தோழமைகள் அனைவருக்கும் வைகை தளம் சார்பாக இனிய வணக்கங்கள்…!
எழுத்து ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான செய்தி! முன்னமே அறிவித்திருந்த செய்திதான். அப்போது வாசகர்களுக்கான பரிசை பற்றி தெரிவிக்கவில்லை. இது அதற்கான பதிவும் கூட.
மேலும் பதிவு செய்ய வேண்டிய நாளையும் அதிகப்படுத்தி இருக்கிறோம். மேலும் கதைக்கான கருவிலும் சிறு மாற்றம் வைத்திருக்கிறோம்.
நமது வைகை தளம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் உங்களைப் போல எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைகையில் “கனா காணும் பேனாக்கள் - கதைப் போட்டி 2025” என்ற போட்டி ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதனை அக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது பெயர்களை வருகின்ற ஜூன் மாதம் 05 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்வதற்கான மின்னஞ்சல்
vaigaikathaithiruvizha@gmail.com
போட்டிக்கான தலைப்பு:
"ஆன்ட்டி ஹீரோ" / "ஆன்ட்டி ஹீரோயின்” மற்றும் “நகைச்சுவை காதல்”
வார்த்தை வரம்பு: 35,000 முதல் 50,000 வரை
போட்டிக்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்படும்.
1. எழுத்தாளர்கள் தங்கள் பெயரை மறைத்தும், தெரிவித்தும் போட்டியில் பங்கேற்று கொள்ளலாம்.
2. கதையினை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல் போன்ற கதைகள் நிராகரிக்கப்படும்.
4. வாக்கெடுப்பு (Voting) மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
5. கதையில் அதிக வன்முறையோ, அதீத ரொமான்டிக்கோ (ஆபாசக் காட்சிகள்) இருக்கக் கூடாது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முதல் பரிசு: ₹7000
இரண்டாம் பரிசு:₹5000
மூன்றாம் பரிசு:₹3000
மேலும் போட்டியில் கலந்துகொண்டு கதையை வெற்றிகரமாக முடிக்கும் அனைத்து எழுத்தாளர் பெருமக்களுக்கும் குங்குமம் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர். உயர்திரு கே. என் சிவராமன் அய்யா அவர்கள் ரொக்கப் பரிசினை வழங்க உள்ளார் என்பதை அக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தருணத்தில் வைகை தளம் சார்பாக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகப் பெருமக்களுக்கும் ஏராளமான பரிசுகள் உண்டு.
அவர்கள் அனைத்து கதைகளையும் வாசித்து, வைகை தளத்திலும், முகநூலில் வைகை குழுவிலும், ரமணிச்சந்திரன் குழுவிலும் விமர்சனம் கொடுக்க வேண்டும்.
இதுதான் வாசகர்களுக்கான போட்டி.. மீம்ஸ், விடியோஸ் போன்றவைகளும் பதிவிடலாம்.
முதல் பரிசு - 700/ மின் சான்றிதழ்
இரண்டாம் பரிசு - 500/- மின் சான்றிதழ்
மூன்றாம் பரிசு - 300/- மின் சான்றிதழ்
இந்த போட்டியில் பங்குபெற்று உங்கள் கற்பனையை வெளிப்படுத்துங்கள். மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை (www.vaigaitamilnovels.com) பார்க்கவும்.
எழுத்து ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான செய்தி! முன்னமே அறிவித்திருந்த செய்திதான். அப்போது வாசகர்களுக்கான பரிசை பற்றி தெரிவிக்கவில்லை. இது அதற்கான பதிவும் கூட.
மேலும் பதிவு செய்ய வேண்டிய நாளையும் அதிகப்படுத்தி இருக்கிறோம். மேலும் கதைக்கான கருவிலும் சிறு மாற்றம் வைத்திருக்கிறோம்.
நமது வைகை தளம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் உங்களைப் போல எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைகையில் “கனா காணும் பேனாக்கள் - கதைப் போட்டி 2025” என்ற போட்டி ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதனை அக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது பெயர்களை வருகின்ற ஜூன் மாதம் 05 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்வதற்கான மின்னஞ்சல்
vaigaikathaithiruvizha@gmail.com
போட்டிக்கான தலைப்பு:
"ஆன்ட்டி ஹீரோ" / "ஆன்ட்டி ஹீரோயின்” மற்றும் “நகைச்சுவை காதல்”
வார்த்தை வரம்பு: 35,000 முதல் 50,000 வரை
போட்டிக்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்படும்.
1. எழுத்தாளர்கள் தங்கள் பெயரை மறைத்தும், தெரிவித்தும் போட்டியில் பங்கேற்று கொள்ளலாம்.
2. கதையினை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல் போன்ற கதைகள் நிராகரிக்கப்படும்.
4. வாக்கெடுப்பு (Voting) மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
5. கதையில் அதிக வன்முறையோ, அதீத ரொமான்டிக்கோ (ஆபாசக் காட்சிகள்) இருக்கக் கூடாது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முதல் பரிசு: ₹7000
இரண்டாம் பரிசு:₹5000
மூன்றாம் பரிசு:₹3000
மேலும் போட்டியில் கலந்துகொண்டு கதையை வெற்றிகரமாக முடிக்கும் அனைத்து எழுத்தாளர் பெருமக்களுக்கும் குங்குமம் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர். உயர்திரு கே. என் சிவராமன் அய்யா அவர்கள் ரொக்கப் பரிசினை வழங்க உள்ளார் என்பதை அக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தருணத்தில் வைகை தளம் சார்பாக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகப் பெருமக்களுக்கும் ஏராளமான பரிசுகள் உண்டு.
அவர்கள் அனைத்து கதைகளையும் வாசித்து, வைகை தளத்திலும், முகநூலில் வைகை குழுவிலும், ரமணிச்சந்திரன் குழுவிலும் விமர்சனம் கொடுக்க வேண்டும்.
இதுதான் வாசகர்களுக்கான போட்டி.. மீம்ஸ், விடியோஸ் போன்றவைகளும் பதிவிடலாம்.
முதல் பரிசு - 700/ மின் சான்றிதழ்
இரண்டாம் பரிசு - 500/- மின் சான்றிதழ்
மூன்றாம் பரிசு - 300/- மின் சான்றிதழ்
இந்த போட்டியில் பங்குபெற்று உங்கள் கற்பனையை வெளிப்படுத்துங்கள். மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தை (www.vaigaitamilnovels.com) பார்க்கவும்.