• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

33.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem

33.நவிலனின் கோதையானவள்​



கவி, “போன் எடுக்க முடியாத அளவுக்கு பிஸியா என்று மெஸேஜ் தட்டி விட்டு மகனுக்கு அழைக்க அவனோ தாயின் எண்ணை ப்ளாக் செய்து வைத்து இருந்தான். எங்கேயும் மதிப்பு இல்ல எல்லாம் அவங்க பின்னாடி தான் . எல்லாம் என் நேரம் நான் கேட்டேனா எனக்கு இன்னொரு அம்மா வேணும் ன்னு இல்ல நான் தான் சொன்னேனா குழந்தை பெத்துக்க வேணாம் ன்னு எல்லாரும் தியாகி மாதிரியும் நான் என்னவோ வில்லி மாதிரியும் தான் பார்க்கிறது என்று தன்னை போல் புலம்பியவளுக்கு புரியவில்லை தனக்காக அவர்கள் யோசித்ததை, தான் நிராகரித்து அவர்களை புண்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்று..ஆனால் அவள் இடத்தில் இருந்து பார்த்தால் அவளின் எண்ணவோட்டங்கள் சரி தான். உனக்காக உனக்காக என்று சொல்லிய வார்த்தைகள் அவளை குத்துவது போலவே இருக்கும். அதைவிட என்ன இருந்தாலும் நீ பொம்பள பிள்ளை அவனுக்கு தான் என்னைக்கும் மதிப்பு என்று பேசிய வார்த்தைகள் வேற விடுவாய் அமைந்து விட்டது . அவள் காயங்களை எப்படி ஆற்றுவது தனக்கு தானே ஆற்றி கொண்டாள் ஆளுமை என்னை தாண்டி தான் எதுவும் உனக்கு என்று அது முட்டாள் தனம் என்று உணரவே இல்லை.

இப்போது கூட தன் மாமி கிளம்பிவிட்டதையும் மகன் போன் எடுக்காததையும் ஏன் என்று யோசிக்காமல் தன்னை மதிக்கவில்லை என்றே யோசித்து கொண்டு இருக்கிறாள். இது எங்கே போய் முடியும் என்று அவள் நினைத்து இருந்தால் அவளும் சந்தோஷமாக தான் இருந்து இருப்பாள் கிடைக்கும் அனைத்தும் போலியானவை என்று எப்போது புரியப் போகிறதோ..

எங்க இருக்கீங்க ..

எங்க இருக்கீங்க…

எங்க இருக்கீங்க…

இப்படி ஒரு ஓராயிரம் மெஸேஜ் அனுப்பி விட்டாள் வசந்திற்கு வண்டி ஓட்டி கொண்டு இருந்தவன் அதை கவனிக்கவில்லை வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு உள்ளே வர ஹாலில் எதையோ வெறித்தபடி அவள் கண்கள் நிலை குத்திய பார்வையுடன் அமர்ந்த இருந்த கவியை பார்த்து… கவி என்று அருகில் செல்ல … தரையோ சொட்டு சொட்டாக செந்நீரை ஏந்தி கொண்டு இருந்தது..

கவி என்னடி இது ..அவசரமாக வசந்த் தன் கைக்குட்டையை வைத்து அதை அழுத்தியவன் பைத்தியமா டி என்ன காரியம் பண்ணிட்டு இருக்க..

நீயும் என்னைய மதிக்கல இல்ல ?

என்னடி மதிக்கல என்றவன் அவளை இழுத்து கொண்டு வண்டியை எடுத்தவன், நவிலா எங்க இருக்க..

வீட்டுல மாமா என்றவன் கண்ணை கசக்க..

ஹாஸ்பிடல் வாடா உங்க அக்கா கையை அறுத்து வச்சு இருக்கா என்றவன் போனை வைத்து விட நல்ல உறக்கத்தில் இருந்த பனியை பார்த்தவன் மெஸேஜ் ஒன்றை தட்டி விட்டு மெல்ல ஊஞ்சலில் இருந்து இறங்கி ஊஞ்சலை நன்றாக மூடி விட்டு கிளம்பி இருந்தான்.


எதுக்கு இப்ப அவனை வரச் சொல்லுறீங்க எல்லாமே அவன் தானா அப்ப நீங்க எதுக்கு எனக்கு என்று எரிந்து விழ..

அடியேய் அவ்ன டாக்டர் டி


உலகத்துல அவன் ஒருத்தன் தானா?

இல்ல தான் ஆனா அவன் தான் என் நம்பிக்கை

இருவரும் வாயாடி கொண்டே ஹாஸ்பிடல் வந்து சேர அதற்கு முன் கவியை கவனிக்க டாக்டரை நியமித்து இருந்தான் நவிலன் .

வேகமாக உள்ளே வந்தவன் என்னாச்சு மாமா அக்கா எங்க என்று உள்ளே பார்க்க உள்ளங்கையில் கட்டு போட்டு இருந்தது தெளிவாகத்தான் அமர்ந்து இருந்தாள்.

என்னாக்கா இது என்று அவள் மடி மீது தலைசாய்த்து அழுதிட தன்னால் அவன் தலை கோதி இருந்தாள் கவிதா..

என்னாச்சு மாமா ஏன் இப்படி பண்ணுறா என்று படபடக்க..

அவளுக்கு பைத்தியம் புடிச்சு இருக்கு


மாமா…

ஆமா டா அதுவும் மதிக்கல பைத்தியம்.

என்ன என்று நவிலன் நிமிர..

கவிதா வசந்த் யை முறைத்து கொண்டு இருந்தாள்.

முறைக்காத டி எல்லாத்துலையும் உனக்காக தானே அவன் பார்த்து பார்த்து பண்ணுறான்.

என்ன மாமா என்று மறுபடி நவிலன் கேட்க..

உங்க அக்காவுக்கு மதிப்பு தரலையாம் அவளையே எப்பவும் தலையில் வச்சு கொண்டாடனும் ன்னு நினைக்கிறா அவளை அவளே தாழ்த்திக்கிட்டு தான் இவ்வளவு பிரச்சனை அவளை யாரும் குறையா நினைக்கலன்னு அவளுக்கு புரியவே இல்ல நவி…

அக்கா எப்பவும் யாரோட இடத்தையும் யாரும் மாத்த முடியாது நீ எப்படி அப்பாக்கு முதல் பிள்ளையோ அதேமாதிரி நானும் அவருக்கு பிள்ளை அவ்வளவு தான் இதுல எங்க இருந்து நீ தாழ்ந்து போய்ட்ட உனக்கான உரிமை என்னைக்கும் இருக்கும் உறவும் இருக்கும் நீயா கற்பனை பண்ணிட்டு பேசினா எப்படி ஊர் உலகம் ஆயிரம் சொல்லலாம் ஆனா எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தானே நான் எதாவது பண்ணிட்டா கூட நீ தானே எனக்கு ஆறுதல் அதைவிட நாளைக்கே நான் இல்லன்னு..

டேய் என்று படக்கென கவி எழ…

இரு இரு ஒரு பேச்சுக்கு தான்..

அப்படி எல்லாம் பேசாத என்றவள் இப்போதும் வசந்தை முறைக்க

என்ன முறைப்பு நீ சகஜமா இருந்தா எல்லாமே சரியா தெரியும் கவிம்மா உனக்காக தான் நாங்க எல்லாருமே,அதேமாதிரி எங்களுக்காக நீயும் இருக்கனும் இல்லையா உனக்கு இருக்க விருப்பு வெறுப்பு மாதிரி தானே நவிலனுக்கும் நீ ஏன் உனக்கு கீழ் தான் அவன் ன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கி வச்சு இருக்க ?

…..

பதில் சொல்லு இந்த சொத்துல எல்லாமே உனக்கு தான் அதுவும் உங்க சம்பாதிச்சது அப்புறம் உன்ன பெத்தேல் வீட்டு சொத்து எல்லாமே நவிலனுக்கு படிப்பை தந்து கடனுக்கு கையெழுத்து மட்டும் தான் போட்டாரு உங்க அப்பா இதெல்லாமே உனக்கு தெரியும். அப்படி இருந்தும் நீ என்று வசந்த் அனைத்தையும் சொல்ல சொல்ல அவமானமாக இருந்தது கவிதாவிற்கு,கணவன் தன்னை பற்றி எல்லாவற்றையும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறான் என்று..


இதை கூட இப்ப இருக்கிற சூழ்நிலையால் தான் சொல்லுறேன் இல்லன்னா இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கையில் எதாவது சொல்லி இருக்கேனா…ஒன்னு நல்லா தெரிஞ்சுக்க நான் அப்படிங்குறதை விட்டுடு நாளன்று யோசி அப்பதான் எல்லாமே விசாலமா தெரியும்.

அப்ப நான் குறுகலான இருக்கேனா என்று வார்த்தையை விட..

உண்மை தானே என்றான் வசந்த்…

கவிதா, “ஓஓஓ அதான் உங்க அம்மா தங்கை கூட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலையோ?…

எதுக்கு சொல்லனும் கவிம்மா அவங்களை தான் வேணாம் ன்னு ஒதுக்கி வச்சுட்டியே அப்புறம் அவங்க எதுக்கு சொல்லனும்

விலுக்கென நிமிர்ந்தவள் வசந்தை அதிர்வோட பார்க்க..

ஆமா உன்னோட இழுப்புக்கு நான் வரலாம் ஆனா என் குடும்பம் என்ன பண்ணுச்சு சொல்லு நீ உன் குடும்பத்திலையும் ஒட்டல என்னோட குடும்பத்துலையும் ஒட்டல எல்லா இடத்திலும் உன்ன அண்டி இருக்கனும் ன்னு நீ எதிர்பார்த்தா அதுக்கு எல்லாரும் ஒத்து வரமாட்டாங்க இல்ல..
பணம் உன்கிட்ட இருந்தா வருவாங்கன்னு நீ நினைக்கிறது தப்பு தானே என்று வசந்த் சொல்ல சொல்ல தன் கை மீறி எல்லாம் செல்கிறது என்று உணர்ந்து விட கோவம் எல்லையை கடந்தது இருந்தது கவிதாவிற்கு…

அப்படி யாரும் சங்கடப்பட்டுட்டு என்னோட இருக்க வேண்டாம் என்று பட்டென கவிதா சொல்ல..

அதான் எல்லாரும் கிளம்பிட்டாங்க கவிம்மா



கவிதா, “நீங்களும் போகலாம்”


எங்க

உங்களுக்கு பிடிச்ச இடத்துக்கு..

என்னோட வாழ்வு மொத்தமும் நீ தானே அப்புறம் எப்படி விட முடியும்.

போதும் நிறுத்துங்க எப்படி இப்படி என்று அவள் வார்த்தை வராமல் தடுமாற..

அவள் தடுமாற்றத்தை தாங்க முடியாமல் மாமா வேண்டாம் விடுங்க அக்கா எதுவோ என்று நவின் ஆரம்பிக்க..

இப்பவும் பேசலன்னா கடைசி வரை தனியா நிற்கனும் நவி என்றவன் பார்த்தியா கலிப்பா உன் தம்பி நீ வார்த்தைக்கு தடுமாறினா கூட தாங்க மாட்டான் அவன் உனக்கு தம்பி இல்லைடி மகன் அவனை போய் வாள் விடாம பண்ணுற உன்னையே என்ன சொல்ல என்று தலையில் தட்டி கொண்டவன் இப்ப சொல்லுறேன் கேட்டுக்க மஞ்சு அம்மா கிளம்பிட்டாங்க இன்னும் கொஞ்ச நாள்ல உன் மகனும் போறான் படிக்க



….





எங்கன்னு கேட்க மாட்டியா..





கனடா இதுவரை சம்பாதிச்சது இனி சம்பாரிக்கிறது என்று என்னென்ன பண்ண போகிறான் என்று சொல்லிய வசந்த் இதுக்கு மேலேயும் உனக்கு என்ன வேணும் இல்ல நான் ஆட்டி படைக்கும் எல்லாரையும் ன்னு நினைச்சா சொல்லு நாம தனியா போய்டலாம் ஆனா இந்த சொத்து சுகம் இல்லாம யாரும் இல்லாத இடத்தில உன்னையே யாருக்குமே தெரியாத இடத்தில் நீ மதிப்பா வாழ என்றவன் சோர்ந்து அமர்ந்து விட்டான் வசந்த்.

மாமா..

விடுடா என்ன சொல்லுன்னு தெரியல வாழ்க்கையில் நிம்மதி வேணும் டா ஆனா இவ என்று பேசாமல் நிறுத்தி விட …முதன்முறை பயம் வந்து நின்றது கவிதாவிற்கு எல்லோரும் ஒதுங்கி விட்டால் என்று…

விடுங்க மாமா அக்கா ஏதோ மனசுல தப்பா புரிஞ்சுட்டு என்று வார்த்தைகளை தேடி தேடி நவிலன் பேச…

பார்த்துக் கோடி உன்னையே எந்த வார்த்தையும் சங்கடபடுத்திட கூடாதுன்னு எவ்வளவு தயங்குறான் ன்னு ஆனா நீ மட்டும் எதையும் யோசிக்கிறது இல்ல…

ஒவ்வொரு வார்த்தைக்கும் வசந்த் அவளை தாக்கி கொண்டே இருக்க…

இத்தனை நாள் எதை சொன்னாலும் சிரித்து கொண்டே இருந்த கணவனா இது என்று தான் பார்த்தாள் கவிதா..

என்ன பார்க்கிற இவனா இப்படி பேசுறதுன்னா ? பேச வச்சுட்டு இன்னைக்கு நாளைக்கு ன்னு நானும் பொறுத்து போனேன் உன் தொம்பி மாமா அக்கா தானே அக்கா தானேன்னு கூஜா தூக்கினான் அதான் இவ்வளவு கொட்டுறேன் என்று வசந்த் சொல்ல சொல்ல மயக்கம் வராத குறை தான் .

இருவரும் மாறிமாறி பேசி ஓய்ந்து இருக்க நர்ஸ் உள்ளே வந்தவர் டிரிப்ஸ் கழட்டி விட்டு டாக்டர் வீட்டுக்கு போகலாம் ஒன்னும் பிரச்சினை இல்ல ஜெனரல் சர்ஜன் சொன்னாங்க.

ஓஓஓ ஓகே சிஸ்டர் நான் பார்த்துக்கிறேன் என்றவன் மாமா வீட்டுக்கு போகலாமா…

போகலாம் டா ஆனா உன் வீட்டுக்கு கூப்பிடாத இப்ப தான் கொஞ்சம் உனக்குன்னு நேரம் கிடைச்சது அதை தவற விடாத அம்மு எங்க என்று வசந்த் கேட்ட பிறகு தான் அவளை ஊஞ்சலில் விட்டு விட்டு வந்தது நினைவு ப்ச் மாமா நான் கிளம்பட்டா அம்மு தோட்டத்தில் இருக்க ஊஞ்சல் ல தூங்கிட்டு இருக்கா நான் சொல்லாம வந்துட்டேன் என்று பரபரப்பாக

அடேய் அவ பயந்துட போறா கிளம்பு டா என்றதும்..

அக்கா என்று தயங்க..

என் புருஷன் இருக்காரு என்று முடித்து விட்டாள் கவிதா..



தொடரும்