• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. ரகசிய ராட்சஷி

kkp8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
32
5
18
Tamil nadu
அத்தியாயம் 5


கண்ணீர் மல்ல, பலத்த சிந்தையில் அமர்ந்திருந்தவர் கட்டிலில் வந்து அமர்ந்தார் சோபனாவின் கணவர் ஜெயரட்ணம்.

"என்ன சோபி இப்பிடி இடிஞ்சு போய் இருக்கிறாய்? இடிஞ்சு போய் மூலையில் இருக்கற அளவுக்கு என்ன நடந்து போட்டுது? அது சின்னப் பிள்ளை சோபி." என்றவரை வந்த கண்ணீரையும் மீறி கோபமாய் முறைத்தவர்,

"நீங்கள் கதைக்காதீங்கோப்பா... மிச்சர் மாமா மாதிரி, நடக்கிற எல்லாத்தையும் விலத்தி இருந்து பார்த்துக் கொண்டிருந்துட்டு, இப்ப வந்து சமாதானம் செய்யிறீங்கள். பார்க்கிறவ கண்ணுக்கு நான் தான் வில்லி மாதிரி தெரியப்போறன்" என்றார் சோபனா இயலாமையில்.

"என்ன சொல்லுறாய் சோபி? நீ சொல்லுறா மாதிரி நானும் அந்த இடத்தில ஏதாவது கதைச்சிருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா? அது சின்னப் பிள்ளை சோபி... அதிட்ட நீதான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லோணும். ஆம்பிளை உள்ள பூந்தா வேற மாதிரி போயிடும். அது வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளை வேற. கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். நாள் ஆக ஆக எல்லாம் விளங்கிக்கொள்ளும்" என்றார் வந்திருந்த மருமகளுக்குச் சாதகமாக.

"ஆரையப்பா சின்னப் பிள்ளை என்டுறீங்கள்? அவள் கதைச்சது எல்லாத்தையும் கேட்டனீங்கள் தானே! எதுவும் தெரியாத மாதிரியா கதைச்சாள்? எதையோ ஒன்ட மனசுக்க வைச்சுக்கொண்டு, என்னமோ எல்லாம் கதைக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு" என்றார் தன் எண்ணத்தில் தோன்றிய சந்தேகத்தை மறைக்காது.

"ஓம் சோபி... நானும் அதை கவனிச்சன். அந்தப் பிள்ளையை இப்பத்தான் எங்களுக்கே தெரியும், அப்பிடி இருக்கேக்க, ஏன் இப்பிடி வஞ்சமா கதைக்குது எண்டு தெரியலயே!" என்றார் அவரும் சோபனா சொன்னதைத் தானும் கவனித்ததை போல.

"என்னமோங்கோ... கடவுள்தான் துணையா இருக்கோணும்" விட்டத்தில் பார்வையைச் செலுத்தி பாரத்தை அவர் மீது திணித்தார்.

"ஆருக்கு சோபி?" என்றார் உதட்டோரத்தில் தோன்றிய புன்னகையினை அடக்கியவாறு ஜெயரட்ணம்.

"என்ன நக்கலே! போங்கோ... போய் அவள் தார அடுத்த செருப்படிக்கு ஆயித்தம் ஆகுங்கோ" எனக் கணவனை முறைத்தவாறு கூறியவர்,

"இரவு சடங்குகள் நிறைய இருக்கேக்க இங்க வந்திட்டார், என்னோட ராத்துத்துக்கு." கணவனுக்குக் கேட்பதுபோல் முணுமுணுத்தவாறு எழுந்த சோபனாவுக்குத்தான் அடுத்து என்ன வில்லங்கத்தை இழுக்கப் போகிறாளோ என்று பயமாக இருந்தது.

கொஞ்சம் பயமாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாது அங்கிருந்த அறைக் கதவுகளில் ஒரு கதவைத் தட்டியவர்,

"யாழினி" என்றார் சற்றே உரத்து.

"ஓம்... வாரன்" குரல் கேட்ட மறுநிமிடம் கதவு திறபட்டதும் எதிரே நின்றவளைக் கண்டதும் ஆச்சரியமாகிப் போனது சோபனாவுக்கு.

உண்மை தான். எதற்காக சோபனா தயங்கித் தயங்கி வந்தாளோ, அதற்கு யாழினியே தயாராக நின்றிருந்தாள்.

இன்று முதலிரவு தானே. கல்யாண சடங்களுக்கு அத்தனை பிரச்சினை செய்தவள் ஆகிற்றே! முதலிரவு என்றால் என்னென்ன பிரச்சினை செய்வாளோ என்ற பயத்தில் தான் வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதைக் கண்டால் ஆச்சரியமாகாதா?

"ஓ... நீயே வெளிக்கிட்டியா? சரி வா, நல்ல நேரம் முடியிறதுக்கிடேல போவம்" மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்தாலும் காரணம் தேடும் அவகாசம் அவருக்கு இல்லை.

மௌனமாய் அவர் அழைப்புக்கு ஒத்திசைத்து அவர் பின்னாலேயே நடந்தவளை ஓர் அறைக் கதவின் முன் நிறுத்தியவர்,

"இதுதான் யாழினி தம்பீன்ர அறை. முன்ன பின்ன தம்பீல ஏதாவது கோபம் இருந்தா மறந்திட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் பாருங்கோ" என்றார் வழக்கமாகப் பெரியவர் சொல்லும் அறிவுரையினைப் போல்.

அதுவரை ஏதேதோ சிந்தையில் இருந்தவளுக்கு, அவர் கூறிய அறிவுரையே எதையோ நினைவு படுத்தியது போல, தரை தொட்ட பார்வையினை மாற்றி அவரை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அத்தனை கோபம். எதுவும் பேசாது கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

இவளுக்காகக் காத்திருக்கவில்லை அவன். ஏதோ சிந்தையில் ஜன்னல் வழி இருண்ட வானத்தையே பார்த்தவாறு நின்றிருந்தவனைக் கண்டுவிட்டு,

"செய்யிறது பூரா அநியாயம். இதில உலகமாகா நடிப்பு வேற..." எண்ணியவளாய் தலையினை திருப்பியவள் கண்டது, கட்டிலின் ஓரம் நின்றிருந்த அதே பெண்ணை.

ஆம், காலையில் வாசலில் காலடி எடுத்து வைக்கும்போது பெருத்த வயிற்றோடு கண்களில் நீர் ஒழுக சோகத்தோடு நின்றிருந்த அதே பெண் தான் அவள்.

இம்முறை அவளை நோக்கி கால்களை எட்டி வைத்து நடந்தவள் அரவம் கேட்டுத் திரும்பிய மகிழவன், யாழினி அவளை நெருங்குவதற்கு முன் அவளுக்கு இடையே வந்து நின்றான்.

"வந்திட்டியா? நான் காலம நடந்ததை வைச்சு வரமாட்டாய் எண்டு நினைச்சன். அப்போ நான் உன்னை வேண்டாம் என்டு சொல்லீட்டன் என்ட கோபத்தில தானே விளையாடினி. இப்ப உன்ர கோபம் எல்லாம் போட்டுது தானே? இனி எங்கட வாழ்க்கையைச் சந்தோசமா தொடங்கலாம் தானே?" காலையில் நடந்த நிகழ்வுகளால் முதலிரவு என்பது தமக்குள் நடக்காது என்று முடிவே செய்திருந்தவனுக்கும், இது பெரும் ஆச்சரியம் தானே! அதனால் தான் தன் சந்தேகத்தை வினவினான்.

கண்டுகொள்ளவில்லை அவள். அவள் கவனம் முழுவதும் அவன் பின்னால் நின்றிருந்தவளிடமே இருந்தது. ஓர் ஆணின் அறையில், அதுவும் அவர்களுக்கு இன்று முதலிரவு என்று தெரிந்தும், ஒரு பெண் அங்கு நிற்கின்றாள் என்றால் அவளை ஆராயத்தானே தோன்றும். யாழினியும் அதைத்தான் செய்தாள். அவனைக் கடந்த அவளது ஆராயும் கூரியப் பார்வையில் எதைப் பார்க்கிறாள் என்று திரும்பிப் பார்த்தவன்,

"அங்க என்ன பார்க்கிறாய் யாழி?" என்றவன் புருவங்களிலும் வினா. பதிலில்லை. எப்படி வரும்? சித்தம் முழுவதும் அந்தப் பெண் அபகரித்துக் கொண்டாளே! அவளிடம் சிறு அசைவுகூட இல்லை என்றதும் முன் நின்றவள் தோள்கள் இரண்டையும் பற்றி உலுக்கினான்.

அவனது செயலில் சுயத்துக்கு வந்தவள், என்ன என்பதாய் அவனைக் காண,

"என்ர கதையை காதிலேயே வாங்காம அங்க என்ன பாத்தனி?"

அவன் கேட்டதும் தான், தான் கண்ட பெண் உருவம் உண்மைதானோ எனத் தெளிவுபடுத்த, மீண்டும் அவள் நின்ற திசை திரும்பியவள் கண்களுக்கு அவள் தெரியவே இல்லை. அங்கும் இங்கும் அந்தப் பெண்ணை தேடி விழிகளை சுழற்றியவளிடம் அவள் கண்ணாமூச்சி ஆட நினைத்தாள் போல. ஏமாற்றமாய் அவன் புறம் பார்வையை மாற்றியவள்,

"என்ன?" என்றாள்.

"இல்லை, அம்மா இண்டைக்கு எங்களுக்கு என்ன நாள் என்டு சொல்லித்தானே அனுப்பினா?" என அவளை மேலிருந்து ரசிக்க ஆரம்பித்தவன் மேல் கட்டிலிருந்த தலகணையைத் தூக்கி எறிந்தவள்,

"உங்கட அம்மா சொல்லுற எல்லாத்தையும் செய்யிறதுக்கு, நான் ஒன்டும் வே..." ஏதோ சொல்ல வந்தவள், இடையில் சுதாரித்து,

"கொத்தடிமை இல்லை. அதோட நீங்க சொல்லுறதை நான் செய்ய வரேல. நான் சொல்லுறதை உங்கள் எல்லாரையும் செய்ய வைக்க வந்திருக்கிறன்." என்றாள் ஆணவமாய்.

"நீ என்ன சொல்லுறாய்? விடியலில இருந்து நீ செய்யிறது எல்லாம் எங்களை ஏதோ கஷ்டப்படுத்தோணும் என்டு செய்யிற மாதிரி இருக்கு. உனக்கு அப்பிடி எங்களில என்ன கோபம்?" என்றான் இவளது செயலில் இயலாமையுடன். பின்னே காரணமே இல்லாது இவ்வாறு செய்தால் என்னவென்று நினைப்பது?

"கோபமாே... வெறி... உங்களை ஒருத்தரையும் விட்டு வைக்காம கொல்லோணும் என்டுற வெறி. ஆனா அதைச் செய்தா, நிமிசத்தில் உயிர் போயிடும். போகக்கூடாது. அவ்வளவு வேளைக்கு உங்கட உயிர் போக நானும் விடமாட்டன். அணு அணுவா போகோணும். எங்களை விட்டிடு என்டு உன்ர குடும்பமும் நீயும் கெஞ்சோணும். அப்பத்தான், என்ர மனசில இருக்கிற ரணத்துக்குக் கொஞ்சமாவது நியாயம் செய்ததா இருக்கும். விடமாட்டன். என்ர ரணம் ஆறுற வரைக்கும் உங்களை ஆரையும் விடவே மாட்டேன்." என்றாள் இதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆத்திரத்தையும் வெளிக்காட்டி.

"நீ என்ன சொல்லுறாய்? நீ இந்தளவுக்குக் கோபப்பட நாங்கள் அப்பிடி உனக்கு என்ன செய்திட்டம்?"

"எதுவும் செய்யேல... எதுவும் செய்யேல?" சந்திரமுகி யோதிகாவை விடக் கண்கள் பயங்கரமாக விரிந்தது. அதைக் கண்டு சற்றே நடுங்கித்தான் போனான் மகிழவன்.

"உண்மையாவே எனக்குத் தெரியேல. நீதான் நாங்கள் ஏதோ செய்யக்கூடாத பிழையைச் செய்தா மாதிரி கதைக்கிறாய். எனக்கென்னமோ நீ எங்களைப் பிழையா நினைச்சிட்டியோ என்டு படுது." தன்னிலை விளக்க முயன்றவனைப் பார்த்து உதட்டை ஓரம் இழுத்து வஞ்சமாய் நகைத்தவள்,

"பூனை கண்ண மூடினா உலகம் இருட்டீட்டுது என்டு நினைக்குமாம். சில காரியம் மற்றவைக்கு தெரியாம செய்தா, அது வெளியிலேயே தெரியாது என்ட நினைப்பு" மீண்டும் புரியாது புதிர் போட,

"ஒன்டுமே விளங்கேல.சொல்ல வந்ததைத் தெளிவா சொன்னாத்தானே விளங்கும்" முணுமுணுத்தான்.

"தெளிவா... ம்ம்... அதுக்குத்தானே வந்திருக்கிறன். தெளிவா இல்லை தெள்ளத் தெளிவாயே விளங்கப்படுத்துறன்"

"நீ என்னமோ செய்! ஆனா இண்டைக்கு எங்களுக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயம் நடக்கும் தானே?" அவனுக்கு அவன் பிரச்சினை. அவனது கேள்வி ஏனோ இன்னமும் அவளுக்குள் தீயை மூட்டியது போல. அவனைத் தீப்பார்வை பார்த்தவள்,

"கொஞ்சமும் வெட்கம் இல்ல... யாரா இருந்தாலும் தொங்கப் போட்டு அலையிறது." பற்களுக்குள் நெரிபட்டு வெளிவந்த வார்த்தைகள் இறந்தே போயிருக்கும் அத்தனை அழுத்தம் அதில்.

"நான் ஏன் வெட்கப்படோணும். நீ என்ர..." கூறி முடிக்கவில்லை,

"பொத்திக்கொண்டு போய்ப் படு!" என்றவள், கட்டிலில் கிடந்த பெட்சீட்டையும் தூக்கி அவன் மேல் எறிந்து விட்டு, அவன் படுக்க இடம் கொடுக்காது குறுக்கே படுத்துக்கொண்டாள்.

அவளையே பார்த்தவாறு பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, "என்ன செய்ய நினைக்கிறாய் என்டு தெரியேல. ம்ம்... பார்க்கிறேன்" என்றவன் அலமாரிக்கும், சுவருக்கும் இடையே இருந்த இரண்டாக மடித்து வைக்கக்கூடிய கட்டிலை எடுத்து விரித்தவன் போர்வையை அதில் விரித்துப் படுத்துக்கொண்டான்.

ஆம், கட்டில் தான். அவனுடைய நண்பர்கள் எப்போதாவது ஒரு முறை வருவதுண்டு. அவர்களைத் தன் கட்டிலில் படுக்க வைக்க மாட்டான் மகிழவன். அது அவனுக்குப் பிடிக்காது. அதனாலேயே அந்த அறையினை அடைக்காமல் இருக்க, ஒருவர் மாத்திரமே படுக்கும் அளவிற்கு பிரத்தியேகமாக ஒரு கட்டிலைச் செய்து அலமாரியின் ஓரம் மடித்து வைத்திருந்தான். அது இன்று அவனுக்கு உதவுகிறது.

கட்டிலில் படுத்திருந்தவன் விழிகள், தனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளையே ரசிக்கலானது.

ஆம், என்று அவள் தன் காதலை அவனிடம் சொன்னாளோ அன்றே அவளை ரசித்தவன்தானே அவன். இன்று தனக்கே உரியவள் எனும் போது ரசிக்க மாட்டானா? உண்மையைச் சொல்லப் போனால் அவனுக்கும் காதல் எல்லாம் வரும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அது வருவதற்கும் அவன் மனநிலை சரியாக இருக்க வேண்டுமே! அவன் தான் எல்லாவற்றையும் வெறுத்து சாமியார் போல் வாழப் பழகிக்கொண்டானே! யாழினி மட்டும் அவன் பின்னே சுற்றவில்லை என்றால் அவ்வப்போது அரும்பிய அந்த உணர்வுகூட தோன்றாது தான் போயிருக்கும். முன்னைய நினைவுகளின் தாக்கத்தில் அவளையே பார்த்திருந்தவன்,

'என்னை நல்லாத்தானே காதலிச்சுக் கொண்டிருந்தாள். இப்ப மட்டும் ஏன் முன் ஜென்மப்பகையை வைச்சிருக்கிறவள் கணக்கா எரிஞ்சு விழுறாள்? அப்பிடி இவளுக்கு என்ன செய்தம் நாங்கள்? இதுக்கு முன்னம் இவளைப் பார்த்தது கூட இல்லையே!
விளையாடுறாளோ... இல்லை விளையாடுறவள் ஊர் தூற்ற ஏன் விளையாடோணும்? அம்மாவும் அப்பாவும் தான் பாவம். இவளால அவயலுக்குத் தான் மன உளைச்சல். என்னமோ திட்டத்தோடதான் உள்ள வந்திருக்கிறாள் போல. அதுக்கு நான் விடோணுமே. பார்ப்பம், எவ்வளவு தூரம் போகுது என்டு?' எண்ணிக்கொண்டவன் அறிய வாய்ப்பில்லையே, இனி வர இருக்கும் நாட்கள் நரகம் என்பது எப்படி இருக்கும் என்று யாழினி விளக்கப் போகிறாள் என்பதை.


*****
 

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
5
0
1
Chennai
அத்தியாயம் 5


கண்ணீர் மல்ல, பலத்த சிந்தையில் அமர்ந்திருந்தவர் கட்டிலில் வந்து அமர்ந்தார் சோபனாவின் கணவர் ஜெயரட்ணம்.

"என்ன சோபி இப்பிடி இடிஞ்சு போய் இருக்கிறாய்? இடிஞ்சு போய் மூலையில் இருக்கற அளவுக்கு என்ன நடந்து போட்டுது? அது சின்னப் பிள்ளை சோபி." என்றவரை வந்த கண்ணீரையும் மீறி கோபமாய் முறைத்தவர்,

"நீங்கள் கதைக்காதீங்கோப்பா... மிச்சர் மாமா மாதிரி, நடக்கிற எல்லாத்தையும் விலத்தி இருந்து பார்த்துக் கொண்டிருந்துட்டு, இப்ப வந்து சமாதானம் செய்யிறீங்கள். பார்க்கிறவ கண்ணுக்கு நான் தான் வில்லி மாதிரி தெரியப்போறன்" என்றார் சோபனா இயலாமையில்.

"என்ன சொல்லுறாய் சோபி? நீ சொல்லுறா மாதிரி நானும் அந்த இடத்தில ஏதாவது கதைச்சிருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா? அது சின்னப் பிள்ளை சோபி... அதிட்ட நீதான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லோணும். ஆம்பிளை உள்ள பூந்தா வேற மாதிரி போயிடும். அது வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளை வேற. கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். நாள் ஆக ஆக எல்லாம் விளங்கிக்கொள்ளும்" என்றார் வந்திருந்த மருமகளுக்குச் சாதகமாக.

"ஆரையப்பா சின்னப் பிள்ளை என்டுறீங்கள்? அவள் கதைச்சது எல்லாத்தையும் கேட்டனீங்கள் தானே! எதுவும் தெரியாத மாதிரியா கதைச்சாள்? எதையோ ஒன்ட மனசுக்க வைச்சுக்கொண்டு, என்னமோ எல்லாம் கதைக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு" என்றார் தன் எண்ணத்தில் தோன்றிய சந்தேகத்தை மறைக்காது.

"ஓம் சோபி... நானும் அதை கவனிச்சன். அந்தப் பிள்ளையை இப்பத்தான் எங்களுக்கே தெரியும், அப்பிடி இருக்கேக்க, ஏன் இப்பிடி வஞ்சமா கதைக்குது எண்டு தெரியலயே!" என்றார் அவரும் சோபனா சொன்னதைத் தானும் கவனித்ததை போல.

"என்னமோங்கோ... கடவுள்தான் துணையா இருக்கோணும்" விட்டத்தில் பார்வையைச் செலுத்தி பாரத்தை அவர் மீது திணித்தார்.

"ஆருக்கு சோபி?" என்றார் உதட்டோரத்தில் தோன்றிய புன்னகையினை அடக்கியவாறு ஜெயரட்ணம்.

"என்ன நக்கலே! போங்கோ... போய் அவள் தார அடுத்த செருப்படிக்கு ஆயித்தம் ஆகுங்கோ" எனக் கணவனை முறைத்தவாறு கூறியவர்,

"இரவு சடங்குகள் நிறைய இருக்கேக்க இங்க வந்திட்டார், என்னோட ராத்துத்துக்கு." கணவனுக்குக் கேட்பதுபோல் முணுமுணுத்தவாறு எழுந்த சோபனாவுக்குத்தான் அடுத்து என்ன வில்லங்கத்தை இழுக்கப் போகிறாளோ என்று பயமாக இருந்தது.

கொஞ்சம் பயமாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாது அங்கிருந்த அறைக் கதவுகளில் ஒரு கதவைத் தட்டியவர்,

"யாழினி" என்றார் சற்றே உரத்து.

"ஓம்... வாரன்" குரல் கேட்ட மறுநிமிடம் கதவு திறபட்டதும் எதிரே நின்றவளைக் கண்டதும் ஆச்சரியமாகிப் போனது சோபனாவுக்கு.

உண்மை தான். எதற்காக சோபனா தயங்கித் தயங்கி வந்தாளோ, அதற்கு யாழினியே தயாராக நின்றிருந்தாள்.

இன்று முதலிரவு தானே. கல்யாண சடங்களுக்கு அத்தனை பிரச்சினை செய்தவள் ஆகிற்றே! முதலிரவு என்றால் என்னென்ன பிரச்சினை செய்வாளோ என்ற பயத்தில் தான் வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதைக் கண்டால் ஆச்சரியமாகாதா?

"ஓ... நீயே வெளிக்கிட்டியா? சரி வா, நல்ல நேரம் முடியிறதுக்கிடேல போவம்" மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்தாலும் காரணம் தேடும் அவகாசம் அவருக்கு இல்லை.

மௌனமாய் அவர் அழைப்புக்கு ஒத்திசைத்து அவர் பின்னாலேயே நடந்தவளை ஓர் அறைக் கதவின் முன் நிறுத்தியவர்,

"இதுதான் யாழினி தம்பீன்ர அறை. முன்ன பின்ன தம்பீல ஏதாவது கோபம் இருந்தா மறந்திட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் பாருங்கோ" என்றார் வழக்கமாகப் பெரியவர் சொல்லும் அறிவுரையினைப் போல்.

அதுவரை ஏதேதோ சிந்தையில் இருந்தவளுக்கு, அவர் கூறிய அறிவுரையே எதையோ நினைவு படுத்தியது போல, தரை தொட்ட பார்வையினை மாற்றி அவரை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில் அத்தனை கோபம். எதுவும் பேசாது கதவினைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

இவளுக்காகக் காத்திருக்கவில்லை அவன். ஏதோ சிந்தையில் ஜன்னல் வழி இருண்ட வானத்தையே பார்த்தவாறு நின்றிருந்தவனைக் கண்டுவிட்டு,

"செய்யிறது பூரா அநியாயம். இதில உலகமாகா நடிப்பு வேற..." எண்ணியவளாய் தலையினை திருப்பியவள் கண்டது, கட்டிலின் ஓரம் நின்றிருந்த அதே பெண்ணை.

ஆம், காலையில் வாசலில் காலடி எடுத்து வைக்கும்போது பெருத்த வயிற்றோடு கண்களில் நீர் ஒழுக சோகத்தோடு நின்றிருந்த அதே பெண் தான் அவள்.

இம்முறை அவளை நோக்கி கால்களை எட்டி வைத்து நடந்தவள் அரவம் கேட்டுத் திரும்பிய மகிழவன், யாழினி அவளை நெருங்குவதற்கு முன் அவளுக்கு இடையே வந்து நின்றான்.

"வந்திட்டியா? நான் காலம நடந்ததை வைச்சு வரமாட்டாய் எண்டு நினைச்சன். அப்போ நான் உன்னை வேண்டாம் என்டு சொல்லீட்டன் என்ட கோபத்தில தானே விளையாடினி. இப்ப உன்ர கோபம் எல்லாம் போட்டுது தானே? இனி எங்கட வாழ்க்கையைச் சந்தோசமா தொடங்கலாம் தானே?" காலையில் நடந்த நிகழ்வுகளால் முதலிரவு என்பது தமக்குள் நடக்காது என்று முடிவே செய்திருந்தவனுக்கும், இது பெரும் ஆச்சரியம் தானே! அதனால் தான் தன் சந்தேகத்தை வினவினான்.

கண்டுகொள்ளவில்லை அவள். அவள் கவனம் முழுவதும் அவன் பின்னால் நின்றிருந்தவளிடமே இருந்தது. ஓர் ஆணின் அறையில், அதுவும் அவர்களுக்கு இன்று முதலிரவு என்று தெரிந்தும், ஒரு பெண் அங்கு நிற்கின்றாள் என்றால் அவளை ஆராயத்தானே தோன்றும். யாழினியும் அதைத்தான் செய்தாள். அவனைக் கடந்த அவளது ஆராயும் கூரியப் பார்வையில் எதைப் பார்க்கிறாள் என்று திரும்பிப் பார்த்தவன்,

"அங்க என்ன பார்க்கிறாய் யாழி?" என்றவன் புருவங்களிலும் வினா. பதிலில்லை. எப்படி வரும்? சித்தம் முழுவதும் அந்தப் பெண் அபகரித்துக் கொண்டாளே! அவளிடம் சிறு அசைவுகூட இல்லை என்றதும் முன் நின்றவள் தோள்கள் இரண்டையும் பற்றி உலுக்கினான்.

அவனது செயலில் சுயத்துக்கு வந்தவள், என்ன என்பதாய் அவனைக் காண,

"என்ர கதையை காதிலேயே வாங்காம அங்க என்ன பாத்தனி?"

அவன் கேட்டதும் தான், தான் கண்ட பெண் உருவம் உண்மைதானோ எனத் தெளிவுபடுத்த, மீண்டும் அவள் நின்ற திசை திரும்பியவள் கண்களுக்கு அவள் தெரியவே இல்லை. அங்கும் இங்கும் அந்தப் பெண்ணை தேடி விழிகளை சுழற்றியவளிடம் அவள் கண்ணாமூச்சி ஆட நினைத்தாள் போல. ஏமாற்றமாய் அவன் புறம் பார்வையை மாற்றியவள்,

"என்ன?" என்றாள்.

"இல்லை, அம்மா இண்டைக்கு எங்களுக்கு என்ன நாள் என்டு சொல்லித்தானே அனுப்பினா?" என அவளை மேலிருந்து ரசிக்க ஆரம்பித்தவன் மேல் கட்டிலிருந்த தலகணையைத் தூக்கி எறிந்தவள்,

"உங்கட அம்மா சொல்லுற எல்லாத்தையும் செய்யிறதுக்கு, நான் ஒன்டும் வே..." ஏதோ சொல்ல வந்தவள், இடையில் சுதாரித்து,

"கொத்தடிமை இல்லை. அதோட நீங்க சொல்லுறதை நான் செய்ய வரேல. நான் சொல்லுறதை உங்கள் எல்லாரையும் செய்ய வைக்க வந்திருக்கிறன்." என்றாள் ஆணவமாய்.

"நீ என்ன சொல்லுறாய்? விடியலில இருந்து நீ செய்யிறது எல்லாம் எங்களை ஏதோ கஷ்டப்படுத்தோணும் என்டு செய்யிற மாதிரி இருக்கு. உனக்கு அப்பிடி எங்களில என்ன கோபம்?" என்றான் இவளது செயலில் இயலாமையுடன். பின்னே காரணமே இல்லாது இவ்வாறு செய்தால் என்னவென்று நினைப்பது?

"கோபமாே... வெறி... உங்களை ஒருத்தரையும் விட்டு வைக்காம கொல்லோணும் என்டுற வெறி. ஆனா அதைச் செய்தா, நிமிசத்தில் உயிர் போயிடும். போகக்கூடாது. அவ்வளவு வேளைக்கு உங்கட உயிர் போக நானும் விடமாட்டன். அணு அணுவா போகோணும். எங்களை விட்டிடு என்டு உன்ர குடும்பமும் நீயும் கெஞ்சோணும். அப்பத்தான், என்ர மனசில இருக்கிற ரணத்துக்குக் கொஞ்சமாவது நியாயம் செய்ததா இருக்கும். விடமாட்டன். என்ர ரணம் ஆறுற வரைக்கும் உங்களை ஆரையும் விடவே மாட்டேன்." என்றாள் இதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆத்திரத்தையும் வெளிக்காட்டி.

"நீ என்ன சொல்லுறாய்? நீ இந்தளவுக்குக் கோபப்பட நாங்கள் அப்பிடி உனக்கு என்ன செய்திட்டம்?"

"எதுவும் செய்யேல... எதுவும் செய்யேல?" சந்திரமுகி யோதிகாவை விடக் கண்கள் பயங்கரமாக விரிந்தது. அதைக் கண்டு சற்றே நடுங்கித்தான் போனான் மகிழவன்.

"உண்மையாவே எனக்குத் தெரியேல. நீதான் நாங்கள் ஏதோ செய்யக்கூடாத பிழையைச் செய்தா மாதிரி கதைக்கிறாய். எனக்கென்னமோ நீ எங்களைப் பிழையா நினைச்சிட்டியோ என்டு படுது." தன்னிலை விளக்க முயன்றவனைப் பார்த்து உதட்டை ஓரம் இழுத்து வஞ்சமாய் நகைத்தவள்,

"பூனை கண்ண மூடினா உலகம் இருட்டீட்டுது என்டு நினைக்குமாம். சில காரியம் மற்றவைக்கு தெரியாம செய்தா, அது வெளியிலேயே தெரியாது என்ட நினைப்பு" மீண்டும் புரியாது புதிர் போட,

"ஒன்டுமே விளங்கேல.சொல்ல வந்ததைத் தெளிவா சொன்னாத்தானே விளங்கும்" முணுமுணுத்தான்.

"தெளிவா... ம்ம்... அதுக்குத்தானே வந்திருக்கிறன். தெளிவா இல்லை தெள்ளத் தெளிவாயே விளங்கப்படுத்துறன்"

"நீ என்னமோ செய்! ஆனா இண்டைக்கு எங்களுக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயம் நடக்கும் தானே?" அவனுக்கு அவன் பிரச்சினை. அவனது கேள்வி ஏனோ இன்னமும் அவளுக்குள் தீயை மூட்டியது போல. அவனைத் தீப்பார்வை பார்த்தவள்,

"கொஞ்சமும் வெட்கம் இல்ல... யாரா இருந்தாலும் தொங்கப் போட்டு அலையிறது." பற்களுக்குள் நெரிபட்டு வெளிவந்த வார்த்தைகள் இறந்தே போயிருக்கும் அத்தனை அழுத்தம் அதில்.

"நான் ஏன் வெட்கப்படோணும். நீ என்ர..." கூறி முடிக்கவில்லை,

"பொத்திக்கொண்டு போய்ப் படு!" என்றவள், கட்டிலில் கிடந்த பெட்சீட்டையும் தூக்கி அவன் மேல் எறிந்து விட்டு, அவன் படுக்க இடம் கொடுக்காது குறுக்கே படுத்துக்கொண்டாள்.

அவளையே பார்த்தவாறு பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, "என்ன செய்ய நினைக்கிறாய் என்டு தெரியேல. ம்ம்... பார்க்கிறேன்" என்றவன் அலமாரிக்கும், சுவருக்கும் இடையே இருந்த இரண்டாக மடித்து வைக்கக்கூடிய கட்டிலை எடுத்து விரித்தவன் போர்வையை அதில் விரித்துப் படுத்துக்கொண்டான்.

ஆம், கட்டில் தான். அவனுடைய நண்பர்கள் எப்போதாவது ஒரு முறை வருவதுண்டு. அவர்களைத் தன் கட்டிலில் படுக்க வைக்க மாட்டான் மகிழவன். அது அவனுக்குப் பிடிக்காது. அதனாலேயே அந்த அறையினை அடைக்காமல் இருக்க, ஒருவர் மாத்திரமே படுக்கும் அளவிற்கு பிரத்தியேகமாக ஒரு கட்டிலைச் செய்து அலமாரியின் ஓரம் மடித்து வைத்திருந்தான். அது இன்று அவனுக்கு உதவுகிறது.

கட்டிலில் படுத்திருந்தவன் விழிகள், தனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளையே ரசிக்கலானது.

ஆம், என்று அவள் தன் காதலை அவனிடம் சொன்னாளோ அன்றே அவளை ரசித்தவன்தானே அவன். இன்று தனக்கே உரியவள் எனும் போது ரசிக்க மாட்டானா? உண்மையைச் சொல்லப் போனால் அவனுக்கும் காதல் எல்லாம் வரும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அது வருவதற்கும் அவன் மனநிலை சரியாக இருக்க வேண்டுமே! அவன் தான் எல்லாவற்றையும் வெறுத்து சாமியார் போல் வாழப் பழகிக்கொண்டானே! யாழினி மட்டும் அவன் பின்னே சுற்றவில்லை என்றால் அவ்வப்போது அரும்பிய அந்த உணர்வுகூட தோன்றாது தான் போயிருக்கும். முன்னைய நினைவுகளின் தாக்கத்தில் அவளையே பார்த்திருந்தவன்,

'என்னை நல்லாத்தானே காதலிச்சுக் கொண்டிருந்தாள். இப்ப மட்டும் ஏன் முன் ஜென்மப்பகையை வைச்சிருக்கிறவள் கணக்கா எரிஞ்சு விழுறாள்? அப்பிடி இவளுக்கு என்ன செய்தம் நாங்கள்? இதுக்கு முன்னம் இவளைப் பார்த்தது கூட இல்லையே!
விளையாடுறாளோ... இல்லை விளையாடுறவள் ஊர் தூற்ற ஏன் விளையாடோணும்? அம்மாவும் அப்பாவும் தான் பாவம். இவளால அவயலுக்குத் தான் மன உளைச்சல். என்னமோ திட்டத்தோடதான் உள்ள வந்திருக்கிறாள் போல. அதுக்கு நான் விடோணுமே. பார்ப்பம், எவ்வளவு தூரம் போகுது என்டு?' எண்ணிக்கொண்டவன் அறிய வாய்ப்பில்லையே, இனி வர இருக்கும் நாட்கள் நரகம் என்பது எப்படி இருக்கும் என்று யாழினி விளக்கப் போகிறாள் என்பதை.


*****
என்ன இந்த பொண்ணு இப்படி போட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணுது, நான் மகிழனுக்கு தான், ஆதரவு கொடி துக்குவேன், துரத்தி கல்யாணம் பண்ணிட்டு, இப்படி வம்பு பண்ணா என்ன அர்த்தம்😡