• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

5.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem

5.நவிலனின் கோதையானாள்​




அந்த பெரிய திருமண மண்டபத்தில் அவ்வளவு கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது. ஒன்று சொந்தங்கள் என்றாலும் மீதம் அவன் கம்பெனியின் அடித்தட்டு வேலையில் இருப்பவர்கள் வரை அனைவரையும் அழைத்து இருந்தான். இவர்களுக்கு தான் இவர்கள் மட்டும் தான் என்று எந்த வரையறையும் அவன் விதிக்கவில்லை தொழில் முறை நண்பர்கள் பார்டனர்கள் ஏன் தொழிலதிபர் என்று அனைவருக்கும் ஒரே விதமான வரவேற்பு தான்..


இந்த பக்கம் பனி பணிபுரிந்த பள்ளியிலிருந்து அனைவரும் வந்து இருந்தனர் அதுவும் பனிக்காக வந்தவர்கள் சிலர் என்றாள் அந்த பள்ளியின் ஒரு பார்ட்னர் என்ற முறையில் நவிலனுக்காக வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் ..

அனைத்தையும் ஒரு வித சங்கடமாக பார்த்து கொண்டு வரவேற்பில் நின்று இருந்தாள் பூம்பனி..

பனி..

ம்ம்

என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க..?

இது தேவையா பெரிய ஆட்கள் மட்டும் இல்ல சாதாரணமா இருக்கவங்க கூட இப்ப என்னென்ன பேசப் போறாங்களோ?

மத்தவங்க வார்த்தைக்கு தான் மதிப்பா பனி..

நாம இந்த சமூகத்தோட தான் வாழ்ந்தாகனும் மிஸ்டர் நவிலன்

இல்லன்னு சொல்லலையே பனி..


அப்புறம் ஏன் என்னைய வதைக்குறீங்க?

பனி என்று அதிர்ந்து பார்க்க..

உங்களுக்கு இது சாதாரணமா இருக்கு ஆனா எனக்கு ரொம்ப பலகீனமா ஃபீல் பண்ணுறேன் நவி


அம்மு…

ப்ளீஸ் …

ஏன் பனி ஏதேதோ பேசுற

ஆமா என்று அடுத்த வார்த்தை பேசும் முன் டேய் கங்கிராட்ஸ் என்று நவிலனின் தோழமை கூட்டம் வர அந்த பேச்சு அதோடு முடிந்தது..

ஹாய் கைய்ஸ்..

ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை கடைசியில் நீ சாதிச்சுட்ட, ப்ளவர் எப்படி ஒத்துக்கிட்டீங்க அவன் லவ் உங்களுக்கு எப்போ சொன்னான் என்று சபரி கேட்க..

மச்சான் என்று நவிலன் பேச வந்ததை அவர்கள் யாரும் காதில் வாங்கவில்லை,அப்புறம் ப்ளவர் அவனோட லெட்டர் எல்லாம் படிச்சியா எப்படி பையன் ஒன்னா இரண்டா ஆறு வருஷ காதல் பயங்கரமா எழுதி எழுதி தள்ளி இருப்பானே என்று அவர்கள் பேசிக்கொண்டே போக அடுத்த அடுத்த உச்சகட்ட அதிர்வு தாங்காமல் பனி நிலைதடுமாற அவளை இடுப்போடு அணைத்து கொண்டவன் ..

டேய் போதும் நிறுத்து என் பொண்டாட்டி க்கு நானே எல்லாம் சொல்லிக்குவேன் நீ என்ன மீடியேட்டரா ?

சவிதா, “அடப்பாவி நவிலா காதலுக்கு மீடியேட்டர் தானே முக்கியம் இப்படி எங்களை எல்லாம் கழட்டி விடுறானே?என்று மூக்கை உறிஞ்சி காட்ட

நவிலன், “ஹேய் போதும் நிறுத்து டி நீங்க எல்லாம் எப்ப என் காதலுக்கு கொடி பிடிச்சீங்க இப்ப வந்து கண்ணை கசக்குற? என் பொண்டாட்டி டயர்டா இருக்கா அதனால் எல்லாம் கீழ இறங்குங்க என்று எல்லாரையும் விரட்டிவிட்டு அடுத்த அடுத்த ஆட்களை பார்க்க …

அம்சா, “இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கு

கார்த்திகேயன், “ அப்புறம் எவ்வளவு போராட்டம் பண்ணி இருக்க

ஆமா… இல்லையா பின்ன அவ சந்தோஷமா வாழனும் ன்னு நான் நினைக்க மாட்டேனா ஒன்னே ஒன்னுன்னு கறிவேப்பிலை கொத்தா பெத்து வச்சு இருக்கேன் அப்ப நான் போராட்டம் பண்ணாம, என் பொண்ணுக்கு என்ன குறை ஊர் வாய் எல்லாம் என் பொண்ணு மேல தான் எவ்வளவு துடிச்சு போய் இருப்பேன்.. உன் பொண்ணு கடைசி வரை வீட்டோட தான் போல எதாவது நல்ல ஆஸ்பத்திரியா பாரு , ஆஸ்பத்திரி எல்லாம் எதுக்கு அந்த ஏர்வாடியில் கொண்டு போய் விட வேண்டியது தான், அதுக்கு எவ்வளவு தான் அம்சா அக்கா செலவு பண்ணும் இதே ஒரு ஆம்பளை பையனா இருந்து இருந்தா கடைசி காலத்தில் பார்க்கும் இப்படி எவ்வளவு பேச்சு இத்தனைக்கும் என் பொண்ணு பாடம் சொல்லி தர டீச்சர் ஆனா அவளை எப்படி எல்லாம் பேசினாங்க என் மனசு ஆறவே மாட்டேங்குது அதான் ஒரு தெரு விடாம பத்திரிகை வச்சேன் அதை என் மாப்ள புரிஞ்சுக்கிட்டாரு

அம்சா…

இல்லைங்க என்றவர் அவர் தோளில் சாய்ந்து அழ..

விடு இனி அம்மு சந்தோஷமா இருப்பா…

ஆனா என் மாப்பிள்ளை தான் உங்க பொண்ணு கூட போராடனும் என்ன பாடுபடுத்த போறாளோ தெரியல என்று அம்சா முந்தானையில் முகத்தை துடைக்க..

அதெல்லாம் அவருக்கு எப்படி சமாளிக்கனும் ன்னு தெரியும் இனி நீ எதுக்கும் கவலை படத் தேவையில்ல..

ஒரு பெருமூச்சுடன் அதெல்லாம் சரிதான் ஆனா அவளோட நாத்தனார் தான் எப்படி பேசுவாங்களோன்னு


அதெல்லாம் அம்மு பார்த்துப்பா..கவிதாவை பற்றி பேசியதும் இங்கே கவிதா முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு கடுகடுப்பை காட்டி கொண்டு இருந்தாள்.. எப்படி இதை தட்டி கழிக்க, என்ன பண்ணலாம் என்று அருகில் நாத்தனாரை அமர்த்தி கொண்டவள் நீ வாழ வேண்டிய வாழ்க்கை எங்க அண்ணன் பக்கத்தில் நீ இருக்கனும் ன்னு நான் எவ்வளவு முயற்சி பண்ணேன் உங்க அண்ணன் கொஞ்சம் எனக்கு உதவியாக இருந்து இருந்தா இன்னைக்கு கண்டவ எல்லாம் இந்த இடத்தில் இருந்து இருப்பாளா?

மஞ்சு, ‘அண்ணி யாருக்கு என்னனு இருக்கோ அதான் விடுங்க அத்தானுக்கு பிடிச்சு இருக்கு கட்டிக்கிட்டாங்க இனி அதை பத்தி என்ன பேச்சு என்று பேச்சை முடிக்க..

என்ன இப்படி சொல்லுற

ஆமா அண்ணி எனக்கு அத்தானை தான் கட்டிக்கனும் ன்னு எந்த எண்ணமும் இல்ல நீங்க பேசுனீங்க அவ்வளவு தான் நான் எந்த ஆர்வமும் காட்டல ஏன்னா அவரு பிஸி மேன் எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை வேணாம் ஒரு சாதாரணமா வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வர மாப்ள தான் வேணும் அவங்களுக்கே வீட்டுக்கு செலவழிக்க நேரம் இல்ல அத்தானுக்கு என்றவள் திரும்பி தன் அண்ணனை பார்க்க அவனும் புன்னகையுடன் என் தங்கச்சி திறமை சாலி சரி சரி வாங்க மேடைக்கு போய்ட்டு மச்சானையும் தங்கச்சியையும் பார்த்துட்டு வரலாம் …

கவிதா, “நான் வரல நீங்க போய்ட்டு வாங்க..

கவி..

வேணாம்ங்க


இங்க பாரு எல்லாம் முடிஞ்சு அடுத்து அடுத்து போய்ட்டு இருக்கு இப்ப வந்து இதெல்லாம் வேணாம் கவி..

என்ன எல்லாம் முடிஞ்சது இனி தான் ஆரம்பம் அவ எப்படி வாழுறான்னு பார்க்கிறேன்.

என்ன அண்ணி இப்படி பேசுறீங்க..

வேற எப்படி பேசுவேன் எனக்கு நான் நினைச்சது நடக்கனும் இல்லன்னா என்ன பண்ணுவேன்னு தெரியாது தள்ளுங்க என்று வரமாட்டேன் என்றவள் தான் முதலில் மேடை ஏற

மஞ்சு, “அண்ணா என்ன அண்ணா இது, இப்படி இருக்காங்க நம்ம வீட்டில் எப்படி நீங்க என்று தடுமாற

நம்ம வீட்டுல எதையும் கேட்க மாட்டா ஏன்னா இந்த கம்பெனி அவ பேர்ல தான் இருக்கு

அண்ணா புரியல..

புரியாத வரை தான் நிம்மதி,இல்லன்னா கஷ்டம் தான்

அண்ணா..

வா மஞ்சு நம்ம நிம்மதி தான் முக்கியம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நவி பார்த்துப்பான்

அண்ணா நல்ல வேலை நான் தப்பிச்சேன்.

அண்ணா சொன்னா அதுல நிறைய விஷயம் இருக்கும் அதான் உங்க அண்ணி சொன்னதை யோசிக்காத ன்னு சொன்னேன்.

அதுசரி நான் சீக்கிரம் கிளம்புறேன் ப்பா நீங்க சீக்கிரம் விசா பிராசசஸ் பண்ணீங்கன்னா நான் இந்த ஆட்டத்துல இருந்து நகர்ந்து போய்டுவேன்..


சரி சரி வா வா என்றவன் மேல் ஏறிட…

என்ன மாமா இரண்டு பேருமா ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தீங்க அக்கா இங்க தனியா இல்ல நிக்குறா…

அட என்ன மச்சான் உங்க அக்காவை தனியாவா விட்டேன் உங்க கூட தானே இருக்கா… அவ தனியா என்னைக்கு இருந்தா நாம தான் அவ பின்னாடி அவ எப்பவும் முன்னாடி தான் என்று பேச..

பயங்கர டெவலப் மாமா நீங்க என்று சிரிக்க..

பனி தான் திருவிழாவில் காணமல் போனவள் போல் நின்று இருந்தாள்..


அம்மாடி பனி நான் வசந்த் உன் வீட்டுக்காரர் க்கு மாமா ..

பனி நவிலனை பார்க்க..

அக்கா வீட்டுக்காரர் அம்மு…

சரி என தலையசைத்தவள் ஹாய் அண்ணா..

ஹப்பாடி மச்சான் கண்ணசைவுக்கு எப்பவும் பவர் தான் இல்ல என்று வாய்விட்டு சிரித்தான் வசந்த்…


கவிதா, “ கிண்டலா வாங்க மஞ்சு இங்க வந்து நில்லு என்று நவிலன் பக்கத்தில் நிற்க வைக்க..

நவிலன், “ பனி இது எனக்கு குட்டி தங்கச்சி மாதிரி ஆனா இவ மாமாவோட தங்கை என்று சொல்லியவன் இது என்னோட அம்மு எனக்கு மட்டுமே என்று அவள் காதை கிள்ள..

அத்தான் உங்க அம்முவை நீங்களே வச்சுக்கோங்க நான் கூப்பிட மாட்டேன்..அக்கா நரகத்தின் வாசலுக்கு வாழ்த்துகள்..

அடியேய் என்று நவின் அவளை தட்ட…

போங்க அத்தான் எப்ப பாரு வேலைன்னு ஓடுற உங்களோட இருக்கிறது நரகம் தானே ஒரு லீவ் இல்ல என்டர்டெயின்மென்ட் இல்ல..

அதெல்லாம் என் பொண்டாட்டி க்கு தனி தெரியுமா…

அடப்பாவி எப்படி அத்தான் பல்டி அடிக்க கத்துக்கிட்டீங்க உங்களுக்கு முதல்ல பேசத் தெரியுமா?


போதும் போதும் நீ கீழ போ அடுத்த ஆள் வரனும் இல்ல என்று நவிலன் சொல்ல…

கவிதா, “என்னடா எங்களை விட உனக்கு முக்கியம்..

பின்ன இல்லையா க்கா உன் பிசினஸ் பார்டனர் வர்றாரு போய் பாரு போ என்று அனுப்பி வைத்தான் அதுவரை பேவென பார்த்து கொண்டிருந்தவளை அம்மு அங்க பாரு நம்ம கிளையண்ட் வராங்க..

என்ன என்று அவள் பார்க்க அவள் ப்ரோஜெக்ட் செய்த பொழுது வந்த கிளையண்ட் அனைவரும் வர பனிக்கு தான் அய்யோ என்று இருந்தது..

இத்தனை நாள் அரசல் புரசலாக பேசினது எல்லாத்தையும் இன்னைக்கு என் தலையில் ஏத்திட்டீங்க…

என்னடி உனக்கு பிரச்சினை?

இந்த கல்யாணமே பிரச்சினை தான் என்று முடிக்கவும் கிளையண்ட் வரவும் சரியாக இருந்தது..

கங்கிராட்ஸ் நவிலன் ஹாய் பூம்பனி இப்படி ஒரு இடத்தில் நிற்க தான் வேலையை விட்டுடீங்க போல..

புன்னகையுடன் பனி நிற்க..

அட நீங்க வேற அவ எங்க வேலையை விட்டா இங்க பிரசர் அதிகம் ன்னு அவளுக்காக ஒரு ஸ்கூல் ரன் பண்ணிட்டு இருக்கா அங்கேயும் அவ டீச்சரா தான் இருப்பேன் ன்னு அடம்..

அட ஜாலியா இருக்க ஃப்ளான் பண்ணுறாங்க விடுங்க நவிலன்…

அதான் நான் நாலு வருஷமா அவ விருப்பம் ன்னு விட்டுட்டேன் ..

இப்ப லாக் பண்ணிட்டீங்க ன்னு சொல்லுறீங்க அப்படித்தானே..

அதெல்லாம் இல்ல இனியும் அவ விருப்பம் தான் என்ன என்னோடவே இருக்கனும் ன்னு தான் சீக்கிரம் கல்யாணம்..



அடுத்த அடுத்த ஆட்களிடம் அவன் பேச பேச அவள் தான் அதிர்ந்து போய் இருந்தாள் நான் யார் இவருக்கு என்ன நடக்குது இங்க எதுக்கு இவ்வளவு பண்ணுறார் நான் ஏற்கனவே ஒரு விக்டீம் இல்லையா உலகமே என்னைய அப்படித்தானே பேசுது ஆனா இவர் ஏன் ஏன் என்று நினைத்து நின்று கொண்டு இருந்தவள் சரிய ஆரம்பிக்க நவிலனோ அவளை பிடித்தபடி அறைக்குள் அழைத்து சென்று இருந்தான்..



என்னாச்சு நவிலா என்று மங்கை வர..

என்ன ஆகி இருக்கும் மறுபடி பைத்தியத்துக்கு கோமா வந்து இருக்கும் என்று ராணி வாய் திறக்க…

சாம்பசிவம் தான் மகனை பார்த்து உன் தாயை பாரு என்று அவரை அப்புறபடுத்த…


கவிதா, “என்ன சொல்லுறாங்க அம்மா பைத்தியமா நான் கேட்டதுக்கு நீங்க என்ன என்னம்மோ சொன்னீங்க

கவி உனக்கு தேவையில்லாத விஷயம் அவன் வாழ்க்கை அவன் பார்த்துப்பான் ஊர் வாயை எல்லாம் கவனிச்சிட்டே இருந்தா நாம நிம்மதியா இருக்க முடியாது


அப்ப நான் கேள்விபட்டது உண்மை அப்படித்தானே..


கவி..


என் வாயை அடைக்கலாம் ஆனா பலதை அடைக்க முடியாது என்றவள் அவள் எடுத்து நீட்ட மங்கை தான் அதிர்ந்து கவிதாவை பார்க்க …

இப்படி பட்டவளை தான் உன் மகன் விழுந்து விழுந்து கவனிக்குறான்… இதெல்லாம் எங்க போய் சொல்ல அதுசரி இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சா பிடிச்சுக்க தான் பார்ப்பாங்க இப்படிபட்டவளுக்கு வாழ்க்கை அமையுறதே பெரிசு இப்படி அமைஞ்சா தொங்கபோட்டுட்டு தான் வருவாங்க என்று கார்த்திகேயன் அம்சா காதுபடவே பேச அடுத்த நொடி சுருண்டு விழுந்தது இருந்தாள் கவிதா…


தொடரும்








 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
ஆரம்பிச்சாச்சா?
கவிதாவையும் ராணியையும் எப்படி சமாளிக்க போறாளோ பனி?
 
  • Like
Reactions: Sampavi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
பனியை நினைச்சா பாவமா இருக்குப்பா
 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
ஆரம்பிச்சாச்சா?
கவிதாவையும் ராணியையும் எப்படி சமாளிக்க போறாளோ பனி?
எதாவது பண்ணி சமாளிக்கனும் தான்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
ராணிக்கும் கவிக்கும் வாயே அடங்காது போல 😠 இதுங்களுக்கு கஷாயத்தை ஊத்துங்க... 😬

பாவம் பனி 😢
 
  • Like
Reactions: Lakshmi kandhan

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
ராணிக்கும் கவிக்கும் வாயே அடங்காது போல 😠 இதுங்களுக்கு கஷாயத்தை ஊத்துங்க... 😬

பாவம் பனி 😢
என்ன பண்ண அது டிசைன் அப்படி
 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
சூப்பரு யாரு அடிச்சது 🙄🙄🙄🙄புருஷனா இல்ல தம்பியா
எனக்கே நியாபகம் இல்ல நானும் ஓடி போய் படிச்சிட்டு வரேன்னு மிக்க மகிழ்ச்சி