28.நவிலனின் கோதையானவள்
எவ்வளவு நேரம் அம்மு இந்த கழிசடையை பார்த்துட்டு இருப்ப என்ற நவிலனின் குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க..
தூங்கு அம்மு கொஞ்ச நாளா சரியா தூக்கமே இல்ல என்றவன் அவள் கைபிடித்து இழுக்க அவன் அருகில் சரிந்து இருந்தாள் பூம் பனி..
அம்மு…
ம்ம்ம்
என்னடா
ஒன்னு இல்ல நவி என்னால் உங்களுக்கு நிறைய சங்கடம் இல்ல சாரி…
எதுக்குடி சாரி நமக்குள்ள? எந்த விஷயமா இருந்தாலும் அதை நாம தான் பேஸ் பண்ணனும் இதுக்கு எல்லாம் சாரி கேட்பியா… நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் உனக்காக நானும், எனக்காக நீயும் தான் அம்மு எதையும் பெரிசா யோசிச்சுட்டு இருக்காத தூக்கமே இல்லடி வா தூங்கலாம் என்று அவளை இழுத்து அணைத்து கொள்ள அவனுள் மெல்ல அடங்கி உறக்கத்தை தொடர்ந்தாள் பூம்பனி…
இந்த அணைப்பு அவளுக்கு புதிது அல்ல ஆனால் நாளுக்கு நாள் நவிலனுக்கு தான் அணைப்பில் அவன் கட்டுபாடுகள் தளர்ந்து கொண்டே இருந்தது. அதுவும் இன்று மொத்தமாய் அவளுக்கு சில விஷயங்களை சொல்லிவிட்டதால் அவள் தன்னை தளர்த்தி கொள்வாள் என்று அவளை இன்னுமே இறுக்கமாக பிடிக்க…
உறக்கத்தில் இருந்தவளுக்கு இந்த அணைப்பு நவிலனின் உடல்மொழியை சற்றே உணர்த்த…
நவிலன் என்றாள் குழறலாக…
ம்ம்ம்..
சாரி..
எதுக்கு அம்மு…
சாரி என்றாள் மீண்டும் விசும்பலுடன்…
அம்மு…
அன்னைக்கு எங்க போனீங்க அப்பவே வந்து இருந்தா இப்ப இப்படி தடுமாறி இருக்க மாட்டேனே ஏன் வரல… விரும்பின பொண்ணு எங்க இருக்கான்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேட்க..
அம்மு..என்றவனின் குரலில்..
தெரியும் நீங்க என்ன விரும்புறது தெரியும் உங்களை நான் நிறைய முறை பார்த்து இருக்கேன். எனக்கும் என்றவள் அதோடு நிறுத்தி விட…
ஹேய் என்னடி சொல்லுற அப்ப நான் இத்தனை வருஷமா உன்னையே தான் என்றவன் அவள் முகம் நிமிர்த்த..
உண்மையாவா என்று அவன் விழி அசைவில்..
ம்ம்ம் என்றவளின் உடல் மொழியில் அம்மு என்று அவளை இன்னுமே அவனுக்குள் இறுக்க..
வலிக்குது நவி… இப்படியா இறுக்குவீங்க…
வேற எப்படி? எத்தனை வருஷமா காத்துட்டு இருக்கேன் தெரியுமா உன்னோட பேச, கைகோர்த்து நடக்க, நான் விரும்பின பொண்ணை ஆராதிக்க இன்னும் இன்னும் என்று அவளை அணைத்து கொள்ள…
மனதிற்கு இதமாக இருந்தாலும் பயம் மட்டும் அவளை விட்டு அகலவில்லை .. மீண்டும் அவனிடம் பயமா இருக்கு என்றவளை தளர்த்தியவன் என்கிட்டே என்ன பயம் அப்படி என்ன உன்னைய காயப்படுத்திடுவேன்னு நீ நினைக்கிற..
இல்ல அதை நினைக்க நினைக்க.. என்று அவள் முகம் வெளிற…
சரி சரி விடு அதையே நினைக்காத அதுவா நமக்கு எப்ப மனசு லேசாகுதோ அப்ப தன்னால் எல்லா விஷயமும் நடக்க போகுது நீ உன்னையே போட்டு குழப்பிக்க வேண்டாம் தூங்கலாம் வா என்றவன் உறங்க ஆரம்பித்து இருந்தனர்.
இரவெல்லாம் ராணிக்கு உறக்கமே இல்லை யார் அந்த யாழினி எனக்கு தெரியாம, இவளுக்கு ஃபிரண்ட் அப்படின்னா எனக்கு தெரிஞ்சு இருக்குமே…அவளுக்கு எப்படி இவனை தெரியும் அய்யோ என் மண்டை காயுதே நான் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம் ன்னு இருந்தேனே, என்ன பண்ண என்று ராணி உறக்கம் தொலைந்து யோசித்தவள் விடியலில் தான் உறங்கி இருந்தாள்.
காலை ஆறு மணி போல் காபியை கலக்கி கொண்டு வந்த அம்சா இந்தாங்க என்று கார்த்திகேயன் பக்கத்தில் வைத்து விட்டு நகர..
அம்சா…
சொல்லுங்க
ஏன் ஒரு மாதிரி இருக்க..
ஒன்னு இல்லையே நல்லா தான் இருக்கேன்.
இல்லையே உன் முகமே சரியில்லையே…
அதெல்லாம் இல்ல எப்பவும் இருக்க முகம் தான்..
அம்சா உன்னையே நான் அக்கா சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கலாம், ஆனா இத்தனை வருஷ வாழ்க்கையில் உன்னோட ஒவ்வொரு அசைவையும் புரிஞ்சு தெரிஞ்சு வச்சு இருக்கேன். இங்க உட்காரு என்று அருகில் கைபிடித்து அமர்த்தி கொண்டவர்,பிள்ளைங்க ஆர்டர் டி விக்னேஷ் விஷயத்தை சொல்ல கூடாதுன்னு அதுவும் அந்த பொண்ணு, இதுக்கு இதுவரை சம்மதிக்கல அதான் என்று அம்சா ஏன் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக விஷயத்தை சொல்ல…
நான் எதுவும் கேட்கலையேங்க..
நீ கேட்கலன்னாலும் எனக்கு புரியும் நான் அக்கா இருந்ததால் நேத்து சொல்லல இதுல சொல்லவே கூடாது எந்த சூழ்நிலையிலும் ன்னு சொன்னதே நம்ம பொண்ணு தான், அவளுக்கு அவங்க அத்தையை பத்தி தெரியும் தானே அதான்.
இருந்தாலும் இது சரி வருமா அந்த பொண்ணோட வசதி வாய்ப்பு பத்தி இல்ல உங்க அக்கா அந்த பொண்ணை எதுவும் என்று நிறுத்த..
கார்த்திகேயன், “அதுக்கு தான் விக்னேஷ் வெளியே கிளம்புறான் இங்க இருந்தா சரி வராதுன்னு, ஒரு இரண்டு வருஷம் இல்ல நாலு வருஷத்தில் வந்துடுவாங்க.
ப்ளான் எல்லாம் நல்லா தான் இருக்கு இருந்தாலும் என்று அம்சா பார்க்க..
புரியுது அம்சா… நல்லது கெட்டது க்கு நாம இருக்கோம் இல்ல? எதாவதுன்னா நாம கிளம்பி போய் பிள்ளைங்களோட இருப்போம். இங்க தான் பனி கூட அவங்க அத்தை இருக்காங்க இல்ல, நாம கண்டிப்பா இருக்கனும் ன்னு இல்ல, இதை பனியும் புரிஞ்சு ப்பா…
ம்ம்ம்
என்ன யோசனை…
ஒன்னு இல்ல எந்த சந்தோஷமான விஷயமும் நம்ம வீட்டுல நடக்கவே இல்ல விக்னேஷ் கல்யாணமாச்சும் தடபுடலா சந்தோஷமா நடக்கனும் ன்னு எனக்கு ஆசையா இருக்கு
சரி விடு அதை பிள்ளைங்க பேசி முடிவு பண்ணுவாங்க இப்ப யாழினியை பார்க்கனும் பேசனும் புரிஞ்சுக்க வைக்கனும் இந்த பையன் ஆறு வருஷமா காத்துட்டு இருக்கான் என்று கார்த்திகேயன் சொல்ல…
என்னங்க சொல்லுறீங்க ஆறா..
ஆமா அம்சா
அப்ப விக்னேஷ் பூவு கல்யாண விஷயமா பேசிட்டு இருந்தப்பவே …
ஆமா நாங்க எதையும் வெளியே காமிச்சுக்கல எப்பயா இருந்து இருந்தாலும் பனியும் விக்னேஷ் இரண்டு பேரும் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இருந்து இருக்க மாட்டாங்க..
சரி அந்த பொண்ணுகிட்ட நீங்க பேசப் போறீங்களா…
நான் இல்ல பனி தான் பேசனும்
இப்ப அவ இருக்கிற நிலைமையில் என்று அம்சா பார்க்க…
ஆமா அவளை அதுக்காக இப்படியே இருக்கட்டும் விட்டா தான் பிரச்சனை, அடுத்த அடுத்த விஷயங்கள் ல அவ இன்வால்வ் ஆனா தான் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பா நான் ஒரு ஒன்பது மணிக்கு அவளுக்கு பேசலாம் ன்னு இருக்கேன் என்று கார்த்திகேயன் சொன்னதும்,
நேர்ல போகலாமா பூவு அப்பா…
சிரித்தவர் ஓஓஓ போகலாமே…
அப்ப நான் அவளுக்கு பிடிச்சது செய்யுறேன் ஒரு அரைமணி நேரத்தில் கிளம்பலாம் நீங்க மாப்ளைக்கு ஒரு மெஸேஜ் போட்டு விடுங்க என்று அம்சா அவசரமாக அடுக்களைக்குள் சென்று விட.., கார்த்திகேயன் நவிலன் எண்ணிற்கு ஒரு பத்து மணி போல் வருவதாக சொல்லி மெஸேஜ் போட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட..
இங்கே தூக்கத்தில் இருந்த நவிலனின் போன் சற்றே ஓசை எழுப்ப..
ப்ச் என்றவன் மீண்டும் அவளை அணைத்து கொண்டு உறங்க..,அவனுடைய இறுக்கத்தில் தூக்கம் கலைந்தவள் மெல்ல அவனை விட்டு எழு…
நவிலன், “தூங்கு அம்மு மெதுவா ஆபிஸ் போகலாம் ன்னு இருக்கேன்..
அதுசரி , இப்படியே பொறுப்பு இல்லாம இருந்தா எப்படி…
அம்மு …
என்ன அம்மு, அந்த ரிசேர்ஜ் மெடிசின் ன்னு எதுக்கு எடுத்து வச்சு இருக்கீங்க ஹாஸ்பிடல் கேஸ் அதை ரன் பண்ணவே சரியா இருக்கு அப்புறம் எதுக்கு இது என்றாள் பனி
இது என்றவன் அவளை நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனும் எழுந்து சாய்ந்து அமர்ந்தவன்,மலர் … அவளுக்காக மட்டுமே
சீனியர் க்கா… ஆமா ஏற்கனவே இதைப்பத்தி சொன்னேனே அம்மு… சொன்ன நியாபகம் இல்ல சாரி…
பரவாயில்ல அம்மு இது அவளுக்காகவே பண்ணது அவளும் ஒரு ஷேர் ஹோல்டர், ராஜேஷ் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா அப்புறம் அவளை சும்மா மேல் வேலை மட்டும் பார்க்க சொல்லலாம் ன்னு..
முகத்தை சுருங்கியவள் ஏன் வேலைக்கு போகலையா…
இல்ல அவனுக்கு அன்னைக்கு நடந்ததுக்கு பிறகு தன் தப்பை உணர்ந்தாலும் ஒரு பக்கம் வேலைக்கு போக பயம் தனக்கும் இவனுங்களுக்கு நடந்த மாதிரி எதாவது நடந்துட்டா அப்படின்னு வேலைக்கே போகல சின்னதா வீட்டுக்கு முன்னாடி ஒரு கிளினிக் வச்சுக்கிட்டு பார்த்தான் நான் தான் மலர் வெளியே வரனும் ன்னு இதை ஆரம்பிச்சேன் இப்ப ஓரளவுக்கு பரவாயில்லை அவனை ஹாஸ்பிடல் வரச் சொல்லலாம் ன்னு இருக்கேன் ஆனா நீ பர்மிஷன் தந்தா தான்…
மறுபடி இப்படி நடந்துக்க மாட்டார் ன்னு என்ன நிச்சயம் என்று உடனே பனி கேட்க…
மனுஷன் திரும்ப தப்பு பண்ண மாட்டான் ன்னு நான் சொல்ல மாட்டேன் வாய்ப்பு தர்றோம் சரியா பயன்படுத்திக்கிட்ட நல்லது இல்லையா தள்ளி வச்சுட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான்..
ம்ம்ம்
என்னம்மா…
சரிங்க நீங்க யோசிச்சு தான் சொல்லுவீங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் என்ன, வந்தா இரண்டு மணிநேரம் இருந்துட்டு கிளம்பிடுறேன் அவ்வளவு தான்.
நீ என்ன பண்ணலாம் ன்னு இருக்க ரிசேர்ஸ் பண்ண போறியா இல்ல ஸ்கூல் போறியா…
ஸ்கூல் போகலாம் ன்னு ஆனா வேற ஸ்கூல் பார்க்கட்டா…
உன் விருப்பம் தான் அம்மு நான் என்ன சொல்லப் போறேன் என்றவன் வீட்டு பக்கத்துல எதாவது பாரு டா எனக்கு ஈஸியா இருக்கும்.
ஏன் நவி…
இல்ல நானும் வெளியே போகனும் நீயும் தூரமா பார்த்ததுண்டா அப்புறம் எதாவது எமர்ஜென்சி அப்படின்னா உடனே வரமுடியாது இல்லையா அதான் என்றவனை பார்த்தவள் பயப்படுறீங்களா…
கண்டிப்பா இல்லன்னு சொல்ல மாட்டேன் என்று எந்த மறைப்பும் இல்லாமல் சொல்ல…
அப்ப நான் வேலைக்கு போகாம என்று முடிக்கும் முன்பே… அதெல்லாம் இல்ல பிரச்சினையை பார்த்து பயப்பட சொல்லல ஜாக்கிரதையா இருந்துக்கலாம் அவ்வளவு தான். உன்னை அடைச்சு வைக்க எனக்கு விருப்பம் இல்ல எல்லாரும் சுதந்திரமா வாழ தான் இந்த வாழ்க்கை ஏதோ இடையில் நடந்துட்ட கசப்பான விஷயத்துக்காக நாம் ஒதுங்கனும் ன்னு அவசியம் இல்ல..
ம்ம்ம்
என்னடி..
சரி சரி என்றவள் அவனோட ஒன்றிவிட மெல்ல அவள் உடலை தழுவிக்கொள்ள எந்த மறுப்பும் சொல்லாமல் அவனோடு இசைந்து இருந்தாள் பூம் பனி…
மெஸேஜ் அனுப்பி விட்டோம் என்று கார்த்திகேயன் அம்சா இருவரும் பூம் பனியை பார்க்க கிளம்ப அதற்கு முன்பே பூம் பனியை கேள்வி கேட்டே தீரவேண்டும் என்று கிளம்பிவிட்டாள் அத்தைக்காரி..
தொடரும்