அவன் இழுத்து வந்து விட்டதும் தடுமாறி நின்றவள், இவ்வளவு நேரம் நல்லா தானே கதைச்சான், இப்ப என்ன முரடன் மாதிரி நடக்குறான்? நானும் கொஞ்ம் ஓவரா தான் கதைச்சிட்டனோ. சரி இனி பார்த்தே கதைப்பம்." என்றவள், ஆறிப்போயிருந்த தேனீர் கோப்பையின் முன்பு அமர்ந்தாள்.
இறக்கை கட்டிப் பறந்த இரவானது, பறவையின் பாட்டொலியில் புதுப்பெண்ணாய் மலர, தன் வீட்டில் தூங்குவதைப் போல், சகலத்தையும் மறந்து சலனமே அற்று உறங்கியவள் உடலானது, விடியலின் வரவை உணர்ந்தும் உறக்கம் கலையாது போர்வையின் வெளியே எட்டிப் பார்த்த காலையையும் உள்ளே இழுத்துக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தவள் செல்லானது, எங்கே என்னை மீறி உறங்கு பார்க்கலாம் என சபதம் மேற்கொண்டது போல,
ஓலிப்பதும் அடங்குவதும், மீண்டும் ஒலிப்பதும் அடங்குவதுமாக நான்கு முறைக்கு மேலாக ஒலிக்க.
"அய்யோ ராமா!" எரிச்சலில் அலறிக்கொண்டு எழுந்தவள் வழக்கமாக போன் வைக்கும் டீப்பாவை தேடினாள். அது எங்கே அங்கிருக்கப் போகிறது. அங்கு இருப்பதற்கு அது என்ன அவள் வீடா? ஆரம்பத்தில் குழம்பினாலும், மெல்ல மெல்ல உண்மை உறைக்க,
விரிந்து கிடந்த முடியினை இன்னும் கலைப்பது பாேல் இடம் வலமென தலையினை சிலுப்பியே நிதானம் ஆனவள், அலறும் போனின சத்தம் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்தாள்.
சந்தேகமே இல்லை காலின் அடியில் இருந்து தான் வந்தது. "தலைமாட்டில வைக்கிற போன் எப்பிடித்தான் காலுக்கு கீழ போகுதோ! இதுக்காகவே ஒரு நாள் முழிச்சிருந்து பாக்கோணும் போல." புலம்பியவாறு காலினாலே அதை தட்டி எடுத்தவள் யாரென ஆராய்ந்தாள்.
அவள் மேல் அக்கறை கொள்ள புதிதாய் யார் இருக்கப் போகிறார்கள்? அவள் தோழி சித்ராவே தான்.
"எரும... கோல் பண்ணினா எடுக்க இவ்ளோ நேரமே! நான் பயந்திட்டன். வீட்டு வாசல்ல தான் நிக்கிறன் கதவ திற!" என்றாள். ஆம் அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தூங்கும் முன்னர் விலாசத்தை அனுப்பி விட்டு தூங்கியவள், இவ்வளவு காலையில் வாசலில் வந்து நிற்பாள் என நினைக்கவில்லை.
"அடி சண்டாளி.. காலங்காத்தாலயே வந்து கழுத்த அறுக்கிறாளே! வீட்டில கூட இவ்வளவு வேளைக்கு நான் ஒழும்ப மாட்டனே! அது சரி போற இடம் எல்லாம் வீடு ஆகிடுமே!" புலம்பலை நிறுத்தாது, கலைந்திருந்த கூந்தலை அய்யர் குடும்பி போல் சுருட்டிக்கொண்டு கதவை திறந்தவள், மடியில் மடிக்கணனியோடு வரவேற்பறையில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து விட்டு,
"குட் மோர்ணிங்க் சேர்" வணக்கத்தை வைத்தவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், அவள் தான் என்றதும் என்ன நினைத்தானோ, பதில் வணக்கம் கூட வைக்காது மீண்டும் தலையினை மடிக்கணனிக்குள் புகுத்தினான். பதில் வணக்கத்தை எதிர் பார்த்தவளுக்கு தான் பல்பு கிடைத்தது. வேண்டா வெறுப்பாய் உதட்டை சுழித்தவள்,
"இவ்வளவு பெருசா வளர்ந்து என்ன பலன்? மரியாதை குடுத்தா திரும்ப குடுக்காேணும் எண்டுற பண்பு தெரியேலயே!" அசைந்த உதட்டினை தாண்டி வார்த்தையானது வெளி விழாது முனுமுனுத்தவாறு கதவின் அருகே சென்று கதவினை திறந்தாள் தாரா.
"ஏன்டி பிசாசே! போன் எடுக்க தான் உனக்கு கொள்ளை எண்டா, பக்கத்தில இருக்கிற கதவை திறக்குறதுக்கும் கொள்ளையே! எவ்வளவு நேரம் தான் வாசல்லையே நிக்கிறது? வழியை மறித்து நின்றவளை தள்ளிக்கொண்டு வந்தவள் அதிர்ந்தே போனாள்.
பின்னே உள்ளே ஓர் ஆண்மகன் இருப்பான் என்று எதிர் பாராது வந்தவளுக்கு அது அதிர்ச்சி தானே!
"ஏய் ஆருடி அது? நான் கேட்கேக்க உன்னோட ஆரும் இல்லை எண்டு தானே சொன்ன... இப்ப என்னடா என்டா உள்ள ஒருத்தன் இருக்கிறான்." புதிதாய் ஒருத்தியின் குரல் கேட்டு நிமிர்ந்தவன், அவளது லொட லொடப்பில் இவள் யார் புதிதாய் என்று அவளையே ஆராய்ச்சியாய் பார்ததவனுக்கு கேட்காதது போல மெதுவாய் கேட்க,
"அதுவா? அது பெரிய கதை. உள்ளுக்குள்ள வா எல்லாத்தையும்
சொல்லுறன்." என தாரா உள்ளே அவளை அழைக்க, தம்மையே பார்த்தவாறு இருந்தவன் மேல் இருந்த விழிகளை மீட்காது உள்ளே வந்தவளை கண்டவன்,
"ஒரு நிமிசம்" என்று தடாளடியாக இருக்கையினை விட்டு எழுந்து,
"இது ஆர்? இவாவும் இனி உன்னோட தான் இருக்க போறாவாே?" என்றான் அதிர்வான குரலில். உண்மையில் அந்த குரலில் யாராக இருந்தாலும் சற்று பயம் கொள்ளத்தான் செய்வார்கள். இதை சற்றும் எதிர் பாராத தாரா அதிர்ந்தவள்,
"இல்லையே... இவள் என்ர தோழி. இவள் இந்த ஊர் தான்." என்றாள்.
இடுங்கிய புருவங்கள் மத்தியில் அவளை கூரிய பார்வை பார்த்தவன்,
"நேற்று உனக்கு இங்க ஆரையும் தெரியாது என்டு தானே சொன்ன?" குறுக்கு விசாரைணையில் பொலீஸாக மாறிப்போனான் அவன்.
"இப்பவும் சொல்லறன், இங்க எனக்கு தெரிஞ்சவ ஆருமே இல்லை. இவள் கூட பேஸ் புக் தோழி தான். என்ன நல்லா கதைச்சு பேசி பழகினதால நான் இங்க வார விசயத்த சொன்னன். அதோட இவள்ன்ர வீடு கூட எனக்கு தெரியாது. இவளுக்கு அண்ணன் ஒருத்தர் இருக்கிறதால ஆம்பிள இருக்கிற வீட்டில தங்கிறது சரி வராது என்டு தான் இந்த வீட்டை எடுத்தன்." என அவனுக்கு விளங்குவதைப் போல் நீளமாக சொன்னவள் வாயினையே பார்த்திருந்த சித்ரா,
"இஞ்ச என்னடி நடக்குது? தனிய தானே இருக்கிற என்டு சொன்னாய், அப்ப இது ஆர்? எனக்கு நீ சொல்லேக்க, உன்ர வீட்டுக்காறர் உன்னை துரத்தீட்டினம் என்டு தானே! நீ என்னடா என்டா, ஆரோ ஒருத்தனோட தனியா இருக்கிறாய்! உண்மைய சொல்லு, வீட்டில துரத்தினவயா? இல்ல நீங்கள் ரெண்டு பேரும் ஓடி வந்திட்டீங்களா?" இருவர் பேச்சும் ஒரு மாதிரி இருக்க, தனக்கு எழுந்த சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டவள் பேச்சின் அர்த்தம் அங்கு விறைப்பாக நின்றவனுக்கு விளங்கியதோ இல்லையோ, தாராவுக்கு நன்றாகவே விளங்கியது. அவசரமாக தோழியினை இழுத்து அவள் வாயை மூடியவள்,
"மன்னிச்சிடுங்கோ சேர்! இஞ்ச நடந்த எதுவும் இவளுக்கு தெரியாது தானே. !அது தான் விளக்கமில்லாம கதைச்சிட்டாள்." உதட்டை வலுகட்டாயமாக இழுத்து பற்கள் தெரிவதைப்போல் சிரித்து சமாளித்தவள்,
"சனியனே! நீயே எனக்கு அள்ளி வைச்சிடுவ போலவே. நான் சொல்லுற வரைக்கும் வாய திறக்காத" பார்வையும் புன்னகையும் அவனை நோக்கி இருந்தாலும், அவன் அறியாது அடைபட்ட பற்களுக்கு நடுவே நாக்கினை அசைத்து தோழிக்கு மட்டும் கேட்கும் படி கூறியவள், அவள் உதட்டிலிருந்த கையினை விடுவித்து,
"நீ கேட்ட கேள்விக்கு பதில கட்டாயம் சொல்லுறன் சித்ரா. அதுக்கு முன்னம் இவரை அறிமுகப்படுத்துறன். இவர் பேர் கூட...." இரண்டு வினாடி யோசனை செய்தவள், "ஆ... நெடுவாலி...." என்றவள் அறிமுகத்தில் எதிரே நின்றவன் ஒற்றை புருவமானது சட்டென உயர, அதில் தெரிந்த கோபத்தை உணர்ந்தவள்,
"சொறி சொறி.... நெடுமாறன்." அவசரமாக திருத்திக் கொண்டவள் மன்னிப்புக்கு எல்லாம் அசரமாட்டேன் என்பது போல், இன்னமும் அவளை முறைத்தவன் செயலே சொன்னது இப்போதும் தவறு என்று. அதில் பதட்டம் உண்டானாலும்,
"நெடுமாறனா? குஞ்சித பாதமா...? குஞ்சித பாதமா? இருக்காது. குஞ்சிதபாதம் பழைய பேர். எனக்கு நல்லா தெரியும் நீங்கள் நேற்று நெடுமாறன் என்டு தான் அறிமுகம் செஞ்சனீங்கள். நித்திர கலக்கத்தில நான் தான் குழம்பீட்டன்" என்றாள் உறுதியாக. உண்மையில் அவன் தன்னை அறிமுகேம செய்யவில்லை. இவனது உயரத்தை பார்த்து மனதில் இவளாகவே நினைத்து விட்டு, அவன் சொன்னது போல் எண்ணிக் கொண்டாள்.
"நான் சொன்னது சரி தானே சேர். உங்கட பேர் நெடுமாறன் தானே!" என அவனிடமே உறுதி செய்வதற்கு கேட்க, இருவரையும் ஒரு வினாடி உற்று நோக்கியவன் என்ன நினைத்தானோ, இப்படி இருவர் தன் முன் நிக்கிறார்கள் என்ற சட்டையே செய்யாது, செட்டியில் அமர்ந்து மீண்டும் மடிக்கணனியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அதற்குள் மூழ்கிப் போக, சில நிமிடம் அவனையே பார்த்திருந்த இருவருக்குமே வெட்கிப் போனது.
"சரி நீ வந்து இரு! நான் ஊத்த வாய கழுவீட்டு வாரன்." என ரூம் பக்கம் திரும்பியவள் என்ன நினைத்தாலோ...
"இதில இருந்தா சேருக்கு இடைஞ்சலா இருக்கும். ரூமுக்குள்ள வந்து இரேன் சித்ரா." என்றாள். சித்ராவுக்குமே தெரியாதவன் முன் எப்படி என்ற சங்கடம். அதோடு தொட்டதற்கு எல்லாம் முறைப்பவன் முன் தான் தனியே என்ற பயமே தலையினை சரி என வேகமாக ஆட்ட வைத்தது.ட
"அது தான் நான் இருக்கிற ரூம்" என அழைத்து சென்றவள் கதவை சாத்தவில்லை,
"உண்மையில என்ன நடக்குது தாரா? இது ஆர் புதுசா? உன் லவ்வரா?" மீண்டும் அதே கேள்வியை சற்றே மாத்தி கேட்டாள் சித்ரா.
"ஆ... உன் ஆத்தா கு......" ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், ஊத்த வாயோட கதைச்சா, ஊத்த சொல் தான் வரும். இரு ரெண்டே நிமிசம் பல்ல தீட்டீட்டு வாரன்." என்றவள் நில்லாது குளியறை புகுந்து காலை கடன்களை முடித்து விட்டு வர பத்து நிமிடங்கள் ஆனது.
"ம்ம் இப்ப சொல்லு... நேற்று ஏன் வாரன் என்டுட்டு வரேல.. வீட்டில ஆருக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தன்னை அவள் கேட்ட கேள்வியை விடுத்து.
"ஆருக்கு என்ன பிரச்சினை வரப்போகுது? எல்லாம் அண்ணாவால தான்டி! எப்ப பார்... குடிச்சுபோட்டு வந்து வீட்டில இருக்கிறவயோட தனகுறது தான் வேல, நேற்று கொஞ்சம் என்ன கொஞ்சம் எல்லாமே கூடிட்டுது." என பெருமூச்சை இழுத்து விட,
"ஏன் என்ன நடந்தது?"
"தனக்கு கலியாண வயசு தாண்டி போகுதாம்... வீட்டில ஆருமே பொறுப்பே இல்லாம இருக்கினமாம். பொறுப்பா இருக்க வேண்டியவன் அவன், அவன் பொறுப்பில்லாம இருந்திட்டு எங்களை பொறுப்பில்லை என்டா நாங்களும் என்னடி செய்வம்?" புலம்பியவள் புலம்பல் கொஞ்சமும் விளங்கவில்லை அவளுக்கு.
"எதா இருந்தாலும் தெளிவா சொல்லு சித்து. என்ன பொறுப்பு பருப்பு என்டுறாய்?" காலங்காத்தால் வந்து புலம்பியவள் புலம்பல் விளங்கவில்லை என்றால் யார் தான் சினக்க மாட்டார்கள்.
"பின்ன என்னடி! நாங்களும் அவன்ர குறிப்ப குடுக்காத இடம் இல்ல... எல்லா புறோகரும் வெறுங்கையோட வந்து நிக்கிறாங்கள். கேட்டா வேலை வெட்டி இல்லாம குடிச்சு போட்டு சுத்துறவனுக்கு ஆர் பாெம்பிள தருவாங்கள் என்டு முகத்தில அடிச்சா மாதிரி சொல்லீட்டு போறாங்கள். அவங்கள் சொல்லுறதும் உண்மை தானே! இப்பிடி இருக்கிறவனுக்கு ஆர் பொம்பிள தருவாங்கள்? அப்பாக்கு கோபம் வந்திட்டுது, அடிச்சிட்டார். அதால வீட்டில பெரிய போரே வெடிச்சிட்டுது." பொருமலாய் கூறியவள்,
"அவன்ர கதைய விடு! நீ சொல்லு... வெளியால இருக்கிறது ஆர்?" என்றாள் தெரிந்து கொள்ளும் ஆவலில்.
"அதை ஏன் கேக்கிற.." சலிப்போடு ஆரம்பித்து நடந்தை சொல்லி முடித்தவளை வாய் பிளந்து பார்த்திருந்தவள்,
"இப்ப விளங்குமே... நான் ஏன் பதறினன் என்டு! இங்க பாதிப்பேர் கள்ளர். படிச்சு பதவியில இருக்கிறவ கொஞ்சப் பேர் தான். மிச்சம் எல்லாம் ஊரை அடிச்சு உலையில போடுறவங்கள். ஆனாலும் காச ஏமாந்துட்டாய் என்டு, ஒரு ஆம்பிள தனியா இருக்கிற வீட்டில இருக்கிறது நல்லதா படேல தாரா. வேற ஏதாவது ஏற்பாடு பன்னுவோமா?" அவளுக்கு தோழியை அவனோடு விட மனம் ஒப்பவில்லை.
"அதுக்கு பணம்? இஞ்ச பார். நான் கையில கொண்டு வந்த காசு கொஞ்சம் தான். ஏடிஎம் காட் இருக்குத்தான். அதை பாவிச்சா நான் எங்க இருக்கிறன் என்டு வீட்டுக்காரர் கண்டு பிடிச்சு வந்திடுவினம். என்னை உதறி எறிஞ்சுட்டு, இப்ப வரைக்கும் வேண்டாம் என்டு ஒரு கோல் கூட எடுத்துப் பார்க்காதவை எனக்கும் வேண்டாம். இந்த சிம்ம இன்டையோட கழட்டி எறிஞ்சிட்டு நம்பர மாத்தப்போறன்." என்றாள் கோபமாய்.
"நீ சொல்லுறதே நியாயமா இருக்கட்டும் தாரா! ஆனா நல்லா யோசி.. இப்பிடி ஒருதனோட இருந்துட்டு நாளைக்கு கல்யாணப் பேச்சு வரேக்க அது எதிர்காலத்தை பாதிக்காதா?" என்றாள் பின்னால் நடப்பற்றை தவிர்க்கும் பொருட்டு.
"சொன்னா விளங்கிக்கிறா மாதிரி நல்லவனா ஒருத்தன் கூடவா சித்து இந்த உலகத்தில இல்லை. ஒரு உண்மை சொல்லவாடி... நான் அந்த பிராடுட்ட பத்து நாளகை்கான வாடகை காசு தான் குடுத்தன். இவனுட்ட ஒரு மாசம் என்டு சொல்லிருக்கிறன், எப்பிடி பார்த்தாலும் எனக்கு லாபம் தான். அதோட ஒரு மாதத்துக்கு பிறகு வேற வீடு எடுக்க போறன். ஒரு மாதம் தானே யாருக்கும் தெரியாது." தோழியை தேற்றியவள் அறிய வாய்ப்பில்லை இந்த ஒரு மாதத்துக்குள் தன் வாழ்வே மாறப் போகிறது என்று.
"சொல்லுறது என்ர கடமை! கேக்கிறதும் கேக்காததும் உன்ர விருப்பம். அப்ப சரிடி. நீ பாதுகாப்பா இருக்கிறியா என்டு தான் பார்க்க வந்தன், டவுள் பாதுகாப்போட இருக்கிறாய். அப்ப நான் வெளிக்கிடுறன்." கட்டிலை விட்டு எழுந்தவள் கையினை பிடித்து இழுத்தவள்,
"எங்க ஓடுறாய்...? நீ ஓடானா நான் எப்பிடி சாப்பிடுறது? நானும் வாரன் நில்" என தயாராக போனவளிடம்,
"சாப்பிடவா? கடை சாப்பாடாடி?" என்றாள் நம்ப முடியாது.
"ஓ... கடை சாப்பாடு வேற நான் சாப்பிடுவன் என்டு நினைச்சியோ.. காசு ஆர் தருவினமாம். அதெல்லாம் இல்லை. கொஞ்ச சாமன் வேண்டி வைச்சா, ஒரு பத்து நாளைக்கு சமாளிச்சிட மாட்டன். பிறகு என்ன செய்யிறது என்டு யோசிப்பம்." பிற்பாடு நடப்பவற்றை யோசிக்க கூட அவள் விரும்பவில்லை. விரும்பினாலும் அதற்கான தீர்வு அமையுமா என்ற பயம் தான் அவளுக்கு.
"அப்ப ஏன்டி என்னை மறிக்கிறாய்?"
"நீ ஓடினா எனக்கு யாரு துணையா கடைக்கு வருவினம். அதால இரு நானும் வெளிக்கிட்டு வாரன். வந்து சாமனை வாங்கி தந்திட்டு போ" என்றாள் அதிகாரமாய்.
"அது சரி சோனியன் குடும்பி சும்மா ஆடுமே! வேளைக்கு வெளிக்கிடு, விடிஞ்சோன்னா உனக்கு என்னவோ என்டு வெளிக்கிட்டு வந்திட்டன், அம்மா வேற விடியக்காலம எங்க வெளிக்கிடுறாய் என்டு கேட்டும், நின்டு பதில் சொல்ல பொறும இல்லாம வந்ததில மனிசி பயந்திருக்கும், போனாத்தான் மனிசி நிம்மதியாய் மூச்சே விடும். வேளைக்கு வா!" என்றாள் அவசரப்படுத்துவது போல.
"சரியடி கொஞ்சம் லொட லொடக்காம கட்டில்ல இரு. இப்ப வெளிக்கிட்டு வாரன்." என குளியலறைக்குள் உடையினை எடுத்துக் கொண்டு புகுந்தவள், ஐந்தாவது நிமிஷத்துள் தயாராகி அவள் கண் முன் வந்து நின்றாள்.
இறக்கை கட்டிப் பறந்த இரவானது, பறவையின் பாட்டொலியில் புதுப்பெண்ணாய் மலர, தன் வீட்டில் தூங்குவதைப் போல், சகலத்தையும் மறந்து சலனமே அற்று உறங்கியவள் உடலானது, விடியலின் வரவை உணர்ந்தும் உறக்கம் கலையாது போர்வையின் வெளியே எட்டிப் பார்த்த காலையையும் உள்ளே இழுத்துக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தவள் செல்லானது, எங்கே என்னை மீறி உறங்கு பார்க்கலாம் என சபதம் மேற்கொண்டது போல,
ஓலிப்பதும் அடங்குவதும், மீண்டும் ஒலிப்பதும் அடங்குவதுமாக நான்கு முறைக்கு மேலாக ஒலிக்க.
"அய்யோ ராமா!" எரிச்சலில் அலறிக்கொண்டு எழுந்தவள் வழக்கமாக போன் வைக்கும் டீப்பாவை தேடினாள். அது எங்கே அங்கிருக்கப் போகிறது. அங்கு இருப்பதற்கு அது என்ன அவள் வீடா? ஆரம்பத்தில் குழம்பினாலும், மெல்ல மெல்ல உண்மை உறைக்க,
விரிந்து கிடந்த முடியினை இன்னும் கலைப்பது பாேல் இடம் வலமென தலையினை சிலுப்பியே நிதானம் ஆனவள், அலறும் போனின சத்தம் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்தாள்.
சந்தேகமே இல்லை காலின் அடியில் இருந்து தான் வந்தது. "தலைமாட்டில வைக்கிற போன் எப்பிடித்தான் காலுக்கு கீழ போகுதோ! இதுக்காகவே ஒரு நாள் முழிச்சிருந்து பாக்கோணும் போல." புலம்பியவாறு காலினாலே அதை தட்டி எடுத்தவள் யாரென ஆராய்ந்தாள்.
அவள் மேல் அக்கறை கொள்ள புதிதாய் யார் இருக்கப் போகிறார்கள்? அவள் தோழி சித்ராவே தான்.
"எரும... கோல் பண்ணினா எடுக்க இவ்ளோ நேரமே! நான் பயந்திட்டன். வீட்டு வாசல்ல தான் நிக்கிறன் கதவ திற!" என்றாள். ஆம் அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தூங்கும் முன்னர் விலாசத்தை அனுப்பி விட்டு தூங்கியவள், இவ்வளவு காலையில் வாசலில் வந்து நிற்பாள் என நினைக்கவில்லை.
"அடி சண்டாளி.. காலங்காத்தாலயே வந்து கழுத்த அறுக்கிறாளே! வீட்டில கூட இவ்வளவு வேளைக்கு நான் ஒழும்ப மாட்டனே! அது சரி போற இடம் எல்லாம் வீடு ஆகிடுமே!" புலம்பலை நிறுத்தாது, கலைந்திருந்த கூந்தலை அய்யர் குடும்பி போல் சுருட்டிக்கொண்டு கதவை திறந்தவள், மடியில் மடிக்கணனியோடு வரவேற்பறையில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து விட்டு,
"குட் மோர்ணிங்க் சேர்" வணக்கத்தை வைத்தவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், அவள் தான் என்றதும் என்ன நினைத்தானோ, பதில் வணக்கம் கூட வைக்காது மீண்டும் தலையினை மடிக்கணனிக்குள் புகுத்தினான். பதில் வணக்கத்தை எதிர் பார்த்தவளுக்கு தான் பல்பு கிடைத்தது. வேண்டா வெறுப்பாய் உதட்டை சுழித்தவள்,
"இவ்வளவு பெருசா வளர்ந்து என்ன பலன்? மரியாதை குடுத்தா திரும்ப குடுக்காேணும் எண்டுற பண்பு தெரியேலயே!" அசைந்த உதட்டினை தாண்டி வார்த்தையானது வெளி விழாது முனுமுனுத்தவாறு கதவின் அருகே சென்று கதவினை திறந்தாள் தாரா.
"ஏன்டி பிசாசே! போன் எடுக்க தான் உனக்கு கொள்ளை எண்டா, பக்கத்தில இருக்கிற கதவை திறக்குறதுக்கும் கொள்ளையே! எவ்வளவு நேரம் தான் வாசல்லையே நிக்கிறது? வழியை மறித்து நின்றவளை தள்ளிக்கொண்டு வந்தவள் அதிர்ந்தே போனாள்.
பின்னே உள்ளே ஓர் ஆண்மகன் இருப்பான் என்று எதிர் பாராது வந்தவளுக்கு அது அதிர்ச்சி தானே!
"ஏய் ஆருடி அது? நான் கேட்கேக்க உன்னோட ஆரும் இல்லை எண்டு தானே சொன்ன... இப்ப என்னடா என்டா உள்ள ஒருத்தன் இருக்கிறான்." புதிதாய் ஒருத்தியின் குரல் கேட்டு நிமிர்ந்தவன், அவளது லொட லொடப்பில் இவள் யார் புதிதாய் என்று அவளையே ஆராய்ச்சியாய் பார்ததவனுக்கு கேட்காதது போல மெதுவாய் கேட்க,
"அதுவா? அது பெரிய கதை. உள்ளுக்குள்ள வா எல்லாத்தையும்
சொல்லுறன்." என தாரா உள்ளே அவளை அழைக்க, தம்மையே பார்த்தவாறு இருந்தவன் மேல் இருந்த விழிகளை மீட்காது உள்ளே வந்தவளை கண்டவன்,
"ஒரு நிமிசம்" என்று தடாளடியாக இருக்கையினை விட்டு எழுந்து,
"இது ஆர்? இவாவும் இனி உன்னோட தான் இருக்க போறாவாே?" என்றான் அதிர்வான குரலில். உண்மையில் அந்த குரலில் யாராக இருந்தாலும் சற்று பயம் கொள்ளத்தான் செய்வார்கள். இதை சற்றும் எதிர் பாராத தாரா அதிர்ந்தவள்,
"இல்லையே... இவள் என்ர தோழி. இவள் இந்த ஊர் தான்." என்றாள்.
இடுங்கிய புருவங்கள் மத்தியில் அவளை கூரிய பார்வை பார்த்தவன்,
"நேற்று உனக்கு இங்க ஆரையும் தெரியாது என்டு தானே சொன்ன?" குறுக்கு விசாரைணையில் பொலீஸாக மாறிப்போனான் அவன்.
"இப்பவும் சொல்லறன், இங்க எனக்கு தெரிஞ்சவ ஆருமே இல்லை. இவள் கூட பேஸ் புக் தோழி தான். என்ன நல்லா கதைச்சு பேசி பழகினதால நான் இங்க வார விசயத்த சொன்னன். அதோட இவள்ன்ர வீடு கூட எனக்கு தெரியாது. இவளுக்கு அண்ணன் ஒருத்தர் இருக்கிறதால ஆம்பிள இருக்கிற வீட்டில தங்கிறது சரி வராது என்டு தான் இந்த வீட்டை எடுத்தன்." என அவனுக்கு விளங்குவதைப் போல் நீளமாக சொன்னவள் வாயினையே பார்த்திருந்த சித்ரா,
"இஞ்ச என்னடி நடக்குது? தனிய தானே இருக்கிற என்டு சொன்னாய், அப்ப இது ஆர்? எனக்கு நீ சொல்லேக்க, உன்ர வீட்டுக்காறர் உன்னை துரத்தீட்டினம் என்டு தானே! நீ என்னடா என்டா, ஆரோ ஒருத்தனோட தனியா இருக்கிறாய்! உண்மைய சொல்லு, வீட்டில துரத்தினவயா? இல்ல நீங்கள் ரெண்டு பேரும் ஓடி வந்திட்டீங்களா?" இருவர் பேச்சும் ஒரு மாதிரி இருக்க, தனக்கு எழுந்த சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டவள் பேச்சின் அர்த்தம் அங்கு விறைப்பாக நின்றவனுக்கு விளங்கியதோ இல்லையோ, தாராவுக்கு நன்றாகவே விளங்கியது. அவசரமாக தோழியினை இழுத்து அவள் வாயை மூடியவள்,
"மன்னிச்சிடுங்கோ சேர்! இஞ்ச நடந்த எதுவும் இவளுக்கு தெரியாது தானே. !அது தான் விளக்கமில்லாம கதைச்சிட்டாள்." உதட்டை வலுகட்டாயமாக இழுத்து பற்கள் தெரிவதைப்போல் சிரித்து சமாளித்தவள்,
"சனியனே! நீயே எனக்கு அள்ளி வைச்சிடுவ போலவே. நான் சொல்லுற வரைக்கும் வாய திறக்காத" பார்வையும் புன்னகையும் அவனை நோக்கி இருந்தாலும், அவன் அறியாது அடைபட்ட பற்களுக்கு நடுவே நாக்கினை அசைத்து தோழிக்கு மட்டும் கேட்கும் படி கூறியவள், அவள் உதட்டிலிருந்த கையினை விடுவித்து,
"நீ கேட்ட கேள்விக்கு பதில கட்டாயம் சொல்லுறன் சித்ரா. அதுக்கு முன்னம் இவரை அறிமுகப்படுத்துறன். இவர் பேர் கூட...." இரண்டு வினாடி யோசனை செய்தவள், "ஆ... நெடுவாலி...." என்றவள் அறிமுகத்தில் எதிரே நின்றவன் ஒற்றை புருவமானது சட்டென உயர, அதில் தெரிந்த கோபத்தை உணர்ந்தவள்,
"சொறி சொறி.... நெடுமாறன்." அவசரமாக திருத்திக் கொண்டவள் மன்னிப்புக்கு எல்லாம் அசரமாட்டேன் என்பது போல், இன்னமும் அவளை முறைத்தவன் செயலே சொன்னது இப்போதும் தவறு என்று. அதில் பதட்டம் உண்டானாலும்,
"நெடுமாறனா? குஞ்சித பாதமா...? குஞ்சித பாதமா? இருக்காது. குஞ்சிதபாதம் பழைய பேர். எனக்கு நல்லா தெரியும் நீங்கள் நேற்று நெடுமாறன் என்டு தான் அறிமுகம் செஞ்சனீங்கள். நித்திர கலக்கத்தில நான் தான் குழம்பீட்டன்" என்றாள் உறுதியாக. உண்மையில் அவன் தன்னை அறிமுகேம செய்யவில்லை. இவனது உயரத்தை பார்த்து மனதில் இவளாகவே நினைத்து விட்டு, அவன் சொன்னது போல் எண்ணிக் கொண்டாள்.
"நான் சொன்னது சரி தானே சேர். உங்கட பேர் நெடுமாறன் தானே!" என அவனிடமே உறுதி செய்வதற்கு கேட்க, இருவரையும் ஒரு வினாடி உற்று நோக்கியவன் என்ன நினைத்தானோ, இப்படி இருவர் தன் முன் நிக்கிறார்கள் என்ற சட்டையே செய்யாது, செட்டியில் அமர்ந்து மீண்டும் மடிக்கணனியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அதற்குள் மூழ்கிப் போக, சில நிமிடம் அவனையே பார்த்திருந்த இருவருக்குமே வெட்கிப் போனது.
"சரி நீ வந்து இரு! நான் ஊத்த வாய கழுவீட்டு வாரன்." என ரூம் பக்கம் திரும்பியவள் என்ன நினைத்தாலோ...
"இதில இருந்தா சேருக்கு இடைஞ்சலா இருக்கும். ரூமுக்குள்ள வந்து இரேன் சித்ரா." என்றாள். சித்ராவுக்குமே தெரியாதவன் முன் எப்படி என்ற சங்கடம். அதோடு தொட்டதற்கு எல்லாம் முறைப்பவன் முன் தான் தனியே என்ற பயமே தலையினை சரி என வேகமாக ஆட்ட வைத்தது.ட
"அது தான் நான் இருக்கிற ரூம்" என அழைத்து சென்றவள் கதவை சாத்தவில்லை,
"உண்மையில என்ன நடக்குது தாரா? இது ஆர் புதுசா? உன் லவ்வரா?" மீண்டும் அதே கேள்வியை சற்றே மாத்தி கேட்டாள் சித்ரா.
"ஆ... உன் ஆத்தா கு......" ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், ஊத்த வாயோட கதைச்சா, ஊத்த சொல் தான் வரும். இரு ரெண்டே நிமிசம் பல்ல தீட்டீட்டு வாரன்." என்றவள் நில்லாது குளியறை புகுந்து காலை கடன்களை முடித்து விட்டு வர பத்து நிமிடங்கள் ஆனது.
"ம்ம் இப்ப சொல்லு... நேற்று ஏன் வாரன் என்டுட்டு வரேல.. வீட்டில ஆருக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தன்னை அவள் கேட்ட கேள்வியை விடுத்து.
"ஆருக்கு என்ன பிரச்சினை வரப்போகுது? எல்லாம் அண்ணாவால தான்டி! எப்ப பார்... குடிச்சுபோட்டு வந்து வீட்டில இருக்கிறவயோட தனகுறது தான் வேல, நேற்று கொஞ்சம் என்ன கொஞ்சம் எல்லாமே கூடிட்டுது." என பெருமூச்சை இழுத்து விட,
"ஏன் என்ன நடந்தது?"
"தனக்கு கலியாண வயசு தாண்டி போகுதாம்... வீட்டில ஆருமே பொறுப்பே இல்லாம இருக்கினமாம். பொறுப்பா இருக்க வேண்டியவன் அவன், அவன் பொறுப்பில்லாம இருந்திட்டு எங்களை பொறுப்பில்லை என்டா நாங்களும் என்னடி செய்வம்?" புலம்பியவள் புலம்பல் கொஞ்சமும் விளங்கவில்லை அவளுக்கு.
"எதா இருந்தாலும் தெளிவா சொல்லு சித்து. என்ன பொறுப்பு பருப்பு என்டுறாய்?" காலங்காத்தால் வந்து புலம்பியவள் புலம்பல் விளங்கவில்லை என்றால் யார் தான் சினக்க மாட்டார்கள்.
"பின்ன என்னடி! நாங்களும் அவன்ர குறிப்ப குடுக்காத இடம் இல்ல... எல்லா புறோகரும் வெறுங்கையோட வந்து நிக்கிறாங்கள். கேட்டா வேலை வெட்டி இல்லாம குடிச்சு போட்டு சுத்துறவனுக்கு ஆர் பாெம்பிள தருவாங்கள் என்டு முகத்தில அடிச்சா மாதிரி சொல்லீட்டு போறாங்கள். அவங்கள் சொல்லுறதும் உண்மை தானே! இப்பிடி இருக்கிறவனுக்கு ஆர் பொம்பிள தருவாங்கள்? அப்பாக்கு கோபம் வந்திட்டுது, அடிச்சிட்டார். அதால வீட்டில பெரிய போரே வெடிச்சிட்டுது." பொருமலாய் கூறியவள்,
"அவன்ர கதைய விடு! நீ சொல்லு... வெளியால இருக்கிறது ஆர்?" என்றாள் தெரிந்து கொள்ளும் ஆவலில்.
"அதை ஏன் கேக்கிற.." சலிப்போடு ஆரம்பித்து நடந்தை சொல்லி முடித்தவளை வாய் பிளந்து பார்த்திருந்தவள்,
"இப்ப விளங்குமே... நான் ஏன் பதறினன் என்டு! இங்க பாதிப்பேர் கள்ளர். படிச்சு பதவியில இருக்கிறவ கொஞ்சப் பேர் தான். மிச்சம் எல்லாம் ஊரை அடிச்சு உலையில போடுறவங்கள். ஆனாலும் காச ஏமாந்துட்டாய் என்டு, ஒரு ஆம்பிள தனியா இருக்கிற வீட்டில இருக்கிறது நல்லதா படேல தாரா. வேற ஏதாவது ஏற்பாடு பன்னுவோமா?" அவளுக்கு தோழியை அவனோடு விட மனம் ஒப்பவில்லை.
"அதுக்கு பணம்? இஞ்ச பார். நான் கையில கொண்டு வந்த காசு கொஞ்சம் தான். ஏடிஎம் காட் இருக்குத்தான். அதை பாவிச்சா நான் எங்க இருக்கிறன் என்டு வீட்டுக்காரர் கண்டு பிடிச்சு வந்திடுவினம். என்னை உதறி எறிஞ்சுட்டு, இப்ப வரைக்கும் வேண்டாம் என்டு ஒரு கோல் கூட எடுத்துப் பார்க்காதவை எனக்கும் வேண்டாம். இந்த சிம்ம இன்டையோட கழட்டி எறிஞ்சிட்டு நம்பர மாத்தப்போறன்." என்றாள் கோபமாய்.
"நீ சொல்லுறதே நியாயமா இருக்கட்டும் தாரா! ஆனா நல்லா யோசி.. இப்பிடி ஒருதனோட இருந்துட்டு நாளைக்கு கல்யாணப் பேச்சு வரேக்க அது எதிர்காலத்தை பாதிக்காதா?" என்றாள் பின்னால் நடப்பற்றை தவிர்க்கும் பொருட்டு.
"சொன்னா விளங்கிக்கிறா மாதிரி நல்லவனா ஒருத்தன் கூடவா சித்து இந்த உலகத்தில இல்லை. ஒரு உண்மை சொல்லவாடி... நான் அந்த பிராடுட்ட பத்து நாளகை்கான வாடகை காசு தான் குடுத்தன். இவனுட்ட ஒரு மாசம் என்டு சொல்லிருக்கிறன், எப்பிடி பார்த்தாலும் எனக்கு லாபம் தான். அதோட ஒரு மாதத்துக்கு பிறகு வேற வீடு எடுக்க போறன். ஒரு மாதம் தானே யாருக்கும் தெரியாது." தோழியை தேற்றியவள் அறிய வாய்ப்பில்லை இந்த ஒரு மாதத்துக்குள் தன் வாழ்வே மாறப் போகிறது என்று.
"சொல்லுறது என்ர கடமை! கேக்கிறதும் கேக்காததும் உன்ர விருப்பம். அப்ப சரிடி. நீ பாதுகாப்பா இருக்கிறியா என்டு தான் பார்க்க வந்தன், டவுள் பாதுகாப்போட இருக்கிறாய். அப்ப நான் வெளிக்கிடுறன்." கட்டிலை விட்டு எழுந்தவள் கையினை பிடித்து இழுத்தவள்,
"எங்க ஓடுறாய்...? நீ ஓடானா நான் எப்பிடி சாப்பிடுறது? நானும் வாரன் நில்" என தயாராக போனவளிடம்,
"சாப்பிடவா? கடை சாப்பாடாடி?" என்றாள் நம்ப முடியாது.
"ஓ... கடை சாப்பாடு வேற நான் சாப்பிடுவன் என்டு நினைச்சியோ.. காசு ஆர் தருவினமாம். அதெல்லாம் இல்லை. கொஞ்ச சாமன் வேண்டி வைச்சா, ஒரு பத்து நாளைக்கு சமாளிச்சிட மாட்டன். பிறகு என்ன செய்யிறது என்டு யோசிப்பம்." பிற்பாடு நடப்பவற்றை யோசிக்க கூட அவள் விரும்பவில்லை. விரும்பினாலும் அதற்கான தீர்வு அமையுமா என்ற பயம் தான் அவளுக்கு.
"அப்ப ஏன்டி என்னை மறிக்கிறாய்?"
"நீ ஓடினா எனக்கு யாரு துணையா கடைக்கு வருவினம். அதால இரு நானும் வெளிக்கிட்டு வாரன். வந்து சாமனை வாங்கி தந்திட்டு போ" என்றாள் அதிகாரமாய்.
"அது சரி சோனியன் குடும்பி சும்மா ஆடுமே! வேளைக்கு வெளிக்கிடு, விடிஞ்சோன்னா உனக்கு என்னவோ என்டு வெளிக்கிட்டு வந்திட்டன், அம்மா வேற விடியக்காலம எங்க வெளிக்கிடுறாய் என்டு கேட்டும், நின்டு பதில் சொல்ல பொறும இல்லாம வந்ததில மனிசி பயந்திருக்கும், போனாத்தான் மனிசி நிம்மதியாய் மூச்சே விடும். வேளைக்கு வா!" என்றாள் அவசரப்படுத்துவது போல.
"சரியடி கொஞ்சம் லொட லொடக்காம கட்டில்ல இரு. இப்ப வெளிக்கிட்டு வாரன்." என குளியலறைக்குள் உடையினை எடுத்துக் கொண்டு புகுந்தவள், ஐந்தாவது நிமிஷத்துள் தயாராகி அவள் கண் முன் வந்து நின்றாள்.