• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

29.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem

29.நவிலனின் கோதையானவள்​




பனி, “சரி விடுங்க நான் கீழ போறேன்..கீழயா…?

ஆமா என்றாள் பனி..

இப்ப நாம எங்க இருக்கோம் கீழ இருக்க அறை தான் இது..

ஓஓஓ… மறந்துட்டேன்..

ஆமாண்டி நமக்கு என்ன தேவையோ அதெல்லாம் மறந்துட்டு இதோ இந்த உப்பு சப்பு இல்லாத, எதுக்கும் உதவாத காரணத்தை எல்லாம் மண்டையில் வச்சுக்க நீ ஒரு ரீசேர்ஜ் பர்சனல் என்னென்ன உலகத்தில் நடக்கும் ன்னு தெரிஞ்ச ஆள் அதுவும் இல்லாம மெடிகோஸ் ஃபீல்டு இப்படியா எதையாவது யோசிச்சுட்டே இருப்ப…பாஸ்ட் இஸ் பாஸ்ட் அம்மு…

ஓகே ஓகே நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுறேன் நோ வொர்ரி என்றவள் உதடு தான் தைரியமாக சொல்லியதே தவிர அந்த தாம்பத்திய எண்ணம் மட்டும் திகிலாகவே இருந்தது.


அவளின் முகம் போன போக்கில் வாய்விட்டு சிரித்தவன் சரிதான் சிங்கபொண்ணே கீழ போ வரேன் என்றவன் போனை எடுக்க அதில் கார்த்திகேயன் மெஸேஜ் பார்த்து விட்டு பதில் அனுப்பியவன் அவனும் அறையிலிருந்து வெளியே வர மங்கை டீ குடித்து கொண்டு இருந்தார்.

குட்மார்னிங் மா..

குட்மார்னிங் நவி…

அம்மா அத்த மாமா வராங்க…

சொன்னாங்க நவி நான் தான் நீங்க தூங்கிட்டு இருக்கிறதை சொன்னேன் கிளம்பிட்டாங்க வந்துடுவாங்க நான் சேர்த்தே டிபன் பண்ண சொல்லிட்டேன். பனி என்ன பண்ணுறா?

இப்ப தான் வாஷ் ரூம் போய் இருக்கா



இப்ப ஓகே வா நவி.



அம்மா அவ நார்மல் தான் ஆனா அந்த விஷயத்தில் தான் அவ பயம் எல்லாம்…

மங்கை, “இதை உன்கிட்டே எப்படி பேசுறது ன்னு தெரியல டா ஆனா நீ ஒரு டாக்டர் அவளை இன்னும் நல்ல கம்பர்டபுளா வச்சுக்கிறது உன் கையில் தான் இருக்கு…


ம்ம் பார்த்துக்கலாம் ம்மா… அவளை அவ போக்குல விட்டாலும் சிலதை இழுத்து பிடிச்சி செய்ய வச்சா சரிபடும் என்றவன் மங்கை அருகில் அமர்ந்து கொள்ள அவனுக்கு டீ எடுத்து வரச் சொல்லி விட்டார் மங்கை..

இரண்டு பேரும் எப்ப கிளம்புறீங்க நவி…

இங்க வேலையை முடிச்சுட்டு நீ கிளம்ப ன்னு சொன்னீங்க

சொன்ன ஆனா நீ போய்ட்டு வா அப்புறம் பார்த்துக்கலாம் என்று மங்கை சொல்ல…

ஏன் மா…

இல்ல டா ஏதோ இப்ப வேண்டாம் ன்னு..

இப்ப விட்டா அப்புறம் அக்கா எது எதுவோ யோசிக்க ஆரம்பிச்சிடுவா…

அதுவும் சரி தான் இப்ப எப்படி இருக்கா உங்க அக்கா அவளுக்கு செட் ஆகிட்டா…

செட் ஆகனும் இல்லன்னா அவளுக்கே அவளோட ஈகோ இடம் தராது… எப்படியாவது தன் பேச்சை கேட்க வைக்கனும் ன்னு கண்டிப்பா போராடுவா அதுக்கு ஏத்த பிள்ளைங்க தான் அங்க இருக்கிறதும் அக்கா அந்த ஸ்கூல் பத்தி பேசவும் அம்மு எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு தான் இந்த முடிவு எடுத்தா அதனால் அக்கா இனி பிஸி மத்தததை யோசிக்க நேரம் இருக்காது…

ஆனாலும் அவ அப்படி பேசினது கஷ்டமா இருக்கு நவி..


விடும்மா அவளுக்கு என்ன விருப்பமா அவளை அப்படி பேச வச்சதே சொந்தக்காரங்க தானே இல்லன்னா அக்கா உன் மேல பாசமா தானே இருந்தா..

அதெல்லாம் புரியுது இல்லன்னு சொல்லல அவளை கை குழந்தையா இந்த கையில் வாங்கினேன் . எங்க பெரியம்மா, எங்க அக்கா இறந்த பிறகு இரண்டு மாசமா பேசி உங்க அப்பாவை கல்யாணம் பண்ண வச்சாங்க உங்க அப்பா என்கிட்டே கேட்ட விஷயம் அவ மட்டும் தான் குழந்தை நீ குழந்தைக்கு அம்மாவா மட்டும் தான் ன்னு… நானும் ஏத்துக்கிட்டேன்… உனக்கும் அவளுக்கும் பதினொரு வயசு வித்தியாசம் உங்க பாட்டி உடம்பு முடியாம போனப்ப வாங்கின சத்தியத்துக்காக பத்து வருஷத்துக்கு அப்புறம் உங்க அப்பா என்னோட வாழ்ந்தார் என்று கண்ணீர் கசிய விட…

அம்மா எதுக்கு இப்ப இதெல்லாம் எனக்கு தான் தெரியுமே..

இருந்தாலும் இப்ப பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க நவி அவ என் பொண்ணு தான் ஆனா அவ என்னைய அம்மாவா நினைக்கலையே யாரோ பேசுறது பெரிசா இருக்க போய் தானே எல்லாத்துலையும் நான் இருக்கேன்னு காமிக்க சொல்லுறா…நாம அதை கூட தப்பா நினைக்கலையே ஆனா உனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சு அதை சந்தோஷமா வாழ தான் குடுக்கல இவ ஒரு பக்கம் குட்டுறா இன்னொரு பக்கம் பனி அத்த, என் பிள்ளைங்களுக்கு நிம்மதியே இல்லையே என்று புலம்ப…

நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் அம்மா என்று நவிலன் சொன்ன நொடி..

நீங்க சந்தோஷமா தான் இருப்பீங்க மத்தவங்க சந்தோஷத்தை தானே குழி தோண்டி புதைக்க முடியும் அதையும் நல்லா தானே செய்யுறீங்க என்று ராணி கேட்டு கொண்டே உள்ளே வர…

என்ன இது என்பது போல் நவிலனும் மங்கையும் பார்க்க..

வாங்க அம்மா என்னாச்சு ஏன் இவ்வளவு கோவம் அதுவும் காலையே வந்து இருக்கீங்க என்று மங்கை கேட்க..
என்ன பார்க்குறீங்க ,வர வச்சுட்டாளே நீங்க உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கீங்களே அவளால் தான், இப்ப நான் விடிஞ்சும் விடியாம வந்து நிற்குறேன் என்று ராணி கத்த..

உக்காருங்க என்ன விஷயம் என்றான் நவிலன்.


எங்க அவ…

என்ன விஷயம் ன்னு கேட்டேன் என்றான் நவிலன் அழுத்தமாக..

வெளியே இருந்து வந்த சத்தத்தில், வந்த பனி..வாங்க அத்த

ஆமாண்டி வர வச்சுட்டு இல்ல யாருடி அந்த யாழினி? எதுக்கு என் பையனை நீங்க இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க இதுக்கு தான் அவனை அழைச்சிட்டு அழைச்சிட்டு போனியா இன்னும் வேற என்ன வேலை எல்லாம் பார்க்கிற? படிக்க போன அங்க நாலு பசங்க உங்களை சீரழிக்கிற அளவுக்கு நடந்துக்கிட்ட இப்ப என் குடும்பத்தை சீரழிக்கலாம் ன்னு முடிவு பண்ணி இருக்கியா…


அத்த என்று பனி கத்தி விட..

ஹேய் சத்தம் வரக் கூடாது நீ கெட்ட கேட்டுக்கு என் பையன் தான் கிடைச்சானா அதுவும் யாரும் இல்லாத அனாதையை அவளும் உன்ன மாதிரியா இல்ல வேற எதுவுமா என்று ராணி தடங்கலே இல்லாமல் வார்த்தையை விட…

போதும் நிறுத்துக்கா என்றான் கார்த்திகேயன்..

ஓஓஓ வாடா நல்லவனே என்ன அங்க ஆரம்பிச்சு வச்சுட்டு இங்க உன் பொண்ணை பார்க்க வந்துட்டியா…நல்லா இருக்கு டா எப்படி இப்படி இருக்கீங்க உன் பொண்ணு இருந்த இருப்புக்கு நல்ல வசதி வாய்ப்போட வாழ்க்கை, என் பையனுக்கு அனாதையா அது என்ன நிலையில் இருக்கோ உங்களுக்கு எதுக்கு இந்த வேலை ஏன் இதையெல்லாம் பண்ணுறீங்க எனக்கு ஒன்னும் புரியல என்று படபடவென பொரிந்து கொண்டு இருக்க,நவிலன் சாம்பசிவத்திற்கு அழைத்து சொல்லி இருந்தான்.


அக்கா என்ன பேசுற எதுக்கு இப்ப நீ பாப்பாவை பார்க்க வந்த எதுவா இருந்தாலும் வீட்டில் பேசிக்கலாம் கிளம்பு என்று கார்த்திகேயன் அழைக்க..

அதெல்லாம் எனக்கு தெரியாது அடியேய் அவ எங்க இருக்கா அட்ரஸ் தரியா இல்லையா என்று கூச்சலிட…

தரலன்னா என்ன பண்ணுவீங்க என்றாள் சாதாரணமாக..

அதானே மானங்கெட்டு போனவளுகக்கு இன்னும் என்ன மிச்சம் இருக்கு…

இருக்கோ இல்லையோ அது என் பிரச்சினை உங்களுக்கு என்ன அதனால் என்றாள் பூம் பனி..

அம்மு நீ உள்ள போ என்று நவிலன் சொல்ல..

என்னைய தான் பார்க்க வந்தாங்க அப்ப நான் தானே பதில் தரனும் சொல்லுங்க அத்த உங்க பையனை கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் வந்து என்னைய கேட்குறீங்களே என்ன விஷயம் உங்க பையன் கிட்ட கேட்டா அசிங்கப்படுவீங்கன்னு இங்க வந்தீர்களா ?

அம்சா, “ பூவு…


அம்மா…

வேணாம் பூவு நீ எதுவும் பேசாதே அப்பா பேசிப்பாங்க…தந்தையை திரும்பி பார்க்க அவரோ அதிர்வில் பேசவே முடியாமல் அமர்ந்து விட…

நானே பார்த்துக்கிறேன் அம்மா என்றவள் அத்தானுக்கு போனை போடுறேன் அவர் வருவாரு அவரையே கேட்கலாம் அத்த..

ஹேய் என் பையனை எதுக்கு டி கூப்பிடுற ஏற்கனவே கூப்பிட்டு கூப்பிட்டு தான் இப்ப இந்த நிலையில் வந்து நிற்குது இதுக்கு மேல அவனை கூப்பிட்ட நான் மனுசியா இருக்க மாட்டேன் என்று ஆங்காரமாக கத்த…

சாம்பசிவம், “இதுக்கு முன்ன நீ மனுசியா இருந்தியா ராணி?

திடுக்கிட்டு திரும்பியவள் என்னங்க என்று மெல்ல அழைக்க..

சாரி நவிலா நான் கவனிக்காம விட்டுட்டேன் . அப்புறம் நவிலா நம்ம விக்னேஷ் யாழினி கல்யாண விஷயமா நானே வரனும் ன்னு இருந்தேன் மாப்ளையை அழைச்சிட்டு, நான் வரதுக்கு முன்னாடியே அது வேற மாதிரி இங்க வந்துட்டு பரவாயில்ல பாப்பா நீ என்ன ஏதுன்னு பேசி முடிவு பண்ணிடு டா விக்கி சொல்ல சொன்னான். நீ தான் பேசனும் அப்பாவை அழைச்சிட்டு போ அப்புறம் இன்னும் இரண்டு மாசத்துக்குள் கல்யாணம் முடிச்சிட்டு அவன் கிளம்பனும் என்று ராணியை இழுத்து கொண்டு வெளியேற…

கார்த்திகேயன், “ அம்சா இங்க இரு நான் வந்துடுறேன் என்று பின்னோடே ஓட…

தெருச்சண்டை ஓய்ந்தது போல் இருந்தது. உட்காருங்க அம்சா…

அம்சா, “மன்னிச்சிடுங்க மங்கை அது வந்து, விடுங்க ஏதோ கல்யாண விஷயம் அதுவும் நம்ம பனிக்கு நெருக்கமான விஷயம் அதான் அவங்க அத்த இப்படி ன்னு புரியுது நாம நம்ம விஷயத்த பார்க்கலாம் என்று மங்கை தவிர்த்து விட…

அம்சா சங்கடமாக நவிலனை பார்க்க…

ஒன்னு இல்ல அத்த நீங்க எதுவும் நினைக்க வேண்டாம் என்று சொல்லியவன் அம்மு ஏன் ஒரு மாதிரி இருக்க ?

இரண்டு மாசம் அதிகம் அதுக்குள்ள அத்தைக்கு யாருன்னு தெரிஞ்சா பேசி பேசியே அவங்களை எனக்கு கல்யாணம் வேணாம் ன்னு சொல்லுற அளவுக்கு கொண்டு வந்துடுவாங்க அதான் யோசனை என்று சொல்ல..

மங்கை, “ அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து பக்கென சிரித்துவிட..

என்னம்மா…

இல்ல நவிலா எங்க பூவு எதுவும் நினைச்சு மறுபடி ன்னு நான் யோசிச்சா இந்த பிள்ளை அந்த கல்யாணத்தை எப்படி நடத்தன்னு யோசனை பாரேன் என்றவர், வா அம்சா நாம ரெஸ்ட் எடுக்கலாம் இவர்களாச்சு இவங்க பிரச்சனை ஆச்சு என்று எழுந்து சென்றுவிட



விஷயத்தை கேள்விபட்ட விக்னேஷ் மாமாவுக்கு அழைத்து அவன் சொன்ன இடத்துக்கு வரச் சொல்லி அடுத்த முடிவை நகர்த்தி இருந்தான்.


தொடரும்

 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,273
498
113
Tirupur
இது என்ன பொம்பலையோ போங்க