5.இரவின் நிழலே உறவுக்குள் கரைஞ்சேனே
வர்மன் என்னாச்சு என்று மினிஸ்டர் தோள் தட்ட..
ஹான் என்றவன் இமைசுருக்கி பார்த்தவனை..,ஹலோ சார் என்று ரிஷி கை நீட்ட நடுக்கத்துடன் ரிஷியின் விரல்களை பற்றி கொண்டான் வர்மன்.. அத்த என்று மனதில் முணுமுணுக்க..
ஓகே சார் போகலாம் என்று ரிஷி பாலா, டிஜிபி, சர்மா என அவர்களுடன் பேசிக்கொண்டே முன்னே செல்ல..
என்ன வர்மன் … இது தான் லாஸ்ட் மீட் நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என்றார் மினிஸ்டர்..
வர்மா, “லால் சார் நீங்க இப்படி பேசினா எப்படி? உங்களுக்கே தெரியும் அங்க மட்டும் இல்ல நம்ம நாட்டில் முக்கால்வாசி பள்ளி கல்லூரி மினிஸ்ட்ரி ல இருக்கவங்க தான் ரன் பண்ணுறாங்க, நாம இப்படி ஆர்டர் பாஸ் பண்ணா எப்படி ஸ்கூல் ரன் பண்ண முடியும்.
புரியுது வர்மா ஆனா நிமா சொல்லுறது நல்ல விஷயம் தானே… அந்த அந்த ஸ்டேட் ல இருக்க மொழியை காப்பாத்தனும் இல்லையா…?
நாங்க இல்லைன்னு சொல்லலையே ஆனா …
வர்மா யோசிங்க நல்ல விஷயம் தான், நம்ம நாட்டில் அவங்க அவங்க மொழியை மறந்துட கூடாது இல்லையா? நான் எந்த ஊர் ன்னு உங்களுக்கு தெரியும் ஆனா நான் என் மொழியை வெறும் வாழக்காடு மொழியா மட்டும் தான் பயன்படுத்திட்டு இருக்கேன் எனக்கு பிறகு வர தலைமுறை எல்லாம் மறந்துட்டாங்க அவங்களுக்கு அதுல பேசவே தெரியாது, அப்புறம் எப்படி எழுத படிக்க தெரியும். அதைவிட இன்னொரு விஷயம் படிச்சவங்க ஆங்கிலத்தில் பேசி தெரிஞ்சுக்க போறாங்க படிப்பறிவு இல்லாதவங்க என்றவர் சிரிக்க..
என்ன இதெல்லாம் உங்க நிமா மேடம் சொன்னாங்களா?
நல்லதை யார் சொன்னா என்ன வர்மா என்றவர்கள் பேசிக்கொண்டே இரண்டு மணிநேர பயணத்தை தாண்டி வந்து சேர…
வேந்தன் பரத் தான் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தனர்.வேற எதாவது வேணும் ன்னா கூட கேளுங்க சார் மேடம் ஸ்கூல் இஸ்யூக்காக போய் இருக்காங்க வந்துடுவாங்க
லால், “ சொல்லிட்டு தான் போய் இருக்கா வரட்டும் ஒன்னும் பிரச்சினை இல்ல என்றவர் நீங்க ரெஸ்ட் எடுங்க சார் என்று வர்மாவை சொல்ல இருக்கட்டும் நான் வெளியே உட்கார்ந்து இருக்கேன் என்றவன் வெளியே வர சந்திரா நின்று இருந்தான்.
ஹேய் சந்திரா எப்படி டா இங்க வந்த உனக்கு போன் பண்ணனும் இருந்தேன் அதுக்குள்ள மினிஸ்டர் வந்துட்டாங்க என்று அவன் பேசிக்கொண்டே இருக்க சந்திரா முறைத்து கொண்டு நின்று இருந்தான். என்னடா என்று அருகில் வந்தவனை தட்டி விட்டவன் அங்க ஒருத்தன் நின்னுட்டு இருக்கானே ஏர்போர்ட் ல, மதிச்சியா நீ போனை போட்டா எடுக்க மாட்டேங்குற என்று பொறும..
சாரி டா..
….
டேய் என்ன ரொம்ப தான் பண்ணிக்குற என்றான் வர்மன்
என்ன பண்ண, நீங்க எல்லாம் பெரிய இடமாச்சே என்றவனை பார்த்து சிரித்து கொண்டே வந்த இருவரும் அவன் தோளில் கை போட்டு பல்பு வாங்கிட்டியாடா…
நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் என்று வாயில் கை வைக்க, மூவரையும் பார்த்து வர்மன் உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா ? நீங்க மினிஸ்டர் நிமா கிட்ட தானே வேலை செய்யுறீங்க என்று கேட்க..
நக்கலாக சிரித்தவர்கள்… ஏன் என்ன விஷயம் மிஸ்டர்.வர்மா..
நத்திங் என்றவன் ரவிசந்திரனை இழுக்க…
எதா இருந்தாலும் இங்கேயே கேளுங்க அவன் பதில் தருவான் என்றான் பரத்…
காலைல இருந்து உன்னையே தேடுறா டா அவகிட்ட சொல்லாம போய்ட்ட போல என்று ரவியிடம் பரத் கேட்க..டேய் என்று பல்லை கடித்தவன்…
சரி எப்ப மீட்டிங் என்றான் ரவிச்சந்திரன் பரத்தை பார்த்து…
இந்தா அவளையே கேளு லைன் இருக்கா…
வாகி..என்று மெதுவாக அழைக்க…
என்ன ரவி அண்ணா உன் ஆருயிர் வந்துட்டாங்க போல..
ம்ம்ம்
என்ன பண்ணலாம்…
பாப்பா..
சரி சரி என்றவள் நீ கவலைபடுவியே அதான் உன்னைய ஒரு வார்த்தை கேட்டுட்டு தொடங்கலாம் ன்னு என்று சிரித்தவளை தொலைச்சிடுவேன் எங்க இருக்க..
வந்துட்டு இருக்கேன் பேக் கேட்ல உள்ள வந்துடுவேன் மினிஸ்டர் கூட மீட் பண்ணலாம் அதுக்கு முன்னாடி பார்த்துட்டா அது நல்லா இருக்காது இல்ல என்றவள் அந்த பங்களாவின் பின் வாசலில் வந்து இறங்க…
ஆதித்யா ரிஷியுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
நிமா, “என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க?
ரிஷி, “ இல்ல அந்த ராமைய்யா வராதா சொன்னியா அதான் ஆதியை வரச் சொன்னேன் என்று சொல்ல..
ஆதியை ஒரு பார்வை பார்க்க..அடியேய் நீ மினிஸ்டர் தான் இல்லன்னு சொல்லல அதுக்கு நாங்க எல்லாம் ஒன்னும் தெரியாதவங்களா என்ன அப்படி ஒரு பார்வை உனக்கு.?
ஏன் பார்க்க கூடாதா? ஆதி அண்ணா இதெல்லாம் அரசியல் ல சாதாரணமா நடக்கிறது.இங்க நிரந்தர எதிரியும் இல்ல, நண்பனும் இல்ல அப்புறம் என்ன?
அப்ப நீயும் அந்த பச்சோந்தி கூட்டத்தில் ஒருத்தி தானா?
அண்ணா..
சொல்லு கேட்டுட்டு தான் இருக்கேன்.
எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்கன்னு தெரியல…
பயம் உன்னையே நினைச்சு இல்ல வரவங்களை நினைச்சு அதனால் வரப் போற அடுத்த பிரச்சனையை நினைச்சு என்றவன் சரி போ நாங்க இங்க தான் இருப்போம் என்றதும் ,ம்மா என்று ரிஷி யை பார்க்க..
யாரோ ஒரு பையன் வந்து இருக்கான் வாகி வர்மன் அப்படின்னு என்றதும்..
அப்படியா யாரு ம்மா அது…?என்றாள் எதுவும் தெரியாதவள் போல்..
ப்ச் எனக்கு தெரியல டா வாகி, தமிழ்நாட்டில் பெரிய தொழிலதிபர் ன்னு சொன்னாரு எனக்கு அங்கங்கைக்கு உள்ளவங்கன்னு சொன்னாலே ஏன்டான்னு இருக்கு என்றவள் தலையை பிடித்து கொண்டு அந்த திட்டில் அமர்ந்து விட..
நீ வீட்டுக்கு வேணும் ன்னா போயேன் ம்மா…
இல்ல இல்ல மினிஸ்டர் எதாவது வேணும் ன்னு சொன்னா..
அம்மா நான் இருக்கேன் இல்ல அண்ணா அழைச்சிட்டு போ நான் எந்த பிரச்சனையும் பண்ணல நீ நம்பலாம் என்று சொன்னவை ஏற இறங்க பார்த்தவன்..
இதை நான் நம்பனும் போடி என்றவன் கிளம்பிவிட…
சிரித்து கொண்டவள் ரிஷி, ஆதி செல்வதை பார்த்து கொண்டே உள்ளே வந்து லால் பிஏ வை பார்த்தவள் பா-லா எங்க என்று கேட்க…உள்ள இருக்காங்க மேம் என்றதும் ஓகே என்று பார்க்க சென்றவள் அவர் சாய்ந்து அமர்ந்த வாக்கில் கண் மூடி இருக்க.. பா-லா என்றாள்..
வாடா நிமா என்ன சீக்கிரம் வந்துட்ட..
சின்ன பங்சன் தான் அதான் .
நிமா…
சொல்லுங்க பா - லா ராமைய்யா வரல..
தெரியும் பார்த்துக்கலாம்.
பையன் கொஞ்சம் துடுக்கு நீங்க எல்லாம் ஒரே
வயசுகாரங்க இல்ல என்று லால் சிரிக்க..
போங்க பா-லா(அப்பா) என்ன சிரிப்பு என்று அறைக்குள் பேசியபடி இருக்க வீட்டிற்குள் வந்தான் வர்மன்..ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் சலிப்புடன் என்ன இது எதுக்கு வந்து இருக்கோம் இங்க என்ன நடக்குது என்று நினைத்து லால் பிஏ வை பார்க்க நிமா மேம் வந்துட்டாங்க என்றவன் அறையில் எட்டி சாப் என்று அழைக்க..
என்னப்பா… வர்மா சார்..
போகலாம் நிமா..
கண்டிப்பா என்றவள் எழுந்து வந்தவள் அவன் முதுகு காட்டி போனை பார்த்து கொண்டு இருக்க எதிர் இருக்கையில் நிமா வந்து அமர வர்மன் பக்கத்தில் அமர்ந்தார் லால்..வர்மா என்று அவர் அழைத்ததும் சொல்லுங்க லால் வந்த வேலையை சீக்கிரம் முடிஞ்சா பரவாயில்ல..
அதை நீங்களே என் பொண்ணு கிட்ட கேளுங்க இதோ நிமா இங்க தான் இருக்கா என்றதும் நிமிர்ந்து பார்த்தவன் எதிரில் இருந்தவளை பார்த்து இவளா என்று அதிர்ந்து எழ..
என்னாச்சா வர்மா..
நத்திங் என்றவன் தன் சருக்கலில் திடமாகி பின்னே நின்று இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அமர..
ஹலோ சார் என்ன விஷயம் பேசணும் ? லால் சார் சொன்னாங்க பேசுனும் ன்னு …
…….
நிமா எதையும் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக லாலை பார்த்து என்ன விஷயம் எதுவும் பேசாம இருக்காங்க…
லால், “ வர்மா என்னாச்சு..
விருட்டென எழுந்தவன் ஒன்னு இல்ல சார் நீங்க என்ன பண்ணனும் நினைக்குறீங்களோ அதை பண்ணுங்க இதை எப்படி டீல் பண்ணனும் ன்னு நாங்க பார்த்துக்கிறோம்..
வர்மா என்று அதட்டலுடன் லால் அழைக்க…
நிமாவை முறைத்து கொண்டே லாலை பார்த்த வர்மா..
இது யாரு இவளோட பேக்கிரவுண்ட் என்ன? அவளோட பேரண்ட்ஸ் அப்புறம் என்று திரும்பி பின்னே நின்று மூவரையும் பார்த்து இவங்க எல்லாம் என்று கை நீட்டி கேட்க..
ப்ச் வர்மா உங்க விஷயத்தை கேட்காம நீங்க என்ன கேட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கு நிமா டீடெய்ல்ஸ் எதுக்கு என்று லால் கேட்க…
அது அவருக்கு என்னைய தெரிஞ்சு இருக்கும் பா -லா என்றாள் நிமா..
ஓஓஓ அப்ப என்னைய தெரியுது உனக்கு? ஆனா தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்க என்று அவளை நெருங்க வர வேந்தன் பரத் இருவரும் முன்னே வந்து நிற்க..
டேய் ஒழுங்கா போய்டுங்க இத்தனை நாளா கண்ணாமூச்சி ஆடிட்டு இருந்து இருக்கீங்க என்று மெல்ல உறும..
சார் நீங்க பேசிட்டு இருக்கிறது ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் கிட்ட ,உங்க ஸ்டேட் ல நீங்க பெரிய ஆளா இருக்கலாம் ஆனா என்று பரத் நிறுத்த..
சந்திரா என்று அவன் கத்த…
போதும் நிறுத்துறீங்களா இங்க என்ன பிரச்சினை என்று லால் கேட்க..
ரவி தான்..சாரி சார் நாங்க எல்லாம் லண்டன் ல ஒன்னா படிச்சவங்க என்று போட்டு உடைக்க நிமா ரவியை முறைத்தாள்.
போதும் வாகி நாம் தனியா பேசிக்கலாம் சண்டைய ஆரம்பிக்காதீங்க என்று ரவி மெல்ல சொல்ல..
லால், “ அப்ப நீங்க எல்லாம் ஒன்னா படிச்சவங்களா…
இல்ல சார் ஒரே யுனிவர்சிட்டில படிச்சவங்க என்று பரத் திருத்த…
வாவ் அப்ப நீங்களே பேசிப்பீங்க ஓகே வர்மன் நீங்க பேசுங்க நிமா சொல்லுறது உங்களுக்கு சரின்னுபடும்..
சரியாவே இருந்தாலும் அதை இம்பிளிமெண்ட் பண்ண முடியாது சார் என்று வர்மன் விரைப்பாக சொல்ல…
நிமா, “நீங்க ரெஸ்ட் எடுங்க என்று லாலை பார்த்து சொல்லியவள் அவர் பிஏ விற்கு கண் காட்டா அவரை அழைத்து கொண்டு சென்று இருந்தார்.
டேய் சந்திரா அப்ப நீ இத்தனை வருஷமா இவளுக்கு தான் வேலை பார்க்குறியா என்று வர்மன் எகிற..
வார்த்தையை அளந்து பேசுங்க மிஸ்டர்.சாகித்யவர்மன் இங்க யாரும் சர்வண்ட் இல்ல அவங்க அவங்களுக்கு ன்னு பிசினஸ் இருக்கு என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன் என்ன பிசினஸ் மத்தவங்களை எப்படி கவுக்கலாம் ன்னா…
ஷட்டப் வர்மா உன்னோட லிமிட்டை தாண்டுற என்று வேந்தன் கத்த…
என்னடா துள்ளிட்டு வரிங்க ஏன் இவளுக்கு ஒன்னு பத்தலன்னு இத்தனை பேரை வச்சு இருக்காளா என்று வார்த்தைகளில் குதற அடுத்த நொடி சுருண்டு விழுந்தது இருந்தான் வர்மன் ரவி தான் ருத்ர மூர்த்தியாய் அவன் முன் நிற்க..
வாடா அவ தான் முக்கியமான போய்ட்டா இல்ல என்னைய விட என்று அதில் அழுத்தம் தர
ரவி, “அவ மேல அப்படி என்னடா உனக்கு பழி எதுக்கு இப்படி வார்த்தையை விடுற…?
ஓஓஓ அப்படியா அப்ப உன் தங்கச்சி பண்ணது சரியா?
அவ வேலையை அவ பார்க்கிற இதுல என்னத்த குறை சொல்ல வர ?
நான் என்ன பேசுறேன் ன்னு உங்களுக்கு புரியல இல்ல..
பரத், “ வர்மா முடிஞ்சதை பேசாத இருந்த சூழ்நிலையில் அவ உன்னையே தப்பா புரிஞ்சுக்கிட்டது என்னைய பொறுத்தவரை தப்பு இல்ல அப்புறம் விஷயம் தெரிஞ்சு அவளே மன்னிப்பு கேட்டா இல்ல..
ஓஓஓ மன்னிப்பு கேட்டுட்டா அப்ப நான் பட்ட அவமானம் இல்லன்னு ஆகிடுமா ?
தொடரும்