• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

O6. அசுரதாரா

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
"பார்றா... இந்த உலகத்தில அஞ்சே நிமிசத்தில வெளிக்கிட்ட ஒரே பொண்ணு நீ தான் என்டு பெரிய விருதே தரலாம் போலயே!" என ஆர்ச்சர்யம் காட்டியவள்,

"சரி வா இனியும் பிந்திக் கொண்டு இருக்கேலாது." என அறையை விட்டு வந்த சித்ராவை பின் தொடர்ந்த தாராவை வினோதமாக நோட்டமிட்டவன்,

"நீ மட்டும் வாராய்... பொட்டிய காணேலயே!" என்றான் சம்மந்தமே அற்று.

"பெட்டியோ.. என்ன பெட்டி?" அவன் எந்த பெட்டியை கேட்கிறான் என்று உண்மையில் அவளுக்கு விளங்கவில்லை.

"ம்ம்... உன்ர தோழின்ர வீட்டுக்குத்தானே போறாய்? பெட்டியை மறந்திட்டு போட்டு, பேந்தும் எனக்கு முன்னால வந்து நின்டிட போறாய்.. அதான் ஞாபகப்படுத்தினன்." என்றவன் பேச்சில் ஏனென்றே தெரியாது வந்த சிரிப்பினை உதட்டின் மறைவில் அடக்கியவள்.

"ஒரு இரவுக்கு பத்தாயிரம் வாடகை வாங்கிற அளவுக்கு உங்கட வீடு என்ன, பெரிய நச்சத்திர ஹோட்டலோ! அங்க கூட ஒரு இரவு இருக்க இந்தளவு காசு வாங்காயினம்." என்றவளது உதட்டின் நையாண்டி வளைவும், வார்த்தைகள் விழுந்த தோறணையுமே அவனுக்கு எரிச்சலை உணடாக்கியது.

"என்ன..?" என்று மட்டும் தான் புருவங்களை உயர்த்திக் கேட்டான். அந்த கேள்வியில் சற்றே அதிர்ந்த தாரா.

"அது அது.... அது தான் நான் அப்பயே சொல்லீட்டனே! இவளின்ர வீட்டில இருக்கிறது சரி வராது என்டு. பேந்தும் நீங்கள் இப்பிடி கேட்டா, நான் என்ன சொல்லுறது." குரலில் அத்தனை தளர்வு.

ஆம் அவன் கேட்ட என்ன என்பதுற்கு அத்தனை அழுத்தம். பின்னே சாதாரணமாக அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலுமே நெருப்பு தெறிக்கும். அது அவனுடன் இருப்பவர்கள் நன்கு உணர்வார்கள். அப்படி பட்டவனிடம் இவள் விளையாடினால், சும்மா வேடிக்கையா பார்ப்பான்? அவளது பதிலில் விளங்கிற்று அவனுக்கு. தன் பார்வையின் கண்டிப்பினை உணர்ந்து விட்டாள் என்று.

"நேற்றே சொல்லீட்டன்... என்னோட கதைக்கிற ஒவ்வொரு சொல்லியும் நிதானம் வேணும் என்டு. இது தான் உனக்கு கடைசி! இதுக்கு பிறகும் கொமடி என்டுற பெயர்ல இப்படி கதைச்சாய் என்டு வை! பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்ல." சொல்வதை சொல்லியாயிற்று என்பத போல், தன் வேலையில் விழிகளை புகுத்தி விட்டான்.

அவன் கணனியில் பார்வையை புகுத்தி விட்டான் என்றதும்,
"பெரிய இவர்" முனுமுனுத்தவாறு உதட்டை பிதுக்கி தோள்களை தாரா குழுக்குவதை கண்ட சித்ரா,

"வாங்கினது காணாது போல.. இதையும் பார்த்தான் என்டா, உன்னோட சேர்ந்து நானும் அவல் தான் வா.." என்று கையினை பிடித்து கொற இழுவையில் இழுத்துக் கொண்டு வெளியில் வந்ததும் தான் மூச்சினை ஆழமாக இழுத்து விட்டவள்.

"அப்பா....! என்ன மனுசனடி இவன்"

"ஆள் பார்க்க வாட்ட சாட்டமா இருக்கிறான் எல்லே. எரிஞ்செரிஞ்சு விழாம இருந்தான் என்டா நானே மணித்தியாலக் கணக்கில ரசிப்பன். ரசிக்கிறது மட்டுமில்ல.. ஏலும் என்டா ஆளா என்ர ஆள் ஆக்கிறதுக்கு முயற்சியும் செய்யலாம்" என்றாள் தாரா ரசனையோடு.

"ரசிப்பாய் ரசிப்பாய்...." அலுத்துக் கொண்டவள்,
"எரும நான் என்ன சொல்லுறன், நீ என்ன அலம்புறாய்? நான் சொன்ன அர்த்தம், இவனோட இருக்கிறது, எடுத்ததுக்கு எல்லாம் விளையாடுற உனக்கு சரிவாது. எவ்வளாத்துக்கு ஏலுமோ, அவ்வளாத்துக்கு இங்க இருந்து வெளிக்கிடுறது தான் உனக்கு நல்லது. ஏதோ பிழைய செய்து போட்டு நீதிபதி முன்னால நின்டா மாதிரி இருக்குது. இவனுக்கு முன்னால நிக்கிறது." என்றாள் அவனது கண்டிப்பு எல்லாம் இவளுக்கு சரி வராது என்பது போல்.

"ஓ.... நீ அப்பிடி சொல்ல வந்தியா..? நான் நினைச்சன் அவனின்ர வடிவ பார்த்து சொல்லுறீயோன்டு."

"நினைப்பாய் நினைப்பாய். உனக்கு எல்லாம் விளையாட்டு தானே!" என்றாள் கோபமாக.

"கோவிக்காதடி! நீ சொல்லுறத நான் ஏற்குறன். ஆனா நினைச்சுப் பார் இவனோட இருக்கிறது தான் எனக்கு பாதுகாப்பு...."

"அப்புடி என்ன பாதுகாப்பு என்டுறாய்?" அவள் சொல்லி முடிப்பதற்குள் வெடுக்கென அவள் கேட்டாள். பின்னே இப்படி ஒருவன் வீட்டில் இருப்பவளை அவளால் எப்படி பார்க வர முடியும்.

"என்ன பாதுகாப்பில்லை?" என இவளும் தோழியை பார்க்க,

"நீதானே ஏதோ பாதுகாப்பு என்டுறாய். நீயே செசால்லு"

"ம்ம்..நல்லா யோசிச்சு பார் சித்து! இப்பிடியானவனோட இருந்தா யாருக்கும் சந்தேகம் வராது. அதோட எரிஞ்சு விழுறவன் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில இருக்கிறவ கூட வர யோசிப்பினம். இதில எங்கட வீட்டுக்காறர் எப்பிடி வருவினம்? அது எனக்கு பாதுகாப்பு தானே!"

"எது..? அக்கம் பக்கத்தில இருக்கிறவ வராம இருக்கிறது பாதுகாப்பு? எரும இவனே உன்னை எதாவது செய்தா?" புருவ உயர்வில் கேள்வியை நிறுத்தனாள் சித்ரா. அதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தவள்,

"ஆரு... இவனாே...? அதுக்கெல்லாம் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கோணும் டார்லிங்க்... இவன் பச்சை புள்ளையடி! ஆதால அந்தளவுக்கு எல்லாம் யோசிக்காத... வயிறு கிழறுது வா முதல்ல போவம்" என்று கையினை பிடித்தவள் கையினை உதறி விட்டவள்,

"நான் சொல்லுறது உனக்கு விளங்குதில்ல தாரா.. நேற்று பார்த்தவனை எப்பிடி இந்தளவுக்கு நம்புறியோ தெரியேல." புலம்பியவளாய் நடக்க,

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்டு ஔவையாரே சொல்லியிருக்கிறாரடி"

"ஔவையார் நொல்லுவார்... அதை ஆர் சொன்னது என்டே தெரியேல... இதில ஞய் ஞய்ஞ.... ஒன்டு தான் குறைச்சல்" எரிச்சல் மேலிட இதற்கு மேல் சொல்லிப் பயனில்லை என்பதை அறிந்தவள், என்னவோ செய் என்று விட்டு விட்டாள்.

இரண்டு நாட்கள் ஓடி மநை்திருந்தது. சித்ரா அழத்துச் சென்று ஒரு கிழமைக்கு வேண்டிய சாப்பாட்டு பொருட்களை வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்க, அந்தப் பொருட்களை வைத்து தானே தன் கையினால் சமைத்து உண்டாள். ஆனால் அவனோ இவள் குசினியில் சட்டியை உருட்டத் தொடங்கியதும் வெளியேறி விடுவான். சமையல் முடிந்து அவள் சாப்பிட்ட பிற்பாடுதான் வருவான். சாப்பிடுகிறாயா என்று கேட்டால், நிமிர்ந்து அழுத்தமான பார்வை ஒன்றை செலுத்தி விட்டு, மீன்டும் டீவியிலோ அல்லது மடிக்கணனியிலோ பார்வையை மாற்றுபவனிடம், வற்புறுத்த முடியாதே. அதனால் அப்படியே விட்டு விட்டாள்.

இரண்டு நாட்கள் இப்படியே ஓடியிருக்கத்தான், அவளுக்கு இது உறைத்தது.

இவன் இப்படியே வெளியே சாப்பிட்டு வந்தால், சமையல் பொருட்கள் முடிந்தால், மீண்டும் வாங்குவதற்கு காசு வேண்டும். இருக்கும் காசை திண்றே தீர்த்தால் பி்ற்பாடு எல்லாவற்றிற்கும் சிரமமாகி போகும். காசு முடியக்கூடாது என்றால், இவனை தான் செய்த உணவை உண்ண செய்ய வேண்டும். அப்படி செய்தால் பொருள் அவனது உழைப்பு தன்னுடையாது என்று பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவன் அவள் செய்த உணவை உண்ண வேண்டுமே! பலவாறு சிந்தித்தவள் அதற்கும் ஒரு திட்டத்தினை வகுத்தது போல சமையலை முடித்தாள்.

அவன் வீட்டுக்கு வரும் நேரம் கணக்கு செய்து கோப்பையில் சாப்பாட்டினைப் போட்டுக் கொண்டு வந்து டீவியின் முன்பு அமர்ந்தவளை ஏமாற்றாது அவனும் உள்ளே நுழைந்தான்.

சப்பாத்தினை கழட்டி கதவின் ஓரம் இருந்த செருப்பு வைக்கும் அட்டியில் வைத்தவனை பார்த்து,

"வந்துட்டீங்களா சேர்! சாப்பிடுங்களன்?" என்றவளை அவன் முறைக்க,


"வேண்டாம் என்டா வேண்டாம் என்டுறது தானே! அதுக்கு எதுக்கு இந்த முறால்?" என்று விட்டு சாப்பாட்டில் அவள் கவமானாள்.

வெளியில் இருந்து வரும்போதே அலுப்பில் வந்திருப்பான் போல. நடையானது தளர, தட்டுத் தடுமாறி வந்து அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் தான், தலையானது பலமிழந்ததைப்போல சோபாவின் பின்புறம் சாய்த்து கண்கள் இரண்டினையும் மூடியவனிடம் எவ்வித அசமாட்டமும் இல்லை. கிட்டத்தட்ட முன்று நிமிடங்கள் கடந்திருக்கும், மெதுவாக கண்களை திறந்தவன், ஏதோ புதிதாய் இப்போது தான் பார்வை வந்தவனாட்டம், இமைகளை வெட்டி வெட்டித் திறந்தவனையே வாயில் சோற்றைத் திணித்து விட்டு, அதை மெல்லமாலும் முழுங்காமலும் ஆ என்று பார்த்தவாறு இருந்தவளுக்கு அவனது செயல்களின் காரணம் விளங்கவில்லை.

இறுதியாய் ஓர் தலை சிலுப்பலுடன் சாய்ந்திருந்த தலையினை மெல்ல நிமிர்த்தியவன், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்து தன்னையே வாய் பிளந்து பார்த்திருந்தவளை கண்டதும் ஏனோ அவனது உதடானது மெல்ல விரிந்து, சட்டென இறுகிக் கொண்டது.

"என்ன..?" என்றான் எப்போதுமான அவனது பாணியில். அதுவரை ப்பே என பார்திருந்தவள், அவனது என்ன என்ற கேள்வியில் தான் விழித்தவளாட்டாம். அவசரமாய் ஒன்றும் இல்லை என்பதாய் தலையசைத்தவள் மீண்டும் கோப்பையில் கவனமானள்.

"இதில ஏன் இருந்து சாப்படுறாய். அதுக்குத்தான் சாப்பாட்டு மேசை இருக்கே. அங்க இருந்து சாப்பிடுறதுக்கு என்ன?"

"இது என்ன மியூசியமோ சேர். அது அது அங்க அங்க இருக்கிறதுக்கு. மனம் என்ன சொல்லுதோ அதின் படி நடக்கிறது தான் சந்தோசம். இப்ப எனக்கு இங்க இருந்து சாப்பிடோணும் போல இருக்கு. அதான் இதில இருந்து சாப்பிடுறன்." நாலு வார்த்தை தான் கேட்டான். நாட்பது பக்கத்தக்கு பதில் தந்தவள் பதிலில் தலை சுற்றுவதை போல இருக்க.

"வெளியால போட்டு வந்தது தான் தலை சுத்துது என்டு பாத்தா. உன்னோட கதைச்சாலும் தலை சுத்தும் போல. எங்கயோ வச்சு தின். ஆனா ஒரு சோறு இந்த இடத்தில கொட்டிக்கிடந்துது பேந்து நான் மனுசனா இருக்கமாட்டன்." எச்சரித்தவன் எழுந்து கொள்ள மனம் வராது டீவியில் கவனமாக, தன்னையும் கவனி என்பது போல், அவள் சாப்பிட்ட சாப்பாட்டின் வாசனையானது அவனை இழுத்தது.

உண்மை தான். அப்படி வாசனை வரக்கூடிய உணவினை உண்டே ஒன்றரை வருடங்கள் தாண்டியிருக்கும். ஏதோ சாப்பிட வேண்டும் என்றதற்காக கடையில் கிடைப்பதை வாங்கி உண்டவன் மூக்கிக்கிற்கும் சரி நாவுக்கும் சரி, நல்ல விருந்து என்பதே இந்த ஒன்றரை ஆண்டு காலமாக கிடைக்கவில்லை. இன்று அன்னையின் கை மணத்தில் செய்த உணவினைப் போல் வாசனை வரவும் அது என்ன சாப்பாடு என்று எட்டிப்பார்த்தான்.

இது தானே அவளுக்கு வேண்டும். இதற்காக தானே வயிறு கதறக்கதற இவன் வரும் நேரத்தை எதிர் பார்த்து சாப்பிடாது காத்திருந்தாள். தன் கோப்பையினை தான் அவன் பார்க்கிறான் என்றதும், புருவ உயர்வில் என்ன எனக் கேட்கும் முறை இப்போது இவளுடையாதானது.

அவள் அப்படி கேட்டதும் ஒரு மாதிரியாகிப்போக,
"அது... அது.. சாப்பாடு வித்தியாசமாய் மணக்குதே! அதான் என்ன சாப்பிடுறாய் என்டு பார்த்தன்" என்றான் தனது திடத்தை விட்டுக் கொடுக்காது. (விழுந்தாலும் அய்யாவுககு மீசையில மண் ஒட்டாதாம்)

"மணம் மட்டும் இல்ல ருசியும் நல்லா இரக்கும் சேர்! நான் வேணும் என்டா ஒரு கோப்பையில போட்டுக் கொண்டரட்டே?" ஆர்வமாக வினவினாள்.

"இல்லை இல்லை வேண்டாம். நான் இப்ப தான் சாப்பிட்டு வாரன்." என அவன் மறுக்க.

"ஓ... ஆனா இந்த மாதிரி நீங்கள் பார்த்தா பிறகும் நான் சாப்பிட்டா, எனக்கு வயித்து குத்து வருமே! சரி கோப்பை கணக்கில எல்லாம் சாப்பிட வேண்டாம். ஒரு கைபிடி சாப்பிட்டு பார்க்கிறீங்களா?" என்க.

"நான் தான் வேண்டாம் என்டுறனே!" திரும்ப திரும்ப வற்புறுத்தவும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. ஆனால் அந்த கோபத்துக்கு எதிராளி மதிப்பளித்தால் தானே அந்த கோபமே செல்லுபடியாகும். அவள் தான் அதை கண்டு கொள்வதாகவே இல்லையே!

"ஓ... எச்சில் கை என்டு யோசிக்கிறீங்களோ... கையால வேண்டாம். கரண்டியாலயே அள்ளித் தாரன்." சொன்னதோடு நில்லாது, ரீப்போவில் இருந்த கின்னியில் இருந்த கரண்டியை எடுத்து கோப்பையில் இருந்த சோற்றை கிள்ளியவள்,

"ஆ என்டுங்கோ நானே தீத்தி விடுறன்" என கரண்டியை வாயின் அருகே கொண்டு செல்ல, உடனேயே வாயினை திறந்து அவள் தீத்தியதை வாங்கிக் கொண்டதன் பிற்பாடு தான் அவனுக்கே தான் என்ன செய்தோம் என்பது உறைத்தது.

எப்படி அவள் செயலுக்கு இசைந்தான். சாதாரணமா இப்படி யார் செய்தாலும் அவனுக்கு பிடிக்காது. அதை மீறி யாராவது செய்தால் உடனேயே தட்டி விடுவான். ஆனால் இவள் அடுத்த சிந்தனைக்கு இடம் கொடாமல் சட்டென சோற்றை தீத்தியதும் அவன் உத்தரவு வருவதற்குள் வாய் அந்த உணவினை வாங்கிக் கொண்டது.

சொல்ல முடியாத தவறினை செய்தவன் போல அவன் மனதில் சின்னதான நெருடல் தோன்ற, சோற்றை முழுங்காது மூடிய வாயுடன் அவளை திரும்பிப் பார்த்தான். வாங்கிய சோற்றை இனி துப்ப முடியாதே!

சாப்பாட்டை பற்றி இவன் என்ன சொல்லப் போகிறானோ என எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு அவன் பதில் கூறாது அப்படி பார்க்கவும்,

"ஏன் அப்பிடி பார்க்கிறீங்கள்? சாப்பாடு சரியில்லையோ! இல்லையே நீங்கள் சாப்பாட்டை சாப்பிடாம வாயிலயே வைச்சிருக்கிறீங்கள். சாப்பிட்டு சொல்லுங்கோ" ஆர்வம் குறையவே இல்லை அவளுக்கு.

'அவள் சாதாரணமா தானே இருக்கிறாள்.. எனக்கு மட்டும் ஏன் இப்பிடி இருக்கு. ஒரு வேளை இது சாதாரண ஒரு விசயம் தான!' மனதில் எண்ணினாலும் இனி எதுவும் செய்ய இயலாது என்பது தெளிவாக, வாய்க்குள் இருக்கும் சாப்பாட்டை மென்று பார்த்தான். அப்படியே அவன் அன்னை கை பக்குவம்.

"ம்ம் சாப்பாடு நல்லா இருக்கு." என உண்மையை மறைக்காது ஒப்பும் கொண்டான்.

"பேந்து என்ன...? சாப்பாடு பிடிச்சருக்கு என்டா, இனி வீட்டையே சாப்பிடுங்கோ. ஆற்றயோ சாப்பாட்டை சாப்பிடுறன் என்டுற நெருடல் உங்களுக்கு வேண்டாம். எப்பிடியும் காசு குடுத்து தானே சாப்பிட போறீங்கள். அப்பிடி காசு குடுத்து சாப்பிடுற சாப்பாடு நல்ல சாப்பாடா இருக்க வேணும் தானே! நான் உங்களுக்கு பிடிக்கிறது போல சமைச்சு தாரன். சாப்பாட்டு சாமானோட செலவு நீங்கள் எடுங்கோ." என்றாள் பெரிய மனசு வைத்து.

அவக்கும் அவள் சொல்வது சரி என்றே பட்டது. அவன் சும்மா சாப்பிட போவதில்லையே. அதனால் "என்னமோ செய்!" என்று விட்டு அதற்கு மேல் அங்கு இருக்காமல் எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.