அத்தியாயம் -8
இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின் நடுவில்தடைகள் வரும் என்று நினைத்தான் தான்........ ...ஆனால் பாதையே தடைபட்டால் பயணிப்பவனின் நிலை என்ன ?விடையே இல்லாத வினா ஒன்றிற்கு விடைதேடும் முயற்சியில் அவன் இருந்தான்.
வீண் கனவுகளை நெஞ்சில் விதைக்காதேஎன ஆழ்மனம் எச்சரித்தும் .....அலைகடலென பொங்கி எழும் நினைவுகலும் , ஆசைகளும் அதை அலட்சியபடுத்த,கனவு தான் என்றாலும் அந்த நினைவுகளாவது நெஞ்சில் எப்பொதும் பசுமையாக இருக்கட்டும் என சிறுபிள்ளைதனமாக அன்று அவன் மனதில் விதைத்த விதை இன்று விருட்சமாக வளர்ந்து இதயத்தை இரண்டாக பிளப்பது போல் ரணத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது..
பேசியம்மா சொன்ன சேதி அவன் மனதை கூறுபோட்டு கொண்டிருந்தது.” ம்ம்ம்ம் என்னை கட்டுன மகராசன் கண்ணமூடுரப்ப என்னை பார்த்து ........ தேசிங்குராசாமாதிரி ரண்டு சிங்க குட்டிங்க உனக்கு இருக்காங்க பேச்சி...நீ எதுக்கும் கலங்காத.....எப்பாடுபட்டாவது அவங்களை நல்லா படிக்க வச்சிடு அப்டின்னு சொல்லிட்டு கண்ணை மூடினாரு .....ஆனா என் போதாத காலம் மஞ்சகாமாலை வந்து நான் படுக்க உன்னோட படிப்பு பாதியிலே நின்னு போச்சு... களைப்பையை நீ கையில எடுக்க வேண்டியதா போய்டுச்சு............. ம்ம்ம்ம் நீ இப்போ சம்பாரிச்சு பெரிய மனுஷன் ஆகிட்ட ....அதனால நாங்க எல்லாம் நீ சொல்றத தானே கேட்டாகணும்.......பேசு ராசா பேசு... பாவி மக அப்பவே இந்த உசிரு போயிருந்தா இப்போ இந்த அவமானம் எனக்கு வந்து இருக்காது ......இப்பதான் அவளுக பேசிட்டு போறாளுக......இப்போ நீயும் பேசு” என ஆத்திரமும் அழுகையுமாக சொன்னதோடு நிற்காமல்
.....”என்னதான் காசுபணம் இருந்தாலும் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் வந்திடுமா என்ன? கண்ணாலம் பண்ற வயசில காளைமாடு மாதிரி பையனை வச்சுக்கிட்டு இருக்கும்போதே தெரியலை......அவ குடும்ப வவுசபத்தினு நாலு பேரு நாலுவிதமா பேசறப்போ எனக்குதான் சாகனும்போல இருக்கு.... உனக்கு அதை பத்தி என்ன கவலை......நீ சாப்பிடுப்பா சாப்பிடு” என சொல்லிவிட்டு அழுகையுடனே சுவற்றின் ஓரத்தில் சென்று அமர்ந்தார்.
எப்போதும் போல் அம்மா கோபத்தில் பேசுகிறார் என நினைத்து அவன் பேச , ஆனால் அவரின் ஆத்திரமும் அழுகையுமான இந்த பேச்சு அவனுக்கு அதிர்ச்சியாக இருக்க ..... உடனே சாப்பாட்டில் இருந்து எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்தவன்..... “அச்சோ அம்மா நான் என்ன சொன்னேன் ...நீங்க சின்ன விஷயத்திற்கு கூட பெருசா கவலைபடுவிங்க ........அதனால நீங்க ஏன் புலம்பிட்டு இருக்கீங்க அப்டினுதான கேட்டேன்....நான் இருக்கும்போது நீங்க எதுக்குமே கவலை படகூடாதும்மா ...அதுக்குதான் அப்படி சொன்னேங்ம்மா......நீங்க என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க..........”என்றவன்
மீண்டும் அவர் முகத்தை தன் பக்கம் திருப்பி “ என்னாச்சும்மா ....யார் உங்களை என்ன சொன்னா? அந்த வளரு சித்தி ஏதாவது சொன்னாங்களா ?இல்ல வேற யாரு என்ன சொன்னா?எதுக்கு இப்படி ஆத்திரபட்ரிங்க...அதும் நான் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க ” எனகேட்டுகொண்டே அவரின் கைகளை எடுத்து ஆதரவாக மடியில் வைத்துகொண்டு அன்புடன் வினவ
பிள்ளையின் கனிவான பேச்சில் நெகிழ்ந்த தாயின் மனம் ஆத்திரத்தின் தணல் சற்று மட்டுப்பட “அது வந்து தம்பி என ஆரம்பித்தவர் பூரணிக்கும் அழகனுக்கும் திருமணம் என்ற விஷியத்தை சொல்லி .என்னமோ ஊரு உலகத்திலே இல்லாத மாப்பிள்ளை கிடச்ச மாதிரி எல்லாம் பேசறாளுக...பட்டணத்து வவுசு போய் பார்த்தா தான தெரியும் “என அவர் சந்தடி சாக்கில் தனது எரிச்சலை வெளிபடுத்தினார். .
பேச்சியம்மாள் பேச்சை ஆரம்பித்தவுடன் வேறு எதோ சொல்ல போகிறார் என நினைத்து அவன் ஆர்வமாக கேட்க ஆனால் அவர் சொன்ன சேதி ஒரு நிமிடம் அவன் இதய துடிப்பையே நிறுத்து விட்டது “என்னம்மா சொல்றீங்க நீங்க “ என அவன் உடல் ஒருநிமிடம் அதிர்ந்து குலுங்க அதிர்ச்சியுடன் தன் தாயின் முகத்தை அவன் பார்க்க
ஆனால் அவரோ அதை அறியாமல் “அட உண்மையதான் சொல்றேன் புகழு.... இப்போ இததான் உன் சித்தி சொல்லிட்டு போறா...ஆனா எனக்கு அதுகூட கோபம் இல்லை பெரியவனே....அந்த சண்டிராணி யாரையோ கண்ணாலம் பண்ணிட்டு போகட்டும்..... அவங்க சகவாசமே நமக்கு வேண்டாம்.....ஆனா நீ படிக்காதவன் அதுனால உனக்கு கட்டுற உரிமை இல்லை அப்டின்னு பேசறாங்க பாரு...அதான் என்னால தாங்க முடியலை.......அதுக்கு நான் தான் காரணம்.....மஞ்சகாமாலை வந்தப்பவே இந்த உசிரு போயிருந்தா உனக்கு இந்த பேச்சு வந்து இருக்கதுல்ல” என அவர் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
“அம்மாஆஆ எனகத்தியவாறே கோபத்துடன் அவரது வாயை கைகளால் மூடியவன்...அமைதியாக சிறிது நேரம் கண்களை மூடி மூச்சை இழுத்துவிட, அப்போதும் அவனது புஜத்தின் நரம்புகள் துடிக்க...... அதை அடக்கி தன்னை கட்டு படுத்த அவன் முயன்று கொண்டு இருந்தான்..
பேச்சியம்மாவோ அவனது இந்த செயலில் தனது பேச்சை நிறுத்தி திகைப்புடன் அவன் முகத்தை பார்க்க அதில் அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை அவரால் உணரமுடியவில்லை..... அவரும் ஏதும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டு இருக்க சில நிமிடங்களுக்கு பின்னரே கண்களை திறந்தவன் ... தன் அன்னை தன்னை பார்க்கிறார் என உணர சட்டென்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு “இனி அப்படி சொல்லாதிங்கம்மா” என சொல்லியவாறே விருடென்று அங்கிருந்து நகர்ந்தான்..அப்போது அவன் கால்கள் சற்று தடுமாற “தம்பி பார்த்துடா என பேச்சியம்மா பதற அவனோ...ஒண்ணுமில்லை....நான் பார்த்துகிறேன்”என்றவாறு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்.
“டேய் சாப்பிட்ட கையை கழுவாம கூட போறியே” என பேச்சியம்மா சொல்ல அதை கேட்கும் நிலையில் அவன் இல்லை.
புகழின் மனமோ புயலில் சிக்கிய காற்றாடி போல் அல்லாடிக்கொண்டு இருந்தது.
அப்போது அருகில் இருக்கும் ரேடியோவில்
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு...என்றாச்சு
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட… என்
நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட…
உன்னத் தொட்டு நான் வாறேன்
என்னவிட்டு ஏம்போறே
நிழல்போல் கூடவந்தா ஆகாதோ….
சொல்லம்மா … என்னம்மா … என் கண்ணம்மா …
என்ற பாடல் ஒலிக்க அதை கேட்டது அவனது உயிர்த்துடிப்பு நின்று மீண்டும் துடிக்க அந்த நொடி அவன் எதிரிக்கு கூட வரகூடாது என் நினைத்தான் புகழ்.
கால் போனபோக்கில் அவன் நடந்து கொண்டிருக்க “உங்க அத்தைக்காரி அதான் அந்த கோமதி இருக்கால அவ மகனுக்கு தன் பொண்ண கொடுக்கிறாளாம்.அவன் ஏதோ பாங்க்ல வேலை செய்யறானாம்.வெளிநாடுகூட போகபோறானாம்” என பேச்சியம்மா சொன்ன வார்த்தைகள் அவன நெஞ்சை கடப்பாரையால் இடிப்பது போன்ற ரணத்தை எற்படுத்திகொண்டிருந்தது. கால்கள் நேராக மல்லிகை தோட்டத்திற்கு இழுத்துவர அங்கு வந்தும் அவனது வேதனை குறையவில்லை. அந்த மல்லிகை தோட்டத்தில் படுத்தவன் சோறு தண்ணீ இல்லாமல் நாள் முழுவதும் அங்கேயேஇருந்தான் .மருது வந்து அழைத்தும் அவன் செல்லவில்லை.
இங்கே “வீட்டுக்குள்ள போட்டது போட்டபடி அப்படியே கிடக்குது....என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ....உன்கிட்ட நான் வயலுக்கு போயிட்டு வந்திடறேன்.....அந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வைன்னு சொன்னேன்ல......அதை செய்யாம அங்க என்னடி பண்ற “ என்றபடி உள்ளே வந்தார் மணியம்மை.
“ஏன்மா கத்தற....... டிவில நம்ம தலைவர் படம் போட்ருக்காங்க ...பார்த்திட்டு வந்து செஞ்சிடறேன்” என பதிலுக்கு கத்தியபடி படத்தில் மூழ்கி இருந்தாள் பூரணி.
“ஆமாண்டி இப்படியே வாய்க்கு வாய் பேசிட்டு இரு ....... இப்படி நீ உன் மாமியார்கிட்ட பதில் சொன்னா பொண்ண வளர்த்தி வச்சிருக்கிற லட்சணத்தை பாருன்னு என்னைத்தான் திட்டுவாங்க......அதும் உன் அத்தை என்னை குறை சொல்றதுல முதல் ஆளா இருப்பா ......மரியாதையா வந்து இந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வை” என மணியம்மை மீண்டும் சத்தம் போடவும்
“அடடா உன்னோட பெரிய தொந்தரவா போச்சும்மா என்ற படியே எழுந்து மணியம்மையின் முன் வந்து நின்றவள் ....... இங்க பாரும்மா என்ற அத்தை வீட்ல எல்லாம் இந்த மாதிரி அம்மி கள்ளு எல்லாம் இல்லை....சுவிட்ச் போட்டா மிக்சியே துவையல் அரைச்சுடும்.அதும் டிவி பார்த்துகிட்டே செய்யலாம்.... எல்லா வேலைக்கும் அங்க மிசின் இருக்காம்.... நம்ம அரசி சொன்னாள் ....பாத்திரம் கூட விலக்கி கழுவிடுமா தெரியுமா உங்களுக்கு .....இங்க மாதிரி எல்லாம் இடுப்பு வலிக்க வேலை கிடையாது....அதுனால நீ ஒன்னும் கவலைபடவேண்டாம்....உன்னை யாரும் தப்பா பேசமாட்டங்க” என தலையும் கையும் அவள் பேச்சுக்கு ஏற்றபடி நயனம் வாசிக்க தனது மாமியார் வீட்டின் பெருமையை பூரணி பறைசாற்றிகொண்டிருந்தாள்.
“ஆமாமா அங்க எல்லாத்துக்கும் மிசின் இருக்கும்...கூடவே கொலஸ்ட்ரால் ,சுகர்,பிபீ எல்லாம் அவங்க உடம்புளையும் இருக்கும்....அதான உனக்கு வேணும் என கிண்டலாக கேட்டபடி அங்கு வந்தாள் பாரி..
அவள் சொன்னதும் முகம் சுருங்கிய பூரணி “உனக்கு ஏண்டி பொறாமை.......அம்மா இவளை கொஞ்சம் கண்டிச்சு வை...எப்போ பார்த்தாலும் அந்த வீட்டை பத்தி மட்டமாவே சொல்லிட்டு இருக்கா ...இது நல்லாயில்லை சொல்லிட்டேன்” என கோபமாக தாயிடம் புகார் செய்தாள் பூரணி.
“பாரி நீ சும்மா இருக்க மாட்டியா......அது நம்ம பூரணி போய் வாழ போற வீடு.....அப்படி எல்லாம் சொல்ல கூடாது” என மணியம்மை பாரியை கண்டிக்க
“ம்ம்ம் நல்லா உரைக்கிற மாதிரி சொல்லும்மா....என்ன வார்த்தை பேசறா” என பூரணி பாரிக்கு பலிப்பு காட்ட
பாரியோ “அம்மா நான் யாரையும் குறை சொல்லல ......உங்களுக்கு தெரியும் தான .....ஒரு பரீட்சைகாக அத்தை வீட்ல போய் ஒருவாரம் தங்கி இருந்தேன்......அவங்களோட பழக்கவழக்கம் எல்லாம் நமக்கு ஒத்து வராதும்மா .அதும் நம்ம பூரணி குணத்திற்கு சுத்தமா ஒத்துவராது.........அரைமணிநேரத்திற்கு மேல வீட்டுக்குள்ள இவ இருக்க மாட்டா......ஆனா அங்க எல்லாம் வீட்டு கதவை திறந்து வைப்பதே ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தான்....என்னாலயே இருக்க முடியலை.....இவ எப்படி சமாளிக்க போறா...அதான் சொன்னேன் “ என தனது தமக்கையை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் சொல்லி கவலை பட
உடனே பூரணி “அப்படியா..என்ன பாரி இப்படி சொல்ற......அங்க சுத்தி பார்க்க நிரயா இடம் இருக்கு.....எல்லாரும் தினமும் வெளியில போவாங்கனு நம்ம சாந்தி சொன்னா...........நீ என்ன இப்படி சொல்ற.......அவங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்களா ? வீட்டுக்குள்ளே என்ன பண்ணுவாங்க ......கடை கன்னிக்கு போறதுக்கு வெளியே வரணும் தான” என அவள் அப்பாவியாக கேட்கவும்
“இல்ல பூரணி...அது எல்லாம் போன் பண்ணா வீட்டிற்கே வந்திடும்.....அதுவும் அத்தை வீட்ல ஹோம்தியேட்டர் ரூம்னு இருக்கு.சினிமா கூட வீட்லயே பார்த்துக்குவாங்க...வெளியே போக வேண்டிய அவசியமே இல்ல “ என்றாள்.
“அப்படியா “என அவள் ஆச்சரியத்தில் வாய் பிளக்க
“ஏன் இதெல்லாம் உனக்கு தெரியாதா ?அழகன் மச்சான் உன்கிட்ட ஏதும் சொல்லலையா?” என பாரி கேட்கவும்
“இதெல்லாம் ஒன்னும் சொல்லலை.....அவரு படிச்ச ஸ்கூல் ,காலேஜ் பத்தி சொன்னாரு....வேலையை பத்தி சொன்னாரு.....ஆனா இது எல்லாம் சொல்லலை....நாங்க எங்கடி பேசுனோம்.....அவங்க வேலையை பார்க்கவே நேரம் சரியா இருக்கு.....இதும் அன்னைக்கு கார்ல வரும்போது அரசி நானு மச்சான் பேசிட்டு வந்தோம்...அப்போதான் சொன்னாரு என்றாள் பூரணி.
“அது ஒன்னும் பிரச்சனை இல்லை........நீ போய் இருந்தா அப்படியே பழகிக்கலாம்....நீ கவலைபடாத....” என அவள் முகம் வாடுவதை கண்டுபொறுக்கமாட்டாமல் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள் பாரி..
அதுவரை துள்ளலாக பேசிகொண்டிருந்த பூரணி இப்போது யோசனையாக தலையாட்டினாள். மனதிற்குள் ஒரு அச்சம் மெல்ல உள்ளே நுழைந்தது.
அதே மனநிலையில் தான் மணியம்மையும் இருந்தார். பாரி சொன்னதும் அதை கேட்ட உடன் பூரணியின் முகமாற்றமும் அவருக்கும் சிறிது கவலையை ஏற்படுத்தியது. சிறுவயதில் இருந்தே அவரின் கைகளுக்குல்லே இருந்து பழகியவள் பூரணி .....கோபமும் அதிகம்...அதே நேரத்தில் எளிதில் சமாதனமும் ஆகிவிடுவாள்.ஆனால் கோபம் வரும் நேரத்தில் அவள் என்ன செய்கிறாள் என்பது அவளுக்கே தெரியாது.வீட்டில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வார்கள்.ஆனால் அழகன் வீட்டில் அப்படி இருப்பார்களா???.......என்னதான் சொந்த நங்கையாராக இருந்தாலும் கோமதியின் குணத்தை பற்றியும் மணியம்மைக்கு நன்கு தெரியும்.இவள் அங்கு எப்படி சமாளிக்க போகிறாளோ என்ற புதிய கலக்கம் அவரின் நெஞ்சில் மூண்டது.
அன்று அழகன் தன் மனதை சொல்லிவிட்டு சென்ற பின்னர் நன்றாக யோசித்தே மணியம்மை மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.
அவர் யோசித்தது என்னவென்றால் இந்த காலத்தில் படிப்பு ரொம்ப முக்கியம்.வசதி இல்லாத பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.பூரணிதான் சரியாக படிக்கவில்லை.ஆனால் அழகன் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறான்.மேலும் குணமும் நல்ல குணம்.உறவுமுறையும் இருப்பதால் நாளை ஏதாவது பிரச்சனை என்றால் சரி செய்து கொள்ளலாம்.அழகனே விரும்பி திருமணத்திற்கு கேட்கிறான். மேலும் பூரணிக்கும் இதில் விருப்பம் என்பதால் காதல் மனம் புரிந்து அதன் பலனை அனுபவிக்கும் மணியம்மைக்கு அதன் அருமை புரிய .அதனால் தான் அவர் மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.
மாணிக்கமோ முதலில் நம்ப மறுத்தாலும் மணியம்மை தான் அழகன் சொன்னதை விளக்கினார். அதை கேட்டதும் தனக்கு வரும் மருமகன் தன் அக்காவின் மகன் என்பதில் அவர் மனம் மகிழ்ச்சி கொள்ள மேலும் மணியம்மையும் இதற்க்கு முழு மனதாக சம்மதித்தது அவருக்கு மிகவும் சந்தோசமாக இருக்க மாணிக்கமும் சரி என சொல்லிவிட்டார்.
“இப்போது ஏதும் வெளியில் சொல்ல வேண்டாம்......முதலில் அரசி கண்ணாலம் முடியட்டும்...அதற்கு பின்பு இதை பற்றி மாமாவிடம் பேசுகிறேன்” என அலைபேசியில் கோமதியும் இதற்கு சம்மதம் கொடுக்க அழகன் பூரணி திருமணம் இப்படியாக உறுதி செய்யப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அழகன் பூரணி திருமணத்தில் உறுதியாக இருந்தனர்.
பிறப்பும் இறப்பும் நம் கையில இல்லாத இடைப்பட்ட நாட்களில் வாழும் இந்த வாழ்க்கையில் தான் மனிதனுக்கு எத்தனை ஆசைகள், கனவுகள், சந்தோசம், கோபம், வெறுப்பு என பல பரிணாமங்களில் தன்னை வெளிபடுத்தி கொள்கிறான்.
தடைகல் இல்லாத வெற்றி, சோதனை இல்லாத சாதனை என்பது இந்த உலகில் இல்லை.வானவில்லை வளைத்து விட்ட சந்தோசத்தில் இவர்கள் இருக்க ஆனால்அது சில மணித்துளிகள் தான் வானத்தில் இருக்கும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து போனார்கள்.
இரவு முழுவதும் மல்லிகை தோட்டத்திலே இருந்தவன் விடிகாலையில் வீட்டிற்கு வர பாண்டி திண்ணையில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் “இன்னைக்கும் ஊரை சுத்திட்டு லேட்டா வந்து இங்க படுத்திருக்கான் பாரு என திட்டியபடியே பாண்டியின் அருகில் வந்தவன் டேய் பாண்டி என்னடா இங்க படுத்து தூங்கற....இன்னைக்கும் சினிமா பார்த்திட்டு வந்தியா .....எத்தனை முறை சொல்லி இருக்கேன்......இப்படி ராத்திரி நேரத்துல போகாதேன்னு” என படபடவென அவன் பேசிக்கொண்டு இருக்க .
புகழின் உலுக்களில் திடுக்கிட்டு விழித்தவன் கண்களை கசக்கி கொண்டே “அண்ணா வந்திட்டிங்களா ......உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தோம்...பசிக்குது வாங்க சாப்பிடலாம்” என சொல்லி கொண்டே வேகமா எழுந்தவன் சுற்றிலும் பார்க்க பொழுது விடிந்து கதிரவன் கதிர்கள் அவன் கண்களை துளைத்தன .
அதற்குள் “புகழ் என்னடா உளற.....இந்நேரத்தில யார் சாப்பிடுவாங்க.......என்ன ராத்திரி பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஏதாவது....” என அவன் முறைக்க
“ என்னங்கண்ணா நீங்க......விடிஞ்சதே எனக்கு இப்பதான் தெரியும்.... .......நீங்கதான் மதியம் சாப்பிட வந்தப்ப அம்மாகூட சண்டைபோட்டுகிட்டு தோட்டத்திலே போய் படுத்திட்டங்கனு மருது சொன்னான். நான் வந்து பார்கலாம்னு பார்த்தா இங்க அம்மாவும் பாவம் அழுதுகிட்டே இருந்தாங்க.....அதான் இரவு நீங்க வந்த பிறகு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருந்தோம்....நீங்க வரலையா அப்படியே தூங்கிட்டோம் போல இருக்கு....அதான் நீங்க எழுப்பின உடனே நான் உளறிட்டேன்” என்றான்.
“என்னது அம்மாவும் நீயும் சாப்பிடலையா ?எனக்காக காத்துகிட்டு இருந்தீங்களா ?..ஏண்டா இப்படி பண்றீங்க.....நான் வரலைனா என்ன நீங்க சாப்பிடவேண்டியது தான...அச்சோ அம்மாவுக்கு வேற பீபி இருக்கே.... என்ன ஆச்சே” எனஎன படபடவென பேசிகொண்டே வேகமாக வீட்டிற்குள் புகழ் செல்ல பாண்டியும் பின்னால் சென்றான்.
இரவு பொழுது நிலவின் குளிர்ச்சியும்.இதமான தென்றலும் , அந்த மலரின் மனமும் அவன் வேதனையை குறைப்பதற்கு பதிலாக அதிகபடுத்திகொண்டு இருந்தது. .பேச்சியம்மா சொன்ன வாக்கியம் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்திருந்தது..ஒற்றைவழி பாதை என தெரிந்திருந்துதான் அவன் பயணம் செய்தான். பாதையின் நடுவில்தடைகள் வரும் என்று நினைத்தான் தான்........ ...ஆனால் பாதையே தடைபட்டால் பயணிப்பவனின் நிலை என்ன ?விடையே இல்லாத வினா ஒன்றிற்கு விடைதேடும் முயற்சியில் அவன் இருந்தான்.
வீண் கனவுகளை நெஞ்சில் விதைக்காதேஎன ஆழ்மனம் எச்சரித்தும் .....அலைகடலென பொங்கி எழும் நினைவுகலும் , ஆசைகளும் அதை அலட்சியபடுத்த,கனவு தான் என்றாலும் அந்த நினைவுகளாவது நெஞ்சில் எப்பொதும் பசுமையாக இருக்கட்டும் என சிறுபிள்ளைதனமாக அன்று அவன் மனதில் விதைத்த விதை இன்று விருட்சமாக வளர்ந்து இதயத்தை இரண்டாக பிளப்பது போல் ரணத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது..
பேசியம்மா சொன்ன சேதி அவன் மனதை கூறுபோட்டு கொண்டிருந்தது.” ம்ம்ம்ம் என்னை கட்டுன மகராசன் கண்ணமூடுரப்ப என்னை பார்த்து ........ தேசிங்குராசாமாதிரி ரண்டு சிங்க குட்டிங்க உனக்கு இருக்காங்க பேச்சி...நீ எதுக்கும் கலங்காத.....எப்பாடுபட்டாவது அவங்களை நல்லா படிக்க வச்சிடு அப்டின்னு சொல்லிட்டு கண்ணை மூடினாரு .....ஆனா என் போதாத காலம் மஞ்சகாமாலை வந்து நான் படுக்க உன்னோட படிப்பு பாதியிலே நின்னு போச்சு... களைப்பையை நீ கையில எடுக்க வேண்டியதா போய்டுச்சு............. ம்ம்ம்ம் நீ இப்போ சம்பாரிச்சு பெரிய மனுஷன் ஆகிட்ட ....அதனால நாங்க எல்லாம் நீ சொல்றத தானே கேட்டாகணும்.......பேசு ராசா பேசு... பாவி மக அப்பவே இந்த உசிரு போயிருந்தா இப்போ இந்த அவமானம் எனக்கு வந்து இருக்காது ......இப்பதான் அவளுக பேசிட்டு போறாளுக......இப்போ நீயும் பேசு” என ஆத்திரமும் அழுகையுமாக சொன்னதோடு நிற்காமல்
.....”என்னதான் காசுபணம் இருந்தாலும் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் வந்திடுமா என்ன? கண்ணாலம் பண்ற வயசில காளைமாடு மாதிரி பையனை வச்சுக்கிட்டு இருக்கும்போதே தெரியலை......அவ குடும்ப வவுசபத்தினு நாலு பேரு நாலுவிதமா பேசறப்போ எனக்குதான் சாகனும்போல இருக்கு.... உனக்கு அதை பத்தி என்ன கவலை......நீ சாப்பிடுப்பா சாப்பிடு” என சொல்லிவிட்டு அழுகையுடனே சுவற்றின் ஓரத்தில் சென்று அமர்ந்தார்.
எப்போதும் போல் அம்மா கோபத்தில் பேசுகிறார் என நினைத்து அவன் பேச , ஆனால் அவரின் ஆத்திரமும் அழுகையுமான இந்த பேச்சு அவனுக்கு அதிர்ச்சியாக இருக்க ..... உடனே சாப்பாட்டில் இருந்து எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்தவன்..... “அச்சோ அம்மா நான் என்ன சொன்னேன் ...நீங்க சின்ன விஷயத்திற்கு கூட பெருசா கவலைபடுவிங்க ........அதனால நீங்க ஏன் புலம்பிட்டு இருக்கீங்க அப்டினுதான கேட்டேன்....நான் இருக்கும்போது நீங்க எதுக்குமே கவலை படகூடாதும்மா ...அதுக்குதான் அப்படி சொன்னேங்ம்மா......நீங்க என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க..........”என்றவன்
மீண்டும் அவர் முகத்தை தன் பக்கம் திருப்பி “ என்னாச்சும்மா ....யார் உங்களை என்ன சொன்னா? அந்த வளரு சித்தி ஏதாவது சொன்னாங்களா ?இல்ல வேற யாரு என்ன சொன்னா?எதுக்கு இப்படி ஆத்திரபட்ரிங்க...அதும் நான் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க ” எனகேட்டுகொண்டே அவரின் கைகளை எடுத்து ஆதரவாக மடியில் வைத்துகொண்டு அன்புடன் வினவ
பிள்ளையின் கனிவான பேச்சில் நெகிழ்ந்த தாயின் மனம் ஆத்திரத்தின் தணல் சற்று மட்டுப்பட “அது வந்து தம்பி என ஆரம்பித்தவர் பூரணிக்கும் அழகனுக்கும் திருமணம் என்ற விஷியத்தை சொல்லி .என்னமோ ஊரு உலகத்திலே இல்லாத மாப்பிள்ளை கிடச்ச மாதிரி எல்லாம் பேசறாளுக...பட்டணத்து வவுசு போய் பார்த்தா தான தெரியும் “என அவர் சந்தடி சாக்கில் தனது எரிச்சலை வெளிபடுத்தினார். .
பேச்சியம்மாள் பேச்சை ஆரம்பித்தவுடன் வேறு எதோ சொல்ல போகிறார் என நினைத்து அவன் ஆர்வமாக கேட்க ஆனால் அவர் சொன்ன சேதி ஒரு நிமிடம் அவன் இதய துடிப்பையே நிறுத்து விட்டது “என்னம்மா சொல்றீங்க நீங்க “ என அவன் உடல் ஒருநிமிடம் அதிர்ந்து குலுங்க அதிர்ச்சியுடன் தன் தாயின் முகத்தை அவன் பார்க்க
ஆனால் அவரோ அதை அறியாமல் “அட உண்மையதான் சொல்றேன் புகழு.... இப்போ இததான் உன் சித்தி சொல்லிட்டு போறா...ஆனா எனக்கு அதுகூட கோபம் இல்லை பெரியவனே....அந்த சண்டிராணி யாரையோ கண்ணாலம் பண்ணிட்டு போகட்டும்..... அவங்க சகவாசமே நமக்கு வேண்டாம்.....ஆனா நீ படிக்காதவன் அதுனால உனக்கு கட்டுற உரிமை இல்லை அப்டின்னு பேசறாங்க பாரு...அதான் என்னால தாங்க முடியலை.......அதுக்கு நான் தான் காரணம்.....மஞ்சகாமாலை வந்தப்பவே இந்த உசிரு போயிருந்தா உனக்கு இந்த பேச்சு வந்து இருக்கதுல்ல” என அவர் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க
“அம்மாஆஆ எனகத்தியவாறே கோபத்துடன் அவரது வாயை கைகளால் மூடியவன்...அமைதியாக சிறிது நேரம் கண்களை மூடி மூச்சை இழுத்துவிட, அப்போதும் அவனது புஜத்தின் நரம்புகள் துடிக்க...... அதை அடக்கி தன்னை கட்டு படுத்த அவன் முயன்று கொண்டு இருந்தான்..
பேச்சியம்மாவோ அவனது இந்த செயலில் தனது பேச்சை நிறுத்தி திகைப்புடன் அவன் முகத்தை பார்க்க அதில் அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை அவரால் உணரமுடியவில்லை..... அவரும் ஏதும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டு இருக்க சில நிமிடங்களுக்கு பின்னரே கண்களை திறந்தவன் ... தன் அன்னை தன்னை பார்க்கிறார் என உணர சட்டென்று முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு “இனி அப்படி சொல்லாதிங்கம்மா” என சொல்லியவாறே விருடென்று அங்கிருந்து நகர்ந்தான்..அப்போது அவன் கால்கள் சற்று தடுமாற “தம்பி பார்த்துடா என பேச்சியம்மா பதற அவனோ...ஒண்ணுமில்லை....நான் பார்த்துகிறேன்”என்றவாறு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்.
“டேய் சாப்பிட்ட கையை கழுவாம கூட போறியே” என பேச்சியம்மா சொல்ல அதை கேட்கும் நிலையில் அவன் இல்லை.
புகழின் மனமோ புயலில் சிக்கிய காற்றாடி போல் அல்லாடிக்கொண்டு இருந்தது.
அப்போது அருகில் இருக்கும் ரேடியோவில்
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு...என்றாச்சு
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட… என்
நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட…
உன்னத் தொட்டு நான் வாறேன்
என்னவிட்டு ஏம்போறே
நிழல்போல் கூடவந்தா ஆகாதோ….
சொல்லம்மா … என்னம்மா … என் கண்ணம்மா …
என்ற பாடல் ஒலிக்க அதை கேட்டது அவனது உயிர்த்துடிப்பு நின்று மீண்டும் துடிக்க அந்த நொடி அவன் எதிரிக்கு கூட வரகூடாது என் நினைத்தான் புகழ்.
கால் போனபோக்கில் அவன் நடந்து கொண்டிருக்க “உங்க அத்தைக்காரி அதான் அந்த கோமதி இருக்கால அவ மகனுக்கு தன் பொண்ண கொடுக்கிறாளாம்.அவன் ஏதோ பாங்க்ல வேலை செய்யறானாம்.வெளிநாடுகூட போகபோறானாம்” என பேச்சியம்மா சொன்ன வார்த்தைகள் அவன நெஞ்சை கடப்பாரையால் இடிப்பது போன்ற ரணத்தை எற்படுத்திகொண்டிருந்தது. கால்கள் நேராக மல்லிகை தோட்டத்திற்கு இழுத்துவர அங்கு வந்தும் அவனது வேதனை குறையவில்லை. அந்த மல்லிகை தோட்டத்தில் படுத்தவன் சோறு தண்ணீ இல்லாமல் நாள் முழுவதும் அங்கேயேஇருந்தான் .மருது வந்து அழைத்தும் அவன் செல்லவில்லை.
இங்கே “வீட்டுக்குள்ள போட்டது போட்டபடி அப்படியே கிடக்குது....என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ....உன்கிட்ட நான் வயலுக்கு போயிட்டு வந்திடறேன்.....அந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வைன்னு சொன்னேன்ல......அதை செய்யாம அங்க என்னடி பண்ற “ என்றபடி உள்ளே வந்தார் மணியம்மை.
“ஏன்மா கத்தற....... டிவில நம்ம தலைவர் படம் போட்ருக்காங்க ...பார்த்திட்டு வந்து செஞ்சிடறேன்” என பதிலுக்கு கத்தியபடி படத்தில் மூழ்கி இருந்தாள் பூரணி.
“ஆமாண்டி இப்படியே வாய்க்கு வாய் பேசிட்டு இரு ....... இப்படி நீ உன் மாமியார்கிட்ட பதில் சொன்னா பொண்ண வளர்த்தி வச்சிருக்கிற லட்சணத்தை பாருன்னு என்னைத்தான் திட்டுவாங்க......அதும் உன் அத்தை என்னை குறை சொல்றதுல முதல் ஆளா இருப்பா ......மரியாதையா வந்து இந்த கீரையை ஆய்ஞ்சு துவையல் அரைச்சு வை” என மணியம்மை மீண்டும் சத்தம் போடவும்
“அடடா உன்னோட பெரிய தொந்தரவா போச்சும்மா என்ற படியே எழுந்து மணியம்மையின் முன் வந்து நின்றவள் ....... இங்க பாரும்மா என்ற அத்தை வீட்ல எல்லாம் இந்த மாதிரி அம்மி கள்ளு எல்லாம் இல்லை....சுவிட்ச் போட்டா மிக்சியே துவையல் அரைச்சுடும்.அதும் டிவி பார்த்துகிட்டே செய்யலாம்.... எல்லா வேலைக்கும் அங்க மிசின் இருக்காம்.... நம்ம அரசி சொன்னாள் ....பாத்திரம் கூட விலக்கி கழுவிடுமா தெரியுமா உங்களுக்கு .....இங்க மாதிரி எல்லாம் இடுப்பு வலிக்க வேலை கிடையாது....அதுனால நீ ஒன்னும் கவலைபடவேண்டாம்....உன்னை யாரும் தப்பா பேசமாட்டங்க” என தலையும் கையும் அவள் பேச்சுக்கு ஏற்றபடி நயனம் வாசிக்க தனது மாமியார் வீட்டின் பெருமையை பூரணி பறைசாற்றிகொண்டிருந்தாள்.
“ஆமாமா அங்க எல்லாத்துக்கும் மிசின் இருக்கும்...கூடவே கொலஸ்ட்ரால் ,சுகர்,பிபீ எல்லாம் அவங்க உடம்புளையும் இருக்கும்....அதான உனக்கு வேணும் என கிண்டலாக கேட்டபடி அங்கு வந்தாள் பாரி..
அவள் சொன்னதும் முகம் சுருங்கிய பூரணி “உனக்கு ஏண்டி பொறாமை.......அம்மா இவளை கொஞ்சம் கண்டிச்சு வை...எப்போ பார்த்தாலும் அந்த வீட்டை பத்தி மட்டமாவே சொல்லிட்டு இருக்கா ...இது நல்லாயில்லை சொல்லிட்டேன்” என கோபமாக தாயிடம் புகார் செய்தாள் பூரணி.
“பாரி நீ சும்மா இருக்க மாட்டியா......அது நம்ம பூரணி போய் வாழ போற வீடு.....அப்படி எல்லாம் சொல்ல கூடாது” என மணியம்மை பாரியை கண்டிக்க
“ம்ம்ம் நல்லா உரைக்கிற மாதிரி சொல்லும்மா....என்ன வார்த்தை பேசறா” என பூரணி பாரிக்கு பலிப்பு காட்ட
பாரியோ “அம்மா நான் யாரையும் குறை சொல்லல ......உங்களுக்கு தெரியும் தான .....ஒரு பரீட்சைகாக அத்தை வீட்ல போய் ஒருவாரம் தங்கி இருந்தேன்......அவங்களோட பழக்கவழக்கம் எல்லாம் நமக்கு ஒத்து வராதும்மா .அதும் நம்ம பூரணி குணத்திற்கு சுத்தமா ஒத்துவராது.........அரைமணிநேரத்திற்கு மேல வீட்டுக்குள்ள இவ இருக்க மாட்டா......ஆனா அங்க எல்லாம் வீட்டு கதவை திறந்து வைப்பதே ஒரு நாளைக்கு அரைமணி நேரம்தான்....என்னாலயே இருக்க முடியலை.....இவ எப்படி சமாளிக்க போறா...அதான் சொன்னேன் “ என தனது தமக்கையை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் சொல்லி கவலை பட
உடனே பூரணி “அப்படியா..என்ன பாரி இப்படி சொல்ற......அங்க சுத்தி பார்க்க நிரயா இடம் இருக்கு.....எல்லாரும் தினமும் வெளியில போவாங்கனு நம்ம சாந்தி சொன்னா...........நீ என்ன இப்படி சொல்ற.......அவங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்களா ? வீட்டுக்குள்ளே என்ன பண்ணுவாங்க ......கடை கன்னிக்கு போறதுக்கு வெளியே வரணும் தான” என அவள் அப்பாவியாக கேட்கவும்
“இல்ல பூரணி...அது எல்லாம் போன் பண்ணா வீட்டிற்கே வந்திடும்.....அதுவும் அத்தை வீட்ல ஹோம்தியேட்டர் ரூம்னு இருக்கு.சினிமா கூட வீட்லயே பார்த்துக்குவாங்க...வெளியே போக வேண்டிய அவசியமே இல்ல “ என்றாள்.
“அப்படியா “என அவள் ஆச்சரியத்தில் வாய் பிளக்க
“ஏன் இதெல்லாம் உனக்கு தெரியாதா ?அழகன் மச்சான் உன்கிட்ட ஏதும் சொல்லலையா?” என பாரி கேட்கவும்
“இதெல்லாம் ஒன்னும் சொல்லலை.....அவரு படிச்ச ஸ்கூல் ,காலேஜ் பத்தி சொன்னாரு....வேலையை பத்தி சொன்னாரு.....ஆனா இது எல்லாம் சொல்லலை....நாங்க எங்கடி பேசுனோம்.....அவங்க வேலையை பார்க்கவே நேரம் சரியா இருக்கு.....இதும் அன்னைக்கு கார்ல வரும்போது அரசி நானு மச்சான் பேசிட்டு வந்தோம்...அப்போதான் சொன்னாரு என்றாள் பூரணி.
“அது ஒன்னும் பிரச்சனை இல்லை........நீ போய் இருந்தா அப்படியே பழகிக்கலாம்....நீ கவலைபடாத....” என அவள் முகம் வாடுவதை கண்டுபொறுக்கமாட்டாமல் அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள் பாரி..
அதுவரை துள்ளலாக பேசிகொண்டிருந்த பூரணி இப்போது யோசனையாக தலையாட்டினாள். மனதிற்குள் ஒரு அச்சம் மெல்ல உள்ளே நுழைந்தது.
அதே மனநிலையில் தான் மணியம்மையும் இருந்தார். பாரி சொன்னதும் அதை கேட்ட உடன் பூரணியின் முகமாற்றமும் அவருக்கும் சிறிது கவலையை ஏற்படுத்தியது. சிறுவயதில் இருந்தே அவரின் கைகளுக்குல்லே இருந்து பழகியவள் பூரணி .....கோபமும் அதிகம்...அதே நேரத்தில் எளிதில் சமாதனமும் ஆகிவிடுவாள்.ஆனால் கோபம் வரும் நேரத்தில் அவள் என்ன செய்கிறாள் என்பது அவளுக்கே தெரியாது.வீட்டில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வார்கள்.ஆனால் அழகன் வீட்டில் அப்படி இருப்பார்களா???.......என்னதான் சொந்த நங்கையாராக இருந்தாலும் கோமதியின் குணத்தை பற்றியும் மணியம்மைக்கு நன்கு தெரியும்.இவள் அங்கு எப்படி சமாளிக்க போகிறாளோ என்ற புதிய கலக்கம் அவரின் நெஞ்சில் மூண்டது.
அன்று அழகன் தன் மனதை சொல்லிவிட்டு சென்ற பின்னர் நன்றாக யோசித்தே மணியம்மை மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.
அவர் யோசித்தது என்னவென்றால் இந்த காலத்தில் படிப்பு ரொம்ப முக்கியம்.வசதி இல்லாத பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.பூரணிதான் சரியாக படிக்கவில்லை.ஆனால் அழகன் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறான்.மேலும் குணமும் நல்ல குணம்.உறவுமுறையும் இருப்பதால் நாளை ஏதாவது பிரச்சனை என்றால் சரி செய்து கொள்ளலாம்.அழகனே விரும்பி திருமணத்திற்கு கேட்கிறான். மேலும் பூரணிக்கும் இதில் விருப்பம் என்பதால் காதல் மனம் புரிந்து அதன் பலனை அனுபவிக்கும் மணியம்மைக்கு அதன் அருமை புரிய .அதனால் தான் அவர் மாணிக்கத்திடம் இதை பற்றி பேசினார்.
மாணிக்கமோ முதலில் நம்ப மறுத்தாலும் மணியம்மை தான் அழகன் சொன்னதை விளக்கினார். அதை கேட்டதும் தனக்கு வரும் மருமகன் தன் அக்காவின் மகன் என்பதில் அவர் மனம் மகிழ்ச்சி கொள்ள மேலும் மணியம்மையும் இதற்க்கு முழு மனதாக சம்மதித்தது அவருக்கு மிகவும் சந்தோசமாக இருக்க மாணிக்கமும் சரி என சொல்லிவிட்டார்.
“இப்போது ஏதும் வெளியில் சொல்ல வேண்டாம்......முதலில் அரசி கண்ணாலம் முடியட்டும்...அதற்கு பின்பு இதை பற்றி மாமாவிடம் பேசுகிறேன்” என அலைபேசியில் கோமதியும் இதற்கு சம்மதம் கொடுக்க அழகன் பூரணி திருமணம் இப்படியாக உறுதி செய்யப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அழகன் பூரணி திருமணத்தில் உறுதியாக இருந்தனர்.
பிறப்பும் இறப்பும் நம் கையில இல்லாத இடைப்பட்ட நாட்களில் வாழும் இந்த வாழ்க்கையில் தான் மனிதனுக்கு எத்தனை ஆசைகள், கனவுகள், சந்தோசம், கோபம், வெறுப்பு என பல பரிணாமங்களில் தன்னை வெளிபடுத்தி கொள்கிறான்.
தடைகல் இல்லாத வெற்றி, சோதனை இல்லாத சாதனை என்பது இந்த உலகில் இல்லை.வானவில்லை வளைத்து விட்ட சந்தோசத்தில் இவர்கள் இருக்க ஆனால்அது சில மணித்துளிகள் தான் வானத்தில் இருக்கும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து போனார்கள்.
இரவு முழுவதும் மல்லிகை தோட்டத்திலே இருந்தவன் விடிகாலையில் வீட்டிற்கு வர பாண்டி திண்ணையில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தான்.
அவனை பார்த்ததும் “இன்னைக்கும் ஊரை சுத்திட்டு லேட்டா வந்து இங்க படுத்திருக்கான் பாரு என திட்டியபடியே பாண்டியின் அருகில் வந்தவன் டேய் பாண்டி என்னடா இங்க படுத்து தூங்கற....இன்னைக்கும் சினிமா பார்த்திட்டு வந்தியா .....எத்தனை முறை சொல்லி இருக்கேன்......இப்படி ராத்திரி நேரத்துல போகாதேன்னு” என படபடவென அவன் பேசிக்கொண்டு இருக்க .
புகழின் உலுக்களில் திடுக்கிட்டு விழித்தவன் கண்களை கசக்கி கொண்டே “அண்ணா வந்திட்டிங்களா ......உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தோம்...பசிக்குது வாங்க சாப்பிடலாம்” என சொல்லி கொண்டே வேகமா எழுந்தவன் சுற்றிலும் பார்க்க பொழுது விடிந்து கதிரவன் கதிர்கள் அவன் கண்களை துளைத்தன .
அதற்குள் “புகழ் என்னடா உளற.....இந்நேரத்தில யார் சாப்பிடுவாங்க.......என்ன ராத்திரி பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஏதாவது....” என அவன் முறைக்க
“ என்னங்கண்ணா நீங்க......விடிஞ்சதே எனக்கு இப்பதான் தெரியும்.... .......நீங்கதான் மதியம் சாப்பிட வந்தப்ப அம்மாகூட சண்டைபோட்டுகிட்டு தோட்டத்திலே போய் படுத்திட்டங்கனு மருது சொன்னான். நான் வந்து பார்கலாம்னு பார்த்தா இங்க அம்மாவும் பாவம் அழுதுகிட்டே இருந்தாங்க.....அதான் இரவு நீங்க வந்த பிறகு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு காத்துகிட்டு இருந்தோம்....நீங்க வரலையா அப்படியே தூங்கிட்டோம் போல இருக்கு....அதான் நீங்க எழுப்பின உடனே நான் உளறிட்டேன்” என்றான்.
“என்னது அம்மாவும் நீயும் சாப்பிடலையா ?எனக்காக காத்துகிட்டு இருந்தீங்களா ?..ஏண்டா இப்படி பண்றீங்க.....நான் வரலைனா என்ன நீங்க சாப்பிடவேண்டியது தான...அச்சோ அம்மாவுக்கு வேற பீபி இருக்கே.... என்ன ஆச்சே” எனஎன படபடவென பேசிகொண்டே வேகமாக வீட்டிற்குள் புகழ் செல்ல பாண்டியும் பின்னால் சென்றான்.