இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
அந்த முன் மாலை பொழுதில் மலையை வெறித்தபடி ரிஷிபாலா நின்று கொண்டு இருக்க,... ம்மா என்ன பண்ணுற இங்க?
சும்மா பட்டு… ரொம்ப நாளா வரனும் ன்னு நினைச்சேன் அதான்.
ஓஓஓ அதுக்கு தான் இந்த நாளை செலக்ட் பண்ணீங்களோ?
அப்படி இல்லடா..
வேற எப்படி?
அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா?
என் அறிவை நினைத்து சுகமா?
இந்த மலை முகடு வாழ்வை மாற்றியதில் சுகமா ?
நம்பிக்கை தொலைந்தது சுகமா?
இப்படி பாட்டு பாடிட்டு இருக்கீங்களா இந்த இடத்துல என்று அவள் எரிந்து விழ..
பட்டு…
பார்க்க பார்க்க எரியுது தயவு செஞ்சு வந்துடுங்க இதுக்கு மேல இங்க இருந்தீங்க அப்புறம் இத்தனை வருஷமா நான் அமைதியா இருக்கிறதுக்கு அர்த்தமே இல்லாம போய்டும்.
ரிஷிபாலா, “போதும் நிறுத்து வாகினி”…
வாகினி இல்ல நிமா என்றாள் அவள்…
வாகி…
ம்மா… ப்ளீஸ் வாங்க போகலாம் என்றதும் அவளிடமிருந்து சற்று தள்ளி நின்று இருந்த பாதுகாவலர்கள் உடனே வண்டியை எடுக்கவும், வந்து வண்டியில் அமர்ந்தார்கள் நிமாவாகினியும், ரிஷி பாலாவும்.
அந்த வண்டி நிசப்தமாக இருந்தது அந்த மாலைப்பொழுதில் அதுவும் மழை பொழிவை எதிர்நோக்கி இருக்கும் அந்த காலகட்டத்தில் அந்த காற்றின் சப்தத்தை தவிர அந்த வண்டிக்குள் எதுவும் கேட்கவில்லை..
மேம் காத்து அதிகமாக இருக்கு ஜன்னல்…
இருக்கட்டும் ரவி…
மேம் உங்களுக்கு ஏற்கனவே உடம்பு முடியல…
ரவி என்ற அதட்டலில் அருகில் இருந்த வேந்தன் சிரித்து விட..
டேய் என்றான் ரவி…
போதும் டா அவ தான் கத்துறா இல்ல என்று முடிக்கவும் சீட்டை எட்டி உதைத்து இருந்தாள் நிமா..
ரிஷி பாலா, "அடியேய் உன் கோபத்துக்கு அளவு இல்லையா… ம்மா ஒழுங்கா வாயை மூடிட்டு இரு, இருக்கிற பிரச்சினையில் நீ வேற கடுப்பை கிளப்பாத என்றாள் நிமா
ஆமா நாங்க தான் கடுப்பை கிளப்புறோம் . நீ தான் எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு பண்ணிட்டு இருக்க..
என்ன, என்ன நான் என்ன பண்ணேன் என்று நிமா கத்த போதும், போதும் எதுக்கு கத்துற? நீ இருக்க பொஷிஷன் என்ன பண்ணிட்டு இருக்கிறது என்ன? நான் என்ன பண்ணேன் ம்மா என்று பின்னே இருந்த பரத்தை பார்க்க…அவனை எதுக்கு பார்க்கிற அவன் சொல்லி தான் எனக்கு தெரியனும் ன்னு இல்ல..அதான் ஊரே பேசுதே, நீ என்ன வாழ்க்கையை வியாபாரம் ன்னு நினைச்சுட்டு இருக்கியா என்று ரிஷி பாலா பேச பேச கையை முறுக்கியவள்…
ஏற்கனவே வியாபாரமா ஆனா வாழ்க்கை தானே இதுல புதுசா என்ன இருக்கு…
பட்டு..
போதும் ம்மா …
பட்டு இது உன் வாழ்க்கை மட்டும் இல்ல இன்னொருத்தவங்க வாழ்க்கையும் அடங்கி இருக்கு…
அடங்கி தான் ஆகனும்… அடங்கலன்னா அடக்கிடுவேன்…
பரத் சிரிக்க..
டேய் வாயை மூடு..
இல்ல வாகி ரைமிங் டைமிங் ல வந்ததா அதான் சிரிச்சுட்டேன் என்றவனை முறைத்தவள் என்ன ரைமிங் ல வந்துச்சு இருக்கிறதை தானே சொன்னேன். உனக்கு ஏன் டா இந்த வேலை சொன்னதை மட்டும் செஞ்சா போதாதா…
எல்லாத்தையும் சரியா தானே செஞ்சுட்டு இருக்கேன் நீ என்ன என்னைய பார்த்து இப்படி ஒரு
கேள்வி கேட்குற?
கேட்காம நீ தான் பாலாவுக்கு இடது வலது கையாச்சே என்றாள் நிகா..
வாகி நான் பாலாவுக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன், எதுவா இருந்தாலும் சொல்லுவேன் ன்னு அதுக்காக உனக்கு எதிரா செய்வேன்னு சொல்லலையே…
ஓஓஓ அப்ப அப்படி ஒரு எண்ணம் இருக்கா உனக்கு என்றவளை பின்னிருந்து அடித்தவன் ,உன் ஜோக்கை ஓரங்கட்டு அடுத்து என்ன தினமும் மீட்டிங்க்கு கேட்குறாங்க அதுவும் பினாஸ் மினிஸ்டர் மூலமாக என்ன பண்ணலாம்.
அதான் நேரா வரச் சொல்லி இருக்கேனே அப்புறம் என்ன என்று கேலியாக கேட்க..இப்போது கொலைவெறியாய் அவளை முறைத்தது என்னவோ வேந்தன் தான் மிரர் வழியாக அவளை பார்த்தவன் என்னைய காண்டு ஆக்காத வாகி..
என்னடா காண்டு ஆக்கிட்டேன் . உன்னையே பார்க்காத வரை தான் இந்த கண்ணாமூச்சி எல்லாம் இதுவரை உன்னையே வெளி உலகத்திற்கு காட்டாமலே வச்சு இருக்காங்க ஏன் எந்த பிரச்சனையும் உன்னால் வந்தது இல்ல . அது மட்டும் இல்ல உனக்கே உனக்காக ன்னு இருந்த எசிகேஷன் டிபார்ட்மெண்ட் இப்ப இன்னொருத்தன் பிரஷ் பண்ணவும் தான் இப்ப உன்னையே தூக்கி பினாஸ் ல போடனும் ன்னு பிரைமினிஸ்டர் சொல்லிட்டு இருக்காங்க ஏன்னா ஈஸ்ட் மொத்தமும் உன் கன்ட்ரோல் அதுக்கு தான்.
ஏற்கனவே அவங்க ஆந்திரா தமிழ்நாடு இரண்டு இடத்திலையும் அவங்க ஆட்சி தான் இப்ப இந்த பக்கம் எட்டி பார்க்கிறாங்க, அதுவும் உன்னையே வச்சு, எப்படி தான் உன்னைய மோப்பம் பிடிச்சாங்கன்னு தெரியல என்று வேந்தன் படபடவென பொறிய…
ரவி, “ ஒன்னு மட்டும் புரிஞ்சுக்க என்ன ஆனாலும் இந்த விஷயத்துக்கு நீ ஒத்துக்க கூடாது இந்த ஆளுங்கட்சி இல்லன்னா வேற, உன்னையே எல்லா இடத்திலும் வரவேற்பாங்க அதனால் நீ எதுக்கும் தயங்காத..
ம்ம்ம்..
ரிஷி பாலா, “ டேய் நிறுத்துங்கடா ஏற்கனவே அவளை அடக்க முடியல இதுல நீங்க வேற எனக்கு இது சரியா படல நீ முதல்ல இந்த பொஷிஷனை ரிசைன் பண்ணு வாகி, உனக்கு நிறைய பிசினஸ் தான் இருக்கே போபோ சொல்லிட்டு தானே இருக்காங்க அப்புறம் என்ன?
போபோ என்றதும் அவள் முகம் ஒரு பெருமூச்சுடன் கண்மூடி இருக்க..ரிஷி பாலா அவளை சமாதானம் செய்ய தக்க நேரத்தை தேடிக் கொண்டு இருந்தார்.
ரிஷி பாலாவிற்கு இருப்பதோ தன் பிள்ளை செல்வங்கள் மட்டுமே அதை கடைசி வரை பாதுகாக்கவேண்டும் என்று மட்டுமே அவர் இருக்க..ஆனால் காலமோ அவளை வேற பாதைக்கு இழுத்து கொண்டு சென்று இருந்தது..
நிமாவாகினி ரிஷிபாலா அவளின் முழுபெயர். தன் தாயின் பெயரை தான் சர் நேரமாக வைத்து இருந்தாள். அந்த சர் நேம் வைக்க அவள் காலத்தில் கோர்ட் வரை சென்று தான் முடிவுக்கு வந்து இருந்தாள்.
படித்தது என்னவோ ஆடிட்டிங் தான் . போபோ தான், நீ இருக்கிற பிசினஸ் பார்க்க ஆடிட்டிங் படி நம்ம விஷயத்தை நாமளே பார்க்கனும் . இன்னொருத்தன் கையில் தரக் கூடாது என்று எல்லா துறையிலும் ஒவ்வொருத்தரை தயார் செய்து இருந்தார். இப்போது பணபுழக்கத்தை நேரடியாக அவர்கள் தொழிலில் அவர்களின் ஆட்களை கொண்டே செய்ய வேண்டும் என்று தயார் ஆனவள் தான் நிமாவாகினி…
நிமா போபோ சேர்த்த பெயர் வாகினி என்று இருந்த பெயரை நிமாவாகினி என்று மாற்றியவர் போபோ தான்.அவர் காட்டிய வழிகளில் சென்றவள் மிரிக் என்ற பகுதியில் வாழ்ந்த, இனி வாழப்போகிற பழங்குடி இன மக்களுக்கு மொத்த வழிகாட்டியாக மாற்றி இருந்தார் நிமாவாகினியை…
மிரிக் டார்ஜிலிங் ல் உள்ள ஒரு பகுதி அங்கே வளர்ந்து வரும் நகராட்சி, மிரிக்கை மெருகேற்றி கொண்டு இருந்தது. அதை மேலும் மேலும் வளர்த்த தான் போபோ ஒவ்வொரு விஷயமாக முன்னெடுத்தார். அதில் முத்தாக வந்து சேர்ந்தவள் தான் நிமாவாகினி.
ஆரம்பத்தில் யாருடனும் ஒட்டாமல் இருந்த நிமா போபோ காட்டிய அன்பிலும் உலகத்தை தீ போல ஆளவேண்டும் என்று அவள் எண்ணங்களுக்கு தீனி போட தீட்டி கொண்டாள் அவளை. ஈட்டியை விட கூர்மையான அவரின் போக்குகளை நிமாவிற்கு பட்டை தீட்ட ஆரம்பித்து இருந்தார். மிரிக் மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களை மொத்தமாக தன் வசம் ஆக்கினாள், அதோடு நில்லாமல் மேற்குவங்க தொகுதிகள் அனைத்தையும் கட்டி போடும் மொத்த வியாபார இடங்களுக்கும் பொருத்தமான அசைக்கமுடியாத இடத்தில் தொழில் ரீதியாக தன்னை மாற்றினாள். அவளை தாண்டி எதையும் செய்ய முடியாத அளவுக்கு உருவாக்கினார் போபோ.
போபோ… சொல்லு நிமா…
நான் நம்ம தொகுதில நிக்கலாம் ன்னு…
நல்ல விஷயம் எதுக்கு போட்டி என்று போபோ வினவ நேரடியாக அந்த தொகுதியின் எம் எல் ஏ என்றதும் புன்னகைத்தார் தனியா வா இல்ல எதாவது கட்சி….
நம்ம பேச்சை எந்த கட்சி கேட்குதோ அந்த கட்சி வரட்டும் போபோ என்றவள் எழுந்து சென்றுவிட..,இது நல்லதுக்கு இல்ல போபோ நீங்க அவளுக்கு நிறைய இடம் தரீங்க என்றான் ஆதித்யா..
ஆதித்யா , அவளுக்கு தெரியும் எங்க துள்ளும் எங்க அடங்கனும் ன்னு நீ பயப்படாத அவளுக்கு துணையாக இரு…
போபோ…
போடா நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..
பின்ன ஆகாம என்றான் ஆதித்யா..என்ன விஷயம் ஆதித்யா..
……
உன்னையே தான் கேட்கிறேன் என்ன விஷயம் ?
ஒரு பெருமூச்சுடன் போன வாரம் அந்த என்று குறிப்பிட்ட தொழிலதிபரை சொல்லி அவரின் மொத்த லாபநட்டத்தை திருப்பி விட்ட விஷயத்தை சொல்ல..எதுக்கு மாத்தினா நிமா…
அவன் அவன் என்று தயங்க…. சொல்லு ஆதித்யா என்று போபோ சத்தம் தர நிமாவை ஒரு நாள் கேட்டான் என்று சொன்னதும்
நீ அமைதியா வந்துட்ட அப்படித்தானே…
இல்ல போபோ அவனை வேற விதத்தில் பொறட்டி எடுத்துட்டேன். நம்ம நிமா ஆதி, எப்படி நீ அங்கேயே அவனை கொல்லாம வந்த?என்றார் போபோ ஏற்கனவே நிறைய இழந்துட்டோம் போபோ மறுபடி இவளை நான் என்று நா தழுதழுக்க..
இருந்தாலும் எப்படி அவன் அப்படி கேட்கலாம் என்றவர் அப்போது தான் திடீரென்று நிமா அரசியலுக்கு வருவதை பத்தி ஏன் கேட்டாள் என்றே தோன்ற புன்னகையுடன் நிமாவை இதில் மேல் கொண்டு வரவேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் .. இதோ அது இது என்று இந்த ஏழு வருடங்களில் ஆளுங்கட்சியின் முக்கிய மினிஸ்டர்களில் நிமா தான் முதல் அவள் ஒரே இடத்தில் தேங்கி விடாமல் அவள் விரல் நுனியில் வைத்து இருந்தாள அனைவரையும்.
வண்டி நின்ற சத்தத்தில் கண்விழித்தவள் போபோ பற்றி நினைத்ததை எண்ணி கொண்டவள்,ம்மா நான் போபோ வை பார்த்துட்டு வரேன்.
போய்ட்டு வா என்றாள் ரிஷிபாலா..
பரத் நிமாவுடன் செல்ல வேந்தனும் ரவியும் நிமாவை தான் பார்த்து கொண்டு இருந்தனர். ஏன் தொரைங்களுக்கு வாங்கன்னு சொல்லனுமோ… சொல்லனும் தான் என்று இருவரும் கோர்ஸ் பாட..டேய் போதும் டா..
நால்வரும் சிரித்த படி அவளை அணைத்து கொண்டவர்கள் போதும் வாகி இதெல்லாம் எனக்கு மனசு கேட்கல என்று ரவி சொல்ல என்ன பாசமா ? என்றாள் நிமாவாகினி
இருக்க கூடாதா இரண்டு கண்ணும் வேணும் தானே அதுல ஒன்னு மட்டும் நல்ல இருக்கனும் ன்னு நினைக்க மாட்டேன்.
உலகம் அப்படி நினைக்கலையே ரவி எல்லாமே தனக்கு வேணும் தானே காய் நகர்த்தது..
அதுக்காக நீயுமா..
நானும் அந்த உலகத்தில் ஒருத்தி தானே என்றவள் என்ன நான் சொல்லுறது சரி தானே என்று வேந்தன் பரத்தை பார்க்க.
ரவி, "ஆமா அப்படியே இவனுங்க இல்லன்னு சொல்லிட்டாலும் என்றவன் நடங்க என்று நால்வரும் போபோ இருக்கும் வீட்டிற்கு வர ஆதித்யா போபோ இருவரும் வார்த்தையால் சுட்டு பொசுக்கி கொண்டு இருந்தனர்.
தொடரும்