• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. அசுரதாரா

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
சும்மா சொல்லவா வேண்டும்? உயர்தரப்பிரிவில் மனைப்பொருளியல் எடுத்தவள் ஆயிற்றே. விதம் விதமான சமையலை செய்து அசத்தினாள். அவள் நெடுமாறன் என அழைப்பவனும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவள் தயவால் நல்ல சாப்பாட்டினை உண்ண ஆரம்பித்தான்.

என்ன தாரவுக்கு குறை என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் வீட்டிலேயே அடைந்து கிடப்பது தான் அலுப்புத் தட்டியது. டீவியையும் எவ்வளவு நேரம் தான் பார்ப்பது. அவனும் அவளைப் போல் வீட்டில் தான் இருக்கிறான், ஆனால் ஒரு வார்த்தை வாயிலிருந்து உதிர்க்க மாட்டான். ஒரு நாளில் எத்தனை மணத்தியாலம் அந்த மடிக்கணனியோடு இருப்பானோ! அதை அந்த கை விரலில் தேய்ந்த ரேகைகள் தான் அறியும். அப்படி அதில் என்ன தான் செய்வானோ?

அதை விட்டால் சிறிது நேரம் டீவி பார்ப்பான். அதுவும் ஆதித்தியா சனல் தான் ஓடும்.

பார்த்த கொமடியை எப்படித்தான் திருப்பத் திரும்ப பார்க முடிகிறதோ!

மியூசிக் சனலில் ஓடிக்கொண்டிருக்க டீவியின் முன்பு இருந்தவளை பொருட்டாகவே மதியாது ரிமோட்டினை எடுத்து சனலினை மாத்தியவனை திரும்பி முறைத்தவள் முறைப்பை அவன் கண்டு காெள்ள வேண்டுமே. அவள் புறம் திரும்பவே இல்லை. பிடிக்கவில்லை அவளுக்கு. அதை அவனிடம் கூறினால் அதற்கும் முறைப்பான். 'எதற்கு வம்பு' என நினைத்தவள், எழுந்து தன் அறை பக்கம் சென்றாள்.

அறைக்கு வந்தவளுக்கு பாெழுதே போகவில்லை. வெளியில் செல்லலாம் என்றால், பெரிதாக இடமும் தெரியாது. சித்ரா வேறு தேவையற்று துணை இல்லாது வெளியே செல்லாதே! இது உன் ஊர் போல எல்லாம் இல்லை என்று எச்சரித்து சென்றிருக்கிறாள். அதை மீறி செல்வதற்கும் பயம் அவளுக்கு.

கட்டிலில் கிடந்து புரண்டு புரண்டு பார்த்தளுக்கு, நித்திராதேவி இரங்குவதாக இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

"இன்னும் இந்த வீீட்டில எத்தின நாளைக்கு இருப்பன். கொஞ்ச நாள்ல வெளிக்கிட போறன். என்ர நினைவா ஏதாவது இந்த வீட்டில விட்டுட்டு போகோணும். ஏன் இந்த சுவர்ல படம் கீறி கலர் அடிக்க கூடாது. ஒம் அது தான் நிதந்தரமா இருக்கும். ஆனா இந்த தேவாங்கு சம்மதிப்பானா..? நான் இருக்கேக்க இந்த அறைக்கு அவன் எங்க வரப்போறான்." எண்ணியவள் படம் வரைய தயாரானாள்.

முடிவு எடுத்தால் சரியா? அதற்கான பொருட்கள் வேண்டாமா?
"இவனிட்ட கேப்பமோ.. வேண்டாம் கேட்டா உள்ளதை சொல்ல வேண்டி வரும். இந்த அறைக்குள்ள தான் நிறைய சாமான் இருக்கே! கீறுறதுக்கு தேவையான சாமான் இல்லாமலா போக போகுது?" தன்னைத்தானே கேட்டபடி, அங்கிருந்த ஒவ்வொரு கபேட்டாக தேடிப் பார்த்தவள் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை.

"இது என்னடா சோதனை...? ஒரு பென்சில் கூட அம்புட மாட்டன் என்டுதே" தேடி ஓய்ந்து போனவளாய், இடுப்பில் கை புலம்பியவள் கண்களில் மேலே பொருத்தப்பட்டிருந்த சின்னச்சின்ன கபேட்டுகள் தெரிய,

"அதுக்க இருக்குமோ! முடிவு எடுத்தாச்சு. கிடைக்கிற வரைக்கும் தேடுவம்." அருகில் இருந்த கதிரையை இழுத்து அதில் ஏறி ஒவ்வொரு கபேட்டாக தேடினாள். அவள் தேடும் எதிலும் எதுவேமே இல்லை. இறுதியாக இருக்கும் கபேட்டிலாவது இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் காெண்டு திறந்தவள் மீது தொம் என்று வந்து விழுந்தது ஏதோ ஒன்று.

"அச்சோ அம்மா..." நிதானம் தவறி கதிரையில் இருந்து கீழே விழுந்தவள், அடி பட்டு விட்டது என்று பார்க்கவே இல்லை. விழுந்த வேகத்தை விட, இரு மடங்கு வேகமாக எழுந்தவள், அது எங்கே என்று கூட பார்க்காது, வெளியே ஓடி வந்தவளது கால்களானது பதற, அவன் அமர்ந்திருந்த செட்டியில் ஏறி நின்றவாறு தனது அறையை பார்த்தாள்.

திடீரென்று இவ்வாறு நடந்து கொள்பவள் செயல் அவனுக்கு விளங்கவில்லை. அதோடு இப்படியான செயல்களும் அவனுக்கு பிடிக்காது. உண்மை தானே இருக்கும் இடத்தை கால்களால் மிதித்தால் அருவெருப்பாக இருக்காதா.? அதிலும் அவன் சுத்தத்தின் மறு உருவம் வேறு. வேலைக்கு என்று ஆட்கள் வைக்காது விட்டாலுடும், தானே வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பான். அவன் முன்னே அப்படி நடந்தால்.

"ஏய் என்ன செய்யிறாய்" என்றான் கோபமாக.

"அங்க... அங்க..." என்று அந்த அறையினை காட்டினாலே தவிர வேறு வார்த்தை வரவில்லை அவளிடத்தில் இருந்து. அவளது நடுக்கமும் காட்டிய அறையையும் பார்த்தவன்,

"அங்க என்ன?" என்றவாறு எழுந்தவனுக்கு, அந்த அரை நொடியில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போனது. இருந்தும் அதை உறுதி செய்வதற்கு எழுந்து அந்த அறைக்குள் விரைந்தவன் கண்களில், கவிழ்ந்திருந்த கதிரையையமு் திறந்திருந்த கபேட்டையும் தவிர வேறு எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. போன வேகத்தில் திரம்பி வந்தவன்,

"முதல்ல செட்டியில இருந்து கீழ இறங்கு." என்றான் அந்த வரவேற்ப்பறையே அதிர்வதைப்போல்.

"மாட்டன்.... நான் இறங்கினா அது வந்துடும்" என குழந்தை பிள்ளையாட்டம் இறங்க அவள் மறுக்க.

"எது வரும்... நீ பயப்பிடுற மாதிரி அங்க ஒன்டுமில்ல... என்னை கோபப்படுத்தாம இறங்கு" என்றான் மீண்டும் தனது கணீர் குரலில்.

"வடிவா பாத்தனீங்களா? அங்க உண்மையா ஒன்டுமில்ல" என அவனை நம்பாது வினவ.

"உனக்கு என்ன விசரே? நான் இங்க இருக்கேக்க, என்னை தாண்டி உள்ளுக்க ஆரு வருவினம் என்டு சொல்லுறாய்?" அவனுக்கு என்ன தெரியும் இவள் எதற்காக இப்படி நடுங்குகிறாள் என்று.

"உங்களுக்கு தான் விசர். உங்களிட்ட அனுமதி வாங்கிக்கொண்டு வர உங்கட சொந்த்காறர் தானே அது!" என அந்த நடுக்கத்தலும் எதிர் கேள்வி கேட்டாள்.

"அனுமதி கேக்காம வருமா? நீ எதை சொல்லுறாய்?" கூரிய பார்வையாேடு வினவியனுக்கு அஃறிணையில் அவள் கூறியது இப்போது தான் உறைத்தது.

"ஓம்! பொட்டுப்பூச்சியும் உங்களிட்ட கேட்டுத்தான் வீட்டுக்குள்ள வருமோ" என்றாள் நக்கலாய்.

"பொட்டுப்பூச்சிக்கே இப்பிடி பயப்பிடுறாய்" வாய் கோணலாகிப் போனது.

"வாய் ஏன் வட்டுக்கோட்டை போகுது. ஏன் அதுக்கு பயப்பிட்டா என்ன? அதுவும் ஒரு உயிர் தானே! அதுக்கும் பல்லு இருக்குத்தானே! அது கடிச்சா உடம்பு அங்கங்க வீங்கும். அதோட மட்டும் நிக்காது. ஒவ்வொரு அமாவசைக்கும் உடம்ப இறுக்கி பிடிக்கும் தெரியுமா?" என்றாள்.

"எது பொட்டுப்பூச்சி கடிச்சு உடம்பு வீங்குது? அப்ப சிலந்தி கடிச்சா?"

"சிலந்தி தான் இது. சின்னதா இருக்கிறதால பொட்டுபூச்சி என்டுறம்."

"க்ஹும்..." என்று முகத்தை திருப்பியவனுக்கு அதற்குமேல் அவளுடன் பேச மனம் இடந்தரவில்லை. பின்னே குழந்தை கூட அறியும், பொட்டுப்பூச்சிக்கும் சிலந்திப்பூச்சிக்கும் உள்ள வேற்றுமை. அதை விளங்கப்படுத்த வேண்டும் என்று அவனுக்கு என்ன நிர்பந்தம்.

"ஏன் இப்ப உப்புடி முகத்த திருப்புறீங்கள்? நீங்கள் பெரிய பயில்வான் என்டு எல்லாருக்கும் தெரியும். அதான் உடம்பு நெருப்பு குச்சி போல இருக்கு." என்றவள் நக்கலில் அவளை முறைத்தவாறு நெருங்கியவன், அவளை நோக்கி கைகளை நீட்டினான்.

எங்கே தன்னை ஒல்லிக்குச்சி என்று சொல்லாமல் சொல்லி நக்கல் செய்ததால் தான் தன்னை அடிக்க வருகிறானோ என்று கண்களை இறுக மூடியவாறு முகத்தை திருப்பியவள், அடி விழவில்லை என்றதும், மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.

"அவன் கையில் அவள் மேல் விழுந்த பொட்டுப்பூச்சியானதூ நூல் விட்டு இறங்குவது தெரிய.

"அய்யோ.. இது எப்புடி உங்கட கையில?" என முழியை பிதுக்கியவள்,

"அய்யோ கடிக்க போகுது. அதை கீழ போடுங்கோ." என்றாள் செட்டியில் நின்று துள்ளியவாறு பதறியடித்து.

அவளை ஒரு மாதரியாக பார்த்தவாறு, ஜன்னல் கதவை திறந்து அதை தூக்கி எறிந்தவன்,

"நீ தான் இதை உன்ர தோள்ள வைச்சிருந்தாய். தாேளிலயே வைச்சிருந்து பயப்படுற முதல் ஆள் நீதான். வீடு குப்பையா இருந்தா இதில்ல சிலந்தியும் கூடு கட்டும். திண்டு திண்டுட்டு சும்மா இருக்காம, அப்பப்ப தூசு தட்டி கூட்டு" என்றவன் சடசடவென ரூமுக்குள் நுழைந்தான்.

"இவன் ஒருத்தன் சாமத்திய பட்ட புள்ளை மாதிரி உடன அறைக்க போய் கதவை மூடுவான்." முனுமுனுத்தவள்,

'உண்மை தானே அவன் சொல்லுறா மாதிரி சும்மா தானே இருக்கிறம். தூசு தட்டி கூட்டினா என்ன? ஆனா இப்ப ஏலாது. நாளைக்கு விடிய கூட்டேக்க எல்லா இடத்தையும் ஒருக்கா தூசு தட்டினா தான், இந்த பூச்சியள் வராது. இல்லாட்டிக்கு இந்த வீட்ட விட்டு போறதுக்குள்ள என்னை சாக்காட்டிடும்.' என்றவளும் தன் திட்டத்தை சற்றே ஒத்தி வைத்தாள்.

விடியலானது சில மணித்தியாலங்களை தின்று தீர்த்திருந்தது. எல்லா அறையையும் தூசு தட்டி ஒதுக்கியவள், வரவேற்பு அறையினையும் தூசு தட்டுவோம் என்று தூசு தட்டியவளுக்கு வாசல் கதவின் மேல் புறத்தில் தூசு தட்டும் போது, அலங்காரத்திற்கு தொங்க விட்டிருந்த அந்த பிளாஸ்டிக் கொடியானது பிய்ந்து விழுந்தது.

அவசரமாய் பார்வையினை திருப்பி அவன் கண்டு விட்டானா என ஆராய்ந்தாள். எங்க அவன் காண்பது. அவன்தான் அறையனை விட்டே இன்னும் வரவில்லையே!

"அப்பாடா!" நெஞ்சில் கை வைத்து சாந்தமானவள், அவன் வருவதற்குள் அதை சரி செய்து விடலாம் என்று, அருகே இருந்த ஸ்ரூலினை எடுத்து போட்டவள், அதில் ஏறி கொடியினை சரி செய்வோன் என்று பொருத்தப் போன நேரம் தான். சட்டென கதவு திறபட்டது. அந்தரத்தில் நின்றவளும் நிதானம் தவறி விழப்போக, வாகாய் ஏந்திக்காெண்டது புதிதாய் இரு கரம்