிப்பா மாறமாட்டேன்...இப்போ கஞ்சி வைச்சு கொடுக்கிறேன்...அத குடிங்க....அப்புறம் நாம் எல்லாம் தெளிவா பேசிக்கலாம்” என சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து எழுவதற்குள் கஞ்சியோடு பாண்டி வந்தான்.

“இந்தாங்கண்ணா கஞ்சி என அவன் கொடுக்கவும் அட நீயே வச்சுட்டியா” என சொல்லியபடி வாங்கி தனது அன்னைக்கு கொடுத்தவன் அவர் குடித்து முடித்த பின்பே அங்கிருந்து நகர்ந்தான்.

வெளியே பாண்டி நின்று கொண்டு இருக்க அவன் அருகில வந்த புகழ் ...”டேய் பாண்டி விவரம் தெரியாம உன்னை எதோ எதோ பேசிட்டேன் ....மனசில வச்சுக்காத .....அம்மாவ இந்த நிலமையிலே பார்த்த உடனே கொஞ்சம் கோபம் வந்திடுச்சு அதான் அப்படி பேசிட்டேன்.....என் மேல உனக்கு கோபம் இல்லேயே” என தன் செயலுக்கு தம்பியிடம் மன்னிப்பு கேட்க

பாண்டியே “என்னங்கண்ணா நீங்க இப்படி எல்லாம் பேசறிங்க.......நீங்க ஏதும் தப்பா பேசலைங்கண்ணா ...சரியாதான் பேசி இருக்கீங்க.....அதுவுமில்லாம இத்தன வருஷ காலத்துல நீங்க இன்னைக்குதான் எங்ககிட்டே இவ்வளவு வார்த்தை பேசி இருக்கீங்க.....எண்ணி எண்ணி வார்த்தைகளை பேசற எங்க அண்ணனுங்களா இதுன்னு நானே ஆச்சரியப்பட்டு நிக்கிறேன்... என பாண்டி தனது அண்ணனின் மனநிலையை மாற்றும் பொருட்டு வேடிக்கையாக சொல்ல

புகழோ சிரித்துகொண்டே “சரி...சரி இன்னைக்கு நம்ம சமையல்தான் ...அதுக்கு ஏதாவது ரெடி பண்ணு” என சொல்லிவிட்டு நடந்தவன் சிறிது தூரம் சென்றவன் சட்டென்று நின்று “கோழிபன்னைக்கு எல்லாம் நீ போகவேண்டாம் ...நான் பார்த்துகிறேன்” என சொல்லிவிட்டு நடந்தான்.

“அச்சோ என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க” என பாண்டி பதற

ஆம் சமையல் நாம் தான் என்றதும் அலைபேசியில் பிரியாணி விருந்து என நண்பர்களுக்கு உடனே மெசஜ் அவன் தட்டிகொண்டிருக்க புகழின் வார்த்தையில் அவன் அதிர்ந்து போனான்.

“என்னது பிரியாணி இல்லையா அப்டினா இன்னைக்கு கார்த்திகை...நான் ஆஞ்சநேயர்க்கு விரதமங்கண்ணா ....நீங்களே சாப்பிட்டுக்குங்க” என அவன் சொல்ல

நின்று அவனை திரும்பி பார்த்த புகழ் சிரித்து கொண்டே “டேய் கிருத்திகைக்கு முருகனுக்கு தான் விரதம் இருப்பாங்க....நீ ஏன்டா சாமிகளுக்குள்லே குழப்பத்தை கொண்டு வர...சரி சரி மருதுகிட்ட கொடுத்துவிடறேன் என சொன்னதும் பாண்டி முகத்தில் அசடு வழிய “ஹிஹிஹி அது வந்துங்கண்ணா என சொன்னவன் போடா போய் வேலைய பாரு” என புகழ் சொன்னதும் தப்பிச்சோமடா என்றபடி வீட்டிற்குள் வேகமாக சென்றான் பாண்டி. .

காலை பணிகளை முடித்து விட்டு வரப்பில் நடந்து கொண்டிருந்தவன் பழைய நினைவுகள் அவனை ஆக்கிரமிக்க நினைத்தது கிடைக்கவிட்டால் கிடைத்ததை நினைக்க பழகிகொள் என மனதிற்குள் அவன் ஓராயிரம் முறை சொல்லியும் அந்த மனமோ சொல்லி கேட்கும் நிலையில் இல்லை......... அது அவனிடமே திருப்பி எனது கட்டுப்பாடு உன்னிடம் இல்லை.....ஏனெனில் நான் உன் மனம் அல்ல அது எங்கு இருக்கிறது என்பதை நீ அறியாததும் அல்ல...............நீ விதைத்த விதை அது விருட்சமாக மாறுமே தவிர வீழ்ந்து விடாது...நீ சற்று அமைதியாக இரு என அவனை அடக்க சிறு வயதில் இருந்தே பலமுடிவுகளை தன்னிச்சையாகவும் தைரியமாகவும் எடுத்து பழக்கப்பட்ட அவன் இன்றோ என்ன செய்வது என முடிவில்லா ஒரு நிலையில் நிலைகுலைந்து நின்றான். .

“பூரணி உனக்கு போன்” என பாரி கத்தவும்

“எதுக்குடி இப்படி கத்தி ஊர கூட்ற.....யாரு போன்ல ......நம்ம மணி சாந்தி எல்லாம் இங்கதான் இருக்காங்க அப்புறம் யாரு” என கேட்டபடி வந்து அலைபேசியை கையில் வாங்கியவள் காதில் வைத்து ஹலோ என கேட்கவும்

“ஹாய் ஸ்வீட்டி .....எப்படி இருக்க.......”என அழகனின் குரல் கேட்க

ஹம்ம்ம்ம்ம் என அனத்தியபடி அவள் பேசாமல் நிற்க.....ஏனோ அவளுக்கு படபடவென இருதயம் துடிக்க அமைதியாக நின்றாள்..

“ஹே பூரணி டார்லிங் என்ன பேசமாட்டேன்கிற...பூரணி....பூரணி” என கத்தியவன்

“ம்ம்ம் என்னங்க மச்சான்” என அவள் மெதுவாக கேட்க

“என்ன பூரணி ......தூக்கத்துல இந்த மச்சான் கனவுல வரேனா?” என ரகசியமான குரலில் கேட்க

“அது வந்து வந்து” என அவள் தடுமாற

“சரி சரி அதற்கு எல்லாம் நேரம் இல்லை....எனக்கு வெளிநாடு போறதுக்கு வாய்ப்பு கிடச்சிருக்கு......அடுத்த வாரத்தில கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்.....அதான் உன்கிட்ட சொல்லாம்னு கூப்பிட்டேன்” என அவன் வேகமாக விபரத்தை சொல்ல

“என்னது வெளிநாடு போறீங்களா?...அதும் அடுத்த வாரமே வா” என அவள் அதிர

“ஆமா பூரணி உன்கிட்ட முதல்ல சொல்லி இருந்தேன்ல” என அவன் சொன்னதும்

“ம்ம்ம் ஆமா ...ஆனா என இழுத்தவள் எப்போ வருவீங்க மச்சான்” என கேட்டதும்

“தெரியலை பூரணி...இரண்டு வருஷம் ஆகலாம்...அதுக்கு மேலேயும் ஆகலாம்” என அவன் சாதரணமாக சொல்ல

“என்னது இரண்டு வருஷமா ...அய்யோ அப்போ நீங்க போகாதீங்க மச்சான்”......என அவள் சொல்லி முடிக்கும் முன்

“வாயை மூடு பூரணி என அவன் கோபமாக சொன்னவன் ...இந்த வாய்ப்புக்காக நான் எத்தன நாளா காத்திருந்தேன் தெரியுமா?.....வெளிநாட்டில் வேலை கிடப்பது எவ்வளவு கஷ்டம்...எனக்கு கிடைச்சிருக்கு.....இதுக்காக நான் எத்தனை இழந்திருக்கேன் ....இனி இழக்கவும் தயாரா இருக்கேன்.....நீ இப்படி அபசகுனமா பேசாத” என அவன் சொல்லவும்

“இல்லைங்க மச்சான்...ரண்டு வருஷம் எப்படி எல்லாரயும் பார்க்காம இருப்பீங்க அதுநாள கேட்டேன்” என சொல்லவும்

அவளது பேச்சில் சற்று குளிர்ந்தவன் ...”இங்க பாரு பூரணி......நான் அங்க வேலைக்கு போறதால நிறைய பணம் கிடைக்கும்.அது எல்லாம் நமக்குதானே...அதுக்காக இரண்டு வருஷம் கூட நீ எனக்காக காத்திருக்க மாட்டியா என்றவன் இருக்கணும்...இருந்து தான் ஆகணும்” என அழுத்தமான குரலில் சொன்னான்.

அவளோ என்ன பதில் சொல்வது என் தெரியாமல் அமைதியாக இருக்க

ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டு வேலை மற்றும் அந்த நாட்டை பற்றியும் அவளுக்கு சொல்லி கொண்டு இருந்தான்.அதற்குள் மாணிக்கம் வர அலைபேசி அவரின் கைக்கு மாற அவரும் என்னது இரண்டு வருடமா என கேட்கவும் அதற்கு அழகன் ஏதோ பதில் சொல்ல அரைமனதாக தலை ஆட்டினார்..

அழகன் வெளிநாடு செல்வது ஊரில் பரவ ...பூரணியும் தன் தோழிகளிடம் இதை பற்றி சொல்ல அவர்களோ ...”பாருடா உன்ற மச்சான் உனக்காக வெளிநாடு போய் சம்பாரிக்க போறாரு...யாருக்கு இப்படி அமையும் நீ கொடுத்து வச்சவதான் என சொல்ல,ஊர்காரர்களோ இந்த பூரணி படிக்கலைனாலும் வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிளை கிடைச்சிருக்கு...அதிர்ஷ்டகாரிதான் என புகழ்ந்து பேச பூரணியோ சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.

.

பெண்ணே உன் அழகை கண்டு

ஆசை கொள்ளவில்லையடி.....

என் மனதில் நீ விழுந்த சனத்தை

நானே அறியவில்லையடி ...

காற்றாய் என்னுள் நுழைந்தாயா ?

இல்லைசிரிப்பால் என்னை சிறைபிடித்தாயா ?

இல்லைஅன்பால் என்னை அடிமையாக்கினாயா?

புரியாமல் தவிக்கிறேனடி!. .

ஆதியும் அந்தமும் இல்லாத

அழகிய உணர்வை என்னுள் விதைத்தவளே

நூல் இல்லாத காற்றாடி என் தெரிந்தும்

அதை வானில் பறக்கவிட

இந்த பாவி மனம் ஏங்குகிறது.

பாசமுள்ள உனது மனதில்

நேசத்தினை விரும்புகிறது

இந்த பேதை நெஞ்சம் !

அதை வேசமென சொல்லாமல்

சுவாசமாக கலந்திடுவாயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
  • Like
Reactions: BhagavathyShanker